
20/09/2025
தஞ்சை தெற்கு மாவட்டம், பேராவூரணி தொகுதிக்கு உட்பட்ட எஸ்டிபிஐ கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மல்லிப்பட்டினம் எஸ்டிபிஐ கிராம பஞ்சாயத்து கமிட்டி அலுவலகத்தில் பேராவூரணி தொகுதி தலைவர் ஜவாஹிர் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தின் தொடக்கமாக சேதுபாவாசத்திரம் ஒன்றிய செயலாளர்
வஹி மன்சூர் வரவேற்புரையாற்றினார்.
இதில் பேராவூரணி தொகுதி செயலாளர் பைசல்கான் சேதுவாசத்திரம் ஒன்றிய தலைவர் ஆசாத்,சம்பை பட்டினம் கிளை தலைவர் முத்துமரைக்கான், மரைக்காவலசை கிளைத் தலைவர் இமாம், மல்லிப்பட்டினம் கிளை 2 செயலாளர் AJ. அப்துல்லாஹ் ஆகியோர் கலந்து கொண்டனர்
இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட பேராவூரணி தொகுதிக்குட்பட்ட கிளைகளுக்கு அந்தந்த ஊர் நலன் சார்ந்த விஷயங்களை முன்னெடுக்க வேண்டும் என்றும்,இல்லம் தோறும் SDPI என்ற உறுப்பினர் சேர்க்கையை அதிகப் படுத்த வேண்டும் என்றும்,கிளைகள் இல்லாத ஊரில் கிளைகளை அமைக்க வேண்டும் என்றும் பேராவூரணி தொகுதிக்கு உட்பட்ட கிளைகள் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும் என்றும்,உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட வேண்டிய வேட்பாளரின் பட்டியலை தயார் செய்ய வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இறுதியாக மல்லிப்பட்டினம் GP கமிட்டி செயலாளர் ஹாமீம் பைசல் அவர்கள் நன்றி உரையாற்றினார்.