05/08/2025
நாம் மண்டேலா,ஆப்ரஹாம், அம்பேத்கார் போன்றாவது எப்போது?
மேல் நீதிமன்ற நீதிபதி கெளரவ ஜே.ரொஸ்கி .
( மீரா.எஸ் .இஸ்ஸடீன் )
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர், ராஜீவ் அமரசூரிய ,கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்தின் அழைப்பை ஏற்று நேற்று அக்கரைப்பற்றுக்கு விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார்.
கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்தின் புதிய தலைவராக அண்மையில் தெரிவு செய்யப்பட்ட, ஆரிக்கா காரியப்பர் தலைமையில் அக்கரைபற்று தனியார் விடுதியொன்றில் நடைபெற்ற இக்கூட்டத்தில்
“கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதி,கெளரவ,ஜே.ரொஸ்கி அவர்கள் உரையாற்றுகையில்-
மிகவும் வரலாற்றுச் சிறப்புமிக்க கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்தின் கற்றோர் குழாமின் புத்திஜீவிகள் குழு ஒன்றின் தலைமைத்துவத்தை ஏற்கின்ற அளவுக்கு திருமதி அரிக்கா காரியப்பர் ஆளுமை உடையவராகப் பங்கமைத்து இருக்கின்றார்.
சகோதரத்துவம், சமத்துவம் போன்ற மனித விழுமியங்களை வார்த்தைகளுக்கு மாதிரம் வரையறுத்துக்கொள்ளாமல்; அதை,
நடைமுறைப்படுத்தி காட்டுகின்ற வல்லமையையும் பக்குவத்தையும் கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்தின் அங்கதவர்கள் பெற்றிருக்கிறார்கள்.
என்ற விடயம் இந்த இரண்டு வளர்ச்சி நிலையிலும் ஆரோக்கியமான திசையிலே நம்மை அழைத்துச் செல்லுமெ ன்பது, என்னுடைய அன்பான எதிர்பார்ப்பு.
ஒவ்வொரு சட்டத்தரணியும் ஒரு அக்கினிக் குஞ்சு சட்டத்தை பயின்றவர்கள்.
உலகத்திலே சிலர் இதை நிருபித்துக் காட்டி இருக்கின்றார்கள் என்பது உங்களுக்கு தெரியும்.
நெல்சன் மண்டேலா சட்டம் பயின்றார். கோடிக்கணக்கான அடிமைகள் விடுதலை பெற்றனர். ஆப்ரஹாம் லிங்கன் அவர் பல்கலைகழகத்துக்கும் செல்லவில்லை; முறையான சட்டக் கல்வியைப் பயிலவும் இல்லை. தானே, சட்டத்தை பயின்று அவர் bar examination pass செய்து சட்டத்தரணி ஆனார்.
ஆப்ரஹாம் லிங்கன் சட்டம் பயின்றதால்; பல கோடி அடிமைகள் விடுதலை பெற்றனர். அம்பேத்கார் சட்டம் பயின்றதால் பல கோடி அடிமைகள், தீண்டத்தகாதவர்கள், அடிமைப் படுத்தபட்டிருந்த மக்கள் விடுதலை பெற்றிருக்கின்றனர். நாம் சட்டம் பயின்றதால் யார் விடுதலை பெற்றிருக்கிறார்கள்?
நாம் அமைதியாக அமர்ந்து எம்மால் விடுதலை பெற்றவர்களை நிரலிட்டு பார்த்தோமென்றால்; மிகவும் வேதனையளிப்பதாக இருக்கலாம்.”என்று குறிப்பிட்டார்.
இந் நிகழ்வில்-
குடியியல் மேன் முறையீட்டு நீதிமன்ற நீதிபதி வீ.ராம கமலன், ஏ.எம்.எம்.றியால்,
கல்முனை நீதி மன்ற நீதவான் எம்.எஸ். எம். சம்சுதீன்,கல்முனை சட்டத்தரணிகள் சங்கச் செயலாளர் ஏ.ஜீ.பிரேம் நவாஸ்,உட்பட கல்முனை சட்டத்தரணிகள் சங்க உறுப்பினர்களும் கலந்து கொண்ட னர்.
இந்நிகழ்வின் போது,
எதிர்காலத்தில்,இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திற்கும் கல்முனை சங்கத்துக்குமிடையே நல்லுறவைப் பேணுவதற்கும், பரஸ்பரம் பரிந்துரைகளை மேற்கொள்வதற்கும் தாய்ச் சங்கத்தின் தலைவர்,ராஜீவ் அமரசூரியவின் வருகை காத்திரமானதாக அமைந்துள்ளதாகக் கருத்துரைகள் முன் வைக்கப்பட்டன.
தேசியத் தலைவரைக் கெளரவிக்கும் முகமாக நினைவுச் சின்னங்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன் பொன்னாடையும் போர்த்தப்பட்டன.
இதுதவிர,கல்முனை சட்டத்தரணிகள் சங்கத் தலைவராகத் தெரிவு செய்யப்பட்ட அரிக்கா காரியப்பரைக் கெளரவிக்கும் முகமாக நினைவுச் சின்னம் வழங்கப்பட்டது.