Vaigarai Velicham Official

Vaigarai Velicham Official வைகறை விடியலில் உண்மையை காணுவோம்!..
(1)

மேட்டுப்பாளையத்தில் நூல் வெளியீட்டு நிகழ்வு...!     14.09.2025 ஞாயிறு மாலை 07 : 00 மணியளவில் மேட்டுப்பாளையம் மதினா நகரில...
15/09/2025

மேட்டுப்பாளையத்தில் நூல் வெளியீட்டு நிகழ்வு...!

14.09.2025 ஞாயிறு மாலை 07 : 00 மணியளவில் மேட்டுப்பாளையம் மதினா நகரில் அமைந்துள்ள அன்பகம் இஸ்லாமிய கல்விக்கூடத்தில் வைத்து வேர்கள் பதிப்பகத்தின் வெளியீடான "இஸ்லாமிய ஒழுக்க மாண்புகள்" என்ற நூலை ஜமாத்தார்கள் மத்தியிலும் சமூக ஆர்வலர்கள் மத்தியிலும் வெளியிடப்பட்டது.

இந்நிகழ்வில் மேட்டுப்பாளையம் ஜமாதுல் உலமா நகர செயளாலர் ஹஜ்ரத் சதக்கதுல்லாஹ் மக்தூமி அவர்கள் கலந்துகொண்டு நூலை வெளியிட்டு உரையாற்றினார்.

இந்நிகழ்வில் நூலை பெற்றுக்கொண்டவர்கள் VMT ஜாபர் (மனிதநேய ஜனநாயக கட்சி) , தோழர் மாறன் (மக்கள் அதிகார கழகம்) , சகோதரர் உமர் முக்தார்.

இறுதியாக நூலின் அறிமுகமும், நூலின் ஆசிரியர் பற்றியும் சகோதரர் திருப்பூர் சிராஜ்தீன் அவர்கள் உரையாற்றினர்.

பெரும்பாலான சமூக ஆர்வலர்களும் , ஜமாத்தார்களும் கலந்து கொண்டார்கள்.

9/11 அமெரிக்காவின் அறிக்கை சொல்வது என்ன...?முழு கட்டுரையும் கீழே தந்திருக்கின்றோம் வாசித்து பயன்பெறவும்.
10/09/2025

9/11 அமெரிக்காவின் அறிக்கை சொல்வது என்ன...?

முழு கட்டுரையும் கீழே தந்திருக்கின்றோம் வாசித்து பயன்பெறவும்.

10/09/2025

கத்தார் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்..!

உரை - மு.குலாம் முஹம்மத் (ஆசிரியர் : வைகறை வெளிச்சம் மாத இதழ்.)

08/09/2025

வேர்கள் பதிப்பகத்தின் வெளியீடான "இஸ்லாமிய ஒழுக்க மாண்புகள்" நூலின் அறிமுகம்.

உரை - மு.குலாம் முஹம்மத் (ஆசிரியர் : வைகறை வெளிச்சம் மாத இதழ்.)

நூல் வெளியீட்டு நிகழ்வு...!07/09/2025 ஞாயிற்றுக்கிழமை இன்று வேர்கள் பதிப்பகத்தின் அலுவலகத்தில் சமுக ஆர்வலர்கள் மத்தியில்...
07/09/2025

நூல் வெளியீட்டு நிகழ்வு...!

07/09/2025 ஞாயிற்றுக்கிழமை இன்று வேர்கள் பதிப்பகத்தின் அலுவலகத்தில் சமுக ஆர்வலர்கள் மத்தியில் "இஸ்லாமிய ஒழுக்க மாண்புகள்" என்ற நூலை மு.குலாம் முஹம்மத் (வைகறை வெளிச்சம் ஆசிரியர்) அவர்கள் வெளியிட்டார்கள்.

நூலின் பக்கங்கள் - 526
விலை - 480

நூல் வேண்டுவோர் - 8148129887, 8220677704

மேம்படுத்தப்பட்ட புதிய வெளியீடு...!நூல் : இஸ்லாமிய ஒழுக்க மாண்புகள் பக்கங்கள் - 526விலை        -ரூ 480நூல் வேண்டுவோர் : ...
05/09/2025

மேம்படுத்தப்பட்ட புதிய வெளியீடு...!

நூல் : இஸ்லாமிய ஒழுக்க மாண்புகள்

பக்கங்கள் - 526
விலை -ரூ 480

நூல் வேண்டுவோர் : 8220677704

ஏன்..? இந்த முஹம்மத் நபிகள் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறார்...?குர்ஆன் தமிழ் பிரதி இலவசமாக பெற தொடர்புகொள்ளவும் - 965...
05/09/2025

ஏன்..? இந்த முஹம்மத் நபிகள் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறார்...?

குர்ஆன் தமிழ் பிரதி இலவசமாக பெற தொடர்புகொள்ளவும் - 9655135154 , 8220677704.

04/09/2025

ஈரானின் அதிசய திட்டம்...!

போராளிகள் அவர்கள் இலட்சியத்தை அடைந்து கொண்டுதான் இருக்கின்றார்கள்.

உரை - மு.குலாம் முஹம்மத் (ஆசிரியர் : வைகறை வெளிச்ம் மாத இதழ்.)

வைகறை வெளிச்சம் மாத இதழ்ஆண்டு சந்தா : 480/-தொடர்புக்கு : 9786214186, 7401213394, 8148129887, வாட்ஸ்ஆப் : 8870960662
02/09/2025

வைகறை வெளிச்சம் மாத இதழ்

ஆண்டு சந்தா : 480/-

தொடர்புக்கு : 9786214186, 7401213394, 8148129887,

வாட்ஸ்ஆப் : 8870960662

கஷ்மீரில் காணாமல் போனவர்கள் தினம் - ஆகஸ்ட் 30,31இது சர்வதேச அளவில் கடைபிடிக்கப்படும் ஒரு தினமாகும்.
31/08/2025

கஷ்மீரில் காணாமல் போனவர்கள் தினம் - ஆகஸ்ட் 30,31

இது சர்வதேச அளவில் கடைபிடிக்கப்படும் ஒரு தினமாகும்.

 #உண்மையில்_தேசப்பிரிவினைக்கு_யார்_காரணம்!!! ஆகஸ்ட் 14 பாகிஸ்தானுக்கு சுதந்திர தினம்.ஆதாரத்துடன் படிக்க புத்தக தொடர்பிற்...
14/08/2025

#உண்மையில்_தேசப்பிரிவினைக்கு_யார்_காரணம்!!! ஆகஸ்ட் 14 பாகிஸ்தானுக்கு சுதந்திர தினம்.

ஆதாரத்துடன் படிக்க புத்தக தொடர்பிற்கு- +91 81481 29887

#வைகறை_வெளிச்சம்_வாசகர்_வட்டம்

இந்தியாவின் விடுதலை நாள் விழாக்கள் செங்கோட்டையில் ஏன்..?தொடர்: 4மறைக்கப்பட்ட வரலாறு;உலக அரங்கில் முஸ்லிம்களின் வெற்றி வர...
12/08/2025

இந்தியாவின் விடுதலை நாள் விழாக்கள் செங்கோட்டையில் ஏன்..?

தொடர்: 4

மறைக்கப்பட்ட வரலாறு;

உலக அரங்கில் முஸ்லிம்களின் வெற்றி வரலாற்றில் முக்கியத்தடம் 1453இல் கான்ஸ்டாண்டிநோபிள், வெற்றி கொள்ளப்பட்டது.

இது இறைவனின் இறுதித்தூதர் பெருமானார்(ஸல்) அவர்கள் முஸ்லிம்களுக்கு வாக்களித்த வெற்றிகளுள் ஒன்று.

இந்த கான்ஸ்டாண்டி நோபிள்தான் இன்றைய இஸ்தான்புல், (துருக்கி)

முஸ்லிம் உலகம், இந்த வெற்றியைக் கொண்டாடிக் கொண்டிருந்த வேளையில் அவர்களுக்கு எதிராக ஒரு பெரும் எதிர்ப்பு அணி திரண்டு கொண்டிருந்தது. அதனை அவர்கள் கண்டு கொள்ளவில்லை.

கான்ஸ்டாண்டி நோபிள் என்பது கிறிஸ்தவ உலகத்தின் தலையாய வரலாற்றுத் தடம். The Great Symbol of Chiristian Power அது பறிபோனதை கிருஸ்தவ உலகத்தால் தாங்கிட இயலவில்லை. அத்தோடு கிலாபத் என்ற இஸ்லாமிய உலகத்தலைமையை அவர்கள் மீண்டும் கொண்டு வந்ததையும் அவர்களால் பொறுத்துக்கொள்ள இயலவில்லை., ஆகவே அவர்கள் உலகெங்கும் முஸ்லிம்கள் ஆதிக்கம் செலுத்தி வந்த இடங்களை குறி வைத்தனர்.

முஸ்லிம்கள் ஆட்சி நடத்தி வந்த சாம்ராஜ்யங்களை சிதைக்கவும், முஸ்லிம்களைச் சின்னா பின்னப்படுத்தவும் திட்டங்களைத் தீட்டவும் தலைப்பட்டார்கள்.

உண்மையில் அவர்கள், இன்னொரு சிலுவைப் போருக்குத் தயாரானார்கள். போர்த்துகீசிய நாட்டின் போப், உலகக் கிருஸ்தவர்களின் தலைவர், கிழக்குத் திசையை நோக்கி அவர்களை ஏவிவிட்டார். இதனை வரலாறு இப்படித் தன் பக்கங்களில் பதிவு செய்கின்றது. இதற்கான ஆணையாகிய பாப்பேல் புல் Papal Bull-ஐ வழங்கினார்.

Papal Bull Gave Authority to catholic Portugal to go on a holy crausade Eastwards, to hunt india for wealth and allies against the ottaman "Saracens",

இதன் பொருள்:

பாப்பேல் புல் என்ற போப்பின் ஆணை ஒன்று கத்தோலிக்கப் போர்த்து கீசியர்களுக்கு கிழக்கு நோக்கிச் சென்று இந்தியாவில் ஓர் புனித சிலுவைப் போரைத் தொடங்குவதற்கு அதிகாரம் வழங்கியது. இந்தியாவில் செல்வத்தையும், ஆதரவையும் திரட்டி இஸ்லாத்தின் ஆட்சியை மீண்டும் கொண்டு வந்த உதுமானிய சாம்ராஜ்யத்தை எதிர்கொள்ள தயராகும்படி அந்த ஆணை கூறிற்று.

போர்த்துக்கீசிரியர்களால் எதுவும் பெரிதாகச் செய்திட இயலவில்லை. அவர்கள் கல்கத்தாவில் சற்றே வியாபாரம் செய்து சம்பாதித்தார்கள். இராணுவ ரீதியாக எந்த நடவடிக்கையும் எடுக்கவியலாது. காரணம் இன்னும் முஸ்லிம்கள் அதிகப் பலத்துடனேதான் இருக்கின்றார்கள் என போர்த்துகீசிர்கள் தங்கள் போப்பிடம் கூறிவிட்டார்கள்.

ஆதாரம்: Jihad and the conflict between Island and Christianity of the shade of Swords. by M.J.Akbar.

மறைக்கப்பட்ட இன்னொரு வரலாறு;

ஆங்கிலேயர்களின் இந்திய வருகை, இந்தியாவில் நிலைகொண்டிருந்த முகலாய சாம்ராஜ்யத்தை தகர்க்கவும், முஸ்லிம்களின் பிடியைத் தளர்த்திடவுமே!

ஆனால், பொதுவாக மக்களிடம், ஆங்கிலேயர்கள் இங்கே வியாபாரம் செய்யத்தான் வந்தார்கள், என்ற எண்ணமே நிலை கொண்டுள்ளது. ஏனெனில் ஆங்கிலேயர்கள் வரைந்த வரலாறுகளில் இப்படித்தான் திரித்து எழுதி வைத்துள்ளார்கள். இதற்கும் பதில் சொல்லுகின்றார் எம்.ஜே. அக்பர், நாம் மேலே குறிப்பிட்ட நூலில்.

போர்த்துகீசியர்களால் கோவாவைத் தாண்டிட இயலவில்லை. இதனால் கத்தோலிக்க கிருஸ்தவத்தை எதிர்த்த ஆங்கிலேயே நாடாகிய பிரிட்டன் அந்தப் பொறுப்பை ஏற்றுக் கொண்டது. அந்தப் பொறுப்பு, மெல்ல, மெல்ல முஸ்லிம்களின் முகலாய ஆட்சியை அகற்றிவிட்டு, அந்த இடத்தில் ஆங்கிலேயர்களை ஆட்சியில் அமர்த்துவது. இதற்கு ஆங்கில நாடாகிய பிரிட்டன் தேர்ந்தெடுத்த பெயர் மொழி வியாபாரம் என்பதாகும். அல்லாமல் சிலுவைப் போர் என்பதல்ல. ஆனால், முஸ்லிம்களின் பதில் (பேச்சு வார்த்தையானாலும் சரி, போர் ஆனாலும் சரி) ஜிஹாத் என்ற அடிப்படையிலிருந்து வந்தது. அவர்கள் ஜிஹாத் என்ற கொள்கையால் தொடர்ந்து உணர்வூட்டப்பட்டுக் கொண்டே இருந்தார்கள்.

Portugeeses created a foothold in Goa it was left to the anti Catholic Britain to Gradually Displace and then replace the Mughal Empire. Britain Generally Preferred the language of commerce rather than that of the crusades, but the muslim response, whether in dialectics or war drew constant inspiration from the ever - present concept of jihadi. (The shade of swords. - M.J.Akbar)

ஆக, 1453இல் ஏற்பட்ட கான்ஸ்டாண்டி நோபிள் தோல்வியால் துவண்டுபோன கிருஸ்தவ உலகம் முஸ்லிம் இந்தியாவை முகலாய இந்தியாவை வெற்றிகொள்ள வந்த உத்தியே வியாபாரம்.

அதனால்தான் செங்கோட்டையில் இந்திய விடுதலைப் போர் வீரர், பகதூர்ஷா ஜாஃபர் அவர்கள் மேல் சாப்பட்டபெற்ற குற்றச்சாட்டு கிருஸ்தவர்களை கொலை செய்ய காரணமாகவும், துணையாகவுமிருந்தது என்று அமைந்தது.

இந்த இஸ்லாமிய வெறுப்பு, வெறியை 1857இல் நடந்த விடுதலைப் போருக்குப் பின் ஓர் ஆங்கிலேயே தளபதி இப்படிக் கூறினான்.

"நான் ஒவ்வொரு முஸ்லிமையும் ஓர், கிளர்ச்சியாளனாகவே பார்ப்பேன். நான் பார்க்கின்ற ஒவ்வொரு நபரையும் அவர் இந்துவா? முஸ்லிமா? என அறிந்துகொள்ள முயற்சிப்பேன். அவர் முஸ்லிம் எனத் தெரிந்தால் அவரை அந்த இடத்திலேயே சுட்டு விடுவேன்” (Source : Role of Muslims in the struggle for Freedom - by Abul Hassan Ali Nadwee)

1857 புரட்சிக்குப் பின் கிருஸ்தவர்களைக் கொலை செய்ததாக பழி கூறி முஸ்லிம்களை ஆயிரக்கணக்கில் கொலை செய்தார்கள் பாசிஸ்ட்டுகள்.

84 வயது பகதூர்ஷா ஜாஃபர் - நாடு கடத்தப்பட்டு, பின்னர் சாகடிக்கப்பட்டார். அதாவது மெல்ல மெல்ல கொன்றார்கள்.

இன்று சுதந்திர இந்தியாவில் பழங்குடி மக்களின் நல்வாழ்வுக்காக உழைத்த மனித உரிமை ஆர்வலர் ஸ்டான் சுவாமி-ஐ இப்படித் தான் மெல்ல, மெல்ல கொன்றார்கள்.

ஆங்கிலேயர்களிடம் பெற்ற விடுதலையை இந்திய பாசிஸ்ட்டுகளிடம் இழந்தோம்.

- மு.குலாம் முஹம்மது
வைகறை வெளிச்சம் ஆசிரியர்
தொடர்புக்கு: 8148129887

Address

Mannady Street
Chennai
600001

Alerts

Be the first to know and let us send you an email when Vaigarai Velicham Official posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Vaigarai Velicham Official:

Share