Canada Tamil News

  • Home
  • Canada Tamil News

Canada Tamil News Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Canada Tamil News, News & Media Website, .

புனித பாப்பரசர் பிரான்சிஸ் காலமானார் !
21/04/2025

புனித பாப்பரசர் பிரான்சிஸ் காலமானார் !

மோடிக்கு இலங்கையில் கௌரவம்
05/04/2025

மோடிக்கு இலங்கையில் கௌரவம்

ஊடகவியலாளர்களை கொத்துக் கொத்தாக காவு வாங்கும் "லைகா"?லைகா புரெடக்ஷன் (Lyca Production) தலைமையில் இலங்கையில் செயற்படும்...
01/02/2025

ஊடகவியலாளர்களை கொத்துக் கொத்தாக காவு வாங்கும் "லைகா"?

லைகா புரெடக்ஷன் (Lyca Production) தலைமையில் இலங்கையில் செயற்படும் ஊடக நிறுவனங்களில் பணியாற்றும் ஊடகவியலாளர் பலர், முன்னறிவிப்பின்றி அண்மையில் திடீர் பணி நீக்க கட்டளையினை நிறுவனத்திடம் இருந்து எதிர்கொண்டுள்ளனர்.

இதனால், எதிர்பாராத இந்த அறிவிப்பானது பல சிரேஷ்ட மற்றும் இளம் ஊடகவியலாளர்களின் வாழ்க்கையினையும் எதிர்காலத்தையும் கேள்விக் குறியாக்கியுள்ளது.

ஊடகவியலாளர்கள் மாத்திரமின்றி, அத்துறையில் பணியாற்றும் புகைப்படப்பிடிப்பாளர்கள், தயாரிப்பாளர்கள் என பலரும் பெரும் இன்னல்களையும், சிரமங்களையும் எதிர்கொண்டுள்ளதாகவும் தெரியவருகிறது.

எது வித முறையான ஆயர்த்தமுமின்றி கடந்த சில வருடங்களுககு முன்னர் பிரித்தானியாவை தலைமையமாக கொண்டு செயற்படும் அல்லிராஜா சுபாஷ்கரனின் லைகா நிறுவனம் ஊடகத்துறை தொடர்பான மோகத்தினாலும், பல அரசியல் காரணங்களினாலும் இலங்கையில் பல ஊடக நிறுவனங்களை ஆரம்பித்தது.

அது மாத்திரமின்றி, சுவர்ணவாஹினி போன்ற இலங்கையில் செயற்படும் பல ஊடக நிறுவனங்களையும் லைகா தனது பண பலத்தை வெளிப்படுத்தி வலைத்துப் போட்டது.

ஒரு சில வருடங்களுக்குள்ளேயே தனது பண பலத்தை வெளிப்படுத்தி, ஒருவன், ஆதவன் செய்தித்தளம், ஆதவன் தொலைக்காட்சி, ஆதவன் வானொலி, தமிழ் எப்.எம். வானொலி போன்ற தமிழ் ஊடக நிறுவனங்களையும் வாங்கியும், வலைத்தும் போட்டும் இருந்தது.

அதேநேரம், சுவர்ணவாஹினி தொலைக்காட்சி, மொனரா தொலைக்காட்சி, மெனரா செய்தித் தளம், ரன் எப்.எம். சித எப்.எம்., சிறி எப்.எம். போன்ற பல சகோதர மொழியான சிங்கள ஊடகங்களை வாங்கியும், வலைத்தும் போட்டும் இருந்தது.

இது தவிர ஆங்கில மொழியிலும் பல ஊடக நிறுவனங்களை முன்னெடுத்த வந்தது.

இந்த ஊடக நிறுவனங்கள் மீதான கட்டுப்பாடுகள் மற்றும் கண்காணிப்புக்களை லைகாவின் தலைமையில் இலங்கையில் பென் ஹோல்டிங்ஸ் ( ‍Ben Holdings) தனியார் நிறுவனம் மேற்பார்வையிட்டு வந்தது.

இலங்கையில் தமது ஊடக செயற்பாடுகளை ஆரம்பித்ததிலிருந்து லைகா நிறுவனம், நாட்டின் பல ஊடகத்துறையில் கடமையாற்றும் சிரேஷ்ட மற்றும் இளம் ஊடகவியலாளர்களை கவர்ச்சியான வேலைவாய்ப்பு என பாசாங்கு செய்து தனது சூட்சி வலைக்குள் வலைத்துப் போட்டது லைகா.

ஆரம்பத்தில் தமது பண பலத்தைக் கொண்டு ஆடம்பரமான நடவடிக்கைகளை லைகா மேற்கொண்டிருந்தாலும், பின்னர் காலம் போககப் போக மெதுவாக தமது ஊடக தொழிலாளர்களின் நலன்களையும், கருத்துக்களையும் கேளாது பல திடீர் தீடீர் முடிவுகளை எடுத்தது.

நிறுவனத்தின் பொருளாதாரம் சரிவில் செல்கின்றது, பல சீர்திருத்தங்கள் அவசியம், நிதிவசதி இன்மை போதிய காரணங்களை சுட்டிக்காட்டி பல லைகாவின் பல ஊடக நிறுவங்களுக்கான மூடு விழாவினை ஆரம்பித்தது.

இதன்போது, ஊழியர்களின் நலன், அவர்களின் எதிர்காலம் தொடர்பான எந்தவொரு நிலைப்பாட்டினையும் அவர்கள் கருத்திற் கொள்ளவில்லை.

இதனால், தாம் இதுவரை காலமும் (பல வருடங்களாக) பணியாற்றிய ஏனைய ஊடக நிறுவனங்களை விட்டு லைகாவை நம்பி வைந்த ஊடகவியலாளர்கள் நிர்க்கதிக்கு உள்ளாகினர்.

ஒரு கட்டத்தில் கொத்து கொத்தாக பல சிரேஷ்ட மற்றும் இளம் ஊடகவியலாளர்களும் முகாமைத்துவத்தின் தன்னிச்சையான முடிவினால் லைகாவை விட்டு வெளியேறிய சந்தர்ப்பங்களும் அடிக்கடி நிகழ்ந்துள்ளது.

அது மாத்திரமன்றி, இலங்கையின் தொழில் அமைச்சிலும், நிறுவனத்துக்கு எதிராக ஊடகவியலாளர்களின் பதிவு செய்யப்பட்ட முறைப்பாடுகளும் ஒரு பக்கம் அதிகரித்துக் கொண்டே போகின்றது.

இந்த சந்தர்ப்பத்தில் கடந்த ஜனவரி மாதத்தின் இறுதிப் பகுதிகளில் லைகாவின் Southeye என்ற பிரிவின் கீழ் இயங்கும் ஒருவன் செய்தித்தளம், ஒருவன் டிஜிட்டல் பிரிவு, ஒருவன் பிளஸ் பிரிவு மற்றும் சகோதர மொழியில் இயங்கும் மொனரா செய்தித்தளம், மொனரா டிஜிட்டல் பிரிவு என்பவற்றை மூடும் தான்தோன்றித் தனமான திடீர் முடிவு அறிவிக்கப்பட்டது.

அதில் பணியாற்றும் ஊழியர்களுக்கு எந்தவித முன்னறிவிப்பும் இன்றி இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது.

அது மாத்திரமில்லாது, கடந்த பாராளுமன்றத் தேர்தலை இலக்கு வைத்து அதி விரைவாக எந்த முன்னோக்க திட்டங்களும் இன்றி ஆரம்பிக்கப்பட்ட ஒருவன் பத்திரைக்கான மூடுவிழாவும் கடந்த ஜனவரி மாத இறுதியில் நடந்தேறியது.

மேற்கண்ட ஊடக நிறுவனங்களை நம்பி தமது கனவுகளை ஆரம்பித்த ஊடகவியலாளர்கள் ஏராளம்.

எனினும் நிறுவனத்தின் தான்தோன்றித்தனமாக மேற்கண்ட அறிவிப்பினால் தொழிலாளர்கள் என்ன செய்வது என்று தெரியாது நிறுவனத்தின் முடிவினை ஏற்றுக் கொள்ளாது திண்டாடி வருகின்றனர்.

குறிப்பாக லைகாவை நம்பி, தாம் பல வருடங்களாக பணியாற்றிய இலங்கையின் ஏனைய முன்னணி ஊடக நிறுவனங்களை விட்டு வந்த பல ஊடகவியலாளர்கள் கடந்த நாட்களில் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாகவும் அங்கு இதுவரை காலமும் தொழில் புரிந்த பெயர் குறிப்பிடப்படாத பல ஊடகவியலாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்.

"லைகாவை நம்பி நாங்கள் வந்தோம், நாங்கள் பல வருடங்களாக பல முன்னணி ஊடக நிறுவனங்களில் பணியாற்றியுள்ளோம், இங்கு வந்து ஓரிரு மாதங்களுக்குள்ளேயே நாங்கள் பணிநீக்கம் தொடர்பான நிர்வாகத்தின் தன்னிச்சையான முடிவினை எதிர்கொண்டுள்ளோம், எங்களிடம் திறமை உள்ளது, பல வருடம் தொழிலாற்றிய அனுபவம் உள்ளது, இருந்தாலும் லைகாவின் இந்த செயல் எங்களின் பெயருக்கு கலங்கத்‍தை ஏற்படுத்தியுள்ளது, ஏனைய ஊடக நண்பர்களிடம் உரையாற்ற முடியாத சூழ்நிலையினையும் தலை குனிவையும் நாங்கள் எதிர்நோக்கியுள்ளோம், எங்களுக்கான எதிர்காலம் என்ன வேண்டு தெரியவில்லை, இதனால், கடும் மன உழைச்சலுக்கு உள்ளாகியுள்ள தொழிலாளர்கள் எதுவும் விபரீத முடிவினை எடுத்தால் அதற்கு லைகா நிறுவனமே பொறுப்பேற்க வேண்டும்" - என்றும் பலர் தமது கவலையை வெளிப்படுத்தியுள்ளனர்.

அதேநேரம், நிறுவனத்தில் ஒரு வருட காலத்துக்கும் அதிகமாக பணியாற்றும் பல தொழிலாளர்களும் நிரந்தர நியமனக் கடிதங்களை நிறுவனம் இதுவரை வழங்கவில்லை என்றும், அதேநேரம் நியமனக் கடிதங்களைக் கூட நிறுவனம் உரிய முறையில் இதுவரை வழங்கவில்லை என்றும் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

இந்த நிலையில் தற்சமயம் வெளியாகியுள்ள நிறுவனத்தின் பதவி நீக்கம் தொடர்பான அறிவிப்பு, தொழிலாளர்களுக்கு எந்தவிதமான முறையான சலுகைகளையும் வழங்குவது தொடர்பில் எடுத்துரைக்கவில்லை.

பணி நீக்கப்படும், தொழிலாளர்கள் ஒரு புறம் இருக்க அங்கு ஏனைய ஊடக நிறுவனங்களில் பணி புரியும் ஏனைய தொழிலாளர்களும் அன்றாடம் தமது எதிர்கால நிலை, தொழில் உத்தரவாதம் குறித்த கேள்விகளுக்கு மத்தியில் கடமைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இவ்வாறு பணி நீக்கம் செய்யப்படுவதற்கான லைகாவின் பிரதான காரணம் யாதெனில், " நிறுவனம் நட்டத்தில் இயங்குகின்றது " என்ற போலியான வார்த்தைகள் ஆகும்.

இவ்வாறான ஒரு கருத்தினை முன்வைக்கும் லைகா நிறுவனம் கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது நூற்றுக் கணக்கான கோடிகளை செலவிட்டு ஒலி வாங்கி சின்னத்தில் பல வேட்பார்களை களமிறக்கி படு தோல்வியை சந்தித்து இருந்தது.

லைகாவுக்கு சொந்தமான கொழும்பு, வெள்ளவத்தை சப்பாரி ‍‍ஹோட்டலில் நாடாளுமன்ற தேர்தல் காலத்தின் போத மேற்கொண்ட பொலிஸாரின் சோதனையில் வாக்குகளை பெறுவதற்காக வாக்காளர்களுக்கு வழங்கப்படவிருந்த பல இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்களும் மீட்கப்பட்டிருந்தன.

அதேநேரம், நட்டத்தில் இயங்குவதாக கூறும் லைகா நிறுவனம் நூற்றுக் கணக்கான கோடிகளை தென்னிந்திய சினிமாவிலும் செலவிட்டு வருகின்றது என்பதை மறைத்து விட முடியாது.

எனவே, லைகாவின் தான்தோன்றித்தனமான முடிவுகள் மற்றும் பணத் திமிரினால் இலங்கையின் பல முன்னணி ஊடகவியலாளர்கள் மற்றும் இளம் ஊடகவியலாளர்கள் தங்களின் எதிர்காலத்தை தொலைத்து விட்டு வாழ்கின்றனர் என்பது தான் நிதர்சனமாகியுள்ளது.

எனவே, லைகா நிறுவனத்தின் இந்த அட்டூழியங்களுக்கு வெகுஜன ஊடக அமைச்சும், தொழிலாளர் அமைச்சும் தலையிட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அங்கு பணியாற்றும் ஊடகவியலாளர்களும், தொழிலாளர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

இலங்கை பாராளுமன்றத்தில் பொங்கல்!
24/01/2025

இலங்கை பாராளுமன்றத்தில் பொங்கல்!

வல்வை சர்வதேச விநோத பட்டத் திருவிழா, தைப்பொங்கல் தினமான நேற்று (14) மிகவும் கோலாகலமாக வல்வை உதயசூரியன் உல்லாசக் கடற்கரைய...
15/01/2025

வல்வை சர்வதேச விநோத பட்டத் திருவிழா, தைப்பொங்கல் தினமான நேற்று (14) மிகவும் கோலாகலமாக வல்வை உதயசூரியன் உல்லாசக் கடற்கரையில் நடைபெற்றது. வல்வை விக்னேஸ்வரா சனசமூக நிலையம் மற்றும் உதயசூரியன் விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது விநோதமான பட்டங்கள் பறக்கவிடப்பட்டன.

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலகுவதாக அறிவிப்புகனடாவில் எதிர்பார்க்கப்பட்டபடியே, பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலகுவ...
06/01/2025

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலகுவதாக அறிவிப்பு

கனடாவில் எதிர்பார்க்கப்பட்டபடியே, பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலகுவதாக அறிவித்துள்ளார். வரும் புதன்கிழமை கனடாவை ஆளும் லிபரல் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூடவிருந்த நிலையில், ட்ரூடோ தனது ராஜினாமா அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட மலேசியாவின் கோடீஸ்வர வர்த்தகர் ஆனந்த கிருஸ்ணன் காலமானார்.யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட ம...
29/11/2024

யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட மலேசியாவின் கோடீஸ்வர வர்த்தகர் ஆனந்த கிருஸ்ணன் காலமானார்.

யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட மலேசியாவின் கோடீஸ்வர வர்த்தகர் ஆனந்த கிருஸ்ணன் தனது 86 வயதில் உடல்நலக்குறைவால் காலமானார். அவரது நிறுவனம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

தொலைத்தொடர்புதுறை எரிவாயு எண்ணெய் போன்றவற்றில் வர்த்தக சாம்ராஜ்யத்தை உருவாக்கியவர் ஆனந்த கிருஸ்ணன் என்பது குறிப்பிடத்தக்கது. ஸ்ரீலங்கா டெலிகோமிலும் அவரது பங்குகள் உள்ளன.

யாழ்ப்பாணத்தை பூர்வீககொண்ட இவர் மலேசிய தலைநகரில் உள்ள பிரிக்பீல்டில் பிறந்தார். ஏகே என அழைக்கப்பட்ட இவர் உசாகா டெஹாஸ் யு கய் பவுண்டேசன் போன்றவற்றின் ஸ்தாபகர்.

2011 இல் இவரது சொத்து 5.8 பில்லியன் டொலர் என மதிப்பிட்டிருந்த போர்ப்ஸ் சஞ்சிகை உலகின் செல்வந்தர்களின் பட்டியலில் இவரை இணைத்திருந்தது.

கனடாவில் ஈழத்தமிழர் ஒருவர் படுகொலை - மகன் கைதுகனடாவில் ஈழத்தமிழர் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளதாக ரொரன்ர...
22/11/2024

கனடாவில் ஈழத்தமிழர் ஒருவர் படுகொலை - மகன் கைது

கனடாவில் ஈழத்தமிழர் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளதாக ரொரன்ரோ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணம், பகுதியை சொந்த இடமாக கொண்ட 66 வயதான நபரே என்பவரே கொலை செய்யப்பட்டுள்ளார்.

ஸ்காபுரே பகுதியில் வசித்து அவர் வீட்டில் வைத்து குத்தி கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மகன் கைது நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் இந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் 32 வயதான மகன் கைது செய்யப்பட்ட பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

தனிப்பட்ட பிரச்சைனை காரணமாக மகன் மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் இருந்தாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழரசு-இந்திய உயர்ஸ்தானிகர் சந்திப்பு- பேசப்பட்டவிடயங்கள் இதோ!மாகாண சபைத் தேர்தலில் என்.பி.பியின் தாக்கம் உணரப்படலாம்- ...
22/11/2024

தமிழரசு-இந்திய உயர்ஸ்தானிகர் சந்திப்பு- பேசப்பட்டவிடயங்கள் இதோ!

மாகாண சபைத் தேர்தலில் என்.பி.பியின் தாக்கம் உணரப்படலாம்- இந்திய உயர்ஸ்தானிகர் சூசகம்
மாகாண சபைத் தேர்தல் மற்றும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் எதிர்காலத்தில் நடைபெறும் போது, வடக்கு கிழக்கில் தேசிய மக்கள் சக்தியின் தாக்கம் அங்கும் உணரப்படக் கூடும் என இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கும் இந்திய உயர்ஸ்தானிகருக்கும் இடையிலான சந்திப்பில் ஆராயப்பட்டதாக தமிழரசுக் கட்சியின் ஊடகப் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஞா.ஸ்ரீநேசன் தெரிவித்தார்.

தமிழ் மக்களின் நீண்டகாலப் பிரச்சினைகள் தீர்க்கப்படாமையால், தெற்கில் உள்ள தேசியக் கட்சிகள் மீது, தமிழ் மக்களின் ஈடுபாடு அதிகரிக்க வாய்ப்பிருப்பதாகவும் இந்திய உயர்ஸ்தானிகருக்குச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

13வது திருத்தச் சட்டத்தில் உள்ள விடயங்கள் பறிக்கப்படுவதால், 13வது திருத்தச் சட்டம் மீதுள்ள அதிருப்தி தொடர்பிலும் சந்திப்பில் பேசப்பட்டுள்ளது. தமிழ் மக்களின் நீண்ட கால மற்றும் குறுங்காலப் பிரச்சினைகள் தொடர்பில், எழுத்துரு மூலம் சமர்ப்பிக்குமாறு, இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஸ் ஜா தமிழரசுக் கட்சியைக் கோரியுள்ளார்.
குறிப்பாக மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரை விவகாரம், கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம், தாண்டியடி துயிலுமில்ல விவகாரம்
போன்ற பிரச்சினைகள் தொடர்பிலும், இச் சந்திப்பின் போது பிரஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பான முன்னெடுப்புக்களின் இந்தியா தொடர்ந்தும் பங்காளியாக இருக்க வேண்டும் என்றும் தமிழரசுக் கட்சியால் வலியுறுத்தப்பட்டுள்ளது.
வடக்கில் மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் கடந்த காலங்களில் தென்னிலங்கைக் கட்சிகளோடு சேர்ந்தியங்கியவர்கள் தேர்தலில் மக்களால் நிராகரிக்கப்பட்டமை தொடர்பிலும் சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
சீனத் தூதுவரின் செயற்பாடுகள் பொதுப் பிரச்சினைகளை அணுகும் விடயங்களில் நடுநிலைமையுடன் இல்லை என்றும் இந்திய உயர்ஸ்தானிகரால் தமிழரசுக் கட்சியிடம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

21/11/2024

கன்னி அமர்வில் கலகம் ஏற்படுத்திய அர்ச்சுணா!

”சஜித்துக்கு சவால் விடுத்தார். ஆசனம் எல்லாம் தரமுடியாது.”

🛑  புதிய பாராளுமன்றத்தில் 28 தமிழ் எம்.பிக்கள்!ஆர்.சனத்raasanath@gmail.com10 ஆவது பாராளுமன்றத்துக்கு அரசியல் கட்சிகளில் ...
18/11/2024

🛑 புதிய பாராளுமன்றத்தில் 28 தமிழ் எம்.பிக்கள்!

ஆர்.சனத்
[email protected]

10 ஆவது பாராளுமன்றத்துக்கு அரசியல் கட்சிகளில் இருந்தும் சுயேச்சைக்குழுவில் இருந்தும் மக்கள் ஆணை மூலம் 25 தமிழர்கள் தெரிவாகியுள்ளனர்.

தமிழரசுக் கட்சிக்கு கிடைக்கப்பெற்ற தேசியப் பட்டியல் ஆசனம் ஊடாக வைத்தியர் ப. சத்தியலிங்கத்தை சபைக்கு அனுப்புவதற்கு அக்கட்சியின் அரசியல் குழு தீர்மானித்துள்ளது.

தேசிய மக்கள் சக்தியின் தேசிய பட்டில் வேட்பாளராக இடம்பிடித்த இராமலிங்கம் சந்திரசேகரும் நாடாளுமன்றம் வருகின்றார். ஐக்கிய மக்கள் சக்தியும் தமிழர் ஒருவருக்கு தேசிய பட்டியலில் இடமளித்தால் அமையவுள்ள நாடாளுமன்றத்தில் 28 தமிழ் எம்.பிக்கள் அங்கம் வகிப்பார்கள். ஐக்கிய மக்கள் சக்தி இடமளிக்காவிட்டால் தமிழ் எம்.பிக்களின் எண்ணிக்கை 27 ஆக அமையும்.

2020 பொதுத்தேர்தலில் மக்கள் ஆணைமூலம் 25 தமிழ் எம்.பிக்கள் தெரிவாகி இருந்தனர். தேசிய பட்டியல் ஊடாக மூவருக்கு இடமளிக்கப்பட்டிருந்தது. அந்தவகையில் கடந்த நாடாளுமன்றத்திலும் 29 தமிழ் எம்.பிக்கள் அங்கம் வகித்தனர்.

10 ஆவது நாடாளுமன்றத்தில் இடம்பெறவுள்ள தமிழ் எம்.பிக்கள் விபரம் -

🛑 இலங்கை தமிழரசுக் கட்சி - 08

✌️ சிவஞானம் சிறிதரன் (யாழ்ப்பாணம்)- 32,833

✌️ இரா. சாணக்கியன் (மட்டக்களப்பு)- 65,458

✌️ ஞானமுத்து ஸ்ரீநேசன் (மட்டக்களப்பு)- 22,773

✌️ இளையதம்பி சிறிநாத் (மட்டக்களப்பு) - 21,202

✌️ குகதாசன் (திருகோணமலை) - 18,470

✌️ துரைராசா ரவிகரன் (வன்னி) -11,215

✌️ கே. கோடீஸ்வரன் - 11,962

✌️ பா. சத்தியலிங்கம் (தேசிய பட்டியல்)

🛑 இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் - 01

பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் யானை சின்னத்தின்கீழ் இதொகா வேட்பாளர்கள் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிட்டனர். ஜீவன் தொண்டமான் 46,438 வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றார். (கடந்த பொதுத்தேர்தலில் இதொகாவுக்கு இரு ஆசனங்கள் கிடைக்கப்பெற்றன. )

🛑 தமிழ் முற்போக்கு கூட்டணி - 02

பொதுத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட தமிழ் முற்போக்கு கூட்டணிக்கு நுவரெலியாவில் மாத்திரமே இரு ஆசனங்கள் கிடைக்கப்பெற்றன.

✌️ பழனி திகாம்பரம் (நுவரெலியா) - 48,018

✌️ வீ. இராதாகிருஷ்ணன் (நுவரெலியா) - 42,273

( கடந்த பொதுத்தேர்தலில் தமிழ் முற்போக்கு கூட்டணிக்கு நுவரெலியா, கண்டி, பதுளை, கொழும்பு ஆகிய மாவட்டங்களில் மொத்தமாக ஆறு ஆசனங்கள் கிடைக்கப்பெற்றிருந்தன.)

🛑 தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி - 01

✌️ கஜேந்திரகுமார் பொன்னம்பலம் (யாழ்ப்பாணம்) - 15,135

🛑 சுயேச்சைக்குழு 17 - 01

✌️ இராமநாதன் அர்ச்சுனா (யாழ்ப்பாணம்) - 20,487

🛑 சங்கு - 01

✌️ செல்வம் அடைக்கலநாதன் வன்னி - 5,695

🛑 தேசிய மக்கள் சக்தி - 13

✌️ கிட்ணன் செல்வராஜா (பதுளை) - 60,041

✌️ அம்பிகா சாமுவேல் (பதுளை) - 58, 201

✌️ கே. பிரபு (மட்டக்களப்பு) - 14,856

✌️ கே.இளங்குமாரன் (யாழ்ப்பாணம்) - 32,102

✌️ எஸ்.ஸ்ரீ பவானந்தராஜா (யாழ்ப்பாணம்) - 20,430

✌️ மூர்த்தி ரஜீவன் (யாழ்ப்பாணம்) - 17,579

✌️ சரோஜா போல்ராஜ் (மாத்தறை) - 148,379

✌️ கிருஷ்ணன் கலைச்செல்வி (நுவரெலியா) - 33,346

✌️ எஸ். பிரதீப் - 112,711 (இரத்தினபுரி)

✌️ அருன் ஹேமச்சந்திர ( திருமலை) - 38,368

✌️ செல்வதம்பி திலகநாதன் (வன்னி) - 10,652

✌️ ஜெகதீஸ்வரன் - 9,280 (வன்னி)

✌️ இராமலிங்கம் சந்திரசேகர் (தேசிய பட்டியல்)

தொகுப்பு - ஆர். சனத்

யாழ்ப்பாண மாவட்டம் - மக்கள் தெரிவுகஜேந்திரகுமார் பொன்னம்பலம் - 15135 வாக்குகள்சிவஞானம் சிறீதரன் - 32833 வாக்குகள்கருணானந...
15/11/2024

யாழ்ப்பாண மாவட்டம் - மக்கள் தெரிவு

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் - 15135 வாக்குகள்

சிவஞானம் சிறீதரன் - 32833 வாக்குகள்

கருணானந்தன் இளங்குமரன் - 32102 வாக்குகள்

சண்முகநாதன் ஸ்ரீ பவானந்தராஜா - 20430

ஜெயச்சந்திரமூர்த்தி ரஜீவன் - 17579

இராமநாதன் அர்ச்சுனா - 20487

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Canada Tamil News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share

VICTORY TIMES (Pvt) Ltd

Canada.TamilNews.com is the part of Tamilnews.com which is The World's Most Popular Tamil Digital Media. This website serves for the Tamil community in the Canada. The company serves also for several countries around the world. These Websites are operated with The Most Prominent and Experienced Journalists in Sri Lanka and Worldwide. The Technological Design is Easily Set Up For Smart Phones and Computers. Tamil News Network is Running Under the Direct Management of the Popular News Media, VICTORY TIMES (Pvt) Ltd and Continues to Provide Accurate Day to Day News from Colombo; The Capital of Sri Lanka to Meet Our Reader`s Expectations. Our Other Website: USA.TamilNews.com , Australia.TamilNews.com, France.TamilNews.com, Tamilhealth.com, Tamilfood.com, Tamilsstyle.com, Tamilgossip.com, Cinemaulagam.com, Ulagam.com, Thecinema.com, Ladiestime.com, Timesrilanka.com, Technotamil.com, Sothidam.com, Tamilsportsnews.com, Tamilworld.news, Netrikkann.com and Timetamil.com.