News4 Tamil-Online News

News4 Tamil-Online News Best Online Tamil News Portal

ரோகித் சர்மா இடத்தை பிடிச்சிட்டாரு.. முதல் பந்தில் பறந்த சிக்ஸ்.. சதமடித்து சாதித்த அபிஷேக் சர்மா!ஜிம்பாப்வே அணிக்கு எதி...
08/07/2024

ரோகித் சர்மா இடத்தை பிடிச்சிட்டாரு.. முதல் பந்தில் பறந்த சிக்ஸ்.. சதமடித்து சாதித்த அபிஷேக் சர்மா!

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணியின் அதிரடி தொடக்க வீரர் அபிஷேக் சர்மா 46 பந்துகளில் சதம் விளாசி மிரட்டியுள்ளார். நேற்று அறிமுக போட்டியிலேயே டக் அவுட்டாகி வெளியேறிய அபிஷேக் சர்மா, அடுத்த நாளிலேயே மரண மாஸ் கம்பேக்கை கொடுத்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் ஐதராபாத் அணிக்காக தொடக்க வீரராக விளையாடிய அபிஷேக் சர்மா 15 இன்னிங்ஸ்களில் 482 ரன்களை விளாசினார். அதிரடி தொடக்கத்தில் ரசிகர்கள் மட்டுமல்லாமல் இந்திய அணியின் தேர்வு குழுவினரையும் அபிஷேக் சர்மா ஈர்த்தார். இதன் காரணமாக ஜிம்பாப்வே தொடருக்கான இந்திய அணியில் அபிஷேக் சர்மா தேர்வு செய்யப்பட்டார்.

நீண்ட கால நண்பரான சுப்மன் கில் கேப்டன் என்பதால் நேரடியாகவே பிளேயிங் லெவனில் அபிஷேக் சர்மாவுக்கு இடம் கிடைத்தது. ஆனால் அறிமுக போட்டியில் சிக்சர் அடித்து முதல் ரன்னை எடுக்க வேண்டும் என்ற ஆசையில், டக் அவுட்டாகி வெளியேறினார். இதனால் அறிமுக போட்டியிலேயே டக் அவுட்டாகி வெளியேறிய பேட்ஸ்மேன் என்ற மோசமான சாதனையை படைத்தார்.

இந்த நிலையில் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 2வது டி20 ஆட்டம் நடைபெற்று வருகிறது. இம்முறை அபிஷேக் சர்மா முதல் பந்தை சந்திக்காமல் சுப்மன் கில் முதல் பந்தை எதிர்கொண்டார். இதனால் அபிஷேக் சர்மா அடக்கி வாசிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நேற்று ஆட்டமிழந்த அதே பவுலர் வீசிய பந்தில் சிக்சர் அடித்து தனது முதல் சர்வதேச ரன்னை சேர்த்தார்.

இதன்பின் அதிரடியில் பொளந்து கட்டிய அபிஷேக் சர்மா, மைதானத்தின் அனைத்து திசைகளிலும் பொளந்து கட்டினார். அபிஷேக் சர்மா 30 பந்துகளில் 41 ரன்களை எடுத்திருந்த போது அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் 11வது ஓவரை வீச டியான் மேயர்ஸ் அழைக்கப்பட்டார். அந்த ஓவரில் 2, 4, 6, 4, 6, 4 மற்றும் 2 ஒய்டுகள் உட்பட 28 ரன்களை அபிஷேக் சர்மா விளாசினார்.

இதன் மூலமாக 33 பந்துகளிலேயே அபிஷேக் சர்மா சிக்சர் அடித்து அரைசதத்தை எட்ட, அதன்பின் ருத்ரதாண்டவம் ஆடினார். எப்படி பவுலிங் செய்தாலும், அட்டாக்கிங் மோடில் ஆடிய அபிஷேக் சர்மாவை கட்டுப்படுத்த முடியாமல் ஜிம்பாப்வே பவுலர்கள் திணறினர். தொடர்ந்து மசகட்ஷா வீசிய 14வது ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸ் அடித்து அபிஷேக் சர்மா, 46 பந்துகளில் சதமடித்து சாதனை படைத்துள்ளார்.

டி20 உலக கோப்பையை வென்றது இந்தியா.. 17 ஆண்டுக்கு பிறகு ரோகித் படை சாதனை.. தென்னாப்பிரிக்கா தோல்வி2024 ஆம் ஆண்டு டி20 உலக...
30/06/2024

டி20 உலக கோப்பையை வென்றது இந்தியா.. 17 ஆண்டுக்கு பிறகு ரோகித் படை சாதனை.. தென்னாப்பிரிக்கா தோல்வி

2024 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் சாம்பியன் பட்டத்தை இந்திய அணி 2வது முறையாக கைப்பற்றி சாதனை படைத்திருக்கிறது. இதன் மூலம் 17 ஆண்டுக்கு பிறகு இந்திய அணி டி20 உலககோப்பையை வென்று அசத்தி இருக்கிறது.

பார்படாசில் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் தோல்வியை சந்திக்காத தென்னாப்பிரிக்காவும் இந்திய அணியும் பலப்பரீட்சை நடத்தியது. இந்திய அணி ஐசிசி (சாம்பியன் டிராபி 2013) தொடரை வென்று 11 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது.

இதனால் இன்றைய ஆட்டத்தில் இந்தியா எப்படியாவது சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்று நூறு கோடி ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்த நிலையில் தான் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் ரோகித் சர்மா 9 ரன்களில் ஆட்டமிழக்க ரிஷப் பண்ட் டக் அவுட் ஆகி வெளியேறினார்.

சூரியகுமார் யாதவ் 3 ரன்களில் ஆட்டம் இழக்க இந்திய அணி 34 ரன்கள் சேர்ப்பதற்குள் மூன்று விக்கெட்டுகளை இழந்தது. இதன் அடுத்து விராட் கோலியுடன் ஜோடி சேர்ந்த அக்சர் பட்டேல், அபாரமாக விளையாடி அணியை சரிவிலிருந்து மீட்டார். அக்சர் பட்டேல் 47 ரன்களில் ரன் அவுட் ஆக, ஆரம்பம் முதல் பொறுமையாக விளையாடி வந்த விராட் கோலி இறுதியில் பட்டையை கிளப்பினார்.

48 பந்துகளில் அரைசதம் கடந்த விராட் கோலி அதன் பிறகு அதிரடியை காட்டினார். இதன் மூலம் 59 பந்துகளில் விராட் கோலி 76 ரன்கள் சேர்த்தார். இதில் ஆறு பவுண்டரி, 2 சிக்சர்கள் அடங்கும். இதேபோன்று இந்த தொடர் முழுவதும் சொதப்பிய சிவம் துபே பைனலில் 16 பந்துகளில் 27 ரன்கள் எடுத்தார். இதில் மூன்று பவுண்டரி, ஒரு சிக்சர் அடங்கும்.

ஹர்திக் பாண்டியா ஐந்து ரன்கள் எடுக்க இந்திய அணி 20 ஓவர் முடிவில் ஏழு விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் எடுத்தது. தென்னாப்பிரிக்கா பந்துவீச்சு தரப்பில் கேசவ் மகராஜ் மற்றும் ஆண்டிரிச் நோக்கியா தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்னாப்பிரிக்க அணி களம் இறங்கியது.

இதில் தென் ஆப்பிரிக்கா வீரர் ரிசா ஹென்றிக்ஸ், நான்கு ரன்கள் எடுத்திருந்தபோது பும்ராவின் அபார பந்துவீச்சால் போல்ட் ஆனார். இதேபோன்று கேப்டன் மார்க்கரம் நான்கு ரன்களில் வெளியேற தென்ஆப்பிரிக்கா அணி 12 ரன்களில் இரண்டு விக்கெட்டுகளை இழந்தது. இதனால் இந்திய அணிக்கு வெற்றி கிடைக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் யாருமே எதிர்பாராத வகையில் குயின்டன் டிகாக், ஸ்டெப்ஸ் ஜோடி அபாரமாக விளையாடி இந்தியாவுக்கு பதிலடி கொடுத்தது.

ஸ்டப்ஸ் 21 பந்துகளில் 31 ரன்கள் எடுத்த நிலையில் அக்சர் பட்டேல் பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார். இதேபோன்று குயிண்டன் டி காக் 31 பந்தில் 39 ரன்கள் எடுத்த நிலையில் ஃபெவிலியன் திரும்பினார். அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகளை இழந்ததால் இந்திய ரசிகர்களுக்கு மீண்டும் நம்பிக்கை பிறந்தது.

ஆனால் நடு வரிசையில் களமிறங்கிய ஹென்றிகா மற்றும் டேவிட் மில்லர் ஜோடி இந்திய பந்துவீச்சை பொளந்து எடுத்தனர். குறிப்பாக அக்சர் பட்டேல் வீசிய 15 ஓவரில் கிளாசன் இரண்டு பவுண்டரி இரண்டு சிக்ஸர் என 24 ரன்களை அடித்தார். இது ஆட்டத்தில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியது. இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் இந்தியா தடுமாறியது. 24 பந்துக்கு 26 எண்கள் தேவை என்ற நிலையில் ஹர்திக் பாண்டியா வீசிய முதல் பந்தில் கிளாசென் ஆட்டம் இழந்தார். அவர் 27 பந்துகளில் 52 ரன்கள் அடித்தார், இதில் 5 சிக்சர்களும் இரண்டு பவுண்டரிகளும் அடங்கும். இதனால் இந்தியாவுக்கு மீண்டும் வெற்றிக் கதவு திறந்தது.

ஹர்திக் 17வது ஓவரில் 4 ரன்களை மட்டுமே விட்டு கொடுத்தார். இதனையடுத்து 18வது ஓவரை பும்ரா வீச, தென்னாப்பிரிக்கா ரன் சேர்க்க தடுமாறியது. அந்த ஓவரில் 4வது பந்தில் மார்கோ யான்சென் போல்ட் ஆனார். பும்ரா இந்த ஓவரில் 2 ரன்கள் மட்டுமே விட்டு கொடுத்தார். இதனால் கடைசி 2 ஓவரில் வெற்றிக்கு 20 ரன்கள் தேவைப்பட்டது. அப்பாது ஆர்ஷ்தீப் சிங் 19வது ஓவரில் 4 ரன்கள் தான் விட்டு கொடுத்தார், இதனால் தென்னாப்பிரிக்கா வெற்றிக்கு கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவைப்பட்டது.

அப்போது ஹர்திக் வீசிய கடைசி ஓவரின் முதல் பந்தில் டேவிட் மில்லர் தூக்கி அடிக்க, அதை சிக்சர் லைனில் சூர்யகுமார் யாதவ் கேட்ச் பிடித்தார். இதனையடுத்து 2வது பந்தில் ரபாடா பவுண்டரி அடிக்க, தென்னாப்பிரிக்க வெற்றிக்கு 4 பந்தில் 12 ரன்கள் தேவைப்பட்டது. 3வது மற்றும் 4வது பந்து சிங்கிள் எடுக்க, 5வது பந்து Wide ஆக மாறியது. இதனையடுத்து 5வது பந்தில் ரபாடா ஆட்டமிழக்க, ஒரு பந்துக்கு 9 ரன்கள் தேவைப்பட்டது. எனினும் கடை0ச பந்தில் ஒரு ரன் மட்டுமே எடுக்கப்பட இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

அடுத்த இடி.. சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார் ஆஸ்திரேலிய அதிரடி வீரர் டேவிட் வார்னர்டி20 உலக கோப்பை சூப்பர்...
25/06/2024

அடுத்த இடி.. சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார் ஆஸ்திரேலிய அதிரடி வீரர் டேவிட் வார்னர்

டி20 உலக கோப்பை சூப்பர் 8 சுற்றில் இருந்து ஆஸ்திரேலியா வெளியேறியதை அடுத்து அந்த அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் ஓய்வு முடிவை அறிவித்துள்ளார். 37 வயதான டேவிட் வார்னர் அண்மையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில் தற்போது ஒட்டுமொத்தமாக சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக வார்னர் அறிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய அணிக்காக ஜனவரி 11ஆம் தேதி 2009 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக டேவிட் வார்னர் டி20 போட்டியில் அறிமுகமானார் அதன் பிறகு 15 ஆண்டுகளாக ஆஸ்திரேலிய அணிக்காக டேவிட் வானர் விளையாடி வருகிறார். 112 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 8,786 ரன்களை அடித்திருக்கிறார்.

இதேபோன்று 161 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 6932 ரன்களும், 110 டி20 போட்டிகளில் விளையாடி 3278 ரன்களை ஆஸ்திரேலியாவுக்காக அடித்திருக்கிறார். சர்வதேச கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய அணிக்காக டேவிட் வார்னர் 49 சதங்களை அடித்திருக்கிறார். ஹைடன், கில்கிறிஸ்ட் போன்ற வரிசையில் சிறந்த தொடக்க ஆட்டக்காரர் என்ற பெயரை டேவிட் வார்னர் பெற்றிருக்கிறார்.

டேவிட் வார்னர் கிரிக்கெட் வாழ்க்கையில் பல்வேறு உச்சங்களும் சரிவுகளும் இருக்கிறது. 2018 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பந்தை வேண்டுமென்றே சேதப்படுத்தியதற்கான சர்ச்சையில் ஸ்மித், டேவிட் வார்னர் ஆகியோர் சிக்கினர். இதனால் இருவருக்கும் ஒரு ஆண்டு வரை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் எந்த ஒரு கிரிக்கெட் போட்டியிலும் பங்கேற்க தடை விதித்தது.

எனினும் அந்த தடையிலிருந்து மீண்டு வந்த டேவிட் வார்னர் மீண்டும் ஆஸ்திரேலியா அணியில் தவிர்க்க முடியாத இடத்தை பிடித்தார். 2015 உலகக்கோப்பை, 2023 ஆம் ஆண்டு உலகக் கோப்பை, 2021 டி20 உலக கோப்பை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டம் என பல்வேறு சாதனைகளை ஆஸ்திரேலியா அணிக்காக டேவிட் வார்னர் வென்று இருக்கிறார்.

அது மட்டும் இல்லாமல் கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக எந்த ஒரு உள்ளூர் கிரிக்கெட் போட்டியிலும் விளையாடாமல் ஆஸ்திரேலியா அணிக்காக சர்வதேச கிரிக்கெட் போட்டியில் விளையாடிய முதல் வீரர் என்ற சாதனையை டேவிட் வார்னர் படைத்திருக்கிறார்.

பாகிஸ்தானுக்கு விழுந்த முதல் அடி.. ஆசியாவிலேயே 2வது சிறந்த அணியாக மாறிய ஆப்கானிஸ்தான்ஆசியாவிலேயே இரண்டாவது சிறந்த கிரிக்...
25/06/2024

பாகிஸ்தானுக்கு விழுந்த முதல் அடி.. ஆசியாவிலேயே 2வது சிறந்த அணியாக மாறிய ஆப்கானிஸ்தான்

ஆசியாவிலேயே இரண்டாவது சிறந்த கிரிக்கெட் அணியாக மாறி உள்ளது ஆப்கானிஸ்தான். கடந்த 20 ஆண்டுகளில் ஆசிய அளவில் சிறந்த கிரிக்கெட் அணியாக இந்தியா இருந்து வருகிறது. இரண்டாவது இடத்தில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் மாறி மாறி இடம் பெற்று வந்தன.

குமார் சங்ககாரா மற்றும் மகிளா ஜெயவர்த்தனை ஆகியோரின் காலத்துக்கு பின் இலங்கை அணி மோசமான சரிவை சந்தித்தது. அந்த இடைவெளியில் பாகிஸ்தான் அணி ஆசியாவின் இரண்டாவது சிறந்த அணியாக இருந்தது. ஒருநாள் போட்டி உலக கோப்பை மற்றும் டி20 உலக கோப்பைகளில் இந்தியாவுக்கு அடுத்து சிறப்பாக செயல்பட்டு வந்தது. அதிக டி20 போட்டிகளில் ஆடியதால் இந்திய அணியை விட பாகிஸ்தான் அணி சில காலம் முன்னிலையிலும் இருந்தது.

ஆனால், தற்போது இந்தியா டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் ஆசியாவிலேயே சிறந்த அணியாக உள்ளது. மறுபுறம் பாகிஸ்தான் அணி கடந்த சில ஆண்டுகளில் சரிவை சந்தித்து வந்தது. 2023 ஒருநாள் போட்டி உலகக் கோப்பையில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய இரண்டு அணிகளுமே முதல் சுற்றில் ஒன்பது போட்டிகளில் ஆடி நான்கு வெற்றிகளை மட்டுமே பெற்றன. அதனால், இரண்டு அணிகளும் அப்போது சமநிலையை அடைந்தன.

அடுத்து, 2024 டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணியை விட சிறப்பாக செயல்பட்ட ஆப்கானிஸ்தான் அரை இறுதிக்கு முன்னேறி உள்ளது. இந்த உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணி குரூப் சுற்றுடன் வெளியேறியது. ஆனால், ஆப்கானிஸ்தான் அணி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது மட்டுமில்லாமல் அரை இறுதிக்கும் முன்னேறி இருக்கிறது. ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற வலுவான அணிகளை ஆப்கானிஸ்தான் வீழ்த்தி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

ஒரு நாள் போட்டி உலகக் கோப்பை மற்றும் டி20 உலகக் கோப்பைகளில் அடுத்தடுத்து சிறப்பான செயல்பாட்டை அளித்துள்ள ஆப்கானிஸ்தான் அணி ஆசியாவிலேயே இரண்டாவது சிறந்த கிரிக்கெட் அணியாக மாறி உள்ளது.

இது பாகிஸ்தான் அணிக்கு கிரிக்கெட்டில் விழுந்த மிகப்பெரிய அடியாக பார்க்கப்படுகிறது. ஆப்கானிஸ்தான் அணிக்கு சொந்த நாட்டில் கிரிக்கெட் மைதானங்கள் ஏதுமில்லை. அந்த நாட்டின் அரசியல் சூழ்நிலையும் பிற அணிகளை அழைத்து இருதரப்பு கிரிக்கெட் ஆடுவதற்கான நிலையில் இல்லை. அதன் காரணமாகவே தற்போது ஆப்கானிஸ்தான் அணி இதுவரை பின்தங்கிய நிலையில் இருந்தது.

இனிவரும் காலத்தில் ஆப்கானிஸ்தான் அணி இந்தியாவில் உள்ள மைதானங்களில் பிற அணிகளை அழைத்து இருதரப்பு கிரிக்கெட் தொடர்களில் ஆட உள்ளது. இனி வலுவான அணிகளோடு அதிக சர்வதேச கிரிக்கெட் தொடர்களில் ஆடும் பட்சத்தில் ஆசியாவில் இந்திய அணிக்கு போட்டியாக ஆப்கானிஸ்தான் மாறும் என எதிர்பார்க்கலாம்.

இப்படி ஒரு சம்பவத்தை நாங்க பார்த்ததே இல்லை.. கண்ணீர் மல்க கொண்டாடிய ஆப்கன் ரசிகர்கள்கிரிக்கெட் வரலாற்றிலேயே முதன்முறையாக...
25/06/2024

இப்படி ஒரு சம்பவத்தை நாங்க பார்த்ததே இல்லை.. கண்ணீர் மல்க கொண்டாடிய ஆப்கன் ரசிகர்கள்

கிரிக்கெட் வரலாற்றிலேயே முதன்முறையாக ஆப்கானிஸ்தான் அணி உலகக் கோப்பையின் அரை இறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளது. இது போன்ற ஒரு சம்பவத்தை இதுவரை நாங்கள் பார்த்ததே இல்லை என ஆப்கானிஸ்தான் ரசிகர்கள் கண்ணீர் மல்க இந்த வெற்றியை கொண்டாடி வருகிறார்கள்.

ஆப்கானிஸ்தான் நாட்டின் முக்கிய தெருக்களில் ஆயிரக்கணக்கில் ஒன்று கூடிய அந்த நாட்டு ரசிகர்கள் ஆப்கன் வெற்றியை உணர்ச்சி வசப்பட்ட நிலையில் கொண்டாடி வருகிறார்கள். கடந்த 10 ஆண்டுகளாக டி20 கிரிக்கெட்டில் படிப்படியாக முன்னேறி வந்த ஆப்கானிஸ்தான் அணி 2024 டி20 உலகக் கோப்பை தொடரின் அரை இறுதிக்கு முன்னேறி புதிய வரலாறு படைத்துள்ளது.

இந்த உலகக் கோப்பை தொடரின் குரூப் சுற்றில் ஆப்கானிஸ்தான் அணி, நியூசிலாந்து அணியை வீழ்த்தி இருந்தது. அந்த சுற்றில் வெஸ்ட் இண்டீஸ் அணியிடம் மட்டுமே தோல்வி அடைந்த ஆப்கானிஸ்தான் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது. அந்த சுற்றிலும் இந்திய அணியிடம் மட்டுமே தோல்வி அடைந்த ஆப்கானிஸ்தான், வலுவான அணிகளில் ஒன்றான ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது.

அடுத்து வங்கதேச அணியை வீழ்த்தினால் அரை இறுதிக்கு முன்னேறலாம் என்ற நிலை இருந்தது. இந்த நிலையில் அந்தப் போட்டியில் மோசமான பிட்ச்சில் ஆப்கானிஸ்தான் அணி நிதானமாக விளையாடி 115 ரன்கள் சேர்த்தது. அடுத்து பிட்ச்சை சரியாக பயன்படுத்திக் கொண்ட ஆப்கானிஸ்தான் பந்துவீச்சாளர்கள் வங்கதேச அணியின் விக்கெட்களை வரிசையாக வீழ்த்தினர்.

வங்கதேச அணி 105 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்று அரை இறுதி சுற்றுக்கு முன்னேறியது. இந்த வெற்றியால் உணர்ச்சி வசப்பட்ட ஆப்கானிஸ்தான் அணியின் ரசிகர்கள் இதை கொண்டாடி வருகிறார்கள். இதுவரை விளையாட்டுப் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி இத்தனை பெரிய வெற்றியை பெற்றதே இல்லை.

கடந்த 20 ஆண்டுகளாக போர் காரணமாக ஆப்கானிஸ்தான் மக்கள் பல வேதனைகளை சந்தித்து வந்தனர். கடந்த சில ஆண்டுகளாக அவர்களுக்கு கிரிக்கெட் மட்டுமே ஒரே ஆறுதலாக இருந்து வந்தது. இந்த நிலையில் 2024 டி20 உலகக் கோப்பையில் அரை இறுதிக்கு முன்னேறி இருப்பது அந்த நாட்டு மக்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதுதான்டா ரிவெஞ்ச்.. 21 வருட வேதனை.. பரம எதிரி டீமை பொளந்த இந்தியா, ஆப்கானிஸ்தான்தங்களது பரம எதிரி அணியான ஆஸ்திரேலியாவை ...
25/06/2024

இதுதான்டா ரிவெஞ்ச்.. 21 வருட வேதனை.. பரம எதிரி டீமை பொளந்த இந்தியா, ஆப்கானிஸ்தான்

தங்களது பரம எதிரி அணியான ஆஸ்திரேலியாவை இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் இணைந்து 2024 டி20 உலகக் கோப்பையில் இருந்து தூக்கி எறிந்துள்ளன. ஆஸ்திரேலியா அணி என்றாலே கடந்த 21 ஆண்டுகளாக இந்திய அணிக்கு வேப்பங்காயாக கசக்கும். அந்த அளவுக்கு கசப்பான அனுபவங்களை அந்த அணி இந்திய அணிக்கு கொடுத்துள்ளது.

2003 ஒருநாள் போட்டி உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் அந்த முதல் கசப்பான அனுபவம் நடந்தது. அப்போது நீண்ட காலத்துக்கு பின் சவுரவ் கங்குலி தலைமையிலான இந்திய அணி உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருந்தது. ஆனால், அப்போது ஆஸ்திரேலிய அணி இந்தியாவை வீழ்த்தியது. அதனால், இந்திய ரசிகர்கள் ஆஸ்திரேலியாவை கண்டாலே எதிரி மனப்பான்மையோடு பார்க்க தொடங்கினர்.

அதன்பின் இந்திய அணி இரு தரப்பு கிரிக்கெட் தொடர்களில் ஆஸ்திரேலியாவை பலமுறை வீழ்த்தியது. எனினும், உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் நடந்த தோல்விக்கு எதுவும் ஈடு இணை ஆகவில்லை. பின் 2023 ஆம் ஆண்டு ஒருநாள் போட்டி உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் மீண்டும் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதின.

20 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவை பழி தீர்க்க இந்திய அணிக்கு அரிய வாய்ப்பு கிடைத்தது. ஆனால், இந்த முறையும் ஆஸ்திரேலியா, இந்திய அணியை வீழ்த்தி இந்திய ரசிகர்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தது. அதனால், கடந்த ஓராண்டாக இந்திய அணி ஒருவித அழுத்தத்திலேயே இருந்தது. இந்த நிலையில் 2024 டி20 உலகக் கோப்பையில் ஆஸ்திரேலிய அணியை உலகக் கோப்பை தொடரிலிருந்து சூப்பர் 8 சுற்றோடு வெளியேற்றும் வாய்ப்பு இந்திய அணிக்கு கிடைத்தது.

சூப்பர் 8 சுற்றில் ஆப்கானிஸ்தான் அணியிடம், ஆஸ்திரேலியா தோல்வி அடைந்தது. அடுத்து இந்திய அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தினால் அந்த அணியின் அரை இறுதி வாய்ப்புக்கு சிக்கல் ஏற்படும் என்ற நிலை இருந்தது. எதிர்பார்த்தது போலவே இந்திய அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது.

ஏற்கனவே, ஆஸ்திரேலிய அணியை சூப்பர் 8 சுற்றில் வீழ்த்தி மனம் குளிர்ந்து போயிருந்த ஆப்கானிஸ்தான் அணி, அடுத்து வங்கதேச அணியை வீழ்த்தினால் ஆஸ்திரேலியாவை ஒட்டுமொத்தமாக உலகக் கோப்பையில் இருந்து வெளியேற்றலாம் என்ற நிலை இருந்தது. ஆப்கானிஸ்தான் அணிக்கும் ஆஸ்திரேலியாவுடன் கசப்பான அனுபவம் உள்ளது.

ஆப்கானிஸ்தான் நாட்டின் அரசியல் சூழ்நிலைகளை சுட்டிக்காட்டி அந்த நாட்டில் பெண்களுக்கு சுதந்திரம் இல்லை என்பதை சுட்டிக்காட்டி, ஆஸ்திரேலிய அணி கடந்த பத்து ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானுடன் இருதரப்பு கிரிக்கெட் தொடர்களில் விளையாடாமல் அவர்களை ஒதுக்கி வைத்திருந்தது. ஆப்கானிஸ்தான் வீரர்கள் அவ்வப்போது இந்த மனக்குமுறலை வெளியிட்டு வந்தனர்.

ஆனால், உலகக்கோப்பை தொடரில் மட்டும் ஆப்கானிஸ்தான் அணியுடன் ஆஸ்திரேலியா விளையாடி வருகிறது. இந்த நிலையில், ஆஸ்திரேலியாவை பழி தீர்க்க கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்ட ஆப்கானிஸ்தான், வங்கதேசத்தை வீழ்த்தி ஆஸ்திரேலியாவை டி20 உலகக் கோப்பை தொடரின் அரை இறுதிக்கு முன்னேற விடாமல் வெளியேற்றியது. நட்பு நாடுகளான இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட்டில் தங்களின் பரம எதிரியை ஒன்று சேர்ந்து வீழ்த்தி பழி தீர்த்துள்ளன.

அந்த கேட்சை உயிரை கொடுத்து பிடிச்சிருக்கனும்.. ரிஷப் பண்ட்-ஐ கத்திய ரோகித் சர்மா.. என்ன நடந்தது?ஆஸ்திரேலியா அணியின் கேப்...
25/06/2024

அந்த கேட்சை உயிரை கொடுத்து பிடிச்சிருக்கனும்.. ரிஷப் பண்ட்-ஐ கத்திய ரோகித் சர்மா.. என்ன நடந்தது?

ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் மிட்சல் மார்ஷ் பேட்டில் அடித்து எட்ஜாகி பந்தை கேட்ச் பிடிக்க தவறிய விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட்-ஐ, ரோகித் சர்மா கோபத்தில் திட்டிய சம்பவம் களத்தில் அரங்கேறியுள்ளது. இதனால் ரோகித் சர்மா வெற்றிபெற வேண்டும் என்று எவ்வளவு தீவிரமாக இருக்கிறார் என்று ரசிகர்கள் உணர்ந்து பாராட்டி வருகின்றனர்.

டி20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 8 போட்டியில் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலியா அணி வெற்றிபெற 206 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக ரோகித் சர்மா 41 பந்துகளில் 8 சிக்ஸ், 7 பவுண்டரி உட்பட 92 ரன்களை விளாசினார். இதன் பின் இமாலய இலக்கை நோக்கி ஆஸ்திரேலியா அணியின் டேவிட் வார்னர் - ட்ராவிஸ் ஹெட் கூட்டணி தொடக்கம் கொடுத்தது.

அர்ஷ்தீப் சிங் வீசிய முதல் ஓவரிலேயே டேவிட் வார்னர் 6 ரன்களில் ஆட்டமிழக்க, பின்னர் ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் மிட்சல் மார்ஷ் களமிறங்கினார். இதனைத் தொடர்ந்து 2வது ஓவரை வீச பும்ரா வந்தார். இந்த ஓவரின் 4வது பந்தில் மிட்சல் மார்ஷ் கிளவ்ஸில் அடித்து பந்து மேலே எழுந்தது. அதனை பிடிக்க ரிஷப் பண்ட் வேகமாக ஓடிய போது, திடீரென தடுமாறி கேட்ச் பிடிக்க முடியாமல் கோட்டைவிட்டார்.

ரிஷப் பண்ட் நிதானமாக ஓடி வந்திருந்தாலே எளிதாக அந்த கேட்சை பிடித்திருக்க முடியும். ஆனால் அவர் கவனத்தை கேட்ச் மீது வைக்காததாலேயே சரியாக பந்தை பிடிக்க ஓடி வரவில்லை. இதனால் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா ஆக்ரோஷமாக கத்தினார். ஒரு நிமிடம் என்ன நடந்தது என்று மைதானத்தில் இருந்தவர்களே மிரண்டு போயினர். ஏனென்றால் ரோகித் சர்மா எந்த சூழலிலும் தனது கோபத்தை வெளிப்படுத்த மாட்டார்.

ஆனால் ஃபேரவைட் பிளேயரான ரிஷப் பண்ட்-ஐ ரோகித் சர்மா கோபமாக கத்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதுமட்டுமல்லாமல் பும்ரா ஓவர் முடிவடைந்த போது, நேரடியாக ரிஷப் பண்ட் அருகில் சென்ற ரோகித் சர்மா, உயிரைக் கொடுத்தாவது டைவ் அடித்து கேட்சை பிடித்திருக்க வேண்டும் என்று ஆக்ரோஷமாக தெரிவித்தார். இது ரோகித் சர்மா இந்த வெற்றியை பெற எவ்வளவு தீவிரமாக உள்ளார் என்பது ரசிகர்களுக்கும் புரியும் வகையில் அமைந்தது.

படிக்கவே நேரமில்லை.. எப்படியாச்சும் பி.காம் படிப்பை முடிக்கணும்.. ட்ரெண்டாகும் ஸ்ரேயாஸ் ஐயர் பதிவு!ஐபிஎல் தொடரில் கேகேஆர...
28/05/2024

படிக்கவே நேரமில்லை.. எப்படியாச்சும் பி.காம் படிப்பை முடிக்கணும்.. ட்ரெண்டாகும் ஸ்ரேயாஸ் ஐயர் பதிவு!

ஐபிஎல் தொடரில் கேகேஆர் அணி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ள நிலையில், அந்த அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரின் சோசியல் மீடியா பதிவு ஒன்று ட்ரெண்டாகி வருகிறது.

ஐபிஎல் தொடரில் கேப்டனாக கோப்பையை வென்ற 5வது இந்திய வீரர் என்ற பெருமையை ஸ்ரேயாஸ் ஐயர் பெற்றுள்ளார். பிசிசிஐ ஒப்பந்தத்தில் வெளியேற்றப்பட்ட ஸ்ரேயாஸ் ஐயர், பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி மற்றும் செயலாளர் ஜெய் ஷா ஆகியோரின் கைகளில் இருந்தே கோப்பையை வாங்கி தரமான பதிலடியை கொடுத்துள்ளார்.

அதேபோல் தோல்வியின் போதும், சறுக்கலின் போதும் தன்னை பற்றிய விமர்சனங்களுக்கு பதிலளிக்காமல், ஐபிஎல் தொடரை வென்றுவிட்டு தனது காயம் குறித்து ஸ்ரேயாஸ் ஐயர் பேசியது அவரின் முதிர்ச்சியை வெளிக்காட்டியுள்ளது. இதனால் ரோகித் சர்மாவுக்கு பின் இந்திய அணியின் அடுத்த கேப்டனாகும் வாய்ப்பு ஸ்ரேயாஸ் ஐயருக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் ஐபிஎல் கோப்பையுடன் ஸ்ரேயாஸ் ஐயர் பதிவிட்டு வரும் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகிறது. கார், நீச்சல் குளம், பார்ட்டி என எங்கு சென்றாலும் கோப்பையுடன் ஸ்ரேயாஸ் ஐயர் வேற லெவல் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். தற்போது 2015ஆம் ஆண்டு ஸ்ரேயாஸ் ஐயர் ஃபேஸ்புக்கில் எழுதிய ஒரு பதிவு ட்ரெண்டாகி வருகிறது.

அதில், எனது பி.காம் பட்டப்படிப்பை முடிக்க வேண்டும். ஆனால் உண்மையை சொல்ல வேண்டுமென்றால், புத்தகம் பக்கம் திரும்புவதற்கே நேரம் கிடைக்கவில்லை. ஆனால் தேர்வுகள் நெருங்கிவிட்டது என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவுடன் இள வயது புகைப்படத்தையும் ஸ்ரேயாஸ் ஐயர் இணைத்துள்ளார். இதனை பகிர்ந்து ரசிகர்கள் பலரும் வாழ்த்தி வருகின்றனர்.

மும்பையை சேர்ந்த ஸ்ரேயாஸ் ஐயர் சிறு வயது முதலே கிரிக்கெட்டில் இருந்து வருகிறார். மும்பை ஸ்ட்ரீட் கிரிக்கெட் தொடங்கி பிரத்யே பயிற்சியாளர் வரை ஸ்ரேயாஸ் ஐயர் தீவிர பயிற்சி மேற்கொண்டு வந்தார். அதேபோல் சுனில் கவாஸ்கர், சச்சின் டெண்டுல்கர், ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ் என்ற மும்பை ஜாம்பவான்கள் பட்டியலில் ஸ்ரேயாஸ் ஐயரும் இணைவார் என்று பார்க்கப்படுகிறது.

ஆர்சிபி வீரர்களை அவமானப்படுத்திய சன்ரைசர்ஸ் வீரர்.. கப் ஜெயிச்சா தான் கொண்டாட்டம்.. ஓவர் ஆட்டம்ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வ...
25/05/2024

ஆர்சிபி வீரர்களை அவமானப்படுத்திய சன்ரைசர்ஸ் வீரர்.. கப் ஜெயிச்சா தான் கொண்டாட்டம்.. ஓவர் ஆட்டம்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தி 2024 ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி. அதன் பின் ஆட்டநாயகன் விருது வென்ற அந்த அணியின் ஆல் - ரவுண்டர் ஷாபாஸ் அஹ்மத் பேசினார்.

அப்போது தாங்கள் இந்த போட்டியில் வெற்றி பெற்றதை கொண்டாடப் போவதில்லை எனவும், இறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற பின்னரே கொண்டாடுவோம் எனவும் கூறினார்.
அவர் மறைமுகமாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை தாக்கி பேசியதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

முன்னதாக லீக் சுற்றின் முடிவில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி இருந்தது. முன்பு பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற வாய்ப்பே இல்லை என்ற நிலையில் இருந்தது பெங்களூரு அணி. ஆனால், தொடர்ந்து ஆறு போட்டிகளில் வென்று பிளே ஆஃப் சுற்றுக்கு அந்த அணி முன்னேறியது.

அதன் காரணமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தியதை ஐபிஎல் கோப்பை வென்றது போல அந்த அணியின் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் கொண்டாடினர். அது எல்லை மீறிய கொண்டாட்டமாக இருந்தது. அதன் பின் பிளே ஆஃப் சுற்றில் எலிமினேட்டர் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் பெங்களூரு அணி தோல்வி அடைந்து தொடரில் இருந்தே வெளியேறியது.

அதனால் அந்த அணியின் முந்தைய வெற்றிக் கொண்டாட்டங்கள் எல்லாம் கேலிக்குரியவையாக மாறின. பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவது முக்கியமல்ல, கோப்பை வெல்வது தான் முக்கியம் என அந்த அணிக்கு அனைவரும் பாடம் எடுக்கத் துவங்கினர்.

இந்த நிலையில் தான் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்திய பின் பேசிய ஷாபாஸ் அஹ்மத் தாங்கள் கோப்பை வென்ற உடன் தான் கொண்டாடுவோம் என கூறினார். இந்தப் போட்டியில் சன்ரைசர்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்து 175 ரன்கள் குவித்தது. அடுத்த பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சுழற் பந்துவீச்சாளர்கள் ஷாபாஸ் அஹ்மத் மற்றும் அபிஷேக் சர்மாவை சந்திக்க முடியாமல் திணறி விக்கெட்டுகளை இழந்து 20 ஓவர்களில் 139 ரன்கள் மட்டுமே எடுத்தது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஐபிஎல் இறுதி போட்டிக்கு முன்னேறியது.

ஏலத்தில் காவ்யா மாறனை பார்த்து கைகொட்டி சிரித்த அம்பானி, கோயங்கா.. ஆனா இன்று நடந்ததே வேற!2024 ஐபிஎல் ஏலத்தின் போது சன்ரை...
25/05/2024

ஏலத்தில் காவ்யா மாறனை பார்த்து கைகொட்டி சிரித்த அம்பானி, கோயங்கா.. ஆனா இன்று நடந்ததே வேற!

2024 ஐபிஎல் ஏலத்தின் போது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் உரிமையாளர் காவ்யா மாறன் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ்-ஐ 20.50 கோடி கொடுத்து வாங்கினார். அப்போது அம்பானி, கோயங்கா உள்ளிட்ட பிற அணிகளின் உரிமையாளர்கள் அவரை ஏளனம் செய்தனர். அது குறித்த வீடியோக்களம் அப்போது சமூக வலைதளங்களில் பரவியது.

ஆனால், இன்று அவரை ஏளனம் செய்த அணிகள் எல்லாம் பிளே ஆஃப் சுற்றுக்கு கூட தகுதி பெறவில்லை. ஆனால் பாட் கம்மின்ஸ் தலைமையில் ஆடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 2024 ஐபிஎல் இறுதிப்போட்டி வரை முன்னேறி உள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஐபிஎல் தொடரின் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தை மட்டுமே பெற்று வந்தது. இந்த நிலையில் 2024 ஐபிஎல் ஏலத்தில் அந்த அணி ஒரு அதிரடி முடிவை எடுத்தது.

அதன்படி சிறந்த கேப்டன் வேண்டும் என முடிவு செய்து 2023 ஒருநாள் போட்டி உலக கோப்பையை வென்ற ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ்-ஐ வாங்க முடிவு செய்தது. ஆனால் இதில் ஒரு சிக்கலும் இருந்தது. பாட் கம்மின்ஸ் சராசரியான டி20 வேகப் பந்துவீச்சாளர் ஆவார். அந்த காரணத்தினாலேயே அவரை எந்த அணியும் பெரிதாக கண்டு கொள்ளவில்லை.

இந்த நிலையில் 2024 ஐபிஎல் தொடருக்கான ஏலத்தின் போது வேகப் பந்துவீச்சாளர் வேண்டும் என்ற நிலையில் இருந்த மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய அணிகள் சுமார் 7.60 கோடி வரை ஏலத்தில் விலை கேட்டன. அதற்கு மேல் பாட் கம்மின்ஸ்-க்கு விலை கொடுத்து வாங்குவது வீண் என நினைத்த அந்த அணி, அதன் பின் ஏலம் கேட்கவில்லை.

பின்னர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் முட்டி மோதின. காவ்யா மாறன் இடைவிடாமல் விலை கேட்டு கம்மின்ஸ்-ஐ வாங்குவதில் குறியாக இருந்தார். அதன் முடிவில் 20.50 கோடி ரூபாய் கொடுத்து கம்மின்ஸ்-ஐ வாங்கினார் காவ்யா மாறன். அப்போது அவர் துள்ளிக் குதித்தார். ஆனால், அருகில் இருந்த லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்-இன் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா, காவ்யா மாறன் எடுத்த முடிவைக் கண்டு சிரித்தார்.

மறுபுறம் மும்பை இந்தியன்ஸ் அணியின் உரிமையாளர்களான அம்பானி குடும்பத்தினர் பாட் கம்மின்ஸ்-க்காக ஆர்சிபி-யுடன் காவ்யா மாறன் போட்டி போட்டு ஏலத்தில் 20.50 கோடி வரை விலை கேட்டதை பார்த்து சிரித்தார்கள். அப்போது பாட் கம்மின்ஸ் ஐபிஎல் வரலாற்றில் மிக அதிக விலை கொடுத்து வாங்கப்பட்ட வீரராக இருந்தார். அடுத்த சில மணி நேரங்களில் மிட்செல் ஸ்டார்க் அந்த சாதனையை முறியடித்தாலும் கூட காவ்யா மாறன் கொடுத்த விலை அதிகம் என கடும் விமர்சனங்கள் எழுந்தன.

ஆனால், அவரை வெறும் வேகப் பந்துவீச்சாளராக மட்டும் பார்க்காத சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் உரிமையாளர் காவ்யா மாறன், அவரை ஒரு உலகக் கோப்பை வென்ற கேப்டனாக பார்த்தார். உலகின் சிறந்த அணிகளில் ஒன்றான ஆஸ்திரேலியாவை வழி நடத்தும் அனுபவம் கொண்ட ஒரு கேப்டனாக பார்த்தார். அதன் காரணமாகவே அவரை சன்ரைசர்ஸ் அணிக்கு அழைத்து வந்தார். தற்போது பாட் கம்மின்ஸ் அந்த அணியை 2024 ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

கடந்த மூன்று ஆண்டுகளாக புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் இருந்த சன்ரைசர்ஸ் அணி தற்போது இறுதிப் போட்டிக்கு முன்னேறியது மிகப்பெரும் சாதனையாகும். அந்த வகையில் காவ்யா மாறன் தான் எடுத்த முடிவு மிகச் சரியானது என நிரூபித்து இருக்கிறார்.

SRH vs RR போட்டியில் சிஎஸ்கே ரசிகர்கள் செய்த செயல்.. அரண்டு போன ஹைதராபாத் அணி.. என்ன நடந்தது?சென்னை சேப்பாக்கத்தில் நடைப...
25/05/2024

SRH vs RR போட்டியில் சிஎஸ்கே ரசிகர்கள் செய்த செயல்.. அரண்டு போன ஹைதராபாத் அணி.. என்ன நடந்தது?

சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையே ஆன பிளே ஆஃப் சுற்றின் இரண்டாவது தகுதிப் போட்டியின் போது சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் கோஷம் எழுப்பினர்.

இந்தப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வெற்றிக்கு அருகே இருந்த போது உணர்ச்சிவசப்பட்ட சிஎஸ்கே ரசிகர்கள் "சிஎஸ்கே, சிஎஸ்கே" என கோஷமிட்டனர். 2024 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் லீக் சுற்றுடன் வெளியேறியது. ஆனால் பிளே ஆஃப் சுற்றின் இரண்டாவது தகுதிப் போட்டி மற்றும் இறுதிப்போட்டி சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் வகையில் ஐபிஎல் அட்டவணை அறிவிக்கப்பட்டு இருந்தது.

சிஎஸ்கே அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என நினைத்த சிஎஸ்கே ரசிகர்கள் பலரும், இரண்டாவது தகுதிப் போட்டிக்கு டிக்கெட் வாங்கி இருந்தனர். ஆனால், சிஎஸ்கே அணி லீக் சுற்றுடன் வெளியேறியது. இந்த நிலையில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதிய இரண்டாவது தகுதிப்போட்டியை காண டிக்கெட் வாங்கி இருந்த சிஎஸ்கே ரசிகர்கள் மைதானத்திற்கு வந்திருந்தனர்.

இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 175 ரன்கள் எடுத்தது. அடுத்து சேஸிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 139 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. ராஜஸ்தான் அணியின் தோல்வி 19ஓவர்களிலேயே முடிவானது. அப்போது மைதானத்தில் இருந்த சிஎஸ்கே ரசிகர்கள் திடீரென ஒன்றாக சேர்ந்து "சிஎஸ்கே, சிஎஸ்கே" என கோஷமிட்டனர்.

அதைக் கண்டு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் ரசிகர்கள் அரண்டு போனார்கள். தங்கள் அணியின் வெற்றியை கொண்டாட வேண்டிய நேரத்தில் சிஎஸ்கே என கோஷம் எழுப்பியதால் அவர்கள் என்ன செய்வது என தெரியாமல் இருந்தார்கள். சில நிமிடங்களில் அந்த கோஷம் அடங்கியது. அதன் பின் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வெற்றி பெற்றது.

அதை அந்த அணியின் வீரர்களும் ரசிகர்களும் கொண்டாடினர். என்னதான் வேறு ஒரு அணி வெற்றி பெற்றிருந்தாலும், சேப்பாக்கத்தில் நடக்கும் போட்டி என்பதால் சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் அந்த உரிமையில் சிஎஸ்கே என கோஷமிட்டது ஐபிஎல் அரங்கில் வியப்பை ஏற்படுத்தியது.

டி20 உலககோப்பை - யுவராஜ் சிங் தேர்வு செய்த இந்தியாவின் பிளேயிங் XI.. 2 ஸ்டார் வீரர்கள் நீக்கம்2024 ஆம் ஆண்டு டி20 உலக கோ...
22/05/2024

டி20 உலககோப்பை - யுவராஜ் சிங் தேர்வு செய்த இந்தியாவின் பிளேயிங் XI.. 2 ஸ்டார் வீரர்கள் நீக்கம்

2024 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்திய நேரப்படி வரும் ஜூன் இரண்டாம் தேதி தொடங்குகிறது இந்த தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருக்கிறது. முதல் ஆட்டத்தை இந்திய நேரப்படி ஜூன் 5-ம் தேதி அயர்லாந்துடன் தொடரை ஆரம்பிக்கிறது.

இந்த டி20 உலக கோப்பை தொடரின் சிறப்பு தூதராக யுவராஜ் சிங்கை ஐசிசி நியமனம் செய்துள்ளது. இந்த நிலையில் இந்திய அணி 2007 ஆம் ஆண்டுக்கு பிறகு டி20 உலக கோப்பையை வெல்லவில்லை.

இந்த சூழலில் இந்தியா இந்த கோப்பையை வெல்ல வேண்டும் என்று வாழ்த்து தெரிவித்துள்ள யுவராஜ் சிங், எந்த மாதிரி பிளேயிங் லெவனை தேர்வு செய்ய வேண்டும் என்பது குறித்தும் கூறி இருக்கிறார். அதனை தற்போது பார்க்கலாம். என்னைக் கேட்டால் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மாவும், ஜெயிஸ்வாலும், கண்டிப்பாக இறங்க வேண்டும். விராட் கோலி அவருடைய வாழ்க்கை முழுவதும் நம்பர் மூன்றாவது வீரராக தான் இருக்கிறார்.

அதுதான் அவருடைய இடம் அதை மாற்றக்கூடாது. நான்காம் இடத்தில் சூரியகுமார் இருக்கின்றார்
இதனை அடுத்து நடு வரிசையில் இரண்டு பெரிய வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். வலது கை பேட்ஸ்மேன், இடது கை பேட்ஸ்மேன் என இருப்பது போல் பேட்டிங் வரிசையை அமைக்க வேண்டும். இப்படி இருக்கும் பட்சத்தில் பௌலர்கள் பந்து வீச கடினமாக இருக்கும். விக்கெட் கீப்பராக ரிஷப் பண்டை சேர்க்க வேண்டும். சாம்சன் நல்ல பார்மில் இருந்தாலும், பண்ட் இடது கை பேட்ஸ்மேன் என்பதால் அவருக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்.

மேலும் இந்தியாவுக்கு மிக முக்கியமான ஆட்டங்களை வென்று தரக்கூடிய திறன் ரிஷப் பண்டிடம் இருக்கின்றது. டெஸ்ட் போட்டிகளை போல் ரிஷப் பண்ட்க்கு மிகப்பெரிய போட்டிகளில் கூட மேட்ச் வின்னர் ஆக மாறக்கூடிய திறமை இருக்கின்றது. இதேபோன்று ஆல்ரவுண்டராக ஹர்திக் பாண்டியாவுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும்.

ஐபிஎல் தொடரை பார்த்தால் ஹர்திக் சரியாக விளையாடவில்லை. ஆனால் இந்தியாவுக்காக அவர் விளையாடிய ஆட்டங்களை பார்த்தால் நிச்சயம் அவர் நன்றாகவே செயல்பட்டு இருக்கிறார். அவர் அணியில் இருப்பது மிகவும் முக்கியமாகும். ஹர்திக் பாண்டியாவின் பேட்டிங்கை விட பவுலிங் தான் இந்திய அணிக்கு மிகவும் முக்கியம். அவருக்கு இந்த உலகக் கோப்பை மிகவும் ஸ்பெஷலாக இருக்கும் என நம்புகிறேன்.

சிவம் துபே அணியில் தேர்வு செய்யப்பட்டு இருப்பதே அவருக்கு மிகப்பெரிய நம்பிக்கையை கொடுக்கும். இல்லை என்றாலும் அணியில் இருப்பதே சிறந்ததாக நான் கருதுகின்றேன். எனினும் அவருக்கு ஓரிரு போட்டிகளில் வாய்ப்பு வழங்கினால், நிச்சயம் அவர்கள் பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்துவார். கில் போன்ற வீரர்கள் பிளேயிங் லெவனில் இடம் பெறாதது மிகவும் துரதிர்ஷ்டவசமான விஷயமாகும். இதேபோன்று பும்ரா, சிராஜ் ஆர்ஸ்தீப் சிங் ஆகியோர் இருக்கிறார்கள். இந்த மூன்று வீரர்களுமே திறமை வாய்ந்தவர்களாக இருந்தாலும், இந்த தொடரில் சிறப்பாக செயல்பட வேண்டியது முக்கியமாகும்.

Address

Chennai
600###

Alerts

Be the first to know and let us send you an email when News4 Tamil-Online News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to News4 Tamil-Online News:

Share