தாய் மண்.கொம்

தாய் மண்.கொம் பிரான்ஸில் இருந்து தமிழ்பேசும் மக்களின் நிதர்சனமான செய்தி ஊடகம் தாய் மண்

Dear Fans...

Please Like Comment and Share Our Posts with others

Your's Faithfully

"Thanking You"

தாய் மண்.கொம்

22/07/2025
18/07/2025
நாட்டை விட்டு வெளியேறப்பணித்தால் - AME உதவிகள் இல்லை!!நாட்டை விட்டு 30 நாட்களுக்குள் வெளியேற வேண்டும் எனும் Obligation d...
18/07/2025

நாட்டை விட்டு வெளியேறப்பணித்தால் - AME உதவிகள் இல்லை!!

நாட்டை விட்டு 30 நாட்களுக்குள் வெளியேற வேண்டும் எனும் Obligation de Quitter le Territoire Français (OQTF) ஆணை பிறப்பிக்கப்பட்டால், குறித்த நபருக்கு எவ்வித உதவிகளும் வழங்கப்பட மாட்டாது எனவும், சகலவித கொடுப்பனவுகளும் நிறுத்தப்படும் எனவும் அரசு அறிவித்த நிலையில், தற்போது AME உதவிகளும் நிறுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று ஜூலை 16, புதன்கிழமை இத்தகவலை உள்துறை அமைச்சர் Bruno Retailleau தெரிவித்தார். அத்தோடு இதனை பிரதமர் பிரான்சுவா பெய்ரூவுக்கும் முன்மொழிந்து, வரவுசெலவுத்திட்டத்தோடு இணைத்துக்கொள்ள வேண்டும் எனவும் கோரியதாக தெரிவித்தார்.

AME என்பது "Aide Médicale de l'État" எனும் மருத்துவ உதவியாகும். இந்த திட்டம் மூலம் பிரெஞ்சு மக்கள் மருத்துவச் செலவீனங்களுக்கான காப்பீடுகளை பெற்றுக்கொள்ள முடியும். குறிப்பாக பிரெஞ்சு மக்கள் அல்லாத வெளிநாட்டு அகதிகள், தஞ்சக்கோரிக்கையாளர்கள் போன்றவர்களுக்கு உதவும் பொருட்டு அரசு இதனை செயற்படுத்தி வருகிறது.

இந்நிலையில், நாட்டை விட்டு வெளியேற பணிக்கப்பட்ட ஒருவர் இனிமேல் இந்த AME இனை பயன்படுத்த முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் பொத்துவில் பிரதேசத்தில் மேலாடை இன்றி உலவிய தாய்லாந்து பெண்ணொருவருக்கு நீதிமன்றம் ஆறு வாரங்கள் சிறைத்தண்டனை வி...
16/07/2025

இலங்கையின் பொத்துவில் பிரதேசத்தில் மேலாடை இன்றி உலவிய தாய்லாந்து பெண்ணொருவருக்கு நீதிமன்றம் ஆறு வாரங்கள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.

காதலனுடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக பெண் இவ்வாறு நடந்து கொண்டதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

குறித்த பெண்ணுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நீதிமன்றம் ஐந்து ஆண்டுகளுக்கு ஒத்தி வைப்பதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


மேலும் பல செய்திகளை தெரிந்து கொள்ள எமது Youtube Channelஐ Subscribe செய்யுங்கள் : https://www.youtube.com/

இந்தியாவில் எலான் மஸ்க்கின் டெஸ்லா மின்சார காரின் அதிகாரப்பூர்வ வெளியீடு நேற்று(15) மும்பையில் நடைபெற்றது.இந்திய சந்தையி...
16/07/2025

இந்தியாவில் எலான் மஸ்க்கின் டெஸ்லா மின்சார காரின் அதிகாரப்பூர்வ வெளியீடு நேற்று(15) மும்பையில் நடைபெற்றது.

இந்திய சந்தையில் நுழைய வேண்டும் என்ற எலான் மஸ்க்கின் நீண்டகால கனவை நனவாக்கும் வகையில், முதல் டெஸ்லா ஷோரூம் மும்பையில் திறக்கப்பட்டது.


மேலும் பல செய்திகளை தெரிந்து கொள்ள எமது Youtube Channelஐ Subscribe செய்யுங்கள் : https://www.youtube.com/

வடக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரில் 95 வீதமானோர் 1996 - 1997ஆம் ஆண்டு காலப்பகுதியில் யாழ்ப்பாணத்தில் இருந்த இராணுவத...
16/07/2025

வடக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரில் 95 வீதமானோர் 1996 - 1997ஆம் ஆண்டு காலப்பகுதியில் யாழ்ப்பாணத்தில் இருந்த இராணுவத்தினரால் காணாமல் ஆக்கப்பட்டோர் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் நியமிக்கப்பட்ட நால்வர் குழுவால் வெளியிடப்பட்ட இந்த அறிக்கை 22 ஆண்டுகளுக்கு பின்னர் வெளியே வந்துள்ளது.


மேலும் பல செய்திகளை தெரிந்து கொள்ள எமது Youtube Channelஐ Subscribe செய்யுங்கள் : https://www.youtube.com/

இந்த வரவுசெலவுத்திட்டம் ஒரு கொள்ளை! - மீண்டும் 49.3?பிரதமர் பிரான்சுவா பெய்ரூ இன்று புதிய வரவுசெலவுத்திட்டத்தை சமர்பித்த...
15/07/2025

இந்த வரவுசெலவுத்திட்டம் ஒரு கொள்ளை! - மீண்டும் 49.3?

பிரதமர் பிரான்சுவா பெய்ரூ இன்று புதிய வரவுசெலவுத்திட்டத்தை சமர்பித்தார்.

40 பில்லியன் யூரோக்களை சேமிப்பது எனும் இமாலய இலக்கை நோக்கி அவரது வரவுசெலவுத்திட்டம் இருந்தது.

பலதரப்பட்ட வழிகளில் இந்த சேமிப்பு சாத்தியமாகும் என பிரதமர் அறிவித்தார்.

உடனடியாகவே இந்த வாசிப்பு எதிர்கட்சிகளை கொந்தளிக்கச் செய்தது. குழுவாக இணைந்து செயற்படும் கொள்ளை போன்று பிரதமரிடன் திட்டங்கள் இருந்தது என தீவிர இடதுசாரிகள் கொந்தளித்துள்ளனர்.

’பெய்ரூ அரசாங்கத்தை விட்டு வெளியேற வேண்டும்!” என LFI கட்சித்தலைவர் Jean-Luc Mélenchon தெரிவித்துள்ளார். “அழிவு மற்றும் அநீதியை இனி ஏற்றுக்கொள்ளக்கூடாது. மக்ரோனின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பது அவசரம்." எனவும் அவர் குறிப்பிட்டார்.

”பிரெஞ்சு மக்களுக்கான அனைத்து சிவப்பு கோடுகளையும் பெய்ரூவின் திட்டம் கடக்கிறது. மக்களிடம் இறுதியாக உள்ள இரத்தத்தையும் கண்ணீரையும் உறிஞ்சும் திட்டம் இது!” என ரீபப்ளிக்கன் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் Eric Ciotti தெரிவித்துள்ளார்.

சோசலிச கட்சித்தலைவர் Boris Vallaud தெரிவிக்கையில், “இது மிருகத்தனமானது. ஏற்றுக்கொள்ள முடியாதது. கொஞ்சம் இருப்பவர்களிடம் அதிகம் கேட்பதும், அதிகம் இருப்பவர்களிடம் கொஞ்சம் கேட்பதும் முறையற்றது! இது ஏற்றுக்கொள்ள முடியாத பட்ஜெட்!” என தெரிவித்தார்.

”வரவுசெலவுத்திட்டத்தை நிறைவேற்ற பிரதமர் 49.3 அரசியலமைப்பை பயன்படுத்தினால் (வாக்கெடுப்பின்றிய நிறைவேற்ற சட்டம்) நாங்கள் நம்பிக்கை இல்லா பிரேரணை கொண்டுவருவோம்!” என LFI கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

14/07/2025
28 காவல்துறையினர் காயம்! - 389 கைதுகள்!!தேசிய நாள் நிகழ்வுக்கு அச்சுறுத்தலாக இருந்த 389 பேர் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவி...
14/07/2025

28 காவல்துறையினர் காயம்! - 389 கைதுகள்!!

தேசிய நாள் நிகழ்வுக்கு அச்சுறுத்தலாக இருந்த 389 பேர் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த கைது நடவடிக்கையின் போது இடம்பெற்ற மோதலில் 28 காவல்துறையினர் காயமடைந்துள்ளனர். மொது அமைதியை சீர்குலைக்கும் நோக்கோடு செயற்பட்டவர்கள், மோட்டார் பட்டாசுகள், C மற்றும் D பிரிவு ஆயுதங்கள் வைத்திருந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

கைதுசெய்யப்பட்டவர்களில் 313 பேர் காவல்நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இல்-து-பிரான்சுக்குள் மட்டும் 176 பேர் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் முதல் 53,000 பாதுகாப்பு வீரர்கள் கடமையில் ஈடுபட்டிருந்தனர். பின்னர் இன்று காலை முதல் 65,000 வீரர்கள் கடமையில் ஈடுபட்டிருந்தனர். நாளை செவ்வாய்க்கிழமை நண்பகல் வரை இந்த பாதுகாப்பு தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டை பிரிக்கும் இந்தியாவின் முயற்சி இன்னும் தொடர்கிறது என்று பேராசிரியர் பூஜ்ய இந்துராகரே தம்மரதன தேரர் தெரிவித்துள்ளா...
12/07/2025

நாட்டை பிரிக்கும் இந்தியாவின் முயற்சி இன்னும் தொடர்கிறது என்று பேராசிரியர் பூஜ்ய இந்துராகரே தம்மரதன தேரர் தெரிவித்துள்ளார்.

நாட்டை இரண்டாக உடைத்த பிறகு வடக்கு மாகாணத்தை இந்தியாவின் 29ஆவது மாநிலமாகவும் கிழக்கு மாகாணத்தை இந்தியாவின் 30ஆவது மாநிலமாகவும் மாற்ற இந்திய முயற்சிப்பதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.


மேலும் பல செய்திகளை தெரிந்து கொள்ள எமது Youtube Channelஐ Subscribe செய்யுங்கள் : https://www.youtube.com/தாய்மண் தொலைக்காட்சி

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசிற்கான அமெரிக்காவின் அடுத்த தூதராக கலிபோர்னியாவைச் சேர்ந்த தொழில் இராஜதந்திரி எரிக் மேயரை ...
12/07/2025

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசிற்கான அமெரிக்காவின் அடுத்த தூதராக கலிபோர்னியாவைச் சேர்ந்த தொழில் இராஜதந்திரி எரிக் மேயரை பரிந்துரைப்பதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.


மேலும் பல செய்திகளை தெரிந்து கொள்ள எமது Youtube Channelஐ Subscribe செய்யுங்கள் : https://www.youtube.com/

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிதிக்குறைப்பு நடவடிக்கைகளால் உலகம் முழுவதும் பல இலட்சம் எச்.ஐ.வி தொற்றாளர்கள் உயிர...
12/07/2025

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிதிக்குறைப்பு நடவடிக்கைகளால் உலகம் முழுவதும் பல இலட்சம் எச்.ஐ.வி தொற்றாளர்கள் உயிரிழக்கும் அபாயம் இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது.


மேலும் பல செய்திகளை தெரிந்து கொள்ள எமது Youtube Channelஐ Subscribe செய்யுங்கள் : https://www.youtube.com/

Adresse

Vitry-sur-Seine

Téléphone

+33631875115

Notifications

Soyez le premier à savoir et laissez-nous vous envoyer un courriel lorsque தாய் மண்.கொம் publie des nouvelles et des promotions. Votre adresse e-mail ne sera pas utilisée à d'autres fins, et vous pouvez vous désabonner à tout moment.

Contacter L'entreprise

Envoyer un message à தாய் மண்.கொம்:

Partager

Our story

தாய்மண்.கொம்!