Janasakthi Tholaikatchi

Janasakthi Tholaikatchi ஜனசக்தி இணைய ஊடகம்
(1)

பாஜக முகவராகும் இந்தியத் தேர்தல் ஆணையம்=====இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி குற்றச்சாட்டு=====பீகார் போன்ற பிற மாநிலங்களைச் ச...
30/10/2025

பாஜக முகவராகும் இந்தியத் தேர்தல் ஆணையம்
=====
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி குற்றச்சாட்டு
=====
பீகார் போன்ற பிற மாநிலங்களைச் சேர்ந்த வாக்காளர்களை தமிழ்நாட்டு வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கான சதித் திட்டமாக, வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம் இருக்கலாம் என்பது என்பதற்கான சாத்தியக்கூறு குறித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி எச்சரிக்கையுடன் இருக்கிறது.
=====

அரசியலமைப்பு நெறிமுறைகள், தொழில்நுட்ப வெளிப்படைத்தன்மை, குடிமக்களின் பங்கேற்பு ஆகியவற்றின் அடிப்படைய

30/10/2025
ஜனசக்தி சந்தாதாரராக இணைவோம்!! #ஜனசக்தி  #ஜனசக்தி_சந்தாதாரர்
30/10/2025

ஜனசக்தி சந்தாதாரராக இணைவோம்!!

#ஜனசக்தி #ஜனசக்தி_சந்தாதாரர்

பைசன் ஒரு திரை காவியம் ; தோழர் மு.வீரபாண்டியன் பாராட்டு!பைசன் திரைப்படத்தை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் மு....
30/10/2025

பைசன் ஒரு திரை காவியம் ; தோழர் மு.வீரபாண்டியன் பாராட்டு!

பைசன் திரைப்படத்தை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் மு. வீரபாண்டியன் அவர்கள் அனைத்திந்திய மாணவர் பெருமன்றத் தோழர்களோடு இணைந்து பார்த்தார்.

29/10/2025

ஈரானில் ஹிஜாப்புக்கு எதிரான மாபெரும் போராட்டம் வெற்றி
=====
பொதுமக்களின் எதிர்ப்புக்கு அடிபணிந்தது ஈரான் அரசு
=====
பெண்கள் பொது இடங்களில் ஹிஜாப் அணியாமல் நடமாடலாம். அது சட்டவிரோதமல்ல என்று ஈரான் அரசு அறிவிப்பு

சங்க இலக்கியம் - உடல் | மனம் | மொழி நூல் வெளியீடு  ஆர்.பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ். (ஓய்வு) வாழ்த்துரைநியூ செஞ்சுரி புக் ஹவுஸ் ...
29/10/2025

சங்க இலக்கியம் - உடல் | மனம் | மொழி நூல் வெளியீடு
ஆர்.பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ். (ஓய்வு) வாழ்த்துரை

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் வெளியீடான கவிஞர் சக்தி ஜோதி எழுதிய, "சங்க இலக்கியம் உடல்-மனம்-மொழி" நூல் வெளியீட்டு விழா 24.10.2025 அன்று மாலை 5 மணியளவில், கோட்டூர்புரத்தில் உள்ள, அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்றது.
என்சிபிஎச் மேலாண்மை இயக்குனர் க.சந்தானம் வரவேற்புரை நிகழ்த்தினார். முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தலையேற்று, நூலை வெளியிட்டு சிறப்புரையாற்றினார். நூலைப் பெற்றுக் கொண்டு உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத் தலைவர் ஆர்.பாலகிருஷ்ணன் வாழ்த்துரை வழங்கினார்.

கேரள மத்திய பல்கலைக்கழகத்தைச் சார்ந்த பேரா.முனைவர் எல்.ராமமூர்த்தி மற்றும் இலக்கிய விமர்சகர் நா.முருகேசபாண்டியன் ஆகியோர் நூல் திறனாய்வு மேற்கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து நூலாசிரியர் கவிஞர் சக்தி ஜோதி ஏற்புரை வழங்கினார். என்சிபிஎச் அ.கிருஷ்ணமூர்த்தி நன்றியுரை கூறினார்.

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் வெளியீடான கவிஞர் சக்தி ஜோதி எழுதிய, "சங்க இலக்கியம் உடல்-மனம்-மொழி" நூல் வெளியீட்டு விழ.....

கபாடி வீரர்களுக்கு வாழ்த்து – நவீன பயற்சி கூடங்கள் அமைத்து உதவ வேண்டும்=====இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள்=====ht...
28/10/2025

கபாடி வீரர்களுக்கு வாழ்த்து – நவீன பயற்சி கூடங்கள் அமைத்து உதவ வேண்டும்
=====
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள்
=====
https://www.janasakthi.in/cpi-congratulates-kabaddi-players-who-won-gold/

சங்க இலக்கியம் - உடல் மனம் மொழி நூல் வெளியீடுமுன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வாழ்த்துரை நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் வெ...
28/10/2025

சங்க இலக்கியம் - உடல் மனம் மொழி நூல் வெளியீடு
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வாழ்த்துரை

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் வெளியீடான கவிஞர் சக்தி ஜோதி எழுதிய, "சங்க இலக்கியம் உடல்-மனம்-மொழி" நூல் வெளியீட்டு விழா 24.10.2025 அன்று மாலை 5 மணியளவில், கோட்டூர்புரத்தில் உள்ள, அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்றது.
என்சிபிஎச் மேலாண்மை இயக்குனர் க.சந்தானம் வரவேற்புரை நிகழ்த்தினார். முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தலையேற்று, நூலை வெளியிட்டு சிறப்புரையாற்றினார். நூலைப் பெற்றுக் கொண்டு உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத் தலைவர் ஆர்.பாலகிருஷ்ணன் வாழ்த்துரை வழங்கினார்.

கேரள மத்திய பல்கலைக்கழகத்தைச் சார்ந்த பேரா.முனைவர் எல்.ராமமூர்த்தி மற்றும் இலக்கிய விமர்சகர் நா.முருகேசபாண்டியன் ஆகியோர் நூல் திறனாய்வு மேற்கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து நூலாசிரியர் கவிஞர் சக்தி ஜோதி ஏற்புரை வழங்கினார். என்சிபிஎச் அ.கிருஷ்ணமூர்த்தி நன்றியுரை கூறினார்.

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் வெளியீடான கவிஞர் சக்தி ஜோதி எழுதிய, "சங்க இலக்கியம் உடல்-மனம்-மொழி" நூல் வெளியீட்டு விழ.....

திருப்பூர் தோழர் இரா. சீரங்கராஜ் மறைவுக்கு இரங்கல்திருப்பூர் தோழர் இரா. சீரங்கராஜ் மறைவுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ...
28/10/2025

திருப்பூர் தோழர் இரா. சீரங்கராஜ் மறைவுக்கு இரங்கல்

திருப்பூர் தோழர் இரா. சீரங்கராஜ் மறைவுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல் தெரிவித்துள்ளது. இது குறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த உறுப்பினரும், போக்குவரத்துக் கழக தொழிற்சங்கத்தின் மூத்த தலைவருமான தோழர் இரா.சீரங்கராஜ் (65) நேற்று (27.10.2025) இரவு 10.10 மணிக்கு முதலிபாளையத்தில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார் என்ற துயரச் செய்தியறிந்து வேதனையுற்றோம்.

கோவை அருகில் மதுக்கரையில் சிமென்ட் தொழிற்சாலையில் வேலை செய்து வந்த இராமசாமி - வள்ளியாத்தாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்த சீரங்கராஜ். இவரது தந்தை தொழிற்சங்க அமைப்பிலும், இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியிலும் முன்னணி உறுப்பினராக செயல்பட்டவர். கட்சியின் முதலிபாளையம் கிளைச் செயலாளராக பணியாற்றியவர்.

சீரங்கராஜ் பள்ளிக் கல்வியை முடித்து துடியலூரில் உள்ள அரசு தொழிற்பயிற்சி மையத்தில் தொழில் கல்வி பயின்றவர். மாணவப் பருவத்தில் அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தில் இணைந்து பணியாற்ற தொடங்கியவர்.

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் பணியில் சேர்ந்து, அங்கு தொழிற்சங்க இயக்கத்தில் தீவிரமாக செயல்பட்டவர். ஈரோடு மாவட்ட ஜீவா போக்குவரத்துக் கழகத்தில் தொழிற்சங்க அமைப்பை உருவாக்க அரும்பாடுபட்டு வெற்றி கண்டவர். அதன் முதல் மாவட்டத் தலைவராக செயல்பட்டவர். சில வருடங்களாக வாத நோயின் பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்தவர்.

தோழர் இரா.சீரங்கராஜுக்கு - அவரது வாழ்விணையர் பாலாமணி, மகன் தினேஷ், திருமணமான மகள் ஹேமலதா ஆகியோர் இருக்கின்றனர். இதில் மகன் தினேஷ் சீரங்கராஜ் சட்டம் பயின்றவர். இவர் அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் தமிழ்நாடு மாநிலச் செயலாளராக பணியாற்றி, தற்போது அகில இந்தியப் பொதுச் செயலாளர் பொறுப்பில் பணியாற்றி வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கட்சியின் கொள்கை நெறி வழுவாது குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் அரசியல் உணர்வுடன் வழி நடத்தியவர். மகன் தினேஷ் சாதி எல்லைகளை உடைத்து வாழ்விணையராக வழக்கறிஞர் கோ. சங்கீதாவை தேர்வு செய்த போது, மன நிறைவுடன் ஏற்று, இரு வீட்டார் இல்லற இணையேற்பு விழாவாக நடத்தி மகிழ்ந்தவர்.

தொழிலாளி வர்க்க அரசியல் வெற்றிக்காக தன் வாழ்நாளை அர்பணித்துக் கொண்ட இரா.சீரங்கராஜ் பன்முக ஆளுமை கொண்டவர். அவரது இழப்பு எளிதில் ஈடு செய்ய முடியாதது.

திருப்பூர் 2/437 - பி, வேப்பங்காடு, முதலிபாளையம், திருப்பூர் 641606 என்ற முகவரியில் உள்ள அவரது இல்லத்தில் இறுதி மரியாதைக்கு வைக்கப்பட்டுள்ள அவரது நல்லுடல் இன்று 28.10.2025 காலை 10 மணியளவில் மருத்துவ மாணவர்கள் படிப்புக்கு, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு தானமாக வழங்கப்படுகிறது.

தோழர் இரா.சீரங்கராஜ் அவர்களது நினைவுகளுக்கு இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு செவ்வணக்கம் கூறி, ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்துக் கொள்கிறது.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

புதுச்சேரியின் மகளிர் திலகம்=====நாரா.கலைநாதன்=====
28/10/2025

புதுச்சேரியின் மகளிர் திலகம்
=====
நாரா.கலைநாதன்
=====

புதுச்சேரி விடுதலை இயக்கத்தின் தலைவர் வி.எஸ் அவர்களின் துணைவியார் தோழியர் சரசுவதி சுப்பையா. இவர் சும

Address

43/19, Chevalier Shivaji Ganesan Road, T. Nagar
Chennai
600017

Alerts

Be the first to know and let us send you an email when Janasakthi Tholaikatchi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Janasakthi Tholaikatchi:

Share