Swamy Sadaananda Saraswathi

Swamy Sadaananda Saraswathi good

உங்கள் வாழ்க்கையை நீங்கள் வாழ வேண்டும் சிறிய கதை. ஒரு மாமரம் தன்னுடைய இரண்டு குழந்தைகள் நன்றாக இருக்க வேண்டும் என்று ஆசை...
18/10/2025

உங்கள் வாழ்க்கையை நீங்கள் வாழ வேண்டும் சிறிய கதை.
ஒரு மாமரம் தன்னுடைய இரண்டு குழந்தைகள் நன்றாக இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டது. அந்த இரண்டு குழந்தைகளும் தன் அருகில் வளர்ந்து கொண்டு இருந்தது.
தாய் மாமரம் தனக்கு ஊற்றும் தண்ணீரை தன் குழந்தைகளுக்கு ஊற்ற வேண்டும் என்பதற்காக அந்த தண்ணீரை உறிஞ்சாமல் அப்படியே இருந்தது.
ஆனால் அந்த உதவாக்கரை இரண்டு குழந்தைகளும் தண்ணீரை எவ்வாறு பயன்படுத்துவது என்பது தெரியாது அது வளராமல் தழைக்காமல் கருகிக் கொண்டே இருந்தது.
அந்த தாய் மரம் தன் குழந்தைகளுக்காகவே தினமும் மழை நீரையும் அந்த விவசாயி கொடுக்கக்கூடிய நீரையும் உறிஞ்சாமல் அது மேனி வருத்திக்கொண்டு இருந்தது.
ஒரு நாள் அந்த விவசாயி இந்த மண்ணிற்கு இந்த மாமரம் சரியாக வருவதில்லை போல் தெரிகிறது எனவே இந்த மூன்று மரங்களையும் வெட்டி வீசிவிட்டு வேறு மரங்களை நடலாம் என்று முடிவு செய்தார். கதையின் கருத்து.
இப்போது நாம் விஷயத்திற்கு வருவோம்.
இன்று இருக்கும் நம் மக்கள் அனைவரும் இவ்வாறுதான் தன் குழந்தைகளுக்காக என்று தன்னை வருத்திக்கொண்டு குழந்தைகள் வாழ்க்கைக்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணிக்கின்றார்கள்.
ஆனால் இது எவ்வளவு தூரம் என்பது உங்களுக்கு தெரியாது.
காரணம்.
உங்கள் வாழ்க்கை அழிவதோடு உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தையும் நீங்கள் அளிக்கிறீர்கள் என்பதை மறந்து விடாதீர்கள். எந்த ஒரு குழந்தையும் தன்னுடைய வாழ்க்கையை தானே தீர்மானம் செய்து கொள்ள வேண்டும் மற்றும் அந்த குழந்தை எவ்வாறு வாழ வேண்டும் என்று பெற்றோர்கள் கற்றுக் கொடுக்க வேண்டுமே தவிர அவர்களுடைய வாழ்க்கையை தாங்கள் வாழ நினைப்பது தவறு என்பதுதான் இந்த நீதி. ஹரி ஓம் சிவாய நமஹ சென்னை.

14/10/2025
கடவுள் சிலையின் மேல் ஒரு துறவி காலை வைப்பது தவறு என்பது கூட தெரியாத ஒரு சூழலில் இன்றைய ஆன்மீகம் சென்று கொண்டிருக்கிறது
04/10/2025

கடவுள் சிலையின் மேல் ஒரு துறவி காலை வைப்பது தவறு என்பது கூட தெரியாத ஒரு சூழலில் இன்றைய ஆன்மீகம் சென்று கொண்டிருக்கிறது

04/10/2025

பகுத்தறிவு... பகுத்தறிவு... என்று பண்புகட்ட இளைஞர்களை உருவாக்கியதே மிச்சம்.

04/10/2025

பெற்றவருக்கு தன் கடமையை நிறைவேற்ற வில்லை,
பிறந்த தேசத்திற்கு தன் சேவை நிறைவேற்ற வில்லை
ஆனால் எவனோ ஒருவனுக்காக உயிரைத் துறக்கும் இந்த இளைஞர் சுவாமி விவேகானந்தரும் அப்துல் கலாமும் கண்ட கனவுகள் இவர்களா?

04/10/2025

அறியாமை என்பது நடிகனை தன் கடவுளாக நினைத்து அவனுக்காக உயிர் சிந்துவதும் தான்

04/10/2025

சினிமாதான் உலகம் நடிகர்கள் தான் கடவுள் என இன்றைய இளைஞர்களின் மூளையை எவ்வளவு சலவை செய்ய முடியுமோ அவ்வளவு செலவு செய்து இன்று எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கிய திரைப்பட உலகத்திற்கு நன்றி.....

Address

Chennai

Website

Alerts

Be the first to know and let us send you an email when Swamy Sadaananda Saraswathi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category