Trinconet

Trinconet உண்மையின் தரிசனம்

நல்லூர் முருகனுக்கு கனடாவில் இருந்து பக்தர்கள் அனுப்பிய மண்.இன்று கனடா டொரோன்டோவில் இருந்து  பயணத்தை ஆரம்பித்தது இந்தக் ...
28/07/2025

நல்லூர் முருகனுக்கு கனடாவில் இருந்து பக்தர்கள் அனுப்பிய மண்.
இன்று கனடா டொரோன்டோவில் இருந்து பயணத்தை ஆரம்பித்தது இந்தக் கப்பல். இது சாதரண மண் அல்ல தங்க சுரங்கத்தில் தோண்டியெடுக்கப்பட்ட தங்கம் கலந்த மண்

பட அனுசரணை : கனடாவில் இருந்து Karththeepan Perinparaj

இலங்கையின் 49வது பிரதம நீதியரசராகப் பிரீத்தி பத்மன் சுரசேன பதவியேற்பு!இலங்கையின் 49வது பிரதம நீதியரசராக நீதிபதி பிரீத்தி...
27/07/2025

இலங்கையின் 49வது பிரதம நீதியரசராகப் பிரீத்தி பத்மன் சுரசேன பதவியேற்பு!

இலங்கையின் 49வது பிரதம நீதியரசராக நீதிபதி பிரீத்தி பத்மன் சுரசேன, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முன்னிலையில் இன்று பதவியேற்றார்.

நீதிபதி பிரீத்தி பத்மன் சூரசேன, நீண்டகால நீதித்துறை அனுபவம் கொண்டவர். அவர் இதற்கு முன்னர் உயர் நீதிமன்ற நீதிபதியாகவும், மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவராகவும் கடமையாற்றியுள்ளார். அவரது நியமனம், நீதித்துறையின் சுதந்திரம் மற்றும் நம்பகத்தன்மையை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய பிரதம நீதியரசரின் பதவியேற்பு நிகழ்வு, ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. நீதிபதி சூரசேனவின் தலைமைத்துவம், நாட்டின் சட்ட ஆட்சி மற்றும் நீதி நிர்வாகத்தில் புதிய அணுகுமுறைகளைக் கொண்டுவரும் எனப் பரவலாக நம்பப்படுகிறது.

திருகோணமலை மாவட்ட தமிழீழ விடுதலை இயக்கத்தினால் இன்றைய தினம் திருகோணமலை கடற்கரையில் அமைந்துள்ள வெலிக்கடை தியாகிகள் அரங்கி...
27/07/2025

திருகோணமலை மாவட்ட தமிழீழ விடுதலை இயக்கத்தினால் இன்றைய தினம் திருகோணமலை கடற்கரையில் அமைந்துள்ள வெலிக்கடை தியாகிகள் அரங்கிற்கு முன்னால் 1983 யூலை 23 முதல் 27 வரையான காலப்பகுதியில் வெலிக்கடை சிறைச்சாலையில் கொல்லப்பட்ட தமிழீழ விடுதலை இயக்கத்தின் ஸ்தாபக தலைவர்களான தங்கத்துரை மற்றும் குட்டிமணி, ஜெகன், தேவன் உட்பட 52 கைதிகள் மற்றும் அதையொட்டிய யூலை கலவரத்தில கொலை செய்யப்பட்ட 3000 பொதுமக்களின் நினைவாகவும் சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதன்போது அஞ்சலி உரை நிகழ்த்திய மாநகர சபை உறுப்பினரும் TELO வின் மாவட்ட உதவி செயலாளருமாகிய தி.பிரபாதரன் இன்று இந்நாடு பொருளாதாரத்தில் மீட்சிபெற கஸ்டப்படுவதற்கான காரணம் அன்று தமிழர்களும் அவர்களது பொருளாதாரமும் அரசு ஆதரவு காடையர்களின் அழிப்புநடவடிக்கையின் காரணமாவும் அதன் தொடர்ச்சியாக இடம்பெற்ற யுத்தம் இன்றுவரை அரசு பொருளாதாரத்தில் மீள்வதற்காக 2009 இற்குப் பின்னும் இத்தனை வருடமாகியும் முடியாமலுள்ளது.

அன்று தமிழ் மாணவர்கள் அதிகமாக பல்கலைக் கழகத்திற்கு தெரிவு செய்யப்படுவதை தடுப்பதற்கு எதிராக கொண்டுவரப்பட்ட தரப்படுத்தலை தொடர்ந்து ஆரம்பித்த போராட்டம், ஏற்பட்ட ஆயுத யுத்தம் அதானால் ஏற்பட்ட பாரிய உயிர் இழப்புக்கள், அழிவுகள் போன்றதொரு நிலை இனி ஏற்படக் கூடாது என்பதையும் வலியுறுத்துகின்றோம் அதே நேரம் இனியும் இந்நிலை ஏற்படக்கூடாதென கூறி நினைவு அஞ்சலியை ஒவ்வொரு வருடமும் தொடர்ந்து வருகிறோம் எனக் கூறினார்.

இலங்கை அணிக்கு மீண்டும் தெரிவு!இலங்கை பாடசாலை 17 வயதுக்குட்பட்டோர் உதைபந்தாட்ட அணியின் இறுதி தெரிவில் தி/ புனித மரியாள் ...
27/07/2025

இலங்கை அணிக்கு மீண்டும் தெரிவு!

இலங்கை பாடசாலை 17 வயதுக்குட்பட்டோர் உதைபந்தாட்ட அணியின் இறுதி தெரிவில் தி/ புனித மரியாள் கல்லூரி மாணவிகள் நால்வர் பங்குபற்றிய நிலையில் இருமாணவிகளான யுவிஷா மற்றும் மாணவி ரிகாஷினி ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.
தெரிவாகிய இருமாணவிகளும் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் இந்திய தலைநகர் டெல்லியில் இடம்பெறவுள்ள உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் பங்குபற்றவுள்ளார்கள்.

தெளிவுக்காகஅஞ்சல் சேவை அலுவலர் பணி வெற்றிடத்தில் கொஞ்சம் தெளிவாக இருங்கள். இலங்கை முழுவதும் தான் வெற்றிடம் 600 .இந்த பணி...
26/07/2025

தெளிவுக்காக

அஞ்சல் சேவை அலுவலர் பணி வெற்றிடத்தில் கொஞ்சம் தெளிவாக இருங்கள்.

இலங்கை முழுவதும் தான் வெற்றிடம் 600 .

இந்த பணி மாவட்ட ரீதியான ஆட்சேர்ப்பே தவிர தீவளாவிய ஆட்சேர்ப்பு கிடையாது.


ஆகவே விளம்பரத்தில் 600 என்று தான் போடுவார்கள்.

நீங்கள் அதை பார்த்து வாவ் சூப்பர் 600 பேரை எடுக்க போறாங்க 600 க்குள் வந்தால் சரி என்று நினைத்து விட கூடாது.

நீங்கள் உங்கள் மாவட்ட ரீதியாக மாவட்ட வெற்றிட எண்ணிக்கைக்கே போட்டி போட தயாராக வேண்டும்.

தெளிவோடு இலக்கை தீர்மானிக்க வேண்டும்.

-Kumaran Sharma -

சர்வதேச விசாரணை வேண்டும்-திருமலையில் ஆர்ப்பாட்டம்!!சர்வதேச நீதிப் பொறிமுறையை வலியுறுத்தி வடக்கு கிழக்கு சமூக இயக்கத்தின்...
26/07/2025

சர்வதேச விசாரணை வேண்டும்-திருமலையில் ஆர்ப்பாட்டம்!!

சர்வதேச நீதிப் பொறிமுறையை வலியுறுத்தி வடக்கு கிழக்கு சமூக இயக்கத்தின் ஏற்பாட்டில் ஆர்ப்பாட்டம் இன்று திருகோணமலை சிவன் கோவிலுக்கு முன்பாக இன்று (26)முன்னெடுக்கப்பட்டது.

வடக்கு கிழக்கு சமூக இயக்கத்தின் ஏற்பாட்டில், சர்வதேச நீதிப் பொறிமுறையை வலியுறுத்தும் நோக்கில், வடக்கு கிழக்கின் எட்டு மாவட்டங்களை தழுவிய வகையில் ஒரே நேரத்தில் பாரிய மக்கள் போராட்டம் முன்னெடுக்கப்படது

இலங்கையில் தமிழ் மக்களுக்கு நேர்ந்த வன்முறைகள் மற்றும் போர்க்குற்றங்களுக்கு நீதி கிடைப்பதற்காக, எதிர்வரும் செப்டம்பர் மாதம் ஐ.நா. மனித உரிமை பேரவையில் எடுக்கப்படவுள்ள இலங்கை தொடர்பான தீர்மானங்களை வலுப்படுத்தும் நோக்கில் குறித்த போராட்டமானது முன்னெடுக்கப்பட்டது

உள்நாட்டு பொறிமுறைகள் பயனளிக்காததால், சர்வதேச நீதிப் பொறிமுறைகள் மூலம் மட்டுமே நீதி கிடைக்க வேண்டுமென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தியிருந்தனர்.

குளிர்சாதனப் பெட்டி பழுதடைந்துள்ளதால் உயிரிழந்தவர்களின் உறவினர்களை அலையவைக்கும்  திருகோணமலை பொது வைத்தியசாலை நிர்வாகம்!!...
26/07/2025

குளிர்சாதனப் பெட்டி பழுதடைந்துள்ளதால் உயிரிழந்தவர்களின் உறவினர்களை அலையவைக்கும் திருகோணமலை பொது வைத்தியசாலை நிர்வாகம்!!

உறவினர்கள் உயிரிழந்து ஆழ்ந்த அனுதாபத்தில் இருக்கின்ற நிலையில் உறவினர்களின் குடும்பங்களை அலைய வைக்கும் விதத்தில் திருகோணமலை பொது வைத்தியசாலை நிர்வாகம் செயற்படுவதாக பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

விபத்துக்கள் மற்றும் யானைகளின் தாக்குதலினால் உயிரிழந்தவர்களின் சடலங்கள் சட்ட வைத்திய நிபுணரின் அறிக்கைகளுக்காக பிரேத பரிசோதனைகளை முன்னெடுப்பதற்கு தூர இடங்களிலிருந்து சடலங்கள் திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு வரப்படுகின்றது.

இந்நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் குளிர் சாதன பெட்டி பழுதடைந்த நிலையில் காணப்படுவதால் சடலத்தை பாதுகாக்கும் நோக்கில் கந்தளாய் வைத்தியசாலை பிரேத அறைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றது.

திருகோணமலை மாவட்டத்தில் தூர இடங்களில் இருந்து வரும் மக்கள் பணவசதியின்றி வசதி குறைந்தவர்களாக காணப்படுகின்ற நிலையில் சடலங்களை பிரேத பரிசோதனை மேற்கொள்ளும் வரை குளிர்சாதன பெட்டி இல்லாமையினால் வெவ்வேறு வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றது.

திருகோணமலையிலிருந்து- கந்தளாய் வைத்தியசாலைக்கு மலர் சாலை வாகனத்தின் ஊடாக அனுப்பி வைக்கப்பட்டு மீண்டும் மறுநாள் சட்ட வைத்திய நிபுணரின் பிரேத பரிசோதனைக்காக குறித்த சடலம் கந்தளாயிலிருந்து திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டுவரப்படுகின்றது.

குறித்த சடலத்தை கொண்டு வருவதற்கு 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொகை உயிரிழந்தவர்களின் உறவினர்களிடம் இருந்து வீணாக அபகரிக்கப்படுகின்றது.

இந்த நிலைமையை பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்கின்றது திருகோணமலை பொது வைத்தியசாலை நிர்வாகம்?

ஆழ்ந்த கவலையில் இருக்கின்ற நிலையில் உயிரிழந்த தனது உறவினர்களின் சடலங்களை அவசரமாக பிரேத பரிசோதனைகளை மேற்கொண்டு வீட்டுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்குடன் திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு வருகின்ற உறவினர்களின் நிலை இன்னும் கவலையை ஏற்படுத்தும் செயலாகவே காணப்படுகின்றது.

ஆகவே திருகோணமலை பொது வைத்தியசாலை நிர்வாகம் மத்திய அரசாங்கத்துடன் தொடர்பு கொண்டு பிரேதங்களை பாதுகாப்பதற்காக வேண்டி பழுதடைந்து காணப்படுகின்ற குளிர்சாதன பெட்டியை திருத்துவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

கடந்த காலங்களை விடவும் இந்த அரசாங்கம் மக்களுடைய நலன் விடயத்தில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் காணப்படுகின்ற குளிர்சாதனப்பெட்டி பழுதடைந்து காணப்படுகின்ற நிலையில் ஏன் வைத்தியசாலை நிர்வாகம் மௌனம் சாதிக்கின்றது

ஏழை மக்களை இன்னும் கஷ்டத்தில் வீழ்த்துவதற்கு முயற்சிக்கின்றதா?

மக்களின் நலனுக்காக செயற்படும் இந்த அரசாங்கத்தின் பெயரைக் கெடுப்பதற்காக திருகோணமலை பொது வைத்தியசாலை நிர்வாகம் செயற்படுகின்றதா?
Copy

காணிகள் தொடர்பான காணிச் சட்டங்கள் மற்றும் அரச காணிகளை கையளித்தல் மற்றும் பகிர்வு செய்வது தொடர்பான இரண்டாம் நாள் பயிற்சிந...
26/07/2025

காணிகள் தொடர்பான காணிச் சட்டங்கள் மற்றும் அரச காணிகளை கையளித்தல் மற்றும் பகிர்வு செய்வது தொடர்பான இரண்டாம் நாள் பயிற்சிநெறி.

திருகோணமலை மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில், காணிகள் தொடர்பான காணிச் சட்டங்கள் மற்றும் அரச காணிகளை கையளித்தல் மற்றும் பகிர்வு செய்வது தொடர்பான இரண்டாம் நாள் பயிற்சிநெறி இன்று (26) திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ. ஜி. எம் ஹேமந்த குமார அவர்களின் தலைமையில் மாவட்ட செயலக உப ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெற்றது.

குறித்த இரண்டு நாட்களை கொண்ட பயிற்சிநெறியானது திருகோணமலை மாவட்டத்தில் கடமையாற்றும் அனைத்து பிரதேச செயலாளர்களுக்கும் மற்றும் உதவி பிரதேச செயலாளர்களுக்கும் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

காணி முகாமைத்துவ அலுவல்கள், அரச தொழில்முயற்சிக் காணிகள் மற்றும் சொத்துக்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் முன்னாள் செயலாளர் (ஓய்வு நிலை) எஸ்.டி.ஏ.பி.பொரலெஸ்ஸா அவர்கள் வளவாளராக கலந்து கொண்டு சிறப்பித்திருந்தார்.

இதன்போது மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ். சுதாகரன், கிழக்கு மாகாண காணி ஆணையாளர், பிரதேச செயலாளர்கள், உதவி பிரதேச செயலாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

வருடந்தோறும் திருகோணமலை மாவட்ட TELOவினால் நினைவு கொள்ளப்படும் 53 வெலிக்கடை தியாகிகள் உட்பட அந்நேரத்தில் கொல்லப்பட்ட பொது...
26/07/2025

வருடந்தோறும் திருகோணமலை மாவட்ட TELOவினால் நினைவு கொள்ளப்படும் 53 வெலிக்கடை தியாகிகள் உட்பட அந்நேரத்தில் கொல்லப்பட்ட பொதுமக்கள் அனைவரதும் ஞாபகார்த்த நினைவேந்தல் நிகழ்வு இம்முறையும் நாளை 27.07.2025 ஞாயிற்றுக்கிழமை மாலை வெலிக்கடை தியாகிகள் அரங்கிற்கு முன்னால் இடம்பெறவுள்ளதாக திருகோணமலை மாவட்ட TELOவின் உதவி மாவட்ட செயலாளரும் கௌரவ மாநரக சபை உறுப்பினருமான தி.பிரபாதரன் தெரிவித்தார்.

மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித் தொகை ரூ.7,500 ஆக உயர்வு – 10 ஆண்டு தேசிய செயல் திட்டம் உருவாக்கம்மாற்றுத்திறனாளிகளுக்காக ...
25/07/2025

மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித் தொகை ரூ.7,500 ஆக உயர்வு – 10 ஆண்டு தேசிய செயல் திட்டம் உருவாக்கம்

மாற்றுத்திறனாளிகளுக்காக வழங்கப்படும் மாதாந்த உதவித் தொகையை எதிர்காலத்தில் ரூ.5,000 இலிருந்து ரூ.7,500 வரை உயர்த்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அரச தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

மேலும், அடுத்த 10 ஆண்டுகளுக்கான மாற்றுத்திறனாளிகள் தொடர்பான தேசிய கொள்கை மற்றும் செயல் திட்டம் தயார் செய்யப்பட்டுள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அரசாங்க தகவல்கள் திணைக்களத்தில் நேற்று (ஜூலை 24) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில்,

ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுகத் வசந்த டி சில்வா (Sugath Wasantha de Silva) உரையாற்றியபோது இந்த தகவலை வெளியிட்டார்.

நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 8.7% பேர் மாற்றுத்திறனாளிகள் என தெரிவித்து, அவர்கள் இல்லாமல் ஒரு வளமான சமுதாயத்தை உருவாக்க முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் சுகத் வசந்த டி சில்வா தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தின்படி, மாற்றுத்திறனாளிகளின் மேம்பாட்டிற்காக பல திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகவும்,

அவர்களது வாழ்க்கைத்தரத்தை உயர்த்தும் நோக்கில் கட்டுமான, நிதி, காப்பீட்டு உள்ளிட்ட துறைகளில் புதிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, மாற்றுத்திறனாளிகளுக்கான வீடமைப்புத் திட்டங்களில் வழங்கப்படும் நிதி உதவியை அதிகரித்தல் . மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு காப்பீட்டு திட்டத்தை அறிமுகப்படுத்துதல் ஆகியவை முக்கியமாக செயல்படுத்தப்பட உள்ளன. இந்த திட்டங்கள் எதிர்காலத்தில் மேலும் விரிவுபடுத்தப்படும் எனவும் அவர் கூறினார்.

  திருகோணமலை கோணேஸ்வர இந்து கல்லூரி ஆசிரியரான இப்னுசூத் அப்துல்லாஹ் (மாலிந்துறை,கிண்ணியா-04) என்பவருடைய பணப்பை திருகோணமல...
25/07/2025



திருகோணமலை கோணேஸ்வர இந்து கல்லூரி ஆசிரியரான இப்னுசூத் அப்துல்லாஹ் (மாலிந்துறை,கிண்ணியா-04) என்பவருடைய பணப்பை திருகோணமலை கோணேஸ்வர இந்து கல்லூரிக்கும் கிண்ணியாவுக்குமான இடைப்பட்ட பகுதியில் தவறவிடப்பட்டுள்ளது.

குறிப்பு: அவர் திருகோணமலை - மூதூர் பஸ்ஸில் பயணம் செய்தவர்.

தேசிய அடையாள அட்டை
சாரதி அனுமதிப்பத்திரம்
ஆசிரியர் அடையாள அட்டை
ATM Cards
பணம்
போன்ற முக்கிய ஆவணங்கள் இதில் உள்ளடங்கியுள்ள நிலையில்,
இவர் எதிர் வரும் 30ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ள பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ளவுள்ளார். இதற்கு அதில் உள்ள ஆவணங்கள் இன்றியமையாத ஒன்றாக இருப்பதனால் கண்டெடுத்தவர்கள் கீழுள்ள இலக்கத்துடன் தொடர்புகொள்ளுமாறு தயவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

0721580867 | 0752011004

-தகுந்த சன்மானம் வழங்கப்படும்.

வெற்றி யாருக்கு? FIDE மகளிர் உலகக் கோப்பை செஸ் தொடர் இறுதிப்போட்டிக்கு இந்தியாவின் திவ்யா தேஷ்முக் முன்னேறியிருந்தார். இ...
25/07/2025

வெற்றி யாருக்கு?

FIDE மகளிர் உலகக் கோப்பை செஸ் தொடர் இறுதிப்போட்டிக்கு இந்தியாவின் திவ்யா தேஷ்முக் முன்னேறியிருந்தார்.

இந்நிலையில், மற்றொரு அரையிறுதிப் போட்டியில் சீனா வீராங்கனை லெய் டிங்ஜி-யை வீழ்த்தி இந்தியாவின் கொனெரு ஹம்பி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார்.

இதன் மூலம் முதல்முறையாக FIDE மகளிர் உலகக் கோப்பை செஸ் தொடர் இறுதிப் போட்டியில் இரண்டு இந்தியர்கள் போட்டியிடவுள்ளனர்.

இந்தியாவுக்கு கோப்பை நிச்சயம் என்றாலும் அதை யார் எடுத்து வருவார்கள் என்பதில் செஸ் போட்டி ரசிகர்கள் ஆர்வமுடன் உள்ளனர்.




Address


Alerts

Be the first to know and let us send you an email when Trinconet posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share