Malli News Informations de contact, plan et itinéraire, formulaire de contact, heures d'ouverture, services, évaluations, photos, vidéos et annonces de Malli News, Société de médias/d’actualités, Democratic Republic of the.

மல்லி நியூஸ் குழுமம் இனிதே வரவேற்கிறது.உள்ளூர் முதல் உலகம் வரையிலான செய்திகளுக்கு

https://chat.whatsapp.com/K9cPgTii8Gm6UwTQjwdHuA

https://www.mallinews.in/

https://www.youtube.com/

https://www.instagram.com/mallinews?igsh=bHUxdnJkNmNncTZp

தஞ்சை மாவட்டம், மல்லிப்பட்டினம் மேய்ந்து கொண்டிருந்த ஆட்டுக்குட்டியை தெருநாய்கள் ஒன்று சேர்ந்து கொடூரமாக கடித்து குதறிய ...
18/10/2025

தஞ்சை மாவட்டம், மல்லிப்பட்டினம் மேய்ந்து கொண்டிருந்த ஆட்டுக்குட்டியை தெருநாய்கள் ஒன்று சேர்ந்து கொடூரமாக கடித்து குதறிய சம்பவம் பொதுமக்களை பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

நாய்கள் தொல்லை அதிகரித்து காணப்படுவதால் சிறுவர்,சிறுமிகளை மிகுந்த எச்சரிக்கையாக இருந்துவிட வேண்டுமென அறிவுறுத்த வேண்டும்.

தீபாவளிக்கு மறுநாளும் விடுமுறை…தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளி-கல்லூரிகள்  மற்றும் பொதுத்துறை ந...
18/10/2025

தீபாவளிக்கு மறுநாளும் விடுமுறை…

தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளி-கல்லூரிகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு 21.10.2025 அன்று விடுமுறை – தமிழ்நாடு அரசு அறிவிப்பு..!

தஞ்சை மாவட்டம்,கள்ளிவயல்தோட்டம் கடற்கரையில் இருந்து புறப்பட்டு மீன்பிடிக்க சென்ற IND–TN–07–MO–2478 என்ற எண் கொண்ட நாட்டு...
16/10/2025

தஞ்சை மாவட்டம்,கள்ளிவயல்தோட்டம் கடற்கரையில் இருந்து புறப்பட்டு மீன்பிடிக்க சென்ற IND–TN–07–MO–2478 என்ற எண் கொண்ட நாட்டுப்படகு, இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ளது.

பாயிஸ் அக்ரம் (த/பெ அப்துல் ரஹீம்) என்பவருக்கு சொந்தமான இப்படகு, நேற்று (15.10.2025) காலை 10.00 மணியளவில் கள்ளிவயல்தோட்டம் கடற்கரையிலிருந்து புறப்பட்டது.

இன்று (16.10.2025) மீன்பிடிக்கும் போது அந்தப் படகு இலங்கை கடல் எல்லைக்குள் (அனலைத்தீவு பகுதியில்) சென்றதாக தெரிவிக்கப்படுகிறது. இதையடுத்து இலங்கை கடற்படை அதிகாரிகள் அந்தப் படகையும், அதில் பயணித்திருந்த மீனவர்களையும் மதிய நேரத்தில் சிறைபிடித்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் விவரம்:

1. முரளி த/பெ ராஜா (வயது 30) – கள்ளிவயல்தோட்டம்

2. ராஜா த/பெ ராஜு (வயது 53) – புதுக்கோட்டை

3. குமார் த/பெ மீனாட்சி சுந்தரம் – கள்ளிவயல்தோட்டம்

இந்தச் சம்பவம் குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வரவில்லையெனினும், கடலோர மீனவர் சமூகத்தில் பெரும் பதட்டம் நிலவுகிறது. சம்பவம் தொடர்பாக தமிழக மீன்வளத்துறை மற்றும் வெளிநாட்டு அலுவல்கள் துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய ஒளியின் தொடக்கம்! ஒளி பரப்பும் தீபம் போல, மகிழ்ச்சி பரப்பும் ஒலி போல,இன்று நம் வாழ்க்கையில் இன்னொரு பிரகாசமான நாள்...
14/10/2025

புதிய ஒளியின் தொடக்கம்!

ஒளி பரப்பும் தீபம் போல, மகிழ்ச்சி பரப்பும் ஒலி போல,
இன்று நம் வாழ்க்கையில் இன்னொரு பிரகாசமான நாள்!

அன்பும் உழைப்பும் ஒன்றிணைந்த முயற்சியாக,
மகிழ்ச்சி பொங்கும் ஒலி – ஒளி உலகம் நோக்கி,
நாளை தொடங்குகிறது புதிய #பட்டாசு_கடை! 🎆

“தரம் மிக்க பட்டாசுகள் – மகிழ்ச்சி தரும் விலையில்!”
🎉 “மொத்த விலைக்கு சில்லறை விற்பனை!”
🧨 “நம்பிக்கையும் தரமும் ஒன்றாகும் இடம்!”

குடும்ப மகிழ்ச்சிக்காக, குழந்தைகளின் சந்தோஷத்திற்காக,
ஒவ்வொரு நிமிஷத்தையும் கொண்டாட்டமாக்கும் சிறந்த தேர்வு! 🎊

📍 இடம்: IOB வங்கி அருகில், கிழக்கு கடற்கரை சாலை, மல்லிப்பட்டினம்
📅 தேதி: 15.10.2025
🕙 நேரம்: காலை 10.00 மணி

உங்கள் அன்பான வருகை எங்களின் பெருமையையும் ஊக்கத்தையும் பெருக்கும்

12/10/2025

அதிரையின் பிரபல மைதானத்தில் தமிழ்நாட்டு கிரிக்கெட் அணிக்கு தேர்வான மல்லிப்பட்டினம் விளையாட்டு வீரர் ஆபிதை பாராட்டிய AFFA அணியினர்.

*மல்லிப்பட்டினம் ECR சாலை மரியம் காம்ப்ளக்ஸ்  புதியதோர் உதயமானது ஹோட்டல் லிச்சி கடை.*  *12/10/2025 திறப்பு  விழாவை முன்ன...
11/10/2025

*மல்லிப்பட்டினம் ECR சாலை மரியம் காம்ப்ளக்ஸ் புதியதோர் உதயமானது ஹோட்டல் லிச்சி கடை.*

*12/10/2025 திறப்பு விழாவை முன்னிட்டு இரண்டு பிரியாணி வாங்கினால் ஒரு பிரியாணி இலவசம் ஒரு நாள் மட்டும்*

இங்கே சுத்தமான,சுவையான
🍗 *BBQ சிக்கன்
🐟BBQ மீன்,
🍲சிக்கன் ரைஸ்,
🍜சிக்கன் நூடுல்ஸ் சிக்கன் குத்து புரோட்டா ,
நூல் புரட்டா,
வீச் புரோட்டா, கோதுமை புரோட்டா , சப்பாத்தி,* இடியாப்பம்
ஆகியவை கிடைக்கும்

குறிப்பாக
நாட்டுக்கோழி ,காடை, மீன் கிரேவி இறால்,கனவா,
மீன் சாப்பாடும்,
மட்டன்,
சிக்கன் பிரியாணியும் , அரேபியன் மந்தி கிடைக்கும்.

வாருங்கள் உணவை சுவைத்து பாருங்கள் ஆதரவு தாருங்கள்

*📞8122323648
ஹோட்டல் லிச்சி
ECRரோடு, மல்லிப்பட்டினம்*

*மல்லி நியூஸ்...!*

*தஞ்சை மாவட்டம் புதுப்பட்டினம் ஈசிஆர் சாலை நேற்று இரவு ஒரு மணி அளவில் திருச்செந்தூர் கோயில் சென்ற ஈசிஆர்* *சாலை வழியாக ப...
10/10/2025

*தஞ்சை மாவட்டம் புதுப்பட்டினம் ஈசிஆர் சாலை நேற்று இரவு ஒரு மணி அளவில் திருச்செந்தூர் கோயில் சென்ற ஈசிஆர்* *சாலை வழியாக பாண்டிச்சேரி நோக்கி சென்ற கார் மீது இராமநாதபுரம் நோக்கி* *சென்ற லாரி கார் நேருக்கு நேர் மோதல் அதில் ஒருவர் பலி மற்றொருவர் கவலைக்கிடாக .மருத்துவமனையில் அனுமதி காவல்துறை விசாரணை.*

#மல்லி நியூஸ்

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சேதுபாவா  சத்திரம் கிழக்கு ஒன்றிய தகவல் தொழில்நுட்ப பிரிவு ஒன்றிய செயலாளராக...
07/10/2025

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சேதுபாவா சத்திரம் கிழக்கு ஒன்றிய தகவல் தொழில்நுட்ப பிரிவு ஒன்றிய செயலாளராக KMA.நூருல் அமீன் அவர்களுக்கு தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் அவர்களுடைய பரிந்துரையின்படி கழகப் பொதுச் செயலாளர் அவர்களால் பொறுப்பு வழங்கப்பட்டது.

மின்சாரம் தாக்கி உயிரிழந்த மணமேல்குடி காவல்நிலைய உதவி ஆய்வாளர் லட்சுமிபிரியா அவர்களின் மறைவு செய்தி மிகவும் வேதனைக்குரிய...
05/10/2025

மின்சாரம் தாக்கி உயிரிழந்த மணமேல்குடி காவல்நிலைய உதவி ஆய்வாளர் லட்சுமிபிரியா அவர்களின் மறைவு செய்தி மிகவும் வேதனைக்குரியதது அவரை பிரிந்து வாடும் குடும்பத்தினர்க்கு வருத்ததுடன் ஆழ்ந்த இரங்கல்...

SDPI-கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்டம் பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி பூத் முகவர்கள் ஆலோசனை கூட்டம் மதுக்கூர் நகர அலுவலகத...
29/09/2025

SDPI-கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்டம் பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி பூத் முகவர்கள் ஆலோசனை கூட்டம் மதுக்கூர் நகர அலுவலகத்தில் பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி செயலாளர் மதுக்கூர் அகமது முஸ்தபா தலைமையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியை அதிரை நகர செயலாளர் ஃபாரிஸ் அகமது வரவேற்புரையாற்றினார்.

இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக SDPI-கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் முகமது புகாரி மற்றும் மாவட்ட பொதுச்செயலாளர், அசாருதீன் மாவட்ட துணை தலைவர் அகமது அஸ்லம் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

முன்னிலை வகித்த பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி நிர்வாகிகள் மதுக்கூர் நகர நிர்வாகிகள்,கிளை நிர்வாகிகள்,அதிரை நகர நிர்வாகிகள்,கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

தொகுதி செயற்குழுவின் தீர்மானம்

2026-சட்டமன்ற தேர்தலுக்கான பூத் கமிட்டி அமைப்பது சம்பந்தமான ஆலோசனைகள் வழங்கப்பட்டது. பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட 100-க்கும் மேற்பட்ட பூத் கமிட்டி அமைக்க முடிவுகள் எடுக்கப்பட்டது.

இல்லந்தோறும் SDPI என்று கட்சியின் உறுப்பினர்களை அதிகபடுத்த வேண்டும்.பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் புதிய கிளைகள் கட்டமைக்க வேண்டும்.

வருகின்ற நகராட்சி பேரூராட்சி வார்டு தேர்தலில் அனைத்து இடங்களிலும் போட்டியிடுவது சம்பந்தமான முடிவுகள் எடுக்கப்பட்டன.

கரூர் கூட்ட நெரிசலில் இறந்தவர்களுக்காக ஐந்து நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

இறுதியாக மதுக்கூர் நகர செயற்குழு உறுப்பினர் ஷேக் அஜ்மல் நன்றியுரை நிகழ்த்தினார்.

தஞ்சை மாவட்டம், மல்லிப்பட்டினத்தில் தமுமுகவின் 31வது ஆண்டு துவக்கத்தை முன்னிட்டு தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம்,மனித...
29/09/2025

தஞ்சை மாவட்டம், மல்லிப்பட்டினத்தில் தமுமுகவின் 31வது ஆண்டு துவக்கத்தை முன்னிட்டு தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம்,மனிதநேய மக்கள் கட்சி மற்றும் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதர நிலையம் அழகியநாயகிபுரம் இணைந்து மாபெரும் இரத்த தானம் முகாமை நடத்தினர்.

மல்லிப்பட்டினம் தமுமுக கிளை தலைவர் செய்யது புகாரி தலைமையில் முகாம் நடைபெற்றது.
தமிழ்நாடு மனித உரிமைகள் சர்வதேச கூட்டமைப்பு மாநில தலைவர் Dr.அசன் முகைதீன்,நண்பர்கள் குழு அப்துல் மாலிக் மற்றும் மமக மாவட்ட செயலாளர் அப்துல் பகது ஆகியோர் துவக்கி வைத்தனர்.

இம்முகாமில் பலரும் தாமாக முன்வந்து இரத்த தானம் செய்தனர்.இந்நிகழ்வில் தமுமுக-மமக மாவட்ட,கிளை நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர்.

இதில் அழகிய நாயகிபுரம் அரசு ஆரம்ப சுகாதர நிலைய மருத்துவர்கள்,செவிலியர்கள்,இரத்த வங்கி சேகரிப்பாளர்கள்,சுகாதர மேற்பார்வையாளர் ஆகியோர் கலந்ததுக்கொண்டனர்.

விஜய் பிரசாரத்தில் 40 பேர் உயிரிழந்த சம்பவம் எதிரொலி; உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக தமிழகம் முழுவதும் நாள...
28/09/2025

விஜய் பிரசாரத்தில் 40 பேர் உயிரிழந்த சம்பவம் எதிரொலி; உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக தமிழகம் முழுவதும் நாளை கடையடைப்பு - தமிழக வணிகர் சங்கங்களின் பேரவை அறிவிப்பு

Adresse

Democratic Republic Of The
614723

Notifications

Soyez le premier à savoir et laissez-nous vous envoyer un courriel lorsque Malli News publie des nouvelles et des promotions. Votre adresse e-mail ne sera pas utilisée à d'autres fins, et vous pouvez vous désabonner à tout moment.

Partager