Tamilmedia

Tamilmedia சுடச்சுட செய்திகளை உங்கள் கண்னெதிரே கொண்டுவரும் உங்கள் DIGITAMIL MEDIA
(207)

தனியாக வளர்வது எளிது…ஆனால் ஒன்றாக வளர்வது தான் உண்மையான வலிமை! உங்களை வளரச் செய்த அந்த ஒருவரை கீழே டேக் செய்யுங்கள் 👇 #த...
10/10/2025

தனியாக வளர்வது எளிது…

ஆனால் ஒன்றாக வளர்வது தான் உண்மையான வலிமை!

உங்களை வளரச் செய்த அந்த ஒருவரை கீழே டேக் செய்யுங்கள் 👇

#தலைமைத்துவம் #குழுவின்பணி #தன்விருத்தி

10/10/2025
📚✨ ஒரு குட்டி நீதிக்கதை – ஆனால் பெரிய பாடம்!ஒரு அறிவாளி கடவுள் பக்தி மிகுந்தவர்.நித்யம் கோவிலுக்குப் போய் வழிபட்டு, காட்...
10/10/2025

📚✨ ஒரு குட்டி நீதிக்கதை – ஆனால் பெரிய பாடம்!

ஒரு அறிவாளி கடவுள் பக்தி மிகுந்தவர்.
நித்யம் கோவிலுக்குப் போய் வழிபட்டு, காட்டில் விறகு வெட்டி உழைத்து வாழ்ந்தார். 🌿

ஒருநாள் காட்டில், முன் கால்கள் இல்லாத நரி ஒன்றைக் கண்டார்.
அதைப் பார்த்து ஆச்சரியப்பட்டார் –
“இது எப்படி சாப்பாடு வாங்கி வாழுது?” 🤔

அப்பொழுது, ஒரு புலி ஒரு மானை வேட்டையாடி சாப்பிட்டு, மீதியை விட்டுச் சென்றது.
அந்த நரி வந்து அந்த மீதியை சாப்பிட்டது! 🦊

இதைப் பார்த்த அந்த அறிவாளி யோசித்தார்:
“நரிக்கே கடவுள் சாப்பாடு போட்றார், அப்படின்னா எனக்கும் போடுவார்!”
அதன் பிறகு உழைப்பை நிறுத்தினார்.

ஆனால் கடவுள் சாப்பாடு அனுப்பவில்லை. பசியால் தவித்தார். 😔

பின்னர் கடவுளிடம் கேட்டார்:
“நரிக்குக் கொடுத்தீங்க… எனக்கு ஏன் இல்லை?”

அதற்கு கடவுள் சொன்னாராம் –

> “முட்டாளே! நீ நரியிடம் இருந்து அல்ல, புலியிடம் இருந்து பாடம் கற்றுக்கொள்ளணும்!
புலி போல் உழை – பிறருக்கும் தானம் செய்!” 💪🐅

---

🌼 நம் வாழ்க்கையில் உண்மையான பக்தி —
உழைப்பிலும், பிறருக்குச் செய்வதிலும் தான் இருக்கிறது. �

✨ உழைப்பே கடவுள்! உழைப்பே வெற்றி! ✨

#நீதிக்கதை #

10/10/2025

காஸாவில் இணையம் மற்றும் மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையில், காசா நகரில் உள்ள பாலஸ்தீனிய பத்திரிகையாளர்கள் போர்நிறுத்த ஒப்பந்தம் குறித்து
தெருக்களில் நடந்து சென்று செய்தியை தெரிவித்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்கின்றனர்.
உண்மையில் இவர்கள் தங்களது உயிர்களை பொருற்படுத்தாமல் ஆற்றிய சேவைக்கு என்ன சொல்லி வாழ்த்துவது என்று தெரியவில்லை❤️✌🏻

09/10/2025

மட்டக்களப்பு மாவட்ட முன்பள்ளி ஆசிரியர்களால் இன்று முன்னெடுக்கப்பட்ட கண்டன ஆர்ப்பாட்டம்!

கிழக்கு மாகாண பாலர் பாடசாலை தலைமை பணியகத்தின் காரியாலயம் அகற்றுவதை எதிர்த்து இன்று 09.10.2025 வியாழக்கிழமை மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று முன்பள்ளி ஆசிரியர்களால் முன்னெடுக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்ட வலையங்களின் முன்பள்ளி ஆசிரியர்களால் குறித்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.

சம்பளம் வெறும் 6000 ரூபாய் தான், இப்படியிருக்கையில் திருகோணமலைக்கு போய் அலைக்கழிய எம்மால் முடியாது ஜனாதிபதி" அவர்களே எங்கள் கோரிக்கையை நிறைவேற்றுங்கள் வேண்டாம் வேண்டாம்" எமது பாலர் பாடசாலை கல்விப் பணியகத்தை இடம் மாற்றாதே, தாருங்கள் "தாருங்கள் எங்கள் காரியாலயத்தை எங்களிடமே தாருங்கள் போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு குறித்த கண்டன ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்திருந்தனர்.

மேலும் இது தொடர்பிலான மஹஜர் அடங்கிய கடிதம் ஒன்றும் அரசாங்க அதிபர் ஊடாக ஆளுநருக்கு ஒப்படைக்கப்பட உள்ளதாக குறித்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட முன்பள்ளி ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

"இளைய நிலா பொழிகிறதேஇதயம் வரை நனைகிறதே" இளையராஜா Flash Back :இளையராஜா ஆரம்பக் காலத்தில் இசையமைப்பாளராக வர வேண்டும் என்று...
09/10/2025

"இளைய நிலா பொழிகிறதே
இதயம் வரை நனைகிறதே"

இளையராஜா Flash Back :

இளையராஜா ஆரம்பக் காலத்தில் இசையமைப்பாளராக வர வேண்டும் என்று பெரும் கஷ்டப்பட்டார்.

ஆரம்பக் காலத்தில் திரைப்படங்கள் தவிர மேடை நாடகம் போன்றவற்றிலும் வசித்து வந்தார். அப்படி ஒரு நாள் வாய்ப்பு தேடி பிரபல பாடகர் நாகூர் ஹனிபாவிடம் சென்றுள்ளார். எம்.எல்.ஏ விடுதியில் தங்கி இருக்கும் நாகூர் ஹனிபா அறையின் கதவை தட்டும் சத்தம் கேட்டது.

அதையடுத்து நாகூர் ஹனிபா கதவை திறந்து பார்க்கையில், இளையராஜா மெலிந்த இளைஞர் உடலுடன், கசங்கிய ஆடையுடன், கதவுக்கு வெளியே நின்று கொண்டிருக்கிறார்.

அவரை பார்த்தும், யாருப்பா நீங்க, உங்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்கிறார். அதற்கு அவர், 'நான் ஒரு இசையமைப்பாளர், அதற்காக வாய்ப்புகளைத் தேடி பல முயற்சிகளை எடுத்து வருகிறேன். அதன்படி நீங்கள் பாடும் ஒரு பாடல்களுக்கு நான் இசையமைக்கும் வாய்ப்பு வழங்க வேண்டும் என்று கேட்க', நாகூர் ஹனிபா, நீங்கள் யார் என்று திரும்பவும் கேட்டார்.

அதற்கு, 'மதுரை மாவட்டத்தில் நிறைய இசைக் கச்சேரி செய்து மிகவும் பிரபலமான பாவலர் வரதராஜனுடைய சகோதரர்தான் நான், என்னுடைய பெயர் ராசய்யா. நாங்கள் 4 பேர் சகோதரர்கள். அனைவரும் ஒன்றாக இணைந்துதான் மேடை நாடகம், இசைக் கச்சேரி, கம்யூனிஸ்ட் கட்சி விழாக்கள் ஆகியவற்றில் வாசித்து வருகிறோம். அந்த வகையில் தான் உங்களிடம் வாய்ப்பு தேடி வந்துள்ளேன்' என்றார்.

அதற்கு, ஹனிபா, பொதுவாக என்னுடைய பாடல்களை எச்.எம்.வி நிறுவனம் தான் வெளியிட்டு வருகிறது. அதனால் நீங்கள் போய் அவர்களை பார்த்து பேசிக்கோங்கன்னு சொல்ல, உடனே இளையராஜா நான் அவர்களை சந்தித்து பேசினேன், அதன் பிறகு தான் அவர்கள் உங்களை பார்க்க சொன்னார்கள் என்றார்.

அப்படியா நல்லது. சரி நீங்க இப்போ போயிட்டு நாளைக்கு காலைல வாங்க, பாடல் எழுதி வைக்கிறேன்" என்று இளையராஜாவை அனுப்பி வைத்துவிட்டார்.

மறுநாள் இளையராஜா சொன்னபடியே வந்துவிட்டார்.

அதே வேளையில் பாடலின் வரிகளும் தயாராக இருந்த நிலையில் வீட்டில் இருந்த ஹார்மோனிய பெட்டியை எடுத்து இளையராஜாவிடம் கொடுத்து வாசிங்க என்றார். உடனே டியூனை இளையராஜா வாசிக்க ’தென்றல் காற்றே கொஞ்சம் நில்லு...எங்கள் திரு நபியிடம் போய் சொல்லு...' என்று ஹனிபா பாடி முடித்தார்.

அதன் பிறகு ஹனிபா, 'நீங்க வாசிக்கும் போது தென்றல் காற்றே உள்ள வந்தது மாதிரி உணர்ந்தேன்னு சொல்லிட்டு, இளையராஜா தலையில் கையை வைத்து 'தம்பி திரைத்துறையில் உங்களுக்கு மிகப்பெரிய எதிர்காலம் இருக்கு, நீங்க நல்லா வருவீங்க தம்பி'

தென்றல் காற்றே ஒரு கணம் நிற்பதுபோல் பண்ணிவிட்டீர்களே , அபாரமான ஆற்றல் உங்களுக்கு இருக்கிறது. எங்கேயோ போகப்போகிறீர்கள் " என மனதாரப் பாராட்டி ஆசீர்வதித்தார்.
அதற்கு பின் அவர் இசையமைத்த "மச்சானைப் பார்த்தீங்களா , மலைவாழத் தோப்புக்குள்ளே'’ பாடல் அவரை புகழின்

உச்சாணிக்கு கொண்டு சென்றது.

முகநூல் பதிவு:பிரசாந்த்

யாரையும் தரம்குறைத்து எடைபோடாதீர்கள்...!ஒரு வயதான முதிய பெண்மணி அவருடைய செக்கை பேங்க் கேஷியரிடம் கொடுத்து,”எனக்கு ஐநூறு ...
09/10/2025

யாரையும் தரம்குறைத்து எடைபோடாதீர்கள்...!

ஒரு வயதான முதிய பெண்மணி அவருடைய செக்கை பேங்க் கேஷியரிடம் கொடுத்து,”எனக்கு ஐநூறு ரூபாய் பணம் எடுக்க வேண்டும்” என்றார்.

உடனே அந்த பேங்க் கேஷியர் பெண் அந்த முதிய பெண்மணியிடம்,”ஐயாயிரம் ரூபாய்க்கு கீழே தொகை எடுக்க வேண்டும் என்றால், நீங்கள் உங்கள் ATM கார்டை பயன்படுத்தி எடுங்கள்” என்றாள்

உடனே அந்த முதியவள்,”ஏன்?” என்று கேட்டார்.

உடனே அந்த பெண் கேஷியர் சற்று எரிச்சலுடன் அந்த முதியவளிடம்,”இது தான் பேங்க் சட்டம். வேற எந்த விஷயமும் இல்லைனா இடத்தை காலி பண்ணுங்க, உங்களுக்கு பின்னால் நிறைய பேர் வெயிட் பண்றாங்க” என்று கூறினாள் சற்றே கடுமையுடன்

அந்த முதிய பெண்மணி இப்பொழுது அமைதியாக நின்றார்.

அவர் தனது செக்கை மீண்டும் அந்த கேஷியர் பெண்ணிடம் கொடுத்து,”தயவு செய்து என் அக்கவுண்ட்டில் உள்ள பணம் முழுவதும் எனக்கு திரும்ப கொடுத்துவிடுங்கள்” என்றார்.

அந்த கேஷியர் பெண் அந்த முதியவர் அக்கவுண்டில் உள்ள பண நிலுவையை பார்த்த பொழுது அதிர்ச்சியானாள்.

அவள் தனது தலையை ஆட்டிக் கொண்டு அந்த முதியவளிடம், “என்னை மன்னித்து கொள்ளுங்கள் பாட்டி, உங்கள் கணக்கில் மூன்றரை கோடி ரூபாய் உள்ளது, எங்கள் வங்கியில் இப்பொழுது அவ்வளவு பணம் இல்லை. எனவே தாங்கள் தயவுசெயுது நாளை ஒரு நேரம் ஒதுக்கி வர இயலுமா? என்று மிக பணிவோடு பவ்யமாக கேட்டாள்

உடனே அந்த முதிய பெண்மணி”இப்பொழுது நான் எவ்வளவு பணம் எனது அக்கவுண்டில் எடுக்க இயலும்?” என்று கேட்டார்.

உடனே அந்த பெண்,”மூன்று லட்சம் வரை நீங்கள் எடுத்துக் கொள்ளலாம்” என்றாள்

உடனே அந்த முதியவள் அந்த பெண்ணிடம் மூன்று லட்சம் ரூபாய் தனக்கு வேண்டும் என்று கூறினார்.

அந்த பெண்ணும் மூன்று லட்சம் ரூபாய் வேகமாக மிக பணிவுடன் கொடுத்தாள்.

அந்த முதியவள் இப்பொழுது ஐநூறு ரூபாயை அவளது கைப்பையில் வைத்துவிட்டு மீதம் இருந்த 2,99,500 ரூபாயை மீண்டும் அவளது அக்கவுண்டில் டெபாசிட் செய்ய சொன்னார்.

அந்த கேஷியர் பெண் இப்பொழுது வாயடைத்து நின்றாள்…..

சட்டங்கள் தளர்க்கப்படாதவையாக இருந்தாலும், நாம் மனிதர்கள் சில சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து போகலாம்.

ஒருவருடைய தோற்றத்தையோ, உடையையோ வைத்து அவரை எடை போட கூடாது.

மாறாக அனைவரையும் மரியாதையாக நடத்த வேண்டும்.

ஒரு அட்டைப் படத்தை வைத்து அந்த புத்தகத்தை கணிக்க கூடாது. 👍

09/10/2025

கந்தளாய் பேராறு மேற்கு கிராமிய அபிவிருத்தி சங்கத்தின் ஏற்பாட்டில் "மக்கள் சேவை மத்திய நிலையம்" திறப்பு

கந்தளாய் பேராறு மேற்கு பிரதேச மக்களின் தேவைகளை ஒரே கூரையின்கீழ் வழங்கும் நோக்குடன் கந்தளாய் பேராறு மேற்கு கிராமிய அபிவிருத்தி சங்கத்தின் ஏற்பாட்டில் இம்மத்திய நிலையம் நேற்று மாலை (06) உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

பேராறு மேற்கு கிராம அபிவிருத்தி ச் சங்கத்தின் தலைவர் அல் ஹாஜ் அப்துல் ஹமீது சலிமுல்லா அவர்களின் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது.

கிராம சேவகர் (GS) சமுர்த்தி உத்தியோகத்தர் , தாய் சேய் சேவை(Midwife) மற்றும் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் (EDO)களின் சேவைகளை இம்மத்திய நிலையத்தினூடாக வாரத்தின் சேவை நாட்களில் இப்பிரதேச மக்கள் பெற்றுக்கொள்ள முடியும்.

இம்மத்திய நிலையத்தின் கட்டிடத்திற்கான வாடகை உட்பட அனைத்து செலவினங்களையும் கிராம அபிவிருத்திச் சங்கத்தினால் செலவு செய்யப்பட்டது.
மேலும்
NCC Private (Ltd) இனால் ஒலிபெருக்கி ஒன்றும் பொதுமக்கள் சேவைக்காக வழங்கப்பட்டதுடன் அப்துல் ஹமீது சலீமுள்ளா ஹாஜி மற்றும் ஹபீப் முஹம்மது நிஜாம்தீன் ஆசிரியரும் இணைந்து வீதி விளக்குகள் மின்குமிழ்கள் என்பனவற்றையும் இப்பிரதேச தேவைகருதி கிராம அபிவிருத்திச் சங்கத்துக்கு வழங்கினார்.

இங்கே ஒரே கூரையின் கீழ் அமையப்பெற்றுள்ள இச்சேவைகளை கடந்த காலங்களில் தனித்தனியாக வெவ்வேறு இடங்களில் அமையப்பெற்றிருந்ததினால் பல இடங்களுக்குச் சென்று பெற்றுக்கொள்ளவேண்டியிருந்தது. இதனால் நேர விரயத்தினையும் பண விரயத்தினையும் பல அசௌகரியங்களும் முகம்கொடுத்து வந்தோம் என மக்கள் தெரிவித்ததுடன் இவ்வாரான ஒரு மத்திய நிலையத்தினை அமைத்துத் தந்த பேராறு மேற்கு கிராம அபிவிருத்திச் சங்க தலைவர் அல்-ஹாஜ் அப்துல் ஹமீது சலீமுள்ளாஹ் உட்பட கிராம அபிவிருத்திச் சங்கத்தின் அனைவருக்கும் நன்றியினைத் தெரிவிப்பதாக மக்கள் தெரிவித்தனர்.

இந்நிகழ்வில் நிர்வாக கிராம அதிகாரி, கிராம சேவை அதிகாரி, சமுர்த்தி அபிவிருத்தி அதிகாரி, பிரதேச சபை உறுப்பினர்கள், அபிவிருத்தி சங்க நிர்வாகிகள் மற்றும் பல நலன்விரும்பிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக்குழுவின் ஏற்பாட்டில் லீடர் அஸ்ரபில் ஆசிரியர் தின விழா – 2025 !மாளிகைக்காடு செய்தியாளர்கல...
08/10/2025

பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக்குழுவின் ஏற்பாட்டில் லீடர் அஸ்ரபில் ஆசிரியர் தின விழா – 2025 !

மாளிகைக்காடு செய்தியாளர்

கல்முனை கல்வி வலய சாய்ந்தமருது லீடர் எம்.எச்.எம். அஸ்ரப் வித்தியாலயத்தில் சர்வதேச ஆசிரியர் தினம் 2025 அக்டோபர் 8 ஆம் தேதி சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் கல்வி துறையில் சிறந்த பங்களிப்பு செய்த ஆசிரியர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக்குழுவின் ஏற்பாட்டில் அபிவிருத்தி நிறைவேற்றுக்குழுவின் செயலாளர் யூ.எல்.என். ஹுதாவின் நெறிப்படுத்தலில் பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக்குழுவின் தலைவரும், அதிபருமான எம்.ஐ. சம்சுதீன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக பார்ட்னர்ஸ் போ சேன்ஜ் இன்டெர்னசனலின் சிரேஷ்ட நிகழ்ச்சித்திட்ட பணிப்பாளர் றிசாத் செரீப் கலந்து கொண்டார். மேலும் கௌரவ அதிதியாக கல்முனை கல்வி வலய பிரதிக்கல்வி பணிப்பாளரும், சாய்ந்தமருது கோட்டக்கல்வி பணிப்பாளருமான அஸ்மா ஏ மலிக் கலந்து கொண்டதுடன் விசேட அதிதியாக சேவைக்கால ஆசிரிய ஆலோசகர் எம்.எம்.எம். றபீக் கலந்து கொண்டார்.

ஆசிரியர்களின் அர்ப்பணிப்பையும் தியாகத்தையும் பாராட்டி ஆசிரியர்கள் சமூக வளர்ச்சியின் தூண்களாக இருப்பதாகவும், அவர்கள் மாணவர்களின் எதிர்காலத்தை வடிவமைக்க பெரும் பணி ஆற்றி வருவதாகவும் அதிதிகள் இங்கு உரையாற்றினார். மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பாடல்கள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் என்பன இங்கு நடைபெற்றது.

இந்நிகழ்வில் பாடசாலை பிரதி அதிபர் எஸ்.எம். சுஜான், உதவி அதிபர் எப்.எம்.ஆர்.ஹாதிம், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக்குழுவின் முன்னாள் செயலாளர் மற்றும் உறுப்பினர்களான எப்.எம். ரஹுபி, எம். ராபீன், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக்குழுவின் உறுப்பினர்களான ஏ.எல்.எம். பாஹீம், எஸ்.எல். ஷாமிலா உட்பட ஆசிரியர்கள் மாணவ தலைவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்

07/10/2025

கந்தளாயில் சற்றுமுன் கெப் வாகனம் விபத்து சாரதி தப்பி ஓட்டம் .

Address

London

Alerts

Be the first to know and let us send you an email when Tamilmedia posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tamilmedia:

Share