Cinema Patti

Cinema Patti Welcome to cinema Fans
(2)

பல படங்களில் வில்லன் மற்றும் காமெடி ரோல்களில் நடித்தவர் நடிகர் மீசை ராஜேந்திரன். வடிவேல் இவர் பற்றி நன்கு அறிந்தவர், கேப...
31/08/2026

பல படங்களில் வில்லன் மற்றும் காமெடி ரோல்களில் நடித்தவர் நடிகர் மீசை ராஜேந்திரன். வடிவேல் இவர் பற்றி நன்கு அறிந்தவர், கேப்டன் விஜயகாந்துடன் பிரச்சினை ஏற்பட்ட பிறகு , ஒரு முறை வடிவேல் இவரை சந்தித்து இருக்கிறார், உங்களுக்கு ஒரு நல்ல ரோல் இருக்கு என சொல்லி இயக்குனரிடம் ஸ்பாட்லயே பேசினாராம், நாளைக்கு அங்க வந்துடுங்க என ஷூட்டிங் ஸ்பாட்டை சொல்லி அங்கு வர சொல்லி இருக்கிறார். அங்கு நான் காலையிலேயே சென்றுவிட்டேன், சென்றால் பெசண்ட் நகர் ரவியை வைத்து ஒரு காட்சியை ஷூட் செய்து கொண்டே இருக்கிறார், மணி எட்டாச்சு, ஒன்பதாச்சு என்னை கூப்பிடுவது போல் தெரியல,, அங்கிருந்தவர்கள், சார் நீங்க நடிக்க வேண்டிய கெட்டப்லதான் அவர் நடிச்சுக்கிட்ருக்கார், போய் என்னானு கேளுங்க சார் என்றார்கள், அதன்படி வடிவேலுவிடம் போய் கேட்டதற்கு ஒரு மாதிரியாக நாற்காலியில் உட்கார்ந்திருந்தார், உட்காருங்க நீங்க விஜயகாந்த் ஆளுல்ல, அவர் ஆட்களுக்கு நான் சான்ஸ் தரதில்ல என்று சொன்னார், அப்புறம் எதுக்கு சார், வர சொன்னிங்க என்று சொல்லிவிட்டு சண்டை போட்டுவிட்டு வந்துவிட்டேன், கேப்டனை சந்தித்தபோது அதை சொன்னேன், உடனே கோபமடைந்த கேப்டன் சும்மா விட்டுட்டு வந்திங்க, ஏதாவது பண்ணிருக்கணும், எதுக்கு சார் என்றேன், அட போங்க, எதாவது பிரச்சினைனா நான் பார்த்துக்குவேன் சரி விடுங்க என்றாராம். இதே நேரத்தில் விவேக்குடன் படிக்காதவன், பசுபதி மே/பா ராசக்கா பாளையம் போன்று 4 படங்களில் நடித்துள்ளேன், படித்த பண்புள்ளவர் தரமான மனுஷன். ரொம்ப டீசண்ட் என்று விவேக்கை புகழாரம் சூட்டியுள்ளார்.

2002ல் வெளிவந்த பாபா திரைப்பட பாடல்கள் வெளியான விதம். பொதுவாக ரஜினி ரசிகர்கள் படம் என்றாலே மிகுந்த எதிர்பார்ப்பு இருக்கு...
30/08/2026

2002ல் வெளிவந்த பாபா திரைப்பட பாடல்கள் வெளியான விதம். பொதுவாக ரஜினி ரசிகர்கள் படம் என்றாலே மிகுந்த எதிர்பார்ப்பு இருக்கும். அதைவிட ரஜினிகாந்த் படத்தின் பாடல்கள் வருவதற்கு ரசிகர்களின் அதிக எதிர்பார்ப்பு இருக்கும் ரஜினிகாந்த் ஒரு புதிய படத்தில் நடிக்கிறார் என்றால் அவர்களின் முதல் வைப் பாடல் கேசட் வெளிவருவது தான் முன்பிருந்த காலத்தில் இப்போது வருவது போல் ஃபர்ஸ்ட் சிங்கிள் செகண்ட் சிங்கள் என்றெல்லாம் youtubeபில் வந்து விடாது, குறிப்பிட்ட நாளில் கேசட் வெளிவரும் என்று சொல்லி அதன்படி கேசட் வெளிவரும். நேரடியாக கடைகளில் சென்று வாங்கிக் கொள்ளலாம். ஆனால் இந்த பாபா படத்தின் பாடல் கேசட் கொஞ்சம் வித்தியாசமாக விற்பனை செய்யப்பட்டது, அதாவது படம் வெளியாகும் தியேட்டரில் சென்று பாடல் கேசட்டுக்கு முன்பதிவு செய்ய வேண்டும் அவர்கள் ஒரு டோக்கன் கொடுப்பார்கள். அப்படியாக முன்பதிவு செய்து அந்த கேசட்டை வாங்கும்போது நமக்கு திரைப்படம் வெளியான அன்று படம் பார்ப்பதற்கு First prefernce அடிப்படையில் முன்னுரிமை கொடுப்பார்கள். இப்படித்தான் பாபா படத்தின் கேசட் வெளியிடப்பட்டது நானும் சென்று எங்கள் ஊர் ராமநாதபுரம் ஜெகன் தியேட்டரில் முன்பதிவு செய்து கேசட் வாங்கினேன் அதற்கு படம் வெளியாகும் அன்று முன்னுரிமையுடன் செல்வதற்காக டோக்கன் எல்லாம் கொடுத்தார்கள் ஆனால் நான் அதை பயன்படுத்தவில்லை.பாபா படம் வெளிவந்து இரண்டு மூன்று நாட்களுக்கு பின்பு சாதாரணமாக தான் சென்றேன். பெரிய அளவில் கூட்டம் இல்லாமல் இருந்தது பக்கத்து தியேட்டரில் இவன் என்ற பார்த்திபன் நடித்த படம் ஓடிக் கொண்டிருந்தது படத்தின் நடுவில் ரன் பட டிரைலர் காண்பிக்கப்பட்டது. இவ்வளவு செய்தும் பாபா திரைப்படம் பெரிய அளவில் பெயர் சொல்லாமல் போய்விட்டது.

நடிகர் கமலஹாசன் அவர்களின் தீவிர ரசிகராக இருக்கும் நடிகர் சித்தார்த் அவர்களின் பேட்டியை பார்க்க நேர்ந்தது. தான் ஒரு கமல் ...
30/08/2026

நடிகர் கமலஹாசன் அவர்களின் தீவிர ரசிகராக இருக்கும் நடிகர் சித்தார்த் அவர்களின் பேட்டியை பார்க்க நேர்ந்தது. தான் ஒரு கமல் ரசிகர் என்பதையும் தாண்டி தீவிர கமல் வெறியராக அவரின் பல படங்களை சிலாகித்து பேசினார். பஞ்சதந்திரம் சத்யா போன்ற படங்களில் சில காட்சிகளை குறிப்பிட்டு இதுபோல காட்சிகளை எல்லாம் நடிக்கவே முடியாது எடுக்கவே முடியாது அவர் ஒருத்தர் தான் அதை செய்ய முடியும் என்று அடித்து பேசினார்.

அவர் நடித்த படங்களில் யார் நடித்தாலும் அது சரியான முறையாக இருக்காது அந்த படத்தை திரும்ப எடுத்தால் அதில் வேறு ஒருவர் அடித்தால் அந்த படம் கண்டிப்பாக நன்றாக இருக்காது இயக்குனர் பாலச்சந்தர் சார் கூட, என்னை வைத்து அவரின் மன்மத லீலை படத்தை திரும்ப எடுக்கப் போவதாக கூறியிருந்தார் நான் அவரின் காலில் விழுந்து கும்பிட்டு விட்டு வேண்டாம் சார் என்று சொல்லிவிட்டு வந்து விட்டேன் அவரின் படத்தை வேறுயார் ஒருவராலும் நிரப்ப முடியாது. அவருக்கு மாற்று என்று யாரும் கிடையாது சத்யா படத்தில் இடம்பெற்ற போட்டா படியுது என்ற பாடலில் ஒரு பிளைட்டோட அவரும் ஓடி சென்று அந்த அந்த பிளைட் சவுண்ட் ரோடு ஒரு காட்சியை எடுத்து இருப்பார் அந்த காட்சி எப்படி எடுத்தார் என்று தெரியாது அவரிடம் கேட்டாலும் சொல்ல மாட்டார் ஆனால் பழகி ஒருமுறை இருமுறை கேட்டால் கண்டிப்பாக அதை சொல்லிக் கொடுப்பார் எனக்கு நிறைய விஷயங்கள் அது போல சொல்லிக் கொடுத்திருக்கிறார் என்று கமலஹாசனை பற்றி அவர் குறிப்பிட்டு இருந்தார் என்று கூறி இருக்கிறார் சித்தார்த்.

கேப்டன் விஜயகாந்த் உட்பட ஒரு சிலரை தவிர்த்து பெரும் நடிகர்கள் எல்லோருக்குமே 100வது படம் பெரிய பெயரை பெற்றுத்தருவதில்லை அ...
29/08/2026

கேப்டன் விஜயகாந்த் உட்பட ஒரு சிலரை தவிர்த்து பெரும் நடிகர்கள் எல்லோருக்குமே 100வது படம் பெரிய பெயரை பெற்றுத்தருவதில்லை அந்த வகையில் சினிமாவில் 70களின் இறுதியில் எண்பதுகளின் ஆரம்பத்தில் சின்ன சின்ன அடியாள் வேடங்களில் கூட்டத்தில் ஒருவராக நடித்து இயக்குனர் மணிவண்ணன் மூலம் நூறாவது நாள் மற்றும் 24 மணி நேரத்தில் நல்ல வில்லன் ஆகி 24 மணி நேரத்தில் இன்னும் விஸ்வரூபம் எடுத்து பெரிய வில்லனானவர் சத்யராஜ், அதற்கு பிறகு சாவியில் ஆன் ட்டி ஹீரோவா நடித்து, கடலோர கவிதைகள் மூலம் தான் முழு ஹீரோவானவர் சத்யராஜ். இப்படி கஷ்டப்பட்டு வாழ்க்கையில் முன்னேறுபவர்களின் படங்கள் தனித்துவமாக தெரிய வேண்டும், ஆனால் எல்லா பெரிய நடிகர்களுக்கும் சறுக்கியது போலவே சத்யராஜ்க்கு வாத்தியார் வீட்டு பிள்ளை சறுக்கியது.

படத்தின் கதை ரொம்ப மோசமல்ல, அந்த நேரத்தில் வந்த பல மசாலா படங்களின் கதைதான் என்றாலும் தீபாவளி ரிலீஸில் மாப்பிள்ளை, வெற்றிவிழா, ராமராஜனின் தங்கமான ராசா போன்ற படங்கள் பரபரப்பா ஓடிக்கொண்டிருந்தது 1989 வருட தீபாவளிக்கு இதனுடன் சத்யராஜ் நடித்த திராவிடன் படமும் வெளிவந்தது இதுவும் தோல்விப்படம்தான் . வாத்தியார் வீட்டு பிள்ளையில் பாடல்களும் நன்றாக இருந்தது, திரைக்கதையில் பெரிய வேகமில்லாததாலும் படத்தின் கதை பெரிய அளவில் கவராததாலும் படம் எடுபடவில்லை.பாக்ஸ் ஆபிஸில் தோல்வியடைந்தது.

சோத்துலயும் வாங்கியாச்சு சேத்துலயும் வாங்கியாச்சு அப்டீனு வடிவேல் சொல்றது  மாதிரி தற்போது திரும்புற திசையெல்லாம் விமர்சன...
29/08/2026

சோத்துலயும் வாங்கியாச்சு சேத்துலயும் வாங்கியாச்சு அப்டீனு வடிவேல் சொல்றது மாதிரி தற்போது திரும்புற திசையெல்லாம் விமர்சனத்தில் அடிவாங்கி கொண்டிருப்பது நடிகை மற்றும் இயக்குனர் கீது மோகன் தாஸ்.

என்ன ஒரு பெண்ணாக இருந்து கொண்டு இவ்வளவு மோசமா வல்காரிட்டியா எடுத்து வச்சிருக்கு என அவரை வசைபாடுவோர் அதிகம். காரணம் என்னனா படத்தை ப்ளூ பிலிம் ரேஞ்சுல எடுத்து வச்சிருக்காங்க என அனைவரும் கிழி கிழின்னு கிழிச்சு தொங்க விட்டுருக்காங்க.

இதுவரை சாட்டை துரைமுருகன் விமர்சனம், ப்ளூசட்டை மாறன் விமர்சனம் மற்றும் பலரின் விமர்சனம் எல்லாம் இப்படத்தை மிக மோசமான படமாக சித்தரித்துள்ளார்கள்.

படத்தின் கதை என்ன என்றே புரியவில்லை என பலரும் கதையை சொல்ல முடியாத நிலையில் சாட்டை துரைமுருகன் மட்டுமே முழுக்கதையையும் கூர்ந்து கவனித்து வன்மத்தை கக்கியுள்ளார். படத்தை அக்குவேறாக ஆணிவேறாக பிரித்து மேய்ந்துவிட்டார், ப்ளூ சட்டை மாறனும் போட்டு சாத்து சாத்துனு சாத்திட்டார். பயில்வான் ரங்கநாதன் ஓபனாக படு பயங்கரமான கெட்ட வார்த்தைகளை பேசி விமர்சனம் செய்துள்ளார். இதுவரை எந்த படமும் இப்படி விமர்சனத்தை சந்தித்தாக ஞாபகம் இல்லை. சங்கர் இயக்கத்தில் வந்த பாய்ஸ் பட டைம்ல அப்படம் இப்படியான விமர்சனத்தை சந்தித்தது. அதற்கு பிறகு இந்த படம்தான் என நினைக்கிறேன்.

சத்யராஜ் நடிக்க வந்த காலக்கட்டங்களில்  சிவக்குமார் வீட்டில் தங்கி எல்லாம் வாய்ப்பு தேடி வந்திருக்கிறார், அப்போது உறவினரா...
28/08/2026

சத்யராஜ் நடிக்க வந்த காலக்கட்டங்களில் சிவக்குமார் வீட்டில் தங்கி எல்லாம் வாய்ப்பு தேடி வந்திருக்கிறார், அப்போது உறவினரான சத்யராஜை அழைத்து சென்று ஒருமுறை பாக்யராஜிடம் அறிமுகப்படுத்தி இருக்கிறார் சிவக்குமார்.

இவர் நம்ம ஊர்க்கார பையன் தான் நல்லா நடிப்பார், வில்லனா நடிக்க விருப்பம் என்றிருக்கிறார். அதை கேட்ட பாக்யராஜ் நம்ம கதையில பிரச்சினைகள் தான் வில்லன் என சொன்னாராம்.

இதை சில நாட்களுக்கு முன் பாக்யராஜின் சாதனை விழாவில் சத்யராஜ் பேசும்போது சொல்லி இருக்கிறார். சத்யராஜும், எம்.ஜி.ஆர் ரசிகர், பாக்யராஜும் எம்.ஜி.ஆர் ரசிகர், இது பற்றி சத்யராஜ் கூறும்போது, யாராக இருந்தாலும் லைட்டா பொறாமை எண்ணம்ங்குறது எட்டிப்பார்த்துடும் அது மாதிரி பாக்யராஜை எம்.ஜி.ஆர் அவர்கள் தனது கலையுலக வாரிசு என அறிவித்தபோது நமக்கும் எட்டிப்பார்த்ததுங்க என ஜாலியாக கூறி இருந்தார்.

1980 ஆம் ஆண்டு எஸ்பி முத்துராமன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த முரட்டுக்காளை திரைப்படம் அந்த வருட இறுதியில் டிசம்பர் மா...
28/08/2026

1980 ஆம் ஆண்டு எஸ்பி முத்துராமன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த முரட்டுக்காளை திரைப்படம் அந்த வருட இறுதியில் டிசம்பர் மாதம் வெளியானது. அதே வருடம் ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு ரஜினிகாந்த் நடித்த ஜானி திரைப்படம் ரிலீஸ் ஆனது.இதை இயக்கியவர் இயக்குனர் மகேந்திரன். இயக்குனர் இப்ராஹிம் என்பவர் இயக்கி கதை திரைக்கதை வசனம் டி ராஜேந்திரன் அவர்களால் எழுதப்பட்ட ஒரு தலை ராகம் என்ற திரைப்படமும் இதே வருடம்வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதே வருடம் கமலஹாசன் நடித்த வறுமையின் நிறம் சிகப்பு என்ற திரைப்படம் பாலச்சந்தர் அவர்களால் இயக்கப்பட்டு அதுவும் நன்றாக பேசப்பட்டது. இந்த திரைப்படங்களில் உங்களை கவர்ந்தது எது? எந்தெந்த சூழ்நிலைகளில் இந்த படத்தை நீங்கள் தியேட்டரில் வீட்டில் பார்த்து இருக்கிறீர்கள்.

இசைஞானியின் பல  mood பாடல்கள் நல்ல முறையில் இசை அமைத்தும் அதில் உள்ள இதுபோல விஷயங்களை வைத்து தான் இந்தப் பாடலை பாட முடிய...
27/08/2026

இசைஞானியின் பல mood பாடல்கள் நல்ல முறையில் இசை அமைத்தும் அதில் உள்ள இதுபோல விஷயங்களை வைத்து தான் இந்தப் பாடலை பாட முடியாமலும் கேட்க முடியாமலும் நடுத்தர மனநிலை உள்ளோர் சங்கடப்படுவதற்கு காரணமாகும்.

Ai imagined: நேபாளத்தில் உயிர் இழந்தவர்களுக்காக நடிகர் சிம்பு இரங்கல்
27/08/2026

Ai imagined: நேபாளத்தில் உயிர் இழந்தவர்களுக்காக நடிகர் சிம்பு இரங்கல்

இறையருள் இயக்குனர் என அழைக்கப்பட்ட கே.சங்கர் இயக்கத்தில் வெளிவந்த படம்தான் மீனாட்சி திருவிளையாடல்.இப்படம் திருவிளையாடல் ...
26/08/2026

இறையருள் இயக்குனர் என அழைக்கப்பட்ட கே.சங்கர் இயக்கத்தில் வெளிவந்த படம்தான் மீனாட்சி திருவிளையாடல்.

இப்படம் திருவிளையாடல் புராணம், மற்றும் சிவன் பார்வதி சம்பந்தப்பட்ட புராணக்கதைகளில் சில விசயங்களை மட்டும் எடுத்துக்கொண்டு ஒரு பக்திப்படமாக வெளிவந்தது.

தந்த தட்சனின் யாகத்திற்கு பார்வதி செல்வது, சிவபெருமான் பார்வதிக்கு திருமணம் முடிப்பது, வைகை என எதனால் மதுரைக்கு ஓடும் ஆறுக்கு பெயர் வந்தது, என பல சம்பவங்களை கோர்த்து படமாக எடுத்து இருந்தனர்.

இதில் விஜயகாந்த் சிவனாகவும், ராதா பார்வதியாகவும் நடித்திருந்தது சிறப்பு. அக்காலங்களில் பக்தி படம் என்றால் எண்ணற்ற நட்சத்திரங்கள் நடித்திருப்பார்கள், அப்படியாக விஜயகாந்த், ராதா, எம்.என் நம்பியார், நாகேஷ், சண்முகசுந்தரம்,சுமித்ரா, ரம்யா கிருஷ்ணன் என எண்ணற்றோர் நடித்திருந்தனர். எம்.எஸ்.வி இசையமைத்திருந்தார்.

1989ம் ஆண்டு இப்படம் வெளிவந்தது. 90களின் ஆரம்பத்தில் இப்படத்தை தூர்தர்சனில் ஒரு ஞாயிறு மாலை வேளையில் பார்த்த பிறகு இப்படத்தை பார்க்கவில்லை. எத்தனை பேர் இந்த படம் பார்த்து இருக்கிங்க எத்தனை பேருக்கு பிடிக்கும்.

Address

Chennai

Alerts

Be the first to know and let us send you an email when Cinema Patti posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Cinema Patti:

Shortcuts

Share