30/05/2026
90 ஆண்டுகள் பழமை, 60-களில் ஒரு நண்டு ரூ2000க்கு வாங்கியவர்; கண்ணதாசன் வீட்டு கிச்சன் டூர் வீடியோ
அது என்ன உப்புக்கண்டம் தெரியமா? கருங்கொரங்கு உப்புக்கண்டம் என்று சொன்னார். ஆனால் நாங்கள் சாப்பிட்டுவிட்டோம். அது மலேசியாவில் இருந்து வந்தது,
தமிழ் சினிமாவில் பல ஹிட் பாடல்களை கொடுத்துள்ள, கவியரசர் கண்ணதாசன் விரும்பி சாப்பிடும் உணவு, மற்றும் அவரது வீட்டின் கிச்சன் எப்படி இருக்கும் ன்பது குறித்து அவரது மகள்கள ஒரு பேட்டியில் கூறியுள்ளனர்.
மனித உணர்ச்சிகள் அனைத்திற்கும் தனது பாடல்கள் மூலம் உயிர் கொடுத்தவர் கவியரசர் கண்ணதாசன். எம்.ஜி.ஆர் சிவாஜி, தொடங்கி ரஜினிகாந்த், கமல்ஹாசன் வரை பல முன்னணி நடிகர்களுக்கு ஹிட் பாடல்களை கொடுத்த கண்ணதாசன், தயாரிப்பாளர், இயக்குனர், வசனகர்த்தா, நடிகர் என பன்முக திறமையுடன் தமிழ் சினிமாவில் வலம் வந்தவர். சினிமா பாடல்கள் மட்டும் இல்லாமல், இலங்கியங்கள், கட்டுரைகள், ஆன்மீக புத்தகங்கள் எழுதுவது என தனித்திறமையுடன் இருந்தவர்.
சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ள கண்ணதாசன், பல படங்களை தயாரித்துள்ளார். ஆயிரக்கணக்கான பாடல்களையும் எழுதியுள்ளார். ஆனாலும் அவருக்கு சினிமா என்றால் அறவே பிடிக்காது என்று அவரது மகள்கள் தெரிவித்துள்ளனர். அவள் விகடன் யூடியூப் சேனலுக்கு அவர்கள் அளித்த பேட்டியில், 90 ஆண்டுகள் பழமையான கண்ணதாசன் வீட்டு கிச்சன் எப்படி இருக்கிறது என்பது குறித்தும், கண்ணதாசனுக்கு பிடித்த உணவு குறித்தும் பேசியுள்ளனர்.
இது குறித்து பேசிய அவர்கள், அப்பாவுக்கு வெள்ளை பணியாரம், சட்னி மிகவும் பிடிக்கும். ஆனாலும் அவருக்கு பி.பி. இருந்ததால் அதிகமாக சாப்பிட யோசிப்பார். அதேபோல் இந்த வெள்ளை பணியாரத்திற்கு கோழி குழம்பு செம்ம காமினேஷனாக இருக்கும். நாங்கள் இப்போது தான் அதிகமாக சமைக்கிறோம். ஆனால் அப்பாவுக்கு எதுவும் சமைத்து கொடுத்ததில்லை என்று ரேவதி சண்முகம் சொல்ல, கலைச்செல்வி, நான் அப்பாவுக்கு 2 முறை எலும்பு சூப் வைத்து கொடுத்திருக்கிறேன் என்று கூறியுள்ளார்.
அதேபோல் அப்பா இப்போது இருந்திருந்தால் நாங்கள் கேமரா முன்பு வருவதற்கு என்ன சொல்வாரோ என்ற யோசனை எங்களுக்கு இருக்கிறது. நாங்கள் தலையில் அதிகமாக பூ வைத்தால் கூட அதற்கு திட்டுவார். ரொம்ப கண்டிப்புடன் இருந்தார். அவர் அசைவ சாப்பாடு விரும்பி சாப்பிடுவார். ஊர்வன பறப்பன இதில் ட்ரெய்ன், விமானம் தவிர மற்ற அனைத்தையும் சாப்பிடுவார். அப்பா ரசிகர் ஒருவர் ஒரு கிண்ணம் நிறைய உப்புக்கண்டம் கொடுத்துவிட்டார். நாங்கள் அதை சாப்பிட்டுவிட்டோம். அப்பா கேட்டபோது நாங்கள் சாப்பிட்டுவிட்டோம் என்று சொன்னேன்.
அப்போது அவர் அது என்ன உப்புக்கண்டம் தெரியமா? கருங்கொரங்கு உப்புக்கண்டம் என்று சொன்னார். ஆனால் நாங்கள் சாப்பிட்டுவிட்டோம். அது மலேசியாவில் இருந்து வந்தது, அதேபோல் ஸ்ரீலங்காவில் இருந்து நிறைய வரவழைப்பார். சீனாவில் இருந்து நண்டு வரவழைப்பார். ஒரு நண்டு ரூ2000 இருக்கும். இவ்வளவு விலை கொடுத்து வாங்க வேண்டுமா என்று அம்மா சொல்வார். இது பழைய கால வீடு. 90 ஆண்டுகள் ஆகிறது. ஆரம்பத்தில் விறகு அடுப்பில் தான் சமைத்தார்கள். கேஸ் வந்தாலும் மாற்றம் செய்யவில்லை.
விறகு அடுப்பில் சமைப்பதால் அதில் நிற்கவே முடியாது. ஆனாலும் அதில் 15-20 ஆண்டுகள் சமையல் பண்ணேண். 1974 முதல் 1986 வரை, அதன்பிறகு, இந்த கிச்சனை மாற்றி அமைத்துவிட்டேன் என்று கண்ணதாசன் மகள் ரேவதி சண்முகம் கூறியுள்ளார்.