அம்பேத்கர் பொதுவுடைமை முன்னணி

  • Home
  • India
  • Chennai
  • அம்பேத்கர் பொதுவுடைமை முன்னணி

அம்பேத்கர் பொதுவுடைமை முன்னணி சாதி ஒழிப்பே மக்கள் விடுதலை

முதலமைச்சர் உட்பட நான்கு அமைச்சர்கள் உள்ள  தலைநகர் சென்னையிலேயே பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவரை ஒரு கும்பல்  படுகொ...
05/07/2024

முதலமைச்சர் உட்பட நான்கு அமைச்சர்கள் உள்ள தலைநகர் சென்னையிலேயே பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவரை ஒரு கும்பல் படுகொலை செய்கிறது எனில் இங்கு சட்டம் ஒழுங்கு என்ன செய்து கொண்டிருக்கிறது ?
தமிழ்நாட்டில் வளர்ந்த வளரும் தலித் தலைவர்கள் கொலை வாள்களால் குறிவைக்கப்படுகிறார்கள் !

சமூக நீதி பாதுகாப்பு என்பது ஊர் தெருக்கானதாக மட்டுமல்லாமல் சேரிகளுக்கானதாகவும் இருக்க வேண்டும்.

இன்று சேலத்தில் நடைபெற இருக்கும் ஆர்ப்பாட்டம் வெற்றிபெற வாழ்த்துகள்!
09/05/2024

இன்று சேலத்தில் நடைபெற இருக்கும் ஆர்ப்பாட்டம் வெற்றிபெற வாழ்த்துகள்!

பரந்து உயர்ந்த நன்னெறிகளுக்காக,உயர்ந்த உன்னத நன்முயற்சிகளுக்காக ,தேர்ந்து தெளிந்த நல்லறிவிற்காக,இவைகளுக்காகவே நாம் போர்த...
21/03/2024

பரந்து உயர்ந்த நன்னெறிகளுக்காக,உயர்ந்த உன்னத நன்முயற்சிகளுக்காக ,தேர்ந்து தெளிந்த நல்லறிவிற்காக,இவைகளுக்காகவே நாம் போர்த்தொடுக்கிறோம்.எங்கெல்லாம் நன்னெறி அபாயத்தில் உள்ளதோ அங்கெல்லாம் போராடுவதைத் தவிர்க்காதீர்கள் ! வாயடைத்து நிற்காதீர்கள் ! -புத்தர்

சைவ உணவாளர்களுக்கு உணவு வினியோகிக்கும் சொமோட்டோ ஊழியர்களுக்கு வழக்கமான சிவப்பு சீருடையல்லாமல் பச்சை சீருடையை அறிவித்து ப...
20/03/2024

சைவ உணவாளர்களுக்கு உணவு வினியோகிக்கும் சொமோட்டோ ஊழியர்களுக்கு வழக்கமான சிவப்பு சீருடையல்லாமல் பச்சை சீருடையை அறிவித்து பின் அதை திரும்பப் பெற்றிருப்பது தொடக்கம் அல்ல.அது ஒரு வரலாற்றுப் பண்பாட்டுப் போரின் தொடர்ச்சி.
பௌத்தத்தை வீழ்த்தி தன்னை நிறுவிக்கொண்ட பார்ப்பனியம் பெரும்பான்மையான உழைக்கும் மக்களின் வாழ்வியலை கார்ப்பரேட் யுகத்திலும் கொச்சைப்படுத்த எத்தனிக்கிறது எனில் அதன் அதைப்பு ( தாக்கி மீளுகை) யுக்தி சாதாரணமானது அல்ல. இடைநிலைச் சாதியினரின் “மாட்டிறைச்சியத் தவிர மற்ற இறைச்சி” என்ற மெதப்பும் பார்ப்பனிய அதைப்பு தான்.
கார்ப்பரேட் சட்டகத்திற்குள் தன்னை தகவமைத்துக் கொள்ள எத்தனிக்கும் பார்ப்பனிய அதைப்பைப் புதைக்குழிக்கு அனுப்புவோம் !

19/03/2024
நெய்தல் நிலத்தை நஞ்சாக்கும் தொழிற்சாலைகளை மூடக் கோரி போராடும் மக்களுக்கு ஆதரவாக நேற்று எண்ணூர் பகுதியில் தமிழ் மீனவர் வி...
05/01/2024

நெய்தல் நிலத்தை நஞ்சாக்கும் தொழிற்சாலைகளை மூடக் கோரி போராடும் மக்களுக்கு ஆதரவாக நேற்று எண்ணூர் பகுதியில் தமிழ் மீனவர் விடுதலை வேங்கைகள் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஆகிய அமைப்புத் தோழர்களுடன் அம்பேத்கர் பொதுவுடைமை முன்னணி மாநிலக் குழு உறுப்பினர் வட சென்னை கோபி அவர்கள் கலந்து கொண்டு நம் மண்ணுக்கும் மக்களுக்கும் ஆதரவாக பேசிய போது !

01/01/2024

திருநங்கை பதிப்பகம் தோன்றியிருப்பது வரலாற்றில் ஒரு முக்கிய நிகழ்வு ! வாருங்கள் நாமும் வாழ்த்துவோம் !

Address

Chennai

Telephone

+918248541877

Website

Alerts

Be the first to know and let us send you an email when அம்பேத்கர் பொதுவுடைமை முன்னணி posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to அம்பேத்கர் பொதுவுடைமை முன்னணி:

Share

Category