School life எண்டா சும்மாவா

School life எண்டா சும்மாவா பொழுதுபோக்கு தகவல்கள், காணொளிகள்

எதிரியை
நண்பனாக்கு
நண்பனை
எதிரியாக்காதே
நீ அழுதல்
முதல் துளியை துடைப்பவன் அவனே
நீ இறக்கும் வரை
இறுதிவரை இருப்பவனும் அவனே
இல்லாவற்றையும் வெறு ஆனால்
நண்பனை மட்டும் வெறுக்கதே
இவ்வுலகில் அவனை போல
பொக்கிஷம் வேறு எதுவும் கிடையாது
வாழ்க்கை இருட்டும் போது
ஆதவன் போல் இருட்டை அகற்றுபவன் அவன்
உன் கஷ்ட நஷ்டங்களில்
பங்கேற்பவனும் அவனே
நண்பனை தேர்ந்த்தேடுக்கும்
முன் சிந்தி
தேர்ந்த்தேடுத்த பின்
வருந்தாதே
நண்பன் இல்லை
என்று வருத்தமா?
அன்பை காட்டு
நானும் உன் நண்பன் ஆவேன்!

07/17/2025
07/11/2025
உயிருடன் புதைக்கப்பட்டது போலவே இருக்கிறது. - செம்மணி புதைகுழி…
07/09/2025

உயிருடன் புதைக்கப்பட்டது போலவே இருக்கிறது. - செம்மணி புதைகுழி…

07/07/2025
யாழ்ப்பாணத்தில் கூட்டு பலாத்காரத்தின் பின் கொலை செய்யப்பட்டரஜினி வேலாயுதம்பிள்ளை என்ற 24 வயது இளம் பெண் தொடர்பான வழக்கின...
06/29/2025

யாழ்ப்பாணத்தில் கூட்டு பலாத்காரத்தின் பின் கொலை செய்யப்பட்டரஜினி வேலாயுதம்பிள்ளை என்ற 24 வயது இளம் பெண் தொடர்பான வழக்கின் குற்றவாளிகளான இராணுவத்தினரை விடுதலை செய்ய மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டு இருக்கின்றது

1996 ஆம் ஆண்டு செப்டெம்பர் 30 ஆம் திகதி கோண்டாவில் இராணுவ சாவடியில் இந்த பெண்ணை கடத்திய இராணுவத்தினர் கோரமான பலாத்காரத்தின் பின் வீடொன்றின் மலக்குழிக்குள் கொன்று வீசி இருந்தனர்

வெளிநாடு செல்வதற்கு முதல் நாள் மானிப்பாயிலிருந்த சிறிய தாயாரிடம் பிரியாவிடை பெறுவதற்காக சென்று கொண்டு இருந்த போத ரஜினி கடத்தப்பட்டு இருந்தார்

மேஜர் ஜெனரல் ஜனக பெரேராவின் கட்டுப்பாட்டிலிருந்த போது நடந்த மேற்படிசம்பவம் தொடர்பாக பல்வேறு மட்டங்களில் எழுந்த கடுமையான அழுத்தங்களையடுத்து 6 இராணுவ அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர்

ஆனால் கைது செய்யப்பட்டிருந்த இராணுவத்தினருக்கு பாதுகாப்பில்லை என வழக்கை கொழும்புக்கு மாற்றி இருந்தார்கள்

பல்வேறு இழுபறிகளுக்கு பின்னர் 2001ஆம் ஆண்டு சட்டமா அதிபரால் கொழும்பு மேல் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு ஜூரியின் உடன்பாட்டின் மூலம் மூன்று இராணுவ அதிகாரிகளுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டிருந்தது

நேற்று (29 november 2023 )மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மேல் நீதிமன்றத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த இரண்டு இராணுவ அதிகாரிகளை குற்றமற்றற்றவர்கள் என விடுதலை செய்து இருக்கின்றார்கள்

மற்றைய இராணுவ அதிகாரிக்கு எதிராக மீள் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு இருக்கின்றார்கள். எனவே அவரும் விரைவில் விடுதலை செய்ய பட போகின்றார்

கோட்டாபய ராஜபக்சே அதிகாரத்திலிருந்த போது மிருசுவில் கொலை வழக்க்கில் தண்டிக்கப்பட்ட மரண தண்டனை குற்றவாளிக்கு பொது மன்னிப்பு வழங்கி இருந்தார்

ரணில் விக்ரமசிங்க அதிகாரத்தில் கோண்டாவில் கொலை வழக்கு குற்றவாளிகளை நீதிமன்றத்தின் மூலம் விடுதலை செய்து இருக்கின்றார்கள்

கிரிமினல் குற்றவாளிகள் விடுவிக்கபடும் இந்த நாட்டில் சட்ட ரீதியாக அனுமதிக்கப்பட்ட நினைவேந்தல்கள் மீது வன்முறையை ஏவி விடுகின்றார்கள்.

செம்மணியில் நடந்து கொண்டிருக்கும் நிகழ்வுகளை நீங்களே ஒருமுறை உற்றுப் பாருங்கள்.எல்லாவற்றையும் விட்டு விடுங்கள்.பாடசாலை ப...
06/29/2025

செம்மணியில் நடந்து கொண்டிருக்கும் நிகழ்வுகளை நீங்களே ஒருமுறை உற்றுப் பாருங்கள்.

எல்லாவற்றையும் விட்டு விடுங்கள்.

பாடசாலை புத்தகப் பையுடன் கூடிய குழந்தையின் எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மிகக் குறைந்த ஆழத்தில் புதைக்கப்பட்ட பாலகர்களின் என்புகூடுகள் தோண்டி எடுக்கப்பட்டுள்ளன.
இது உங்கள் எண்ணங்களை அல்லது, உங்கள் நித்திரையை இல்லாமல் செய்யவில்லை என்றால்,
இது உங்கள் மனசாட்சியை உருக்கவில்லை என்றால் — வேறு எது உருக்கும்?
இவை இராணுவத்தினுடையதாக இருக்கலாம் என்றீர்கள்,
இல்லை இல்லை, பு*களினுடையதாக இருக்கலாம் என்றீர்கள்.
இப்போது — நீங்கள் என்ன சொல்லப்போகிறீர்கள்?

நியாயம் கேட்டு குரல்கள் எழுந்தபோது, அவற்றையும் அடக்கினீர்கள்.
மனிதாபிமானத்தை அழித்து, பாற்சோறு சமைத்தீர்கள்.
எல்லாமும் உங்களுக்காகவே மாற்றிக் கொண்டீர்கள்.
ஆனால் இப்போது — குழந்தைகளின் எலும்புகள் தோண்டி எடுக்கப்படும்போது,
நீங்கள் முகத்தை எங்கே திருப்பிவைக்கப் போகிறீர்கள்?
அவனோ, அவளோ, தந்தையுடன் அல்லது தாயுடன் வந்திருந்திருந்தார்களோ?
அவளும் பள்ளி சென்று திரும்பும் வழியிலேயே புதைக்கப்பட்டவளா?
யுத்தத்திலிருந்து மீண்டு வந்தவனை, மண்ணோடு மறைத்தீரோ?
யார் அறிவார்?

இது உங்கள் குழந்தையாயிருந்தால்?
உங்கள் சொந்த ஒருவராயிருந்தால்?

இது வெறும் கேள்வி அல்ல.
இது மனிதத் தன்மையின் மீதான சந்தேகம்....

புத்தனின் ஆசைதுறப்பின் ஆழம் என்ன, இந்த மூன்று அடிகள் தானா...??

கனவோடு படிக்கப்போன பிள்ளையொன்று......

யுனிசெவ்f புத்தகப்பையுடன் புதைக்கப்பட்ட இந்த சிறுவன்/சிறுமியின் உடல் சித்துபாத்தியில் கிடைக்கப்பெற்றுள்ளது...
(யாழ்ப்பாணம் செம்மணியில் தோண்டப்பட்டுக்கொணாடிருக்கும் புதைகுழி)

யார் மறந்தாலும் வகுப்பாசிரியர்களுக்கு ஞாபகமிருக்கும் இவ்வாறான புத்தகப்பைகள் வழங்கப்பட்ட ஆண்டுகள் என்ன?

සිහිනයක් එක්ක පාසල් ගිය දරුවෙක්...

යුනිසෙෆ් පොත් බෑගයක් සමඟ වළලනු ලැබූ මෙම පිරිමි ළමයාගේ / ගැහැණු ළමයාගේ මළ සිරුර සිද්ධුපති හි තිබී හමු වී තිබේ...
(යාපනයේ සෙම්මනි හි කැණීම් නොකළ සොහොන)

කාටද අමතක වෙන්නේ, නමුත් මේ වගේ පොත් බෑග් පන්ති කාමර ගුරුවරුන්ට දුන්නේ මොන අවුරුදුවලද?
(Google translation)

நீதியை பெற்றே ஆக வேண்டும்.

#அணையாவிளக்கு.

Address

West

Telephone

7975319186

Website

Alerts

Be the first to know and let us send you an email when School life எண்டா சும்மாவா posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share