Daily Tamil Entry

Daily Tamil Entry Photojournalism is the practice of storytelling through photographs

THE AWARD FOR MIDEA TASKS.My heartfelt thanks to the Chief Editor S. SivaMohan  Thalir Tamil Radio and his wonderful tea...
12/15/2025

THE AWARD FOR MIDEA TASKS.
My heartfelt thanks to the Chief Editor S. SivaMohan Thalir Tamil Radio and his wonderful team.
to nominated me for this award for my Photojournalist task and media works. to provided by NATIONAL ETHNIC PRESS AND MEDIA COUNCIL OF CANADA.
This recognition means a lot to me and inspires me to continue working with passion and dedication. also
I would like to express my sincere gratitude to Thomas S. Saras President and CEO. and the entire team for this prestigious award NATIONAL ETHNIC PRESS AND MEDIA COUNCIL OF CANADA.

எனது புகைப்பட பத்திரிகையாளர் பணி மற்றும் ஊடகப் பணிகளுக்காக இந்த விருதுக்கு என்னை பரிந்துரைத்ததற்காக தலைமை ஆசிரியர் எஸ். சிவமோகன் மற்றும் அவரது அற்புதமான குழுவினருக்கு எனது மனமார்ந்த நன்றி.

கனடாவின் தேசிய இனப் பத்திரிகை மற்றும் ஊடக கவுன்சிலால் வழங்கப்பட்டது.
இந்த அங்கீகாரம் எனக்கு மிகவும் முக்கியமானது மற்றும் ஆர்வத்துடனும் அர்ப்பணிப்புடனும் தொடர்ந்து பணியாற்ற என்னைத் தூண்டுகிறது. மேலும்

இந்த மதிப்புமிக்க விருதுக்கு கனடாவின் தேசிய இனப் பத்திரிகை மற்றும் ஊடக கவுன்சிலின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி தாமஸ் எஸ். சரஸ் மற்றும் முழு குழுவினருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மாவீரர்கள்யார் இவர்கள் ?மனித உருவில் வந்ததமிழின் மானம் இவர்கள்புனித தேசத்துக்காய் உயிர்கொடுத்த புண்ணிய தானம் இவர்கள்.பெற...
11/22/2025

மாவீரர்கள்
யார் இவர்கள் ?

மனித உருவில் வந்த
தமிழின் மானம் இவர்கள்
புனித தேசத்துக்காய் உயிர்கொடுத்த புண்ணிய தானம் இவர்கள்.

பெற்றவரைப் பிரிந்து
கொற்றவராய் நின்றவர்கள்
ஒற்றுமையாய் சேர்ந்து
ஒரே தட்டில் உண்டவர்கள்.

சொத்துபத்துச் சேர்த்து
சுகபோகம் விரும்பாதவர்கள்
சொந்தம் பந்தம் துறந்து
மனதால் இரும்பானவர்கள் .

விதைக்கப்பட்ட இவர்கள்
எங்களின் உறவுகள்
சிதைக்கப்பட்ட இனத்துக்காய்
சீறிப்பாய்ந்த மகவுகள்.

தியாகத்தின் உருவங்கள்
வீர வரலாற்றின் உயரங்கள்
மறவாது நாம்வவணங்கும்
மாமறவச் சிகரங்கள்.

இது கார்த்திகை மாதம்
இவர்கள் நினைவோடு
யாத்திரை செல்வோம் வாருங்கள்.

காலத்தில் சிறக்குது
கார்த்திகை மாதம்
கனவினில் பிறக்குது
காவியர் தாகம்.

ஞாலத்தில் அதிருது
உறவுகள் ஓலம்
நனைந்து கதறுது
நினைவினில் ஈழம்

காற்றினில் கலக்குது
காந்தளின் வாசம்
காதினில் கேட்குது
கல்லறைக் கோசம்

ஊற்றாகக் கசியுது
உதிரத்தின் ஈரம்
உலகமே பாடுது
உத்தமர் வீரம்

கானகம் எங்கும்
கண்ணீரின் கீதம்
காவியம் ஆகுமே
வேங்கைகள் வேதம்

வானமும் அழுதிடும்
விளக்கேற்றும் நேரம்
வஞ்சகர் பகைக்கும்
நெஞ்சினில் பாரம்

இறக்கின்ற வேளையும்
இழக்காத காதல்
இனம்வாழ அமைந்ததே
இவர்களின் சாதல்

மறக்கத்தான் முடியுமா
வரலாற்றின் பாடம் - நாம்
மடிந்தாலும் நடைபோடும்
மாவீரர் பாதம்.

11/03/2025
கனடா மொன்றியலில் பிறந்து வளர்ந்த  ஈழத்தமிழரான, கணியவன்  நாகராஜா  என்பவர், கனடா கியூபெக் மாகாணத்தில் (கிறிக்கேற் ) துடுப்...
11/03/2025

கனடா மொன்றியலில் பிறந்து வளர்ந்த ஈழத்தமிழரான, கணியவன் நாகராஜா என்பவர், கனடா கியூபெக் மாகாணத்தில் (கிறிக்கேற் ) துடுப்பாட்ட சிறந்த முதல் இளம் வீரராக வளர்ந்து வருகின்றார். பதினேழு வயதிற்கு உட்பட்டோருக்கான போட்டிகளில் சகலதுறை வீரராகவும் சிறந்து விளங்குகின்றார். அத்துடன்
துடுப்பாட்டச் சுற்றுப்போட்டிகளில் கியூபெக் மாகாணம் சார்பாக, பிற மாகாணங்களோடு சிறப்பாக விளையாடிவருவதோடு, இவரின் செயற்பாடு ஈழத்தமிழ்ச் சமுகத்திற்குப் பெருமை சேர்க்கின்றது.

வாழ்விழந்து வழிதேடியயாழ்ப்பாண இடப்பெயர்வு (1995). ( தமிழ் கட்டுரை )இன்று யாழ்ப்பாண இடப்பெயர்வு நடந்து முப்பது (30) ஆண்டு...
10/31/2025

வாழ்விழந்து வழிதேடிய
யாழ்ப்பாண இடப்பெயர்வு (1995). ( தமிழ் கட்டுரை )

இன்று யாழ்ப்பாண இடப்பெயர்வு நடந்து முப்பது (30) ஆண்டுகள் ஆகின்றன. யாழ் இடப்பெயர்வு ஈழத்தமிழர் வரலாற்றில் வலிசுமந்த வரலாறாக இருக்கின்றது. தமிழ்பேசும் மக்களின் உரிமைக்குரல் அறுக்கப்பட்டுச் சொந்த மண்ணைவிட்டு இடம்பெயர்ந்த சோகமான நாள். நிலத்தின் உரிமைக்காகப் போராடிய ஈழத்தமிழினம் அந்த நிலத்தை போர் என்ற இனவழிப்பினால் இழந்த துயர்படிந்த நாள்.

மின்சாரம் இல்லாத அந்தக் காலத்திலும் மக்கள் கல்வி, கலை, கலாசாரங்களில் மிளிர்ந்ததோடு, போர்ச்சூழலுக்குள் வாழ்ந்தாலும் வேரோடு பிடுங்கி எறியப்படாமல் சொந்த மண்ணில் சீரோடு ஒரு இயல்பான வாழ்க்கையை வாழ்ந்தவர்கள், ஆனால், 1995ஆம் ஆண்டு ஒக்டோபர் 30 ஆம் திகதி ஏற்றுக்கொள்ள முடியாத நாளாக அந்நாள் விடிந்தது .

யாழ்குடாநாட்டைக் கையகப்படுத்தும் நோக்குடன் இராணுவம் மேற்கொண்ட பாரிய நடவடிக்கையினால் அண்ணளவாக ஐந்து இலட்சத்திற்கு அதிகமான மக்கள் ஓர் இரவு விடிவதற்குள் பாதுகாப்புத்தேடி தென்மராட்சி, வன்னியை நோக்கிச் செல்வதென்பது கடினமான காரியம். இருந்தும், எல்லோரும் மூட்டை முடிச்சுகளோடு வீதிகளில் இறங்க வீதி இறுகிப்போனது.

'கூடு கலைந்திட்ட குருவிகளாய்' வீடுகளையிழந்து வீதிகளிலும், தேவாலயங்களிலும்,ஆலயங்கள் பாடசாலைகளில் தங்கினார்கள்.வயதானவர்கள், கர்ப்பிணித்தாய்மார்கள் , குழந்தைகள் தொடர்ந்து நடக்கமுடியாமல் தவித்தார்கள். குண்டுமழை ஒருபக்கம் வான்மழை இன்னொருபக்கம் குழந்தைகள் பசியினால் குடைகளில் இருந்துவழியும் மழைநீரைப்பருகி நடந்தனர், கைதடி, நாவற்குழிப் பாலங்களில் சனநெருசலினாலும் விமானத்தின் வட்டமிடுதலினாலும் வயதானவர்கள் நெரிபட்டு சேறுசகதிகளுக்குள் புதைந்து இறந்த துயரங்களும் நடந்தன. ஓர் இரவு கொடிய குருதிக்கறை படிந்த இரவாக்கியது. அந்தக்கொடிய வலியும் நினைவுகளும் நிலைத்துக்கொண்டுதான் இருக்கின்றன.

ஆட்சிகள் மாறினாலும், அபிவிருத்திகள் நடந்தாலும் மக்கள்பட்ட யுத்தக்காயங்களும், மனத்தாக்கங்களும், யாழ்ப்பாணச் சிதைவுகளும் அழியாத சுவடுகளாக உள்ளன. இன்றும் விடுதலைக்காகப் போராடிக்கொண்டிருக்கின்றோம்; ஏங்கிக்கொண்டிருக்கின்றோம். அன்று புலம்பெயர்ந்த உறவுகள் பல இன்றும் சொந்த நாட்டுக்கு வரமுடியாமல் ஏதிலிகளாக வாழ்வதைக் காண்கின்றோம்.

Remembering the Jaffna exodus 500,000 displaced
On October 30, 1995

சர்வதேச ஆசிரியர் நாள். ( தமிழ் கட்டுரை )🎓ஒரு தேசத்தின் எதிர்கால முதலீடு ஆசிரியர்களே. ஆசிரியர்கள் மனித சமூகத்தின் வடிவமைப...
10/07/2025

சர்வதேச ஆசிரியர் நாள். ( தமிழ் கட்டுரை )

🎓ஒரு தேசத்தின் எதிர்கால முதலீடு ஆசிரியர்களே. ஆசிரியர்கள் மனித சமூகத்தின் வடிவமைப்பாளர்கள். சமூகத்தில் அனைவரும் சமம் என்பதைக் கல்விமூலம் உணர்த்தி, பகுத்தறிவு, நல்லொழுக்கம், கலை, கலாச்சாரம், மாண்பு, பண்பு, திறன் அனைத்தையும் கற்பித்துச் சான்றோராக உருவாக்குகிறார்கள். இவர்களின் தன்னலமற்ற ஈடுபாடுதான் ஒரு சமூகத்தைச் சிறந்தமுறையில் வடிவமைக்க உதவுகின்றது.

🎓ஒவ்வொரு ஆசிரியரும் ஒவ்வொரு நூலகம். நாட்டின் எதிர்கால வளர்ச்சி அந்நாட்டின் வகுப்பறையில்தான் உருவாக்கப்படுகின்றது. ஒரு தேசத்தின் வளமான எதிர்காலத்தைத் தாங்க இருக்கும் தூண்களுக்கு வைரம் பாய்ச்சுகின்றனர். ஆசிரியரிடம் பழகும் மாணவனுக்கு அறிவின் அற்புத வளர்ச்சியும் பெருமையும் தனித்துவமும் கிடைக்கின்றன.
ஆசிரியர்கள் மாணவ சமூகத்தை உருவாக்குபவர்கள் அல்லர். மாறாக உயிரூட்டுபவர்கள். "எங்கே நடப்படுகிறாயோ அங்கே மலராகு" என்ற பொன்மொழிக்கு எடுத்துக்காட்டாக விளங்குபவர்கள்.

🎓மாதா,பிதா,குரு,தெய்வம் என்பதில் தாய் தந்தைக்கு அடுத்ததாக ஆசிரியர்களே முதன்மையானவர்கள். அன்னையும் தந்தையும் குழந்தையை உலகிற்குத் தருகின்றனர். ஆனால் ,ஆசிரியர் ஒருவர் உலகத்தையே குழந்தைக்குத் தருகின்றார். கருவறையில் இருந்து வெளிவரும் ஒரு குழந்தைக்குத் தாய் உலகை அடையாளம் காட்டுகின்றாள். அந்த உலகைப் புரிந்து பண்பட்டவனாய் வாழும் கலையை ஆசிரியர்கள் கற்றுக்கொடுத்து மனிதனை மனிதனாக மாற்றும் வேலையைச் செய்கின்றனர். சிறந்த ஆசிரியர்களினால்தான் உலகம் இன்றளவும் பல்துறை அறிஞர்களைப் பெற்றுக்கொண்டிருக்கின்றது.

🎓 ஆசிரியர் என்பவர் கற்பித்தால் மட்டும் போதாது அதை முழுவதும் நம்புபவராகவும் அதன்படி நடப்பவராகவும் இருக்கவேண்டும். தங்கள் பணியில் தியாக உணர்வுடனும் பொறுப்புணர்வுடனும் பணியாற்ற வேண்டும். அண்மைக் காலங்களில் நடக்கும் ஒரு சில ஆசிரியர்களின் தவறான செயல்கள் மாணவ சமுதாயத்திலும் பெற்றோர் மத்தியிலும் அச்ச உணர்வை ஏற்படுத்தி ஆசிரியர் மீதுள்ள நன்மதிப்பைக் குறைக்கின்றன. மாணவர் மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் காயப்படுத்தும் இடமாக வகுப்பறைகள் மாறக்கூடாது. ஆசிரியர் மாணவர் உறவு, வலுச்சேர்க்கும் எதிர்கால சமூகத்தை வடிவமைக்கும் உறவாக அமையவேண்டும்.

🎓எனவே, ஆசிரியர்களின் தாக்கம் என்றுமே அழியாது. அவர்கள் விதைத்த விதைகள் பல தலைமுறைகளுக்குப் பிறகும் முளைக்கும். நாம் வாழ்க்கையின் தொடக்கம் முதல் இறுதிவரை எப்போதும் ஒருவரிடமிருந்து ஏதனும் ஒன்றைக் கற்றுக்கொண்டுதான் இருக்கின்றோம். அப்படி ஆசிரியராகத் திகழும் அனைவருக்கும் ஆசிரியர் நாள் வாழ்த்துகள்.🙏

வீரவணக்கம்.....!அகிம்சையின் குறியீடு தியாக தீபம் திலீபன்.   ஈழவிடுதலைப் போராட்டமானது தியாகங்களின் சிகரங்களைத் தொட்ட சந்த...
09/18/2025

வீரவணக்கம்.....!
அகிம்சையின் குறியீடு தியாக தீபம் திலீபன்.

ஈழவிடுதலைப் போராட்டமானது தியாகங்களின் சிகரங்களைத் தொட்ட சந்தர்ப்பங்களில் தியாகச் செம்மல் லெப் கேணல் திலீபனின் தியாகப் பயணம் வித்தியாசமானது.

மக்கள் புரட்சி வெடிக்கட்டும்' 'சுதந்திர தமிழீழம் மலரட்டும்' என்ற விடுதலை வாசகத்தைக் உரக்கக்கூவி தன் இளமை வாழ்வை தமிழரின் விடுதலை வேள்வியில் ஆகுதியாக்கிய தியாக தீபம் திலீபன், பன்னிருநாட்கள் விடுதலைப் பசியோடு இருந்த பயணம் மாபெரும் உயரிய தருணம்.

மகாத்மாகாந்தியின் அகிம்சை தத்துவத்தை தனது அடிப்படை அரசியல் கொள்கையாக பறைசாற்றும் இந்திய அரசிடம் தமிழர்களுக்கு எதிரான அடக்குமுறைக்கு நீதிகேட்டு ஆயுதப்போராளியான திலீபன், அகிம்சை வழியில் புரட்டாதி 15 .1987 அன்று ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நல்லூரின் வீதியில் நீர்கூட அருந்தாமல் உண்ணா விரதப்போரை ஆரம்பித்தார்.

நாட்கள் நகர்ந்தன; திலீபனின் உறுதியான போராட்டம் தொடர்ந்தது; இந்திய அரசு மௌனம் காத்தது. இருந்தும், கொண்ட கொள்கையில் உறுதியுடன் இருந்து திலீபன் தன் உடலைத் திரியாக்கி, உயிரை நெய்யாக்கி இலட்சிய வேள்வியில் உருகி உருகி .பன்னிரண்டாம் நாளில் சாவைத்தழுவிக்கொண்டார்.
உலகிலே நடைபெறாத உண்ணா நோன்பிருந்து உயிர்துறந்த உலக அதிசயம் ஈழ மண்ணில் நடந்தது.

ஐந்து அம்சக் கோரிக்கைகள் இன்றும் ஈழ நிலத்தில் நிறைவேறப்படாத கோரிக்கைகளாக இருக்கின்றன. 'மக்கள் புரட்சி" என்பது ஒரு இலட்சியக்கொள்கையோடு ஒட்டுமொத்த மக்களும் இணைந்து தம்மாலான பங்களிப்பைச் செய்வதே இன்றைய காலத்தின் தேவையாக உள்ளது.

முப்பத்தெட்டு (38) ஆண்டுகள் கடந்துவிட்டன. இன்னமும் பசியோடு பார்த்துக்கொண்டிருக்கிறார் பார்த்தீபன். அறவழிப் பேரொளியான தமிழின வரலாற்றிலே பதிந்த போராளி உன்னத வீரனுக்கு எமது வீரவணக்கம்.

மாபெரும் கிறிக்கெற் சுற்றுப்போட்டி:- 2025தியாகி திலீபனின் 38 வது ஞாபகார்த்தமாக மொன்றியலில் நடைபெற்ற மாபெரும் கிறிக்கெற் ...
08/10/2025

மாபெரும் கிறிக்கெற் சுற்றுப்போட்டி:- 2025
தியாகி திலீபனின் 38 வது ஞாபகார்த்தமாக மொன்றியலில் நடைபெற்ற மாபெரும் கிறிக்கெற் சுற்றுப்போட்டி. இதில் மொன்றியல், ரொறொன்ரொ விளையாட்டு கழகங்கள் பங்கேற்று சிறப்பித்தன.
இந்த சுற்றுப்போட்டியில் இரு ரொறொன்ரொ
விளையாட்டு கழகங்கள் வெற்றி பெற்றன.
முதலாம் இடம்: ஜி பி ஸ் விளையாட்டு கழகம் ( ரொறொன்ரொ )
இரண்டாம் இடம்: சோலா விளையாட்டு கழகம் ( ரொறொன்ரொ )

https://youtu.be/t4H4YvGpGcc?si=Y889ymAWjbs4JaV-கியூபெக் தமிழ்ச் சங்கத்தின் அமர்க்களம் 2025.சிறப்பு பார்வை அத்துடன் இங்க...
08/10/2025

https://youtu.be/t4H4YvGpGcc?si=Y889ymAWjbs4JaV-
கியூபெக் தமிழ்ச் சங்கத்தின் அமர்க்களம் 2025.
சிறப்பு பார்வை அத்துடன் இங்கு இடம்பெற்ற நேர்காணல்.

ியூபெக் தமிழ்ச் சங்கத்தின் அமர்க்களம் 2025.சிறப்பு பார்வை அத்துடன் இங்கு இடம்பெற்ற நேர்காணல்....

செம்மணிப்  புதைகுழி.......! ( தமிழ் கட்டுரை )நாங்கள் தமிழர் என்பதால் கொல்லப்பட்டோம், இனியும் கொல்லப்படப்போகின்றோம்.....!...
08/05/2025

செம்மணிப் புதைகுழி.......! ( தமிழ் கட்டுரை )

நாங்கள் தமிழர் என்பதால் கொல்லப்பட்டோம்,
இனியும் கொல்லப்படப்போகின்றோம்.....! இது இலங்கை அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரல்களில் ஒன்று. ஏனெனில்.....? அந்த நாடு சிங்கள பவுத்த நாடாக மாற்றப்படுவதற்கே.

இனப்படுகொலையின் ஒரு சான்று
செம்மணி மனிதப் புதைகுழி.

செம்மணிப் புதைகுழி, ஈழத்தமிழர் பலரது செங்குருதி கலந்த மர்மக்குழி. காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் மறைக்கப்பட்ட கதைகள் புதைந்துகிடக்கின்ற தமிழர் பூமி. இறுதியுத்த இனவழிப்பின் சான்றுபோன்றே இதுவும் யாழ்குடாநாட்டில் இலங்கை அரசுநடத்திய பெரும் இனப்படுகொலையின் ஒருபகுதி.

இன்று , செம்மணி சிந்துபாத்தி மயான புதைகுழியே எங்கும் பேசுபொருளாக இருக்கின்றது. இப் புதைகுழியில் தோண்டத்தோண்ட குழந்தைகள் தொடக்கம் பெண்கள், ஆண்கள் என்ற வேறுபாடின்றி வரும் நூற்றுக்கு மேற்பட்ட மனித எச்சங்களால் உலகமே அதிர்ச்சியடைந்துள்ளது. இதனால் ஈழத்தமிழர் இதயங்கள் நொறுங்குகின்றன. தம் பிள்ளைகளை, கணவன்மார்களைக் காணாமல் இன்றும் தேடியலையும் உறவுகளுக்கு இன்னும் கண்ணீரை வரவைக்கின்றன. இறுதியுத்தம் முடிந்து அதன் தாக்கத்திலிருந்து இன்னும் மீளமுடியாமல் இருக்கும் மக்கள் மத்தியில் இப்புதைகுழி சம்பவம் இன்னும் பேரதிர்ச்சியையே கொடுக்கின்றது.

1996 ஆம் ஆண்டு கிருஷாந்தி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு அவரோடுசேர்த்து மேலும் மூவர் படுகொலை செய்யப்பட்டதை சட்டம் அறிந்தும் அதற்கான தீர்வுகள் முழுமையாக மூடிமறைக்கப்பட்ட நிலையில் தொடர்ந்தும் பல உறவுகள் ஏன் கொன்றார்கள் ? யார்கொன்றார்கள்? என்ன காரணத்துக்காக கொன்றார்கள்? எப்போது கொன்றார்கள்? ஏன் கைதுசெய்தார்கள்? என்ற விசாரணைகளுமின்றியே உயிரோடு புதைந்துபோயுள்ளன. எமக்கொரு நீதி கிடைக்காதா? எங்களை இன்று கண்டுபிடிப்பார்களா? என்ற ஏக்கத்தோடே எலும்புக்கூடுகளாக பலர் புதையுண்டு கிடக்கின்றனர். செம்மணியில் மட்டுமன்றி எம்மண்ணில் தோண்டாப்படாமல் எச்சங்கள் நிறைந்த புதைகுழிகள் இன்னும் பரவிக்கிடக்கின்றன. கிருஷாந்தி உள்ளிட்ட நால்வரின் சான்றுகள் கிடைக்காதிருந்திருந்தால் செம்மணியும் மறைமுக புதைகுழியாகவே இன்று இருந்திருக்கும்.

முள்ளிவாய்க்கால் மண்ணில் கண்முண்ணே நடந்த படுகொலைக்கு இதுவரை எந்தத் தீர்வும்கிடைக்காமல் உலகநாடுகளுடன் முட்டிமோதும் எமக்கு , இதற்கு ஒரு நீதியை பன்னாட்டு அரசுகள் பெற்றுதருமா? என்பது பெருந்துயரம். இருப்பினும் இதுதொடர்பான பன்னாட்டு சுதந்திர விசாரணையை நடத்தி அறிவியல்ரீதியான அகழ்வினை மேற்கொண்டு உரிய நடவடிக்கையை விரைந்து எடுத்து தக்க தீர்வினைப் பெற்றுத்தரவேண்டும் என்பதே தமிழ்மக்களின் ஒருமித்த குரலாக உள்ளது.

https://en.wikipedia.org/wiki/Chemmani_mass_graves

https://youtu.be/dU18S9WfEQs?si=o-qtyGzUh5c5Ccx4
08/02/2025

https://youtu.be/dU18S9WfEQs?si=o-qtyGzUh5c5Ccx4

தேவ வார்த்தை: கர்த்தரை கனப்படுத்த வேண்டும் என்றால், வழியை செம்மையாக்க வேண்டும்.போதகர்: இமானுவேல் (அன்பின் குரல.....

Address

Montreal, QC

Opening Hours

Monday 8:30am - 5pm
Tuesday 8:30am - 5pm
Wednesday 8:30am - 5pm
Thursday 8:30am - 5pm
Friday 8:30am - 5pm
Saturday 8:30am - 5pm
Sunday 8:30am - 5:30am

Website

Alerts

Be the first to know and let us send you an email when Daily Tamil Entry posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share