Her Stories

Her Stories Publisher, feminist collective, Her Stories Foundation

பாரதி திலகர் எழுதும் ‘சினிமாவுக்கு வாரீகளா?’ தொடரில் இன்று ‘என் மனைவி’மருத்துவராக கே.சாரங்கபாணி மிக இயல்பாக நடித்துள்ளார...
14/11/2023

பாரதி திலகர் எழுதும் ‘சினிமாவுக்கு வாரீகளா?’ தொடரில் இன்று ‘என் மனைவி’

மருத்துவராக கே.சாரங்கபாணி மிக இயல்பாக நடித்துள்ளார். மனைவி மீது சந்தேகம் கொண்டு சாலையில் நடக்கும் விதம், வேகம் கொண்ட அவரின் நடை, தன்பாலிடம் புகைப்படத்தைக் காட்டி கேட்பது எல்லாம் அப்படியே பொருந்தி விடுகிறது. என்னைப் பொறுத்தவரை அவரது மிகச் சிறந்த படம் இதுதான். தனிப்பட்ட வாழ்வில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இவர், அண்ணா புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அடையாறு மருத்துவமனையில் இருந்த போது. நாள்தோறும் கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்துவிட்டு, குங்குமத்தை அண்ணா நெற்றியில் பூசி விடுவாராம். நாத்திகரான அண்ணாவும் அழிக்கவே மாட்டாராம். அந்த அளவிற்கு இருவரின் நட்பும் இருந்து இருக்கிறது.

மனைவி செல்லம் வெளியில் சென்று வரும்போது நல்லபடி அலங்காரம் செய்து கொண்டு செல்வதில் இவருக்குச் சந்தேகம். செல்ல.....

எழுத்தாளர், பேச்சாளர், திரைக்கதை ஆசிரியர் தீபா ஜானகிராமனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்:-)
14/11/2023

எழுத்தாளர், பேச்சாளர், திரைக்கதை ஆசிரியர் தீபா ஜானகிராமனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்:-)

Jothilakshmi V SWatched the movie 'Irugapatru' yesterday. A good attempt on the theme of marital relationships. But in r...
13/11/2023

Jothilakshmi V S

Watched the movie 'Irugapatru' yesterday. A good attempt on the theme of marital relationships. But in real life,

1. பவித்ரா- ரங்கேஷ் திருமண முறிவை தடுக்கவே முடியாது. ரங்கேஷ் என்பவர் நாம் தினம் பார்க்கும் சாமானிய இந்திய ஆண். தன் வாழ்க்கையையும், அது சார்ந்த முக்கிய முடிவுகளையும் பொறுப்புடன் எடுக்காமல், மற்றவர்கள் மேல் பழியை சுமத்திக்கொண்டு, சுற்றி உள்ளவர்களை சுரண்டி வாழும் chronic abuser. இன்று விவாகரத்து கோரி வரும் பவித்ராக்கள் 75 சவரன் நகையை தன் கணவரின் வளர்ச்சிக்காக கொடுக்காதவர்கள் இல்லை. எல்லாவற்றையும் கொடுத்தும், பொறுப்பில்லாமல் பொருள் இழந்து, உலகத்திலேயே தனக்கு தான் stress & depression என்று அழுது, முழு குடிகாரனாகி, கடன் சேர்த்து, தன் மேல் அன்பு உள்ளவர்களை காயப்படுத்தி, மீண்டும் 'என் எல்லா தோல்விக்கும் நீயும் இந்த குடும்பமும் தான் காரணம்' என்று ரங்கேஷின் பழியை சுமந்து கொண்டு, உறவில் துளியும் மதிப்பின்றி, மனதளவிலும் பொருளாதாரத்திலும் முழுவதுமாக உடைந்து வரும் பெண்கள்.

தன்னுடன் உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கும் பெண்ணை மோசமாக பார்த்'து', அவர் உடல் அமைப்பு குறித்து பாராட்டுவதாக வழிந்'து', அப்பெண் தன் கணவனும், குழந்தைகளும் கூட இவ்வாறு தான் சொல்வார்கள் என்று 'சமயோஜிதமாக' அந்த sexual harassment-ஐ கையாண்டு, ரங்கேஷ் அதன் பின் தன் வாயை மூடிக்கொண்டு treadmill-இல் நடந்'து'...
பாவம் ரங்கேஷ், என்ன பண்ணுவார்.. அவர் குடும்பமும், மனைவி பவித்ராவும் தானே காரணம். He is a good man and a supportive husband, இல்ல?

2. நிஜத்தில் விவாகரத்து கோரி வரும் திவ்யாக்கள், அர்ஜுன் மாதிரியான தன் மேல் நம்பிக்கை இல்லாத, தாழ்வு மனப்பான்மை கொண்டுள்ள, கணவர்களுக்கு இரண்டாம் வாய்ப்பு கொடுக்காதவர்கள் இல்லை.
மீண்டும் வாய்ப்பு கொடுத்து,
மீண்டும் மீண்டும் வாய்ப்பு கொடுத்து, அவர் கேட்பது போல் குழந்தைக்காக வேலையை விட்டு, காதலுக்காகவோ, குழந்தைக்காகவோ ஏழு முதல் பத்து ஆண்டு வரை உணர்வு பூர்வமாக திருமண உறவில் வாழ்ந்து, அர்ஜுன் போன்றோர்கள் முன் உணர்ந்ததாக சொன்னது எல்லாம் தற்காலிகமானவை, அவர்கள் வேலை பளு, மேனேஜரின் துன்புறுத்தல், EMI,.. என்று பல காரணம் காட்டி, குழந்தைகள் முன்னிலையில் கூட கோவமாக கண்ணியமின்றி மனைவியை நடத்துவது, அடிப்பது, தினம் வீட்டிற்கு வந்தவுடன் தேள் போல் கொட்டிக்கொண்டே இருப்பது....

திவ்யாக்கள் சமையல் அறையிலும், கழிப்பறையிலும் அழுது தீர்த்து, போதும் இந்த உறவு என்று வெளியே போகும் போது, 'நீ விட்டுட்டு போயிட்டா தற்கொலை செய்து கொள்வேன்' என்று இமோஷனல் பிளாக்மெயில் செய்வது,.. மத்திம வயது தொடும் போது இப்படித்தான் மாறுகிறார்கள் நம் அர்ஜுன்கள்.

இதற்கு மேல் உறவில் கொடுக்கவும், பெறவும் ஒன்றுமில்லை என்று மொத்தமாக வடிந்து தீர்ந்து, உணர்வின்றி போன பின் மீண்டும் விவாகரத்து நிவாரணம் தேடி வந்து கொண்டிருப்பவர்கள் தான், திவ்யாக்கள்.

3. மித்ரா போன்ற மனித உறவுகள் சார்ந்த பிரச்சனைகளை வேலை நிமித்தமாக தினம் கையாளும் ஒரு பெண்,
மன நல ஆலோசகரோ,
காவல் அதிகாரியோ,
வழக்கறிஞரோ,.. நிஜத்தில், தன் ஆசைகள், பயம் போன்றவைகளை பேப்பர் மூட்டைகளில் எல்லாம் எழுதி வைத்து கொள்வதில்லை. தனி app, alarm வைத்து கொண்டு தன் இணையரை impress செய்து கொண்டிருப்பதில்லை.

தினம் தன் மேசையின் மறுபக்கம் அழுது கொண்டு இருக்கும், திருமண உறவில் உள்ள ஆண்கள் மற்றும் பெண்களை கையாளும் வேலையில் உள்ள பெண்கள்,
பத்து ஆண்டுகள் ஆழமாக காதலித்த நல்ல மனிதர்கள் கூட திருமணம் என்ற உறவில் வந்த ஆறு மாதத்தில் எதனால் பிரிகிறார்கள்,

நம் சமுக அமைப்பு மற்றும் அழுத்தம் மனிதர்களை, அவர்தம் உறவுகளை எவ்வாறு சிதைக்கிறது,
எவ்வாறு நிதி மேலாண்மை இல்லாத மனிதர்களது குடும்ப உறவு நிச்சயம் உடைந்து போகிறது,
ஆண் மட்டுமே உணர்வுகளோடு வாழ இடம் உள்ள நம் திருமண அமைப்பில், இன்று பெண்களும் தனக்கான இடத்தை உறுதி செய்யும் போது, உறவுகளில் ஏற்படும் அடிப்படை மாற்றங்கள்
போன்ற பலவற்றை மிக எளிதாக புரிந்து கொள்ள முடிகிறது.

என்னிடம் சின்ன சின்ன சண்டைகள் செய்,
என் போனை எடுத்து நான் மற்றவர்களிடம் பேசுவதை நோட்டம் செய்,

என்னை வேலையில் இருந்து சீக்கிரம் வர சொல்லி தொந்தரவு செய்,
என்று மன வளர்ச்சி இன்றி முகத்தை திருப்பி கொள்ளும் மனோகரிடம்,
'உனக்கு வலி பிடிக்கிறதென்றால் சுவற்றில் போய் முட்டிக்கொள். அதற்காக உன்னை தள்ளி விட என்னை வற்புறுத்தாதே.. I'm not an abuser', என்று தெளிவாக சொல்லிவிட்டு வேலையை பார்க்க செல்வார்கள்!
இன்றைய காலத்தில் திருமண உறவை, எது
ஆரோக்கியமானதாக வைக்கிறது?

திருமண உறவில் தான் காயமடையும் பட்சத்தில், தனக்கு துணையாக பெற்றோர், நண்பர்கள், மற்றும் சட்டத்தை அமல்படுத்தும் மையங்கள, இருக்கும் என்ற,
பெண்ணின் தைரியமும்,
தன் வசதி, விருப்பதிற்காக, மனைவியை மாண்பு குறைவாக நடத்தினால் அப்பெண் நிச்சயம் உறவில் இருந்து வெளியேறி விடுவாள்,
குடும்பமாக இல்லை என்றால் சொந்த பந்தங்கள் மதித்து திருமண அழைப்பு கூட கொடுக்க மாட்டார்கள்,
துணையாக உடன் வாழும் பெண்ணிற்கு கட்டாயம் மதிப்பளித்து வாழ்ந்தால் மட்டுமே தனக்கு குடும்பம் அமையும் என்ற,
ஆணின் பயமும்,
இன்றைய திருமணங்களை காப்பாற்றும்.
மற்றபடி,
படம், நல்ல படம் தான்.
ஆண் மனதை புரிந்து கொண்டு, ஆண்களுக்காக வெளியாகி உள்ளது.
As always!

கமலியின் கட்டுரைஇந்துக்களின் முக்கியப் பண்டிகைகளான தீபாவளியும் பொங்கலும் பெண்களின் உழைப்பை மொத்தமாகச் சுரண்டி எடுப்பவை. ...
13/11/2023

கமலியின் கட்டுரை

இந்துக்களின் முக்கியப் பண்டிகைகளான தீபாவளியும் பொங்கலும் பெண்களின் உழைப்பை மொத்தமாகச் சுரண்டி எடுப்பவை. தீபாவளிக்குச் சில நாட்கள் முன்பே பலகாரத்துக்கான ஆயத்தம் செய்வதில் ஆரம்பித்து தீபாவளி அன்று காலை வரை பெண்கள் அடுப்படியில் வேக வேண்டும். இதில் என் பெண்டாட்டி மைசூர் பாகை உடைக்க சுத்தியல் வேண்டும் என்கிற அரதப் பழைய ஜோக்குகளை மீம்களாகச் சுற்றவிட்டுக் கொண்டு, அதற்குச் சிரித்துக் கொண்டும் இருப்பவர்களைப் பார்க்கும் போது அதே சுத்தியலை வாங்கி மண்டையில் இரண்டு போடலாம் என்று தோன்றும்.

பண்டிகை நாட்கள், விசேஷ நாட்கள் என்பது விடுமுறை நாட்கள் என்றாலும் ஒய்வுக்கான நாள்கள் அல்ல. சாதாரண நாட்களைவிட பன...

Udaya Lakshmiகொண்டாட்டங்கள் பொதுவானவை. கொண்டாடும் விதம் தனித்துவமானதுதானே!! காதடைக்கும் பட்டாசுகளாலும், மூக்கைப் பொத்திக...
12/11/2023

Udaya Lakshmi

கொண்டாட்டங்கள் பொதுவானவை. கொண்டாடும் விதம் தனித்துவமானதுதானே!!

காதடைக்கும் பட்டாசுகளாலும், மூக்கைப் பொத்திக்கொள்ள வைக்கும் பட்டாசின் வேதிச்சேர்மங்களினாலும் என் சிறு வயதிலிருந்தே தீபாவளி திருநாளை கொண்டாடியதில்லை. நல்லவேளை என் பிள்ளைகளும் எனக்கு தற்போதுவரை ஒத்துவருகிறார்கள்.

விடுமுறைக்கேற்ற உணவுகளோடு, திரைப்படம் பார்ப்பது,வாசிப்பது என இந்த விடுமுறை கொண்டாட்டமாய் செல்கிறது.

சுற்றுச்சூழல் உச்சகட்ட மாசடைந்து வரும் இக்காலத்தில், தீபாவளி திருவிழாக்கள் மறுஉருவாக்கம் செய்யப்பட வேண்டிய அவசர, அவசியத் தேவை உள்ளது.

Gangadharan Marudhan அவர்களின் இப்புத்தகம் நீண்ட நாளைய வாசிப்பு விருப்பப்பட்டியலில் இருந்தது. இன்று வாசிப்பில்.....

தீப ஒளித் திருநாள் வாழ்த்துகள் அனைவருக்கும்.

தொடர்புக்கு: 7550098666

11/11/2023
நன்றி: தினமலர்
11/11/2023

நன்றி: தினமலர்

இலக்கணம் மாறுதே... 9“24 மணி நேரமும் நீ பாத்துக்கிட்டு இருன்னு சொல்லல… ஆனா, நீ இங்க வந்து உட்கார்ந்து இருந்தா, இன்னும் பே...
11/11/2023

இலக்கணம் மாறுதே... 9

“24 மணி நேரமும் நீ பாத்துக்கிட்டு இருன்னு சொல்லல… ஆனா, நீ இங்க வந்து உட்கார்ந்து இருந்தா, இன்னும் பேசுவாங்க… நீயே வாய்ப்பு ஏற்படுத்தி தந்த மாதிரிதானே?”

“அவுங்க அப்படிப் பேசிக்கிட்டா, எனக்கு அதைப் பற்றிக் கவலை இல்லை. இதுக்கு மேல பொறுமையும் இல்லை.”

“ஆமா, அப்புறமா ஏதாச்சும் ஒன்னு கிடக்க ஒன்னு ஆனதுக்கப்புறம், உட்கார்ந்து பொறுமையா கவலைப்படு…”

“அக்கா, இப்போ நான் என்ன செய்யணும்ங்கிற? எல்லாத்தையும் பொறுத்துக்கிட்டு, நான் அருண் கூடவே இருக்கணும்னு சொல்றியா?”

“வீட்டில இருந்த அருண், அவனோட காலேஜ் டேஸ் கேர்ள் பிரெண்டோட பேச ஆரம்பிச்சான். ரெண்டு பேரும் அனுப்பியிருந்த மெசேஜ...

ஜெ தீபலஷ்மி எழுதும் ‘ஆண்கள் நலம்’ தொடரில் இன்று சரவெடி“டேய், நேத்து முறுக்கு பிழிஞ்சியே. அதையும் கொண்டா. நிலா தனியா இருக...
10/11/2023

ஜெ தீபலஷ்மி எழுதும் ‘ஆண்கள் நலம்’ தொடரில் இன்று சரவெடி

“டேய், நேத்து முறுக்கு பிழிஞ்சியே. அதையும் கொண்டா. நிலா தனியா இருக்காள்ள? நான் அவளுக்கு ஈவினிங் கம்பெனி குடுக்கலாம்னு இருக்கேன்.”

“ம்கும். நீங்க எதுக்குப் போறீங்கன்னு நல்லாத் தெரியும். நிலா, ஆண்ட்டிக்கு பிபி இருக்கும்மா. அதிகம் குடிக்காம பார்த்துக்கோ!.” அங்கிள் ஆண்ட்டியின் காதைச் செல்லமாகத் திருகினார்.

“ஹா… ஹா… ஓகே அங்கிள்.”

அங்கிள் சொன்னதைக் கேட்டு நிலாவும் ஆண்ட்டியும் பெரிய ஜோக் மாதிரி சிரித்தார்கள். அங்கிள் பூரிப்புடன் தன் வீட்டுக்குள்ளே சென்றார்.

அங்கிள் சென்றதும் நிலாவும் ஆண்ட்டியும் அவரை வாஞ்சையோடு பார்த்துக் கொண்டிருந்தனர்.

“அங்கிள் சோ ஸ்வீட்ல ஆண்ட்டி!”

”ஆமாம்மா. ரொம்ப இன்னசெண்ட். அவனுக்கு நான்தான் உலகமே. நான் மட்டும்தான்!” என்று நாத்தழுதழுத்தார் ஆண்ட்டி.

Deepa Lakshmi

“தாங்க்ஸ். முடிஞ்சா வரேன். ஆனா, நீ ரெண்டு நாள் ஜாலியா பேச்சலரெட் லைஃப் எஞ்சாய் பண்ணு. இங்கே பாரு, உங்க அங்கிளை… எங...

இராஜ திலகம் பாலாஜியின் கட்டுரைபுத்தரை உலகமே கொண்டாடுகிறது. புத்தருக்குப் பதிலாக அவருடைய மனைவி யசோதரை தன் குடும்பத்தைவிட்...
10/11/2023

இராஜ திலகம் பாலாஜியின் கட்டுரை

புத்தரை உலகமே கொண்டாடுகிறது. புத்தருக்குப் பதிலாக அவருடைய மனைவி யசோதரை தன் குடும்பத்தைவிட்டு துறவு சென்றிருந்தால், இந்த உலகம் இன்று புத்தருக்கு கொடுத்த அதே அங்கீகாரத்தை யசோதரைக்கும் வழங்கியிருக்கும்மா? ஏனென்றால் யசோதரை பெண்ணாகப் பிறந்திருப்பதால், அவர் மீது தேவையற்ற கலங்கத்தையெல்லாம் இவ்வுலகம் பழி சுமத்தியிருக்கும். இதுதான் இன்றும் பெண்களின் நிலைமை.

புத்தரை உலகமே கொண்டாடுகிறது. புத்தருக்குப் பதிலாக அவருடைய மனைவி யசோதரை தன் குடும்பத்தைவிட்டு துறவு சென்றிருந...

Address

Chennai
Chennai
600004

Alerts

Be the first to know and let us send you an email when Her Stories posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Her Stories:

Share