Daily Tamil Entry

Daily Tamil Entry Photojournalism is the practice of storytelling through photographs

செம்மணிப்  புதைகுழி.......! ( தமிழ் கட்டுரை )நாங்கள் தமிழர் என்பதால் கொல்லப்பட்டோம், இனியும் கொல்லப்படப்போகின்றோம்.....!...
08/05/2025

செம்மணிப் புதைகுழி.......! ( தமிழ் கட்டுரை )

நாங்கள் தமிழர் என்பதால் கொல்லப்பட்டோம்,
இனியும் கொல்லப்படப்போகின்றோம்.....! இது இலங்கை அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரல்களில் ஒன்று. ஏனெனில்.....? அந்த நாடு சிங்கள பவுத்த நாடாக மாற்றப்படுவதற்கே.

இனப்படுகொலையின் ஒரு சான்று
செம்மணி மனிதப் புதைகுழி.

செம்மணிப் புதைகுழி, ஈழத்தமிழர் பலரது செங்குருதி கலந்த மர்மக்குழி. காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் மறைக்கப்பட்ட கதைகள் புதைந்துகிடக்கின்ற தமிழர் பூமி. இறுதியுத்த இனவழிப்பின் சான்றுபோன்றே இதுவும் யாழ்குடாநாட்டில் இலங்கை அரசுநடத்திய பெரும் இனப்படுகொலையின் ஒருபகுதி.

இன்று , செம்மணி சிந்துபாத்தி மயான புதைகுழியே எங்கும் பேசுபொருளாக இருக்கின்றது. இப் புதைகுழியில் தோண்டத்தோண்ட குழந்தைகள் தொடக்கம் பெண்கள், ஆண்கள் என்ற வேறுபாடின்றி வரும் நூற்றுக்கு மேற்பட்ட மனித எச்சங்களால் உலகமே அதிர்ச்சியடைந்துள்ளது. இதனால் ஈழத்தமிழர் இதயங்கள் நொறுங்குகின்றன. தம் பிள்ளைகளை, கணவன்மார்களைக் காணாமல் இன்றும் தேடியலையும் உறவுகளுக்கு இன்னும் கண்ணீரை வரவைக்கின்றன. இறுதியுத்தம் முடிந்து அதன் தாக்கத்திலிருந்து இன்னும் மீளமுடியாமல் இருக்கும் மக்கள் மத்தியில் இப்புதைகுழி சம்பவம் இன்னும் பேரதிர்ச்சியையே கொடுக்கின்றது.

1996 ஆம் ஆண்டு கிருஷாந்தி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு அவரோடுசேர்த்து மேலும் மூவர் படுகொலை செய்யப்பட்டதை சட்டம் அறிந்தும் அதற்கான தீர்வுகள் முழுமையாக மூடிமறைக்கப்பட்ட நிலையில் தொடர்ந்தும் பல உறவுகள் ஏன் கொன்றார்கள் ? யார்கொன்றார்கள்? என்ன காரணத்துக்காக கொன்றார்கள்? எப்போது கொன்றார்கள்? ஏன் கைதுசெய்தார்கள்? என்ற விசாரணைகளுமின்றியே உயிரோடு புதைந்துபோயுள்ளன. எமக்கொரு நீதி கிடைக்காதா? எங்களை இன்று கண்டுபிடிப்பார்களா? என்ற ஏக்கத்தோடே எலும்புக்கூடுகளாக பலர் புதையுண்டு கிடக்கின்றனர். செம்மணியில் மட்டுமன்றி எம்மண்ணில் தோண்டாப்படாமல் எச்சங்கள் நிறைந்த புதைகுழிகள் இன்னும் பரவிக்கிடக்கின்றன. கிருஷாந்தி உள்ளிட்ட நால்வரின் சான்றுகள் கிடைக்காதிருந்திருந்தால் செம்மணியும் மறைமுக புதைகுழியாகவே இன்று இருந்திருக்கும்.

முள்ளிவாய்க்கால் மண்ணில் கண்முண்ணே நடந்த படுகொலைக்கு இதுவரை எந்தத் தீர்வும்கிடைக்காமல் உலகநாடுகளுடன் முட்டிமோதும் எமக்கு , இதற்கு ஒரு நீதியை பன்னாட்டு அரசுகள் பெற்றுதருமா? என்பது பெருந்துயரம். இருப்பினும் இதுதொடர்பான பன்னாட்டு சுதந்திர விசாரணையை நடத்தி அறிவியல்ரீதியான அகழ்வினை மேற்கொண்டு உரிய நடவடிக்கையை விரைந்து எடுத்து தக்க தீர்வினைப் பெற்றுத்தரவேண்டும் என்பதே தமிழ்மக்களின் ஒருமித்த குரலாக உள்ளது.

https://en.wikipedia.org/wiki/Chemmani_mass_graves

https://youtu.be/dU18S9WfEQs?si=o-qtyGzUh5c5Ccx4
08/02/2025

https://youtu.be/dU18S9WfEQs?si=o-qtyGzUh5c5Ccx4

தேவ வார்த்தை: கர்த்தரை கனப்படுத்த வேண்டும் என்றால், வழியை செம்மையாக்க வேண்டும்.போதகர்: இமானுவேல் (அன்பின் குரல.....

வார்த்தைகள் பெறுமதியானவை.  ( தமிழ் கட்டுரை )👉 'அரிது அரிது  மானிடராய்ப் பிறத்தல் அரிது . இயற்கையின் படைப்பில் மனிதப் படை...
07/27/2025

வார்த்தைகள் பெறுமதியானவை. ( தமிழ் கட்டுரை )

👉 'அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது .
இயற்கையின் படைப்பில் மனிதப் படைப்பே உயர்ந்த படைப்பாகும்.
ஏனைய உயிரினங்களைவிடத் தனிச்சிறப்பும்,
ஆற்றலுமுடைய மனிதப் படைப்பில் மட்டுமே
பேச்சாற்றல் சக்தி இயற்கையாகப் படைக்கப்பட்டுள்ளது.
எண்ணங்களை வெளிப்படுத்தவும்,
உறவுகளைப் பேணவும் வார்த்தைகள் முதன்மைபெறுகின்றன.

👉 எமது வாழ்க்கையில் ஒவ்வொரு செயலுக்கும்
வார்த்தைகள் இன்றியமையாதவை.
வார்த்தைகள் அழகானவையும் ஆபத்தானவையும்கூட.
வார்த்தைகளுக்கு தனிச்சக்தி உண்டு.
சில வார்த்தைகள் ஆறுதலைக்கொடுக்கும்.
சில வார்த்தைகள் மாறுதலைக் கொடுக்கும்.
வார்த்தைகள் சில செதுக்கும் அதேநேரம் மனங்களை ஒதுக்கும்.
சில வார்த்தைகள் வெல்லும்.
சில வார்த்தைகள் உயிரைக் கொல்லும்.
இத்தகைய வகிபங்குகள் வார்த்தைக்கு இருப்பதால்
பேசும் வார்த்தைகளில் கவனம் தேவை.
பேசுவதற்கு முன் இருமுறை யோசிக்கவேண்டும்.(Think twice before you speak.)

👉 'வார்த்தைகள்'
மனிதர்களது குணத்தை வெளிப்படுத்தும் கண்ணாடிகள்.
உதிர்க்கின்ற வார்த்தைகளை வைத்து ஒருவரின் பண்பை அறியலாம்.
அன்பு கலந்த, இனிமையான, வஞ்சனையற்ற,
வாய்மையுடைய வார்த்தைகளே உறவுகளை நிலைக்கச் செய்கின்றன.
'தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே நாவினாற் சுட்டவடு '
போன்றே கோபத்தினால் உச்சரிக்கப்படும் வார்த்தைகள்
ஆறாத காயங்களையும் ஏற்படுத்தும்.
முகம் மலர்ந்து இனிமையாகப் பேசும் சொற்கள்
அகம் குளிர்ந்து ஒரு பொருளைக் கொடுப்பதிலும் மேலானது.
இனிய சொற்களை விட்டுக் கடுமையான சொற்களைக் கூறுதல்
"கனியிருப்பக் காய்கவர்ந்தற்று" என்கிறது திருக்குறள்.

👉 எனவே,
அனைவரும் வார்த்தைகளில்
கவனம் இருந்தால் வாழ்க்கையில் வெல்லலாம்.
இனியசொற்களைப் பேசினால்
இன்புற்று அன்பூற்றுடன் வாழலாம்.

https://youtube.com/shorts/TGjyvC6RJac?si=18K3aSqB84LPq-I8கவன ஈர்ப்பு போராட்டம் 6, 07, 2025செம்மணியில் புதைக்கப்படடோர், ...
07/07/2025

https://youtube.com/shorts/TGjyvC6RJac?si=18K3aSqB84LPq-I8
கவன ஈர்ப்பு போராட்டம் 6, 07, 2025
செம்மணியில் புதைக்கப்படடோர், மற்றும் காணாமல் ஆக்கப்படடோர்
மற்றும் தமிழ் மக்களுக்கு எதிராகத்.
சிறிலங்க அரசாங்கத்தால்
தொடர்ச்சியாக இடம்பெற்று வரும்
தமிழ் இன அழிப்பிற்கு.
சர்வதேச நீதி வேண்டியும்.,
மற்றும் தாயகத்தில் எம் மக்களால் முன்னெடுக்கப்படும்.
தொடர்ச்சியான கவன ஈர்ப்பு போராட்டத்துக்கு.,
வலுச்சேர்க்கும் முகமாகவும்.,
மாபெரும் கண்டன பேரணியும் மற்றும் கவன ஈர்ப்பு போராட்டம்.
இன்று (கனடா ரொறொன்ரொவில்) நடைபெற்றது.

Protest at Toronto, Canada for demand international
justice for the Tamil victims buried in
the Chemmani mass graves by the Sri Lankan state.

International Day of Yoga  ( தமிழ் கட்டுரை )நலம்தரும் யோகா. (ஓகம்) 'யோகா' என்பது மிகப்பழமையான, நுட்பமான அறிவியலைக்கொண்ட ...
06/22/2025

International Day of Yoga ( தமிழ் கட்டுரை )
நலம்தரும் யோகா. (ஓகம்)

'யோகா' என்பது மிகப்பழமையான,
நுட்பமான அறிவியலைக்கொண்ட ஆன்மீக ஒழுக்கக் கலையாகும்.
இது மனதிற்கும், உடலுக்கும் இடையே இணக்கத்தை ஏற்படுத்துவதோடு,
நலவாழ்வுக்கான வழிமுறைகளைக் கொண்டுள்ளது.
இத்தகைய அரிய கலையை உலகிற்கு எழுத்துவடிவில் அளித்தவர் '
பதஞ்சலி முனிவர்'ஆவர்.

இக்கலையை அறிஞர்கள் பலர் "சாகாக்கலை" என்றும் கூறுவார்கள்.
யோகாப் பயிற்சியால் நீண்டநாள் வாழலாம்.
மன அமைதி அடையலாம். நல்லொழுக்கமும்,
ஆரோக்கியமும் இல்லாத ஒருவருக்கு நல்வாழ்வு அமையாது.
சுவர் இருந்தால்தான் சித்திரம் வரையலாம்' என்பதுபோல,
மனக் கட்டுப்பாட்டுடனும்,
உடல்நலத்தோடும் வாழும்போதே செய்கின்ற செயல்களை வெற்றியுடன் முடிக்கலாம்.
இதற்கு யோகாப் பயிற்சிகள் உறுதுணையாகின்றன.

இன்று 'நாகரீகம்' என்ற பெயரில் உடல் உழைப்புக் குறைந்து,
நோய்களுக்கு ஆளாகின்றோம். பொருளாதார நெருக்கடி,
அவசரம், பதற்றம், கோபம் காரணமாக மன அழுத்தங்களுக்கு உட்பட்டு வாழ்கின்றோம்.
அகச்செயல்களுக்கும், புறச்செயல்களுக்கும் இடையேயிருந்த நல்லுறவை இழந்து,
இரசாயன மருந்துகளையும், நச்சுப்பொருள்கலந்த உணவுகளையும் உண்டு உடலைப் பாழாக்கின்றோம்.
இப்படிப்பட்ட சூழலில், மகிழ்ச்சியான மனநிலையோடு நோய்களற்ற வாழ்வைவாழ யோகா தேவைப்படுகின்றது.
இதன் சிறப்பால் மனித பாரம்பரியத்தின் உன்னதமான இக்கலையை
அங்கீகரித்த ஐக்கியநாடுகள் சபை ஜூன் 21 ஆம் நாளை "சர்வதேச யோகா தினம்" ஆக
(International Day of Yoga.) 2015 இல் பிரகடனப்படுத்தியது.

சிலர் யோகத்தை ஒரு மதமாய்ச் சொல்வார்கள். பார்க்கப்போனால்,
எல்லா மதத்தினருமே கடைப்பிடிக்கக்கூடிய சிறப்பைக் கொண்டுள்ளது.
மதம், சாதி, இனம், மொழி, தேசம், பாலினம்,
வயது மற்றும் உடல்நிலைக்கு அப்பாற்பட்டு அறிவியல் சார்ந்த வாழும்கலை என்பதே பொருத்தமானது.
முறையாகக் கற்றுக்கொள்வதன் மூலமே நிறைந்த பலனும் நலனும் கிடைக்கும்.
நன்கு பயிற்றுவிப்பாளர் பயிற்சியை வழிநடத்தும்போதே பாதுகாப்பானதாகவும்,
முறையான பயிற்றுவிப்பாளர் இல்லையெனில் ஆபத்தை ஏற்படுத்தவும் கூடும்.

எனவே, வரலாற்றுக் காலங்களுக்கு முன்பிருந்து தற்போதைய
நவீனமயமான காலத்திலும் பலராலும் போற்றப்படக்கூடிய கலையாக
உலகம் முழுவதும் தனித்துவம் பெற்றிருப்பதோடு,
விஞ்ஞான முறையில் இதனைக் கையாள்வதன்மூலம் இனிவருங்காலங்களிலும்
நிலைபெற்று மானுட சமூகத்தில் இணக்கத்தை ஏற்படுத்தி,
மனஅமைதிக்கு வழிவகுக்கும் என்பதில் ஐயமில்லை.
நன்றி.
நலமுடன் வாழ்வோம்🙏
💪 பலமுடன் ஆள்வோம்.

*Make up Studio Promo  Tiyaya Beauty Boutik*Certified hair and make up artist *More than 15 years of experience*Master i...
06/18/2025

*Make up Studio Promo
Tiyaya Beauty Boutik
*Certified hair and make up artist
*More than 15 years of experience
*Master in make up at Montreal
*Quebec and available for travel
Tel: (514) 475 9470
Email: [email protected]
DEDICATED WORK WITH CLIENTS SATISFACTION

Address

Montreal, QC

Opening Hours

Monday 8:30am - 5pm
Tuesday 8:30am - 5pm
Wednesday 8:30am - 5pm
Thursday 8:30am - 5pm
Friday 8:30am - 5pm
Saturday 8:30am - 5pm
Sunday 8:30am - 5:30am

Website

Alerts

Be the first to know and let us send you an email when Daily Tamil Entry posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share