13/04/2022
அண்ணல் அம்பேத்கரின் மதமாற்றம்
இஸ்லாமே தீர்வு தீண்டாமைக்கு!
இனஇழிவு ஒழிய இஸ்லாமே நன் மருந்து
இஸ்லாத்தை ஏற்றதால் "ஜாதி ஒழிந்தது"
இது போன்ற பிரகடனங்கள் இன்று அங்கிங்கெனாதபடி எங்கும் ஒலிக்கத் தொடங்கி விட்டன. தலீத் பெருங்குடி மக்கள், அருந்ததிய சமுதாயத்தினர் இவர்களெல்லாம், இஸ்லாத்தை ஏற்று, தங்களை நிரந்தரமாக அடிமைப்படுத்திய ஜாதீய கட்டமைப்பைத் தகர்த் தெறிந்தனர்.
இதனால் அதிர்ந்துபோன பலர் மக்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வதை வழிமறிக்க தலைப்பட்டு விட்டனர். இஸ்லாத்தின் மீது இழிமொழிகளையும் பழிமொழிகளையும் எடுத்து வீசிடத் தலைப்பட்டார்கள். ஆனால் அஃதுகிஞ்சிற்றும் எடுபடவில்லை...
இஸ்லாத்திலும், ஜாதீயம் இருக்கின்றது எனப் பசப்பிப் பார்த்தார்கள், வெல்ல முடியவில்லை. இறுதியில், வேறு சதிகளின் பக்கம் திரும்பினார்கள். அதில் ஒன்று தலீத் மக்களும் அதேபோல் ஒடுக்கப்பட்ட மக்களும் அமுக்கப்பட்ட மக்களும், அண்ணல் அம்பேத்கர் அவர்கள்பால் கொண்டுள்ள மதிப்பையும், மரியாதையையும் பயன்படுத்தி மக்கள், இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வதைது தடை செய்வது.
இந்தச் சதிகாரர்கள் அமுக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களிடம் ஒரு பெரும் பிரச்சாரத்தைச் செய்தார்கள். அதில் அண்ணல் அம்பேத்கர் அவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. மாறாக, அவர்கள் பெளத்தத்தைத் தான் ஏற்றார்கள் எனப் பிரச்சாரம் செய்தார்கள். இதனால் அம்பேத்கரின் மதமாற்றம் பற்றி ஒருவிளக்கம் தேவைப்பட்டது.
அந்த விளக்கத்தை நீல புலிகள் இயக்கத் தலைவர் டி.எம்.உமர் ஃபாரூக் அவர்கள், இந்த நூலில் தந்திருக்கின்றார்கள். இது, அம்பேத்கரின் வாழ்க்கையில் ஒரு முக்கிய பகுதியை - அதுவும் மறைக்கப்ட்ட பகுதியை வெளியே கொண்டு வருகின்றது. அதனால் இஃதோர் வரலாற்று ஆவணம். வாசகர்கள் இதிலிருந்து நிறைவாகப் பயனடைவார்கள், என எதிர்பார்க்கின்றோம். (இன்ஷா அல்லாஹ்)
- மு. குலாம் முஹம்மது MA
வைகறை வெளிச்சம் ஆசிரியர்.
📞 வாட்ஸ்அப் வழியாக ஆர்டர் செய்துகொள்ள: 8072773868