12/08/2026
🛑🛑பொதுமக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களத்தின் அவசர எச்சரிக்கை: இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!
உறவுகளே, நாட்டின் பல பகுதிகளில் இன்றைய தினம் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி, மாத்தறை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்யக்கூடும். மேலும் கடற்பரப்புகளில் காற்றின் வேகம் மணிக்கு 50 கிலோமீற்றர் வரை அதிகரிப்பதோடு, கடல் அலைகள் 3 மீற்றர் வரை எழும்பக்கூடும் என்பதால் கடற்றொழிலாளர்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இடியுடன் கூடிய மழை பெய்யும் போது பொதுமக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். இந்த முக்கிய வானிலை அறிக்கை குறித்த முழுமையான விபரங்களை எமது யாழ்ப்பாணப் பேச்சுத் தமிழ் செய்தித்தொகுப்பில் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
உடனுக்குடன் செய்திகளை முதலில் தமிழில் நாங்கள் தான் கொடுக்கிறோம், எமது Tubetamil 24X7 பக்கத்தை மறக்காமல் பின்தொடருங்கள்! செய்திகள் தொடர்பான உங்கள் பெறுமதிமிக்க கருத்துக்களைக் கீழே கமெண்டில் பதிவு செய்யுங்கள்.