Cinema Patti

Cinema Patti Welcome to cinema Fans

கேபிஒய் பாலா பதிலடிகேபிஒய் பாலா விஜய் டிவி நிகழ்ச்சிகளின் மூலம் எல்லோருக்கும் தெரிய ஆரம்பித்தவர் என்றாலும் அதன் பிறகு சம...
20/09/2025

கேபிஒய் பாலா பதிலடி

கேபிஒய் பாலா விஜய் டிவி நிகழ்ச்சிகளின் மூலம் எல்லோருக்கும் தெரிய ஆரம்பித்தவர் என்றாலும் அதன் பிறகு சமூக சேவைகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டதன் மூலமே அனைவரிடத்திலும் சென்று சேர்ந்தார். நிறைய ஆம்புலன்ஸ்கள், பண உதவிகள், பொருள் உதவிகள் செய்தார். இந்த நிலையில் சில நாட்களுக்கு முன் பேட்டி கொடுத்த யூ டியூபர் ஒருவர் பாலாவுக்கு எங்கிருந்து பணம் வருகிறது, அவர் ஒரு சர்வதேச கைக்கூலி என்ற வகையில் பேட்டி கொடுத்த உடன், உடனே பாலா எக்ஸ்போஸ்டு என அவரை பற்றி அவதூறு செய்திகள் நிறைய வந்தன.

இந்த நிலையில் இது குறித்து அவரே பேட்டியளித்துள்ளார், ஏங்க நான் படத்துல நடிக்கிறேன், இங்க நிறைய ஈவண்ட் போறேன், பாரின் ஈவண்ட் போறேன், நிறைய ad பண்றேன் இதுல இருந்து வர்ற வருமானத்துல செய்றேன், அதற்குள் நான் ஃபாரின் கைக்கூலி என்றெல்லாம் கிளப்பி விடுறிங்களே, எனவும் கூறியுள்ளார். மேலும் ஆம்புலன்ஸ் டிரைவரும் பேட்டி கொடுத்துள்ளார், ஒரு எஃப் சி பிரச்சினை அதை வச்சுக்கிட்டு மறைச்சு நின்னோம் அப்படி இப்படினு பிரச்சினை கிளப்புறாங்க, அது ஆம்புலன்ஸ் வந்து ரெண்டு நாளிலேயே சரியாயிடுச்சு என்கிறார்.

பாலா மேலும் கூறுகையில் நினைத்திருந்தா லக்சுரி கார், பங்களா இப்படிலாம் செட்டில் ஆகிருக்கலாம், என்னால எனக்கு முடிஞ்ச வருமானத்தை வச்சு நான் செய்றேன் அதற்குள் சர்வதேச கைக்கூலி அளவுக்கு போயிட்டிங்களே என்ற வகையில் பேட்டியளித்துள்ளார் பாலா.

மேலும் பாலா குறித்து அமுதவாணனும் பேட்டியளித்துள்ளார். பாலா சிறுவயதில் இருந்து கஷ்டப்பட்டவன், இளையராஜாவே அவனை பாராட்டியுள்ளார், உதவும் நோக்கம் கொண்டவன், அவன் மீது வீண்பழி சொல்லாதீர்கள் என கூறியுள்ளார்.

பெண்களை மையப்படுத்தி படம் இயக்குவதில் சிறந்தவர் இயக்குனர் பாலச்சந்தர். இவரின் பல படங்கள் பெண்களை மையப்படுத்தியே இருக்கும...
19/09/2025

பெண்களை மையப்படுத்தி படம் இயக்குவதில் சிறந்தவர் இயக்குனர் பாலச்சந்தர். இவரின் பல படங்கள் பெண்களை மையப்படுத்தியே இருக்கும்.

அவள் ஒரு தொடர்கதை, அவர்கள், மனதில் உறுதி வேண்டும் என இவரின் பல்வேறு படங்கள் பெண்களை மையப்படுத்திய படங்கள்தான்.

இவரின் இயக்கத்தில் பெண்களை மையப்படுத்தி வந்த ஒரு முக்கிய படம்தான் எங்க ஊர் கண்ணகி, தமிழில் அவ்வளவாக பலரும் அறியாத படம்.

இந்த படம் தமிழ் தெலுங்கில் ஒரே நேரத்தில் வெளியானது. தெலுங்கில் தான் இப்படம் முக்கியத்துவம் என்றாலும் தமிழில் டப் செய்து வெளியிடப்பட்டது.

சரிதா, சீமா, மாதவி, சரத்பாபு நடித்திருந்த இப்படம் கடந்த 1981ம் ஆண்டு வெளியானது.

காதல் பரிசு, கடந்த 1987ல் பொங்கலுக்கு வெளியான திரைப்படம். இப்படத்தில் கமல், அம்பிகா, ராதா சகோதரிகள் இணைந்து நடித்தனர். அ...
19/09/2025

காதல் பரிசு, கடந்த 1987ல் பொங்கலுக்கு வெளியான திரைப்படம். இப்படத்தில் கமல், அம்பிகா, ராதா சகோதரிகள் இணைந்து நடித்தனர். அம்பிகாவும், ராதாவும் சகோதரிகளாக இணைந்து நடித்தார்கள் என்றால் சென் டிமெண்ட் கலந்த கனமான கதையாக தான் இருக்கும்.

இதிலும் இப்படித்தான், தன் பெண்மை கெட்டதற்கு நாயகன் தான் காரணம் என தவறாக நினைத்து ஒரு குழந்தையுடன் வாழும் பெரிய பணக்கார பெண், திடீரென தன் தங்கை அவரை காதலிப்பதாக சொல்ல முதலில் அதிர்ச்சியடைகிறார், பின்பு அவர்களின் கல்லூரி காலங்களில் நடந்த உண்மை தெரிய வருகிறது, இந்த உண்மை தெரிய வரும்போது நாயகி வில்லன்களால் மரணிக்கிறார், அதனால் இன்னொருவர் மூலம் தான் பெற்ற குழந்தையை தன் தங்கையிடமும் தன் முன்னாள் காதலனிடமும் காதல் பரிசாக கொடுத்துவிட்டு இறக்கிறாள்.

ஆக்சன் கொஞ்சம் செண்டிமெண்ட் கொஞ்சம் என இரண்டும் சம அளவு கலந்த ஒரு படம்தான் இப்படம்.

பணக்கார பெண் தொழிலதிபராக அம்பிகா, தனது முன்னாள் காதலன் கமலை காதலிக்கும் அவரது தங்கை ராதா, சொத்துக்காக பல பயங்கரங்களை செய்ய காத்திருக்கும் மேனேஜராக ஜெய்சங்கர், அம்பிகாவை ஏமாற்றும் ராஜ்குமார் சேதுபதி இப்படி பல்வேறு கதாபாத்திரங்கள். ஏ ஜெகநாதன் இயக்கி இருந்த இந்த படம் நன்றாக ஓடிய வெற்றிப்படம்.

ஏய் உன்னைத்தானே, கூ கூ என்று குயில், காதல் மகராணி, கானலுக்குள் மீன் பிடித்தேன், ஜாதியில்ல பேதமில்ல போன்ற அனைத்து பாடல்களும் நன்றாக இருந்தன.

பாடல்

நடிகர் ரோபோ சங்கர் காலமானார் அவருக்கு வயது 46
18/09/2025

நடிகர் ரோபோ சங்கர் காலமானார் அவருக்கு வயது 46

நடிகர் ரோபோ சங்கர் உடல்நலக்குறைவால் காலமானார்
18/09/2025

நடிகர் ரோபோ சங்கர் உடல்நலக்குறைவால் காலமானார்

பூபதி ராஜா என்பவர் இயக்கத்தில் கடந்த 1995ம் ஆண்டு வெளியான திரைப்படம் தேடி வந்த ராசா.ராமராஜனுடன் அதற்கு பாட்டுக்கு நான் அ...
18/09/2025

பூபதி ராஜா என்பவர் இயக்கத்தில் கடந்த 1995ம் ஆண்டு வெளியான திரைப்படம் தேடி வந்த ராசா.

ராமராஜனுடன் அதற்கு பாட்டுக்கு நான் அடிமை படத்தில் ஜோடியாக அல்லாமல் ஜோடி மாதிரி நடித்திருந்த குஷ்பு இப்படத்தில் ஜோடியாகவே நடித்திருந்தார். இப்படம் ராமராஜன் அவர்களின் சொந்த தயாரிப்பு ஆகும், அவரின் சார்பாக அவரின் மனைவி நளினி இப்படத்தை தயாரித்திருந்தார்.

இளையராஜா இசையமைத்திருந்த இப்படத்தில் ராமராஜன் கிராமத்து நாயகனாக அல்லாமல் டவுன் நாயகனாக நடித்திருந்தார்.

சில நேரங்களில் சில சொதப்பல்கள் நடந்து விடும், ராமராஜன் படத்திற்கு இசைஞானி இசை பிரமாதமாக இருக்கும், இருவரின் கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க் அவுட் ஆகும். இதில் பெரிய அளவு பாடல்கள் ஹிட் இல்லை. ராமராஜன் படத்தில் ஜோடிப்பாடலே ஒரு பாடல்தான் வைத்திருந்தார் இயக்குனர், மாமா மனசுக்குள்ள என்ற அந்த ஒரு ஜோடிப்பாடலும் சுமார்தான்.

படத்தில் வந்த கவுண்டமணி, செந்தில் காமெடி நன்றாக இருந்தது. டிராபிக் போலீசாக வரும் கவுண்டமணி செய்யும் அழிச்சாட்டியங்களை வைத்து காமெடி இருந்தது, டேக் த டொண்ட்டி பைவ் ருபீஸ், லஞ்சம் வாங்காமல் கவுண்டமணியை இருக்க வைக்கும் காமெடிகள் நன்றாக இருந்தது.

1989ல் வெளியான புதிய பாதை படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பிறகு பார்த்திபன் இயக்கிய படம்தான் பொண்டாட்டி தேவை.புதிய பாதை ப...
18/09/2025

1989ல் வெளியான புதிய பாதை படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பிறகு பார்த்திபன் இயக்கிய படம்தான் பொண்டாட்டி தேவை.

புதிய பாதை படத்தை இயக்கியபோதே இசைஞானி இளையராஜா இசையமைக்க கேட்டு, சில சூழ்நிலைகளால் இசையமைக்க முடியாமல் போய்விட்ட நிலையில் அடுத்த படமான இப்படத்தில் இணைந்தார்கள்.

சும்மா சொல்லக்கூடாது, இசைஞானி கலக்கி இருந்தார், இப்படத்தில் வரும் யாரடி நான் தேடும் காதலி என்ற பாட்டில், பாட்டெல்லாம் புதுமெட்டு நீ கேட்டு கைதட்டு என்ற வரிகள் வரும், அது போல புதுமெட்டாகவே இருந்தது.

ஆராரோ பாட்டுப்பாட, யாரடி நான் தேடும் காதலி, எனது ராகம் மெளனராகம், தொட்ட உடன் போன்ற பாடல்கள் அனைத்தும் நன்றாக இருந்தன.

இப்படத்தில் நடித்த அஸ்வினி மிக சிறப்பாக நடித்திருந்தார், இவர் சில வருடங்களுக்கு முன் மரணம் அடைந்துவிட்டார்.

கண்டக்டராக வரும் பார்த்திபன்,பஸ்ஸில் பார்க்கும் பெண்ணுடன் பழகி லவ்ஸ் விட்டு அவரை காதலித்து வரும் நிலையில் சில வேண்டத்தகாத விரும்பத்தகாத சோகங்கள் நடக்கிறது அது என்ன என்பதுதான் கதை.

இரண்டாம் பாதியில் உணர்ச்சி வசப்படும் காட்சிகள் நிறைய இருந்தாலும், முதல் பாதியில் பார்த்திபன், அந்த பல்லவன் பஸ், அவரின் காதல், அதற்காக அவர் செய்யும் அட்ராசிட்டிகள், கவர்மெண்ட் பஸ்ஸை காதலி வீட்டு வாசலுக்கே கொண்டு செல்வது, பஸ் டிரைவர் நாயுடுவாக வரும் எம்.ஆர்.கே உடன் பார்த்திபன் அடிக்கும் லூட்டிகள் கல கல என இருந்தன.

விவேக் சித்ரா என்ற நிறுவனம் சார்பில் சுந்தரம் தயாரித்து இருந்த இப்படம் ஒரு மறக்க முடியாத அழகான படமாகும்.

தொடர்ந்து வெற்றிகளாய் கொடுத்துக்கொண்டிருந்த பாக்யராஜ் கொஞ்சம் சறுக்கிய காலத்தில் அவரே இசையமைத்து இயக்கிய படம்தான் காவடி ...
17/09/2025

தொடர்ந்து வெற்றிகளாய் கொடுத்துக்கொண்டிருந்த பாக்யராஜ் கொஞ்சம் சறுக்கிய காலத்தில் அவரே இசையமைத்து இயக்கிய படம்தான் காவடி சிந்து. அமலாவை நாயகியாக போட்டு, நாயகனாக இவர் நடித்திருந்தார்.

பாக்யராஜ் டைப்பில் பல ரொமான்ஸ் காட்சிகள் இப்படத்தில் வைத்திருந்தார். ஏழாயிரம் அடி எடுத்த உடன் சில காரணங்களால் படத்தை கைவிட்டார்.

பாக்யராஜின் இசையில் நிறைய பாடல்களை இப்படத்தில் கம்போஸ் செய்திருந்தார். யாரோ சொன்னாங்க என்னனு என்ற பாடல் அதில் முக்கியமான பாடல்.

இப்படம் கைவிடப்பட்டதால் இதில் உள்ள சில பாடல்களை சிபி கோலப்பன் என்பவர் 1990ல் இயக்கிய பட்டணம்தான் போகலாமடி என்ற படத்தில் பயன்படுத்தினார்.

சினிமாவில் பல இசை சாதனைகளை செய்தவர் இசைஞானி இளையராஜா. அது போல் இசை முரசு என்று அழைக்கப்பட்ட பாடகர் நாகூர் ஹனிபா இவரின் இ...
17/09/2025

சினிமாவில் பல இசை சாதனைகளை செய்தவர் இசைஞானி இளையராஜா. அது போல் இசை முரசு என்று அழைக்கப்பட்ட பாடகர் நாகூர் ஹனிபா இவரின் இறைவனிடம் கையேந்துங்கள் உள்ளிட்ட எண்ணற்ற இஸ்லாமிய பக்தி கீதங்கள் பொதுமக்கள் அனைவரிடம் பிரசித்தம். இறைவனிடம் கையேந்துங்கள் பாடலை இஸ்லாமிய பாடல் என்றல்லாமல் ஜாதி மொழி இனம் மறந்து அனைவரும் கேட்கும் ஒரு இனிய பாடல்.

இப்படி இனிய பாடல்களை கொடுத்த நாகூர் ஹனிபா அவர்களின் மெல்லிசை குழுக்களில் இளையராஜாவும் இசைக்கலைஞராக பணியாற்றினார். தென்றல் காற்றே கொஞ்சம் நில்லு போன்ற பாடல் எல்லாம் சினிமா வருவதற்கு முன் இளையராஜா இசையமைப்பில் உருவானதுதான்.

இப்படி இளையராஜா மீது கொண்ட நல்ல நட்பு மற்றும் புரிதல் காரணமாக நாகூர் ஹனிபா அவர்கள் தொடர்ந்து இளையராஜாவின் படங்களில் மட்டும் பாடினார், செம்பருத்தி நட்ட நடுக்கடல் மீது நான் பாடும் பாட்டு, எங்கும் உள்ள அல்லா பேரை சொல்லு நல்லா என்ற தர்மசீலன் படப்பாடல், உன் மதமா என் மதமா என இளையராஜாவுக்காக மட்டுமே சினிமாவில் பாடியுள்ளார், மனோஜ் பட்நாகர் என்பவருக்காக என்றென்றும் காதல் என்ற படத்தில் போகாதே நாடோடி நண்பா என்ற பாடலையும் இவர் பாடியுள்ளார்.

1992 ல் வெளியான திரைப்படம் சின்ன கவுண்டர் திரைப்படம். இந்தத் திரைப்படம் ஆர் வி உதயகுமாரே எதிர்பார்க்காத அளவுக்கு மிகப்பெ...
16/09/2025

1992 ல் வெளியான திரைப்படம் சின்ன கவுண்டர் திரைப்படம். இந்தத் திரைப்படம் ஆர் வி உதயகுமாரே எதிர்பார்க்காத அளவுக்கு மிகப்பெரிய வெற்றியடைந்த திரைப்படம். இளையராஜா இசையில் வந்த இந்த திரைப்படத்தில் பாடல்கள் அனைத்துமே அருமையாக இருந்தன. இந்தப் படத்தின் கதை அனைவருக்கும் தெரியும் அடிக்கடி டிவியில் போட்டு பார்த்து, ரசித்த படம் தான்.

இப்படம் தெலுங்கு மற்றும் கன்னடத்தில் ரீமேக்செய்யப்பட்டது.தெலுங்கில் சின்ன ராயுடு என்ற பெயரில் வெங்கடேஷ் விஜயசாந்தி நடிக்க கோபால் இயக்கத்தில் வெளியானது.அதே வருடம் 1992லேயே வெளியானது.

இதேபோல ரவிச்சந்திரன் நடிக்க கன்னடத்தில், சிக்கி ஜாமென்ட்ரு என்ற பெயரில் தயாரானது. அதே ஆண்டு 1992 இந்த படமும் வெளியானது.

1985 இல் வெளிவந்த திரைப்படம் இதயகோயில் திரைப்படம் இந்த திரைப்படத்தை மணிரத்தினம் இயக்கியிருந்தார். மணிரத்தினம் அவரின் படங...
16/09/2025

1985 இல் வெளிவந்த திரைப்படம் இதயகோயில் திரைப்படம் இந்த திரைப்படத்தை மணிரத்தினம் இயக்கியிருந்தார். மணிரத்தினம் அவரின் படங்கள் இப்பொதெல்லாம் வேற லெவலில் வேற ஸ்டைலில் இருக்கிறது. அவருக்கு என்று ஒரு கார்ப்பரேட், ரசிகர்கள் எலைட் வட்டாரங்கள் இருக்கின்றன. வெகுஜன மக்களுக்கு ஏற்றது போல அவரின் எந்த படமும் இதுவரை இருந்ததில்லை.

அவரின் பகல் நிலவு,இதய கோவில் இரண்டு படங்களை தவிர, இதில் பகல் நிலவு கூட சில இடங்களில் அவரின் ஸ்டைலில் இருக்கும். இதய கோயில் முற்றிலும் ஒரு கிராமத்துக் கதையாக வித்தியாசமான கமர்சியல் கதைக்களத்தில் இருக்கும்.

இப்படத்தில் முடி திருத்துபவராக கவுண்டமணி நடித்திருப்பார். இவரின் காமெடி தனி டிராக் ஆக வரும் இப்படியெல்லாம் மணிரத்தினம் படத்தில் காட்சிகள் இருந்தது ஆச்சரியம் தான் கவுண்டமணி காமெடி தனி ட்ராக் ஆக வந்ததில்லை.இவரின் பகல் நிலவு படத்திலும் கவுண்டமணி காமெடி இருக்கும்.இருப்பினும் இதய கோவில் படம் முற்றிலும் மாறுபட்ட படங்களில் ஒன்று.

கிராமத்து ஹீரோ அவர் நகரத்துக்கு பாட்டு பாட செல்வது அவரின் காதலி, இறப்பது அவர் இன்னொரு பெண்ணை காதலிப்பது என ஒரு மணிரத்தினத்தின் எந்த வித ஸ்டைலும் இன்றி மிக இயல்பாக இந்த படம் இருக்கும். ஆரம்பப் படங்களை இப்படியாக இலக்கிய மணிரத்தினம் பின் நாட்களில் அவரின் ஸ்டைல் வேறு மாதிரி இருக்குமாறு பார்த்துக்கொண்டார். அதனால் தான் ஆரம்பத்தில் எடுத்த இதய கோவில் படத்தை தான் எடுத்த படங்களில் அதிக விருப்பமில்லாத படம் என சொல்லி அப்பட தயாரிப்பாளர் கோவை தம்பியின் ஏச்சுக்கும் பேச்சுக்கும் உள்ளானார்.

பஞ்சு அருணாச்சலம் எழுதி தயாரித்த படம் எங்க முதலாளி. படத்தை இயக்கியவர் விஜயகாந்துக்கு பல்வேறு படங்களில் அனல் பறக்க வசனங்க...
15/09/2025

பஞ்சு அருணாச்சலம் எழுதி தயாரித்த படம் எங்க முதலாளி. படத்தை இயக்கியவர் விஜயகாந்துக்கு பல்வேறு படங்களில் அனல் பறக்க வசனங்களை எழுதிய இயக்குனர் லியாகத் அலிகான் அவர்கள். பொதுவாகவே பஞ்சு அருணாச்சலமும் பயங்கரமாக வசனங்களை எழுதக்கூடியவர் லியாகத் அலிகான் அவர்களும் வசனங்களை எழுதக்கூடியவர் இரு இமயங்களும் இப்படத்தில் சேர்ந்தன என சொல்லலாம்.

இப்படம் ஒரு கிராமம் சார்ந்த படமாகும். விஜயகாந்த் ஜோடியாக முதல் முறையாக கஸ்தூரி நடித்திருந்தார்.

பூமிக்கும் சாமிக்கும், கொல்லிமலை சாரலிலே, மணமகளே மருமகளே, குங்குமம் மஞ்சளுக்கு இன்று தான் நல்ல நாள், என பல நல்ல பாடல்கள் இப்படத்தில் இடம் பெற்றிருந்தது. ராதாரவி ஆர் சுந்தர்ராஜன் நெப்போலியன், வெண்ணிற ஆடை மூர்த்தி விவேக் மற்றும் பலர் படத்தில் நடித்திருந்தனர். 1993 ஆம் ஆண்டு தீபாவளி ரேசுக்கு பின் இப்படம் வெளிவந்தது.

Address

Chennai

Alerts

Be the first to know and let us send you an email when Cinema Patti posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Cinema Patti:

Share