11/11/2025
தெரியுமா? வறட்சிக்கும் செழிப்பிற்கும் உள்ள இடைவெளி மண்ணிலேயே இருக்கிறது.
இயற்கையான கரிமப் பொருட்கள்(organic matter) நிறைந்த வளமான மண் அதிக மழைநீரை, ஒரு Sponge போல, உறிஞ்சி தக்கவைத்துக்கொள்ளும் திறன் கொண்டது.
இது நீர் வடிந்து வெளியேறுவதை குறைத்து, வறண்ட காலங்களில் தாவரங்களுக்கு நீர் கிடைக்கச் செய்கிறது.
மண்ணின் Organic matter அளவு 1% அதிகரித்தால், ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் சுமார் 20,000 கேலன் அதிகப்படியான நீரைக் தக்கவைக்க முடியும்.
மண்ணின் நலத்திற்கும் நீர் தக்கவைப்புக்கும் உள்ள இந்த அற்புத உறவு, இயற்கை இயல்பாகவே அளித்துள்ள வறட்சி காப்பீடு ஆகும்.
இயற்கை விவசாய முறைகள் மூலம் மண்ணின் Organic matter அளவை குறைந்தபட்சம் 3-6% (அந்தந்த பகுதிக்கு ஏற்ப) உயர்த்துவதன் மூலம், மண்ணை காப்பது மட்டுமல்லாமல், நமது நீர் வளத்தின் எதிர்காலத்தையும் நாம் பாதுகாக்கிறோம்.
ஆரோக்கியமான மண் = அதிகமான நீர்.
இது மிகவும் எளிது.
இக்கணமே செயல்படுவோம்