06/29/2025
செம்மணியில் நடந்து கொண்டிருக்கும் நிகழ்வுகளை நீங்களே ஒருமுறை உற்றுப் பாருங்கள்.
எல்லாவற்றையும் விட்டு விடுங்கள்.
பாடசாலை புத்தகப் பையுடன் கூடிய குழந்தையின் எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மிகக் குறைந்த ஆழத்தில் புதைக்கப்பட்ட பாலகர்களின் என்புகூடுகள் தோண்டி எடுக்கப்பட்டுள்ளன.
இது உங்கள் எண்ணங்களை அல்லது, உங்கள் நித்திரையை இல்லாமல் செய்யவில்லை என்றால்,
இது உங்கள் மனசாட்சியை உருக்கவில்லை என்றால் — வேறு எது உருக்கும்?
இவை இராணுவத்தினுடையதாக இருக்கலாம் என்றீர்கள்,
இல்லை இல்லை, பு*களினுடையதாக இருக்கலாம் என்றீர்கள்.
இப்போது — நீங்கள் என்ன சொல்லப்போகிறீர்கள்?
நியாயம் கேட்டு குரல்கள் எழுந்தபோது, அவற்றையும் அடக்கினீர்கள்.
மனிதாபிமானத்தை அழித்து, பாற்சோறு சமைத்தீர்கள்.
எல்லாமும் உங்களுக்காகவே மாற்றிக் கொண்டீர்கள்.
ஆனால் இப்போது — குழந்தைகளின் எலும்புகள் தோண்டி எடுக்கப்படும்போது,
நீங்கள் முகத்தை எங்கே திருப்பிவைக்கப் போகிறீர்கள்?
அவனோ, அவளோ, தந்தையுடன் அல்லது தாயுடன் வந்திருந்திருந்தார்களோ?
அவளும் பள்ளி சென்று திரும்பும் வழியிலேயே புதைக்கப்பட்டவளா?
யுத்தத்திலிருந்து மீண்டு வந்தவனை, மண்ணோடு மறைத்தீரோ?
யார் அறிவார்?
இது உங்கள் குழந்தையாயிருந்தால்?
உங்கள் சொந்த ஒருவராயிருந்தால்?
இது வெறும் கேள்வி அல்ல.
இது மனிதத் தன்மையின் மீதான சந்தேகம்....
புத்தனின் ஆசைதுறப்பின் ஆழம் என்ன, இந்த மூன்று அடிகள் தானா...??
கனவோடு படிக்கப்போன பிள்ளையொன்று......
யுனிசெவ்f புத்தகப்பையுடன் புதைக்கப்பட்ட இந்த சிறுவன்/சிறுமியின் உடல் சித்துபாத்தியில் கிடைக்கப்பெற்றுள்ளது...
(யாழ்ப்பாணம் செம்மணியில் தோண்டப்பட்டுக்கொணாடிருக்கும் புதைகுழி)
யார் மறந்தாலும் வகுப்பாசிரியர்களுக்கு ஞாபகமிருக்கும் இவ்வாறான புத்தகப்பைகள் வழங்கப்பட்ட ஆண்டுகள் என்ன?
සිහිනයක් එක්ක පාසල් ගිය දරුවෙක්...
යුනිසෙෆ් පොත් බෑගයක් සමඟ වළලනු ලැබූ මෙම පිරිමි ළමයාගේ / ගැහැණු ළමයාගේ මළ සිරුර සිද්ධුපති හි තිබී හමු වී තිබේ...
(යාපනයේ සෙම්මනි හි කැණීම් නොකළ සොහොන)
කාටද අමතක වෙන්නේ, නමුත් මේ වගේ පොත් බෑග් පන්ති කාමර ගුරුවරුන්ට දුන්නේ මොන අවුරුදුවලද?
(Google translation)
நீதியை பெற்றே ஆக வேண்டும்.
#அணையாவிளக்கு.