31/08/2026
பல படங்களில் வில்லன் மற்றும் காமெடி ரோல்களில் நடித்தவர் நடிகர் மீசை ராஜேந்திரன். வடிவேல் இவர் பற்றி நன்கு அறிந்தவர், கேப்டன் விஜயகாந்துடன் பிரச்சினை ஏற்பட்ட பிறகு , ஒரு முறை வடிவேல் இவரை சந்தித்து இருக்கிறார், உங்களுக்கு ஒரு நல்ல ரோல் இருக்கு என சொல்லி இயக்குனரிடம் ஸ்பாட்லயே பேசினாராம், நாளைக்கு அங்க வந்துடுங்க என ஷூட்டிங் ஸ்பாட்டை சொல்லி அங்கு வர சொல்லி இருக்கிறார். அங்கு நான் காலையிலேயே சென்றுவிட்டேன், சென்றால் பெசண்ட் நகர் ரவியை வைத்து ஒரு காட்சியை ஷூட் செய்து கொண்டே இருக்கிறார், மணி எட்டாச்சு, ஒன்பதாச்சு என்னை கூப்பிடுவது போல் தெரியல,, அங்கிருந்தவர்கள், சார் நீங்க நடிக்க வேண்டிய கெட்டப்லதான் அவர் நடிச்சுக்கிட்ருக்கார், போய் என்னானு கேளுங்க சார் என்றார்கள், அதன்படி வடிவேலுவிடம் போய் கேட்டதற்கு ஒரு மாதிரியாக நாற்காலியில் உட்கார்ந்திருந்தார், உட்காருங்க நீங்க விஜயகாந்த் ஆளுல்ல, அவர் ஆட்களுக்கு நான் சான்ஸ் தரதில்ல என்று சொன்னார், அப்புறம் எதுக்கு சார், வர சொன்னிங்க என்று சொல்லிவிட்டு சண்டை போட்டுவிட்டு வந்துவிட்டேன், கேப்டனை சந்தித்தபோது அதை சொன்னேன், உடனே கோபமடைந்த கேப்டன் சும்மா விட்டுட்டு வந்திங்க, ஏதாவது பண்ணிருக்கணும், எதுக்கு சார் என்றேன், அட போங்க, எதாவது பிரச்சினைனா நான் பார்த்துக்குவேன் சரி விடுங்க என்றாராம். இதே நேரத்தில் விவேக்குடன் படிக்காதவன், பசுபதி மே/பா ராசக்கா பாளையம் போன்று 4 படங்களில் நடித்துள்ளேன், படித்த பண்புள்ளவர் தரமான மனுஷன். ரொம்ப டீசண்ட் என்று விவேக்கை புகழாரம் சூட்டியுள்ளார்.