CinemaYugam

CinemaYugam Latest Tamil Cinema News and Update

அடுத்த ரெட்ரோ சாங்கா? கூலி படத்தில் இந்த 90’ஸ் பாடலா? சும்மா பிச்சுக்கப் போகுதுசமீபத்தில் தான் கூலி படத்தின் ஃபர்ஸ்ட் சி...
28/06/2025

அடுத்த ரெட்ரோ சாங்கா? கூலி படத்தில் இந்த 90’ஸ் பாடலா? சும்மா பிச்சுக்கப் போகுது

சமீபத்தில் தான் கூலி படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. அனிருத் இசையில் ரஜினி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகி இருக்கும் திரைப்படம் கூலி. இந்த படத்தில் ரஜினியுடன் அமீர் கான், சத்யராஜ் ஸ்ருதிஹாசன் ,உபேந்திரா என எண்ணற்ற பல நடிகர்கள் நடித்துள்ளனர் .பேன் இந்தியா திரைப்படமாக இந்த படம் உருவாகி இருக்கிறது.

படத்தில் பூஜா ஹெக்டே ஒரு பாடலில் நடனமாடி இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. படப்பிடிப்பு முற்றிலுமாக முடிந்த நிலையில் படத்தின் பிரீ ப்ரொடக்ஷன் வேலைகள் நடைபெற்று வருகின்றன. இன்னொரு பக்கம் ரஜினி ,நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் 2 திரைப்படத்தில் பிசியாக நடித்து வருகிறார். லோகேஷ் கனகராஜை பொறுத்த வரைக்கும் கைதி படத்தில் இருந்து அவர் எடுக்கும் எல்லா படங்களிலும் 90ஸ் பாடல் ஏதாவது ஒரு காட்சிகளில் இடம் பெற்று ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்து விடும்.

அதுவும் 90கள் காலகட்டத்தில் மிகவும் ஹிட்டான அனைவருக்கும் பிடித்த பாடலை ரீமிக்ஸ் செய்து இப்போது அவர் எடுக்கிற படங்களில் வைப்பதன் மூலம் அதற்கே பெரிய ரசிகர்கள் இருந்து வருகிறார்கள். விக்ரம் படத்தில் கூட அந்த ஒரு டெக்னிக்கை பயன்படுத்தி இருப்பார். ஏன் விஜய் நடித்த லியோ திரைப்படத்திலும் கருகரு கருப்பாயி பாடல் பெரிய அளவில் ரீச்சானது.

இந்த நிலையில் கூலி திரைப்படத்திலும் எந்த பாடலை வைக்க போகிறார் என்ற ஒரு ஆர்வம் ரசிகர்களிடையே எழுந்திருக்கின்றன. அது சம்பந்தமான ஒரு செய்தி தான் இப்போது வைரலாகி வருகின்றது. படத்தில் சத்யராஜ் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஏற்கனவே சத்யராஜ், ரஜினி இவர்களைப் பற்றி சில கிசுகிசுக்கள் வந்த வண்ணம் இருந்தன.

ரஜினி நடிக்கிற படத்தில் சத்யராஜ் நடிக்க மாட்டார் என்று சத்யராஜ் சொன்னதாக பல தகவல்கள் வெளியாகின. இருந்தாலும் நீண்ட வருடங்களுக்கு பிறகு கூலி திரைப்படத்தில் சத்யராஜ் இணைந்து இருப்பது பெரிய ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில் சத்யராஜுக்காக லோகேஷ் கனகராஜ் சத்யராஜ் படத்தில் இருந்தே 90ஸ் ஹிட் பாடலை வைத்திருப்பதாக தகவல்கள் சொல்லப்படுகிறது.

சத்யராஜ் நக்மா நடிப்பில் கும்தலக்கடி தில்லாலே என்ற பாடல் மிகவும் பிரபலமானது. இதுவரை சத்தியராஜ் ஆடிய நடனத்தில் இந்தப் பாடலில் அவர் ஆடியது கிக் ஏத்தும் விதமாக அமைந்திருக்கும் .பாடல் ஆரம்பத்திலிருந்து முடியும் வரை ஃபுல் வைபில் சத்யராஜ் இந்த பாடலில் ஆடி இருப்பார். அந்த பாடலை தான் லோகேஷ் இந்த படத்தில் பயன்படுத்தி இருப்பார் என சொல்லப்படுகிறது.

போதை கலாச்சாரத்திற்கு நெல்சன், லோகேஷ் கனகராஜ் தான் காரணமா? இளைஞர்களை கெடுக்கும் பிரபல இயக்குனர்கள்.. சமூக பொறுப்பே இல்லை...
27/06/2025

போதை கலாச்சாரத்திற்கு நெல்சன், லோகேஷ் கனகராஜ் தான் காரணமா? இளைஞர்களை கெடுக்கும் பிரபல இயக்குனர்கள்.. சமூக பொறுப்பே இல்லையா?

தமிழ்நாட்டில் போதைப்பொருள்கள் சர்வ சாதாரணமாக கிடைப்பதாகவும், போதைப்பொருள்கள் பெட்டிக்கடைகளில் கூட வாங்கலாம் என்றும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வரும் நிலையில், தமிழ் திரை உலகில் போதைப்பொருள்கள் பயன்படுத்தும் நடிகர்கள் தொடர்ச்சியாக கைது செய்யப்பட்டு வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த், போதைப்பொருள் விற்பனைக்கு உடந்தையாக இருந்ததாக நடிகர் கிருஷ்ணா ஆகியோர் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். இதனால், திரை உலகில் பலர் போதைக்கு அடிமையாகி இருப்பதாகவும், போதைக்காகவே சில பார்ட்டிகள் நடப்பதாகவும் கூறப்படுவது அதிர்ச்சியின் உச்சத்திற்குக் கொண்டு சென்றுள்ளது.

ஸ்ரீகாந்த், கிருஷ்ணா கைதுக்குப் பிறகு, இன்னும் சில பிரபல நடிகர், நடிகைகள் சிக்குவார்கள் என்றும், அவர்கள் ‘கோட் வேர்ட்’ மூலம் போதைப்பொருள் வாங்கி பார்ட்டிகளில் பயன்படுத்தி இருப்பதாகவும் கூறப்படுகிறது. காவல்துறையினர் இது குறித்து முழுமையாக விசாரித்தால், இன்னும் பல பெரிய நடிகர்கள், நடிகைகள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் உட்பட பலர் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

இந்த நிலையில், சினிமா பத்திரிகையாளர் செய்யாறு பாலு தனது யூடியூப் சேனலில் இது குறித்து விரிவாக ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், திரையுலகில் மட்டுமல்லாமல் சமூகத்திலும் போதைப்பொருள் பரவ, நெல்சன் மற்றும் லோகேஷ் கனகராஜ் போன்ற பெரிய இயக்குநர்கள் ஒரு காரணம் என்றும் அவர் சாடியுள்ளார். தங்கள் படங்களில் போதைப்பொருளை எப்படி வாங்குவது, எப்படி பயன்படுத்துவது, போதைப்பொருள் பயன்படுத்துவதால் என்ன நடக்கும் என்பதை விலாவாரியாக காட்டி, இளைஞர்களைக் கெடுக்கிறார்கள் என்று அவர் கூறியுள்ளார்,

குறிப்பாக, கமல்ஹாசன் நடித்த ‘விக்ரம்’ திரைப்படத்தில், விஜய் சேதுபதி கதாபாத்திரம் போதைப்பொருளால் தான் வலிமையான சக்தியை பெறுவதாகக் காட்டுவதால் இளைஞர்கள் தவறான பாதைக்கு செல்ல மாட்டார்களா என்றும் அவர் கேள்வி எழுப்பினார். “கொஞ்சம் கூட சமூக பொறுப்பில்லாமல் அனைத்து படங்களிலும் போதைப்பொருள் சம்பந்தப்பட்ட கதையை லோகேஷ் கனகராஜ் எடுக்கிறார்,” என்றும் அவர் சாடியுள்ளார். லோகேஷ் கனகராஜ் போன்ற பெரிய இயக்குநர்கள் ரஜினி, கமல், விஜய் போன்ற பெரிய நடிகர்கள் நடிக்கும் படத்தில் தான் போதைப்பொருளை ஒரு கதையின் கருவாக வைத்திருக்கிறார். இதனால், கோடிக்கணக்கான மக்களிடம் அவர் சொல்லும் கருத்து சென்று சேருகிறது என்றும், இது அப்பட்டமான சமூக விரோதம் என்றும் பலர் செய்யாறு பாலுவின் வீடியோவுக்கு கருத்து தெரிவித்துள்ளனர்.

‘கோலமாவு கோகிலா’ என்ற ஒரு காமெடி படத்தில் போதைப்பொருள் தான் மைய கருத்து என்றும், நெல்சன் போன்ற இயக்குநர்களால் தான் சமூகமே சீரழிகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மதுப்பழக்கத்தைவிட போதைப் பழக்கம் மிகவும் கொடூரமானது என்று சமூக ஆர்வலர்கள் கூறிவரும் நிலையில், போதைப்பொருள் ஒரு பக்கம் இளைஞர்கள் மற்றும் மாணவர்களுக்கு எளிதில் கிடைக்கும் வகையில் தமிழகத்தில் நிலைமை ஏற்பட்டுவிட்டது என்றும், அதேபோல் திரைப்படங்கள் மூலம் போதைப்பொருள் பயன்படுத்துவதால் பல நன்மைகள் இருப்பதாக தவறான பாடம் கற்பிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. “நீங்கள் என்னதான் அந்த காட்சிகள் வரும்போது கீழே எச்சரிக்கை டைட்டில் போட்டாலும், அதை யாரும் பார்க்க மாட்டார்கள்; போதைப்பொருள் எப்படிப் பயன்படுத்துவது என்பதைத்தான் எல்லோரும் பார்ப்பார்கள்,” என்றும் சொல்லப்படுகிறது.

எனவே, திரையுலகினர் கோடிக்கணக்கில் பணம் சம்பாதிப்பதற்காக போதைப்பொருள் குறித்த விலாவாரியான காட்சிகளை படத்தில் வைத்து இளைய சமூகத்தினரை கெடுக்க வேண்டாம் என்றும், நல்ல கதை அம்சம் கொண்ட, மக்களுக்கு நல்ல கருத்துக்கள் சொல்லக்கூடிய வகையில் படம் எடுங்கள் என்றும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. ஆனால், இதையெல்லாம் பெரிய இயக்குனர்கள் பொருட்படுத்துவார்களா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

அரசியலுக்கு வரும் முன்பே..அரசியல் பேசிய விஜய்யின் பாடல்கள்! அத்தனையும் சூப்பர் ஹிட்நடிகராக மட்டும் இருந்த விஜய், 1 வருடத...
21/06/2025

அரசியலுக்கு வரும் முன்பே..அரசியல் பேசிய விஜய்யின் பாடல்கள்! அத்தனையும் சூப்பர் ஹிட்

நடிகராக மட்டும் இருந்த விஜய், 1 வருடத்திற்கு முன் தமிழக வெற்றிக்கழகம் என்கிற பெயரில் அரசியல் கட்சியை தொடங்கி இப்போது அரசியல் கட்சியின் தலைவராகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார். இவரது சமீபத்திய படங்கள் அரசியல் பேசின என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், அரசியல் குறித்து விஜய் எதுவும் வாய் திறவாத சமயத்திலேயே தனது இன்ட்ரோ பாடல்கள் மூலமாக அரசியல் பேசியிருக்கிறார். அவை என்னென்ன பாடல்கள் தெரியுமா?

சிவகாசி படத்தில் இடம் பெற்றிருந்த பாடல், ‘கோடம்பாக்கம் ஏரியா’. இந்த பாடல், நயன்தாரா ஒரு கட்சிக்காக வாக்கு சேகரிக்க வரும் போது விஜய்யுடன் ஆடும் பாடலாக இருக்கும். அதில், “ஹே கோடம்பாக்கம் ஏரியா ஓட்டு கேட்டு வாறியா..” என்று பாடல் தொடங்கும். கூடவே, ஸ்டாருங்க நாங்களும் ஓட்டு கேட்டா, யாருமே ஜாதிதான் பாப்பதில்ல” என்ற லைன் வர, பதிலுக்கு விஜய் “ஏழைங்க பாழைங்க நெனச்சிப்புட்டா, நாளைக்கு நீங்களும் சிஎம்முதான்” என்று பாடலில் பதில் கூறுவார். இப்போது இதே லாஜிக்கை வைத்து அவரும் அரசியலில் நிற்கிறார்.

2009ஆம் ஆண்டில் உருவான வேட்டைக்காரன் திரைப்படத்தில் விஜய்யின் இண்ட்ரோ பாடல் வரும். “நான் அடிச்சா தாங்க மாட்ட நாலு மாசம் தூங்க மாட்ட” என்ற இந்த பாடலில், விஜய் அரசியல் பேசியது மட்டுமல்லாது மக்கள் அல்லல் படுவதையும் பேசியிருப்பார். ”உணவு உடை இருப்பிடம் அனைவருக்கும் கிடைக்கனும், ஆலமரம் பள்ளிக்கூடம் ஆக்ஃபோர்டா மாறனும்” என்று முதல் சரணத்தில் இந்த லைன் இடம் பெற்றிருக்கும். அடுத்த சரணத்தில் அரசியல் கட்சிகளை அட்டாக் செய்யும் வகையில் “வரட்டி தட்டும் செவுத்துல வேட்பாளர் முகமடா..காத்திருந்து ஓட்டு போட்டு கருத்து போச்சு நகமடா..” என்ற வரி இடம் பெற்றிருக்கும்.

விஜய்க்கு அரசியல் மீது ஈடுபாடு இருக்கிறது என்பதை பெரிதாக வெளிக்காட்டிய படம் சர்கார். இந்த படத்தில் இடம் பெற்றிருந்த பாடல் ஒரு விரல் புரட்சி. இதில், ஏழ்மையை ஒழிக்கவே ஏழையை ஒழிப்பதா, விரலின் நுனியில் விழட்டும் கருப்பு என பல்வேறு புரட்சிகரமான வரிகள் இடம் பெற்றிருக்கும்.

விஜய்யின் சூப்பர் ஹிட் படங்களுள் ஒன்று, போக்கிரி. இந்த படத்தில் அவரது இண்ட்ரோ பாடலாக இடம் பெற்றிருந்தது, “ஆடுங்கடா என்ன சுத்தி”. இதில், “பச்ச புள்ள பிஞ்சு விரல், அஞ்சுக்கும் பத்துக்கும் வேல செஞ்சா..” மற்றும் “தீ பந்தம் எடுத்து தீண்டாமை கொளுத்து இதுதான் என் கருத்து…” போன்ற வரிகள் சமூக பிரச்சனையை பேசுபவையாகவும், அவலங்களை தோலுரித்து காண்பிப்பவையாகவும் இருந்தன.

விஜய், அரசியலுக்கு வருவேன் என்று கூறும் முன்னர் வெளியான படங்கள் இது. இதில் இவருக்கு இண்ட்ரோ பாடல்களான வெளியான அனைத்து பாடல்களுமே அரசியல் வருகையை குறிப்பவையாக இருந்தன. வாரிசு படத்தில் “வா தலைவா வா தலைவா” எனும் பாடல் இடம் பெற்றிருந்தது. இது அவர் அரசியலுக்கு வருவதை குறிக்கும் வகையில் இருந்தது. அதே போல லியோ படத்தில் ‘நான் ரெடிதான் வரவா..’ எனும் பாடல் லியோ தாஸின் இன்ட்ரோவிற்காக இடம் பெற்றிருந்தது. அதுவும் “நான் உங்களுக்கான நிற்பேன்” என்று ரசிகர்களையும் மக்களையும் பார்த்து சொல்வது போல இடம் பெற்றிருந்தது.

அடுத்து கோட் படத்தில் “விசில் போடு” பாடல் இடம் பெற்றிருந்தது. அதில், “பார்ட்டி ஒன்னு தொடங்கட்டுமா..” என்ற வரி இடம் பெற்றிருக்கும். இந்த படம் வெளியான சமயத்தில் விஜய் தனது அரசியல் கட்சியை அறிவித்திருந்தார்.

தக் லைஃப் படத்திற்கு பாசிடிவ் விமர்சனம் கொடுத்த ஒரே பிரபலம்! என்ன சொல்லியிருக்காரு பாருங்க..மணிரத்னம்-கமல்ஹாசன் கூட்டண...
20/06/2025

தக் லைஃப் படத்திற்கு பாசிடிவ் விமர்சனம் கொடுத்த ஒரே பிரபலம்! என்ன சொல்லியிருக்காரு பாருங்க..

மணிரத்னம்-கமல்ஹாசன் கூட்டணியில் 38 வருடங்கள் கழித்து உருவான படம், தக் லைஃப். இந்த படத்திற்கு எட்டுத்திக்கில் இருந்தும் நெகடிவ் விமர்சனங்கள் கிடைத்தன. இதையடுத்து ஒரு பிரபலம் இந்த படத்தை புகழ்ந்து பேசியிருக்கிறார்.

மாஸ் ஹீரோக்களின் படங்கள் சமீப காலங்களாக பாக்ஸ் ஆபிஸில் வசூலை குவித்தாலும், மக்களை ஈர்க்க தவறி வருகிறது. சில பெரிய ஹீரோக்களின் திரைப்படங்கள், வசூலிலும் தோல்வியடைந்து விடுகின்றன. அப்படி கடந்த ஆண்டு வெளியான இந்தியன் 2 படமும், இந்த ஆண்டு வெளியான தக் லைஃப் படமும் கமலுக்கு தாேல்வியை கொடுத்துள்ளன.

நாயகன் படத்தில் கடைசியாக இணைந்த மணிரத்னமும் கமலும், பல வருடங்களுக்கு பின்பு அதே போன்ற ஒரு கேங்க்ஸ்டர் கதையான தக் லைஃப் படத்தில் இணைந்தனர். கூடவே, சிம்புவும் கமலுக்கு இணையான ரோலில் நடித்திருந்தார். இவர்களுடன் த்ரிஷா, அபிராமி, நாசர், ஜோஜு ஜார்ஜ் என பலர் நடித்தனர். ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் பாடல்கள் அனைத்தும் பட ரிலீஸிற்கு முன்பே ஹிட் அடித்தது. ஆனால், படம் ரசிரக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய தவறியது.

பலர், தக் லைஃப் படத்தின் முதல் பாதியை பாராட்டி இருந்தாலும், அடுத்த பாதி தங்களை ரொம்பவே ஏமாற்றியதாக கூறினர். திரைக்கதை மனதோடு ஒட்டவில்லை என்றும், டைலாக்குகளும் மோசமாக இருப்பதாகவும் சிலர் கூறி வந்தனர். கமல் மற்றும் சிம்புவின் நடிப்புதான் படத்தை தூக்கி நிறுத்துவதாகவும் மற்றவை அனைத்தும் படத்தில் மைனஸ் என்றும் கூறினர். செலிப்ரிட்டிகளில், தக் லைஃப் படக்குழுவினரை தவிர வேறு யாரும் பெரிதாக இந்த படத்தை பற்றி பேசவில்லை. கார்த்திக் சுப்பிராஜ் மட்டும் படம் வெளியான போது பாசிடிவாக பதிவிட்டிருந்தார். தற்போது ஒரு பிரபலம் இந்த படம் தனக்கு பிடித்திருப்பதாக பேசியிருக்கிறார்.

இசையமைப்பாளராகவும், டிவி நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் இருப்பவர் ஜேம்ஸ் வசந்தன். இவர், தக் லைஃப் படம் குறித்து பாராட்டி பேசியிருக்கிறார். பசங்க, ஈசன், சுப்ரமணியபுரம் உள்ளிட்ட சில படங்களுக்கு இசையமைத்திருக்கும் இவர், ரஹ்மானும் ரவி. கே. சந்திரனும் இந்தியாவுக்குக் இடைத்த வரங்கள் என்று கூறியிருக்கிறார்.

தான் தக் லைஃப் படத்தை சமீபத்தில் பார்த்து அசந்ததாகவும், இது மிகவும் நல்ல படம் என்றும் கூறியிருக்கிறார். மேலும், இதை ஏன் இவ்வளவு மோசமாக சிலர் விமர்சித்திருந்தனர் என்று தெரியவில்லை என்றும் அண்டர்வர்ல்ட் கேங்க்ஸ்டர் படத்துக்கு தேவையான அனைத்து விஷயங்களும் இந்த படத்தில் இருப்பதாகவும் கூறியிருக்கிறார்.

இந்த படம், ஆங்கில மொழியில் வெளியாகியிருந்தால் இதனை பலர் ரசித்து பாராட்டியிருப்போம் என்றும் அவர் கூறியிருக்கிறார். இதில், ஒரு காட்சி கூட தனக்கு சலிப்பை ஏற்படத்தவில்லை என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

நடிகர் கமல்ஹாசன், தக் லைஃப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கர்நாடகா தமிழில் இருந்து பிறந்த மொழி என்று கூறினார். இது பெரும் பூகம்பமாக வெடித்தது. கன்னட மொழி பேசுபவர்கள் கமலை வசைபாடியதோடு, அவர் மன்னிப்பு கேட்டால்தான் தக் லைஃப் படத்தை கர்நாடகாவில் வெளியிடுவோம் என்றும் மிரட்டினர். பாதுகாப்பு வழங்க உயர்நீதிமன்றத்தை கமல் நாடிய போதும் பயன் இல்லாமல் போனது. இதையடுத்து, தக் லைஃப் படத்தை வெளியிட வேண்டாம் என முடிவு செய்தார். இதையடுத்து, படம் தோல்வியுற்ற பின்பு, தற்போது படம் கர்நாடகாவில் ரிலீஸ் ஆனால் முழு பாதுகாப்பு தருகிறோம் என கர்நாடக அரசு பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்துள்ளது. இதனால், இப்படத்திற்கு கோடிக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

என்ன வச்சி ரிஸ்க் எடுக்காதீங்க... ஹிட் பட வாய்ப்பை மறுத்த சூர்யா; கடைசியில் அவரே நடித்து பிளாக்பஸ்டர் ஆன படம்!பொதுவாக சி...
28/05/2025

என்ன வச்சி ரிஸ்க் எடுக்காதீங்க... ஹிட் பட வாய்ப்பை மறுத்த சூர்யா; கடைசியில் அவரே நடித்து பிளாக்பஸ்டர் ஆன படம்!

பொதுவாக சினிமாவில், ஒரு இயக்குனர் கதை எழுதினால், அதை ஒரு நடிகரிடம் சொல்வதும், அவர் அந்த கதையில் நடிக்க முடியாமல் போனால் மற்ற நடிகர்களிடம் அந்த கதை போவதும் வழக்கம். இப்படி அந்த இயக்குனர் எந்த நடிகரை மனதில் வைத்து அந்த கதையை எழுதினாரோ அந்த நடிகர் நடிக்காமல் கடைசியில் வேறொருவர் நடிப்பில் வெளியாகி அந்த படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்துவிடும்.

அதன்பிறகு சில வருடங்கள் கழித்து அந்த இயக்குனரோ அல்லது அந்த கதையை நிராகரித்த நடிகரோ, இந்த கதையில் நான் தான் நடிக்க வேண்டியது. ஆனால் அப்போது முடியாமல் போய்விட்டது என்று சொல்வார்கள். ஆனால் இங்கு மிகப்பெரிய வெற்றிப்படத்தை கொடுத்த நடிகர் இந்த கதை தன்னிடம் வரும்போது, தான் இந்த கதைக்கு செட்டாக மாட்டேன். வேறோரு முன்னணி நடிகரை வைத்து படத்தை எடுங்கள் என்று கூறியுள்ளார். அந்த நடிகர் யார்? அது எந்த படம் என்பதை பார்ப்போம்.

தமிழ் சினிமாவில் ஸ்டைலிஷ் படங்களை இயக்குவதில் கைதேர்ந்தவர் கௌதம் மேனன். மின்னலே படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான இவர், 2003-ம் ஆண்டு சூர்யா நடிப்பில் காக்க காக்க என்ற பிரம்மாண்ட வெற்றிப்படத்தை கொடுத்தார். கலைப்புலி தானு தயாரித்த இந்த படத்தில் ஜோதிகா, நடிகர் ஜீவன், டேனியல் பாலாஜி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் இந்த படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றிருந்தது.

தொடர்ந்து இந்த படம் தெலுங்கில் வெங்கடேஷ் நடிப்பில் குருஷேத்ரா, கன்னடத்தில் மறைந்த நடிகர் சிரஞ்சீவி சார்ஜா நடிப்பில், தண்டம் தஷகுணம் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு அங்கேயும் வெற்றியை பெற்றது. தனது 2-வது படத்திலேயே தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட வெ்றறியை பெற்ற இயக்குனர் கௌதம்மேனன், இந்த படத்தின் கதையை எழுதிவிட்டு பல நடிகர்களிடம் கூறியுள்ளார். ஆனால் பலரும் இந்த கதையை நிராகரித்துள்ளனர். இறுதியாக சூர்விடம் கதை கூறியுள்ளார்.

இந்த கதையை கேட்ட சூர்யா, கதை மிகவும் அருமையாக உள்ளது. ஆனால் நான் வளர்ந்து வரும் ஹீரோ இப்போது தான் எனக்கு ஒரு படம் வெற்றி (நந்தா) கிடைத்துள்ளது. என்னை இந்த படத்தில் ஹீரோவாக்கி நீங்கள் ரிஸ்க் எடுக்க வேண்டாம். மாதவனிடம் சொல்லி நடிக்க சொல்லுங்கள். அவர் இப்போ ஆக்ஷன் ஹீரோ (ரன் படம் வெளியான நேரம்) அவரை போன்று அடுத்த லெவலில் உள்ள நடிகர்கள் நடிக்க வேண்டிய கதை என்று கூறியுள்ளார். ஆனால் கௌதம் மேனன், நீங்கள் நடித்தால் சரியாக இருக்கும். ரொமான்டிக் ஹீரோவா இருக்கும் நீங்கள் ரப்பா பண்ணா படம் வித்தியாசமாக இருக்கும் என்று கூறியுள்ளார்.

அதன்பிறகு சூர்யா நடிக்க ஒப்புக்கொண்டு வெளியான படம் தான் காக்க காக்க. சூர்யாவின் திரை வாழ்க்கையில் இன்றுவரை, ஒரு பெயர் சொல்லும் படமாக காக்க காக்க படம் இருக்கிறது. 2003-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 1-ந் தேதி இந்த படம் வெளியானது குறிப்பிடத்தக்கது.

கவுண்டமணி மனைவி சாந்தி யார் தெரியுமா? கவுண்டமணி கவுண்டரே இல்லையா - பகீர் தகவல்!காமெடி கிங் கவுண்டமணி, கவுண்டர் இல்லை என்...
07/05/2025

கவுண்டமணி மனைவி சாந்தி யார் தெரியுமா? கவுண்டமணி கவுண்டரே இல்லையா - பகீர் தகவல்!

காமெடி கிங் கவுண்டமணி, கவுண்டர் இல்லை என்றும், அவரின் மனைவி சாந்தி யார் என்பது பற்றியும் மூத்த பத்திரிக்கையாளர் பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.

கவுண்டமணியின் மனைவி சாந்தி பற்றி பற்றி பலருக்கும் தெரியாத தகவல்

கவுண்டமணி:

தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருந்த காமெடி நடிகர்களில், கவுண்டமணியும் ஒருவர். ரஜினிகாந்த், கமல் ஹாசன், அஜித், விஜய், சத்யராஜ், விஜயகாந்த், அர்ஜூன் என்று மாஸ் ஹீரோக்களுடன் இணைந்து ஏராளமான படங்களில் நடித்துள்ளார். காமெடி, வில்லன் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்கள் என்று இவர் ஏற்று நடிக்காத கதாபாத்திரங்களே கிடையாது. இந்த நிலையில் தான் அவரது மனைவி சாந்தி சில தினங்களுக்கு முன்பு உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார்.

கவுண்டமணி குடும்பம்:

இந்த நிலையில் தான் நடிகரும், மூத்த பத்திரிக்கையாளருமான பயில்வான் ரங்கநாதன், காமெடி நடிகர் கவுண்டமணி குறித்து யாருக்கும் தெரியாத பல தகவல்களை கூறியுள்ளார். " இவர் கூறுகையில், கவுண்டமணி பற்றி எல்லோருக்கும் ஓரளவுக்கு தெரியும்... ஆனால், அவரது மனைவி, மற்றும் 2 மகள்களை பற்றி யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அவர்களது புகைப்படத்தை கூட கவுண்டமணி வெளியிட்டதில்லை. மேலும், அவர்களைப் பற்றி கேட்டாலும் கவுண்டமணி என்னுடைய குடும்பத்தை பற்றி தெரிந்து கொள்ள உனக்கென்ன அவ்வளவு ஆர்வம் என்று நறுக்கென கேட்டுவிடுவார்.

கவுண்டமணியின் குணங்கள்:

அதே போல் நான் ஒரு நடிகன், சம்பளம் வாங்குகிறேன், நடிக்கிறேன். அதனால், என்னை பற்றி நீங்கள் கேட்கலாம் எழுதலாம். ஆனால், என்னுடைய குடும்பத்தை பற்றி எதற்கு தெரிந்து கொள்ள வேண்டும் என்பார். எந்த நிகழ்ச்சிக்கு சென்றாலும் தனியாகத்தான் வருவார். கோயிலுக்கு கூட செல்லமாட்டார். தனது பிறந்தநாளையும் கொண்டாடமாட்டார். எல்லோரையும் அவன் இவன் என்று தான் கூப்பிடுவார்.

அவருடைய மனைவி சாந்தி அந்த காலங்களில் நாடகங்களில் நடித்தவர். அதுமட்டுமின்றி ஒரு சில படங்களில் துணை நடிகையாக நடித்திருக்கிறார் என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன். கவுண்டமணியும், சாந்தியும் நாடகங்களில் இணைந்து நடித்தபோது, காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். குண்டு கருப்பையா கவுண்டமணியை விட வயதில் மூத்தவர் என்பதால் அவரைப் பற்றி பல தகவல்களை என்னிடம் சொல்வார்.

கவுண்டமணி கவுண்டர் கிடையாது:

கவுண்டமணி கவுண்டர் கிடையாது. அவர் கவுண்டர் அடிப்பதில் கில்லாடி. அவருடைய பெயர் சுப்பிரமணியன் கருப்பையா. சினிமாவின் ஆரம்பத்தில் கவுண்டர் மணி கவுண்டர் மணி என்று அழைத்து நாளடைவில் கவுண்டமணி என்று மாறிவிட்டது. இதனை பாக்யராஜூம் சொல்லியிருக்கிறார். அவர் தான் கவுண்டமணி என்ற பெயரை அவருக்கு சூட்டினார்.

கவுண்டமணிக்கு கார்கள் என்றால் ரொம்பவே பிடிக்கும். அவர் கிட்டத்தட்ட 9 கார்கள் வைத்திருக்கிறார். பெரும்பாலும் கவுண்டமணி யாருடைய நிகழ்ச்சிகளிலும் பெரிதும் கலந்து கொள்ளமாட்டார். அவருக்கு சுமித்ரா, செல்வி என்று 2 மகள்கள் உள்ளனர். சாதி, மதம் பார்க்காமல் தான் கவுண்டமணி தனது மகள்களுக்கு திருமணம் செய்து வைத்தார்.

பயில்வான் ரங்கநாதன் பகிர்ந்த தகவல்:

ஒரு மகளுக்கு மாப்பிள்ளை இயக்குநர் கேஎஸ் ரவிக்குமாரின் உறவினர். இதை அவரே சொல்லியிருக்கிறார். அவருக்கு ரசிகர் மன்றம் எல்லாம் கிடையாது. வைத்துக் கொள்ளவும் விரும்பமாட்டார். ஒருமுறை கவுண்டமணியிடம் பொள்ளாச்சி தானே உங்களது சொந்து ஊரு என்று கேட்டேன். அதற்கு அவர் என்னுடைய சொந்த ஊர் எது என்று எனக்கு தெரியாது. நானே மறந்துவிட்டேன். வேண்டுமென்றால் பொள்ளாச்சி தான் கவுண்டமணிக்கு சொந்த ஊருன்னு பத்திரிக்கையில் போட்டுக்கோ என்று சொல்லிவிட்டார் என்று கூறியுள்ளார். இந்த தகவல்கள் வைரலாகி வருகிறது.

காலமெல்லாம் காதல் வாழ்க – காலத்தையும் கடந்த காதல் கதை!"காலமெல்லாம் காதல் வாழ்க" என்பது 1997ஆம் ஆண்டு வெளியான ஒரு மிகவும்...
26/04/2025

காலமெல்லாம் காதல் வாழ்க – காலத்தையும் கடந்த காதல் கதை!

"காலமெல்லாம் காதல் வாழ்க" என்பது 1997ஆம் ஆண்டு வெளியான ஒரு மிகவும் பேமஸான தமிழ் காதல் திரைப்படம் ஆகும். இந்த படத்தை இயக்கியவர் ஆர். பாலு. தயாரிப்பாளர் சிவசக்தி பாண்டியன் ஆவார். இப்படத்தில் முரளி மற்றும் கவுசல்யா முன்னணி கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜெமினி கணேசன், மணிவண்ணன், சார்லி, விவேக் போன்றோர் துணை பாத்திரங்களில் உயிரூட்டியுள்ளனர்.

படத்தின் கதை

ஜீவா (முரளி) என்பவன், நடுத்தர குடும்பத்தை சேர்ந்த ஒரு கல்லூரி மாணவன். அவன் ஒரு திறமையான பாடகர். கௌசல்யா (கவுசல்யா) என்பவள் ஒரு பணக்காரக் குடும்பத்து இளம்பெண். ஜீவாவின் பாடல்களில் ஈர்க்கப்பட்ட கௌசல்யா, அவனுடன் தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு பேச ஆரம்பிக்கிறாள். இச்சிறிய உரையாடல்கள் அவர்கள் இருவரிடையேயான காதலை வளர்க்கின்றன.

ஜீவா கௌசல்யாவை நேரில் சந்திக்க விரும்புகிறான். ஆனால் சமூக அந்தஸ்து வித்தியாசங்கள், குடும்ப தடுக்கைகள் போன்ற சவால்களை எதிர்கொண்டு, தனது காதலை வெற்றிபெற ஜீவா எவ்வாறு போராடுகிறார் என்பதே இத்திரைப்படத்தின் முக்கிய உள்ளடக்கம்.

முக்கிய நடிகர்கள்

முரளி – ஜீவா

கவுசல்யா – கௌசல்யா

ஜெமினி கணேசன் – கௌசல்யாவின் தாத்தா

மணிவண்ணன் – நாயர்

சார்லி – பெருமாள்

விவேக் – ஹரிதாஸ்

இசை

படத்திற்கு இசையமைத்தவர் தேவா. பாடல்களின் வரிகள் பழனிபாரதி மற்றும் பொன்னியின் செல்வன் எழுதியுள்ளனர். ஒவ்வொரு பாடலும் காதலின் அழகை மிகுந்த இனிமையுடன் வெளிப்படுத்துகின்றன. குறிப்பாக "வெண்ணிலவே வெண்ணிலவே" பாடல் இன்றும் காதலர்களின் இதயங்களை தொட்டுக்கொண்டிருக்கிறது.

பிரபலமான பாடல்கள்:

வெண்ணிலவே வெண்ணிலவே

புத்தம் புது மலர்கள்

ஒரு மணி அடித்தால்

வெளியீடும் வெற்றியும்

இந்த படம் 1997ஆம் ஆண்டு பிப்ரவரி 12ஆம் தேதி வெளியானது. வெளியானதும் பெரும் வரவேற்பை பெற்றது. காதல் ரசிகர்கள் மத்தியில் படம் மாபெரும் ஹிட் ஆனது. 275 நாட்களுக்கு மேல் திரையரங்குகளில் ஓடியது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இத்திரைப்படத்தின் வெற்றி காரணமாக, இது 2003ஆம் ஆண்டு "குஷலவே சேமவே" என்ற பெயரில் கன்னடத்திலும் ரீமேக் செய்யப்பட்டது.

தியாகராஜ பாகவதரின் 'ராஜமுக்தி' – திரும்ப வந்த தெய்வ குரலின் தோல்வி பயணம்!
25/04/2025

தியாகராஜ பாகவதரின் 'ராஜமுக்தி' – திரும்ப வந்த தெய்வ குரலின் தோல்வி பயணம்!

தியாகராஜ பாகவதரின் 'ராஜமுக்தி' – திரும்ப வந்த தெய்வ குரலின் தோல்வி பயணம்!

காப்பிரைட் வழக்கில் சிக்கிய ஏ ஆர் ரஹ்மான்...2 கோடி நஷ்ட ஈடு கட்ட நீதிமன்றம் உத்தரவபொன்னியின் செல்வன் 2 ஆம் பாகத்தில் அனு...
25/04/2025

காப்பிரைட் வழக்கில் சிக்கிய ஏ ஆர் ரஹ்மான்...2 கோடி நஷ்ட ஈடு கட்ட நீதிமன்றம் உத்தரவ

பொன்னியின் செல்வன் 2 ஆம் பாகத்தில் அனுமதியின்றி பாடலை பயண்படுத்தியதால் இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மானுக்கு 2 கோடி நஷ்ட ஈடு விதிக்கப்பட்டுள்ளது

ஏ.ஆர் ரஹ்மான்

இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மானுக்கு 2 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கட்ட டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மணிரத்னம் இயக்கத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு பொன்னியின் செல்வன் 2 வெளியானது. இந்த படத்தில் இடம்பெற்ற ' வீரா ராஜ வீரா' பாடல் சிவா ஸ்துதி என்கிற பாடலை மையமாக வைத்து இசையமக்கப்பட்டதாகவும் அனுமதியின்றி ரஹ்மான் இந்த பாடலை பொன்னியின் செல்வன் 2 படத்தில் பயண்படுத்தியுள்ளதாக கூறி பாரம்பரிய இசைக்கலைஞர் உஸ்தாத் ஃபயஸ் வசிஃபுத்தீன் டாகர் கடந்த 2023 ஆம் ஆண்டு ரஹ்மானுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் இந்த வழக்கில் ஏ ஆர் ரஹ்மான் 2 கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்குபடி படி டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டெல்லி உயர் நீதிமன்றத்தின் பதிவாளர் அலுவலகத்தில் இந்த பணத்தை கட்ட உத்தவிடப்பட்டுள்ளது.

ரஹ்மான் தாகர்வாணி மரபால் ஈர்க்கப்பட்டதாக ஒப்புக்கொள்கிறார் என்பதை நீதிமன்றம் குறிப்பிடுகிறது. இது வெறும் உத்வேகமா அல்லது பதிப்புரிமை மீறலா என்பதை தீர்மாணிப்பது இந்த வழக்கில் முக்கிய கருதுகோளாக இருந்தது. இரண்டையும் தெளிவாகப் பிரிப்பது எளிதல்ல. இந்துஸ்தானி பாரம்பரிய இசையில், இசையமைப்புகள் எழுதப்படலாம் அல்லது எழுதப்படாமல் இருக்கலாம். எனவே, இசையின் உண்மையான ஒலி அல்லது வாய்மொழி வெளிப்பாடு தீர்மானிக்கும் காரணியாக இருந்தது. இசையமைப்பாளரின் எழுத்துப்பூர்வ அறிக்கையில், இரண்டு இசைத் துண்டுகளின் ஒப்பீடுகளும் வழங்கப்பட்டுள்ளது, இரு குறிப்புகள் ஒரே மாதிரியானவை என்பதைக் காட்டுகிறது. இந்த விஷயத்தை ஆராய்ந்த பிறகு, சர்ச்சைக்குரிய இசையமைப்பு அசல் படைப்பால் ஈர்க்கப்பட்டதோ அல்லது அடிப்படையாகக் கொண்டதோ அல்ல - இரண்டும் ஒரே இசைக் கோர்ப்புதான் என்கிற் முடிவுக்கு நீதிமன்றம் வந்துள்ளது.

இளையராஜா காப்புரிமை விவகாரம்

சமீபத்தில் அஜித் நடித்த குட் பேட் அக்லி படத்தில் அனுமதியின்றி இளையராஜா இசையமைத்த பாடல்கள் பயண்படுத்தியதால் இளையராஜா தரப்பில் இருந்து வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அனுமதியில்லாமல் பாடலை பயண்படுத்தியதற்காக 5 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்த விவகாரம் திரைத்துறையில் பெரியளவில் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் தற்போது ஏ.ஆர் ரஹ்மான் காப்பிரைட் சர்ச்சையில் சிக்கியுள்ளது மற்றொரு அதிர்ச்சி தகவலாக வந்துள்ளது.

தக் லைஃப்

ரஹ்மான் தற்போது மணிரத்னம் இயக்கியுள்ள தக் லைஃப் படத்திற்கு இசையமைத்துள்ளார். கமல் , சிம்பு , த்ரிஷா , அபிராமி , அசோக் செல்வன் , ஜோஜூ ஜார்ஜ் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளது. வரும் ஜூன் 5 ஆம் தேதி இப்படம் திரையரங்கில் வெளியாக இருக்கிறது. சமீபத்தில் இப்படத்தின் முதல் பாடலான 'ஜிங்குச்சா' வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்த படங்கள் எல்லாம் சிபிராஜ் நடிக்க வேண்டியதா? அத்தனையும் ப்ளாக்பஸ்டர் ஆச்சே!பிரபல நடிகர் சிபிராஜ் தான் தவறவிட்ட படங்கள...
16/04/2025

இந்த படங்கள் எல்லாம் சிபிராஜ் நடிக்க வேண்டியதா? அத்தனையும் ப்ளாக்பஸ்டர் ஆச்சே!

பிரபல நடிகர் சிபிராஜ் தான் தவறவிட்ட படங்கள் குறித்து நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். அவர் தவறவிட்ட படங்கள் தமிழில் ப்ளாக்பஸ்டர் படங்கள் ஆகும்.

தமிழ் திரையுலகில் பிரபல நடிகர்களில் ஒருவர் சிபி சத்யராஜ். இவர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் டென் ஹவர்ஸ் திரைப்படம். இந்த படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சிக்காக நடிகர் சிபிராஜ் பல்வேறு நேர்காணல்களை அளித்து வருகிறார்.

தவறவிட்ட படங்கள்:

அப்போது, தனியார் யூ டியூப் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தான் தவறவிட்ட படங்கள் குறித்து அவர் மனம் திறந்து பேசியுள்ளார். மரகத நாணயம், குரங்கு பொம்மை, குடும்பஸ்தன் படங்களின் கதை தனக்கே முதலில் வந்ததாகவும், தேதி, கெட்டப், மற்ற படங்களின் படப்பிடிப்பு உள்ளிட்ட காரணங்களால் அந்த படத்தை ஒப்புக்கொள்ள முடியாமல் போனது என்றும் தெரிவித்துள்ளார்.

நான் மணிகண்டனின் ரசிகர்:

இதுதொடர்பாக, அவரே கூறியதாவது, குடும்பஸ்தன் கதை எனக்கும் வந்தது. இந்த படத்தின் லுக் காரணமாகவும், தேதிகள் காரணமாகவும் அதை ஒப்புக்கொள்ள முடியவில்லை. ஆனால், படமாக பார்க்கும்போது மணிகண்டன் மிக அற்புதமாக பண்ணியிருந்தார். அந்தளவுக்கு நம்ம பண்ணியிருக்க முடியுமா? என்ற கேள்வியும் இருந்தது. நான் அவரோட பெரிய ரசிகன், அவரோட நிறைய மிமிக்ரி பார்த்தேன்.

மனதார பாராட்ட வேண்டும்:

மரகத நாணயம் எனக்கு வந்தது. மகாராஜா படத்தை எடுத்த நிதிலனின் குரங்கு பொம்மை எனக்கு வந்தது. ஆனால், மிஸ் ஆகிவிட்டது. அப்பா அதுபோல நிறைய மிஸ் பண்ணியுள்ளார். நாட்டாமை முதலில் அப்பாவிற்கு வந்தது. நாம மிஸ் பண்ணி நன்றாக செல்லும் அனைத்து படங்களுக்கும் நாம் நடித்திருக்கலாம் என்று தோன்றும். ஆனால், அதையும் தாண்டி கதாநாயகர் சில விஷயங்களை பண்ணும்போது இவர் நன்றாக பண்ணியிருக்கிறார் என்று தோன்றும். இன்னொரு நடிகரை நாம் மனதார பாராட்டினால் மட்டுமே நம்முடைய ப்ளஸ், மைனசை சரி செய்ய முடியும்.

இவ்வாறு அவர் பேசினார்.

ஸ்டூடண்ட் நம்பர் 1 என்ற படம் மூலமாக கதாநாயகனாக அறிமுகமாகிய சிபிராஜ் தொடர்ந்து பல படங்களிலு் நடித்தாலும் நாய்கள் ஜாக்கிரதை, வால்டர், கபடதாரி, மாயோன் போன்ற படங்கள் அவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுத் தந்தது.

முன்னணி நடிகராக உயர்வதற்காக அவர் தொடர்ந்து பல வித்தியாசமான கதைக்களங்களில் நடித்து வருகிறார். இளையராஜா கலியபெருமாள் இயக்கியுள்ள இந்த படம் அவரது திரை வாழ்வில் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தும் என்று சிபிராஜ் நம்பிக்கையுடன் உள்ளார். சிபிராஜ் தவறவிட்ட குரங்கு பொம்மை, மரகத நாணயம், குடும்பஸ்தன் படங்கள் மாபெரும் வெற்றி பெற்ற படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சிம்பு படத்தில் நடிக்க சந்தானம் கேட்ட சம்பளம்.. அதிர்ச்சி அடைந்த தயாரிப்பாளர்?சிம்பு நடிக்க இருக்கும் 49வது திரைப்படத்தை...
16/04/2025

சிம்பு படத்தில் நடிக்க சந்தானம் கேட்ட சம்பளம்.. அதிர்ச்சி அடைந்த தயாரிப்பாளர்?

சிம்பு நடிக்க இருக்கும் 49வது திரைப்படத்தை பார்க்கிங் இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்க இருப்பதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், இந்த படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என்றும், இந்த படத்தின் நாயகிகளாக மமீதா பாஜூ மற்றும் காயடு லோஹர் நடிக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியானது.

இந்த நிலையில், இந்த படத்தில் சந்தானம் ஒரு முக்கியக் கேரக்டரில் நடிக்க இருப்பதாக ஏற்கனவே கூறப்பட்ட நிலையில், தற்போது இந்த படத்தில் நடிக்க அவருக்கு 7 கோடி ரூபாய் சம்பளம் என்று கூறப்படுகிறது.

தான் நாயகனாக நடிக்கும் படங்களில் பெறும் சம்பளத்தையே இந்த படத்தில் கேட்டுள்ளதாக சந்தானம் கூற, முதலில் அதிர்ச்சி அடைந்தாலும், சிம்புவின் பரிந்துரையின் அடிப்படையில் இந்த சம்பளத்துக்கு தயாரிப்பு தரப்பு ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.

இதனை அடுத்து, நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் காமெடி வேடத்தில் சந்தானம் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

படையப்பாவுடன் 26 ஆண்டுகள்... நீலாம்பரியுடன் தொடங்கியது ஜெயிலர் 2 படப்பிடிப்புநெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் ரஜினி நடி...
12/04/2025

படையப்பாவுடன் 26 ஆண்டுகள்... நீலாம்பரியுடன் தொடங்கியது ஜெயிலர் 2 படப்பிடிப்பு

நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் ஜெயிலர் 2 படத்தின் படப்பிடிப்பு கடந்த ஏப்ரல் 11 ஆம் தேதி முதல் கேரளாவில் தொடங்கியது

முன்னணி நடிகர் ரஜினிகாந்த் தற்போது லோகேஷ் கனகராஜின் கூலி படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளார். இந்த படத்திற்கான போஸ்ட் ப்ரோடக்‌ஷன் பணிகள் நடந்து வரும் நிலையில் அடுத்தபடமான ஜெயிலர் 2 படப்பிடிப்பை தொடங்கியுள்ளார் ரஜினி

ஜெயிலர் 2

நெல்சன் ரஜினி கூட்டணியில் கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான ஜெயிலர் திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. வசூல் ரீதியாக இப்படம் உலகளவில் 625 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது. இப்படத்தை தயாரித்த சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் நெல்சன் மற்றும் ரஜினி கூட்டணியில் ஜெயிலர் 2 உருவாகும் அறிவிப்பை கடந்த ஆண்டு வெளியிட்டது. கடந்த மார்ச் மாதம் இப்படத்தின் பூஜை நடைபெற்றதைத் தொடர்ந்து நேற்று ஏப்ரல் 12 ஆம் தேதி முதற்கட்ட படப்பிடிப்பு துவங்கியது.

கேரளாவில் ரஜினி ரம்யாகிருஷ்ணன்

முதற்கட்டமாக கேரளாவில் படப்பிடிப்பு தொடங்கியது. மொத்தம் 14 நாட்கள் படப்பிடிப்பு நடக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்காக ரஜினி முன்பே கேரளா புறப்பட்டு சென்றிருந்தார். தற்போது ரஜினி மற்றும் ரம்யா கிருஷ்ணன் இடையிலான காட்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. படப்பிடிப்பு தளத்தில் ரஜினியை பார்க்க நூற்றுக்கணக்கான ரசிகர்கள் திரண்டு நின்றார்கள். அவர்களுக்கு ரஜினி வணக்கும் சொல்லும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் நடிகை ரம்யா கிருஷ்ணன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜெயிலர் 2 படப்பிடிப்பு தளத்தில் புகைப்படம் எடுத்து பதிவிட்டுள்ளார். இத்துடன் இருவரும் இணைந்து நடித்த படையப்பா படம் வெளியாகி 26 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முந்தைய பாகத்தில் நடித்த ரம்யா கிருஷ்ணன் , மிர்னா மேனன் , யோகிபாபு , ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் இப்படத்திலும் நடிப்பார்கள் என எதிர்பார்க்கலாம். அதே நேரம் முந்தைய பாகத்தில் மோகன்லால் , ஷிவராஜ்குமார் நடித்திருந்த நிலையில் இந்த பாகத்தில் பாலையா சிற்ப்பு தோற்றத்தில் நடிப்பார் என தகவல்கள் வெளியாகியுள்ளன

கூலி

லோகேஷ் கனகராஜின் கூலி படத்தில் ரஜினி , நாகர்ஜூனா , உபேந்திரா , ஸ்ருதி ஹாசன் , சத்யராஜ் , செளபின் சாஹிர் ஆகியோர் நடித்து வருகிறார்கள். அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். சன் பிக்ச்சர்ஸ் தயாரித்துள்ளது. வரும் ஆகஸ்ட் 14 ஆம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு கூலி திரைப்படம் வெளியாக இருக்கிறது. இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் உரிமம் அமேசான் பிரைம் நிறுவனத்திற்கு ரூ 120 கோடிக்கும் விற்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Address

Chennai

Alerts

Be the first to know and let us send you an email when CinemaYugam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share