24/01/2026
கல்வி உரிமை மறுப்பு: கட்டணம் செலுத்தாததால் 40க்கும் மேற்பட்ட மாணவர்களுக்குத் உள் தேர்வு எழுதத் தடை!
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு புகழ்பெற்ற கல்வி நிறுவனத்தால் நடத்தப்படும் பள்ளியில், சமீபத்தில் பொறுப்பேற்ற பள்ளி முதல்வர், சுமார் 40க்கும் மேற்பட்ட மாணவர்களை, பெற்றோர்கள் உரிய நேரத்தில் கட்டணம் செலுத்தவில்லை என்ற காரணத்தால், உள் தேர்வுகளைக் கூட எழுத அனுமதிக்காமல், வகுப்பறையை விட்டுப் புறக்கணித்துள்ளார்.
பெற்றோருடன் உரிய முறையில் கலந்தாலோசித்து, சுமூகமான முடிவை எடுத்திருக்க வேண்டிய பள்ளி நிர்வாகத்தின் இந்தச் செயல், மாணவர்களின் கல்வியுரிமையை நேரடியாகப் பாதிப்பதுடன், அவர்களின் மனதில் பெரும் பாதிப்பையும், மன உளைச்சலையும் ஏற்படுத்தியுள்ளது. நல்லாசிரியர்களின் கற்பித்தல் இருந்தும், பெற்றோரின் பொருளாதாரச் சிக்கல்களுக்காக, மாணவச் செல்வங்களின் கல்வி தடைபடுவது ஏற்கத்தக்கதல்ல. மாணவர்களின் மனதில் பெரும் பாதிப்பையும், மன உளைச்சலையும் ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த உங்கள் கருத்துக்களையும், இந்தச் செயல் சரியா தவறா என்பதையும் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
#பள்ளிக்கல்வி #மாணவர்உரிமை #கட்டணப்பிரச்சினை #திருப்பூர் #தமிழகஅரசு