15/12/2025
ஜப்பான் போன்ற நாடுகளில் நேர்மையும் ஒழுக்கமும் வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருக்கிறது.
அங்கே யாராவது பணப்பையை தவறவிட்டால், அது சில நிமிடங்களிலேயே அருகிலுள்ள போலீஸ் நிலையத்தில் சேர்ந்து விடும். அதிலும் அதிர்ச்சியாய், உள்ளேயுள்ள பணம் ஒரு ரூபாய் கூட குறையாமல் இருக்கும்.
காரணம், ஜப்பானில் குழந்தைகள் ஆரம்பத்திலேயே மற்றவரின் பொருட்களை எடுப்பது ஒரு வழக்கறிதல் தவறு மட்டுமல்ல, அது ஒரு பெரிய பாவம் என்று கற்றுக் கொள்ளுகிறார்கள். “எனக்குச் சொந்தமல்லாததை நான் எடுக்கக்கூடாது”
என்ற நெறி அவர்களின் கலாச்சாரத்தில் ஆழமாகப் பதிந்திருக்கிறது.
அதனால் தான் அங்கே இழந்த பொருள் திரும்ப கிடைப்பது ஒரு அதிசயம் அல்ல - அது ஒரு சாதாரண விஷயம். இந்த அளவு நேர்மை, ஒழுக்கம், நம்பிக்கை மனிதர்களில் இருந்தால், சமூகம் எவ்வளவு அழகாக இருக்கும் என்பதை அவர்கள் காட்டுகிறார்கள்.
நம் சமூகத்திலும் இப்படிப் பட்ட உள்நேர்மை அதிகமாக இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று உண்மையில் ஆசைதான் வருகிறது
Call now to connect with business.