Mission Tamil

Mission Tamil Discover the latest news, entertainment, and culture from the Tamil community on MissionTamil. Stay informed and connected with us today!

08/11/2025

சிறார்களுக்கு சினிமாவும் வலைத்தள மோகமும் சரியானதா?
சிந்திக்கவேண்டியவர்கள் யார்?

08/11/2025

paristamil

2015 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின்போது, அப்போதைய ஜனாதிபதி வேட்பாளர் மஹிந்த இராஜபக்சவின் அரசியல் அலுவலகங்களுக்க...
08/11/2025

2015 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின்போது, அப்போதைய ஜனாதிபதி வேட்பாளர் மஹிந்த இராஜபக்சவின் அரசியல் அலுவலகங்களுக்கு விநியோகிப்பதற்காக சதொச நிறுவனம் ஊடாக 14,000 கேரம் பலகைகளையும், 11,000 தாம் பலகைகளையும் இறக்குமதி செய்ததன் மூலம் அரசாங்கத்துக்கு ரூபாய் 53 மில்லியன் வரையான நஷ்டத்தை ஏற்படுத்திய வழக்குத் தொடர்பாகச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர்களான மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் நளின் பெர்னாண்டோ ஆகியோர், அந்தத் தண்டனைக்கு எதிராக மேன்முறையீடு செய்துள்ளதனால், பிணையில் விடுவிக்குமாறு கோரி தாக்கல் செய்திருந்த பிணை மனுக்களைக் கொழும்பு நிரந்தர மூவர் அடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் நிராகரித்துள்ளது.

தீர்ப்பைப் பிரகடனம் செய்த நீதிபதிகள் குழாம் குறிப்பிட்டதாவது:

நீதிமன்றத்தால் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட ஒரு பிரதிவாதி, மேன்முறையீட்டின் கீழ் பிணை கோரும்போது, விசேடமான காரணங்களை முன்வைப்பது அத்தியாவசியமானது.

ஆனால், இந்த இரண்டு பிரதிவாதிகளும் முன்வைத்த காரணங்கள் பிணை வழங்குவதற்குப் போதுமான விசேடமான காரணங்கள் அல்ல என்பதால், அவர்களது பிணை மனுக்கள் நிராகரிக்கப்படுகின்றன என்று நீதிபதிகள் குழாம் தமது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.

சம்பத் மனம்பேரிக்கு சொந்தமான வாகனங்கள் பறிமுதல்.பொலிஸ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள சம்பத் மனம்பேரிக்கு சொந்தமானது ...
08/11/2025

சம்பத் மனம்பேரிக்கு சொந்தமான வாகனங்கள் பறிமுதல்.

பொலிஸ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள சம்பத் மனம்பேரிக்கு சொந்தமானது என கருதப்படும் பேருந்து ஒன்றும், கார் ஒன்றும் மற்றும் ஒரு கெப் ரக வாகனத்தையும் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

மேல் மாகாண வடக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளால், சம்பத் மனம்பேரியின் மித்தெனிய பகுதியில் உள்ள வீடு சோதனை செய்யப்பட்ட போதே, ​​குறிப்பிட்ட வாகனங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மித்தெனிய, தலாவ பகுதியில் ஐஸ் ரக போதைப்பொருளை உற்பத்தி செய்யப் பயன்படுத்தப்படும் இரசாயனப் பொருட்கள் அடங்கிய இரண்டு கொள்கலன்களை மறைத்து வைத்திருந்தமை தொடர்பான சம்பவத்தில் சம்பத் மனம்பேரி அண்மையில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

பின்னர், அவரை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரிப்பதற்காக, கொழும்பு வடக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

பாரவூர்தி மோதி சிறுவன் உயிரிழப்பு.களுத்துறை தெற்கு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காலி – கொழும்பு பிரதான வீதியில், வெட்டுமகட சந...
08/11/2025

பாரவூர்தி மோதி சிறுவன் உயிரிழப்பு.

களுத்துறை தெற்கு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காலி – கொழும்பு பிரதான வீதியில், வெட்டுமகட சந்திக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளார்.

காலியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பாரவூர்தி ஒன்று, வீதியின் குறுக்கே துவிச்சக்கர வண்டி ஓட்டிச் சென்ற சிறுவன் மீது மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

நேற்று (07) இடம்பெற்ற இந்த விபத்தில் பலத்த காயமடைந்த சிறுவன், களுத்துறை – நாகொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் கட்டுகுருந்த பகுதியைச் சேர்ந்த 11 வயதுடைய சிறுவன் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சடலம் களுத்துறை நாகொட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

விபத்துடன் தொடர்புடைய பாரவூர்தியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

களுத்துறை தெற்கு பொலிஸார், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

காலி,சீனிகம பகுதியில் பெருமளவிலான ஹெரோயின் போதைப்பொருளுடன் மூன்று சந்தேக நபர்கள் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் இன்று (...
08/11/2025

காலி,சீனிகம பகுதியில் பெருமளவிலான ஹெரோயின் போதைப்பொருளுடன் மூன்று சந்தேக நபர்கள் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் இன்று (08) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து சுமார் 3 கிலோகிராம் ஹெராயின் கைப்பற்றப்பட்டுள்ளதாகப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் போதைப்பொருளை நுகர்ந்து கொண்டிருந்த மூன்று இளைஞர்களை, போதைப்பொருளை நுகர்வதற்காக பயன்படுத்திய மரு...
08/11/2025

யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் போதைப்பொருளை நுகர்ந்து கொண்டிருந்த மூன்று இளைஞர்களை, போதைப்பொருளை நுகர்வதற்காக பயன்படுத்திய மருத்துவ ஊசி, லைட்டர் , மேசைக்கரண்டி ஹெரோயின் உள்ளிட்ட பொருட்களுடன் பொலிஸார் நேற்று (07) கைது செய்துள்ளனர்.

யாழ் நகரை அண்டிய பகுதியில் இளைஞர்கள் ஹெரோயின் போதைப்பொருளை நுகர்ந்து கொண்டிருப்பதாகப் பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் , சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் அவ்விடத்தை சுற்றி வளைத்து , போதைப்பொருளை நுகர்ந்துக்கொண்டிருந்த மூன்று இளைஞர்களையும் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து ஒரு தொகை ஹெரோயின் போதைப்பொருள் , மருத்துவ ஊசி, லைட்டர் , மேசைக்கரண்டி உள்ளிட்டவற்றையும் பொலீசார் மீட்டுள்ளனர்.

அதனை அடுத்து கைது செய்யப்பட்டவர்களை யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுக்கும் பொலிஸார் , நல்லூர் மற்றும் அரியாலை ஆகிய பகுதிகளை சேர்ந்த 32 வயதான இருவரும் , 30 வயதான ஒருவரையுமே கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூட்டு சந்தேக நபர்கள் இருவர் யாழில் கைது.கொட்டாஞ்சேனையில் நேற்று இரவு (07) துப்பாக்கிச் சூடு ந...
08/11/2025

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூட்டு சந்தேக நபர்கள் இருவர் யாழில் கைது.

கொட்டாஞ்சேனையில் நேற்று இரவு (07) துப்பாக்கிச் சூடு நடத்தியதன் பின்னணியில் சந்தேக நபர்களான இருவர் இன்று (08) யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

மானிப்பாய் பகுதியில் இருவரும் தங்கியிருந்த வேளை, யாழ்ப்பாணம் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் வழிகாட்டலின் கீழ், மானிப்பாய் பொலிஸார் குறித்த சந்தேக நபர்கள் இருவரையும் கைது செய்துள்ளனர்.

கொட்டாஞ்சேனைப் பகுதியைச் சேர்ந்த ஆண் ஒருவரும் பெண் ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் மானிப்பாய் பொலிஸ் நிலைய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களை பொறுப்பெடுப்பதற்கு கொட்டாஞ்சேனை பொலிஸார் செல்வதாக தெரிவிக்கப்படுகிறது.

மாகாண சபைத் ”தேர்தல் பந்து” எதிர்க்கட்சிகளிடம் வீசிய அநுர------------- -* 10 பில்லியன் ஒதுக்கி இந்தியாவுக்கு கணக்குக் கா...
08/11/2025

மாகாண சபைத் ”தேர்தல் பந்து” எதிர்க்கட்சிகளிடம் வீசிய அநுர
------------- -
* 10 பில்லியன் ஒதுக்கி இந்தியாவுக்கு கணக்குக் காட்டியுள்ளார்.

* ஜேஆர் காலத்தில் இருந்து மாறி மாறி வீசப்படும் பந்து

* அனைத்துக் கட்சிகளின் கருத்தை பெறுதல் என்று கூறி மேலும் சிக்கலாக்கும் உத்தி
------ -
அரசியல் தீர்வுக்கான 13 ஆவது திருத்தச் சட்டத்தை தமிழர்கள் நிராகரித்தமை என்பது வேறு... ஆனால் அதனை அமுல்படுத்த வேண்டிய பொறுப்பு இலங்கை அரசுக்கு உரியது.

ஏனெனில், அது இலங்கை நாடாளுமன்றத்தில் 1988 இல் அறுதிப் பொரும்பான்மை வாக்குகளினால் அங்கீகரிப்பட்ட ஒரு சட்டம்.

அதனை நடைமுறைப்படுத்த யாருடைய ஒத்துழைப்பும் தேவையில்லை. மாகாண சபைத் தேர்தல்களை நடத்தத் தேவையான பிரேரணை ஒன்றை சமர்ப்பித்து நிறைவேற்ற அநுர அரசாங்கத்திடம் 159 என்ற அறுதிப் பெரும்பான்மை நாடாளுமன்றத்தில் உண்டு.

தேர்தல் முறைமையைக் கூட மாற்றலாம்.

ஆனால் --

வரவு செலவுத் திட்ட உரை நிகழ்த்தியபோது, எதிர்க்கட்சிகளிடம் அப் பொறுப்பை கையளித்தன் பின்னணி என்ன?

தேர்தல்களில், குறிப்பாக ஜனாதிபதித் தேர்தலில், தமிழர்களின் ஆதரவை பெறவரும்போது, இனப் பிரச்சினைக்கான தீர்வுகள் பற்றி, சிங்கள அரசியல் தலைவர்கள், தமிழர்களிடம் வாக்குறுதிகளை அள்ளி வழங்குவர்.

ஆனால், ஆட்சிக்கு வந்ததும் ----

A) நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகளின் ஒத்துழைப்பு அவசியம் என்பர்...

😎 தமிழ்த் தேசியக் கட்சிகளின் ஒத்துழைப்பு தேவை என்பர்...

C) சர்வகட்சி மாநாடு என்பர்...

D) மகாநாயக்கத் தேரர்களுடன் பேச வேண்டும் என்பர்.

இவ்வாறு ஏதேதோ சாக்குப் போக்குச் சொல்லி ”எல்லோருடைய கருத்துக்களையும் பெறுதல்” என்ற சந்தர்ப்பவாத ஜனநாயக முகத்தைக் காண்பித்து ”அரசியல் தீர்வுப் பந்து” பிரதான எதிர்க் கட்சிகளிடம் எறியப்பட்டு விடும்.

இப்படி பந்து எறியும் அரசியல் விளையாட்டு, ஜேஆர் 1980 இல் ஆரம்பித்த ”மாவட்ட அபிவிருத்தி சபை” என்ற அரைகுறை தீர்வு முறையில் இருந்து, 13 என்ற குறைப் பிரவசம் வரையும் நீட்சியடைந்துள்ளது.

இப் பின்புலத்தில், ஜேஆருக்கு சளைத்தவன் அல்ல என்பதை, அநுர இன்று நாடாளுமன்றத்தில் உறுதிப்படுத்தினார்...

குறிப்பாக ---

2017 ஆம் ஆண்டில் இருந்து நடத்தப்படாமல் உள்ள மாகாண சபைத் தேர்தல் செலவுக்கு 10 பில்லியன் ஒதுக்கியுள்ளதாக அறிவித்துள்ளார் அநுர.

ஆனால், தேர்தல் எப்போது என்பது பற்றி தன்னால் தீர்மானிக்க முடியாது என்று கூறி கைவிரித்து விட்டார்.

அத்தோடு பொருத்தமான தேர்தல் முறைமை ஒன்றை உருவாக்குமாறு எதிர்க்கட்சிகளின் தலையில் பந்தை எறிந்து விட்டுத் தப்பிவிட்டார் அநுர.

அதாவது ---

நாட்டைப் பிரிக்கும் 13 ஆவது திருத்தச் சட்டம் என்று 2009 இற்குப் பின்னர் குறிப்பாக 2017 ஆண்டில் இருந்து கூற ஆரம்பித்த சிங்கள அரசியல் பிரதிநிதிகள் சிலர், முடிந்தவரை 13 ஐ இரத்துச் செய்யவே விரும்புகின்றனர்.

ஆகவே --

அத்தகையை சிங்கள அரசியல் பிரதிநிதிகள் - பௌத்தகுருமார் ஆகியோரிடம் இருந்து தப்பிவிட்டார் அநுர.

ஆனால், எதிர்க்கட்சிகள் என்ன செய்யும்...? அநுர வீசிய அப் பந்தை எடுப்பார்களா? எடுக்க முடியுமா?

பொருத்தமான தேர்தல் முறையை உருவாக்க அறுதிப் பெரும்பான்மை அநுர அரசாங்கத்திடம் உண்டு என்று கூறி எதிர்க்கட்சிகள் தட்டிக் கழிக்கும்.

உண்மையும் அதுதானே!

ஆனாலும், அதற்கு அநுர என்ன சொல்வார்...?

1) தமிழ்தேசியக் கட்சிகள் ஒத்துழைக்கவில்லை என்பார்.

2) புதிய அரசியல் யாப்பு தாயாரிக்கப்படும்போது அரசியல் தீர்வுக்கு முன்னுரிமை என்பார்.

3) 2015 இல் ரணில் - மைத்திரி அரசாங்கம் தயாரித்த 'ஏக்கிய இராஜ்ய ' என்ற யாப்பு வரைபை கையில் எடுப்பார்.

4) நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி முறையை ஒழிக்க வேண்டும் என்பார்...

இவ்வாறு விரிவுபடுத்தி சிங்கள பௌத்த பேரினவாதிகளிடம் இருந்து அநுர தப்பித்துக் கொள்வார்...

இப்படியே கைமாறி, கைமாறி பந்து எறிந்து விளையாடுவது தானே சிங்கள அரசியல் தலைவர்களின் வரலாறு.

1948 இல் இலங்கை சுதந்திரமடைந்த நாள் முதல் இந்த அணுமுறை தானே இங்கு விஞ்சிக் கிடக்கிறது?

ஆனால் ---

ஜனாதிபதித் தேர்தலில், தமிழ் மக்களின் வாக்குகளை பெற பிரச்சாரம் செய்ய வரும்போது மாத்திரம் ----

------தீர்வு விவகாரத்தில் ”நாங்கள் அரசியல் பந்து எறிந்து விளையாடமாட்டோம்” என்று வாக்குறுதி வழங்குவார்களா?

1994 இல் நடந்த ஜனாதிபதித் தேர்தலில் சந்திரிகா வழங்கிய வாக்குறுதி என்ன? பின்னர் நடந்தது என்ன?

அன்று சமாதானத்துக்கான போர் என முழங்கினார் சந்திரிகா. அது இன்று செம்மணியில் வந்து நிற்கிறது...

2024 இல் நடைபெற்ற தேர்தலில் அநுர வழங்கிய வாக்குறுதி என்ன?

A) ”தமிழர்களின் பிரச்சினை எங்களின் பிரச்சினை”

😎 ”தமிழர்களின் பிரச்சினையை நாங்கள் கையில் எடுத்துள்ளோம்”

C) ”தென்பகுதியில் பாரிய மாற்றம் வரவுள்ளது. அந்த மாற்றத்துக்குள் தமிழர்களும் வர வேண்டும்”

இல்லையேல் தனிமைப்படுவீர்கள்” என்ற எச்சரிக்கை வேறு.

இப்படி வாக்குறுதிகள், அதேநேரம் மிரட்டல் தொனியிலும் உரையாற்றி, அநுர அளித்த உறுதிமொழிகள் இப்போது எங்கே?

மாகாண சபைத் தேர்தலை நடத்த பொருத்தமான தேர்தல் முறைமை ஒன்றை உருவாக்குங்கள் என்று எதிர்க்கட்சிகளிடம் கோரிக்கை விடுக்க வேண்டிய அவசியம் ஏன்?

159 ஆசனங்கள் உள்ள அரசாங்கம் மிக இலகுவாக பொருத்தமான தேர்தல் முறை ஒன்றை உருவாக்கலாமே? பதவியேற்று இன்று ஒரு வருடம் சென்று விட்டதே?

அதென்ன?---

தமிழர்களின் விவகாரங்கள் என்று மாத்திரம் வரும்போது, ஜனநாயக வழியில் எதிர்க்கட்சிகள் - பொது அமைப்புகள் - பௌத்த குருமார் ஆகியோரின் ஒத்துழைப்புகளை கோருவது?

சுனாமி பொதுக் கட்டமைப்பை உருவாக்கும் விடயத்தில் சந்திரிகா இப்படித்தானே செயற்பட்டார்!

ஆகவே

இவ்வாறு சுட்டிக்காட்டி எழுதுவதற்கு நிறைய உண்டு...

ஆனால்---

சில போலியான முற்போக்குத் தமிழர்கள் - போலியான இடதுசாரி தமிழர்கள் சிலருக்கு இவை புரியும். ஆனால் எழுதமாட்டார்கள்.

கம்யூனிஸ்ட் என்று மார் தட்டுகின்ற சில தமிழ்ப் பத்திரிகையாளர்களும் இப்படித்தான்...இப்படி எழுதாமல் தவிர்ப்பதுதான் இவர்கள் கூறுகின்ற “மாற்றுக் கருத்து”

அ.நிக்ஸன்-
பத்திரிகையாளர்-

எச்சரிக்கை! உங்கள் கொண்டாட்ட  பலூன்களில் பதுங்கியிருக்கும் பேராபத்து!வீட்டில் விசேஷமா? குழந்தையின் பிறந்தநாளா? உடனே ஒன்ல...
08/11/2025

எச்சரிக்கை! உங்கள் கொண்டாட்ட பலூன்களில் பதுங்கியிருக்கும் பேராபத்து!
வீட்டில் விசேஷமா? குழந்தையின் பிறந்தநாளா? உடனே ஒன்லைனில் கலர் கலராகப் பலூன்களுக்கு வாங்கும் கோரிக்கையைப் பதிவு செய்துவிடுவீர்கள் . ஆனால், நீங்கள் வாங்கும் அந்த அழகான பலூன்கள், கொடிய நோய்க்குக் காரணமாகலாம் என்று தெரியுமா?

ஆம், அமேசான் (Amazon) மற்றும் பிற ஒன்லைன் தளங்களில் விற்கப்பட்ட சில பிறந்தநாள் பலூன் பேக்குகள், புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய அபாயகரமான ரசாயனங்களைக் கொண்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பிரெஞ்சு நுகர்வோர் பாதுகாப்புத் தளமான 'Rappel Conso' இந்த அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.

இந்தக் கொண்டாட்ட பலூன்களில் "நைட்ரோசமைன்கள்" (Nitrosamines) எனப்படும் ரசாயனம், அனுமதிக்கப்பட்ட அளவைவிட மிக அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இந்த நைட்ரோசமைன்கள், தோலின் வழியாகவோ அல்லது வாய் வழியாகவோ உடலுக்குள் சென்றால் புற்றுநோயை ஏற்படுத்தும் சக்தி கொண்டவை.

நாம் செய்யும் மிகப்பெரிய தவறு, பலூன்களை வாயால் ஊதுவது. குழந்தைகள் அப்படி ஊதும்போதோ அல்லது பலூன்களுடன் விளையாடிவிட்டு அதே கையை வாயில் வைக்கும்போதோ, இந்த நச்சு ரசாயனம் நேரடியாக உடலுக்குள் சென்றுவிடும்.

Rappel Conso அதிகாரிகள் மூன்று குறிப்பிட்ட தயாரிப்புகளை உடனடியாகத் திரும்பப் பெற உத்தரவிட்டுள்ளனர். அவை அமேசான் தளத்தில் அதிகம் விற்பனையானவை:

Fakindiy பிராண்ட்: 100 மல்டி-கலர் (pastel) லேடெக்ஸ் பலூன்கள் (ASIN: B0DRS6XQGT)

Epokus பிராண்ட்: உள்ளே ஒளிர்கின்ற துகள் (confetti) கொண்ட பல வண்ண பலூன்கள் (ASIN: B0CY2FCK2X)

Luobito பிராண்ட்: 130 தங்க நிற லேடெக்ஸ் பலூன்கள் (ASIN: B0D12DG3Q6)

📢 நீங்கள் என்ன செய்ய வேண்டும்?
வாயால் ஊதாதீர்கள்: உங்களிடம் எந்த வகை லேடெக்ஸ் பலூன் இருந்தாலும், குறிப்பாக ஒன்லைனில் வாங்கியதாக இருந்தால், தயவுசெய்து அவற்றை வாயால் ஊத வேண்டாம். (பம்ப் பயன்படுத்தலாம், ஆனால் இந்தக் குறிப்பிட்ட தயாரிப்புகளைத் தொடவே வேண்டாம்).

நீங்கள் மேலே குறிப்பிட்ட பிராண்ட் பலூன்களை வாங்கியிருந்தால், அவற்றை உடனடியாகக் குழந்தைகளிடமிருந்து அகற்றி, பாதுகாப்பாக அப்புறப்படுத்திவிடுங்கள்

அடுத்த முறை கொண்டாட்டங்களுக்கு திட்டமிடும்போது, கொண்டாட்டப் பொருட்களின் பாதுகாப்பிலும் கொஞ்சம் கவனம் செலுத்துவது அவசியம்!
செய்தி சிவா சின்னப்பொடி

உங்கள் கண்களுக்கு கொஞ்சம் வேலை. 😀
08/11/2025

உங்கள் கண்களுக்கு கொஞ்சம் வேலை. 😀

08/11/2025

#புயல்

Adresse

Paris

Notifications

Soyez le premier à savoir et laissez-nous vous envoyer un courriel lorsque Mission Tamil publie des nouvelles et des promotions. Votre adresse e-mail ne sera pas utilisée à d'autres fins, et vous pouvez vous désabonner à tout moment.

Contacter L'entreprise

Envoyer un message à Mission Tamil:

Partager