17/09/2021
மனம் திறந்து பேசும் துரை வைகோ
“மத்திய அமைச்சர் பதவி இரண்டு தடவை அப்பாவைத் தேடி வந்தது. எனக்குத் தெரிந்து அத்வானி எங்கள் வீட்டிற்கு வந்து இரண்டு மணி நேரம் இருந்து அப்பாவைப் பதவி ஏற்க வலியுறுத்தினார். ‘பாதுகாப்பு, நிதி தவிர என்ன துறை வேண்டுமானாலும் கேளுங்கள்’ என்றார். பாதுகாப்பு அமைச்சர் என்ற கவலை இல்லாமல் இலங்கை போய்விடுவார் என்று அவர்களுக்கு அச்சம். நிதி கொஞ்சம் சிக்கலான ஏரியா என்பதாக இருக்கலாம். ஆனால், அப்பா சகாக்கள் இருவருக்குப் பதவிகளை வாங்கிக்கொடுத்தார். சாதாரண எம்.பியாக இருந்துகொண்டு அப்பா செய்த சாதனைகளையே பெரும் பட்டியல் போடலாம். தொழிலாளர்களுக்கு மே 1 விடுமுறை, என்.எல்.சி தனியாருக்குப் போய்விடாமல் தடுத்தது, தேசிய நதிகளை இணைப்பது சாத்தியப்படாது என்றபோது நதிநீர் இணைப்புக்குத் தனிநபர் மசோதா கொண்டு வந்ததெல்லாம் சில உதாரணங்கள். எம்.பியாகவே இவ்வளவு செய்திருக்கும்போது, அமைச்சராக இருந்தால் எவ்வளவு செய்திருக்கலாம். அப்படிச் செய்திருந்தால் இன்னும் அவருக்குப் பெயர் கிடைத்திருக்கும். அமைச்சர் பதவியை மறுத்தது அவரது அரசியல் வாழ்க்கையில் மிகப் பெரிய பின்னடைவு. அப்படி ஏற்றிருந்தால் அரசியல் ஆளுமையைக் காண்பித்து தமிழ்நாட்டிற்கு எவ்வளவோ நல்லது நடந்திருக்கும். அதைச் செய்ய அப்பா தவறினார். சராசரி அரசியல்வாதியாக இருக்கக்கூடாது என அவர் நினைத்திருக்கலாம். இங்கே அதிகாரம் இருந்தால்தான் மக்களுக்கு நல்லது செய்ய முடிகிறது.”
M. K. Stalin Udhayanidhi Stalin Durai Vaiko DMK - Dravida Munnetra Kazhagam MDMK