Malli News Informations de contact, plan et itinéraire, formulaire de contact, heures d'ouverture, services, évaluations, photos, vidéos et annonces de Malli News, Société de médias/d’actualités, Democratic Republic of the.

மல்லி நியூஸ் குழுமம் இனிதே வரவேற்கிறது.உள்ளூர் முதல் உலகம் வரையிலான செய்திகளுக்கு

https://chat.whatsapp.com/K9cPgTii8Gm6UwTQjwdHuA

https://www.mallinews.in/

https://www.youtube.com/

https://www.instagram.com/mallinews?igsh=bHUxdnJkNmNncTZp

மல்லிப்பட்டினம் வடக்குத் தெருவை சேர்ந்த மர்ஹூம் TMS  சேக் தாவூத் அவர்களின் மகனும் .TMS தாஜூதீன் , முகமது நெய்னா மலை  ஆகி...
03/07/2025

மல்லிப்பட்டினம் வடக்குத் தெருவை சேர்ந்த மர்ஹூம் TMS சேக் தாவூத் அவர்களின் மகனும் .
TMS தாஜூதீன் , முகமது நெய்னா மலை ஆகியோரின் சகோதரரும்
H .அபுபைதா அவர்களின் சகலையும் A. நாகூர் கனி அவர்களின் மைத்துனரும்,சேக் ஹஜ் முகமது,முகமது இஸ்மாயில் ஆகியோரின் மாமனாருமாகிய
TMS முகமது மீராசா அவர்கள் வஃபாதாகவிட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்.

அன்னாரின் மறுமை வாழ்விற்காக துஆ செய்யவும்.

தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினத்தில் மூன்று அண்டு  சட்டப்படிப்புக்கான மாணவர்களுக்கு அனைத்துவிதமான ஆலோசனைகளையும் இலவசமாக அ...
30/06/2025

தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினத்தில் மூன்று அண்டு சட்டப்படிப்புக்கான மாணவர்களுக்கு அனைத்துவிதமான ஆலோசனைகளையும் இலவசமாக அதிரையில் உள்ள மீஃஜான் சட்ட ஆலோசனை மையத்தில் இலவசமாக வழக்கறிஞர் தம்பதியினர் வழங்கி வருகின்றனர்.

இலவச சட்ட படிப்பு ஆலோசனை - வாய்ய்புள்ள மாணவர்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.

மமக சார்பில் மதுரையில் ஜூலை.6ல்  இரட்டை கோரிக்கை வலியுறுத்தி  நடைபெறும் எழுச்சி பேரணி மாநாட்டிற்கு மல்லிப்பட்டினம் ஜமாத்...
22/06/2025

மமக சார்பில் மதுரையில் ஜூலை.6ல் இரட்டை கோரிக்கை வலியுறுத்தி நடைபெறும் எழுச்சி பேரணி மாநாட்டிற்கு மல்லிப்பட்டினம் ஜமாத்தார்கள், ஊர் முக்கியஸ்தர்கள்,அரசியல் பிரமுகர்களை சந்தித்து அழைப்பு கொடுத்தனர்.

ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள வக்ஃப் திருத்த சட்டத்தை ரத்து செய்யவும்,ஊராட்சி மன்றம் முதல் நாடாளுமன்றம் வரை சிறுபான்மையினருக்கு பிரதிநிதித்துவம் உறுதி செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி மனிதநேய மக்கள் கட்சி சார்பில் வருகின்ற ஜூலை.6ல் மாபெரும் எழுச்சி பேரணி மாநாடு நடைபெற இருக்கிறது,அதற்கு தஞ்சை தெற்கு மாவட்டம்,மல்லிப்பட்டினத்தில் ஜமாஅத் நிர்வாகிகள்,ஊர் முக்கியஸ்தர்கள்,அரசியல் கட்சி பிரமுகர்கள்,பொதுமக்கள் ஆகியோரை சந்தித்து மாநாட்டிற்கு அழைப்பு கொடுத்தனர்.

மேலும் மமகவின் மாநாட்டின் அவசியத்ததையும்,தற்போதைய அரசியல் சூழல் குறித்தும் அனைவருக்கும் எடுத்திரைத்தனர். சந்திப்பில் தஞ்சை தெற்கு மமக மாவட்ட தலைவர் புரோஸ்கான், மமக மாவட்ட செயலாளர் அப்துல் பகத் மாவட்ட நிர்வாகிகள் அப்துல் மாலிக்,நெய்னா,ராவுத்தர் மற்றும் கிளை நிர்வாகிகள் இருந்தனர்.

தவெக தலைவர் தளபதி விஜய் அவர்களின் 51 வது பிறந்த நாள். மல்லிப்பட்டினத்தில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கிய கிளை கழகத்தினர்...
22/06/2025

தவெக தலைவர் தளபதி விஜய் அவர்களின் 51 வது பிறந்த நாள். மல்லிப்பட்டினத்தில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கிய கிளை கழகத்தினர்..!

தஞ்சை மாவட்டம்,மல்லிப்பட்டினத்தில் எஸ்டிபிஐ கட்சியின் துவக்க தினத்தையொட்டி கட்சி கொடியேற்றி  உணவுகள் வழங்கப்பட்டன.எஸ்டிப...
21/06/2025

தஞ்சை மாவட்டம்,மல்லிப்பட்டினத்தில் எஸ்டிபிஐ கட்சியின் துவக்க தினத்தையொட்டி கட்சி கொடியேற்றி உணவுகள் வழங்கப்பட்டன.

எஸ்டிபிஐ கட்சியின் 17ஆம் ஆண்டு துவக்க தினத்தையொட்டி மல்லிப்பட்டினம் கடைவீதியில் எஸ்டிபிஐ கட்சியின் கொடியேற்றி கொள்கை கோஷங்கள் எழுப்பினர்.இந்நிகழ்ச்சிக்கு மல்லிப்பட்டினம் கிளை தலைவர் நூருல் இஸ்லாம் தலைமை தாங்கினார்.இந்த நிகழ்ச்சியில், கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட பொருளாளர் முகமது அஸ்கர் கட்சி கொடியை ஏற்றிவைத்தார்.

கட்சி கொடியேற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.மேலும் துப்புரவு தொழிலாளர்கள்,தினக்கூலிகளுக்கு உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டன.

நோய்களை கட்டுப்படுத்தபேராவூரணியில் தென்னை ஆராய்ச்சி மையம் அமைக்க வேண்டும் முதலமைச்சரிடம் விவசாயிகள் கோரிக்கை.!நோய்களை கட...
21/06/2025

நோய்களை கட்டுப்படுத்த
பேராவூரணியில் தென்னை ஆராய்ச்சி மையம் அமைக்க வேண்டும் முதலமைச்சரிடம் விவசாயிகள் கோரிக்கை.!

நோய்களை கட்டுப்படுத்த பேராவூரணியில் முழுநேர தென்னை ஆராய்ச்சி மையம் அமைக்கவேண் டுமென விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ள னர்.

பேராவூரணி பகுதியில் தென்னையை தாக்கும் பல்வேறு நோய் தாக்கு தல்கள் குறித்து ஆராய்ச்சி நடத்த பேராவூரணி பகுதி யில் முழுநேர தென்னை ஆராய்ச்சி மையம் அமைக்க வேண்டும் என தென்னை விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

இதுகுறித்து தென்னை உற்பத்தியாளர் சங்கத்தை சேர்ந்தவரும் தஞ்சை மாவட்ட காங்கிரஸ் பொதுச்செயலாளருமான மல்லிப்பட்டினம் கமால் பாட்சா தமிழக முதல்வ ருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறப்பட்டுள்ள தாவது:

தென்னையில் வாடல் நோய், சிவப்பு கூன் வண்டு, ரூக்கோஸ் என்ற வெள்ளை ஈ. தாக்குல் உள்ளிட்ட நோய்களால் பேராவூரணி, சேதுபாவாசத்திரம் ஒன்றி யப் பகுதிகளில் தென்னை மரங்கள் அழிந்து வருகிறது. இதனால் தென்னை விவ

சாயிகள் வருமானம் இழக் கின்றனர். தென்னையை தாக்கும் நோய்கள் குறித்து ஆராய்ச்சி செய்ய பேரா வூரணி தொகுதியில் முழு நேர தென்னை ஆராய்ச்சி மையம் அமைக்க நடவ டிக்கை எடுக்க வேண்டும்.

அங்காடிகளில் குடும்ப அட்டைகளுக்கு பாமயி லுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய் விற்பனை செய்ய நடவடிக்கை எடுத் தால் தென்னை விவசா யிகள் பயனடைவார்கள் என மனுவில் குறிப்பிட் டுள்ளார்.

மல்லிப்பட்டினம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை அறிவிப்பு.
20/06/2025

மல்லிப்பட்டினம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை அறிவிப்பு.

மல்லிப்பட்டினம் மரண அறிவிப்பு ~ கமால் பாட்ஷா அவர்கள்.!மல்லிப்பட்டினம் ஷாஃபி இமாம் தெருவை சேர்ந்த மர்ஹூம் முகமது சாலிஹ் அ...
18/06/2025

மல்லிப்பட்டினம் மரண அறிவிப்பு ~ கமால் பாட்ஷா அவர்கள்.!

மல்லிப்பட்டினம் ஷாஃபி இமாம் தெருவை சேர்ந்த மர்ஹூம் முகமது சாலிஹ் அவர்களின் மகனும்,மர்ஹூம் அப்துல் ஜப்பார், அப்துல் வகாப்,
ஹமீது சுல்தான் இவர்களின் சகோதரரும் முகமது மைதீன் இவர்களின் தகப்பனாருமாகிய
கமால் பாட்சா அவர்கள் வஃபாத்தாகிவிட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்.

அன்னாரின் மறுமை வாழ்விற்காக துஆ செய்யவும்.

தஞ்சை மாவட்ட மீனவர்கள் கடலுக்கு செல்ல அனுமதி மறுப்பு.!தமிழகம் முழுவதும் மீன்களின் இனப்பெருக்க காலத்தையொட்டி ஏப்ரல் 15-ந்...
15/06/2025

தஞ்சை மாவட்ட மீனவர்கள் கடலுக்கு செல்ல அனுமதி மறுப்பு.!

தமிழகம் முழுவதும் மீன்களின் இனப்பெருக்க காலத்தையொட்டி ஏப்ரல் 15-ந்தேதி முதல் ஜூன் 14-ந்தேதி வரை 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலமாக அறிவிக்கப்படுகிறது. இந்த காலகட்டங்களில் மீனவர்கள் தங்களது விசைப்படகுகளை மராமத்து பணி பார்த்தல், வலைகளை சீரமைத்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்கிறார்கள்.

அந்த வகையில் இந்த ஆண்டுக்கான மீன்பிடி தடைக்காலம் நேற்று நள்ளிரவு 12 மணியுடன் நிறைவடைந்தது. இதையடுத்து மீனவர்கள் மீண்டும் கடலுக்கு செல்வதற்கான ஏற்பாடுகளை கடந்த 2 நாட்களுக்கு முன்பிருந்தே தொடங்கினர். அதன்படி விசைப்படகுகளில் வலைகளை ஏற்றுதல், படகுகளை இயக்கி என்ஜின் செயல்பாடுகளை சரிபார்த்தல் உள்ளிட்டவைகளில் கவனம் செலுத்தினர்.

தஞ்சை மாவட்டத்தை பொறுத்தவரையில் மல்லிப்பட்டினம்,சேதுபாவாசத்திரம் ஆகிய பகுதிகளில் இருந்து கடலுக்கு செல்வதற்கு சுமார் 300க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் தயார் நிலையில் இருந்தன.

இந்தநிலையில் கடந்த 2 நாட்களாக மன்னார் வளைகுடா தென்கடல் பகுதியில் பலத்த சூறைக்காற்று வீசி வருகிறது. அதிலும் நேற்று மாலை முதல் மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசுவதால் மறு உத்தரவு வரும் வரையில் மீனவர்கள் கடலுக்கு செல்ல மீன்வளத்துறை அலுவலகம் அனுமதி மறுத்துள்ளது.

மல்லிப்பட்டினம்: மீனவர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் முக்கிய முடிவுமீன்பிடி தடைக்காலம் சனிக்கிழமையுடன் (ஜூன் 14) நிறைவடையும் ...
15/06/2025

மல்லிப்பட்டினம்: மீனவர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் முக்கிய முடிவு

மீன்பிடி தடைக்காலம் சனிக்கிழமையுடன் (ஜூன் 14) நிறைவடையும் நிலையில் தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்ட விசைப்படகு சங்கங்களின் கூட்டமைப்பு ஆலோசனை கூட்டம் மல்லிப்பட்டினத்தில் நேற்று நடைபெற்றது. மாநில ஒருங்கிணைப்பாளர் ஏ.கே. தாஜுதீன் தலைமை வகித்தார். மீனவர் நலவாரிய உறுப்பினர்கள் போஸ், சேசுராஜா, சகாயம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் மீன்பிடித் தடைக்காலம் முடியும் நிலையில் விசைப்படகுகள் மீனவர் நலத் துறை அனுமதி பெற்று ஒரு நாள் தாமதமாக திங்கள்கிழமை அதிகாலை முதல் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்வது எனவும், விசைப்படகுகளில் டிவைசர் கருவி பொருத்துவதால் பல்வேறு இடர்பாடுகள் ஏற்படுவதால் அக்கருவியைப் பொருத்த அரசு நிர்ப்பந்திக்கக் கூடாது, தடைக்காலத்தில் 61 நாள்கள் விசைப்படகுகள் மீன்பிடிக்க செல்லாமல் இருக்கும் நிலையில்
இயந்திரம் பொருத்தப்பட்ட பெரிய படகுகள் மீன் இனப்பெருக்க காலம் என்ற அரசின் நோக்கத்தைச் சிதைக்கும் வகையில் இறால், நண்டு, மீன் உள்ளிட்டவற்றைப் பிடித்து வருவதால் தடைக்காலம் முடிந்து செல்லும் விசைப்படகு மீனவர்களுக்கு போதிய மீன்கள் கிடைப்பதில்லை. இதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பாக்ஜலசந்தி விசைப்படகு மீனவர்கள் கூட்டமைப்பின் கௌரவத் தலைவராக போஸ், தலைவராக தாஜுதீன், செயலராக சேசுராஜா, பொருளாளராக செல்வக்கிளியை போட்டியின்றித் தேர்வு செய்வது என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன

13/06/2025

மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்த ஏழை மாணவிக்கு மேல்படிப்புக்காக உதவி கரம் நீட்டிய மல்லிப்பட்டினம் சமுதாய நல மன்றம்

#சமுதாயநலமன்றம்

12/06/2025

JUSTIN | குஜராத், அகமதாபாத் விமான நிலையம் அருகே ஏர் இந்தியா பயணிகள் விமானம் விழுந்து விபத்து.

விமானத்தில் சுமார் 242-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்ததாக தகவல்!

அகமதாபாத்திலிருந்து லண்டன் புறப்பட்ட விமானம் டேக் ஆஃப் ஆகும்போது பழுதுபட்டு 625 அடி உயரத்திலிருந்து விழுந்துள்ளதாக தகவல்.

242 பேர் விமானத்தில் இருந்துள்ளனர். விமானம் விழுந்து நொறுங்கி தீப்பிடித்துள்ளது. 25 பயணிகள் பலத்த தீக்காயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

| | |

Adresse

Democratic Republic Of The
614723

Notifications

Soyez le premier à savoir et laissez-nous vous envoyer un courriel lorsque Malli News publie des nouvelles et des promotions. Votre adresse e-mail ne sera pas utilisée à d'autres fins, et vous pouvez vous désabonner à tout moment.

Partager