12/07/2026
பழம்பெரும் பின்னணி பாடகி எஸ். ஜானகியின் இறுதி சடங்கு குறித்து குடும்பத்தினர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
இந்திய திரையிசை உலகின் தலைசிறந்த பின்னணி பாடகிகளில் ஒருவரான எஸ். ஜானகி இன்று காலமானார். அவரது மறைவால் திரையுலகினரும், இசை ரசிகர்களும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
குடும்பத்தினர் வெளியிட்டுள்ள தகவலின்படி, ஜானகி உயிரிழந்த நேரத்தில் அவரது மருமகள் உமா முரளி, பேத்தி அப்சரா வைத்யுலா மற்றும் பேத்தியின் கணவர் கணேஷ் சந்திரசேகர் ஆகியோர் அருகில் இருந்தனர்.
அவரது இறுதி சடங்கு நாளை மைசூரில் நடைபெறவுள்ளது. காலை 8.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை, மைசூரில் உள்ள மகாராஜா கல்லூரி மைதானத்தில் பொதுமக்கள், ரசிகர்கள் மற்றும் திரைத்துறையினர் அஞ்சலி செலுத்துவதற்காக அவரது உடல் வைக்கப்படும்.
அதனைத் தொடர்ந்து, மாலை 5.00 மணியளவில், மைசூரில் உள்ள குடும்பத்தினரின் தனியார் பண்ணை வீட்டில் குடும்ப முறைப்படி இறுதிச் சடங்குகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, மைசூர் அப்பல்லோ BGS மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், இன்று மதியம் 12.49 மணிக்கு கவலைக்கிடமான நிலையில் ஜானகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டபோதும் சிகிச்சையின் போது ஏற்பட்ட தொடர் மாரடைப்பால் மருத்துவர்களின் அனைத்து முயற்சிகளும் பலனளிக்காமல், இன்று மாலை 7.30 மணியளவில் அவர் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
🙏 இசை உலகிற்கு அளித்த மறக்க முடியாத பங்களிப்பிற்காக எஸ். ஜானகிக்கு எமது ஆழ்ந்த அஞ்சலிகள்.
📺 மேலும் இதுபோன்ற முக்கிய செய்திகள் மற்றும் முழு விபரங்களை அறிய எங்கள் YouTube சேனலை பாருங்கள்.
📲 உடனடி செய்திகளை WhatsApp-ல் பெற எங்கள் WhatsApp குழுவில் இணையுங்கள்.
https://chat.whatsapp.com/HeIfoYGBWUw9Psjpg3jE5s