துளி வானொலி

துளி வானொலி "தமிழ்போற்றும் நல்லுலகில் ஒருதுளி நமது துளிவானொலி"
“தமிழே எங்கள் முகவரி"
www.thulivaanoli.com
(3)

 #குறள்குறள்களின் பொருள்மயங்குபுணர்ச்சி.
30/12/2025

#குறள்
குறள்களின் பொருள்மயங்குபுணர்ச்சி.

குறள் - ௫௱௮௰௧ (அச்சில் உள்ளவாறு). “ஒற்று முரைசான்ற நூலு மிவையிரண்டுந் தெற்றென்க மன்னவன் கண்.” ஒற்றும

“விரிக்கும் வலையில் மாட்டும் மீன்கள்”மீனைப்பிடிக்க எண்ணுகிறோம்.வலையைத்தேடிச்செல்கிறோம்.வலையை எடுக்கிறோம்.கடலுக்குச்செல்க...
27/12/2025

“விரிக்கும் வலையில் மாட்டும் மீன்கள்”

மீனைப்பிடிக்க எண்ணுகிறோம்.
வலையைத்தேடிச்செல்கிறோம்.
வலையை எடுக்கிறோம்.
கடலுக்குச்செல்கிறோம்.
ஏதுவான இடத்தைத்தேர்ந்தெடுத்து அங்கு வந்து நிற்கிறோம்.
வீசுவதற்கு முன் வலையைச்சரிபார்க்கிறோம்.
பின்னர் வலையை வீசுகிறோம்.
மெதுவாக அதை இழுக்கிறோம்.
வலையைத்தூக்கிப்பார்க்கிறோம்.
அவ்வலையை மீண்டும் எடுத்துச்சென்று உரியவிடத்தில் வைக்கும்வரை,
எமது கை கால்கள் பலமுறை அதில் சிக்கிக்கொண்டேயிருந்திருக்கும்.
ஆனால், அதைப்பெரிதாக நாம் உணர்ந்திருக்க வாய்ப்பில்லை. ஏனெனில் , எமது பார்வை,தேவை வலையில்லை; மீனாகத்தான் உள்ளது.

“இதில்வருகின்ற அனைத்துச்செயல்களையும் நாம் மீனுக்காகச்செய்கிறோம்” என்பதை அம்மீன் அறிந்திருக்க வாய்ப்பில்லை. அது அந்நொடியில் தனக்கான வாழ்க்கையை தான் வாழ்ந்துகொண்டிருக்கும்.

எமது வாழ்க்கையிலும் இதுவே நடக்கிறது.

“நாம் விரிக்க நினைக்கும் வலையில்
நாமே இடறிவிழுகிறோம்” என்பதை
எப்போது உணரத்தொடங்குகிறோமோ,
அப்போதுதான் செயலொன்றுக்காக நாம் செலவிட்ட நேரத்தின் பெறுமதியையும் எம்மால் உணரமுடியும்.

ஒருவரைப்போற்றுவதற்காக ஒருதுளி நேரத்தை
நாம் செலவிட மறுக்கிறோம். ஆனால் ஒருவரை வீழ்த்துவதற்காக பல மணிநேரங்களை
எளிதாகச்செலவுசெய்கிறோம்.

“அச்செலவில் அகப்படுவது எமது வாழ்க்கையும்தான்” என்பதை காலத்திற்குள் உணர்ந்தால் நலம்.

நன்றி.
வாழ்க தமிழ்.

#கதை #தமிழ் #உண்மை #நிலை #மொழி #எழுத்து #தமிழன் #தமிழ் #தேவை #அறிவு #தூய்மை #அடையாளம் #அம்மா #அன்பு

27/12/2025

பெரியம்மா எழுதிய இறைப்பாடலை அம்மா பாடியபோது எடுத்தது. ஒருவர்கொருவர் துணையாக ஒன்றாகவே விண்ணுலகம் சென்றனர். #அம்மா #தமிழன் #அடையாளம் # #தூய்மை #தேவை #அன்பு #உண்மை #நிலை #தமிழ் #பாடல்

குறள்களின் பொருள்மயங்குபுணர்ச்சி.
26/12/2025

குறள்களின் பொருள்மயங்குபுணர்ச்சி.

குறள் - ௫௱௭௰௧ (அச்சில் உள்ளவாறு). “கண்ணோட்ட மென்னுங் கழிபெருங் காரிகை யுண்மையா னுண்டிவ் வுலகு.” கண்ண

“காதல்”காதலெனும் சொல்லை ஒரு மாந்தவுணர்வாக மட்டும் பார்க்கமுடியாது. அது உயிரின் இயல்பு, அண்டவெளியின் ஒழுங்கு, ஒருயிர் இன்...
26/12/2025

“காதல்”

காதலெனும் சொல்லை ஒரு மாந்தவுணர்வாக மட்டும் பார்க்கமுடியாது. அது உயிரின் இயல்பு, அண்டவெளியின் ஒழுங்கு, ஒருயிர் இன்னொருயிரின் இருப்பை அழிக்காமல் காக்கும் உந்துதல். அது சொல் தேடாது; வடிவம் நாடாது; இனமும் மொழியும் கேட்காது.

மாந்தரிடம் காதல் உணர்வாக வெளிப்படும்.
அம்மா குழந்தையைத்தழுவுவது,
இருவர் ஒருவருக்கொருவர் தங்களை ஒப்படைப்பது,ஈகம், பொறுமை, ஏக்கம்
இவையே அதற்கான மாந்தமொழிகள்.

மாந்தரைத்தாண்டினால்
பறவை குஞ்சுக்கு இறைதேடிப்போவது காதலே. மாடு கன்றைவிட்டு விலகமறுப்பது காதலே. நாய் தன்னை வளர்தவருக்காக இறந்த பின்பும் காத்திருப்பது காதலே.

மரங்களிலும் காதலுண்டு,
வேர்கள் மண்ணையணைத்து நீரைப்பகிர்வது,
மரங்கள் ஒன்றுக்கொன்று நிழல் கொடுப்பது,
மலர் தேனீயை அழைத்து இனத்தைத்தொடரச்செய்வது
இவையனைத்தும் உயிர்த்தொடர்ச்சிக்கான அமைதியான காதலே.

ஆறுகள் நிலத்தைச்சிதைக்காமல் செழிக்கச்செய்வதும்,கதிரோன் வேறுபாடின்றி ஒளி வழங்குவதும், நிலவு கதிரவினிடம் ஒளியைப்பெற்று இரவை நிறைப்பதுவும்,
மண் இறந்ததை மடியிலேற்று புதியதை முளைக்கச்செய்வதும் காதலே.

காதல் என்பது ‘நான்’ என்பதிலிருந்து ‘நாம்’ என்பதற்கான செல்வு.
அது உரிமையன்று;அதுவொரு பொறுப்பு.
அது விருப்பன்று ; அது ஓரருள்.
அது பிடித்துக்கொள்வதன்று; வாழவிடுதல்.

காதலிருக்குமிடத்தில் உயிர்நிலைக்கும்.
காதலில்லாதவிடத்தில் உயிரிருந்தாலும் பொருளிருப்பதில்லை.

நேர்மையாகச்சொல்வதாயின்
காதல் என்பது “உயிரின் அறம்”.

நன்றி.
வாழ்க தமிழ்.

#காதல் #தூய்மை #தமிழன் #தமிழ் #அடையாளம் #தேவை #அன்பு #உண்மை #நிலை #மொழி

முன்னொரு காலத்தில் ,அடுத்தவர்க்கு உணவளிப்பது , இல்லாதோர்க்கு கொடுத்துதவுவது , ஏழையெளியோர்க்கு பரிசுகள் வழங்குவது , கல்வி...
26/12/2025

முன்னொரு காலத்தில் ,
அடுத்தவர்க்கு உணவளிப்பது , இல்லாதோர்க்கு கொடுத்துதவுவது , ஏழையெளியோர்க்கு பரிசுகள் வழங்குவது , கல்விக்காக நன்கொடையளிப்பது , நற்சொற்கள் கொண்டு கருத்துப்பரிமாற்றம் செய்வது போன்ற செயல்களே பெரியளவில் கொண்டாடப்பட்டன.

இன்றைய காலத்தில்,
அவரவர் தன்னைத்தானே அழகுபடுத்தி அவற்றை மற்றோர் பார்வைக்குப்பகிர்வது , தனது பெற்றோர் , குழந்தை , கணவன் , மனைவி போன்ற நெருங்கிய உறவுகளுக்கு செய்பவற்றை பெருமையாகப்பகிர்வது , தனது வீட்டில் தாங்களே உண்பதற்கு விதவிதமாகச்செய்யும் சமையலை பகிர்வது , கெடுசொற்களை நயன்மை பயக்கும் என்னும் பெயரில் உதிர்ப்பது , தற்பெருமை பேசுவது , தானொரு வல்லோனென எழுத்து , வாய்மொழி போன்றவற்றைக்கொண்டு சூளுரைப்பது போன்ற செயல்களே பெரிதும் வரவேற்பைப்பெறுகின்றன.

கற்றோரை மதிப்பதில்லை ,உதவுபவரை பொருட்படுத்துவதில்லை , வல்லோரை வாழ்த்துவதில்லை , நல்லோர் வழியைப்பின்பற்றுவதில்லை , நற்சொற்களை செவிகொடுத்துக்கேட்பதில்லை போன்ற நிலையே இன்றையநிலை.

நல்வழி செல்லமறுப்போர் இளையோரே என்று தவறிக்கூட கூறிடமுடியாது . அவர்கள் பெரியோராக இருப்பதே இங்கு வருத்தத்தக்கதாகவிருக்கிறது .

ஒருகுழந்தையின் படிமுறைவளர்ச்சியில் பெருந்தாக்கத்தை விதைப்போர் பெற்றோரும் ஆசிரியரும் என்பதில் வியப்பொன்றுமில்லை . ஆனால் , இன்றைய குமுகாயக்கட்டமைப்பில் முதலில் நெறிப்படவேண்டியோரே பெற்றவராக இருப்பது அடுத்ததலைமுறையின் வீழ்ச்சியாகவோ அல்லது வேறொறு பண்பாட்டு நகர்ச்சியாகவோ தான் பார்க்கமுடிகிறது.

இங்கொரு அடிப்படையுண்மை உண்டு. ஒரு குழந்தைக்கு மாந்தநேயத்தை வளர்த்தெடுப்பதில் தவறினால் புண்பட்டு நிற்கப்போவது மாந்தவுயிர்கள் மட்டுமே. முதுமையை நேசிக்க மாந்தநேயம்தான் வேண்டும். வறுமையை போக்க மாந்தநேயம்தான் வேண்டும். மருத்துவங்கற்கவும் அதே மாந்தநேயந்தான் வேண்டும் . சிற்றுயிர்களை பாதுகாக்கவும் அதே மாந்தநேயந்தான் வேண்டும் .

முன்பெல்லாம் ‘தன்னலமுடையோர்’ என்று சொன்னால் வெட்கித்தலைகுனிந்துவிடுவோம் . இன்று தன்னலம் உள்ளோரைக்கொண்டாடப்பழகியுள்ளோம். ஆனாலும், இன்றைய இளையோர் பெரியோரைமீறி நல்வழியில் தங்களைத்தாங்கள் வடிவமைத்து நகர்வதையும் காணக்கூடியதாகவே இருக்கிறது .

அன்றுதொட்டு இன்றுவரை இயற்கை படைப்பின்வழி மாற்றமின்றி அப்படியே உள்ளது . அது அதன்பணியை நன்றே தொடர்கிறது . மாந்தவியற்பண்புகளின் தேவையற்றமாற்றம் எவ்வழியில் நின்றுநிலைத்திடப்போகிறது . நல்வழி இயல்பாகவே கிடைத்துவிடும் என்றே நம்புவோம் .

நன்றி.
வாழ்க தமிழ்.

துளி வானொலி நிலா #தமிழ் #தூய்மை #தமிழன் #அடையாளம் #அன்பு #பண்பாடு #உண்மை #தேவை #நன்மை #நிலை

https://youtu.be/N3mc0jDgu44?si=Z7LE1ogAG0W9Oblk
24/12/2025

https://youtu.be/N3mc0jDgu44?si=Z7LE1ogAG0W9Oblk

நற்றவம் செய்யாததை நற்றமிழ் செய்யுமென்று உணரப்பெற்ற நற்றவத்தவர்க்கு வணக்கம்.- அமிழ்தினும் இனியதை உண்டு அதனினு...

21/12/2025

குறள்நிகழ்வில் கலந்துகொண்ட இளங்குடும்பத்தின் அழகிய தமிழ்ப்பெயர்கள்.

குறள்களின் பொருள்மயங்குபுணர்ச்சி.
20/12/2025

குறள்களின் பொருள்மயங்குபுணர்ச்சி.

குறள் - ௫௱௬௧ (அச்சில் உள்ளவாறு). “தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தா லொத்தாங் கொறுப்பது வேந்து.”

19/12/2025

கிண்டியில் நடைபெறும் திருக்குறள் நிகழ்வில் குறளின் எளியபொருளை எளிதில் விளங்கிக்கொண்ட மாணவர். #திருக்குறள் #பண்பாடு #மொழி #தூய்மை #தமிழன் #அடையாளம் #தமிழர் #கல்வி #வாழ்க்கை அடியேன் சிவக்கொழுந்து

18/12/2025

கிண்டியில் தற்போது நடைபெற்றுவரும் தனித்தமிழிறைவழி திருக்குறள் நிகழ்வு.

#மொழி #தூய்மை #திருக்குறள் #தமிழன் #அடையாளம் #கல்வி #தமிழ் #வாழ்க்கை #தூய்மை #தமிழர் #பண்பாடு #வேள்வி

Adresse

Paris

Téléphone

+33605546867

Site Web

http://station.voscast.com/630b32afcc2ba/, http://www.thulivaanoli.com/, https://ap

Notifications

Soyez le premier à savoir et laissez-nous vous envoyer un courriel lorsque துளி வானொலி publie des nouvelles et des promotions. Votre adresse e-mail ne sera pas utilisée à d'autres fins, et vous pouvez vous désabonner à tout moment.

Contacter L'entreprise

Envoyer un message à துளி வானொலி:

Partager