Cinema Patti

Cinema Patti Welcome to cinema Fans
(4)

18/03/2026
இப்தார் நோன்பு நிகழ்ச்சியில் விஜய்- புகைப்படங்கள்தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய் இன்றுசெங்கல்பட்டு மா...
18/03/2026

இப்தார் நோன்பு நிகழ்ச்சியில் விஜய்- புகைப்படங்கள்

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய் இன்றுசெங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். உடன் கட்சியின் முக்கிய நிர்வாகிகளான ஜான் ஆரோக்கியசாமி, ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

தமிழ் திரையுலகில் நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர் என வலம் வந்தவர் தக்காளி சீனிவாசன்.. பெரும்பாலும் திகில் மற்றும் கொலை ம...
10/03/2026

தமிழ் திரையுலகில் நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர் என வலம் வந்தவர் தக்காளி சீனிவாசன்.. பெரும்பாலும் திகில் மற்றும் கொலை மர்ம கதைகளை தயாரித்திருக்கிறார் இவர்கள் வருங்கால தூண்கள், மனசுக்குள் மத்தாப்பு, நாளைய மனிதன், அதிசய மனிதன் போன்ற படங்களை தயாரித்திருக்கிறார்..

ஜென்ம நட்சத்திரம், விட்னஸ், அசோகவனம், அடுத்தது போன்ற திரைப்படங்களை இயக்கியிருக்கிறார்.. நாளைய மனிதன், வலது காலை வைத்து வா, அதிசய மனிதன், ஜென்ம நட்சத்திரம், ஃபிட்னஸ் உள்ளிட்ட சில படங்களுக்கு இசையமைத்திருக்கிறார்.. சில படங்களில் நடித்தும் இருக்கிறார்..

குறிப்பாக சூரசம்ஹாரம் படத்தில் வில்லனாக நடித்திருந்தார்..
வாழ்க்கையின் கடைசி கால கட்டங்களில் ஒரு ஆசிரமம் நடத்தி அனாதை குழந்தைகளுக்கு தத்தெடுத்து சமூக சேவையில் ஈடுபட்டு வந்தார்.. இந்நிலையில் தற்போது மரணமடைந்திருக்கிறார்.. அவரின் மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்…

ஒரே கலர் ஆடை… ஒரே காரில் திருமண நிகழ்ச்சியில் ஜோடியாக வந்த விஜய் – திரிஷா
05/03/2026

ஒரே கலர் ஆடை… ஒரே காரில் திருமண நிகழ்ச்சியில் ஜோடியாக வந்த விஜய் – திரிஷா

37 ஆண்டுகள் நிறைவு செய்த ராஜாதி ராஜா: இன்றும் ரசிகர்களை ஆளும் ரஜினியின் மாஸ் ஹிட்!தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம் ரஜின...
04/03/2026

37 ஆண்டுகள் நிறைவு செய்த ராஜாதி ராஜா: இன்றும் ரசிகர்களை ஆளும் ரஜினியின் மாஸ் ஹிட்!

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம் ரஜினிகாந்த் நடிப்பில், ஆர். சுந்தர்ராஜன் இயக்கத்தில் வெளியான மெகா ஹிட் திரைப்படம் ராஜாதி ராஜா . 1989-ம் ஆண்டு இதே நாளில் (மார்ச் 4) வெளியான இப்படம், இன்றுடன் 37 ஆண்டுகளை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. சமூக வலைதளங்களில் ரஜினி ரசிகர்கள் இந்தப் பொன்விழா ஆண்டைக் கொண்டாடி வருகின்றனர்.

ரஜினியின் இரட்டை வேட மேஜிக்

ராஜா மற்றும் சின்னராசு என இரண்டு மாறுபட்ட கதாபாத்திரங்களில் ரஜினிகாந்த் நடித்திருந்தார். பணக்கார எஸ்டேட் முதலாளியின் மகனாக ஸ்டைலான ராஜா மற்றும் வெகுளியான அதே சமயம் துடிப்பான சின்னராசு என இரு வேடங்களிலும் தனது அசாத்திய நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்திருப்பார்.

நதியா - ராதா காம்போ

அந்த காலக்கட்டத்தின் டாப் நாயகிகளான நதியா மற்றும் ராதா இருவரும் ரஜினிக்கு ஜோடியாக நடித்திருந்தனர். குறிப்பாக ரஜினி - நதியா இடையேயான கெமிஸ்ட்ரி மற்றும் நகைச்சுவைக் காட்சிகள் இன்றும் பலரது ஃபேவரைட். நகைச்சுவைக்கு ஜனகராஜ் தனது பங்கினை சிறப்பாக பங்களித்திருப்பார்.

இளையராஜாவின் இசை அதிரடி

‘ராஜாதி ராஜா’ படத்தின் மிகப்பெரிய பலம் இசைஞானி இளையராஜாவின் இசை. மீனம்மா மீனம்மா , "வா வா மச்சானே", "மாமா உன் பொண்ணக் குடு" போன்ற பாடல்கள் இன்றும் பட்டிதொட்டியெங்கும் ஒலித்துக்கொண்டிருக்கின்றன. படத்தின் பின்னணி இசை ஒவ்வொரு காட்சிக்கும் உயிர் கொடுத்திருக்கும். அதுமட்டுமின்றி இளையராஜா தனது பாவலர் கிரியேஷன்ஸ் சார்பில் இப்படத்தை தயாரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இயக்கம்:

அப்போதைய காலகட்டத்தில் தொடர்ந்து சூப்பர் ஹிட் படங்களை கொடுத்துவந்த ஆர். சுந்தராஜன் இப்படத்தை இயக்கியிருந்தார். இவர்கள் காம்போவில் வந்த ஒரே படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

வசூல் மற்றும் சாதனை

சுமார் 100 நாட்களுக்கு மேல் ஓடி வசூல் சாதனை படைத்த இப்படம், பஞ்சு அருணாசலத்தின் திரைக்கதையில் ஒரு கமர்ஷியல் பேக்கேஜாக அமைந்தது. 1989-ம் ஆண்டு வெளியான படங்களில் அதிக வசூல் செய்த படங்களில் இதுவும் ஒன்று.

தமிழ் சினிமாவில் அடைமொழியில் பிரபலமான நடிகர்கள்...ஒரு பார்வைதமிழ் சினிமா உலகில்  நடிகர்களுக்கு அடைமொழி வைத்து அழைப்பது வ...
01/03/2026

தமிழ் சினிமாவில் அடைமொழியில் பிரபலமான நடிகர்கள்...ஒரு பார்வை

தமிழ் சினிமா உலகில் நடிகர்களுக்கு அடைமொழி வைத்து அழைப்பது வழக்கம். ஹீரோக்கள் முதல் காமெடியன்கள் வரை இந்த வழக்கம் உண்டு. அந்த வகையில் அடைமொழியில் அழைக்கப்பட்டு புகழ் பெற்ற சில நடிகர்கள் பற்றி இங்கே காண்போம்.

தேங்காய் சீனிவாசன்:

சீனிவாசன் ஆரம்ப காலத்தில் நாடகங்களில் தீவிரமாக நடித்து வந்தார். அவர் நடித்த 'கல் மனம்' என்ற நாடகத்தில், ஒரு தேங்காய் வியாபாரி கதாபாத்திரத்தில் நடித்தார். அந்த நாடகத்தை நேரில் பார்க்க வந்திருந்த பிரபல நகைச்சுவை நடிகர் கே.ஏ. தங்கவேலு இவரது நடிப்பைக் கண்டு வியந்து போனார். மேடையில் சீனிவாசனை பாராட்டிப் பேசுகையில், இனிமேல் இவர் வெறும் சீனிவாசன் இல்லை, 'தேங்காய்' சீனிவாசன் என்றுதான் அழைக்கப்பட வேண்டும்" என்று அறிவித்தார். அன்று முதல் அந்தப் பெயர் நிலைத்துவிட்டது.

காகா ராதாகிருஷ்ணன்

சீனிவாசனைப் போலவே, ராதாகிருஷ்ணன் அவர்களுக்கும் ஒரு கதாபாத்திரத்தின் பெயரே அடைமொழியாக நிலைத்துவிட்டது. 1949-ம் ஆண்டு வெளியான 'மங்கையர்க்கரசி' திரைப்படத்தில், அவர் ஒரு காகம் போன்ற வேடத்தில் நடித்திருந்தார். அந்தப் படத்தில் பறவையைப் போலவே அவர் காட்டிய உடல் மொழியும், எதார்த்தமான நடிப்பும் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. அதன் பிறகு, அவர் 'காகா' ராதாகிருஷ்ணன் என்றே திரையுலகிலும் ரசிகர்கள் மத்தியிலும் அழைக்கப்படலானார்.

என்னத்த கண்ணையா

கண்ணையா அவர்கள் ஆரம்பத்தில் நாடகங்களில் நடித்து வந்தார். அவர் திரைப்படங்களில் நடிக்க வந்த பிறகு, ஒரு குறிப்பிட்ட நகைச்சுவை பாணியைப் பின்பற்றினார். ஒரு விஷயத்தைப் பற்றிப் பேசும்போது, எதற்கெடுத்தாலும் "என்னத்த... என்னத்த..." என்று மீண்டும் மீண்டும் கேட்பது அல்லது புலம்புவதுதான் இவரது தனித்துவமான பாணியாக இருந்தது.

அவர் பேசும் அந்த 'என்னத்த' என்ற வார்த்தை ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. ஆரம்பத்தில் சாதாரண கண்ணையாவாக இருந்தவர், அந்த வசனத்தின் புகழால் 'என்னத்த' கண்ணையா என்று திரையுலகிலும் ரசிகர்கள் மத்தியிலும் அழைக்கப்படலானார்.

டணால் தங்கவேலு

தமிழ் நகைச்சுவை உலகின் நடிகர்களில் முக்கியமானவர் 'டணால்' தங்கவேலு. தங்கவேலு அவர்கள் தனது நகைச்சுவைக் காட்சிகளில் ஒருவிதமான தனித்துவமான பாணியைப் பின்பற்றுவார். தான் சொல்லும் நகைச்சுவை வசனங்களுக்கு நடுவே அல்லது இறுதியில் "டணால்!" என்ற ஒரு ஒலியை மிக வேகமாகச் சொல்லி, அந்த இடத்திற்கு அழுத்தம் கொடுப்பார். இந்தச் சொல்லும் முறையும், அந்தச் சொல்லின் ஒலியும் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்தது. இதுவே காலப்போக்கில் அவரது அடையாளமாக மாறி, 'டணால்' தங்கவேலு என்று அழைக்கப்படக் காரணமாக அமைந்தது.

ஓமகுச்சி நரசிம்மன்

நரசிம்மன் அவர்கள் பார்ப்பதற்கு மிகவும் ஒல்லியாக, மெலிந்த தேகம் கொண்டவராக இருப்பார். அவரது உடல்வாகைக் குறிக்கும் வகையில், தென்னிந்தியாவில் மிகவும் மெலிந்த ஊதுவத்தி அல்லது 'ஓமம்' போன்ற மெல்லிய குச்சி போல இருப்பதால், ஆரம்பத்தில் அவரைப் பலர் செல்லமாக 'ஓமகுச்சி' என்று அழைக்கத் தொடங்கினர்.
அவர் திரையுலகிற்குள் வந்த பிறகு, அதே அடைமொழி அவரது பெயருடன் நிலைத்துவிட்டது.

விவகாரத்து கேட்கும் சங்கீதா.. நீதிமன்றத்தில் விஜய் ஆஜராக உத்தரவு..
27/02/2026

விவகாரத்து கேட்கும் சங்கீதா.. நீதிமன்றத்தில் விஜய் ஆஜராக உத்தரவு..

நடிகர் மற்றும் தவெக தலைவர் விஜயின் மனைவி சங்கீதா நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு தாக்கல் செய்திருப்பது பரபர...

விஜய் - சங்கீதா விவாகரத்து கேட்டு மனுநடிகரும் தவெக தலைவருமான விஜயின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி செங்கல்பட்டு நீதிமன்ற...
27/02/2026

விஜய் - சங்கீதா விவாகரத்து கேட்டு மனு

நடிகரும் தவெக தலைவருமான விஜயின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி செங்கல்பட்டு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்

இந்த மனு 73-ஆவது எண்ணாக விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளதாகத் தகவல்

ஏ.ஆர்.ரகுமானை திருமணம் செய்ய ஆசைபட்ட பிரபல தமிழ் நடிகை90-களில் தமிழ் மற்றும் தென்னிந்திய திரையுலகில் பிரபலமான நடிகையாகத்...
27/02/2026

ஏ.ஆர்.ரகுமானை திருமணம் செய்ய ஆசைபட்ட பிரபல தமிழ் நடிகை

90-களில் தமிழ் மற்றும் தென்னிந்திய திரையுலகில் பிரபலமான நடிகையாகத் திகழ்ந்தவர் மோகினி.

1991-ல் வெளியான 'ஈரமான ரோஜாவே' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார். தனது வசீகரமான கண்கள் மற்றும் நடிப்பால் குறுகிய காலத்திலேயே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். முதல் படமே ஹிட் ஆனதால் மள மளவென பட வாய்ப்புகள் அவருக்கு குவிந்தன. நாடோடி பாட்டுக்காரன், நான் பேச நினைப்பதெல்லாம், தாயகம் என பல படங்களில் நடித்தார்.

தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடத் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். குறிப்பாக மலையாளத் திரையுலகில் இவருக்கு அதிக வரவேற்பு இருந்தது. திரையுலகில் பிஸியாக இருந்தபோதே, 1999-ல் பரத் என்பவரைத் திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் குடியேறினார். அதன் பிறகு நடிப்பிலிருந்து சிறிது காலம் விலகியிருந்தார். தனது வாழ்க்கையின் கடினமான சூழலில் ஆன்மீகத்தின் பால் ஈர்க்கப்பட்ட அவர், கத்தோலிக்க நற்செய்தியாளராக மாறினார். பல யூடியூப் பேட்டிகளில் தனது வாழ்க்கை அனுபவங்கள் மற்றும் சவால்களைப் பகிர்ந்துள்ளார்.

இந்த நிலையில் நடிகை மோகினி ஏ.ஆர் ரகுமான் குறித்து சொன்ன தகவல் சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அவர் கூறியபோது, நான் ஏ.ஆர்.ரகுமானின் தீவிர ரசிகை. வெறித்தனமான அன்பு என்றே சொல்லலாம். அவர் இஸ்லாமுக்கு மாறியது எனக்கு மன வருத்தத்தை ஏற்படுத்தியது. அப்போது நான் இந்துவாக இருந்தேன். மதம் மாறாமல் இருந்திருந்தால் வீட்டில் எனக்கு ரகுமானை பிடித்திருக்கிறது. திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று சொவதற்கு வசதியாக இருந்திருக்கும் என்று கூறியுள்ளார்.

ராஷ்மிகா - விஜய் தேவரகொண்டா திருமண புகைப்படங்கள்
26/02/2026

ராஷ்மிகா - விஜய் தேவரகொண்டா திருமண புகைப்படங்கள்

உண்மையான கத்தியை எடுத்த விஜயகாந்த்..அல்லு விட்ட தலைவாசல் விஜய்1992ல் இயக்குனர் செல்வா இயக்கத்தில் வெளிவந்த தலைவாசல் படம்...
12/02/2026

உண்மையான கத்தியை எடுத்த விஜயகாந்த்..அல்லு விட்ட தலைவாசல் விஜய்

1992ல் இயக்குனர் செல்வா இயக்கத்தில் வெளிவந்த தலைவாசல் படம் மூலம் அறிமுகம் ஆனவர் விஜய். இப்படத்தின் வெற்றிக்கு பின் தலைவாசல் விஜய் என்ற அடைமொழியிலேயே அழைக்கப்பட்டார். கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் ஹிந்தி எனப் பல்வேறு மொழிகளில் 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

இந்த நிலையில் தலைவாசல் விஜய், விஜயகாந்த் குறித்து சொன்ன விசயங்கள் இணையத்தில் வைரலாக பரவியது. பெரிய மருத்து படப்பிடிப்பில் நடந்த அந்த விசயம் என்னவெனில், பெரிய மருது படத்தின் ஒரு முக்கியமான சண்டைக் காட்சியில், விஜயகாந்த் ஒரு பெரிய கத்தியால் எதிரிகளைத் தாக்குவது போலப் படமாக்கப்பட்டது. பொதுவாக சினிமாவில் சண்டைக் காட்சிகளில் டம்மி கத்திகளையே பயன்படுத்துவார்கள். அந்த காட்சியில் விஜயகாந்த் என் கையை வெட்டுவது போல காட்சி எடுகக் வேண்டும். ஆனால் அங்கு டம்மி கத்தி இல்லை. நிஜ கத்திதான் இருந்தது. உடனே விஜயகாந்த் தலைவாசல் விஜயிடம் என் மேல் நம்பிக்கை உள்ளதா என்று கேட்டார். ஒரு நிமிடம் திக் என்று இருந்தது. ஆனாலும் ஏதும் தப்பா நடந்தாலும் கேப்டன் நம்மை விட மாட்டார் என்ற நம்பிக்கை இருந்ததால் ஓகே சொன்னேன்.

கேப்டன் அந்த கத்தியைச் சுழற்றிய விதம் பயங்கரமாக இருந்தது. கத்தி என் முகத்திற்கு மிக அருகில் வந்து சென்றது. ஒரு சிறிய பிசிறு ஏற்பட்டிருந்தாலும் எனக்குப் பலத்த காயம் ஏற்பட்டிருக்கும். ஆனால், விஜயகாந்த் சண்டைக் காட்சிகளில் மிகவும் கைதேர்ந்தவர் என்பதால், அந்த ஆபத்தான காட்சியை மிகத் துல்லியமாகச் செய்து முடித்தார் என்று வியந்து கூறியுள்ளார். மேலும், படப்பிடிப்பு முடிந்ததும் விஜயகாந்த் தன்னிடம் வந்து பயந்துட்டியா விஜய்? என்று அன்போடு கேட்டதாகவும் அவர் கூறினார்.

Address

Chennai

Alerts

Be the first to know and let us send you an email when Cinema Patti posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Cinema Patti:

Share