CinemaYugam

CinemaYugam Latest Tamil Cinema News and Update

90 ஆண்டுகள் பழமை, 60-களில் ஒரு நண்டு ரூ2000க்கு வாங்கியவர்; கண்ணதாசன் வீட்டு கிச்சன் டூர் வீடியோஅது என்ன உப்புக்கண்டம் த...
30/05/2026

90 ஆண்டுகள் பழமை, 60-களில் ஒரு நண்டு ரூ2000க்கு வாங்கியவர்; கண்ணதாசன் வீட்டு கிச்சன் டூர் வீடியோ

அது என்ன உப்புக்கண்டம் தெரியமா? கருங்கொரங்கு உப்புக்கண்டம் என்று சொன்னார். ஆனால் நாங்கள் சாப்பிட்டுவிட்டோம். அது மலேசியாவில் இருந்து வந்தது,

தமிழ் சினிமாவில் பல ஹிட் பாடல்களை கொடுத்துள்ள, கவியரசர் கண்ணதாசன் விரும்பி சாப்பிடும் உணவு, மற்றும் அவரது வீட்டின் கிச்சன் எப்படி இருக்கும் ன்பது குறித்து அவரது மகள்கள ஒரு பேட்டியில் கூறியுள்ளனர்.

மனித உணர்ச்சிகள் அனைத்திற்கும் தனது பாடல்கள் மூலம் உயிர் கொடுத்தவர் கவியரசர் கண்ணதாசன். எம்.ஜி.ஆர் சிவாஜி, தொடங்கி ரஜினிகாந்த், கமல்ஹாசன் வரை பல முன்னணி நடிகர்களுக்கு ஹிட் பாடல்களை கொடுத்த கண்ணதாசன், தயாரிப்பாளர், இயக்குனர், வசனகர்த்தா, நடிகர் என பன்முக திறமையுடன் தமிழ் சினிமாவில் வலம் வந்தவர். சினிமா பாடல்கள் மட்டும் இல்லாமல், இலங்கியங்கள், கட்டுரைகள், ஆன்மீக புத்தகங்கள் எழுதுவது என தனித்திறமையுடன் இருந்தவர்.

சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ள கண்ணதாசன், பல படங்களை தயாரித்துள்ளார். ஆயிரக்கணக்கான பாடல்களையும் எழுதியுள்ளார். ஆனாலும் அவருக்கு சினிமா என்றால் அறவே பிடிக்காது என்று அவரது மகள்கள் தெரிவித்துள்ளனர். அவள் விகடன் யூடியூப் சேனலுக்கு அவர்கள் அளித்த பேட்டியில், 90 ஆண்டுகள் பழமையான கண்ணதாசன் வீட்டு கிச்சன் எப்படி இருக்கிறது என்பது குறித்தும், கண்ணதாசனுக்கு பிடித்த உணவு குறித்தும் பேசியுள்ளனர்.

இது குறித்து பேசிய அவர்கள், அப்பாவுக்கு வெள்ளை பணியாரம், சட்னி மிகவும் பிடிக்கும். ஆனாலும் அவருக்கு பி.பி. இருந்ததால் அதிகமாக சாப்பிட யோசிப்பார். அதேபோல் இந்த வெள்ளை பணியாரத்திற்கு கோழி குழம்பு செம்ம காமினேஷனாக இருக்கும். நாங்கள் இப்போது தான் அதிகமாக சமைக்கிறோம். ஆனால் அப்பாவுக்கு எதுவும் சமைத்து கொடுத்ததில்லை என்று ரேவதி சண்முகம் சொல்ல, கலைச்செல்வி, நான் அப்பாவுக்கு 2 முறை எலும்பு சூப் வைத்து கொடுத்திருக்கிறேன் என்று கூறியுள்ளார்.

அதேபோல் அப்பா இப்போது இருந்திருந்தால் நாங்கள் கேமரா முன்பு வருவதற்கு என்ன சொல்வாரோ என்ற யோசனை எங்களுக்கு இருக்கிறது. நாங்கள் தலையில் அதிகமாக பூ வைத்தால் கூட அதற்கு திட்டுவார். ரொம்ப கண்டிப்புடன் இருந்தார். அவர் அசைவ சாப்பாடு விரும்பி சாப்பிடுவார். ஊர்வன பறப்பன இதில் ட்ரெய்ன், விமானம் தவிர மற்ற அனைத்தையும் சாப்பிடுவார். அப்பா ரசிகர் ஒருவர் ஒரு கிண்ணம் நிறைய உப்புக்கண்டம் கொடுத்துவிட்டார். நாங்கள் அதை சாப்பிட்டுவிட்டோம். அப்பா கேட்டபோது நாங்கள் சாப்பிட்டுவிட்டோம் என்று சொன்னேன்.

அப்போது அவர் அது என்ன உப்புக்கண்டம் தெரியமா? கருங்கொரங்கு உப்புக்கண்டம் என்று சொன்னார். ஆனால் நாங்கள் சாப்பிட்டுவிட்டோம். அது மலேசியாவில் இருந்து வந்தது, அதேபோல் ஸ்ரீலங்காவில் இருந்து நிறைய வரவழைப்பார். சீனாவில் இருந்து நண்டு வரவழைப்பார். ஒரு நண்டு ரூ2000 இருக்கும். இவ்வளவு விலை கொடுத்து வாங்க வேண்டுமா என்று அம்மா சொல்வார். இது பழைய கால வீடு. 90 ஆண்டுகள் ஆகிறது. ஆரம்பத்தில் விறகு அடுப்பில் தான் சமைத்தார்கள். கேஸ் வந்தாலும் மாற்றம் செய்யவில்லை.

விறகு அடுப்பில் சமைப்பதால் அதில் நிற்கவே முடியாது. ஆனாலும் அதில் 15-20 ஆண்டுகள் சமையல் பண்ணேண். 1974 முதல் 1986 வரை, அதன்பிறகு, இந்த கிச்சனை மாற்றி அமைத்துவிட்டேன் என்று கண்ணதாசன் மகள் ரேவதி சண்முகம் கூறியுள்ளார்.

30 ஆண்டுகள் பயணம், 4000-க்கு அதிகமான படங்களுக்கு பாடல்; கண்ணதாசன் வாழ்க்கை பயணம் ஒரு பார்வைபத்திரிகைத் துறையில் தனது முத...
30/05/2026

30 ஆண்டுகள் பயணம், 4000-க்கு அதிகமான படங்களுக்கு பாடல்; கண்ணதாசன் வாழ்க்கை பயணம் ஒரு பார்வை

பத்திரிகைத் துறையில் தனது முத்திரையை பதித்த கண்ணதாசன், குறைவான சம்பளம் கிடைத்தாலும் தனது எழுத்துக்கு, தாராளமான சுதந்திரம் அளிக்ககூடிய சிறு இதழ்களில் தனது பணிகளை தொடங்கினார்.

தமிழ் சினிமாவில் மனித உணர்ச்சிகள் அனைத்திற்கும் தனது பாடல்கள் மூலம் உயிர்கொடுத்தவர் கவியரசர் கண்ணதாசன். பள்ளிப்படிப்பையே பாதியில் விட்டவர் என்றாலும், தமிழில் இலக்கியம் எழுதும் அளவுக்கு திறமையை வளர்த்துக்கொண்டவர். 8-ம் வகுப்பிலேயே பள்ளியிலிருந்து நின்றிருந்தாலும், கண்ணதாசனுக்கு இலக்கியத்தின் மீது தீராத ஆர்வம் இருந்தது.

சினிமா அவரை முழுமையாக ஆட்கொள்வதற்கு முன்பு, பத்திரிகைத் துறையில் தனது முத்திரையை பதித்த கண்ணதாசன், குறைவான சம்பளம் கிடைத்தாலும் தனது எழுத்துக்கு, தாராளமான சுதந்திரம் அளிக்ககூடிய சிறு இதழ்களில் தனது பணிகளை தொடங்கினார். திரைப்படப் பாடலாசிரியராக அறிமுகமான பிறகு, ஆரம்பத்தில் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள மிகவும் சிரமப்பட்ட கண்ணதாசன் சேலம் மாடர்ன் தியேட்டர்ஸில் ஸ்டுடியோவின் உள் இதழ் ஆசிரியராகச் சேர்ந்தார்.

மாடர்ன் தியேட்டர்ஸில் கிடைத்த வாய்ப்புகள் அவரது நிலையை மாற்றவில்லை. அங்குதான் அவர் முதன்முதலில் கருணாநிதியைச் சந்தித்தார். திராவிடர் கழகத்தின் அரசியல் சொல்லாடல்கள் நிறைந்த, கருணாநிதியின் கூர்மையான வசனங்களால் கவரப்பட்ட அவர், கருணநிதியின் தீவிர ரசிகரானார். குறிப்பாக 'அபிமன்யு' (1948) பட வசனங்களின் மூலம் அவரது கவனம் திரும்பியது. அதன் பிறகு, என்.எஸ்.கிருஷ்ணன் இயக்கத்தில் சிவாஜி நடித்த 'பணம்' (1952) படத்தில் பாடல்கள் எழுதும் வாய்ப்பு கண்ணதாசனுக்குக் கிடைத்தது.

இருப்பினும், அந்தப் படத்தை அவரது சொந்த அண்ணனே தயாரித்திருந்தும், திரையில் கண்ணதாசனின் பெயர் இடம்பெறவில்லை. ஒரு விந்தையான முரணாக, அந்தப் படத்தில் கருணாநிதி எழுதிய வசனத்தில் அப்போதைய புகழ்பெற்ற பாடலாசிரியர் உடுமலை நாராயண கவியின் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது. 'பணம்' திரைப்படம் தோல்வியடைந்தாலும், விஸ்வநாதன்-ராமமூர்த்தி இசையமைப்பாளர்களாக அறிமுகமான அந்தப் படம், கண்ணதாசனுடன் ஒரு கூட்டணியை உருவாக்கியது. இந்தக் கூட்டணிதான் 1960-களில் தமிழ் இசையில் மெல்லிசை அலையை ஏற்படுத்தி பல ஹிட் பாடல்களை கொடுத்தது. இந்த காலக்கட்டத்தில் வெளியான பாடல்கள் இன்றைக்கும் தமிழ் சினிமாவின் பொக்கிஷங்களாக பார்க்கப்படுகிறது.

1950-களின் தொடக்கத்தில், அன்றைய காலசூழல் மற்றும் தீவிர நாத்திகரான கருணாநிதியுடனான நட்பு காரணமாக, கண்ணதாசன் இந்து மத நம்பிக்கையிலிருந்து விலகினார். பிற்காலத்தில், கண்ணதாசன் மீண்டும் பகிரங்கமாக ஆன்மீகத்திற்குத் திரும்பினார். 1957 சட்டமன்றத் தேர்தலில் திருக்கோஷ்டியூர் தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தது மற்றும் தான் நேசித்த இயக்கத்தின் மீதான அதிருப்தி என அரசியல் ரீதியாக ஏமாற்றங்களை சந்தித்த கண்ணதாசன், அந்தப் 10 ஆண்டுகளில், சினிமாவில் தனது இடத்தைப் பலப்படுத்திக்கொண்டார்.

எம்.ஜி.ஆரின் 'நாடோடி மன்னன்' (1958) உள்ளிட்ட படங்கள் மூலம் வெற்றிகரமான வசனகர்த்தாவாக உருவெடுத்த கண்ணதாசன், பாடல் எழுதுவதே தனது உண்மையான கலைத்தளம் அறிந்துகொண்டு, 'மாலையிட்ட மங்கை' (1958) மற்றும் 'சிவகங்கை சீமை' (1959) போன்ற படங்களைத் தயாரித்ததன் மூலம், இலக்கிய உணர்வையும் பாமர மக்களின் உணர்ச்சிகளையும் எவ்வளவு லாவகமாக ஒன்றிணைக்க முடியும் என்பதை அவர் நிரூபித்தார்.

1961-ல் வெளியான 'பா' வரிசைத் திரைப்படங்கள் அவரைத் தமிழ் சினிமாவின் ஈடுஇணையற்ற பாடலாசிரியராக உயர்த்தி, அவரது வளர்ச்சியைத் தடுத்து நிறுத்த முடியாததாக மாற்றின. 1960 மற்றும் 70-களில் பல போட்டிகள் இருந்தபோதிலும், கண்ணதாசனின் பாடல்கள் பல தமிழர்களுக்கு வாழ்க்கையைப் புரிந்துகொள்ளும் ஒரு கண்ணாடியாக அமைந்தன. சூழல், கேரக்டர் மற்றும் மெட்டுக்கு ஏற்ப கண்ணதாசன் பாடல் எழுதும் வேகத்தைக் கண்டு தயாரிப்பாளர்களும், இசையமைப்பாளர்களும், இயக்குநர்களும் வியந்து நின்றனர்.

சுற்றிலும் உரையாடல்களும் பார்வையாளர்களும் இருந்தபோதிலும், ஒரே அமர்வில் பாடல்களைச் சொல்லிக்கொண்டே இருப்பார். அதேவேளையில், அவரது எளிய வரிகளுக்குள் ஒளிந்திருக்கும் தத்துவ ஆழம் பலரை ஆச்சரியப்பட வைத்தது. வாழ்க்கையின் மாற்ற முடியாத திருப்பங்களை மன உறுதியுடன் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அவர் எழுதிய ‘போனால் போகட்டும் போடா’ பாடல் வலியுறுத்தியது. முப்பது ஆண்டு கால சினிமா வாழ்க்கையில், கண்ணதாசன் 4,000 திரைப்படப் பாடல்களை எழுதினார். அவரது கவிதைகள் 7 தொகுதிகளாக வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.

ரஜினி - கமல் இருவரிடமும் ஏமாந்தேன்; வருஷ கணக்கில் பேசவே இல்லை: சீக்ரெட் உடைத்த பழம்பெரும் நடிகைசிவாஜியுடன் இணைந்து சில ப...
28/05/2026

ரஜினி - கமல் இருவரிடமும் ஏமாந்தேன்; வருஷ கணக்கில் பேசவே இல்லை: சீக்ரெட் உடைத்த பழம்பெரும் நடிகை

சிவாஜியுடன் இணைந்து சில படங்களில் நடித்துள்ள சத்யபிரியா, பணக்காரன், பாட்ஷா உள்ளிட்ட படங்களில் ரஜினிக்கு சித்தியாக நடித்திருந்தார், மனிதரில் இத்தனை நிறங்களா என்ற படத்தில், கமல்ஹாசனுக்கு ஜோடியாக நடித்தார்.

தமிழ் சினிமாவில், கமல்ஹாசனுக்கு சில படங்களில் ஜோடியாகவும், ரஜினிக்கு சில படங்களில் அம்மாவாகவும் நடித்துள்ள நடிகை சத்யபிரியா, ரஜனி – கமல் இருவரிடமும் ஏமார்ந்த சம்பவம் குறித்து ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

1975-ம் ஆண்டு வெளியான மஞ்சள் முகமே வருக என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் சத்யபிரியா. அதன்பிறகு கமல்ஹாசனுடன் மனிதரில் இத்தனை நிறங்களா? தாலியா சலங்கையா, பைலட் பிரேம்நாத், கண்ணன் ஒரு கை குழந்தை உள்ளிட்ட பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார். சிவாஜியுடன் இணைந்து சில படங்களில் நடித்துள்ள சத்யபிரியா, பணக்காரன், பாட்ஷா உள்ளிட்ட படங்களில் ரஜினிக்கு சித்தியாக நடித்திருந்தார்,

மனிதரில் இத்தனை நிறங்களா என்ற படத்தில், கமல்ஹாசனுக்கு ஜோடியாக நடித்த சத்யபிரியா, கமல்ஹாசன் தன்னை ஏமாற்றிய சம்பவம் குறித்து கலைஞர் டிவி நேர்காணலில் கூறியுள்ளார். இதில், நாங்கள் ஒருமுறை கமல்ஹாசன் வீ்ட்டில், ரிகர்சல் பார்த்தக்கொண்டு இருந்தோம். அப்போது சென்னையில் ஒரு இத்தாலியன் படம் ரிலீஸ் ஆகி இருந்தது. பிலோ ஹாட், பிலோ கோல்ட் என்ற அந்த படத்தை பார்க்க, நாங்கள் அனைவரும் சென்றோம். எங்களுடன் ஒரு 12 வயது சிறுமி இருந்தார்.

தியேட்டரில் சிறுமியை உள்ளே அனுமதிக்கவில்லை. அவளை விட்டுவிட்டு நாம் மட்டும் எப்படி படம் பார்ப்பது என்று நினைத்துக்கொண்டு இருந்தபோது கமல்ஹாசன், நீங்க வீட்டுக்கு போங்க நாங்க படம் பார்க்க போகிறோம் என்று சொல்லிவிட்டு படத்திற்கு போய்விட்டார். நாங்கள் அழுதுகொண்டே வீட்டுக்கு வந்துவிட்டோம். பாடம் பார்க்க அழைத்து சென்று ஏமாற்றியதால், அவரிடம் சில வருடங்கள் பேசாமல் இருந்தேன். ஒருமுறை இருவரும் நேருக்கு நேராக சந்தித்தபோது அவரே பேசினார் என்று சத்யபிரியா கூறியுள்ளார்.

தொடர்ந்து ரஜினி படத்தில் ஏமார்ந்தது குறித்து பேசிய சத்யபிரியா, படையப்பா படத்தில் முதலில் நீலாம்பரி கேரக்டருக்கு அப்பா இல்லை. அம்மா தான் மெயின் வில்லி. அந்த கேரக்டரில என்னை நடிக்க கேட்டார்கள். நானும் ஒப்புக்கொண்டேன். ஆனால் ஷூட்டிங் நாள் நெருங்கி வரும்போது எனக்கு கால்ஷீட் கேட்டு வரவே இல்லை. இதனால் என்ன ஆனது என்று நான் கே.எஸ்.ரவிக்குமாருக்கு போன் செய்தபோது, அவர் அந்த கேரக்டரை ஆணாக மாற்றிவிட்டதால், உங்களுக்கு ஸ்கோப் இல்லை. அதனால் உங்கள் கால்ஷீட்டை ஏன் வீணாக்க வேண்டும் என்று தான் கூப்பிடவில்லை என்று சொன்னார். எனக்கு அதிர்ச்சியாகிவிட்டது.

சார் நான், படையப்பா படத்தில் நடிக்கிறேன் என்று பலரிடம் சொல்லிவிட்டேன். இப்போது நான் நடிக்கவில்லை என்றால் இன்சல்ட் ஆகிவிடும், அதனால் இந்த படத்தில் நான் கண்டிப்பாக நடிப்பேன் என்று சொன்னேன். அதன்பிறகு தான் அப்பா கேரக்டரில் நடித்த ராதாரவிக்கு மனைவியாக நீலாம்பரி அம்மாவாக நடித்தேன். படத்தில் ராதாரவி கேரக்டரை விடவும் எனக்கு ஸ்கோப் கம்மிதான் என்றாலும், சௌந்தர்யா அம்மா கேரக்டரை விடவும் பெஸ்ட் தான் என்று சத்யபிரியா கூறியுள்ளார்.

பாட்டுல எப்படிபா சிரிக்க முடியும்? நீ பண்ணு பார்ப்போம்; சந்தேகம் கேட்ட எஸ்.பி.பி.யை வியக்க வைத்த டி.ஆர்கிட்டத்தட்ட 19 பட...
28/05/2026

பாட்டுல எப்படிபா சிரிக்க முடியும்? நீ பண்ணு பார்ப்போம்; சந்தேகம் கேட்ட எஸ்.பி.பி.யை வியக்க வைத்த டி.ஆர்

கிட்டத்தட்ட 19 படங்களை இயக்கியுள்ள டி.ராஜேந்தர், ஒரு படத்தை தவிர மற்ற அனைத்து படங்களுக்கும் கதை, திரைக்கதை வசனம் எழுதி இசையமைத்துள்ளார்.

தனது முதல் படம் இயக்கும்போது, நான் பாடல் சொல்லிக்கொடுப்பதை பார்த்து பலரும் சிரித்தார்கள். ஆனால் நான் பாடல் பாடி சிரித்து அவர்களின் வாயை அடைத்தேன் என்று டி.ராஜேந்தர் ஒரு மேடையில் கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் ஆல்ரவுண்டராக வலம் வந்தவர் டி. ராஜேந்தர். இயக்குனர், நடிகர், பாடகர், இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர், பாடல் ஆசிரியர், தயாரிப்பாளர் என பன்முக திறமை கொண்டவர். இவர் கடந்த 1980-ம் ஆண்டு வெளியான ஒரு தலை ராகம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்த படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி கல்லூரி மாணவர் கேரக்டரில் கேமியோவாக நடித்திருப்பார்.

தொடர்ந்து, வசந்த அழைப்புகள், நெஞ்சில் ஒரு ராகம், ராகம் தேடும் பல்லவி உள்ளிட்ட படங்களை இயக்கி சிறிய கேரக்டரில் நடித்து வந்தார் டி.ராஜேந்தர். அதன்பிறகு, .தொடர்ந்து தான் தயாரித்து இயக்கிய அனைத்து படங்களிலும் தானே ஹீரோவாக நடித்துள்ள டி.ராஜேந்தர், கதை, திரைக்கதை, வசனம், இசை, பாடல்கள் என பல பணிகளை மேற்கொண்டுள்ளார். கிட்டத்தட்ட 19 படங்களை இயக்கியுள்ள டி.ராஜேந்தர், ஒரு படத்தை தவிர மற்ற அனைத்து படங்களுக்கும் கதை, திரைக்கதை வசனம் எழுதி இசையமைத்துள்ளார்.

தற்போது நடிப்பு இயக்கம் என அனைத்திலும் இருந்து விலகி இருக்கும் டி.ராஜேந்தர், இவ்வப்போது இசை நிகழ்ச்சி, டிவி ரியாலிட்டி ஷோக்கள், உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். அந்த வகையில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய டி.ஆர். முதல் படத்தில் தான் சந்தித்த வலிகள் குறித்து பேசியுள்ளார். 1980-ம் ஆண்டு வெளியான ஒருதலை ராகம் படத்தை இயக்கியது டி.ராஜேந்தர் தான் என்று தகவல்கள் இருந்தாலும், அந்த படத்தின் இயக்குனர் என்று இ.எம்.இப்ராஹிம் என்று தான் வரும்.

இந்த நிகழ்ச்சியில் பாடல்கள் குறித்து பேசிய டி.ஆர், வாசமில்லா மலரிது என்ற பாடல் பதிவின்போது எல்லோரும் என்னை பார்த்து சிரித்தார்கள். அன்றைக்கு எனக்கு ரொம்ப சின்ன வயது, எல்லோரும் என்னை பார்த்து கொள்ளுனு சிரித்தார்கள். இந்த பாடலில் சிரிக்க வேண்டும் என்று சொன்னபோது பாடலில் எப்படிப்பா சிரிக்க முடியும், என்று என்னை கேட்டார்கள். இந்த பாடலை பாட வந்த பாலு அண்ணாவும் (எஸ்.பி.பாலசுப்பிரமணியம்) என்ன ஃபீல் பண்ற, எப்படி சிரிக்கிறது என்று கேட்டார். அப்போது நான் ஒரு சர்க்காஸ்டிக் மெயில் போன்று கொடுக்க வேண்டும் என்று சொன்னேன்.

அதை கேட்ட அவர், எப்படி கொடுக்க வேண்டும், செய் பார்ப்போம் என்று சொன்னார். அப்போது நான், வாசமில்லா மலரிது என்று பாடிவிட்டு சிரித்து காட்டினேன். அப்போது என்னை பார்த்து சிரித்த அனைவரும் வாயை மூடிக்கொண்டார்கள். அந்த பாடலில் ஒரு சொல்கட்டை நான் கொடுப்பேன். ஆனால் இந்த ஆள் வாயால் தாளம் போடுகிறான் என்று சொல்வார்கள் என டி.ஆர் தனது வலியை வெளிப்படுத்தியுள்ளார்.

இந்த பாடல் எனக்கு உயிர், இப்போவும் என் நினைவில் இருக்கு; டி.ஆர் பாடலை புகழ்ந்து பேசிய யேசுதாஸ்இன்றைக்கும் ரசிகர்கள் மத்த...
24/05/2026

இந்த பாடல் எனக்கு உயிர், இப்போவும் என் நினைவில் இருக்கு; டி.ஆர் பாடலை புகழ்ந்து பேசிய யேசுதாஸ்

இன்றைக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த பாடல் கம்போசிங்கின்போது நடந்த சம்பவம் குறித்து கே.ஜே.யேசுதாஸ் ஒரு மேடை நிகழ்ச்சியில் கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில், நடிப்பு, இயக்கம், தயாரிப்பு, இசையமைப்பு, ஒளிப்பதிவு, பாடகர், பாடல் ஆசிரியர், என பன்முக திறமை கொண்ட முக்கிய நபர்களில் ஒருவர் தான் டி.ராஜேந்தர். பல படங்களை இயக்கி தயாரித்து ஹீரோவாக நடித்து வெற்றியை கொடுத்துள்ள டி.ஆர். அடுக்குமொழி வசனங்கள் பேசுவதில் புகழ் பெற்றவர். தனது படங்களில் கூட, அவரது வசனம் அடுக்கு மொழியில் தான் அமைந்திருக்கும்.

கல்லூரி காலங்களில் இருந்தே, மேசையின் மீது தட்டி பாடல் பாடுவதில் ஆர்வமாக இருந்த டி.ஆர் அங்கு கொடுத்த ஒரு வாக்குக்காக தனது நண்பனை ஹீரோவாக்கியுள்ளார். 1983-ம் ஆண்டு தமிழில் வெளியான முக்கிய படங்களில் ஒன்று உயிருள்ளவரை உஷா. சரிதா, டி.ராஜேந்தர், நளினி, ராதாரவி, கவுண்டமணி, வென்னிறஆடை மூர்த்தி, எஸ்.எஸ்.சந்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படத்திற்கு இசையமைத்து எழுதி இயக்கி தயாரித்து முக்கிய கேரக்டரில் டி.ஆர். நடித்திருந்தார்.

படத்திற்கு இசை அமைத்தது மட்டும் இல்லாமல் பாடல்களையும் எழுதியவர் டிராஜேந்தர் தான். பாடல்கள் அனைத்துமே ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படத்தில் வரும் வைகை கரை காற்றே நில்லு என்ற பாடலை பிரபல பாடகர் கே.ஜே.யேசுதாஸ் பாடியிருந்தார். இந்த பாடல் இன்றைக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த பாடல் கம்போசிங்கின்போது நடந்த சம்பவம் குறித்து கே.ஜே.யேசுதாஸ் ஒரு மேடை நிகழ்ச்சியில் கூறியுள்ளார்.

இந்த பாடலை எனக்கு சொல்லிக்கொடுக்கும்போது எனக்கு இந்த பாடல் ரொம்பவும் உயிர். இப்போதும் நான் அந்த சம்பவத்தை நினைவில் வைத்திருக்கிறேன். பாடல் சொல்லிக்கொடுக்கும்போது தபேளா உள்ளிட்ட இசைக்கருவிகள் எதுவாக இருந்தாலும், அதை பயன்படுத்தாமல் தனது உடலில் இருந்தே அந்த இசைக்கான அசைவை கொண்டு வருவார். அந்த ரிதமை கொண்டு வர உடலை அசைப்பது மட்டும் இல்லாமல், தனது முடியை ஒதுக்கிக்கொண்டே ரீங்காரமாக சொல்லிக்கொடுப்பார்.

எல்லோரும் ஒன்.டூ த்ரி என்று தொடங்குவார்கள். ஆனால் இவர் உடலை அசைக்கும்போதே நாம் ஒன்.டூ த்ரி என்று நினைத்துக்கொள்ள வேண்டியது தான். இதை பார்க்கும்போது எனக்கே ஆச்சரியமாக இருந்தது என்று யேசுதாஸ் கூறியுள்ளார்.

கேரக்டர் ரோல் டூ க்ளாமர் நடிகை; என் வாழ்க்கையை புரட்டி போட்ட திரைப்படம்: மனம் திறந்த சோனாஒரு கட்டத்தில் எதேர்ச்சையாக ஜீவ...
24/05/2026

கேரக்டர் ரோல் டூ க்ளாமர் நடிகை; என் வாழ்க்கையை புரட்டி போட்ட திரைப்படம்: மனம் திறந்த சோனா

ஒரு கட்டத்தில் எதேர்ச்சையாக ஜீவிதா – ராஜசேகர் தம்பதியால் நான் சினிமாவில் நடிக்க வந்தேன். அதேபோல், கேரக்டர் ரோலில் நடித்து வந்த எனக்கு க்ளாமர் ரோல் வாய்ப்பு கிடைத்தது.

என் வாழ்க்கை நன்றாக சென்றுகொண்டு இருந்தது, ஆனால் நான் எப்போது வாயை திறந்து நான் அனுபவித்த கஷ்டங்களை சொன்னேனனோ அப்போதே நான் கெட்டவளாக மாறிவிட்டேன் என்று நடிகை சோனா தனது வாழ்க்கை அனுபவம் குறித்து ஒரு பேட்டியில் பகிர்ந்துகொண்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் குணச்சித்திர நடிகையாக வலம் வந்தவர் சோனா. குறிப்பாக, பூவெல்லாம் உன் வாசம், ஷாஜகான், சிவப்பதிகாரம், மிருகம், குசேலன் போன்ற படங்களில் இவர் நடித்திருக்கிறார். இது தவிர கனிமொழி என்ற திரைப்படத்தையும் நடிகை சோனா தயாரித்தார். இப்படத்தில் நடிகர் ஜெய் கதாநாயகனாக நடித்தார். இந்நிலையில், சமீபத்திய நேர்காணலில் தனது திரை அனுபவம் குறித்து சில விஷயங்களை நடிகை சோனா மனம் திறந்து பகிர்ந்து கொண்டார்.

அந்த பேட்டியில் நான் சிறுவயதாக இருக்கும்போதே என் அப்பா அம்மா பிரிந்துவிட்டார்கள். சிங்கிள் மதராக இருந்த என் அம்மா ஒரு சுகர் பேஷண்ட். என் அம்மா மீதுள்ள பாசத்தால் அப்போதே நான் வேலைக்கு போக தொடங்கினேன். நான் பார்க்க கொஞ்சம் அழகாக இருப்பேன். இதுதான் எனக்கு பிளஸ் மற்றும் மைனஸ். இதனால் பல பிரச்னைகளை சந்தித்தேன். குறிப்பாக டீன்ஏஜில், என்னை விட, 20-30 வயது அதிகமான ஆட்கள் கை வைப்பது, போன்ற பிரச்னைகளை சந்தித்தேன்.

ஒரு கட்டத்தில் எதேர்ச்சையாக ஜீவிதா – ராஜசேகர் தம்பதியால் நான் சினிமாவில் நடிக்க வந்தேன். அதேபோல், கேரக்டர் ரோலில் நடித்து வந்த எனக்கு க்ளாமர் ரோல் வாய்ப்பு கிடைத்தது. அதுவும் ஒரு விபத்தாக அமைந்தது தான். எனது வாழ்க்கை க்ளாமரை நோக்கித்தான் போக போகிறது என்பது எனக்கு சத்யமாக தெரியாது. தெரிந்திருந்தால் நான் இதை தேர்வு செய்திருக்கவே மாட்டேன். க்ளாமர் ரோல் பண்ண போகிறேன் என்று தெரியும். அது ஸ்கிரீனில் இப்படி இருக்கும் என்று எனக்கு தெரியாது.

குறிப்பாக பத்து பத்து படத்தில் இருந்தது. குசேலன் படத்திலும் க்ளாமர் இருந்தது. ஆனால் இது ஒரு மாதிரி அழகாக க்ளாஸி, காமிக்கலா போய்விட்டது. அதனால் நிறைய படங்களில் பண்ணியிருக்கிறேன். அது என் லைப்பை புரட்டி போட்டுவிட்டது. அதனால் இந்த நிமிடம் வரை நான் ஒரு க்ளாமர் கேர்ள் என்று தான் அடையாளப்படுத்தப்படுகிறேன். அந்த நிலைமை வந்துவிட்டது.

காமெடியில் க்ளாமர் என்பது அப்போது ஒரு ஃபார்மெட்டாக இருந்தது. க்ளாமர் காமெடி இரண்டையும் சேர்த்து பண்றேன் என்று நினைத்து பண்ண படங்கள் தான் அது. ஆனால் போக போக 2010-க்கு பிறகு ஹீரோயின்சே அதை தான் செய்திருக்கிறார்கள் என்று சோனா கூறியுள்ளார்.

இரவில் ரீ-ரெக்கார்டிங், படம் முழுவதும் ஹம்மிங் மட்டுமே கொடுத்த பாடகி; இளையராஜா பற்றி சொன்ன புது அனுபவம்வாய்ஸ் டெஸ்ட்டுக்...
24/05/2026

இரவில் ரீ-ரெக்கார்டிங், படம் முழுவதும் ஹம்மிங் மட்டுமே கொடுத்த பாடகி; இளையராஜா பற்றி சொன்ன புது அனுபவம்

வாய்ஸ் டெஸ்ட்டுக்காக வந்த ஜென்சிக்கு அன்று மாலையே ஒரு படத்தில் பாடல் பாடும் வாய்ப்பினை வழங்கியுள்ளார் இளையராஜா.

தென்னிந்திய சினிமாவில் குறுகிய காலத்தில் முன்னணி பாடகியாக உயர்ந்தவர் ஜென்சி. அதே சமயம், குறுகிய காலத்திலேயே தமிழ் சினிமாவில் இருந்து விலகிய இவர், இளையராஜா இசையில் ஹம்மிங் பாடியது குறித்து ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

தென்னந்திய சினிமாவில் முன்னணி பாடகியாக திகழ்ந்வர் தான் ஜென்சி. கேரளாவை சேர்ந்த இவர், மலையாள படங்களில் பாடகியாக அறிமுகமாகி பலரின் இதயங்களை கவர்ந்தவர். மேலும் 70 காலக்கட்டங்களில் பாடகர் யேசுதாஸூடன் இணைந்து பல பாடல்களை பாடியிருந்த ஜென்சியின் குரல் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நிலையில், அவருக்கு தமிழில் வாய்ப்பு கொடுக்கலாம் என்று யேசுதாஸ் நினைத்துள்ளார்.

அப்போது தமிழ் சினிமாவில் வளரும் இசையமைப்பாளர்களில் ஒருவராக இருந்த இளையராஜாவிடம் ஜென்சியை பற்றி கூறிய யேசுதாஸ், வாயஸ் டெஸ்ட் எடுங்கள் பிடித்திருந்தால் பயன்படுத்திக்கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார். இதன் காரணமாக வாய்ஸ் டெஸ்ட்டுக்காக வந்த ஜென்சிக்கு அன்று மாலையே ஒரு படத்தில் பாடல் பாடும் வாய்ப்பினை வழங்கியுள்ளார் இளையராஜா. 1978-ம் ஆண்டு வெளியான திரிபுற சுந்தரி என்ற படத்தில் எஸ்.ஜானகியுடன் இணைந்து பாடியிருந்தார்.

இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில், அடுத்து முள்ளும் மலரும், வட்டத்துக்குள் சதுரம், சொன்னது நீதானா பிரியா உள்ளிட்ட படங்களில் பாடிய ஜென்சி, 1978-ம் ஆண்டு 5 படங்களில் பாடல்கள் பாடியிருந்தார். இதில் குறிப்பாக பிரியா படத்தில் இடம்பெற்ற ‘’என் உயிர் நீதானே’’ பாடலை தான் தமிழ் சினிமாவில் பாடகியாக அறிமுகமான காரணமாக இருந்த யேசுதாஸூடன் இணைந்து படியிருந்தார்.

பாரதிராஜாவின், புதிய வார்ப்புகள், நிறம் மாறாத பூக்கள், டிக் டிக் டிக், அலைகள் ஓய்வதில்லை, உள்ளிட்ட படங்களில் பாடி, பாரதிராஜாவின் மனதை வென்றிருந்தார். பாரதிராஜாவுக்கு பிடித்தமான பாடகிகளில் ஒருவராக இந்த ஜென்சி, தனது படங்களில் தொடர்ந்து பாட வேண்டும் என்று பாரதிராஜா விரும்பியுள்ளார். ஆனால் 1982-ம் ஆண்டுக்கு பின் அவர் தமிழ் படங்களில் பாடவில்லை.

இதனிடையே இளையராஜா குறித்து நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஜென்சி, கிழக்கே போகும் ரயில் படத்தில் ஹம்மிங் முழுவதும் எனக்கு கொடுத்தார். இந்த படத்தின் ரீ-ரெக்கார்டிங் இரவில் நடந்தது. ரீ-ரெக்கார்டிங் எப்படி நடக்கும் என்பது குறித்து எனக்கு எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. இது புதிய அனுபவமாக இருந்தது. முதலில் எனக்கு ஹம்மிங் சொல்லிக்கொடுத்தார். ஆனால் அதன்பிறகு நான் பயிற்சி பண்ணவே இல்லை. ஆனால் அடுத்த ரீல் போட சொல்லி இசைக்கு நோட்ஸ் எழுதுவார் அவ்வளவு பொருத்தமாக இருக்கும்.அந்த மாதிரி ஒரு லெஜண்ட்டை நான் பார்த்தது இல்லை. அவர் பெரிய ஜீனியஸ் என்று ஜென்சி கூறியுள்ளார்.

நான் எழுதிய பாடலை நானே பாட முடியாது; மறுத்த கண்ணதாசன், வற்புறுத்தி பாட வைத்த ஜெயலலிதா: பாட்டு இப்போவும் ட்ரெண்டிங்பராசக்...
18/05/2026

நான் எழுதிய பாடலை நானே பாட முடியாது; மறுத்த கண்ணதாசன், வற்புறுத்தி பாட வைத்த ஜெயலலிதா: பாட்டு இப்போவும் ட்ரெண்டிங்

பராசக்தி படத்தில் நடித்ததற்கு பின் அடுத்து சில ஆண்டுகள் படங்களில் நடிக்காமல் இருந்த கண்ணதாசன், பாடல்கள் எழுதுவதில் கவனம் செலுத்தினார்.

தமிழ் சினிமாவில் தனது பாடல்கள் மூலம் இன்றளவும் நிலைத்திருக்கும் கவிஞர் கவியரசர் கண்ணதாசன். மனிதனில் ஏற்படும் அனைத்து உணர்ச்சிகளுக்கும் தனது பாடல்கள் மூலம் ஆறுதல் கூறியுள்ள கண்ணதாசன், சினிமாவில் சிறப்பு தொற்றத்திலும், ஒருசில படங்களில் முக்கிய கேரக்டர்களிலும் நடித்துள்ளார்.

அந்த வகையில் கண்ணதாசன் நடிகராக அறிமுகமான முதல் படம் சிவாஜி கணேசன் நடிகராக அறிமுகமான பராசக்தி திரைப்படம் தான். பராசக்தி படத்தில், க்ளைமேக்ஸில் வரும் நீதிமன்ற காட்சி இன்றளவும் பேசப்படும் ஒரு காட்சியாக உள்ளது. இந்த காட்சியில் நீதிபதியாக கெஸ்ட் ரோலில் நடித்தவர் தான் கண்ணதாசன். அதே சமயம் பராசக்தி படத்தில் நடித்ததற்கு பின் அடுத்து சில ஆண்டுகள் படங்களில் நடிக்காமல் இருந்தார் கண்ணதாசன்.

அதன்பிறகு சில படங்களில் ஒரு காட்சியில் நடித்த கண்ணதாசன், முக்தா சீனிவாசன் இயக்கத்தில் சூரியகாந்தி என்ற படத்தில் ஒரு பாடல் காட்சியில் நடித்திருப்பார். 1957-ம் ஆண்டு வெளியான முதலாளி என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். தொடர்ந்து எஸ்.எஸ்.ராஜேந்திரன், ஜெமினி கணேசன், ஜெய்சங்கர், ரவிச்சந்திரன் ஆகியோர் நடிப்பில் பல வெற்றிப்படங்களை இயக்கிய முக்தா சீனிவாசன், முத்துராமன் ஜெயலலிதா நடிப்பில் சூரியகாந்தி என்ற படத்தை இயக்கியிருந்தார்.

1973-ம் ஆண்டு வெளியான இந்த படத்தில், சோ ராமசாமி, மனோரமா, உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர், எம்.எஸ்.வி இசையமைக்க கண்ணதாசன், வாலி பாடல்கள் எழுதியிருந்தனர். இந்த படத்தில் இருந்து ஒரு பாடலை கண்ணதாசன் பாடுவது போல் இருந்துள்ளது. இந்த படத்தில் கண்ணதாசன் ஒரு பாடல் மட்டுமே எழுதியிருந்தார். பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது என்ற அந்த பாடலை திரையில் கண்ணதாசனே பாடும் படி காட்சிகள் அமைந்திருக்கும். இந்த பாடல் இப்போது கேட்டாலும் இன்றைய காலத்தில் நடக்கும் நிகழ்வுக்கு பொருத்தமாக இருக்கும் வகையில் அந்த பாடலை எழுதியிருப்பார்.

படத்தில் நாயகியாக நடித்த ஜெயலலிதாவும், இந்த பாடலை கண்ணதாசன் தான் திரையில் பாட வேண்டும் என்று விரும்பியுள்ளார். கண்ணதாசன் திரையில் தோன்றி பாட வேண்டும் என்றதும், அவர் என்னால் முடியாது என்று மறுத்துள்ளார். ஆனால் இயக்குனர் முக்தா சீனிவாசன் உள்ளிட்ட பலரும் இவரை சமாதானம் செய்து வலுக்கட்டாயமாக இந்த பாடல் காட்சியில் நடிக்க வைத்ததாக முக்தான சீனிவாசன் மகள் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

டைரக்டர் நீயா? நானா? இயக்குனர் கேட்ட ஓரே கேள்வி; ஷூட்டிங் ஸ்பாட்டை காலி செய்த சிவாஜிபல வெற்றிப்படங்களை இயக்கிய முக்தா சீ...
18/05/2026

டைரக்டர் நீயா? நானா? இயக்குனர் கேட்ட ஓரே கேள்வி; ஷூட்டிங் ஸ்பாட்டை காலி செய்த சிவாஜி

பல வெற்றிப்படங்களை இயக்கிய முக்தா சீனிவாசன், சிவாஜியுடன் அருணோதயம் என்ற படத்தில் முதல்முறையாக இணைந்தார்.

தமிழ் சினிமாவில் நடிப்பு பல்கலைக்கழகம் என்று அழைக்கப்பட்ட சிவாஜி கணேசன், பல வெற்றிப்படங்களை கொடுத்திருந்த நிலையில், 1977-ம் ஆண்டு படப்பிடிப்பு தளத்தில் ஒரு திருத்தம் சொன்னபோது நீ டைரக்டரா இல்ல நான் டைரக்டரா என்று ஒரு இயக்குனர் கேட்டுள்ளார். இதனால் கோபித்துக்கொண்டு சிவாஜி அங்கிருந்து கிளம்பியுள்ளார்.

1952-ம் ஆண்டு வெளியான பராசக்தி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சிவாஜி கணேசன். தொடர்ந்து பல வெற்றிப்படங்களை கொடுத்து முன்னணி நடிகராக உயர்ந்த இவர், நடிகர் திலகம் என்ற பட்டத்துடன் பல முன்னணி இயக்குனர்களுடன் இணைந்து படங்கள் கொடுத்துள்ளார். அந்த வகையில் முக்கியமான இயக்குனர் முக்தா சீனிவாசன். 1957-ம் ஆண்டு வெளியான முதலாளி என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.

தொடர்ந்து எஸ்.எஸ்.ராஜேந்திரன், ஜெமினி கணேசன், ஜெய்சங்கர், ரவிச்சந்திரன் ஆகியோர் நடிப்பில் பல வெற்றிப்படங்களை இயக்கிய முக்தா சீனிவாசன், சிவாஜியுடன் அருணோதயம் என்ற படத்தில் முதல்முறையாக இணைந்தார். அதன்பிறகு தவப்புதல்வன், அன்பை தேடி உள்ளிட்ட சில படங்களில் இணைந்த இந்த கூட்டணி 1978-ம் ஆண்டு, அந்தமான் காதலி என்ற திரைப்படத்தில் இணைந்தது. இந்த படத்தை முக்தா சீனிவாசன் இயக்க அவரது அண்ணன் முக்தா ராமசாமி தயாரித்திருந்தார்.

சிவாஜி கணேசன், சுஜாதா, தேங்காய் சீனிவாசன், மனோரமா, சுகுமாரி, சீமா உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படத்திற்கு, எம்.எஸ்.வி இசையமைக்க கண்ணதாசன் பாடல்கள் எழுதியிருந்தார். இந்த படத்தின் சில காட்சிகள் அந்தமானில் ஷூட் செய்யப்பட்டுள்ளது. அதனை அப்படியே எடுக்கும் வகையில், சென்னையில் செட் போட்டுள்ளனர். இந்த செட்டை பார்த்த சிவாஜி அந்த அளவுக்கு இல்லை என்று சொல்ல, இங்கு நான் டைரக்டரா இல்ல நீ டைரக்டரா என்று முக்தா சீனிவாசன் கேட்டுள்ளார்.

இதை கேட்ட சிவாஜி கோபமாகி, படப்பிடிப்பு தளத்தில் இருந்து வெளியேறியுள்ளார். இந்த விஷயத்தை கேள்விப்பட்ட முக்தா ராமசாமி, இனிமேல் படத்தை நீ இயக்க வேண்டாம். ஸ்கிரிப்டை உன் உதவியாளரிடம் கொடு, நான் போய் சிவாஜியை பார்த்துவிட்டு வருகிறேன் என்று சொல்லி கிளம்பி சென்றுள்ளார். அங்கு இனிமேல் சீனி (முக்தா சீனிவாசன்) படத்தை இயக்க மாட்டான். அவன் உதவியாளர் படத்தை இயக்குவார். நீங்கள் மீதமுள்ள காட்சிகள் நடித்து கொடுக்க வேண்டும் என்று சொல்ல, சிவாஜியும் சம்மதம் தெரிவித்துள்ளார்.

மறுநாள் காலையில், முக்தா சீனிவாசன் எப்போவும்போல் தனது வீட்டில் இருக்க, காரில் வந்த சிவாஜி அவரிடம் பேசி, மீண்டும் படத்தை இயக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இருவரும் சமாதானம் ஆன நிலையில், ஒன்றாக படப்பிடிப்பு தளத்திற்கு வந்துள்ளனர். இந்த தகவலை முக்தா சீனிவாசனின் மகள் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.

தப்பு பண்ணாதான் சரியா இருக்கும்; அடம் பிடித்த பாரதிராஜா, சீனையே மாற்றிய பாக்யராஜ்: 16 வயதினிலே ப்ளாஷ்பேக்16 வயதினிலே படத...
18/05/2026

தப்பு பண்ணாதான் சரியா இருக்கும்; அடம் பிடித்த பாரதிராஜா, சீனையே மாற்றிய பாக்யராஜ்: 16 வயதினிலே ப்ளாஷ்பேக்

16 வயதினிலே படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றிய இயக்குனர் பாக்யராஜ் ஒரு சுவாரஸ்யமான சம்பவம் பற்றி கூறியுள்ளார்.

ஸ்டூடியோவுக்குள் முடங்கி கிடந்த தமிழ் சினிமாவை வெளியுலகிற்கு கொண்டு சென்ற பெருமைக்கு சொந்தக்காரரான பாரதிராஜா இயக்கத்தில் வெளியான முதல் படம் 16 வயதினிலே. கமல்ஹாசன், ரஜினிகாந்த், ஸ்ரீதேவி, காந்திமதி, கவுண்டமணி உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். படத்தின் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றிய இயக்குனர் பாக்யராஜ் ஒரு சுவாரஸ்யமான சம்பவம் பற்றி கூறியுள்ளார். இது குறித்து நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், இந்த படத்தில் ஸ்ரீதேவியை அந்த டாக்டர் கெடுத்துவிடுவது போன்று தான் காட்சி இருந்தது. ஆனால அதை யாருமு் ஒப்புக்கொள்ளவில்லை. ஆனால் இவருக்கு (பாரதிராஜா) கெடுத்துவிடுவது தான் கதை என்று நினைத்துக்கொண்டு இருந்தார். ஆனால் எல்லோரும் சொன்னதால், ஒப்புக்கொண்டு அந்த சீனை அடித்துவிட்டார்.

நான் சீனை படித்துக்கொண்டே வரும்போது இளநீர் வெட்டும் சீன் வந்தது, இளநீர் இறுதியாக வெட்டும்போது அவர் கெடுக்கப்பட்டுவிடுவாள். அதை அவர் அடித்து வைத்திருந்தார். ஆனால் நான் அதை மீண்டும் எழுதி அவரிடம், சார் இறுதியாக இளநீர் வெட்டும்போது அது கைநழுவி போகிறது. இவளும் டாக்டரிடம் இருந்து தப்பி விடுவாள் என்று எழுதினேன். ஆனால் அவர் அதை ஒப்புக்கொள்ளவில்லை. சரியாக வராது என்று சொல்லிக்கொண்டே இருந்தார். கெடுத்தால் தான் சரியா வரும் என்று சொன்னார்.

தவறு நடந்தால்தான் அது சரியாக இருக்கும். அப்போதுதான் அது சிம்பாலிக் (Symbolic) ஆகவும், யதார்த்தமாகவும் இருக்கும்," என்று சொன்னார். ஆனால் எல்லாம் சரி தான் ஆனால் கடைசி மட்டும் மாற்றிக் கொள்ளலாம் என்று சொன்னேன். அவரும் இறுதியாக ஒப்புக்கொண்டார். கடைசியில் இளநீர் நழுவி ஓடுவது, ஸ்ரீதேவி வீட்டில் இருந்து வெளியில் ஓடி வருவது கட் பண்ணி போட்டு வைத்தோம். படம் ரிலீஸ் ஆனவுடன் பாரதிராஜாவே ஷாக் ஆகிவிட்டார். நான் சொன்னபடி அந்த சீனை அனைவரும் ரசித்தனர்.

அதன்பிறகு நான் அவரிடம் இது உங்க சீன் தான் சார், ஒன்று இல்லை என்றதால் அதை அப்படியே தூக்கி வைத்துவிட்டீர்களே என்று சொன்னேன். அதன்பிறகு ஏற்றுக்கொண்டார் என்று பாக்யராஜ் கூறியுள்ளார்.

Address

Chennai

Alerts

Be the first to know and let us send you an email when CinemaYugam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share