Mission Tamil

Mission Tamil Discover the latest news, entertainment, and culture from the Tamil community on MissionTamil. Stay informed and connected with us today!

பிரித்தானியாவில் வேல்ஸ்இல் ஒரு இலங்கை பெண் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.வேல்ஸ் கார்டிஃப் நகரில் வசிக்கும் இலங்கை பெண் ஒருவ...
23/08/2025

பிரித்தானியாவில் வேல்ஸ்இல் ஒரு இலங்கை பெண் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

வேல்ஸ் கார்டிஃப் நகரில் வசிக்கும் இலங்கை பெண் ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டதாக தெற்கு வேல்ஸ் போலீசார் தெரிவித்தனர். இறந்த பெண் 32 வயதுடைய நிரோதா என அழைக்கப்படும்
தோனா நிரோதா கல்பானி நிவூன்ஹெல்ல என அடையாளம் காணப்பட்டுள்ளார், போலீசார் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கின்றனர்.

ஆகஸ்ட் 21 காலை 7:37 மணிக்கு அவசர சேவைகளுக்கு வந்த தொலைபேசி அழைப்பின் பேரில் ரிவர்சைடின் தெற்கு மோர்கன் பகுதிக்கு போலீசார் அழைக்கப்பட்டனர், அங்கு ஒரு பெண் படு காயங்களுடன் காணப்பட்டார். மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுவதற்கு முன்பு அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார் என்று போலீசார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் சந்தேகிக்கப்படும் 37 வயதுடைய மற்றொரு இலங்கையர் அருகிலுள்ள பகுதியில் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றவாளி தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்ட பகுதியைச் சுற்றியுள்ள சிசிடிவி காட்சிகள் அல்லது டேஷ்கேம் காட்சிகளை வழங்குமாறு போலீசார் பொதுமக்களிடம் கேட்டுக்கொள்கிறார்கள்

22/08/2025

யாழில் வீடொன்றின் வளவில் இருந்து இன்றைய தினம் வெள்ளிக்கிழமை பெருமளவான ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளது.
கொட்டடி பகுதியில் உள்ள வீடொன்றில் மலசல கூடத்திற்கு குழி வெட்டிய போது, சந்தேகத்திற்கு இடமான பொதி காணப்பட்டமையால், அது தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது.

பொலிஸார் வந்து பொதியினை பார்வையிட்ட பின்னர், அது தொடர்பில் யாழ்.நீதாவன் நீதிமன்று அறிவித்து, அகழ்வு பணிக்கு அனுமதி பெற்றனர்.

அந்நிலையில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை நீதவான் ஏ.ஏ. ஆனந்தராசா முன்னிலையில் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டு பொதிகள் மீட்கப்பட்ன.

குறித்த பொதிகளில் இருந்து ரி - 56 ரக துப்பாக்கிகள் 30 மற்றும் அவற்றுக்குரிய 5ஆயிரம் ரவைகள் மீட்கப்பட்டுள்ளன.

குறித்த ஆயுதங்கள் பொலிஸாரின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளன.

22/08/2025

நல்லூரானுக்கு சிறுமியின் அட்டகாசமான காவடி

22/08/2025

யாழ்ப்பாணத்தில் சைவப்பிரகாச பேரவையின் ஏற்பாட்டில் வல்லை கடல் நீர் ஏரி வலம் நடைபெறவுள்ளது.தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலயத்தின் கொடியேற்றத் திருவிழாவினை முன்னிட்டு நாளை 23ம் திகதி காலை 6மணிக்கு வல்லை ஆஞ்சநேயர் ஆலயத்தில் இருந்து பால், பன்னீர்,கலச ஊர்வலம் ஆரம்பமாகவுள்ளது.யாழ் ஊடக அமையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் குறித்த விடயம் தொடர்பில் ஏற்பாட்டாளர்கள் தெளிவுபடுத்தினர்.சந்நிதி முருகனை மனதிருத்தி வல்லை கடல் ஏரி வலம் வருவதால் நோய் நீக்கம், செல்வம், புத்திர பாக்கியம், துன்பங்கள் நீங்குதல் ஆகிய பலன்களை பெறலாம் என ஏற்பாட்டாளர்கள் மேலும் தெரிவித்தனர்.

https://youtu.be/0LBLYpegzIY?si=WoevgXCbrrJrDzSn
22/08/2025

https://youtu.be/0LBLYpegzIY?si=WoevgXCbrrJrDzSn

Tamil Mission is a channel dedicated to bringing you news, infotainment, cultural events, and social insights from a Tamil perspective.தமிழ் செய்திகள், பொழுத...

22/08/2025

யாரிந்த கலைஞர்? #நல்லூர் #யாழ் #ஈழம் #கலை

22/08/2025

#திருவெண்ணாமலை #சந்தியான் #யாழ்ப்பாணம்

https://www.youtube.com/live/aErQtWIEURE?si=j4r8ls0s1iIZBq-s
22/08/2025

https://www.youtube.com/live/aErQtWIEURE?si=j4r8ls0s1iIZBq-s

நல்லூர் கந்தசுவாமி கோயில் திருவிழா நேரலையாக #யாழ்ப்பாணம் #நல்லூர்முருகன் #நல்லூர்_முருகன்_ஆலயம் #ந....

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் துறை மாணவர்களால் தயாரிக்கப்பட்ட ஆவணப்படங்கள் நாளை வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.30 மணி...
21/08/2025

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் துறை மாணவர்களால் தயாரிக்கப்பட்ட ஆவணப்படங்கள் நாளை வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு பல்கலைக்கழக நூலகக் கேட்போர்கூடத்தில் திரையிடப்படவுள்ளன.

யுத்தத்தின்போது தங்கள் அன்புக்குரிய உறவுகளை இழந்தோரின் நினைவுகளை ஞாபகப்படுத்தும் ‘தடயம்’ அக்குபஞ்சர் வைத்தியமுறையின் சாதக பாதகத் தன்மைகளைகளைப் பேசும் ‘அக்குபஞ்சர்’, மலையகத்தில் ஹட்டன் பிரதேசத்தில் களிமண்ணால் மேற்கொள்ளப்படும் ஆபரணக் கைத்தொழில் தொடர்பான ‘ரெரகொட்டா ஜீவல்ஸ்’, முல்லைத்தீவு குமுளமுனை கிராமத்தில் இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்களின் கதையான ‘கொலைக்களம்’, நெடுங்கேணி ஊஞ்சல்கட்டிப் பிரதேசத்தில் நிகழ்ந்துவரும் யானை மனித முரண்பாட்டை வெளிக்கொண்டுவரும் ‘வேழம்’, திருகோணமலையில் வெல்கம் விகாரை வழியான சிங்கள பௌத்தமயமாக்கத்தைச் சொல்லும் ‘ஈழம்’, மட்டக்களப்பு - கல்லடி பிரதேச பறங்கியர் சமூக மக்களின் வாழ்வியல் பற்றிய ‘படிமம்’, மஸ்கெலியா பிரதேசசபைக்கு உட்பட்ட கிராமங்களில் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின் மூலம் முன்னெடுக்கப்பட்ட வீட்டுத் திட்டங்களில் மக்கள் எதிர்நோக்கும் சவால்களை விபரிக்கும் ‘லயத்துக்குயில்’, யுத்தத்தில் உடல் அங்கங்களை இழந்து சிரமத்தின் மத்தியில் அன்றாட வாழ்க்கையை வாழும் கேப்பாப்பிலவு கிராம மக்களின் பதிவான ‘ரணம்’, மயானங்களில் அவை சார்ந்து சேவை வழங்கும் சாதாரண மனிதர்களின் அன்றாட வாழ்வியல் சிக்கல்களைப் பதிவு செய்யும் ‘அறியாப்பாதை’ ஆகிய ஆவணப்படங்கள் திரையிடப்படவுள்ளன.

Adresse

Paris

Notifications

Soyez le premier à savoir et laissez-nous vous envoyer un courriel lorsque Mission Tamil publie des nouvelles et des promotions. Votre adresse e-mail ne sera pas utilisée à d'autres fins, et vous pouvez vous désabonner à tout moment.

Contacter L'entreprise

Envoyer un message à Mission Tamil:

Partager