Namathu FM

Namathu FM Broadcasting & media production Corporation. 24X7 Tamil Online Radio station.

06/06/2025
24/12/2024

நமது சொந்தங்கள் அனைவருக்கும் இனிய நத்தார் நல் வாழ்த்துகள் 🎉🎅🧑‍🎄🤶🎄🎉

பிரான்சில் கேணல் பரிதியின் 12 ம் ஆண்டில் அஞ்சல் தலை வெளியீடு. தமிழ் பண்பாட்டு வலையத்தின் வரலாற்று நிகழ்வு: கேணல் பரிதி (...
01/12/2024

பிரான்சில் கேணல் பரிதியின் 12 ம் ஆண்டில் அஞ்சல் தலை வெளியீடு.

தமிழ் பண்பாட்டு வலையத்தின் வரலாற்று நிகழ்வு: கேணல் பரிதி (நடராஜா மதீந்திரனின் ) நினைவாக அஞ்சல் முத்திரை வெளியீடு

தமிழ் பண்பாட்டு வலையம் பிரான்ஸ் மற்றும் பிரான்சின் அஞ்சல் சேவையான La Poste உடன் இணைந்து, 2012ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் நாள், பாரிஸில் சிறிலங்கா அரசின் கைக்கூலிகளால் படுகொலை செய்யப்பட்ட பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பொறுப்பாளர், கேணல் பரிதி என்று அழைக்கப்பட்ட நடராஜா மதீந்திரன் அவர்களின் நினைவாக ஒரு அஞ்சல் முத்திரை வெளியீட்டு நிகழ்வை நடாத்தியது.

இந்த நிகழ்வு, 2024ஆம் ஆண்டு டிசம்பர் 1ஆம் தேதி Bobigny நகரசபையின் Salon d’honneur de l’Hôtel de Ville மண்டபத்தில், Bobigny நகரபிதாவும் Seine-Saint-Denis மாவட்டசபை உறுப்பினருமான திரு. Abdel Sadi அவர்களால் உத்தியோகபூர்வமாக வெளியீடு செய்யப்பட்டது.

நிகழ்வின் சிறப்பு விருந்தினர்கள்:
நிகழ்வில் Bondy நகரசபை உறுப்பினரும் Seine-Saint-Denis மாவட்டசபை உறுப்பினருமான திருமதி Oldhynn Pierre, Seine-Saint-Denis மாவட்டத்தின் கௌரவ பாராளுமன்ற உறுப்பினரான திருமதி Raquel Garrido, மற்றும் Seine-Saint-Denis மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான திரு Alexis Corbière ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
நடராஜா மதீந்திரனின் படுகொலைக்கு நீதி பெற்றுத்தர தாங்கள் துணை நிற்பதாகவும், இந்த நினைவுச்சின்னம் தமிழரின் தியாகத்திற்கான முக்கியமான அடையாளமாக இருக்குமென்றும் அவர்கள் உறுதியாகக் கூறினர்.

முத்திரை வெளியீடு:
நடராஜா மதீந்திரனின் தாயார் தருமதி நடராஜா கமலாம்பிகை மற்றும் Bobigny நகரபிதா திரு. Abdel Sadi இணைந்து முத்திரையை வெளியிட்டனர். முதல் முத்திரையை பிரான்ஸ் தமிழர் வர்த்தக சங்கத்தின் தலைவர் திரு. இரா. சிறிதரன் பெற்றுக்கொண்டார்.

நினைவு நிகழ்வின் சிறப்பு:
இந்த அஞ்சல் முத்திரை வெளியீடு ஒரு சாதாரண நினைவு முத்திரை அல்ல. இது ஈழத்தமிழ் சமூகத்தின் விடுதலைக்காக தன்னலமின்றி போராடிய ஒரு வீரத்தின் அர்ப்பணிப்பு, தியாகம் மற்றும் நீதி பெற வேண்டிய போராட்டத்தின் அடையாளமாக அமைந்தது.

இந்த நிகழ்வு, ஈழத்தமிழர்களின் உரிமை மற்றும் இனநீதி எதிர்ப்பில் அவர்களின் தார்மீகமான நிலைப்பாட்டை முத்திரை செய்யும் ஒரு முக்கியக் கணமாகும்.


•• தமிழ் பண்பாட்டு வலையம், பிரான்ஸ்

சுவிசிலுமா இப்படி!!!
06/03/2024

சுவிசிலுமா இப்படி!!!

HomeGarden Tour and Fruits Garden # #சுவிஸ்லாந்து நாட்டின் வீட்டுத்தோட்டம் # vlog garden vlog in tamil # TV # ...

எல்லா வேண்டுதல்களும் வலுவற்றுப்போக சாந்தன் அண்ணா  தாயின் முகம் பாராமலே  நிரந்தரமாய் உறங்கிவிட்டார் .  அதிகாரம் எதை நினைத...
28/02/2024

எல்லா வேண்டுதல்களும் வலுவற்றுப்போக சாந்தன் அண்ணா தாயின் முகம் பாராமலே நிரந்தரமாய் உறங்கிவிட்டார் . அதிகாரம் எதை நினைத்ததோ அதை சிறப்பாக செய்து முடித்தது . உரிமையற்ற தமிழினம் நாம் என்று மீண்டும் மீண்டும் துயர்படிந்த வரலாற்றை எழுதிப் போகின்றது இந்த காலை 1988 ம் ஆண்டு எம்மக்களை கொன்றும் சித்திரவதை செய்த ராஜீவ்காந்தி..கொலை வழக்கில் சிறைவாசம் அனுபவித்த சாந்தன் 28-02-2024 காலமானார் விரைவில் தனது தாயாரை சந்திப்பார் என நாமெல்லாம் எதிர்பார்த்திருந்த சாந்தன் அவர்கள் இயற்கை எய்தியுள்ளதாக தமிழக செய்திகள் தெரியப்படுத்தியுள்ளன. கல்லீரல் பாதிப்பால் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சாந்தன் இன்று காலை காலமானார். நீண்ட சிறைவாசம், வலிகள் வேதனைகள் கடந்து விடுதலையாகியும் நாடு திரும்ப முடியாத முடக்கம், அதற்கான போராட்டம் என நீடித்த சாந்தனின் வாழ்வு நோயால் முடிந்து போனது. தன் மகனின் வருகைக்காக இறைநம்பிக்கையோடும் மனநம்பிக்கையோடும் காத்திருந்த அவரது தாயாருக்கு எவ்வாறு ஆறுதல் கூறுவதென்றே தெரியவில்லை. சாந்தனின் தாயார், சகோதரர், சகோதரிகள் உள்ளிட்ட குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்வதோடு, அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம்..

13ம் நாளாக 27/02/2024காலை கொல்மார் நகரதிலிருந்து அகவணக்கத்தோடு  ஆரம்பித்த மனிதநேய ஈருருளிப்பயணம்இன்று  பிரான்சில் வித்தன...
27/02/2024

13ம் நாளாக 27/02/2024காலை கொல்மார் நகரதிலிருந்து அகவணக்கத்தோடு ஆரம்பித்த மனிதநேய ஈருருளிப்பயணம்
இன்று பிரான்சில் வித்தனைம், கிங்கின்சம்,இல்சாக்,முலூஸ் மாநகர முதல்வர்களை சந்தித்து தனது இலக்கு நோக்கி பயணிக்கின்றது. வித்தனைம் மாநகர சபையினர் அறவழிப்போராளிகளை சுடுபாணம், பழச்சாறு கொடுத்து மகிழ்ச்சியாக வரவேற்று காலை உணவு கொடுத்து எமது அறவழிப் போராட்டத்திற்கு வாழ்த்து தெரிவித்து,எமது அறவழிப் போராட்டத்தின் இலக்கு பற்றி மாநகர முதல்வருடனான கலந்துரையாடல் நடைபெற்றது, இதில் சிறிலங்கா சிங்கள பெளத்த இனவாத அரசால் திட்டமிட்டு நடந்தப்பட்ட தமிழினப் படுகொலைகள் பற்றியும். தற்போது தமிழீழத்தில் திட்டமிட்டு நடத்தப்பட்டுக் கொண்டிருக்கும் தமிழின அழிப்பு பற்றியும் ஆதாரங்களுடன் எடுத்துரைக்கப்பட்டது. தமிழர்களுடைய நியாயமான கோரிக்கை அடங்கிய மனுவைக் கையளித்து சந்திப்புகளை மேற்கொண்டு பிரான்சு அரசு தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கையை நிறைவேற்ற ஆவண செய்ய வேண்டுமென வேண்டுகோள் விடப்பட்டது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அவையிலும் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையிலும் சம நேரத்தில் இடம் வகிக்கும் நாடுகளில் பிரான்சு நாடும் மிக முக்கியமானது. எனவே பிரான்சில் வாழும் மக்களின் சக்தியோடும் ஊடகங்களின் முக்கியத்துவத்தோடும் பிரான்சு நாட்டு மக்கள் தமிழர்களின் நியாயமான கோரிக்கைக்கு பிரான்சு நாட்டினைச் செவிசாய்க்க வைக்க வேண்டியது காலத்தின் தேவையாகும்.
அறவழி ஈருருளிப் பயணத்தின் மூலம் வலுவான அரசியற் செய்தியினை நகரசபையில் தெரிவித்தோம் எமது அறவழிப் போராட்டத்தை பாராட்டி மாநகர சபையின் இலச்சினை பதித்த நினைவுப் பரிசுகள் அறவழிப் போராளிகளுக்கு வழங்கி வாழ்த்தி வழியனுப்பி வைத்தனர்.
முலூஸ் முதல்வர் அவர்களும் மனித நேய செயற்பாட்டாளர்களை இன்முகத்தோடு வரவேற்றது மட்டுமல்லாமல் பன்னெடுந்தூரம் வலி சுமந்து வந்த எமக்கு சுடுபாணம் தந்து எமது நியாயமான கோரிக்கைகளினை தாம் வெளி நாட்டு வெளிவிவகார அமைச்சிடமும் பிரான்சு அரச அதிபரிடமும் சமர்ப்பிப்பதாகவும் உறுதி மொழி தந்து ஊக்குவித்தனர். நகரசபை முதல்வர்கள் தம் முகநூல் பக்கங்களிலும் தமிழின அழிப்பிற்கு நீதி கேட்கும் மனித நேய ஈருருளிப்பயணம் சார்ந்த பதிவுகளை பதிவுசெய்து தம் ஆதரவினைத் தெரிவித்தனர்.
எழுச்சிகரமாக இலக்கு நோக்கிப் பயணித்துக் கொண்டு இருக்கும் அறவழிப் போராட்டம். எதிர் வரும் திங்கட்கிழமை 04/03/2024 நாள் அன்று 14 மணிக்கு ஐ.நா முன்றலில் ஈகைப்பேரொளி முருகதாசன் திடலில் தமிழீழ மக்களின் நீதிக்காகவும் விடுதலைக்கும் நடக்க இருக்கும் கவனயீர்ப்பு போராட்டத்தில் இணைந்து கொள்ள இருக்கின்றது. எனவே அனைத்து மக்களும் உங்கள் வரலாற்றுக் கடமையினை ஆற்ற வாருங்கள்.

”மனிதர்களின் இருப்பைவிட மனிதர்களின் செயற்பாடே போராட்ட வரலாற்றின் சக்கரத்தைச் சுழற்றுகின்றது"
- தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன்”

«தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம்»

ஈழத்தில் 1908களில் தமிழர்களின்கலாச்சார விழுமியங்களை குவியப்படுத்தி வெளி வந்த அஞ்சல் அட்டைகளில் ஒரு சில ..!
06/02/2024

ஈழத்தில் 1908களில் தமிழர்களின்
கலாச்சார விழுமியங்களை குவியப்படுத்தி
வெளி வந்த அஞ்சல் அட்டைகளில்
ஒரு சில ..!

12/01/2024

கிழக்குப் பெருநிலப்பரப்பான திருகோணமலையில் 1008 பொங்கல் பானைகளுடன் கொண்டாடப்பட்ட பொங்கல் விழா!

இலங்கை வரலாற்றில் 1500
நாட்டியக் கலைஞர்களுடன், 500 கோலங்களுடன் பொங்கலை வரவேற்கும் முகமாக மாபெரும் பொங்கல் விழா திருகோணமலை மகேசர் திறந்தவெளி விளையாட்டரங்கில் கடந்த (08/01/2023) திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது . இத் தகவல் ஆனது ஈழத்தில் தமிழர்கள் பாதுகாப்பாகவும் விடுதலையுடன் தங்கள் கலாச்சார விழுமியங்களை போற்றி வாழ எந்த தடைகளும் இல்லை என்பதை எடுத்துக் கூறுகிறது. இன அழிப்பின் வடு அகற்றல். அதி உச்சமான காய் நகர்த்தல்.. சீறிலங்கா அரசு.

2024ம் ஆண்டு புத்தாண்டை முதலாவதாக நியூசிலாந்து கொண்டாடியது!
31/12/2023

2024ம் ஆண்டு புத்தாண்டை முதலாவதாக நியூசிலாந்து கொண்டாடியது!

மிக நல்ல மனிதர்தமிழீழத் தேசியத் தலைவர் மீது பற்று கொண்டவர்.அதனாலேயே தன் மகனுக்கு அவர் பெயரை சூட்டினார்.🙏🙏🙏ஆழ்ந்த இரங்கல்...
28/12/2023

மிக நல்ல மனிதர்
தமிழீழத் தேசியத் தலைவர் மீது பற்று கொண்டவர்.
அதனாலேயே தன் மகனுக்கு அவர் பெயரை சூட்டினார்.
🙏🙏🙏ஆழ்ந்த இரங்கல் 🙏🙏🙏 சென்று வாருங்கள் விஜயகாந்த்...

07/08/2023

Address


Alerts

Be the first to know and let us send you an email when Namathu FM posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Namathu FM:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share

www.Namathufm.com

இணைய வானொலி கேட்க இங்கே அழுத்தவும்: http://station.voscast.com/5e91cb97c59b7/

உலகத் தமிழர்களுக்கு ஐரோப்பிய மண்ணில் இருந்து இணையம் ஊடாக உண்மைச் செய்திகளை நாம் வழங்கி வருகின்றோம். அத்துடன் இணைய வானொலியாகவும் வலம் வருகின்றோம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.