Daily Tamil Entry

Daily Tamil Entry Photojournalism is the practice of storytelling through photographs

சர்வதேச ஆசிரியர் நாள். ( தமிழ் கட்டுரை )🎓ஒரு தேசத்தின் எதிர்கால முதலீடு ஆசிரியர்களே. ஆசிரியர்கள் மனித சமூகத்தின் வடிவமைப...
10/07/2025

சர்வதேச ஆசிரியர் நாள். ( தமிழ் கட்டுரை )

🎓ஒரு தேசத்தின் எதிர்கால முதலீடு ஆசிரியர்களே. ஆசிரியர்கள் மனித சமூகத்தின் வடிவமைப்பாளர்கள். சமூகத்தில் அனைவரும் சமம் என்பதைக் கல்விமூலம் உணர்த்தி, பகுத்தறிவு, நல்லொழுக்கம், கலை, கலாச்சாரம், மாண்பு, பண்பு, திறன் அனைத்தையும் கற்பித்துச் சான்றோராக உருவாக்குகிறார்கள். இவர்களின் தன்னலமற்ற ஈடுபாடுதான் ஒரு சமூகத்தைச் சிறந்தமுறையில் வடிவமைக்க உதவுகின்றது.

🎓ஒவ்வொரு ஆசிரியரும் ஒவ்வொரு நூலகம். நாட்டின் எதிர்கால வளர்ச்சி அந்நாட்டின் வகுப்பறையில்தான் உருவாக்கப்படுகின்றது. ஒரு தேசத்தின் வளமான எதிர்காலத்தைத் தாங்க இருக்கும் தூண்களுக்கு வைரம் பாய்ச்சுகின்றனர். ஆசிரியரிடம் பழகும் மாணவனுக்கு அறிவின் அற்புத வளர்ச்சியும் பெருமையும் தனித்துவமும் கிடைக்கின்றன.
ஆசிரியர்கள் மாணவ சமூகத்தை உருவாக்குபவர்கள் அல்லர். மாறாக உயிரூட்டுபவர்கள். "எங்கே நடப்படுகிறாயோ அங்கே மலராகு" என்ற பொன்மொழிக்கு எடுத்துக்காட்டாக விளங்குபவர்கள்.

🎓மாதா,பிதா,குரு,தெய்வம் என்பதில் தாய் தந்தைக்கு அடுத்ததாக ஆசிரியர்களே முதன்மையானவர்கள். அன்னையும் தந்தையும் குழந்தையை உலகிற்குத் தருகின்றனர். ஆனால் ,ஆசிரியர் ஒருவர் உலகத்தையே குழந்தைக்குத் தருகின்றார். கருவறையில் இருந்து வெளிவரும் ஒரு குழந்தைக்குத் தாய் உலகை அடையாளம் காட்டுகின்றாள். அந்த உலகைப் புரிந்து பண்பட்டவனாய் வாழும் கலையை ஆசிரியர்கள் கற்றுக்கொடுத்து மனிதனை மனிதனாக மாற்றும் வேலையைச் செய்கின்றனர். சிறந்த ஆசிரியர்களினால்தான் உலகம் இன்றளவும் பல்துறை அறிஞர்களைப் பெற்றுக்கொண்டிருக்கின்றது.

🎓 ஆசிரியர் என்பவர் கற்பித்தால் மட்டும் போதாது அதை முழுவதும் நம்புபவராகவும் அதன்படி நடப்பவராகவும் இருக்கவேண்டும். தங்கள் பணியில் தியாக உணர்வுடனும் பொறுப்புணர்வுடனும் பணியாற்ற வேண்டும். அண்மைக் காலங்களில் நடக்கும் ஒரு சில ஆசிரியர்களின் தவறான செயல்கள் மாணவ சமுதாயத்திலும் பெற்றோர் மத்தியிலும் அச்ச உணர்வை ஏற்படுத்தி ஆசிரியர் மீதுள்ள நன்மதிப்பைக் குறைக்கின்றன. மாணவர் மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் காயப்படுத்தும் இடமாக வகுப்பறைகள் மாறக்கூடாது. ஆசிரியர் மாணவர் உறவு, வலுச்சேர்க்கும் எதிர்கால சமூகத்தை வடிவமைக்கும் உறவாக அமையவேண்டும்.

🎓எனவே, ஆசிரியர்களின் தாக்கம் என்றுமே அழியாது. அவர்கள் விதைத்த விதைகள் பல தலைமுறைகளுக்குப் பிறகும் முளைக்கும். நாம் வாழ்க்கையின் தொடக்கம் முதல் இறுதிவரை எப்போதும் ஒருவரிடமிருந்து ஏதனும் ஒன்றைக் கற்றுக்கொண்டுதான் இருக்கின்றோம். அப்படி ஆசிரியராகத் திகழும் அனைவருக்கும் ஆசிரியர் நாள் வாழ்த்துகள்.🙏

வீரவணக்கம்.....!அகிம்சையின் குறியீடு தியாக தீபம் திலீபன்.   ஈழவிடுதலைப் போராட்டமானது தியாகங்களின் சிகரங்களைத் தொட்ட சந்த...
09/18/2025

வீரவணக்கம்.....!
அகிம்சையின் குறியீடு தியாக தீபம் திலீபன்.

ஈழவிடுதலைப் போராட்டமானது தியாகங்களின் சிகரங்களைத் தொட்ட சந்தர்ப்பங்களில் தியாகச் செம்மல் லெப் கேணல் திலீபனின் தியாகப் பயணம் வித்தியாசமானது.

மக்கள் புரட்சி வெடிக்கட்டும்' 'சுதந்திர தமிழீழம் மலரட்டும்' என்ற விடுதலை வாசகத்தைக் உரக்கக்கூவி தன் இளமை வாழ்வை தமிழரின் விடுதலை வேள்வியில் ஆகுதியாக்கிய தியாக தீபம் திலீபன், பன்னிருநாட்கள் விடுதலைப் பசியோடு இருந்த பயணம் மாபெரும் உயரிய தருணம்.

மகாத்மாகாந்தியின் அகிம்சை தத்துவத்தை தனது அடிப்படை அரசியல் கொள்கையாக பறைசாற்றும் இந்திய அரசிடம் தமிழர்களுக்கு எதிரான அடக்குமுறைக்கு நீதிகேட்டு ஆயுதப்போராளியான திலீபன், அகிம்சை வழியில் புரட்டாதி 15 .1987 அன்று ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நல்லூரின் வீதியில் நீர்கூட அருந்தாமல் உண்ணா விரதப்போரை ஆரம்பித்தார்.

நாட்கள் நகர்ந்தன; திலீபனின் உறுதியான போராட்டம் தொடர்ந்தது; இந்திய அரசு மௌனம் காத்தது. இருந்தும், கொண்ட கொள்கையில் உறுதியுடன் இருந்து திலீபன் தன் உடலைத் திரியாக்கி, உயிரை நெய்யாக்கி இலட்சிய வேள்வியில் உருகி உருகி .பன்னிரண்டாம் நாளில் சாவைத்தழுவிக்கொண்டார்.
உலகிலே நடைபெறாத உண்ணா நோன்பிருந்து உயிர்துறந்த உலக அதிசயம் ஈழ மண்ணில் நடந்தது.

ஐந்து அம்சக் கோரிக்கைகள் இன்றும் ஈழ நிலத்தில் நிறைவேறப்படாத கோரிக்கைகளாக இருக்கின்றன. 'மக்கள் புரட்சி" என்பது ஒரு இலட்சியக்கொள்கையோடு ஒட்டுமொத்த மக்களும் இணைந்து தம்மாலான பங்களிப்பைச் செய்வதே இன்றைய காலத்தின் தேவையாக உள்ளது.

முப்பத்தெட்டு (38) ஆண்டுகள் கடந்துவிட்டன. இன்னமும் பசியோடு பார்த்துக்கொண்டிருக்கிறார் பார்த்தீபன். அறவழிப் பேரொளியான தமிழின வரலாற்றிலே பதிந்த போராளி உன்னத வீரனுக்கு எமது வீரவணக்கம்.

மாபெரும் கிறிக்கெற் சுற்றுப்போட்டி:- 2025தியாகி திலீபனின் 38 வது ஞாபகார்த்தமாக மொன்றியலில் நடைபெற்ற மாபெரும் கிறிக்கெற் ...
08/10/2025

மாபெரும் கிறிக்கெற் சுற்றுப்போட்டி:- 2025
தியாகி திலீபனின் 38 வது ஞாபகார்த்தமாக மொன்றியலில் நடைபெற்ற மாபெரும் கிறிக்கெற் சுற்றுப்போட்டி. இதில் மொன்றியல், ரொறொன்ரொ விளையாட்டு கழகங்கள் பங்கேற்று சிறப்பித்தன.
இந்த சுற்றுப்போட்டியில் இரு ரொறொன்ரொ
விளையாட்டு கழகங்கள் வெற்றி பெற்றன.
முதலாம் இடம்: ஜி பி ஸ் விளையாட்டு கழகம் ( ரொறொன்ரொ )
இரண்டாம் இடம்: சோலா விளையாட்டு கழகம் ( ரொறொன்ரொ )

https://youtu.be/t4H4YvGpGcc?si=Y889ymAWjbs4JaV-கியூபெக் தமிழ்ச் சங்கத்தின் அமர்க்களம் 2025.சிறப்பு பார்வை அத்துடன் இங்க...
08/10/2025

https://youtu.be/t4H4YvGpGcc?si=Y889ymAWjbs4JaV-
கியூபெக் தமிழ்ச் சங்கத்தின் அமர்க்களம் 2025.
சிறப்பு பார்வை அத்துடன் இங்கு இடம்பெற்ற நேர்காணல்.

ியூபெக் தமிழ்ச் சங்கத்தின் அமர்க்களம் 2025.சிறப்பு பார்வை அத்துடன் இங்கு இடம்பெற்ற நேர்காணல்....

செம்மணிப்  புதைகுழி.......! ( தமிழ் கட்டுரை )நாங்கள் தமிழர் என்பதால் கொல்லப்பட்டோம், இனியும் கொல்லப்படப்போகின்றோம்.....!...
08/05/2025

செம்மணிப் புதைகுழி.......! ( தமிழ் கட்டுரை )

நாங்கள் தமிழர் என்பதால் கொல்லப்பட்டோம்,
இனியும் கொல்லப்படப்போகின்றோம்.....! இது இலங்கை அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரல்களில் ஒன்று. ஏனெனில்.....? அந்த நாடு சிங்கள பவுத்த நாடாக மாற்றப்படுவதற்கே.

இனப்படுகொலையின் ஒரு சான்று
செம்மணி மனிதப் புதைகுழி.

செம்மணிப் புதைகுழி, ஈழத்தமிழர் பலரது செங்குருதி கலந்த மர்மக்குழி. காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் மறைக்கப்பட்ட கதைகள் புதைந்துகிடக்கின்ற தமிழர் பூமி. இறுதியுத்த இனவழிப்பின் சான்றுபோன்றே இதுவும் யாழ்குடாநாட்டில் இலங்கை அரசுநடத்திய பெரும் இனப்படுகொலையின் ஒருபகுதி.

இன்று , செம்மணி சிந்துபாத்தி மயான புதைகுழியே எங்கும் பேசுபொருளாக இருக்கின்றது. இப் புதைகுழியில் தோண்டத்தோண்ட குழந்தைகள் தொடக்கம் பெண்கள், ஆண்கள் என்ற வேறுபாடின்றி வரும் நூற்றுக்கு மேற்பட்ட மனித எச்சங்களால் உலகமே அதிர்ச்சியடைந்துள்ளது. இதனால் ஈழத்தமிழர் இதயங்கள் நொறுங்குகின்றன. தம் பிள்ளைகளை, கணவன்மார்களைக் காணாமல் இன்றும் தேடியலையும் உறவுகளுக்கு இன்னும் கண்ணீரை வரவைக்கின்றன. இறுதியுத்தம் முடிந்து அதன் தாக்கத்திலிருந்து இன்னும் மீளமுடியாமல் இருக்கும் மக்கள் மத்தியில் இப்புதைகுழி சம்பவம் இன்னும் பேரதிர்ச்சியையே கொடுக்கின்றது.

1996 ஆம் ஆண்டு கிருஷாந்தி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு அவரோடுசேர்த்து மேலும் மூவர் படுகொலை செய்யப்பட்டதை சட்டம் அறிந்தும் அதற்கான தீர்வுகள் முழுமையாக மூடிமறைக்கப்பட்ட நிலையில் தொடர்ந்தும் பல உறவுகள் ஏன் கொன்றார்கள் ? யார்கொன்றார்கள்? என்ன காரணத்துக்காக கொன்றார்கள்? எப்போது கொன்றார்கள்? ஏன் கைதுசெய்தார்கள்? என்ற விசாரணைகளுமின்றியே உயிரோடு புதைந்துபோயுள்ளன. எமக்கொரு நீதி கிடைக்காதா? எங்களை இன்று கண்டுபிடிப்பார்களா? என்ற ஏக்கத்தோடே எலும்புக்கூடுகளாக பலர் புதையுண்டு கிடக்கின்றனர். செம்மணியில் மட்டுமன்றி எம்மண்ணில் தோண்டாப்படாமல் எச்சங்கள் நிறைந்த புதைகுழிகள் இன்னும் பரவிக்கிடக்கின்றன. கிருஷாந்தி உள்ளிட்ட நால்வரின் சான்றுகள் கிடைக்காதிருந்திருந்தால் செம்மணியும் மறைமுக புதைகுழியாகவே இன்று இருந்திருக்கும்.

முள்ளிவாய்க்கால் மண்ணில் கண்முண்ணே நடந்த படுகொலைக்கு இதுவரை எந்தத் தீர்வும்கிடைக்காமல் உலகநாடுகளுடன் முட்டிமோதும் எமக்கு , இதற்கு ஒரு நீதியை பன்னாட்டு அரசுகள் பெற்றுதருமா? என்பது பெருந்துயரம். இருப்பினும் இதுதொடர்பான பன்னாட்டு சுதந்திர விசாரணையை நடத்தி அறிவியல்ரீதியான அகழ்வினை மேற்கொண்டு உரிய நடவடிக்கையை விரைந்து எடுத்து தக்க தீர்வினைப் பெற்றுத்தரவேண்டும் என்பதே தமிழ்மக்களின் ஒருமித்த குரலாக உள்ளது.

https://en.wikipedia.org/wiki/Chemmani_mass_graves

https://youtu.be/dU18S9WfEQs?si=o-qtyGzUh5c5Ccx4
08/02/2025

https://youtu.be/dU18S9WfEQs?si=o-qtyGzUh5c5Ccx4

தேவ வார்த்தை: கர்த்தரை கனப்படுத்த வேண்டும் என்றால், வழியை செம்மையாக்க வேண்டும்.போதகர்: இமானுவேல் (அன்பின் குரல.....

வார்த்தைகள் பெறுமதியானவை.  ( தமிழ் கட்டுரை )👉 'அரிது அரிது  மானிடராய்ப் பிறத்தல் அரிது . இயற்கையின் படைப்பில் மனிதப் படை...
07/27/2025

வார்த்தைகள் பெறுமதியானவை. ( தமிழ் கட்டுரை )

👉 'அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது .
இயற்கையின் படைப்பில் மனிதப் படைப்பே உயர்ந்த படைப்பாகும்.
ஏனைய உயிரினங்களைவிடத் தனிச்சிறப்பும்,
ஆற்றலுமுடைய மனிதப் படைப்பில் மட்டுமே
பேச்சாற்றல் சக்தி இயற்கையாகப் படைக்கப்பட்டுள்ளது.
எண்ணங்களை வெளிப்படுத்தவும்,
உறவுகளைப் பேணவும் வார்த்தைகள் முதன்மைபெறுகின்றன.

👉 எமது வாழ்க்கையில் ஒவ்வொரு செயலுக்கும்
வார்த்தைகள் இன்றியமையாதவை.
வார்த்தைகள் அழகானவையும் ஆபத்தானவையும்கூட.
வார்த்தைகளுக்கு தனிச்சக்தி உண்டு.
சில வார்த்தைகள் ஆறுதலைக்கொடுக்கும்.
சில வார்த்தைகள் மாறுதலைக் கொடுக்கும்.
வார்த்தைகள் சில செதுக்கும் அதேநேரம் மனங்களை ஒதுக்கும்.
சில வார்த்தைகள் வெல்லும்.
சில வார்த்தைகள் உயிரைக் கொல்லும்.
இத்தகைய வகிபங்குகள் வார்த்தைக்கு இருப்பதால்
பேசும் வார்த்தைகளில் கவனம் தேவை.
பேசுவதற்கு முன் இருமுறை யோசிக்கவேண்டும்.(Think twice before you speak.)

👉 'வார்த்தைகள்'
மனிதர்களது குணத்தை வெளிப்படுத்தும் கண்ணாடிகள்.
உதிர்க்கின்ற வார்த்தைகளை வைத்து ஒருவரின் பண்பை அறியலாம்.
அன்பு கலந்த, இனிமையான, வஞ்சனையற்ற,
வாய்மையுடைய வார்த்தைகளே உறவுகளை நிலைக்கச் செய்கின்றன.
'தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே நாவினாற் சுட்டவடு '
போன்றே கோபத்தினால் உச்சரிக்கப்படும் வார்த்தைகள்
ஆறாத காயங்களையும் ஏற்படுத்தும்.
முகம் மலர்ந்து இனிமையாகப் பேசும் சொற்கள்
அகம் குளிர்ந்து ஒரு பொருளைக் கொடுப்பதிலும் மேலானது.
இனிய சொற்களை விட்டுக் கடுமையான சொற்களைக் கூறுதல்
"கனியிருப்பக் காய்கவர்ந்தற்று" என்கிறது திருக்குறள்.

👉 எனவே,
அனைவரும் வார்த்தைகளில்
கவனம் இருந்தால் வாழ்க்கையில் வெல்லலாம்.
இனியசொற்களைப் பேசினால்
இன்புற்று அன்பூற்றுடன் வாழலாம்.

https://youtube.com/shorts/TGjyvC6RJac?si=18K3aSqB84LPq-I8கவன ஈர்ப்பு போராட்டம் 6, 07, 2025செம்மணியில் புதைக்கப்படடோர், ...
07/07/2025

https://youtube.com/shorts/TGjyvC6RJac?si=18K3aSqB84LPq-I8
கவன ஈர்ப்பு போராட்டம் 6, 07, 2025
செம்மணியில் புதைக்கப்படடோர், மற்றும் காணாமல் ஆக்கப்படடோர்
மற்றும் தமிழ் மக்களுக்கு எதிராகத்.
சிறிலங்க அரசாங்கத்தால்
தொடர்ச்சியாக இடம்பெற்று வரும்
தமிழ் இன அழிப்பிற்கு.
சர்வதேச நீதி வேண்டியும்.,
மற்றும் தாயகத்தில் எம் மக்களால் முன்னெடுக்கப்படும்.
தொடர்ச்சியான கவன ஈர்ப்பு போராட்டத்துக்கு.,
வலுச்சேர்க்கும் முகமாகவும்.,
மாபெரும் கண்டன பேரணியும் மற்றும் கவன ஈர்ப்பு போராட்டம்.
இன்று (கனடா ரொறொன்ரொவில்) நடைபெற்றது.

Protest at Toronto, Canada for demand international
justice for the Tamil victims buried in
the Chemmani mass graves by the Sri Lankan state.

Address

Montreal, QC

Opening Hours

Monday 8:30am - 5pm
Tuesday 8:30am - 5pm
Wednesday 8:30am - 5pm
Thursday 8:30am - 5pm
Friday 8:30am - 5pm
Saturday 8:30am - 5pm
Sunday 8:30am - 5:30am

Website

Alerts

Be the first to know and let us send you an email when Daily Tamil Entry posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share