எழுத்தாயுதம்

எழுத்தாயுதம் பொதுசனத்தின் குரல்
#திரு_பொதுசனம்

12/05/2025

Tourist family!

எங்கட "பேச்சுத்தமிழை" பழிக்காமல் சிதைக்காமல் அளவாக கலந்து தந்திருக்கிறார் இயக்குநர்.

முதல் தடவையாக எங்கட "தமிழை" முகம் சுழிக்காமல் ஒரு தென்னிந்திய சினிமாவில் ரசித்துப்பார்த்தேன்.

"கதைப்பமா?"
"சாப்பிட்டியா?"
"ஓம்"

இந்த படத்தில ஆரும் "நொட்டை" பிடிக்கிறவையும் முட்டையில கூந்தல் புடுங்குறவையும் கொஞ்சம் ஓரமாக நிண்டு முனகவும்.

ஏனெண்டால் இயக்குனர் "எங்கட பொடியன்"

அந்தளாந்தான்.....!

#எழுத்தாயுதம்

Home design
07/05/2025

Home design

15/08/2024

❤️

படித்த....அழகான....மாநிறமான...30 வயதுக்குட்பட்ட...கெட்டபழக்கவழக்கங்கள் இல்லாத...கொஞ்சம் உயரமான....நரைச்ச முடியில்லாத.......
09/08/2024

படித்த....
அழகான....
மாநிறமான...
30 வயதுக்குட்பட்ட...
கெட்டபழக்கவழக்கங்கள் இல்லாத...
கொஞ்சம் உயரமான....
நரைச்ச முடியில்லாத....
சீதனம் அதிகம் எதிர்பார்க்காத...
முன்னர் எப்போதும் திருமணமாகாத...
நல்ல வேலையில் உள்ள....
கை நிறைய சம்பாதிக்கிற...

"மாப்பிளை" தான் வேணும் எண்டு conditions போட்டாங்கள்!

அப்புறமாக "வடிவேலு - பார்த்தீபன்" நகைச்சுவை மாதிரி;

எல்லாத்தையும் அழிச்சுப்போட்டு....

வெறும் "மாப்பிளை" மட்டும் போதும் எண்டு நிறுத்தியிருக்கினம்.

#பொதுவேட்பாளர்_பரிதாபங்கள்

#திரு_பொதுசனம்

இடம்: யாழ்ப்பாண ஆசுப்பத்திரி. அவசர சிகிச்சை பிரிவுஇரவு 1 மணி. #நேர்ஸ்: ஐயோ டொக்டர் எழும்பி ஓடியாங்கோ. ரண்டு அம்புலன்ஸ் வ...
07/08/2024

இடம்: யாழ்ப்பாண ஆசுப்பத்திரி. அவசர சிகிச்சை பிரிவு
இரவு 1 மணி.

#நேர்ஸ்: ஐயோ டொக்டர் எழும்பி ஓடியாங்கோ. ரண்டு அம்புலன்ஸ் வந்து நிக்குது.

முதலாவது அம்புலஸ்சில எங்களுக்கு தெரிஞ்ச டொக்டர்மார் ஒரு சிலர் இருக்கினம்.

#வைத்தியர்: என்ன பிர்ச்சினை?

#நேர்ஸ்: ஒரு சிலருக்கு heart attack , மிச்சாக்களுக்கு வயிறு எரிவு.

#வைத்தியர்: சத்தியமூர்த்தி ஐயாவுக்கு அடிச்சு சொல்லுங்கோ. நான் வாறன்.

#நேர்ஸ்: ஐயோ அவரும் அம்புலன்ஸுக்குள்ளாதான் இருக்கிறார்.

#வைத்தியர்: என்ன கோதாரியடா? அப்ப ரண்டாவது அம்புலன்ஸ்?

#நேர்ஸ்: அது மன்னாரில் இருந்து வந்திருக்கு! அதுக்குள்ள டெனிஸ் லோயரும் இன்னும் 21 லோயர்மாரும் கிடக்கினம்!

#வைத்தியர்: அவைக்கென்ன பிரச்சினையாம்?

#நேர்ஸ்: ஒரே மணமாக்கிடக்கு. எல்லாருக்கும் மேல சேறு பூசிக்கிடக்கு!

#வைத்தியர்: கறுமம்!

#பொதுசனம்: மன்னாரில் அர்ச்சுனாவை சனம் கொண்டாடுவதை பார்த்ததால் வந்த விளைவு.

27/02/2024

ஒரு இனத்தின் விடுதலைக்காகவும் இந்த மண்ணுக்காகவும் இந்த மக்களுக்காகவும் தன்னையும் தன் குடும்பத்தையும் ஒட்டுமொத்தமாக தியாகம் செய்த ஒரு ஒப்பற்ற தலைவனை நாங்கள் இழந்துவிட்டோம்.

இறுதிக்கணம் வரை தன்னையும் தன் மனைவியையும் பிள்ளைகளையும் இந்த போராட்ட களத்தில் இருந்து விலத்தாமல் மக்களோடு மக்களாக நிக்கவைத்து தானும் வீரமரணம் அடைந்த ஒப்பற்ற தலைவன்.

தன்னுடைய "வீரமரணம்" வெளிப்படையானதாக இருக்கவேண்டும்.
தன்னுடைய வீரமரணத்திலும் தன்னுடைய மூத்த பிள்ளைகளின் வீரமரணத்திலும் எந்தவிதமான சந்தேகங்களும் இருக்கக்கூடாது என்று நினைத்த தெளிவானவன்.

அதற்கும் மேலாக எதிரியின் கைகளால் ஒருபோதும் தன்னுயிர் பறிக்கப்படக்கூடாது என்பதில் மிக உறுதியாக நின்ற வீரன்.

போர்க்களத்தில் தன்னுடைய மூத்த இரண்டு பிள்ளைகளையும் போராளிகளோடு போராளிகளாக சமர்க்களம் ஆடுவதற்கு பணித்த கர்ணன்!

இரண்டு மாவீர்களுக்கு அப்பா என்ற பெருமையோடு தன்னையும் இந்த மண்ணுக்காக தியாகம் செய்த பெருந்தலைவன்.

இறுதிப்போரிலே பலர் இராணுவத்திடம் பிடிபட்டு காணாமல் ஆக்கப்பட்டார்கள். பலர் கண்முன்னே படுகொலை செய்யப்பட்டார்கள்.

இறுதிநாட்களில் சாதாரண பொதுமக்கள் பலர் இராணுவ கட்டுப்பாட்டு பகுதிக்குள் தாமாகவே சரணடைந்தார்கள்.

அவ்வாறு சரணடைந்த அல்லது வழிமாறிச்சென்ற தன்னுடைய கடைக்குட்டி மகனையும் இராணுவம் சுட்டு படுகொலை செய்துவிட்டது என்பதைக்கூட அறிந்திருக்க முடியாத நிலையில்;

தன்னுடைய "வீரமரணத்தை" தானே நிர்ணயிக்கும் கரும்புலி படையை கட்டியாண்ட கரிகாலனும் ஒரு "கரும்புலியானான்" என்பதுதான் வரலாறு.

பல நூறு கரும்புலிகளை கட்டியணைத்து கண்ணீரோடு விடைகொடுத்த அந்த மாபெரும் தலைவன் இறுதியில் தானும் ஒரு "கரும்புலியானான்"!

இத்தனை ஆயிரம் மாவீரர்களையும் மக்களையும் இந்த மண்ணுக்காக பறிகொடுத்த ஒரு மாபெரும் தலைவன் ஒருபோதும் சுயநலமாக வாழ்ந்தது இல்லை.

"தன்குடும்பம், தன் பிள்ளைகள்" என்று சிந்திக்காத ஈகையாளன்.

இந்த மண்ணில் இறுதியுத்தத்தில் தன்னுடன் இறுதிவரை நின்ற மக்களுக்கு என்ன நிகழ்ந்ததோ அதுவே தன் குடும்ப உறுப்பினர்களுக்கும் நிகழவேண்டும் என்று நினைத்த அரும் பெரும் மன்னன்.

இறுதி கணத்தில் போர்க்களத்தில் எல்லா போராளிகளுக்கும் என்ன வசதி கிடைத்ததோ அதே அடிப்படை வசதிகள்தான் தன் மூத்த இரண்டு பிள்ளைகளுக்கும் கிடைக்கவேண்டும் என்று நினைத்த ஒப்பற்ற அறம் உடைய பெருவீரன்.

தன் மூத்த பிள்ளைகளின் வீரச்சாவில் கூட கலந்துகொள்ளாமல் போர்க்களத்தில் களமாடிய மாபெரும் போர்வீரன்.

"இத்தனை ஆயிரம் மாவீர்களை உயிர்த்தியாகம் செய்ய சொன்ன தலைவன் தன்னையும் தன் குடும்பத்தையும் காப்பாற்றி தப்பியோடினான்" என்று எதிரிகள் தப்பாக வரலாற்றை எழுதுவார்கள் என்று அறிந்த தீர்க்கதரிசி அவன்.

அதனால்த்தான் தன்னுடைய சாவு வெளிப்படையானதாகவும் தன்னுடைய வித்துடல் இந்த மக்களின் கைகளில் கிடைக்கவேண்டும் என்று தெளிவாக திட்டமிட்டு;

தன்னுடைய "வீரமரணத்தை" தானே எழுதிய கரும்புலி.

"இந்தளவு சனத்தையும் பறிகொடுத்த பின்னர் தன் பிள்ளைகளை தப்பவைத்தான். தன் மனைவியை தப்பவைத்தான்" என்று எவனும் இந்த உன்னதமான விடுதலைப்போராட்ட தியாகங்களையும் வரலாற்றையும் கொச்சைப்படுத்தக்கூடாது என்பதில் மிகத்தெளிவாக இருந்த கரிகாலன் அவன்.

உன்னதமான விடுதலைப்போராட்டத்தை கொச்சைப்படுத்தவும் ஒரு ஒப்பற்ற தலைவனின் தியாக வரலாற்றில் கரிபூசவும் பலர் முனையலாம்.

ஆனால் "தம்பி" என்ற பெரு நெருப்பின் வெப்பத்தில் இந்த நரிகளும் நாய்களும் பொசிங்கிப்போய்விடுவார்கள்.

ஒப்பற்ற வீர வரலாற்றை திரிக்கவும் அதை மக்கள் மனதில் இருந்து அகற்ற நினைப்பவர்களுக்கும்;

அதற்கு துணைபோகும் ஒரு சிலருக்கும் வயிறு முட்ட எதிரி "இறைச்சி துண்டுகளை" வீசுகிறான்.

அதைக்கெளவிக்கொண்டு காலத்துக்கு காலம் ஒப்பற்ற அந்த தலைவனின் பெயரை களங்கப்படுத்த நினைக்கும் எங்கள் இனத்தின் ஈனப்பிறவிகளுக்கு ஒண்டை மட்டும் தெளிவாக சொல்கிறோம்.

எந்தக்காலத்திலும் எந்த சந்தர்ப்பதிலும் போர்க்களத்தில் புறமுதுகிட்டு ஓடாத வீரத்தலைவன்.

அவன் வளர்த்து போராளிகளாக களமாடி வீரச்சாவடைந்த அவனது மூத்த இரண்டு பிள்ளைகளும் கூட இந்த மண்ணில் வித்தான ஆயிரம் ஆயிரம் மாவீரர்கள் போல இந்த மண்ணையும் மக்களையும் உயிராக நேசித்தவர்கள்.

அவர்களின் வித்துடல்களும் இந்த மண்ணில்த்தான் எங்கோ ஒரு இடத்தில் பல ஆயிரம் மாவீரர்களின் வித்துடல்களோடு வித்துடல்களாக புதைக்கப்பட்டிருக்கும்.

#தமிழ்ப்பொடியன்

22/02/2024

"வயிறார சாப்பிட்டுவிட்டு என்னுடைய வீட்டின் முற்றத்தில் நின்ற வேப்பமர நிழலில் பாய் விரித்து என் தலையணியில் நிம்மதியாக நித்திரை கொண்டிருந்த" என்னை தட்டி கடவுள் கேட்டார்.

"உனக்கு ஏதாவது வேண்டுமா?"

"நான் நிம்மதியாக படுத்திருக்கிறேன். என்னுடைய நித்திரையை குழப்பவேண்டாம் கடவுளே" என்றேன்.

"போனால் மீண்டும் திரும்ப வரமாட்டன். எனக்கு நிறைய வேலை இருக்கிறது" என்றார் கடவுள்.

"சரி" என்றேன்.

கடவுள் சென்றுவிட்டார்.

ஒரு வீடு.
ஒரு பாய்.
ஒரு தலையணை.
நிம்மதியான தூக்கம்.

இதைவிட கடவுளிடம் கேட்பதற்கு சத்தியமாக எதுவும் இல்லை.

#தமிழ்ப்பொடியன்

08/02/2024

பறந்துகொண்டு திரியாதை சின்ராசு!
கொஞ்சநாள் ஓடிப்பார்.

ஓடிக்கொண்டு திரியாதை சின்ராசு!
கொஞ்சநாள் நடந்துபார்.

நடந்துகொண்டு திரியாதை சின்ராசு!
ஒப்பனுக்கு சரிஞ்சு படு.

சும்மா படுத்துக்கிடவாத சின்ராசு! கண்ணயர்ந்து தூங்கு.

நித்திரையில் பறக்கும் கனவுகள் காணத சின்ராசு!

விரல் சூப்பு.
போச்சிபோத்தலில் பால்குடி.

மீண்டும் நண்பர்களோடு அரிவரி போ.
வேலி பாய்.
கள்ள மாங்காய் புடுங்கு.
அடிவாங்கு.
சைக்கிளில் திரி.
சந்தியில நிண்டு சேட்டை விடு.
அவளுக்காய் மீண்டும் கால்கடுக்க காத்திரு.
காதல் கடிதம் குடு.
ஏச்சுவாங்கு.
மீண்டும் தோற்றுப்போ.
கிளித்தட்டு விளையாடு.
அளாப்பு.
சண்டைபோடு.
கள்ளக்கோழி பிடி.
கள்ளும் குடி.
நாய்க்கு கல்லெறி.
கடிவாங்கு.
பொன்வண்டு பிடி.
புறாவுக்கு தடம் வை.
ராணி காமிக்ஸ் படி.

காலமை அம்மா எழுப்பும்.
அதுவரை அப்பாவோடு படு.

இனியும் பறக்காத சின்ராசு!

#அம்மாச்சி

04/02/2024

நீங்கள் கொண்டாடுங்கள்
எங்களை வற்புறுத்தாதீர்கள்!

முன்னொருகாலம்
இது "எங்கள்" நாடாக இருந்தது.
எல்லோரும் கொண்டாடினோம்.

பிறிதொருநாளில்
இது "உங்கள்" நாடானது!
நாங்கள் மெளனமானோம்.

நீங்கள் கொண்டாடுங்கள்
எங்களை வற்புறுத்தாதீர்கள்!

வெள்ளையன் போகும் போது
எங்களுக்கு ஒரு நாடுதான்.

இலங்கைத்திருநாட்டில்
எல்லோரும் கொண்டாடினோம்.

நாங்கள் சிறிலங்கா தாயே என்றோம்.
நீங்கள் சிறிலங்கா மாதா எண்டியள்.
பெரிசா வித்தியாசம் இருக்கேல்ல!

வேலிகள் இன்றியே
எங்கள் வளவுகள் இருந்தன.
எல்லைகள் இன்றியே
எங்கள் காணிகள் இருந்தன.

நீங்கள் தானே எரித்தீர்கள்!
நீங்கள் தானே அடித்தீர்கள்!
நீங்கள் தானே விரட்டினீர்கள்!
நீங்கள் தானே பிரித்தீர்கள்!

எங்கள் எல்லோருக்குமான நாடு;
திடீரென உங்களுக்கான நாடானது!
எங்கள் தாய்நிலங்களும்
உங்களுக்கானது!

இந்த நாள் உங்களுக்கானது
எமக்கானது அல்ல!

நீங்கள் தாராளமாக கொண்டாடுங்கள்
எங்களை வற்புறுத்தாதீர்கள்!

கொடியிலும் நாங்கள் இல்லை!
தேசிய கீதத்திலும் நாங்கள் இல்லை!
அறிவித்தலிலும் எங்கள் மொழி இல்லை!

எதற்காக எங்களை வற்புறுத்துகிறீர்கள்?
நீங்கள் கொண்டாடுங்கள்!

"பிரித்" ஓதுங்கள்!
சீனா வெடிகொழுத்துங்கள்!
"கிரிபத்" தின்னுங்கள்!
"பைலா" பாடுங்கள்!

நாங்கள் பார்த்துக்கொண்டிருப்போம்!

ஆனாலும் எங்களில் ஒருசிலர் பசியோடு இருக்கிறார்கள்!
அவர்கள் உங்களிடம் வருவார்கள்.
அவர்கள் உங்களோடு
வெடி கொழுத்துவார்கள்!
கிரிபத் தின்பார்கள்!
பைலா பாடி ஆடுவார்கள்!
உங்கள் கொடியை உயர்த்தி ஆட்டுவார்கள்!
தேசியகீதத்தை உங்கள் மொழியிலேயே முணுமுணுப்பார்கள்!

நீங்கள் அவர்களோடு கொண்டாடுங்கள்!
எங்களை வற்புறுத்தாதீர்கள்!

ஆனால் ஒண்டு.....
நினைவில் வைத்திருங்கள்.

எங்கள் பூட்டனும்
உங்கள் பூட்டனும்
சுதந்திரத்தை ஒன்றாகவே வாங்கினார்கள்!
ஒன்றாகவே கொண்டாடினார்கள்!!!

எங்கள் பிள்ளைகளும்
உங்கள் பிள்ளைகளும்
ஒன்றாக கொண்டாடவேண்டுமெனில்;

எங்களை வற்புறுத்தாதீர்கள்
நீங்கள் கொண்டாடுங்கள்!

எங்கள் பனைகளில்
ஏற்கனவே எங்கள் கொடி பறக்கிறது!
அரசமரங்களில் உங்கள் கொடி பறக்கட்டும்!

எங்கள் பனைகளையும்
எங்கள் கொடிகளையும் விட்டுவிடுங்கள்!!!

ஏனெனில் உங்கள் அரசமரங்களை
நாங்கள் தொட்டதேயில்லை!

நீங்கள் கொண்டாடுங்கள்
எங்களை வற்புறுத்தாதீர்கள்!
தயவுசெய்து வற்புறுத்தாதீர்கள்!!

இப்ப தேசியகீதம் சிங்களத்தில் மட்டும் தான்!
எங்களுக்கு கவலை இல்லை.
வலிக்கவும் இல்லை!

சிறிலங்காவின் தேசியகீதம் சிங்களத்தில்தான் இருக்கவேண்டும்.

எங்கள் பூட்டன் ஆண்ட ஈழதேசத்தில் தேசியகீதம் தமிழிலும் இருந்தது.

ஆதலால்;
எங்கள் தேசிய கீதத்தை....
தேமதுரத்தமிழில்...
மனசுக்குள் பாடிக்கொள்கிறோம்!

எங்களுக்கு "சுதந்திரம்" கிடைக்கும்போது;
சத்தமாய் பெருங்குரலெடுத்து பாடுகிறோம்.

அதுவரை!
நீங்கள் கொண்டாடுங்கோ...
எங்களை விடுங்கோ!

#தமிழ்ப்பொடியன்

14/11/2023

#அம்மாச்சி: தீபாவளி நல்வாழ்த்துகள் சின்ராசு!

#சின்ராசு: அம்மாச்சி தீபாவளி கொண்டாடக்கூடாதாம். நரகாசூரன் தமிழ் மன்னனாம். அவன் செத்த நாளாம்.
ஏதோ கங்கை கொண்ட சோழன் வெண்ட நாளாம் எண்டுறாங்கள்.

#அம்மாச்சி: ஆர் சொன்னது உனக்கு?

#சின்ராசு: பேஸ்புக்கில ஒரு பொடியன் முக்கி முக்கி சொல்லுறான்.

#அம்மாச்சி: ஆர் அது?

#சின்ராசு: பேஸ்புக் பிரபலம்.

#அம்மாச்சி: எத்தினை வயசு?

#சின்ராசு: ஒரு முப்பது இருக்குமணை!

#அம்மாச்சி: எனக்கு எத்தினை வயசு தெரியுமோ?

#சின்ராசு: 96!

#அம்மாச்சி: என்ர அப்பு ஆச்சி காலத்தில இருந்து தீபாவளி கொண்டாடுறம். நான் சொல்லுறது வரலாறா? இல்லை முந்தாநாள் பிறந்த அந்த பால்குடி சொல்லுறது வரலாறா?

பொத்திக்கொண்டு திபாவளியை கொண்டாடி மகிழ்.

இறைச்சிகறியும் கத்தரிக்காய் வெள்ளைக்கறியும் காய்ச்சிவைச்சிருக்கிறன்.

வடிவா போட்டு சாப்பிட்டு போ சின்ராசு!

04/11/2023

ஒரு காலத்தில்....
வகுப்பில இருக்கிற பிள்ளைகளின் குடும்ப சூழ்நிலைகளை எல்லாம் அறிந்து வைத்திருந்தார்கள் ஆசிரியர்கள்.

வெறுமனே புத்தகங்களை வாசிச்சு கரும்பலகையில் எழுதுவதோடு மட்டும் அவர்களின் பணி முடிந்துவிடவில்லை.

பள்ளிக்கூடத்துக்கு வெளியே நான் என்ன செய்கிறேன் என்பது வரை அவர்கள் அறிவார்கள்.

"ரியூசனில ஒரு பிரச்சினை எண்டால் அது ஆறுமுகம் ரீச்சருக்கு அடுத்த நாளே தெரியும்"

"என்னுடைய வீட்டில ஏதும் பிரச்சினை எண்டால் அது ஜூலியானா ரீச்சருக்கு தெரியும்"

"என்னுடைய நண்பனோடு பிரச்சினை எண்டால் அது ராமநாதன் ரீச்சருக்கு தெரியும்"

"கூடப்படிக்கும் பிள்ளைகளோடு பிரச்சினை எண்டால் அது முத்துலச்சுமி ரீச்சருக்கு தெரியும்"

"ஆமியோட ஏதும் பிரச்சினையெண்டால் அது குணசீலன் சேருக்கு தெரியும்"

"நான் பசியோடு இருந்தால் அது ஆழ்வாப்பிள்ளை ரீச்சருக்கு தெரியும்"

ரீச்சர் கொண்டுவரும் சாப்பாட்டை பகிர்ந்து உண்ணும் பாக்கியம் பெற்றவர்கள் நாங்கள்.

எனக்கு படிப்பித்த பெரும்பான்மையான ஆசிரியர்களின் வீடு தெரியும். அவர்களின் வீட்டு குசினி வரை சென்றிருக்கிறேன்.

கிழமைக்கு ஒருதரம் எண்டாலும் ஜூலியானா ரீச்சரும் முத்துலச்சுமி ரீச்சரும் அம்மாட்ட என்னைப்பற்றி ஒண்டு நல்லா சொல்லுவினம் அல்லது முறைப்பாடு செய்வினம்.

ஆழ்வாப்பிள்ளை ரீச்சர், ஆறுமுகம் ரீச்சர் , ராமநாதன் ரீச்சர் , முத்துலச்சு ரீச்சர் எனக்கு இன்னொரு அம்மா.

ஒருக்கால் நான் பள்ளிக்கூடத்தில் வேண்டுமென்றே "நிராகரிக்கப்பட்ட போது" அவர்கள் தான் என்னோடு கூட நின்றார்கள்.

மாணவன்- ஆசிரியர் என்ற உறவைத்தாண்டி அவர்கள் எங்களின் மேல் வைத்திருந்த அன்பும் பாசமும் மிகப்பெரியது.

பாடப்புத்தகங்களை தாண்டி நாங்கள் அரசியல் சமூக மாற்றங்களையெல்லாம் ஆசிரியர்களோடு பேசிவோம். விவாதிப்போம்.

"படிக்கிறது பாதி. கதைக்கிறது மீதி"

சத்தம் போடாமல் கதைக்காமல் இருங்கோ எண்டு சொன்ன ஆசிரியர்களை நான் வெறும் புத்தகப்பூச்சிகளாகவே பாத்திருக்கிறேன்.

தேவையெண்டால் ஆசிரியர்களைக்கூட நிமிர்ந்து நியாயமாக கேள்வி கேட்கும் பக்குவம் கூட எங்களிடம் இருந்தது.

ஆனால் பல பள்ளிக்கூடங்களில் இண்டைக்கு கனக்க ஆசிரியர்களுக்கு....

-மாணவர்களின் குடும்ப பின்னணி தெரியாது
-பள்ளிக்கூடத்துக்கு வெளியே என்ன செய்கிறான் எண்டு தெரியாது.
-பள்ளிக்கூட பையில் கொப்பி புத்தகம் இருக்கா? இல்லை கஞ்சா சிகறட் இருக்கா எண்டு தெரியாது
-மன அழுத்தம் பற்றி தெரியாது
-பசியோடு இருக்கிறானா எண்டு தெரியாது.பகிர்ந்து உண்ணவும் தெரியாது.
-மாணவனை சுற்றி ஊரில்/சமூகத்தில் என்ன நடக்கிறது எண்டும் தெரியாது.

வெறுமனே பாடப்புத்தகங்களில் உள்ளவற்றை தாண்டி உங்களிடம் படிக்கும் மாணவர்களுக்கு...

-வாழ்க்கை என்றால் என்ன எண்டு சொல்லிக்குடுங்கள்
-அரசியலையும் நாட்டின் நிலமைகளும் கற்றுக்கொடுங்கள்.
-உரிமைகளுக்காக போராடுவதை சொல்லிக்குடுங்கள்.
-சமூகத்தில் நிகழும் அநீதிகளை எதிர்க்க சொல்லிக்குடுங்கள்.

அதற்கும் மேலாக நேரம் கிடைக்கும் போதெல்லாம் மாணவனை அரவணைத்து...

"சாப்பிட்டியாடா.."
"சுகமாக இருக்கிறியா.."
"ஏதேனும் பிரச்சினையெண்டால் என்னிட்ட சொல்லு.."
"நேரம் இருந்தால் என்ர வீட்ட வா.."

என்று கேளுங்கள்.

எங்களின் ஊரும் சமூகமும் பல நல்ல மாற்றங்களை காணும்.

#தமிழ்ப்பொடியன்

பொது அறிவுக்கேள்வி 1:களவெடுத்த கள்ளனே தன்னை தானே விசாரிச்சு தனக்குதானே தண்டனை குடுக்குறன் எண்டு சொல்லும் விசித்திரமான நா...
30/09/2023

பொது அறிவுக்கேள்வி 1:

களவெடுத்த கள்ளனே தன்னை தானே விசாரிச்சு தனக்குதானே தண்டனை குடுக்குறன் எண்டு சொல்லும் விசித்திரமான நாடு எது?

பதில்: சிரிலங்கா

மிகச்சரியான பதில்.

#திரு_பொதுசனம்

Address

Melbourne, VIC

Website

Alerts

Be the first to know and let us send you an email when எழுத்தாயுதம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category