Swamy Sadaananda Saraswathi

Swamy Sadaananda Saraswathi good

26/09/2025
26/09/2025

சாமியார் தவறு செய்கிறார் யார் காரணம்.
ஐயா கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள் அறிவானவர்களே சாமியார்களை வீட்டில் அழைத்து அவர்களுக்கு பொன்னும் பொருளும் கொடுத்தது யார் ?
சாமியார்களுக்கு சேவை செய்ய முற்பட்டது யார் ?
சாமியாருக்கு பணத்தைக் கொடுத்து உயர்ந்த இடத்தில் அமர்த்தியது யார் ?
சாமியாரை கடவுளுக்கு நிகரானவர் என்று அவருடைய பொருளாதாரத்தை வைத்து கணக்கிடும் பாமரன் யார் ?
அவர் சொல்லும் முட்டாள்தனமான கதைகளை கேட்டு அதுதான் உண்மை என நம்பும் மனிதன் யார்?
இனம் காணாமல் ஏமாறும் மனிதர்கள் நீங்களே ....
துறவி இலக்கணம் எப்படி இருக்க வேண்டும் என்று சாஸ்திரம் சொல்கிறதோ அதுபோல் எந்த துறவி இருக்கிறான் என்பதை பார்க்க மறந்து விட்டு எந்தத் துறவி பணத்தை அதிகமாக வைத்திருக்கிறானோ அவனை சிறந்தவன் என தப்பு கணக்கு போடும் மனிதன் யார் ?
எல்லா தவறுகளையும் நீங்கள் செய்துவிட்டு ஆன்மீகத்தில் குறைக்காணும் உங்கள் அறிவு எங்கு சென்றது.
அறிஞர்களே... பெரியோர்களே... சிந்தியுங்கள்.
ஆன்மிகம் என்பது வசதியான பகட்டு வாழ்க்கை அல்ல....
சுய ஒழுக்கத்தின் பிம்பமாக இருக்க வேண்டும் .
ஆசை அற்றவனாகவும் எதன் மேலும் பற்றி இல்லாதவனாகவும் தனித்து வாழக்கூடிய தன்மை கொண்டவனாகவும் இருத்தல் வேண்டும்.
மாற்றான் மனைவியோ அல்லது பெண்களையோ தன் இச்சைக்கு பயன்படுத்தும் மாய வலை விரிக்கும் மந்திரவாதியாக இல்லாமல் உன் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு அறிவுரை சொல்பவனாக இருத்தல் வேண்டும்.
நீங்களும் சமூகம் திருந்தாமல் சாமியாரை குற்றம் சொல்லக்கூடாது.
எவன் ஒருவன் சுய ஒழுக்கத்திலும் எல்லோரிடமும் அன்பாகவும் பண்பாகவும் அடக்கமாகவும் சிறந்த ஆற்றல் அறிவு கொண்டவனாகவும் இருக்கிறானோ அவனை மதிக்க கற்றுக் கொள்ளுங்கள் அவனை சிறந்தவன் என்று போற்றுங்கள் பிற்காலத்தில் வரும் ஆன்மீகவாதிகள் கற்றுக் கொள்ள நீங்கள் வாய்ப்பு கொடுங்கள் தலைமுறைகளை அழிக்கும் சமுதாயமாக நீங்கள் இருந்து விடாதீர்கள்.

26/09/2025

உன்னுடன் வராது நீ சம்பாதித்த பணம் வராது உன் உறவு வராது உன் மனைவி வரமாட்டாள் நீ செய்த புண்ணியம் பாவம் மட்டும் உன்னுடன் வரும்

26/09/2025
26/09/2025

அழகு உன்னை விட்டு விலகும் இளமை உன்னை விட்டு விலகும் உன் அறிவு என்றும் விலகாது.

26/09/2025

பிறக்கும்போதே மரணம் உன் தலையில் வைக்கப்பட்டுள்ள சுமையாகும் இதை யாரிடமும் நீ இறக்கி வைக்க முடியாது.

26/09/2025

பணம் வசதியை கொடுக்கலாம் பணம் மற்றவர்களிடம் உனக்கு பெருமையை கொடுக்கலாம் ஆனால் உன் வாழ்க்கையை கொடுக்காது.

26/09/2025

உன்னை ஏமாற்றியவர் சந்தோஷப்படலாம் ஆனால் நிம்மதி இழந்து விடுவார்கள்.

26/09/2025

வாழ்க்கையில் நீ ஏமாற ஆயிரம் காரணங்கள் இருந்தாலும் நீ புத்திசாலி என நிரூபிக்க ஒரு காரணம் கிடைத்துவிடும்.

26/09/2025

பூனையை ஆயிரம் முறை புலி என்று சொன்னாலும் பூனை தன்னைப் புலி என்று நம்பினாலும் இறுதியில் ஏமாறுவது பூனையே.

17/06/2023

Address

Chennai

Website

Alerts

Be the first to know and let us send you an email when Swamy Sadaananda Saraswathi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category