Chengalpattu Clique

Chengalpattu Clique Chengalpattu, previously known as Chinglepet, is a city and the headquarters of Chengalpattu distric

03/09/2024

🤝🚀🎯 100% MSME கடன் மூலம் Education Academy அல்லது Games Center தொழில் தொடங்க ஆர்வமா??? 🚀🎯🤝
💸🤑💰 விர்ச்சுவல் ரியாலிட்டி தொழில்நுட்பம் மூலம் மாதந்தோறும் 5 லட்சம் வரை சம்பாதிக்கும் வாய்ப்பு 💸🤑💰
📞 Contact Us for more details:
+91 8300087771/2/3
🌐 Visit Our Website for more information:
www.learnova.in
📧[email protected]
Benefits :-
✅100% loan Options
✅Can avail 25to 35%of Subsidy
✅No Collateral
✅Dedicated Loan Manager
✅No Upfront Fees
✅3 Years or 5 Years repayment

Exciting Opportunity Alert!🚀 Join the Learnova VR & AR Academy franchise family today!🌟 Dive into the world of cutting-e...
21/09/2023

Exciting Opportunity Alert!

🚀 Join the Learnova VR & AR Academy franchise family today!

🌟 Dive into the world of cutting-edge technology education with our immersive VR & AR courses. Be a part of the future.

𝑭𝒐𝒓 𝑴𝒐𝒓𝒆 𝑫𝒆𝒕𝒂𝒊𝒍𝒔 𝑪𝒐𝒏𝒕𝒂𝒄𝒕 :
𝐏𝐡𝐨𝐧𝐞 : 083000 87772 | +919486386763
𝐌𝐚𝐢𝐥 : [email protected]
𝐖𝐞𝐛𝐬𝐢𝐭𝐞 : www.learnova.in

"Unlock the door to infinite possibilities with Learnova's VR & AR Academy. Embrace technology, embrace the future!" 🚀🌟🚀...
10/08/2023

"Unlock the door to infinite possibilities with Learnova's VR & AR Academy. Embrace technology, embrace the future!" 🚀🌟
🚀𝐖𝐞𝐛𝐬𝐢𝐭𝐞 : 𝐰𝐰𝐰.𝐥𝐞𝐚𝐫𝐧𝐨𝐯𝐚.𝐢𝐧
𝑭𝒐𝒓 𝑴𝒐𝒓𝒆 𝑫𝒆𝒕𝒂𝒊𝒍𝒔 𝑪𝒐𝒏𝒕𝒂𝒄𝒕 :
: +𝟗𝟏 𝟖𝟑𝟎𝟎𝟎𝟖𝟕𝟕𝟕𝟐 |+𝟗𝟏 𝟗𝟒𝟖𝟔𝟑𝟖𝟔𝟕𝟔𝟑
𝑴𝒂𝒊𝒍 : 𝐚𝐬𝐤@𝐥𝐞𝐚𝐫𝐧𝐨𝐯𝐚.𝐢𝐧

Introducing Learnova VR & AR Academy: Where Senior Learnovators Thrive! 🎓🚀👋 Hey fellow learners! At Learnova, we take pr...
27/07/2023

Introducing Learnova VR & AR Academy: Where Senior Learnovators Thrive! 🎓🚀
👋 Hey fellow learners! At Learnova, we take pride in nurturing the next generation of innovators in Virtual Reality (VR) and Augmented Reality (AR). 🕶️🔮
📚 Calling all Senior Learnovators aged 15-19! 🎉 Step into a realm of immersive experiences and cutting-edge technology as we guide you through the fascinating world of VR & AR. 🌐💡 Our expert instructors will fuel your creativity and equip you with the skills to shape the future.
🎓 Embrace the possibilities, expand your horizons, and make your mark on the world of VR & AR with Learnova Academy. Join us now and be part of the revolution!
🚀𝐖𝐞𝐛𝐬𝐢𝐭𝐞 : 𝐰𝐰𝐰.𝐥𝐞𝐚𝐫𝐧𝐨𝐯𝐚.𝐢𝐧
𝑭𝒐𝒓 𝑴𝒐𝒓𝒆 𝑫𝒆𝒕𝒂𝒊𝒍𝒔 𝑪𝒐𝒏𝒕𝒂𝒄𝒕 :
: +𝟗𝟏 𝟖𝟑𝟎𝟎𝟎𝟖𝟕𝟕𝟕𝟐 |+𝟗𝟏 𝟗𝟒𝟖𝟔𝟑𝟖𝟔𝟕𝟔𝟑
𝑴𝒂𝒊𝒍 : 𝐚𝐬𝐤@𝐥𝐞𝐚𝐫𝐧𝐨𝐯𝐚.𝐢𝐧

🌟 Calling all young adventurers to the Learnova VR & AR Academy! 🎮👦👧🎉 Introducing our exclusive "Junior Learnovators" pr...
25/07/2023

🌟 Calling all young adventurers to the Learnova VR & AR Academy! 🎮👦👧
🎉 Introducing our exclusive "Junior Learnovators" program, specially designed for bright minds aged 6 to 10! 🚀📚
🚀 Step into a world of immersive learning, where creativity knows no bounds and curiosity is the key! 🌈🤩 Our VR & AR Academy offers a fun-filled educational experience like never before.
🌐 From mind-boggling virtual adventures to interactive storytelling, our young learners will explore, create, and grow their tech skills with expert guidance. 👩‍🏫👨‍🏫
👉 Join our Junior Learnovators today and embark on a journey of endless possibilities in the realms of virtual reality and augmented reality! 🚀🔍
𝐖𝐞𝐛𝐬𝐢𝐭𝐞 : 𝐰𝐰𝐰.𝐥𝐞𝐚𝐫𝐧𝐨𝐯𝐚.𝐢𝐧
𝑭𝒐𝒓 𝑴𝒐𝒓𝒆 𝑫𝒆𝒕𝒂𝒊𝒍𝒔 𝑪𝒐𝒏𝒕𝒂𝒄𝒕 : 📱: +𝟗𝟏 𝟖𝟑𝟎𝟎𝟎𝟖𝟕𝟕𝟕𝟐 |+𝟗𝟏 𝟗𝟒𝟖𝟔𝟑𝟖𝟔𝟕𝟔𝟑 📧 𝑴𝒂𝒊𝒍 : 𝐚𝐬𝐤@𝐥𝐞𝐚𝐫𝐧𝐨𝐯𝐚.𝐢𝐧

🎉 Introducing Learnova VR & AR Academy! 🚀🌟 Calling all young adventurers! 🌈 Unleash your imagination with our exciting V...
21/07/2023

🎉 Introducing Learnova VR & AR Academy! 🚀
🌟 Calling all young adventurers! 🌈 Unleash your imagination with our exciting VR & AR courses at Learnova. 👦👧
🔍 At our academy, we believe in nurturing young minds from ages 6 to 10 as Junior Learnovators! 🎓💡 Dive into a world of virtual reality and augmented reality, where learning becomes an unforgettable adventure.
🎮 Through interactive experiences and fun challenges, our Junior Learnovators will discover new dimensions of creativity and knowledge. 🌌📚 Join us and be part of this thrilling learning journey!
👉 Enroll now and give your child the gift of boundless exploration! 🎈
𝐖𝐞𝐛𝐬𝐢𝐭𝐞 : 𝐰𝐰𝐰.𝐥𝐞𝐚𝐫𝐧𝐨𝐯𝐚.𝐢𝐧
𝑭𝒐𝒓 𝑴𝒐𝒓𝒆 𝑫𝒆𝒕𝒂𝒊𝒍𝒔 𝑪𝒐𝒏𝒕𝒂𝒄𝒕 : 📱: +𝟗𝟏 𝟖𝟑𝟎𝟎𝟎𝟖𝟕𝟕𝟕𝟐 |+𝟗𝟏 𝟗𝟒𝟖𝟔𝟑𝟖𝟔𝟕𝟔𝟑 📧 𝑴𝒂𝒊𝒍 : 𝐚𝐬𝐤@𝐥𝐞𝐚𝐫𝐧𝐨𝐯𝐚.𝐢𝐧

நீட் தேர்வு முடிவுகள் 2022 | 4 மாணவர்கள் முதலிடம்; தமிழக தேர்ச்சி விகிதம் 51.3%புதுடெல்லி: மருத்துவப் படிப்புகளுக்கான நீ...
08/09/2022

நீட் தேர்வு முடிவுகள் 2022 | 4 மாணவர்கள் முதலிடம்; தமிழக தேர்ச்சி விகிதம் 51.3%

புதுடெல்லி: மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. நேற்று (செப். 7) காலையே தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நீண்ட காத்திருப்புக்குப் பின்னர் நேற்றிரவு வெளியானது. இந்தத் தேர்வில் ஹரியாணாவைச் சேர்ந்த மாணவி உள்பட 4 பேர் 99.99 சதவீதம் மதிப்பெண் பெற்று முதலிடத்தைப் பிடித்துள்ளனர். மாணவர்கள் தங்கள் மதிப்பெண் விவரங்களை https://neet.nta.nic.in/ , ntaresults.nic.in என்ற இணையதளத்தில் சென்று அறிந்து கொள்ளலாம்.

நீட் 2022 இளங்கலை தேர்வு: எம்பிபிஎஸ், பிடிஎஸ் உட்பட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (நீட்) அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. இந்த தேர்வை தேசிய தேர்வு முகமை (என்டிஏ) ஆண்டுதோறும் நடத்திவருகிறது. அதன்படி, நடப்பாண்டுக்கான நீட் தேர்வு, நாடு முழுவதும் 497 நகரங்களில் அமைக்கப்பட்ட 3,570 மையங்களில் கடந்த ஜூலை 17-ம் தேதி நடந்தது. இந்த தேர்வை 17.78 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர். இதில், 9.03 லட்சம் பேர் மருத்துவப் படிப்பில் சேர தகுதி பெற்றுள்ளனர். இவர்களில் 4.47 லட்சம் பேர் ஓபிசி வகுப்பைச் சேர்ந்தவர்கள். 1.31 லட்சம் பேர் பட்டியலினத்தையும், 47,295 பேர் பழங்குடியின வகுப்பையும் 84,070 பேர் பொருளாதார ரீதியாக பின்தங்கிய உயர் வகுப்பினர் பிரிவையும், 2.82 லட்சம் பேர் பொதுப் பிரிவையும் சேர்ந்தவர்களாவர்.

தமிழகத்தின் தேர்ச்சி விகிதம்: தமிழகத்தில் மட்டும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் தேர்வில் பங்கேற்றனர்.இவர்களில் மொத்தம் 51.3% பேர் (67,787 பேர்) தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் குறைவு. கடந்த ஆண்டு 54.40% பேர் தேர்ச்சியடைந்தனர். அதேபோல் மதிப்பெண் அடிப்படையில் முதல் 50 இடங்களைப் பிடித்தவர்களில் இருவர் மட்டுமே தமிழகத்தைச் சேர்ந்தவர்களாவர். தமிழகத்தில் மாணவர் திரிதேவ் விநாயகா 705 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார். இவர் தேசிய அளவில் 30வது இடத்தை பிடித்துள்ளார். தமிழக மாணவி ஹரிணி 702 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடம் பிடித்துள்ளார். இவர் தேசிய அளவில் 43வது இடத்தைப் பிடித்துள்ளார்.

முதல் 50 இடங்களில் அதிகபட்சமாக கர்நாடகாவில் இருந்து 9 பேர் இடம்பெற்றுள்ளனர். அடுத்தபடியாக டெல்லி, தெலங்கானாவில் தலா 5 பேர் இடம்பெற்றுள்ளனர். இத் தேர்வில் நாடு முழுவதும் 4 பேர் 99% பெற்றுள்ளனர். ராஜஸ்தானின் தனிஷிகா, (ராஜஸ்தானில் தேர்வெழுதிய தனிஷிகாவின் சொந்த ஊர் ஹரியாணா) டெல்லியின் வட்ஸ் ஆசிஷ் பத்ரா, ஹ்ரிஷிகேஷின் என்.கங்குலி மற்றும் ருச்சா பவாஷேஎ 720க்கு 715 மதிப்பெண் பெற்று 99.99% உடன் முதலிடத்தில் உள்ளனர். தேசிய அளவில் உத்தரப் பிரதேசம் மற்றும் மஹாராஷ்டிரா மாணவர்கள் அதிகளவில் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தாமதமான முடிவுகள்: நீட் தேர்வு முடிவுகள் ஆகஸ்ட் இறுதியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், திட்டமிட்டபடி விடைத்தாள் திருத்தும் பணிகள் முடிவடையாததால் முடிவுகள் வெளியீட்டில் தாமதம் ஏற்பட்டது. இதனால் நாடு முழுவதும்இளநிலை மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கையை தொடங்குவது தள்ளிப்போனது. தமிழகத்தில் நடத்தப்படவிருந்த இளநிலை பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வும் தள்ளிவைக்கப்பட்டது. இதனால், நீட் தேர்வு முடிவுகளை விரைவாக வெளியிட வேண்டும் என பல்வேறு தரப்பிலும் கோரிக்கைகள் வைக்கப்பட்டன. இந்நிலையில், நீட் தேர்வு முடிவுகள், நேற்று (செப். 7-ம் தேதி) இரவில் வெளியானது. நீட் தேர்வுக்கான தற்காலிக விடைக்குறிப்பு, தேர்வர்களின் ஓஎம்ஆர் விடைத்தாள் நகல்கள் கடந்த ஆக. 31-ம் தேதி வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.









ரூ.2-க்கு இட்லி, ரூ.3-க்கு தோசை: விவசாயிகள், கூலி தொழிலாளர்கள் பசியாற்றும் ஏ.புனவாசல் கிராமம்கடலாடி அருகே ஏ.புனவாசல் கிர...
07/09/2022

ரூ.2-க்கு இட்லி, ரூ.3-க்கு தோசை: விவசாயிகள், கூலி தொழிலாளர்கள் பசியாற்றும் ஏ.புனவாசல் கிராமம்

கடலாடி அருகே ஏ.புனவாசல் கிராமத்தில் ரூ.2-க்கு இட்லியும், ரூ.3-க்கு தோசையும் விற்பனை செய்யப்படுகிறது.

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே ஏ.புனவாசல் கிராமத்தில் விவசாயிகளும், கூலித் தொழிலாளர்களும் அதிகமாக உள்ளனர். இவர்கள் விவசாயம், கரி மூட்டத் தொழில் செய்கின்றனர். இக்கிராமத்தில் 5-க்கும்மேற்பட்ட இட்லிக் கடைகள் உள்ளன. இக்கடைகளில் ஒரு இட்லி ரூ.2 முதல் ரூ.5-க்கும், தோசை ரூ.3-க்கும் சட்னி, சாம்பாருடன் விற்பனை செய்யப்படுகிறது.

காலையில் மட்டும் விற்பனை செய்யப்படும் இக்கடைகளில் விவசாயிகள், கூலித் தொழிலாளர்கள் ஏராளமானோர் சாப்பிட்டுச் செல்கின்றனர். அதேபோல் கமுதி அருகே கோவிலாங்குளம் கிராமத்தில் தோசை ரூ.4 முதல் ரூ.5-க்கும்,ஊத்தப்பம் ரூ.3-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதற்கு தேங்காய் சட்னி, காரச் சட்னி,சாம்பார் வழங்கப்படுகிறது. ஒருவர் ரூ.10 முதல் ரூ.25-க்குள் காலை உணவை நிறைவு செய்யலாம்.

சென்னை, திருச்சி, மதுரை, கோவை உள்ளிட்ட நகரங்களில் இட்லி ரூ.10-க்கும், தோசை ரூ.40 முதல் ரூ.60-க்கும் விற்பனை செய்யும் நிலையில் ஏ.புனவாசல், கோவிலாங்குளம் கிராமங்களில் குறைந்த விலையில் இட்லி, தோசை விற்பனை செய்யப்படுவது வெளியூர் மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

அரிசி, பருப்பு, காய்கறிகள் விலை கடுமையாக உயர்ந்தாலும் இப்பகுதியில் போட்டி போட்டுக்கொண்டு குறைந்த விலைக்கு இட்லி, தோசை விற்பனை செய்கின்றனர்.

அதேபோல் ஏ.புனவாசல், மாரியூர், எம்.கரிசல்குளம் உள்ளிட்ட கிராமங்களில் ரூ.1-க்கு ஒரு போண்டா அல்லது ஒரு வடை விற்கப்படுகிறது. இதுவே நகரங்களில் ரூ.5 முதல் ரூ.15 வரை விற்கப்படுகிறது.

ஏ.புனவாசலில் வீட்டின் அருகே உள்ள பெட்டிக் கடையில் இட்லிக் கடை நடத்தி வரும் முருகவள்ளி(38) என்ற பெண் கூறியதாவது:

கடந்த 15 ஆண்டுகளாக இட்லி வியாபாரம் செய்து வருகிறேன். ஏழை, எளிய மக்கள், விவசாயிகள் பயனடையும் வகையில் லாப நோக்கம் இன்றி ஒரு இட்லி ரூ.2.50-க்கு விற்பனை செய்கிறேன். காலையில் மட்டும் இந்த வியாபாரம் செய்கிறேன். வியாபாரம் முடிந்ததும் விவசாய வேலை அல்லது நூறு நாள் வேலைக்குச் சென்றுவிடுவேன்.

எந்த வியாபாரம் செய்தாலும் மனசாட்சிக்குப் பயந்து செயல்பட வேண்டும் என்ற நோக்கில் குறைந்த லாபத்தில் பால் உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்து வருகிறேன் என்றார்.

இக்கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் கூறும்போது, விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ள நிலையிலும் கிராமத்தில் குறைந்த லாபத்தில் இக்கடைகள் இயங்கி வருவது எங்களுக்கு உதவியாக உள்ளது என்றனர்.








இணையத்தில் முன்பதிவு செய்தால் இருவழி பயணச்சீட்டுக்கு 10 சதவீதம் சலுகை: விரைவு போக்குவரத்து கழகம் தகவல்சென்னை: இணையம் மூ...
05/09/2022

இணையத்தில் முன்பதிவு செய்தால் இருவழி பயணச்சீட்டுக்கு 10 சதவீதம் சலுகை: விரைவு போக்குவரத்து கழகம் தகவல்

சென்னை: இணையம் மூலம் இருவழிப் பயணச்சீட்டை முன்பதிவு செய்வோருக்கு, திரும்பி வருவதற்கான பயணச்சீட்டு கட்டணத்தில் 10 சதவீதம் சலுகை வழங்கப்படுவதாக விரைவு போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து அவர்கள் கூறியதாவது. விரைவு போக்குவரத்து கழகத்தின் கீழ் அதிநவீன மிதவைப்பேருந்து, குளிர்சாதனப் பேருந்து, குளிர்சாதன படுக்கை மற்றும் இருக்கை வசதி கொண்ட பேருந்து, கழிப்பறை வசதியுடன் கூடிய பேருந்துகள் என 1,082 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

தமிழகம் மட்டுமின்றி, ஆந்திரா, கேரளா, கர்நாடகா, புதுச்சேரி மாநிலங்களுக்கும் சேர்ந்து, மொத்தம் 251 வழித்தடங்களில் இப்பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

300 கி.மீ.க்கும் அதிக தொலைவில் உள்ள மாவட்டங்களுக்கு இயக்கப்படும் பேருந்துகளில் பயணச்சீட்டை முன்பதிவு செய்வதற்கான வசதி கடந்த 2006-ம்ஆண்டு முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. தற்போது இணையதளம் மற்றும் கைபேசி செயலி மூலம், ஒரு மாதத்துக்கு முன்பே பயணச்சீட்டை முன்பதிவு செய்து கொள்ளலாம்.

இந்நிலையில், பயணிகள் நீண்ட தொலைவுப் பேருந்துகளில் பயணிப்பதை ஊக்குவிக்கவும், தனியார் பேருந்துகள், ரயில் போன்றவற்றில் பயணிப்போரை ஈர்க்கவும், விழா நாட்கள் நீங்கலாக, இதர நாட்களில் இணையவழி மூலமாக இருவழிப் பயணச்சீட்டு முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு, 10 சதவீதம் தள்ளுபடிவழங்கப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், சட்டப்பேரவையில் அறிவித்தார்.

தற்போது இந்த அறிவிப்பு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, ஒரே நேரத்தில் ஊருக்குச் சென்று வருவதற்கான பயணச்சீட்டை இணையவழியில் முன்பதிவு செய்தால், திரும்பி வருவதற்கான பயணச்சீட்டு கட்டணத்தில் 10 சதவீத சலுகை வழங்கப்படுகிறது. விழா நாட்களுக்கு இந்த சலுகை பொருந்தாது.

இதை பயன்படுத்த விரும்புவோர் https://www.tnstc.in என்ற இணையதளம் அல்லது tnstc கைபேசி செயலியை அணுகலாம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.









மாநகராட்சி, நகராட்சிகளில் காலியாக உள்ள பணியிடங்களை டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்ப நடவடிக்கை - அமைச்சர் கே.என்.நேரு தகவல்திருந...
03/09/2022

மாநகராட்சி, நகராட்சிகளில் காலியாக உள்ள பணியிடங்களை டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்ப நடவடிக்கை - அமைச்சர் கே.என்.நேரு தகவல்

திருநெல்வேலி: தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் காலியாக உள்ள பணியிடங்களை டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசின் வளர்ச்சித் திட்டப் பணிகளைத் தடுத்தால், கடும் நடவடிக்கை எடுக்குமாறு முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால், அவர்களது பதவி பறிக்கப்படும்.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 13 கடற்கரை கிராமங்களுக்கு, ரூ.25 கோடி மதிப்பில் பொன்னன்குறிச்சி தனி குடிநீர்த் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலம்முறையாக குடிநீர் கிடைக்கவில்லை என்று புகார்கள் வந்துள்ளன. இதனால், இதற்கு மாற்றுத் திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

திருநெல்வேலி மாநகராட்சிக்கான அரியநாயகபுரம் கூட்டுக் குடிநீர்த் திட்டம் ஒரு மாதத்தில் முடிக்கப்பட்டு, மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும். திருநெல்வேலி மாநகராட்சியில் தொய்வு நிலையில் இருக்கும் பாதாள சாக்கடைத் திட்டத்தை மறு மதிப்பீடு செய்து, புதிய திட்டம்தயாரித்து ஒப்பந்தம் கோரப்படும்.

தமிழகம் முழுவதும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில்உள்ள காலி பணியிடங்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) மூலம்விரைவில் நிரப்பப்படும். சாதாரண பணியிடங்களை புற ஆதார அடிப்படையில் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

சென்னையில் ரூ.983 கோடியில்..

சென்னையில் ரூ.983 கோடியில் மழைநீர் வடிகால் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணிகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளன. தூத்துக்குடியில் மழைநீர் வடிகால் பணிகள்ரூ.84 கோடி மதிப்பில் நடைபெற்று வருகின்றன. இவ்வாறு அமைச்சர் நேரு கூறினார்.











Address

Main Street
Chengalpattu
603001

Alerts

Be the first to know and let us send you an email when Chengalpattu Clique posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Chengalpattu Clique:

Share