Canada Tamil News - கனடா தமிழ் செய்திகள்

Canada Tamil News - கனடா தமிழ் செய்திகள் கனடாவில் வாழும் தமிழர்களுக்கான தளம்

https://thedipaar.com/அமெரிக்கா பயணங்களை தவிர்க்கும் கனடியர்கள் – உள்நாட்டு சுற்றுலாவில் புதிய உயர்வு!டொராண்டோ:கனடியர்கள...
07/09/2025

https://thedipaar.com/

அமெரிக்கா பயணங்களை தவிர்க்கும் கனடியர்கள் – உள்நாட்டு சுற்றுலாவில் புதிய உயர்வு!

டொராண்டோ:

கனடியர்கள் அமெரிக்காவிற்கான பயணங்களை தொடர்ந்தும் தவிர்த்து வருவதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. வெளிநாட்டு சுற்றுலாவிற்குப் பதிலாக, உள்ளூர் சுற்றுலாவில் நாட்டுமக்களின் ஈடுபாடு அதிகரித்து வருகிறது.

பரபரப்பான கோடை விடுமுறை பருவம் ஆரம்பித்துள்ள நிலையில், பயணத் துறையில் செயல்படும் நிறுவனங்கள், உள்ளூர் இடங்களுக்கு முன்பதிவுகள் கூடியுள்ளதாகவும், மக்கள் கனடாவில் உள்ள தனித்துவமான சுற்றுலா தலங்களை ஆராய்வதில் ஆர்வம் காட்டுவதாகவும் தெரிவித்துள்ளன.

இந்த ஆண்டில், கனடியர்கள் பெரிதும் உள்நாட்டு பயணங்களைத் தேர்வு செய்து வருகிறார்கள். சமீபத்தில் நடைபெற்ற ஆய்வொன்றின் படி, உள்நாட்டு சுற்றுலாவில் இடம்பெயர்வோர் எண்ணிக்கையில் முக்கியமான அதிகரிப்பு காணப்படுகிறது.

இந்த பயண பழக்கவழக்கங்களில் ஏற்பட்ட மாற்றம், அமெரிக்காவுடனான வர்த்தக பதற்றங்களின் விளைவாக இருக்கலாம் என தெரிவிக்கப்படும் நிலையில், இது குறித்த தெளிவான தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

இந்த மாற்றம் கனடிய உள்ளூர் சுற்றுலா துறைக்கும், பொருளாதார வளர்ச்சிக்கும் முன்னேற்றமாக அமையும் என பயணத் துறையினர் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

https://thedipaar.com/

பனாமாவில் ஹமில்டன் குடும்பம் காணாமல் போன சம்பவம்: மனதை உருக்கும் சோக பின்னணி பனாமா, ஜூன் 15 – கனடாவின் ஹமில்டனைச் சேர்ந்...
06/15/2025

பனாமாவில் ஹமில்டன் குடும்பம் காணாமல் போன சம்பவம்: மனதை உருக்கும் சோக பின்னணி

பனாமா, ஜூன் 15 – கனடாவின் ஹமில்டனைச் சேர்ந்த குடும்பம் பனாமாவில் காணாமல் போன சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காணாமல் போன மூவரில், ஏழு மாத சி*சுவின் ச*டல*ம் பனாமாவின் சான்குயினோலா நதிக்கரையில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

குசேன் இக்பால் என்பவர், தனது ஏழு மாத மகன் மற்றும் இரண்டரை வயதுடைய மகளுடன் மத்திய அமெரிக்க நாடான பனாமாவிற்கு சென்றிருந்ததாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். பயணத்தின் பின்னர் மூவரும் தொடர்பில் இல்லாத நிலையில், அவர்களின் உறவினர்கள் முறைப்பாடு செய்ததைத் தொடர்ந்து, பனாமா அதிகாரிகள் தேடுதல் பணியில் இறங்கினர்.

தீவிர விசாரணைகளின் பின்னர், சான்குயினோலா நதிக்கரையில் சி*சுவின் ச*டல*ம் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் குழந்தையின் தந்தையும் சகோதரியும் இன்னும் காணாமல் உள்ளனர்.

காணாமல் போன குசேன் இக்பால் மனநலம் தொடர்பான பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டிருந்ததாக அவரது குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். குழந்தைகளுடன் அவர் ஏன் பனாமாவிற்கு சென்றார் என்பது தொடர்பான விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

மேலும், குசேன் இக்பாலின் மனைவி தற்போது பனாமாவில் வசித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. காணாமல் போன நபர்களை தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வெப்பக்காற்று பலூன் தரையில் மோதி விபத்து: துருக்கியில் துயரம்!
06/15/2025

வெப்பக்காற்று பலூன் தரையில் மோதி விபத்து: துருக்கியில் துயரம்!

*கனடா மீது படையெடுக்க திட்டமா? அமெரிக்கா அதிகாரி அதிர்ச்சி தகவல்!*=======================================கனடா பிரதமர் ஜஸ...
02/10/2025

*கனடா மீது படையெடுக்க திட்டமா? அமெரிக்கா அதிகாரி அதிர்ச்சி தகவல்!*

=======================================

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ராஜினாமா செய்த நேரம் பார்த்து கனடாவை அமெரிக்காவுடன் இணைக்கும் முயற்சியை மீண்டும் மேற்கொண்டு உள்ளாராம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப். கனடாவில் அரசியல் சிக்கல் நிலவி வரும் நிலையில் டிரம்ப் மீண்டும் இந்த முயற்சியில் இறங்கி உள்ளாராம்.

மேலும் படிக்க எமது தளத்தை பார்வையிடவும்

====================================

கனடா மீது படையெடுக்க திட்டமா? அமெரிக்கா அதிகாரி அதிர்ச்சி தகவல்!

10/13/2024
இலங்கை அரசு  எந்த ஒரு விட்டுக்கொடுப்பையும் செய்ய தயாரில்லை..
10/10/2024

இலங்கை அரசு எந்த ஒரு விட்டுக்கொடுப்பையும்
செய்ய தயாரில்லை..

தமிழர் விழாக்களை சிறப்பிக்கும் ஐஸ்கிரீம் விற்பனையாளர்கள் தமிழர் தெருவிழாவை முற்றாக புறக்கணித்து தேசியத்துக்கு பலம் சேர்த...
08/24/2024

தமிழர் விழாக்களை சிறப்பிக்கும் ஐஸ்கிரீம் விற்பனையாளர்கள் தமிழர் தெருவிழாவை முற்றாக புறக்கணித்து தேசியத்துக்கு பலம் சேர்த்துள்ளார்கள். நன்றி,நன்றி, நன்றி # Rio

தேர்தல் பிரச்சாரத்தில் ஆதரவாளர்கள் மத்தியில் பேசிய போது அமெரிக்க நாட்டின் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீது துப்பாக்...
07/14/2024

தேர்தல் பிரச்சாரத்தில் ஆதரவாளர்கள் மத்தியில் பேசிய போது அமெரிக்க நாட்டின் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில் அவருக்கு காது பகுதியில் காயம் ஏற்பட்டது.

காதில் இருந்து ரத்தம் சொட்டிய நிலையில் தனது கையை உயர்த்தி காட்டினார். தொடர்ந்து பாதுகாவலர்கள் அவரை மேடையில் இருந்து பத்திரமாக அழைத்து சென்றனர். இதில் கூட்டத்தில் பங்கேற்ற ஒருவர் கொல்லப்பட்டார். துப்பாக்கிச் சூடு நடத்தியவர் மீது போலீஸார் நடத்திய பதில் தாக்குதலில் அவர் உயிரிழந்தார்.

இதற்கான காரணம் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த தாக்குதலுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன், முன்னாள் அதிபர் பராக் ஒபாமா ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Topic: Canadian Tamil Collective PanelTime: Jun 7, 2024 08:00 PM Eastern Time (US and Canada)Join Zoom Meetinghttps://us...
06/07/2024

Topic: Canadian Tamil Collective Panel
Time: Jun 7, 2024 08:00 PM Eastern Time (US and Canada)

Join Zoom Meeting
https://us06web.zoom.us/j/83426615349

Meeting ID: 834 2661 5349

ஐஎஸ்ஐஎஸ் சர்வதேச பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த 4 நபர்களை அகமதாபாத் விமான நிலையத்தில் வைத்து, குஜராத் காவல்துறையின் பயங்கரவ...
05/21/2024

ஐஎஸ்ஐஎஸ் சர்வதேச பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த 4 நபர்களை அகமதாபாத் விமான நிலையத்தில் வைத்து, குஜராத் காவல்துறையின் பயங்கரவாத தடுப்பு படையினர் கைது செய்துள்ளனர்.

குஜராத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் 4 பயங்கரவாதிகளை மாநில காவல்துறையின் பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் இன்று கைது செய்தனர். பயங்கரவாதிகள் அனைவரும் இலங்கையில் வசிப்பவர்கள் என்றும் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தொடர்புடையவர்கள் என்றும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

அகமதாபாத்திற்கு வந்த பயங்கரவாதிகளின் நோக்கத்தை கண்டறிய, தற்போது ரகசிய இடத்தில் அவர்களை வைத்து ஏடிஎஸ் விசாரித்து வருகிறது. 4 பேரும் இலங்கையில் இருந்து சென்னை வழியாக அகமதாபாத் சென்றதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலதிக செய்திகளுக்கு தேடிப்பார்.காம்

இலங்கையில் யுத்தம் நிறைவடைந்து 15 வருடங்கள் கழிந்தும் பாதிக்கப்பட்டவர்கள் நீதிக்காக தற்போதும் முள்ளிவாய்க்காலில் காத்திர...
05/18/2024

இலங்கையில் யுத்தம் நிறைவடைந்து 15 வருடங்கள் கழிந்தும் பாதிக்கப்பட்டவர்கள் நீதிக்காக தற்போதும் முள்ளிவாய்க்காலில் காத்திருக்கின்றனர் என சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் நாயகம் செயலாளர் நாயகம் அக்னஸ் கலாமார்ட் தெரிவித்தார்.

2009 மே 18 ஆம் திகதியன்று இலங்கையின் உள்ளகப் போர் நிறைவடைந்து, முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் பெருமளவான பொது மக்களின் உயிர்கள் காவு கொள்ளப்பட்டு 15 வருடங்கள் கடந்துவிட்ட நிலையில், இந்த நினைவுதினத்தை முன்னிட்டு சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் நாயகம் அக்னஸ் கலாமார்ட் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியில் அஞ்சலிசெலுத்திவிட்டு அங்கு கருத்து வெளியிடுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Address

Toronto, ON

Alerts

Be the first to know and let us send you an email when Canada Tamil News - கனடா தமிழ் செய்திகள் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Canada Tamil News - கனடா தமிழ் செய்திகள்:

Share