Canada Tamil News

  • Home
  • Canada Tamil News

Canada Tamil News Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Canada Tamil News, News & Media Website, .

Air Canada 6-வது முறையாக உலகின் சிறந்த விமான நிறுவனமாக தெரிவு செய்யப்பட்டுள்ளது.இன்று நடைபெற்ற APEX 2026 விருது வழங்கும்...
15/09/2025

Air Canada 6-வது முறையாக உலகின் சிறந்த விமான நிறுவனமாக தெரிவு செய்யப்பட்டுள்ளது.

இன்று நடைபெற்ற APEX 2026 விருது வழங்கும் விழாவில் கனடாவின் முன்னணி விமான நிறுவனமான Air Canada, உலகின் சிறந்த விமான நிறுவனமாக Five-Star Global Airline விருதை 6-வது முறையாக வென்றுள்ளது.

Vancouver இரட்டைக் கொலை் ; பொதுமக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள கோரிக்கைகனடாவின் வான்கூவர் கிழக்கு பகுதியில் இடம்பெற்ற சம...
08/09/2025

Vancouver இரட்டைக் கொலை் ; பொதுமக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள கோரிக்கை

கனடாவின் வான்கூவர் கிழக்கு பகுதியில் இடம்பெற்ற சம்பவத்தில் இருவர் உயிரிழந்ததோடு, மேலும் இருவர் தீவிர காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வான்னெஸ் அவென்யூ – ஸ்பென்சர் தெரு அருகிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் கத்தியால் குத்தி கொலை இடம்பெற்றதாக தகவல் கிடைத்தது என வான்கூவர் காவல்துறை தெரிவித்துள்ளது.

“இந்த சம்பவம் தொடர்பாக பொதுமக்களுக்கு உடனடி அச்சுறுத்தல் எதுவும் இல்லை” என்று பொலிசார் உறுதியளித்துள்ளனர்.

மேலும் தகவல்கள் விசாரணையின் போது வெளிவரும் எனவும், சம்பவம் குறித்து தகவல் உடையவர்கள் 604-717-2500 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

செல்வச் சந்நிதியான் தேர் திருவிழா 🙏Images: GL Tharshan
06/09/2025

செல்வச் சந்நிதியான் தேர் திருவிழா 🙏

Images: GL Tharshan

82,000 வெளிநாட்டுப் பணியாளர்களுக்கு சிக்கலை உருவாக்கும் கனடா எதிர்க்கட்சித் தலைவரின் திட்டம்!தற்காலிக வெளிநாட்டுப் பணியா...
05/09/2025

82,000 வெளிநாட்டுப் பணியாளர்களுக்கு சிக்கலை உருவாக்கும் கனடா எதிர்க்கட்சித் தலைவரின் திட்டம்!

தற்காலிக வெளிநாட்டுப் பணியாளர் திட்டத்தை உடனடியாக நிறுத்தவேண்டும் என கனடா எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்தியுள்ளார்.

கனடா தனது தற்காலிக வெளிநாட்டுப் பணியாளர் திட்டத்தை உடனடியாக நிறுத்தவேண்டும் என கனடா எதிர்க்கட்சித் தலைவரான Pierre Poilievre வலியுறுத்தியுள்ளார்.

தற்காலிக வெளிநாட்டுப் பணியாளர் திட்டத்தால் கனேடிய பணியாளர்கள் மற்றும் இளைஞர்களின் வேலைவாய்ப்புகள் பறிக்கப்படுவதாகவும், ஊதியங்கள் மீது அது எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும் அவர் குற்றச்சாட்டுகள் முன்வைத்துள்ளார்.

கனடிய எல்லையில் 349 கிலோ கொக்கைன் பறிமுதல்கனடாவின் ஒன்டாரியோ மாகாணம் போர்ட் எட்வர்ட் – ப்ளூ வாட்டர் பாலம் எல்லைப் பகுதிய...
04/09/2025

கனடிய எல்லையில் 349 கிலோ கொக்கைன் பறிமுதல்

கனடாவின் ஒன்டாரியோ மாகாணம் போர்ட் எட்வர்ட் – ப்ளூ வாட்டர் பாலம் எல்லைப் பகுதியில், கனடா எல்லை சேவை முகமை (CBSA) அதிகாரிகள் மொத்தம் 349 கிலோ கொக்கைன் போதைப் பொருளை பறிமுதல் செய்துள்ளனர்.

இதன் மதிப்பு $43.7 மில்லியன் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பறிமுதல் இரண்டு தனித்தனியான சம்பவங்களில் நடந்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் 13 – அமெரிக்காவிலிருந்து வந்த வணிக லாரி ஒன்றை இரண்டாம் கட்ட சோதனைக்கு அனுப்பியபோது, அதிலிருந்த 6 பெட்டிகளில் 150 கிலோ கொக்கைன் (மதிப்பு $18.8 மில்லியன்) கண்டுபிடிக்கப்பட்டது.

கச்சத்தீவுக்கு விஜயம் செய்த இலங்கையின் ஜனாதிபதி அனுர திசாநாயக்க.
02/09/2025

கச்சத்தீவுக்கு விஜயம் செய்த இலங்கையின் ஜனாதிபதி அனுர திசாநாயக்க.

கனடா அரசு நாடு முழுவதும் 2 பில்லியன் மரங்கள் நடும் இலக்கை நோக்கி முன்னேறி வருவதாக அறிவித்துள்ளது.2021 இல் தொடங்கிய இந்த ...
01/09/2025

கனடா அரசு நாடு முழுவதும் 2 பில்லியன் மரங்கள் நடும் இலக்கை நோக்கி முன்னேறி வருவதாக அறிவித்துள்ளது.

2021 இல் தொடங்கிய இந்த திட்டத்தின் கீழ் இதுவரை 228 மில்லியன் மரங்கள் நட்டுள்ளதாகவும், மொத்தம் ஒரு பில்லியன் மரங்களுக்கு உடன்படிக்கைகள் ஏற்கனவே கையெழுத்தாகியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

ஜூன் மாத நிலவரப்படி, 11 மாகாணங்கள் மற்றும் பிரதேசங்கள், 58 பழங்குடியின சமூகங்கள், 30 நகராட்சிகள், 88 தன்னார்வ அமைப்புகள் இந்த திட்டத்தில் பங்கேற்கின்றன.

Canada Life!இந்தியர் ஒருவர் கனடாவில் 14 ஆண்டுகள் வாழ்ந்த நிலையில், தற்போது மீண்டும் இந்தியாவுக்கே திரும்பியுள்ளார்.சொந்த...
29/08/2025

Canada Life!

இந்தியர் ஒருவர் கனடாவில் 14 ஆண்டுகள் வாழ்ந்த நிலையில், தற்போது மீண்டும் இந்தியாவுக்கே திரும்பியுள்ளார்.

சொந்தநாடு திரும்பியபின் வாழ்க்கை எப்படி உள்ளது என்பதைக் கூறி, தன்னைப்போல் சொந்தநாட்டுக்குத் திரும்ப விரும்புபவர்களுக்கு ஏழு ஆலோசனைகளையும் கூறியுள்ளார் அவர்.

சொந்த நாட்டுக்குத் திரும்பியது ஆறுதலை அளிப்பதாக உள்ளதாக தெரிவிக்கும் அவர், அதே நேரத்தில், கனடாவிலிருந்து இந்தியா திரும்பி, நிரந்தரமாக இந்தியாவிலேயே தங்கிவிட விரும்புவோர் சில விடயங்களை கருத்தில் கொள்வது நல்லது என்கிறார்.

இந்தியாவில் நிரந்தரமாக தங்க முடிவெடுக்கும் முன், இந்தியா வந்து சில மாதங்கள் தங்கிப் பார்த்து, தங்களால் இந்தியாவில் சமாளிக்க முடியுமா என்பதை உறுதி செய்துகொள்ளுமாறு அறிவுறுத்துகிறார் அவர்.

கனடாவில் வாழ்ந்துவிட்டு இந்தியா திரும்பிய தனக்கு காற்று மாசு அதிர்ச்சியை உருவாக்கியதாக தெரிவிக்கிறார் அவர். ஆனால், அவர் எந்த நகரத்தில் வாழ்கிறார் என்பதை குறிப்பிடவில்லை.

பண்டிகைகள் கொண்டாடுவது மகிழ்ச்சிதான் என்று கூறும் அவர், அதே நேரத்தில், பண்டிகளின்போது சத்தம் அதிகமாக இருப்பதாக தெரிவிக்கிறார்.

வெளியே சாப்பிடும்போது, சுகாதாரத்தில் கவனம் செலுத்தவேண்டியது அவசியம் என்றும் ஆலோசனை கூறியுள்ளார் அவர்.

தண்ணீர் ஃபில்டர்கள் கட்டாயம் என்று கூறும் அவர், தங்கள் குடும்பம் விலை கொடுத்து குடிதண்ணீர் போத்தல்களை வாங்கிப் பயன்படுத்துவதாக தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் வெறும் கோடையும் குளிர்காலமும் மட்டும் இல்லை. பல பருவநிலைகள் நிலவுகின்றன. ஆகவே, பருவமழைக் காலத்தில் பெருவெள்ளம், கோடையில் வெப்பம், குளிர்கால பனி என பல விடயங்களை சமாளித்தாகவேண்டும் என்றும் கூறியுள்ளார் அவர்.

கடைசியாக, இப்போதுள்ள இளைஞர்கள் மாறிவிட்டார்கள். வாழ்க்கை குறித்த அவர்களுடைய பார்வையும், வாழ்க்கைமுறையும் வெகுவாக மாறிவிட்டன என்று கூறும் அவர், இந்தியாவுக்கு நிரந்தரமாக திரும்புவோர், இவற்றையெல்லாம் கருத்தில் கொள்வது நல்லது என்கிறார்.

பாடசாலையில் துப்பாக்கிச் சூடு:2 குழந்தைகள் உயிரிழப்புஅமெரிக்காவின் மினியாபோலிஸ் நகரில் உள்ள ஒரு பாடசாலையில் நடந்த துப்பா...
28/08/2025

பாடசாலையில் துப்பாக்கிச் சூடு:
2 குழந்தைகள் உயிரிழப்பு

அமெரிக்காவின் மினியாபோலிஸ் நகரில் உள்ள ஒரு பாடசாலையில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 2 குழந்தைகள் உட்பட மூன்று பேர் உயிரிழந்தனர். 17 பேர் காயமடைந்துள்ளனர்.

மினசோட்டா மாகாணத்தில் உள்ள மினியாபோலிஸ் நகரில் இயங்கி வரும் ஒரு கத்தாலிக்க பள்ளியில் இந்த துப்பாக்கிச் சூடு நடைபெற்றது.

395 குழந்தைகள் படிக்கும் இந்த பாடசாலையில் நுழைந்த மர்ம நபர் ஒருவர், பாடசாலையில் உள்ள தேவாலயத்தில் குழந்தைகள் பிரார்த்தனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது ஜன்னல் வெளியாக திடீரென குழந்தைகளை நோக்கி சரமாரியாக சுடத் தொடங்கியுள்ளார்.

ரைபிள், ஷாட்கன், பிஸ்டல் உள்ளிட்ட துப்பாக்கி ரகங்களை கொண்டு அவர் இந்த தாக்குதலை நடத்தினார் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்த துப்பாக்கிச் சூட்டில் 8 மற்றும் 9 வயதுடைய இரண்டு குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

17 குழந்தைகள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 7 குழந்தைகள் ஆபத்தான நிலையில் இருக்கின்றனர் என அதிகாரிகள் கூறுகின்றனர். இந்த தாக்குதலை நடத்திய நபரும் துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

மினசோட்டாவில் நடந்த துப்பாக்கிச் சூடு குறித்து தனக்கு முழுமையாகத் தெரிவிக்கப்பட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள அவர்,
"எஃப்.பி.ஐ விரைவாக செயல்பட்டு, சம்பவ இடத்துக்கு சென்றுள்ளனர். இந்த பயங்கரமான சூழ்நிலையை வெள்ளை மாளிகை தொடர்ந்து கண்காணிக்கும். சம்பந்தப்பட்ட அனைவருக்காகவும் என்னுடன் இணைந்து பிரார்த்தனை செய்யுங்கள்" என்று தெரிவித்துள்ளார்.

இந்த தாக்குதலை நடத்திய நபரின் பெயர் ராபின் வெஸ்ட்மேன் என்றும், 20 வயது நபரான இவர் இந்த துப்பாக்கிச் சூட்டில் ஈடுபடுவதற்கு முன்பாக, சம்பந்தப்பட்ட தேவாலயம் குறித்த தகவல்களை தனது யூடியூப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் என்றும் கூறப்படுகிறது.

108 ஜோடிகளுக்கு திருமணம்!யாழ்ப்பாணத்தில் திருமண வயதை எட்டியும் பொருளாதார நிலைமை காரணமாக திருமணம் செய்ய முடியாத நிலையில் ...
28/08/2025

108 ஜோடிகளுக்கு திருமணம்!

யாழ்ப்பாணத்தில் திருமண வயதை எட்டியும் பொருளாதார நிலைமை காரணமாக திருமணம் செய்ய முடியாத நிலையில் இருந்த 108 ஜோடிகளுக்கு இன்றைய தினம் வியாழக்கிழமை திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரை வதிவிடமாக கொண்ட துரை தம்பதியினரின் , நிதியுதவியில் , 108 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டது.

தாலி , கூறை சேலை மற்றும் திருமணத்திற்கான இதர செலவுகளுக்கும் பணம் வழங்கப்பட்டு , 108 தம்பதிகளுக்கும் செல்வ சந்நிதி ஆலயத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை திருமணம் செய்து வைக்கப்பட்டது.

இந்த 108 தம்பதியினரையும் , யாழ்ப்பாணத்தில் உள்ள 15 பிரதேச செயலகங்கள் ஊடாகவே தெரிவு செய்யப்பட்டன.

ஸ்கார்பரோ துப்பாக்கிச் சூட்டில் 14 வயது சிறுவன் காயம்!டொராண்டோ ஸ்கார்பரோவில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 14 வய...
28/08/2025

ஸ்கார்பரோ துப்பாக்கிச் சூட்டில் 14 வயது சிறுவன் காயம்!

டொராண்டோ ஸ்கார்பரோவில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 14 வயது சிறுவன் காயமடைந்துள்ளார்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். லாரன்ஸ் அவென்யூ கிழக்கு மற்றும் வார்டன் அவென்யூ பகுதியில் துப்பாக்கிச் சூடு இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

14 வயது சிறுவன் ஒருவன் டிடிசி பேருந்தில் ஏறியபோது, இரு ஆண்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக பொலிஸார் குற்றம் சாட்டியுள்ளது. மூன்று இளைஞர்களும் பேருந்திலிருந்து இறங்கியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

டொராண்டோ ஸ்கார்பரோவில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 14 வயது சிறுவன் காயமடைந்துள்ளார்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். லாரன்ஸ் அவென்யூ கிழக்கு மற்றும் வார்டன் அவென்யூ பகுதியில் துப்பாக்கிச் சூடு இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

14 வயது சிறுவன் ஒருவன் டிடிசி பேருந்தில் ஏறியபோது, இரு ஆண்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக பொலிஸார் குற்றம் சாட்டியுள்ளது. மூன்று இளைஞர்களும் பேருந்திலிருந்து இறங்கியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கனடாவில் நாடு தழுவிய பிடிவிராந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டு தேடப்படும் நபர்!கனடாவில் நாடு தழுவிய அடிப்படையிலான பிடிவிராந...
28/08/2025

கனடாவில் நாடு தழுவிய பிடிவிராந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டு தேடப்படும் நபர்!

கனடாவில் நாடு தழுவிய அடிப்படையிலான பிடிவிராந்து பிறப்பிக்கப்பட்டு நபர் ஓருவர் தேடப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கனடாவின் நியூ பிரன்ஸ்விக்கின் செயின்ட் ஜான் பொலிஸார் இந்த பிடிவிராந்து உத்தரவினை பிறப்பித்துள்ளனர். 43 வயதான ஜேசன் பிட்ரே என்ற நபரையே பொலிஸார் இவ்வாறு தேடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிட்ரே சட்டரீதியான விடுதலையின் நிபந்தனைகளை மீறியதாகக் கூறப்படுவதைத் தொடர்ந்து அவருக்கு எதிராக பிடிவிராந்து பிறப்பிக்கப்பட்டது.

நிபந்தனையின் பிரகாரம் செயின்ட் ஜானில் உள்ள ஹார்ட் ஹவுஸ் சமூக குடியிருப்பு மையத்திற்கு அவர் திரும்பவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பிட்ரே தற்போது ஆயுதக் கொள்ளை மற்றும் கொள்ளையை நோக்கமாகக் கொண்டு தாக்குதல் செய்ததற்காக நான்கு ஆண்டு தண்டனையை அனுபவித்து வருகிறார்.

பிட்ரே என்ற குறித்த நபர் ஐந்து அடி ஒன்பது அங்குல உயரமும், 230 பவுண்டு எடையும், நீல நிற கண்களும் கொண்டவர் என பொலிஸார் விவரித்துள்ளனர்.

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Canada Tamil News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Media Company?

Share

VICTORY TIMES (Pvt) Ltd

Canada.TamilNews.com is the part of Tamilnews.com which is The World's Most Popular Tamil Digital Media. This website serves for the Tamil community in the Canada. The company serves also for several countries around the world. These Websites are operated with The Most Prominent and Experienced Journalists in Sri Lanka and Worldwide. The Technological Design is Easily Set Up For Smart Phones and Computers. Tamil News Network is Running Under the Direct Management of the Popular News Media, VICTORY TIMES (Pvt) Ltd and Continues to Provide Accurate Day to Day News from Colombo; The Capital of Sri Lanka to Meet Our Reader`s Expectations. Our Other Website: USA.TamilNews.com , Australia.TamilNews.com, France.TamilNews.com, Tamilhealth.com, Tamilfood.com, Tamilsstyle.com, Tamilgossip.com, Cinemaulagam.com, Ulagam.com, Thecinema.com, Ladiestime.com, Timesrilanka.com, Technotamil.com, Sothidam.com, Tamilsportsnews.com, Tamilworld.news, Netrikkann.com and Timetamil.com.