02/10/2022
எழுத்தாளர் புதுமைப்பித்தனின் ‘ஒரு நாள் கழிந்தது’ என்ற சிறுகதையை சமீபத்தில் படிக்க நேர்ந்தது.
அதில் ஏழை எழுத்தாளர் முருகதாசரின் ஒரு நாள் வாழ்க்கையை நமக்கு எடுத்துக் கூறியிருப்பார்.
அந்த கால கட்டத்தை புரிந்து கொள்ள வேண்டுமென்றால், சுதந்திரத்திற்கு முன்பு, ஒரு கிலோ அரிசியின் விலை என்னவென்று அறிந்திருக்க வேண்டும்.
அப்போது ஒரு கிலோ அரிசியின் விலை 12 பைசா, ஒரு கிலோ சர்க்கரை 40 பைசா, ஒரு கிலோ உருளை 25 பைசா. ஒரு லிட்டர் பாலின் விலை 12 பைசா.
இந்த சிறுகதையில் ஒரு இடத்தில் முருகதாசர், தன் நண்பரிடம் 3 ரூபாய் கேட்பார்.
அவர் தயங்கியபடி தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை. எட்டணா இருக்கிறது என்று கொடுத்துவிட்டுச் செல்வார்.
அன்றைக்கு 3 ரூபாய் இருந்தால் ஒரு மாதத்திற்கு தேவையான மளிகை சாமான்களை வாங்கி விடலாம்.
அன்றைய காலகட்டத்தில் ஒரு கிலோ உருளை கிழங்கின் விலையில் ஒரு லிட்டர் பெட்ரோல் வாங்கி விடலாம்.
குறைந்தபட்சம் 140 ரூபாய் இருந்தால் ஒரு விமான டிக்கெட் வாங்கலாம். 90 ரூபாய் இருந்தால் 10 கிராம் தங்கத்தை வாங்கி விடலாம்.
அப்போது 1 ரூபாயின் மதிப்பு 1 டாலராக இருந்தது.
இந்த கதையில் முருகதாசரின் வறுமையை புதுமைப்பித்தன் வார்த்தைகளால் சொல்லி கடந்து சென்றிருப்பார்.
அந்த வார்த்தைகளால் நமக்கு சோகம் ஏற்படாது, வருத்தம் ஏற்படாது. ஆனால் வறுமை என்னவென்று புரியும்.
எழுத்தாளர் புதுமைப்பித்தனின் ‘ஒரு நாள் கழிந்தது’ என்ற சிறுகதையை சமீபத்தில் படிக்க நேர்ந்தது. அதில் ஏழை எழுத்.....