வணக்கம் பாரதம் 24x7 செய்திகள்

  • Home
  • India
  • Chennai
  • வணக்கம் பாரதம் 24x7 செய்திகள்

வணக்கம் பாரதம் 24x7 செய்திகள் அன்பு வாசகர்களே உங்களுக்காக…

தனிமை தரும் தைரியம்!அக், 9நிறைய விஷயங்களை சிந்திப்பதற்கும் செயல் படுத்துவதற்கும் தனிமை ஒரு வரப்பிரசாரம். சதா நாம் செய்யு...
09/10/2025

தனிமை தரும் தைரியம்!

அக், 9

நிறைய விஷயங்களை சிந்திப்பதற்கும் செயல் படுத்துவதற்கும் தனிமை ஒரு வரப்பிரசாரம். சதா நாம் செய்யும் வேலைகளை பற்றி ஏதாவது குறை கூறுபவர்களை விட, எந்த விமர்சனமும் செய்யாமல் அப்படியே செய்தாலும் அதைக் கூட காது கொடுத்து கேட்காமல் இருப்பதற்கு தனிமை மிக அவசியமான ஒன்றாக இருக்கிறது.

நீங்கள் யார் என்பதையும், உங்கள் தேவை எது என்பதையும் ஆழப் பதித்திடும் அற்புதமான விஷயமே தனிமை என்பது. நீங்கள் வலிமையாக இருக்கவேண்டும் என்றால் துன்பங்களை தனியாக ஏற்றிடும் மனப்பக்குவத்தை கற்றுக்கொள்ளுங்கள். ஒரு மனிதனுக்கு அழகு என்பது எல்லாவற்றிலும் ஒதுங்கி நிற்பதை விட, தேவை இலலாதவற்றை ஒதுக்கிவிட கற்றுக்கொள்ள வேண்டியதே.

கவனிக்க யாரும் இல்லாத பொழுது எப்படி இருக்கிறோம், எப்படி நடந்து கொள்கிறோம் என்பதில் இருக்கிறது தனிமனித ஒழுக்கம். மேலும் தனிமையை நாம் சகித்துக்கொண்டு வாழ்வது வாழ்க்கை இல்லை. தனிமையில் இருக்கும் பொழுது நம்மால் எந்தெந்த செயல்களில் ஈடுபட்டு சிறப்புடன் செயலாற்ற முடியுமோ அத்தனையையும் நன்றாக செய்து நம்மை நாம் செதுக்கிக்கொண்டு வாழ்வதில்தான் அடங்கியிருக்கிறது தனிமையின் பேரின்பம்.

தனிமை எளிதானது அல்ல. ஆனால் அது வளர்ச்சிக்கு மிகவும் அவசியம். வாழ்க்கையில் எந்த சூழலும் தனியாக நின்று போராடும் தைரியமே தன்னம்பிக்கை என்பது.

தனிமை நேசிக்கக் கற்றுத்தரும், தனிமை யாரை நேசிப்பது என்பதைக் கற்றுத்தரும், தனிமையின் சூழ்நிலை நம்மை நேசிப்பவர் யார் என்பதை தெரிந்துகொள்ள கற்றுத்தரும்.

ஆதலால் தனிமையில் இருப்பதை சாபம் என்று எண்ண வேண்டியதில்லை. தனிமையில் இருப்பதும் ஒரு வரம்தான் என்று நினைத்துக் கொண்டால், அதிலிருந்து பாடம் படிக்க ஆயிரமாயிரம் விஷயங்கள் இருக்கின்றன. ஆகவே, தனிமையில் இனிமை காண முடியுமா என்ற சந்தேகம் வேண்டாம். தனிமை சக்தி நிறைந்தது. தனிமைதான் சிந்திக்க தூண்டுவது. தனிமைதான் எண்ண அலைகளை ஒருங்கிணைப்பது. ஆதலால் தனிமையில் இருக்கும் சூழ்நிலை ஏற்படும்போது அதையும் நேசிப்போம்! அதன் மூலம் கற்க வேண்டியதை கற்போம். அதன் வழி நடப்போமாக!

மேலும் செய்திகளைப் படிக்க...

http://www.vanakambharatham24x7news.in

அன்பில் மகேஸ் குறித்து எச்.ராஜா விமர்சனம்.சென்னை அக், 8சிவாஜியை விட அமைச்சர் அன்பில் மகேஸ் திறமையான நடிக்கிறார் என்று எச...
08/10/2025

அன்பில் மகேஸ் குறித்து எச்.ராஜா விமர்சனம்.

சென்னை அக், 8

சிவாஜியை விட அமைச்சர் அன்பில் மகேஸ் திறமையான நடிக்கிறார் என்று எச்.ராஜா விமர்சித்துள்ளார். கரூர் துயரச் சம்பவத்துக்கு மாநில அரசின் நிர்வாக சீர்கேடுதான் காரணம் எனக் குற்றம் சாட்டிய அவர், கள்ளக்குறிச்சியில் 60 பேர் உயிரிழந்தபோது சென்று பார்க்காத ஸ்டாலின், கரூருக்கு மட்டும் ஏன் உடனடியாக சென்றார் என கேள்வி எழுப்பினார். மேலும், ஸ்டாலின் தான் என்ன பேசுகிறோம் என தெரியாமலேயே பேசுகிறார் என சாடினார்.

மேலும் செய்திகளைப் படிக்க...

http://www.vanakambharatham24x7news.in

தங்கம் விலை குறைய சில வழிமுறைகள். அக், 8நாடுகளுக்கு இடையிலான வர்த்தக மோதல்கள், குறிப்பாக டிரம்ப் தொடங்கிய வர்த்தக போர் ம...
08/10/2025

தங்கம் விலை குறைய சில வழிமுறைகள்.

அக், 8

நாடுகளுக்கு இடையிலான வர்த்தக மோதல்கள், குறிப்பாக டிரம்ப் தொடங்கிய வர்த்தக போர் முடிவுக்கு வர வேண்டும்; மத்திய வங்கிகள் வட்டி குறைப்பு நடவடிக்கையை கைவிட வேண்டும்; புவிசார் மோதல்கள் நிறுத்தப்பட வேண்டும்; உலக நாடுகள் தங்கம் இருப்பு வைப்பதை குறைக்க வேண்டும்; பத்திரங்களின் வட்டி விகிதம் உயர வேண்டும்; பணவீக்கம் குறையவேண்டும்; இவை நடந்தால் தங்கம் விலை குறையும் என நிபுணர்கள் சொல்கிறார்கள்.

மேலும் செய்திகளைப் படிக்க...

http://www.vanakambharatham24x7news.in

பிஹார் இறுதி வாக்காளர் பட்டியல். உச்ச நீதிமன்றம் புதிய உத்தரவு.பிஹார் அக், 8பிஹார் இறுதி வாக்காளர் பட்டியலில் நீக்கப்பட்...
08/10/2025

பிஹார் இறுதி வாக்காளர் பட்டியல். உச்ச நீதிமன்றம் புதிய உத்தரவு.

பிஹார் அக், 8

பிஹார் இறுதி வாக்காளர் பட்டியலில் நீக்கப்பட்ட 3.66 லட்சம் விவரங்களை நாளைக்குள் அளிக்க தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இறுதி பட்டியலில் வாக்காளர் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக குறிப்பிட்ட உச்ச நீதிமன்றம், அவை நீக்கப்பட்ட பெயர்களின் சேர்க்கையா அல்லது புதிய பெயர்களின் சேர்க்கையா என்று கேள்வி எழுப்பியுள்ளது. மேலும், இவ்வழக்கில் இருட்டில் இருந்தபடி முடிவெடுக்க முடியாது எனவும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகளைப் படிக்க...

http://www.vanakambharatham24x7news.in

விஜய்யுடன் கூட்டணி பேச்சு.சென்னை அக், 8கரூர் துயரத்தால் முடங்கியிருக்கும் விஜய்யிடம், EPS கூட்டணி பேச்சுவார்த்தை நடத்திய...
08/10/2025

விஜய்யுடன் கூட்டணி பேச்சு.

சென்னை அக், 8

கரூர் துயரத்தால் முடங்கியிருக்கும் விஜய்யிடம், EPS கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த அக்.6-ம் தேதி இருவரும் அரைமணி நேரம் தொலைபேசியில் உரையாடியதாகவும், ஜனவரிக்கு பிறகு தனிப்பட்ட முறையில் EPS-ஐ சந்திக்க விஜய் ஓகே சொல்லியிருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும், கரூர் விஷயத்தில் முழு ஆதரவு அளிப்பதாக விஜய்யிடம் EPS கூறியதாகவும் அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் செய்திகளைப் படிக்க...

http://www.vanakambharatham24x7news.in

10 மாவட்டங்களில் மழை அறிவிப்பு.நீலகிரி அக், 8தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என IMD கணித்துள்ளது. இன்ற...
08/10/2025

10 மாவட்டங்களில் மழை அறிவிப்பு.

நீலகிரி அக், 8

தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என IMD கணித்துள்ளது. இன்று நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக IMD தெரிவித்துள்ளது. எனவே, மேற்கண்ட மாவட்டங்களில் வசிப்போர் வெளியே சென்றால் தவறாமல் குடை எடுத்துச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளைப் படிக்க...

http://www.vanakambharatham24x7news.in

மல்யுத்த சாம்பியன் அமன் ஷெராவத் இடைநீக்கம்.அக், 8பாரிஸ் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற அமன் ஷெராவத்தை இந்திய மல்யுத்த சம்ம...
08/10/2025

மல்யுத்த சாம்பியன் அமன் ஷெராவத் இடைநீக்கம்.

அக், 8

பாரிஸ் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற அமன் ஷெராவத்தை இந்திய மல்யுத்த சம்மேளனம் ஒரு வருடத்திற்கு இடைநீக்கம் செய்துள்ளது. உலக மல்யுத்த சாம்பியன்ஷிப், 57 கிலோ எடைப்பிரிவில் அவர் பதக்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 1.7 கிலோ எடை கூடுதலாக இருந்ததால் தகுதிநீக்கம் செய்யப்பட்டார். இது தொடர்பாக, அமன் ஷெராவத் அளித்த விளக்கம் திருப்தியளிக்கவில்லை எனக் கூறி மல்யுத்த சம்மேளனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

மேலும் செய்திகளைப் படிக்க...

http://www.vanakambharatham24x7news.in

தூய்மை பணியாளர்கள் உயிரிழந்தால் ₹35 லட்சம் இழப்பீடு.உத்தரப் பிரதேசம் அக், 8உத்திரப்பிரதேசத்தில் தூய்மை பணியாளர்கள் விபத்...
08/10/2025

தூய்மை பணியாளர்கள் உயிரிழந்தால் ₹35 லட்சம் இழப்பீடு.

உத்தரப் பிரதேசம் அக், 8

உத்திரப்பிரதேசத்தில் தூய்மை பணியாளர்கள் விபத்திலோ (அ) எதிர்பாராத விதமாகவோ உயிரிழந்தால், அவர்களது குடும்பத்தினருக்கு ₹35 - ₹40 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார். அத்துடன், ₹5 லட்சம் காப்பீடும் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். சமீபத்தில், பணியின்போது தூய்மை பணியாளர் உயிரிழந்த நிலையில் ₹10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளைப் படிக்க...

http://www.vanakambharatham24x7news.in

ஆன்மீகம் எளிதில் புரியும் வகையில் உங்களுக்கான புதிய வடிவமைப்பில்...மேலும் செய்திகளைப் படிக்க...http://www.vanakambharath...
08/10/2025

ஆன்மீகம் எளிதில் புரியும் வகையில் உங்களுக்கான புதிய வடிவமைப்பில்...

மேலும் செய்திகளைப் படிக்க...

http://www.vanakambharatham24x7news.in

லஞ்சம் வாங்கி பிடிபட்ட பரமக்குடி வேந்தோணி VAO.ராமநாதபுரம் அக், 7 ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தாலுகாவை  சேர்ந்த  புகார...
07/10/2025

லஞ்சம் வாங்கி பிடிபட்ட பரமக்குடி வேந்தோணி VAO.

ராமநாதபுரம் அக், 7

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தாலுகாவை சேர்ந்த புகார்தாரருக்கு (பெயர் தெரிவிக்க விரும்பவில்லை) ஆதிதிராவிடர் நலத்துறை சார்பாக கடந்த 30 வருடங்களுக்கு முன்பு 3 சென்ட் இடத்திற்கு D நாமுனா பட்டா( Free land for poorest) வழங்கப்பட்டுள்ளது. இன்னிலையில் 30 வருடம் கடந்த நிலையில் தன் பெயருக்கு பட்டா மாற்றம் செய்ய வேந்தோணி குரூப் VAO செல்வகுமாரை (43/25) 8 நாள்களுக்கு munbu சந்தித்து விவரம் கேட்டபோது D நமுனா பட்டாவில் உள்ள விவரங்கள் அடங்கிய சான்றிதழ் வழங்க ரூ.5000 தனக்கு வழங்க வேண்டும் என கரராக கேட்டுள்ளார்.

இந்நிலையில் புகார்தாரர் இன்று காலை VAO செல்வகுமாரை மீண்டும் தொடர்பு கொண்டு D நமுனா பட்டா அடங்கிய சான்றிதழ் வழங்க கேட்டபோது தான் கேட்ட ரூ. 5000/-ஐ கொடுத்துவிட்டு வாங்கிக்கீங்க என கூறியுள்ளார்.

எனவே லஞ்சம் கொடுக்க விரும்பாத மனுதாரர் ராமநாதபுரம் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு காவல் துறையில் புகார் செய்தார். லஞ்ச ஒழிப்பு துறை போலிஸார் அவர்களின் அறிவுத்தலின் பேரில் ரசாயனம் தடவிய பணம் ரூ.5000/-ஐ VAO செல்வகுமாரிடம் கொடுக்கும் போது லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் அவரை கையும் களவுமாக பிடித்தனர். மேற்படி நபர் மீது தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

ஜஹாங்கீர் அரூஸி
மாவட்ட நிருபர்

மேலும் செய்திகளைப் படிக்க...

http://www.vanakambharatham24x7news.in

புதிய பத்திரப்பதிவு எழுத்தர் அலுவலகம் திறப்பு!    கீழக்கரை அக், 6                   ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் பு...
06/10/2025

புதிய பத்திரப்பதிவு எழுத்தர் அலுவலகம் திறப்பு!

கீழக்கரை அக், 6

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் புதிய S.D பத்திரப்பதிவு எழுத்தர் அலுவலக திறப்பு விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. S.D பத்திரப்பதிவு எழுத்தர் அலுவலகத்தை அல் மஸ்ஜிதுர் ரய்யான் பஜார் பள்ளி சேர்மன் இம்பாலா M.H சுல்த்தான் செய்யது இப்ராஹிம் அவர்கள் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

மேலும் அப்பள்ளியின் தலைவர் ஜஹாங்கீர் ஆரூஸி அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் இதனைத் தொடர்ந்து பள்ளியின். செயலாளர் ரசீது அவர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

ஜஹாங்கீர் ஆரூஸி
மாவட்ட நிருபர்
கீழக்கரை.

மேலும் செய்திகளைப் படிக்க...

http://www.vanakambharatham24x7news.in

துபாயில் அன்வர் குழும மேலாண்மை இயக்குநருக்கு உலக சாதனையாளர் விருது.360 நபர்களுக்கு 60 நாட்கள் தொடர்ச்சியாக வர்த்தக ஆலோசன...
06/10/2025

துபாயில் அன்வர் குழும மேலாண்மை இயக்குநருக்கு உலக சாதனையாளர் விருது.

360 நபர்களுக்கு 60 நாட்கள் தொடர்ச்சியாக வர்த்தக ஆலோசனைகளை வழங்கியதற்கான உலக சாதனை விருது வழங்கப்பட்டது.

துபாய், அக், 6

ஐக்கிய அரபு அமீரக துபாயில் அன்வர் பிசினஸ்மென் குழுமத்தின் வாயிலாக மாதம்தோறும் வர்த்தக கருத்தரங்கு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சர்வதேச உலக சாதனை சான்றிதழ் (IWR BOOK OF WORLD RECORD) நிறுவனத்தின் சார்பில், தொழில் ஆர்வலர்களுக்கு வர்த்தக ஆலோசனைகள் வழங்கியதற்கான உலக சாதனை விருது, அன்வர் குழுமத்தின் மேலாண்மை இயக்குநர் அன்வர்தீனுக்கு வழங்கப்பட்டது.

இந்த விருதை அமீரகப் பிரமுகர் அலி சயீத் அலி புத்தவில் அல் மத்ரூசி வழங்கி கவுரவித்தார். மேலும் 'விஷன் 360' என்ற இந்த உலக சாதனை நிகழ்வில் பங்கேற்றவர்களுக்கும் சான்றிதழ் வழங்கி கவுரவிக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் உலக சாதனை சான்றிதழ் நிறுவன பிரதிநிதி ராஜேஷ் பெர்னாண்டோ, சென்னை குல்பி சாதிக், ராபின், ரபிக், செய்யது, கேப்டன் டிவி கமால், தினகுரல் மற்றும் வணக்கம் பாரதம் நஜீம் மரிக்கா உள்ளிட்ட பலர் பங்கேற்று சிறப்பித்தனர்.

ஒவ்வொரு மாதமும் நடந்து வரும் இந்த நிகழ்ச்சியின் மூலம் வர்த்தகத்துறையில் தமிழர்கள் அதிக அளவில் ஈடுபட உதவியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

M.நஜீம் மரைக்கா B.A.,
இணை ஆசிரியர்.
அமீரக செய்திப் பிரிவு. U.A.E.

மேலும் செய்திகளைப் படிக்க...

http://www.vanakambharatham24x7news.in

Address

Koieammedu/Anna Nagar
Chennai
600005

Telephone

+919843796777

Website

https://www.vanakambharatham24x7news.in/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b0-%e0%ae%87%e0%ae

Alerts

Be the first to know and let us send you an email when வணக்கம் பாரதம் 24x7 செய்திகள் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to வணக்கம் பாரதம் 24x7 செய்திகள்:

Share