Eastern Times

Eastern Times செய்திகள்

கடந்த பாராளுமன்ற தேர்தலில் பொத்துவிலின்  பிரதிநிதித்துவத்தை இழக்க காரணமாக இருந்தவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்க பொத்துவில...
09/04/2025

கடந்த பாராளுமன்ற தேர்தலில் பொத்துவிலின் பிரதிநிதித்துவத்தை இழக்க காரணமாக இருந்தவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்க பொத்துவில் மக்கள் தயார்.

வெறும் 88 வாக்குகளால் கட்சிக்கு கிடைக்க இருந்த பிரதிநிதித்துவம் இழக்கப்பட்டதன் மூலம் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஷாரப் தனக்கான வாய்ப்பை இழந்தது குறிப்பிடத்தக்கது.

தேர்தல் முடிவுகள் முடிந்த கையோடு பொத்துவில் ஜலால்தீன் சதுக்கத்தில் இடம்பெற்ற கட்சிப்பிரகடன ஒன்று கூடலில் பெருந்திரளான வாக்களித்த மற்றும் வாக்களிக்காத மக்கள் கலந்து கொண்ட உணர்புபூர்வமான அந்த கூட்டம் பொத்துவில் மக்களின் வரலாற்றில் எழுதப்பட வேண்டிய ஒன்று என்பதை யாவரும் அறிவர்.

கடந்த பாராளுமன்ற தேர்தலில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஷாரப் வென்று விடக்கூடாது என்பதற்காக அதிகார மோகம் பிடித்த துரோகிகளின் கூட்டு சதிகளுடைய எச்சங்களை தன் முகத்தில் பூசிக்கொண்டு இப்பொழுது பிரதேச சபை தேர்தலில் களமிறங்கியுள்ளனர்.

இந்த துரோகிகளுக்கு தகுந்த பாடத்தை வரும் உள்ளூராட்சி தேர்தலில் வழங்கி அவர்களுடைய அரசியல் சுயலாபத்தை சுருட்டி வீச பொத்துவில் மக்கள் அமைதியான முறையில் இந்த தேர்தலை எதிர் கொள்ளத்தயாராக இருப்பதாக அறிய முடிகிறது.

ஒரு கடுமையான தேசிய அரசியல் நீரோட்ட காலத்திலும் தன் திறமையின் மூலம் பொத்துவில் மக்களின் அடிப்படையான பிரச்சினைகளான சுகாதாரம், போக்குவரத்து, நிலம் போன்றவற்றில் தொக்கி நின்ற சவால்களை விலக்கி தீர்வே விடிவு எனும் கோணத்தில் மக்களரசியல் செய்தவர் முஷாரப்.

மாவட்டத்தின் ஏனைய இடங்கள் உட்பட பொத்துவில் பிரதேசத்திலும் சுயேட்சை அணியாக களமிறங்கியுள்ள முஷாரப் அவர்களை தலைமையாககொண்ட அணி வருகிற உள்ளூராட்சி தேர்தலினூட வலுவான ஒரு அடித்தளத்தை இட திட்டமிடப்பட்டு வருகிறது.

கிழக்கிலும் ஆங்காங்கே போஸ்ட்டர்!“ஹகீம், ரிஷாட் வேண்டாம்”27.08.2024                     #இலங்கை  #கொழும்பு  #தமிழ்  #முஸ்...
27/08/2024

கிழக்கிலும் ஆங்காங்கே போஸ்ட்டர்!
“ஹகீம், ரிஷாட் வேண்டாம்”

27.08.2024

#இலங்கை #கொழும்பு #தமிழ் #முஸ்லிம் #சிங்கள #ஜனாதிபதிதேர்தல் #அனுரகுமார #சஜித்பிரேமதாச #ரணில் #ඡන්දය #ජනාධිපති #මැතිවරණය #අනුර #සජිත් #රනිල් #අනුරකුමාර

இன ரீதியான சிந்தனையை கைவிட்டு நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல ஒன்றிணைவோம்! நாவிதன்வெளி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் பார...
09/07/2024

இன ரீதியான சிந்தனையை கைவிட்டு நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல ஒன்றிணைவோம்! நாவிதன்வெளி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம். முஷாரப்.

(ஏ.எல்.எம்.ஷினாஸ்)

தமிழ், முஸ்லிம், மற்றும் சிங்கள மக்கள் என மூவின மக்களும் ஒற்றுமையாக வாழும் ஒரு பிரதேசம் நாவிதன்வெளி பிரதேசமாகும். இங்கு இன ரீதியான செயற்பாடுகளுக்கு நான் ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை இன ரீதியான சிந்தனையை கைவிட்டு நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல ஒன்றிணைவோம் என நாவிதன்வெளி பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான எஸ்.எம்.எம். முஷாரப் தெரிவித்தார்

அம்பாறை மாவட்டத்தின் நாவிதன்வெளி பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டம் பாராளுமன்ற உறுப்பினரும் ஒருங்கிணைப்பு குழு தலைவருமான சட்டத்தரணி எஸ்.எம்.எம். முஷாரப் தலைமையில் நாவிதன்வெளி பிரதேச செயலக கலாசார மத்திய நிலையத்தில் நேற்று (😎 காலை 10.00 மணிக்கு இடம்பெற்றது.

நாவிதன்வெளி பிரதேச செயலாளர் திருமதி ராகுலநாயகி சஜிந்திரன் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து இங்கு உரையாற்றும் போது,

அரச உத்தியோகத்தர்கள் ஆக இருந்தாலும் சரி அல்லது சாதாரண பொது மக்களாக இருந்தாலும் சரி இங்கு முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை இன ரீதியான சிந்தனை கொண்டு பிழையான முன்மாதிரிகளை செய்வதற்கு நான் ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை.

பல்லின மக்களும் ஒற்றுமையாக வாழ்ந்து நமது பிரதேசத்தை அபிவிருத்தி செய்ய வேண்டிய பொறுப்பு இங்கு வாழும் சகல மக்களினதும் பொறுப்பாகும். சமாதானம் நல்லிணக்கத்தோடு எதிர்கால சந்ததிகளுக்கு பொருத்தமான பிரதேசமாக ஒவ்வொரு பிரதேசங்களையும் மாற்ற வேண்டிய பொறுப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு உண்டு என நான் கருதுகிறேன்.

எனவே ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதிகள் பொதுமக்களின் நலன் கருதி அவசரமாக செலவு செய்யப்பட வேண்டும். உரிய வேலை திட்டங்களை உரிய காலப்பகுதிக்குள் நிறைவு செய்து கொள்ளுமாறு சகல திணைக்கள தலைவர்களையும் நான் கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்தார்.

இந்த அபிவிருத்தி குழு கூட்டத்தில் நாவிதன்வெளி பிரதேச பொதுமக்கள் எதிர்கொள்ளும் வீட்டு திட்டம், உரிமய காணி வேலைத்திட்டம், குடிநீர், கல்வி அபிவிருத்தி, சுகாதாரம், மின்சாரம், வீட்டுதிட்டம், வீதி அபிவிருத்தி, பல்வேறு விடயங்கள் ஆராயப்பட்டன அதே நேரம் திணைக்களத் தலைவர்களால் முன்வைக்கப்பட்ட சில பிரச்சனைகளுக்கு தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. எதிர்காலத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய வேலை திட்டங்கள் தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டன.

இந்த பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான பைசல் காசிம், ரி.கலையரசன் உட்பட உதவி பிரதேச செயலாளர் பி.பிரணவரூபன், கணக்காளர் றிஸ்வி யஹ்சர், பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் திருமதி திலகராணி கிருபைராசா, பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்பாளர்கள், திணைக்களங்களின் தலைவர்கள், பொறுப்பு உத்தியோகத்தர்கள், சமூக நிறுவனங்களின் தலைவர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

பொத்துவில் பிரதான நூலகத்தின் வாகன தரிப்பிடத்தை சரி செய்து தருமாறு பொத்துவில் வாசகர்கள் கேட்டுக் கொள்கிறார்கள்.பொத்துவில்...
09/06/2024

பொத்துவில் பிரதான நூலகத்தின் வாகன தரிப்பிடத்தை சரி செய்து தருமாறு பொத்துவில் வாசகர்கள் கேட்டுக் கொள்கிறார்கள்.

பொத்துவில் பிரதான நூலகத்தின் வாகன தரிப்பிடத்தினுடைய நிலையினை இணைக்கப்பட்டுள்ள புகைப்படங்களினூடாக பார்க்க முடியுமாக உள்ளது. வாசிப்பு ஒரு மனிதனை பூரணப்படுத்தும் என்ற வாசகத்திற்கு நூலகத்தின் பங்களிப்பு அவசியமாக உள்ளதை நாம் எல்லோரும் அறிவோம்.

பொத்துவில் பிரதேச சபையின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள பிரதான நூலகத்தின் வாகன தரிப்பிடத் தேவை உடனடியாக பூர்த்தியாக்கப்படல் வேண்டும்.

அதிகமான வருட வருமானத்தை பெற்றுவரும் பிரதேச சபை இதுபோன்ற அவசிய தேவைகளை பூர்த்தி செய்யாமலிருப்பது அதிருப்தியளிக்கிறது.

பொத்துவில் பிரதேச சபையில் போதியளவு நிதி இல்லாதவிடத்து பொத்துவில் ஊரில் உள்ள பாராளுமன்ற உறுப்பினரின் பன்முகப்படுத்த நிதியிலிருந்தாவது இந்த தேவை பூர்த்தியாகப்படல் வேண்டும்.

எனவே, முடிந்தால் இந்த தேவையை பூர்த்தி செய்து வாசகர்களுக்கு உதவுங்கள் என பொத்துவில் வாசகர்கள் கேட்டுக் கொள்கிறார்கள்.

25/05/2024

EP BIV 4026 இலக்கமுடைய வாகனத்தின் பின்புற இலக்கத்தகடு (நம்பர் ப்ளேட்) பொத்துவில் மார்கட் வீதி, பழைய தபாலக வீதி பகுதிகளில் இன்று காலை தொலைந்து விட்டது. கண்டெடுத்தவர்கள் பின்வரும் தொலைபேசி இலக்கங்களை தொடர்பு கொள்ளுங்கள்.

தொலைபேசி இல. 0752030480

பொத்துவில் விவசாய பகுதிகளில் உள்ள பாலங்கள் விரைவில் அமைக்கப்படும்; முஷாரப் எம்பி நடவடிக்கை———————————————————————-பொத்து...
24/05/2024

பொத்துவில் விவசாய பகுதிகளில் உள்ள பாலங்கள் விரைவில் அமைக்கப்படும்; முஷாரப் எம்பி நடவடிக்கை
———————————————————————-

பொத்துவில் விவசாயிகளுக்கும் கெரளவ பாராளுமன்ற உறுப்பினர் SMM முஷாரப் அவர்களுக்குமிடையிலான அபிவிருத்திசார் கலந்துரையாடல் இன்று (24.05.2024) பாராளுமன்ற உறுப்பினரின் காரியாலய கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இச்சந்திப்பின் போது பொத்துவில் விவசாய அபிவிருத்தி ஒன்றிய நிர்வாகிகள் அமைக்கப்படவேண்டிய பாலங்கள் ,வீதிகள், அணைக்கட்டுகளின் பெயர் விபரங்களை பாராளுமன்ற உறுப்பினரின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தனர்.

குறித்த நிகழ்வில் பொத்துவில் விவசாய அபிவிருத்தி ஒன்றியத்தின் தலைவர், செயலாளர்,நிர்வாக உறுப்பினர்கள் விவசாயிகள்,பொத்துவில் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர்,பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்பாளர் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

பொத்துவில் ஆதார வைத்தியசாலை மத்திய அரசின் கீழ் கொண்டு வருதல் மாத்திரமன்றி  இலங்கையில் மருத்துவ சுற்றுலாவுக்கான விசேட வைத...
23/05/2024

பொத்துவில் ஆதார வைத்தியசாலை மத்திய அரசின் கீழ் கொண்டு வருதல் மாத்திரமன்றி இலங்கையில் மருத்துவ சுற்றுலாவுக்கான விசேட வைத்தியசாலையாகவும் உருவாக்குவதற்கான அமைச்சரவை அனுமதி; வரலாற்று சாதனை நிகழ்த்தியுள்ளார் முஷாரப் எம்பி.
————————————————————

குறித்த அமைச்சரவை அனுமதியில்,

03.பொத்துவில் ஆதார வைத்தியசாலையை மத்திய அரசிடம் கையகப்படுத்தி இலங்கையில் மருத்துவ சுற்றுலாவுக்கான விசேட வைத்தியசாலையாக அபிவிருத்தி செய்தல்.

19 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இருந்து சேவையாற்றும் பொத்துவில் ஆதார வைத்தியசாலை இலங்கையின் பழமையான வைத்தியசாலைகளில் ஒன்றாகும். இப்பகுதியில் உள்ள சுகாதார வசதிகளுக்கான தற்போதைய தேவையை கருத்தில் கொண்டு, சுற்றுலா பயணிகளுக்கான கட்டண வார்டு வசதிகள், தடுப்பு பராமரிப்பு சேவைகள், முதியோர் பராமரிப்பு சேவைகள் மற்றும் ஆயுர்வேத சிகிச்சை வசதிகளுடன் ஒருங்கிணைந்த சுகாதார சேவைகளை வழங்கும் முதன்மை மருத்துவமனையாக மாற்றுவது பொருத்தமானது என கண்டறியப்பட்டுள்ளது. சுற்றுலா. இதன்படி, தற்போது கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் கீழ் இயங்கும் பொத்துவில் ஆதார வைத்தியசாலை கிழக்கு மாகாண ஆளுநரின் அனுமதியின் பேரில் சுகாதார அமைச்சினால் கையகப்படுத்தப்பட்டு, ஒருங்கிணைக்கப்பட்ட வைத்தியசாலையாக பராமரிக்கப்படும். மருத்துவச் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்குத் தேவையான அனைத்து வசதிகளையும் உள்ளடக்கியதன் மூலம் நாட்டின் தென்கிழக்குப் பிராந்தியத்தில் உள்ள சுகாதாரப் பாதுகாப்பு நிறுவனம், சுகாதார அமைச்சரால் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
என குறிப்பிடப்பட்டுள்ளது.

14/05/2024

இலங்கை ரூபவாகினி கூட்டுத்தாபனத்தின் முன்மாதிரியான செயற்பாட்டை பாராட்டினார் முஷாரப் எம்பி.
——————————————————————
(MJM.Mufassir)

உலகளவில் செயற்கை நுன்னறிவு தொழிநுட்பத்தின் வளர்ச்சியானது அபரிதமாக காணப்படும் நிலையில் இலங்கையிலும் செயற்கை நுன்னறிவு தொழிநுட்பத்தின் வளர்சியை ஏற்படுத்த வேண்டும் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் தொடர்ச்சியாக வழியுறுத்திவரும் நிலையில்,

அண்மையில் இலங்கை ரூபவாகினி கூட்டுத்தாபனத்தின் நேத்ரா தொலைக்காட்சியினூடாக முதன்முதலில் செயற்கை நுன்னறிவு தொழிநுட்பத்தினை பயன்படுத்தி தமிழ் மொழிமூல செய்தியை ஒளிபரப்பு செய்திருந்தனர்.

குறித்த இந்த செயற்பாட்டுடன் தொடர்புடைய அனைவரையும் பாராட்டி கெளரவ பாரளுமன்ற உறுப்பினரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான SMM முஷாரப் அவர்கள் இன்று (14.05.2024) தன்னுடைய பாராளுமன்ற உரையில் வாழ்த்து தெரிவித்திருந்தார்.

ஆசிரியர்களாக கடமையாற்றிவரும் கிழக்கு மாகாண சிவில் பாதுகாப்பு அலுவலர்களை ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும் ;  முஷாரப் எம்பி ...
13/05/2024

ஆசிரியர்களாக கடமையாற்றிவரும் கிழக்கு மாகாண சிவில் பாதுகாப்பு அலுவலர்களை ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும் ; முஷாரப் எம்பி நடவடிக்கை
—————————————————————————
(MJM.Mufassir)

கடந்த காலத்தில் நிலவிய யுத்த சூழ்நிலை காரணமாக வட கிழக்கு மக்களின் அன்றாட நடவடிக்கைகள் மட்டுமின்றி அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் நடவடிக்கைகளும் ஸ்தம்பிதமடைந்தன. மேற்படி காலப்பகுதியில் வட கிழக்கு மாகாணங்களில் அமைந்துள்ள பாடசாலைகளில் பாரிய ஆசிரியர் பற்றாக்குறையும் நிலவியது. எனவே, மேற்படி பாடாசலைகளில் சிறுவர்களின் கல்வி நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டன.

பாதுகாப்பு அமைச்சு இந்த நிலமையினை இணங்கண்டதோடு அவ்வமைச்சின் கீழ் காணப்பட்ட சிவில் பாதுகாப்பு திணைக்களத்திற்கு ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட இளைஞர் யுவதிகளுக்கு மத்தியிலிருந்து தகைமையானவர்களை மேற்படி பாடசாலைகளுக்கு தற்காலிகமான அடிப்படையில் இணைப்பு செய்வதற்கு அப்போதைய சிவில் பாதுகாப்பு படையின் பணிப்பாளர் நாயகமாக இருந்த ரியர் அத்மிரல் கலாநிதி சரத் வீரசேகர அவர்கள் நடவடிக்கை மேற்கொண்டார்.

மேற்படி அலுவலர்களுள் வட மாகாணத்தில் கடமையாற்றிய தற்காலிக ஆசிரியர்கள், அப்போதைய கல்வி இராஜாங்க அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் அவர்களால் 2019 ஆம் ஆண்டு அமைச்சரவை தீர்மானமொன்றுக்கு அமைய வட மாகாண ஆசிரியர் சேவைக்கு இணைப்பு செய்யப்பட்டனர்.

கிழக்கு மாகாண அலுவலர்கள் இன்றளவிலும் சிவில் பாதுகாப்பு அலுவலர்களுக்கான சம்பளத்தைப் பெற்றுக் கொண்டு ஆசிரியர்களாக சேவையாற்றி வருவதோடு அவர்களுக்கு எந்தவொரு சிறப்புரிமையும் இதுவரை வழங்கப்படவில்லை. அவர்களையும் ஆசிரியர் சேவையில் உள்ளீர்ப்பதற்குப் பொருத்தமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு இக் கெளரவ சபைக்குப் பிரேரிக்கிறேன் என குறிப்பிட்டு இன்று (13.05.2024) குறித்த பிரேரணை பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படவிருக்கிறது.

அரை நூற்றாண்டு காலமாக அடிக்கல் மட்டும் நட்டு ஏமாற்றப்பட்டு வந்த பொத்துவில் மத்திய வீதியை புனரமைத்துத் தந்த கெளரவ பாராளும...
09/05/2024

அரை நூற்றாண்டு காலமாக அடிக்கல் மட்டும் நட்டு ஏமாற்றப்பட்டு வந்த பொத்துவில் மத்திய வீதியை புனரமைத்துத் தந்த கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் முஷாரப் அவர்களுக்கு பொத்துவில் மக்கள் நெஞ்சு நிறைந்த நன்றியை சொல்லிக் கொள்கிறார்கள்.

நியுசிலாந்து நாட்டின் ஆக்லாந்தின் Favona வில் உள்ள Samoan Church Hall இல்  கடந்த வாரம் கறி விருந்து  விழா கோலாகலமாக இடம்...
09/05/2024

நியுசிலாந்து நாட்டின் ஆக்லாந்தின் Favona வில் உள்ள Samoan Church Hall இல் கடந்த வாரம் கறி விருந்து விழா கோலாகலமாக இடம்பெற்றது; நிகழ்வில் விஷேட அதிதியாக கலந்து கொண்டார் முஷாரப் எம்பி.
———————————————————————

(MJM.Mufassir)

அரசன் NZ அறக்கட்டளையுடன் இணைந்து TANZI தமிழ்க் குழுமம் ஏற்பாடு செய்த இந்த விழாவில், தமிழ்நாட்டின் மாறுபட்ட மற்றும் சுவையான பல உணவு வகைகள் பரிமாறப்பட்டன.

காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் 1800க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். சௌந்திர ராஜன் பழனிசாமி, டாக்டர் லக்ஷ்மணன் செல்வநேசன், கிஷோர் குமார் குமாரசாமி மற்றும் டாக்டர் மகேஷ் பாபு மற்றும் பலர் தலைமையில் சுமார் 100 தன்னார்வலர்கள் இந்த மெகா நிகழ்வை நனவாக்க கடுமையாக உழைத்தனர்.

தளத்தில் தன்னார்வலர்களால் தயாரிக்கப்பட்ட நாற்பது வகை உணவுகள், சைவம் மற்றும் அசைவப் பிரிவுகளின் கீழ் பரிமாறப்பட்டன.

பல்வேறு பொழுதுபோக்கு- பாரம்பரிய மற்றும் நவீன இசை மற்றும் நடனம் ஆகியவை நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக இருந்தது.

குறித்த நிகழ்வில் இலங்கையின் கெளரவ பாராளுமன்ற உறுப்பினரும் அம்பாரை மாவட்ட கரையோரப் பிரதேச ஒருங்கிணைப்புக் குழு தலைவரும் சட்டத்தரணியுமான SMM முஷாரப் இவர்கள் விஷேட அதிதியாக கலந்து கொண்டதோடு
நியுசிலாந்தின் இன சமூகங்கள் அமைச்சர் Melissa Lee MP (தேசிய கட்சி), சுங்க மற்றும் மூத்த அமைச்சர் Casey Costello (NZ First), Jenny Salesa MP, Dr Deborah Russell, Shanan Halbert, Lemauga Sosene, Ingrid Leary (தொழிலாளர் கட்சி), Dr. Parmjeet Parmar (ACT), ஆகியோர் உட்பட, Greg Fleming, Cameron Brewer (தேசிய கட்சி) ஆகியோரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

பொத்துவில் அல் கலீஜ் மகளீர் அரபிக் கல்லூரிக்கு முஷாரப் எம்பியினால் 1.2 மில்லியன் ரூபா நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.—...
08/05/2024

பொத்துவில் அல் கலீஜ் மகளீர் அரபிக் கல்லூரிக்கு முஷாரப் எம்பியினால் 1.2 மில்லியன் ரூபா நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
———————————————————————-

(MJM.Mufassir)

பொத்துவில் அல் கலீஜ் மகளீர் அரபிக் கல்லூரியின் பிரதான நுழைவாயிலை நவீன முறையில் அமைப்பதற்காக கெளரவ பாராளுமன்ற உறுப்பினரும், அம்பாரை மாவட்ட கரையோரப் பிரதேச ஒருங்கிணைப்பு குழுத் தலைவரும் சட்டத்தரணியுமான SMM முஷாரப் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து ரூபா 1.2 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அரபிக்கல்லூரியின் அதிபர் அஸ்ஸேய்க் மஹ்ஸூம் மெளலவி அவர்களின் தலைமையில் பிரதான நுழைவாயிலின் கட்டுமானப் பணியை இன்று (08.05.2024) கல்லூரி வளாகத்தில் ஆரம்பித்து வைத்ததோடு அல் கலீஜ் பெண்கள் அரபிக் கல்லூரியின் பெளதீக வளத்தை அபிவிருத்தி செய்வதற்கு முஷாரப் எம்பி பல முயற்சிகளை எடுத்து வருகிறார் எனக்கூறி கல்லூரி சமூகம் பாராளுமன்ற உறுப்பினருக்கு நன்றியையும் கூறியது.

குறித்த நிகழ்வில் பொத்துவில் பிரதேச செயலாளர்,உதவி பிரதேச செயலாளர்,உதவி திட்டமிடல் பணிப்பாளர்,பிரதேச செயலக தொழிநுட்ப உத்தியோகத்தர்,குறித்த பகுதியின் அபிவிருத்தி உத்தியோகத்தர், கிராம நிலதாரி, பாராளுமன்ற உறுப்பினரின் மாவட்ட இணைப்பாளர், மக்கள் தொடர்பு அதிகாரி,பாடசாலை மாணவர்களின் பெற்றோர்கள், ஆசிரியர்கள்,கல்லூரியின் அபிவிருத்தி சங்க நிர்வாகிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.


#தீர்வே_விடிவு

Adresse

Democratic Republic Of The

Notifications

Soyez le premier à savoir et laissez-nous vous envoyer un courriel lorsque Eastern Times publie des nouvelles et des promotions. Votre adresse e-mail ne sera pas utilisée à d'autres fins, et vous pouvez vous désabonner à tout moment.

Partager