Lanka Front News

Lanka Front News உண்மைக் கருத்துக்களை அஞ்சாமல் சொல்வதே அறம் ! Contact us

24/09/2025
19/09/2025

தற்போது அக்கரைப்பற்று மாநகர நீர்ப் பூங்காவில் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் 1500 வது மீலாதுன் நபி விழாவில் பலஸ்தீன் மக்களுக்கு ஆதரவாக தக்பீர் முழக்கத்துடன் நிறைவேற்றப்பட்ட பிரகடனம் !

Palastine - The sound that knocks on the doors of our conscience A declaration !


நாம் மண்டேலா,ஆப்ரஹாம், அம்பேத்கார் போன்றாவது எப்போது?மேல் நீதிமன்ற நீதிபதி கெளரவ ஜே.ரொஸ்கி .(  மீரா.எஸ் .இஸ்ஸடீன் )இலங்க...
05/08/2025

நாம் மண்டேலா,ஆப்ரஹாம், அம்பேத்கார் போன்றாவது எப்போது?

மேல் நீதிமன்ற நீதிபதி கெளரவ ஜே.ரொஸ்கி .

( மீரா.எஸ் .இஸ்ஸடீன் )

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர், ராஜீவ் அமரசூரிய ,கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்தின் அழைப்பை ஏற்று நேற்று அக்கரைப்பற்றுக்கு விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார்.

கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்தின் புதிய தலைவராக அண்மையில் தெரிவு செய்யப்பட்ட, ஆரிக்கா காரியப்பர் தலைமையில் அக்கரைபற்று தனியார் விடுதியொன்றில் நடைபெற்ற இக்கூட்டத்தில்

“கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதி,கெளரவ,ஜே.ரொஸ்கி அவர்கள் உரையாற்றுகையில்-

மிகவும் வரலாற்றுச் சிறப்புமிக்க கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்தின் கற்றோர் குழாமின் புத்திஜீவிகள் குழு ஒன்றின் தலைமைத்துவத்தை ஏற்கின்ற அளவுக்கு திருமதி அரிக்கா காரியப்பர் ஆளுமை உடையவராகப் பங்கமைத்து இருக்கின்றார்.

சகோதரத்துவம், சமத்துவம் போன்ற மனித விழுமியங்களை வார்த்தைகளுக்கு மாதிரம் வரையறுத்துக்கொள்ளாமல்; அதை,

நடைமுறைப்படுத்தி காட்டுகின்ற வல்லமையையும் பக்குவத்தையும் கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்தின் அங்கதவர்கள் பெற்றிருக்கிறார்கள்.

என்ற விடயம் இந்த இரண்டு வளர்ச்சி நிலையிலும் ஆரோக்கியமான திசையிலே நம்மை அழைத்துச் செல்லுமெ ன்பது, என்னுடைய அன்பான எதிர்பார்ப்பு.

ஒவ்வொரு சட்டத்தரணியும் ஒரு அக்கினிக் குஞ்சு சட்டத்தை பயின்றவர்கள்.

உலகத்திலே சிலர் இதை நிருபித்துக் காட்டி இருக்கின்றார்கள் என்பது உங்களுக்கு தெரியும்.

நெல்சன் மண்டேலா சட்டம் பயின்றார். கோடிக்கணக்கான அடிமைகள் விடுதலை பெற்றனர். ஆப்ரஹாம் லிங்கன் அவர் பல்கலைகழகத்துக்கும் செல்லவில்லை; முறையான சட்டக் கல்வியைப் பயிலவும் இல்லை. தானே, சட்டத்தை பயின்று அவர் bar examination pass செய்து சட்டத்தரணி ஆனார்.

ஆப்ரஹாம் லிங்கன் சட்டம் பயின்றதால்; பல கோடி அடிமைகள் விடுதலை பெற்றனர். அம்பேத்கார் சட்டம் பயின்றதால் பல கோடி அடிமைகள், தீண்டத்தகாதவர்கள், அடிமைப் படுத்தபட்டிருந்த மக்கள் விடுதலை பெற்றிருக்கின்றனர். நாம் சட்டம் பயின்றதால் யார் விடுதலை பெற்றிருக்கிறார்கள்?

நாம் அமைதியாக அமர்ந்து எம்மால் விடுதலை பெற்றவர்களை நிரலிட்டு பார்த்தோமென்றால்; மிகவும் வேதனையளிப்பதாக இருக்கலாம்.”என்று குறிப்பிட்டார்.

இந் நிகழ்வில்-

குடியியல் மேன் முறையீட்டு நீதிமன்ற நீதிபதி வீ.ராம கமலன், ஏ.எம்.எம்.றியால்,

கல்முனை நீதி மன்ற நீதவான் எம்.எஸ். எம். சம்சுதீன்,கல்முனை சட்டத்தரணிகள் சங்கச் செயலாளர் ஏ.ஜீ.பிரேம் நவாஸ்,உட்பட கல்முனை சட்டத்தரணிகள் சங்க உறுப்பினர்களும் கலந்து கொண்ட னர்.

இந்நிகழ்வின் போது,

எதிர்காலத்தில்,இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திற்கும் கல்முனை சங்கத்துக்குமிடையே நல்லுறவைப் பேணுவதற்கும், பரஸ்பரம் பரிந்துரைகளை மேற்கொள்வதற்கும் தாய்ச் சங்கத்தின் தலைவர்,ராஜீவ் அமரசூரியவின் வருகை காத்திரமானதாக அமைந்துள்ளதாகக் கருத்துரைகள் முன் வைக்கப்பட்டன.

தேசியத் தலைவரைக் கெளரவிக்கும் முகமாக நினைவுச் சின்னங்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன் பொன்னாடையும் போர்த்தப்பட்டன.

இதுதவிர,கல்முனை சட்டத்தரணிகள் சங்கத் தலைவராகத் தெரிவு செய்யப்பட்ட அரிக்கா காரியப்பரைக் கெளரவிக்கும் முகமாக நினைவுச் சின்னம் வழங்கப்பட்டது.

இன்று (15.07.2025) ஸுஹைலின் பயங்கரவாதத் தடைச்சட்ட  வழக்கு கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது. வ...
15/07/2025

இன்று (15.07.2025) ஸுஹைலின் பயங்கரவாதத் தடைச்சட்ட வழக்கு கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது.

வழக்கு விசாரணையின் போது ஸுஹைல் திறந்த நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கு விசாரணையின் போது பொலிஸ் தரப்பு சார்பாக தெஹிவளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி (OIC) அநுராத ஹேரத், ஸுஹைலை பிணையில் விடுவிக்குமாறு நீதவானைக் கோரும் சட்டமா அதிபரின் ஆலோசனையை நீதவானிடம் சமர்ப்பித்தார்.

அதனை கருத்திற்கொண்ட கல்கிஸ்ஸை நீதிவான், ஸுஹைலை பிணையில் விடுவிக்குமாறு பொலிஸாரினை பணித்தார்.

இவ்வழக்கில் ஸுஹைல் சார்பாக சிரேஷ்ட சட்டத்தரணி கீத்ம பர்னாந்து, சட்டத்தரணிகள் இல்ஹாம் ஹஸனலி, அஷ்ரப் முக்தார் மற்றும் பெஹ்ஷாத் ஆகியோர் ஆஜராகினர்.

- சமூக நீதிக்கான சட்டத்தரணிகள் அமைப்பு
15.07.2025.

வெற்றி என்றாலே சிரிப்பு தானே? 😊T20 தொடரின் ஒவ்வொரு வெற்றியிலும் இந்தச் சிரிப்பு என்றும் ஒளிரட்டும் . நாங்கள் அனைவரும் ரச...
09/07/2025

வெற்றி என்றாலே சிரிப்பு தானே? 😊

T20 தொடரின் ஒவ்வொரு வெற்றியிலும் இந்தச் சிரிப்பு என்றும் ஒளிரட்டும் . நாங்கள் அனைவரும் ரசிகர்களாக விரும்பும் தருணங்கள் இவை தான் 😎

திமுக கூட்டணி நாட்டிற்கு தேவை அதனால் வந்துள்ளேன் - ம.நீ.ம கட்சித்தலைவர் கமல்ஹாசன்சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரு...
30/05/2025

திமுக கூட்டணி நாட்டிற்கு தேவை அதனால் வந்துள்ளேன் - ம.நீ.ம கட்சித்தலைவர் கமல்ஹாசன்

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற பின் ம.நீ.ம கட்சித்தலைவர் கமல்ஹாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், முதலமைச்சர் அழைத்ததின் பேரில் சந்தித்ததாகவும், ராஜ சபாவில் நுழைவதற்கான ஏற்பாடுகளை செய்ய முதலமைச்சர் அறிவுறுத்தினார் என்றும், வேட்பாளர் தாக்கல் தொடர்பாக அறிவிப்பு வெளியாகும் எனவும் கூறினார்.

மேலும், மக்களவையில் தான் தன்னுடைய குரல் முதல் முறையாக ஒலிக்க இருந்தாலும், தமிழ்நாட்டுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து தான் வருகிறேன் என கூறினார்.

தமிழில் இருந்து தான் கன்னடம் பிறந்தது என தான் பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் இல்லை என கூறிய அவர், தான் பேசியது தவறு இல்லை என திட்டவட்டமாக கூறினார்.
அதேபோல், இந்த விவகாரம் அரசியல் ஆக்கப்பட்டு வருவதாக கூறிய அவர், என்னுடைய அன்பு கர்நாடக, ஆந்திரா, கேரளா மக்களுக்கு புரியும் என்றும், ஏற்கனவே நான் பல மிரட்டல்களை சந்தித்துள்ளதாகவுன், இது ஒரு ஜனநாயக நாடு, எனக்கு சட்டத்தின் மீது நம்பிக்கை உள்ளது என்றார்.

திமுக குடும்ப அரசியல் என கூறினீர்கள் என்ற கேள்விக்கு, திமுக கூட்டணி நாட்டிற்கு தேவை அதனால் வந்துள்ளேன் என தெரிவித்தார்.

19/05/2025
07/05/2025

மாநகர மக்களுடன் ஒரு சில நிமிடங்கள் - அக்கரைப்பற்று மாநகரசபை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ள MI அஹ்பரோஸ் றூஹி !

தொழில் நுட்பக்கல்லூரி வட்டாரம் தேசிய காங்கிரஸினால் வெற்றி கொள்ளப்பட்டது !
06/05/2025

தொழில் நுட்பக்கல்லூரி வட்டாரம் தேசிய காங்கிரஸினால் வெற்றி கொள்ளப்பட்டது !

Address

London

Alerts

Be the first to know and let us send you an email when Lanka Front News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Lanka Front News:

Share