Employment News - வேலைவாய்ப்பு செய்திகள்

  • Home
  • India
  • Chennai
  • Employment News - வேலைவாய்ப்பு செய்திகள்

Employment News - வேலைவாய்ப்பு செய்திகள் இந்த தளம் அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்பு செய்திகளை வெளியிடும் ..
(1)

பூவிருந்வல்லி உள்ள மாநகர E மின்சார பேருந்தில் பணியாற்ற ,கண்டக்டர்கள் CONDUCTOR தேவைவயது வரம்பு 20 முதல் 50 வரை ए 6 (Imme...
05/11/2025

பூவிருந்வல்லி உள்ள மாநகர E மின்சார பேருந்தில் பணியாற்ற ,கண்டக்டர்கள் CONDUCTOR தேவை

வயது வரம்பு 20 முதல் 50 வரை ए 6 (Immediate Joining)

இல்வச தங்கும் வசதி

கண்டக்டர் லைசன்ஸ் (இல்லாதவர்களுக்கு லைசன்ஸ்)

பெற வழிகாட்டுதல் வழங்கப்படும் .
அசல் கல்வி சான்றிதழ், ஆதார் கார்டு, பான் கார்டு உடன்

சம்பளம்:
(26 நாள் பணிக்கு)

ரூ. 26,745

PF,இதர மாதம்

பங்களிப்புகள் உட்பட

First Aid Certificate & Conductor Licence
நேர்முகத்தேர்வுக்கு அணுகவும்

ஆண் / பெண் காலியிடங்கள்:

ஓரு மாதம் சம்பளம் 26745 எப்படி போதுமானதாக இருக்கும் இன்னும் சம்பளம் உயர்த்தி கொடுங்கள். ஆட்கள் மகிழ்ச்சியாக வேலைக்கு வருவார்கள்.

திருப்பூர் - மூணாறு இரு மாநில பயணிகள் வசதிக்காக திருப்பூர் மூணாறு இடையே பஸ் போக்குவரத்து இயங்குகிறது.திருப்பூர் மத்திய ப...
09/10/2025

திருப்பூர் - மூணாறு

இரு மாநில பயணிகள் வசதிக்காக திருப்பூர் மூணாறு இடையே பஸ் போக்குவரத்து இயங்குகிறது.

திருப்பூர் மத்திய பஸ் ஸ்டாண்டில் இருந்து மதி யம், 2:30 மணிக்கு பஸ் புறப்படுகிறது. மாலை, 4:15 க்கு பல்லடம் வழி யாக உடுமலை செல்லும் பஸ், சின்னாறு, மறையூர் வழியாக பயணித்து, இரவு 9:00க்கு மூணாறு சென்று சேருகிறது.

மூணாறில் காலை 6:30 மணிக்கு புறப்பட்டு, காலை, 10:30க்கு உடு மலை வந்து, மதியம், 2:30 மணிக்கு திருப்பூர் வந்தடைகிறது. திருப்பூரில் இருந்து மூணாறு பயணிக்க பயணி ஒருவருக்கு கட் டணம், 125 ரூபாய்.

திருப்பூரில் இருந்து நேரடியாக மூணார்
வரை பஸ் இல்லை. உடுமலை சென்று அங்கி ருந்து பஸ்களில் செல்ல வேண்டிய நிலை இருந்தது. தற்போது இரு மாநில பயணிகள் வசதிக் காக திருப்பூரில் நேரடி பஸ் இயக்கம் துவங்கப் பட்டு இயங்குகிறது. இதனால் பொது மக்கள் ரொம்ப சந்தோஷமாக மகிழ்ச்சியாக இருந்தார்கள். இந்த பேருந்த தான் மக்கள் ரொம்ப நாள் எதிர்பார்த்து இருந்தார்கள்.
நன்றி🚛🌹🚛

♨️ பள்ளிக்கல்வி - தற்காலிக பணியிடங்கள் - 10 ஆண்டுகளுக்கு மேலாக தொடர் நீட்டிப்பு ஆணை பெற்று வரும் தற்காலிக பணியிடங்கள் தொ...
09/10/2025

♨️ பள்ளிக்கல்வி - தற்காலிக பணியிடங்கள் - 10 ஆண்டுகளுக்கு மேலாக தொடர் நீட்டிப்பு ஆணை பெற்று வரும் தற்காலிக பணியிடங்கள் தொடர்வதன் அவசியத்தை ஆராய குழு அமைக்கப்பட்டது - பள்ளிக் கல்வி இயக்ககத்தின் கீழ் உள்ள ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத 47013 பணியிடங்களை நிரந்தர பணியிடங்களாகவும். 5418 பணியிடங்களில் பணிபுரிபவர்கள் ஓய்வு பெறும் போது நாளடைவில் ஒழிவடையும் பணியிடங்களாகவும் (Vanishing post). 145 பணியிடங்களுக்கு 31.12.2028 வரை தொடர் நீட்டிப்பு வழங்கி ஆணை வெளியிடப்பட்டது - அரசாணை (நிலை) எண்.19, பள்ளிக் கல்வித்[பக5(1)]துறை. நாள் 27.01.2025 க்கு திருத்தங்கள் மேற்கொள்ளுதல் - ஆணை வெளியிடப்படுகிறது.

♨️ இந்தியன் வங்கியில் வேலைவாய்ப்பு
09/10/2025

♨️ இந்தியன் வங்கியில் வேலைவாய்ப்பு

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே 24 மணி நேரத்திற்கு 300 ரூபாயில் ஏசி Dormitory-யில் தங்கிக் கொள்ளலாம் ✅ 07-10-2025 (...
08/10/2025

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே 24 மணி நேரத்திற்கு 300 ரூபாயில் ஏசி Dormitory-யில் தங்கிக் கொள்ளலாம் ✅ 07-10-2025 (பதிவு செய்த தேதி)

நான் இதில் தங்கினேன் 👍🏾 அடையாள அட்டை கட்டாயம் ✅ 10 பேர் தங்கும் ஒரு அறையில் ஒரு கழிப்பறை மட்டுமே உள்ளது

சென்ட்ரல் ரயில்வே dormitory-யில் இடம் இல்லை என்றால் இங்கே வந்து தங்கிக் கொள்ளுங்கள் நண்பர்களே 👍🏾

ஏசி வசதி உள்ளது ✅ ஒரு பெட்டுக்கு தனி மின்விசிறி மற்றும் லாக்கர் வசதி உள்ளது ✅ போர்வையும் தருகிறார்கள் ✅ சார்ஜிங் போடும் வசதியும் உள்ளது ✅

ஆனால் உங்கள் உடைமைகள் திருடுப் போனால் நிர்வாகம் பொறுப்பல்ல ❌ என எழுதி சுவற்றில் ஒட்டி வைத்து உள்ளார்கள்

24 மணி நேரத்திற்கு சென்னை சென்ட்ரல் அருகே 300 ரூபாய்க்கு இது பரவா இல்லை நண்பர்களே 👍🏾

Location:walltex road,Park Town,Chennai 🌍…சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து நடந்து செல்லும் தூரம் தான் நண்பர்களே ( walltex சாலையில் வலது புறம் உள்ளது)






08/10/2025

உரிமையாளரிடம் அனுமதி பெறாமல் அவரது கடையில் செல்போன் சார்ஜ் போட்டு விட்டாராம். அதனால் கடைக்காரர் எடுத்து மறைத்து வைத்து விட்டார், இதில் யார் செய்தது தவறு?

08/10/2025
தமிழ்நாட்டு முதலமைச்சர்.திரு: மு.க.ஸ்டாலின் அவர்களை. மனதார பாராட்டுகிறேன். கோவை விஞ்ஞானி. திரு.G.D Naidu Memorial Flay o...
08/10/2025

தமிழ்நாட்டு முதலமைச்சர்.திரு: மு.க.ஸ்டாலின் அவர்களை. மனதார பாராட்டுகிறேன். கோவை விஞ்ஞானி. திரு.G.D Naidu Memorial Flay over Bridge....

கீழே இருப்பது ஒரு வாடகை கார் ஓட்டுநர் பதிவு, பெரும்பாலான ஹோட்டல் அல்லது லாட்ஜ்களில் கவனித்து உள்ளேன் நமக்கு வாடிக்கையாளர...
08/10/2025

கீழே இருப்பது ஒரு வாடகை கார் ஓட்டுநர் பதிவு, பெரும்பாலான ஹோட்டல் அல்லது லாட்ஜ்களில் கவனித்து உள்ளேன் நமக்கு வாடிக்கையாளர் வருவதே அவர்களால் தான் என்று புரிந்துகொள்ளாமல் டிரைவர் என்றாலே இரண்டாந்தரமாக தான் நடத்துகிறார்கள். நம்மள பாதுகாப்பா கூட்டிட்டு போற அவங்கள நாம தான் பாத்துக்கனும். கெஸ்ட் அவங்க டேபிள்ல இருந்தே சாருக்கு என்ன வேணும்னு கேட்டு கொடுங்கன்னு முதல்லயே சொல்லியிருந்தா இந்த மாதிரி அவமானங்கள் நிகழாது.

எல்லோருக்கும் வணக்கம்.
நான் வாடகை கார் உரிமையாளர் +.ஓட்டுநர்.
சில தினங்களுக்கு முன் ஒரு ஃபேமிலி உடன் கோவை சென்றேன்.
வழியில் அவர்கள் சாப்பிடலாம் என்று சொன்னதால் இரவு சாப்பாட்டுக்கு அவிநாசியில் புதிதாக திறந்து இருக்கும் இந்த சிவகண்ணன் ஹோட்டலுக்கு சென்றோம். இது அந்த யூ டியூபர் சிவகண்ணன் ஹோட்டல் ஆகும்.
சரி , புதியதாக திறந்து இருக்கிறார்கள். என்று நான்தான் அவர்களிடம் சொல்லி இந்த கடைக்கு அழைத்து சென்றேன்.
ஆனால், கடைகாரண் சரியான பாடம் கற்பித்து விட்டான்.

முதலில் நான் அழைத்து சென்றவர்கள் ஒரு டேபிளில் அமர, நான் இரண்டு மூன்று டேபிள் தள்ளி அமர்ந்தேன்.
என்னிடம் வந்த சர்வர், என்னை என்ன வேண்டும் என்று கேட்க, ஒரு எக் ரைஸ் மட்டும், என்று கூறிவிட்டு, பில்லை அவர்களிடம் கொடுத்து விடுங்கள் என யதார்த்தமாக கூறினேன்.
அவன், அவர்கள் அருகில் சென்று விசாரித்து இருக்கலாம்., ஆனால் என் பக்கத்திலேயே நின்று கொண்டு, சார் சார் என சத்தமாக அழைத்தான். அவர்கள் திரும்பி பார்க்க, இவர் உங்களுடன் வந்து இருக்கிறாரா ? என விசாரித்தான். அப்போதுதான் நான் கவனித்தேன் , ஒட்டு மொத்த ஹோட்டலும் என்னைத்தான் பார்த்து கொண்டு இருக்கிறது என்பதை.
ஒரு மாதிரி சங்கடம் ஆகிவிட்டது.
சரி என அமைதியாக இருந்தேன்.

பத்து நிமிடம் ஆகியும் ஆர்டர் வரவில்லை. கேட்டேன். இதோ கொண்டு வருகிறேன் என சொல்லி விட்டு சென்று விட்டான். கொஞ்ச நேரத்தில் எக் ரைஸ் வந்தது. ஒரு ஸ்பூன் கூட இல்லை.
ஸ்பூன் கேட்டு வாங்கி , சாப்பிட ஆரம்பிக்க , சார் , சாஸ் இல்லை.
கொஞ்சம் கொடுங்கள் என கேட்டேன். அவன் அவனுக்கு help பண்ணும் ஒரு சிறுவனிடம், இந்த டேபிளுக்கு சாஸ் கொண்டு வந்து கொடு, என அலட்சியமாக கூறினான்.
நாம் நா*யை ஏவினால், அது அதன் வாலை ஏவுகிறது என்ற பழமொழிதான் நினைவுக்கு வந்தது.

அதற்கும் மேல சாப்பிட விருப்பம் இல்லை. இருப்பினும், வாடிக்கையாளர்களை அழைத்து வந்ததே நாம்தான் நாமே அவசரப்படக்கூடாது என்று, பாதி அளவு.சாப்பிட்டு விட்டு எழுந்து விட்டேன். அப்போதுதான் அந்த சிறுவன் சாஸ் கொண்டு வந்தான்.
அதையும் புறம் தள்ளி, கை கழுவி விட்டு வெளியே வந்து விட்டேன்.

இதில், எனக்கு என்ன கோபம் என்றால், டிரைவர்கள் என்றால் அவ்வளவு இளக்காரமா..? என்பதே.

மேலும் எங்களுக்கு ஒன்றும் இலவசமாக அதுவும் தரவில்லையே. ஹோட்டல்காரன் கொடுக்கும் சாப்பாட்டுக்கு , நானோ அல்லது என் வாடிக்கையாளரோ பணம் கொடுத்து விடுகிறோம் அல்லவா..?
பின் ஏன் இந்த அலட்சியம்..? இந்த 100 அல்லது 120 ரூபாய்க்கு கூட வக்கில்லாமலா நாங்கள் இருக்கிறோம்..?

மேலும், வெளியூரில் இருந்து வரும் வாடிக்கையாளர்களை அழைத்து செல்வதே நாங்கள்தான். வாடிக்கையாளர்கள் ஒரு ஹோட்டலை சொன்னால் கூட, அந்த ஹோட்டல் முன்பு போல இல்லை சார் என ஒரு வார்த்தை சொன்னால் போதும். வாடிக்கையாளர் மனம் மாறிவிடும். மேலும், நமக்கு எல்லா கடைகளும் ஒன்றுதான். யாரும் இலவசமாக கொடுக்க போவதில்லை. அதனால் தரமான மற்றும் சரியான ஹோட்டலுக்கு
வாடிக்கையாளர்களை அழைத்து செல்ல வேண்டும் என்பதே எங்கள் இலக்கு.

இப்படி அழைத்து வரும் எங்களையே இப்படி அலட்சியமாக நடத்துவது சரியா..?
அதனால் , நண்பர்களே, இப்படிப்பட்ட
பாடாவதி பயலுக நடத்தும் ஹோட்டலுக்கு செல்ல வேண்டாம். தவிர்த்து விடுங்கள்.

நன்றி.

முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகளின் தேதியை மாற்றிக் கொள்ளும் வசதியை ரயில்வே அறிமுகம் செய்ய உள்ளதுவரும் *ஜனவரி 1 முதல்*...
08/10/2025

முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகளின் தேதியை மாற்றிக் கொள்ளும் வசதியை ரயில்வே அறிமுகம் செய்ய உள்ளது

வரும் *ஜனவரி 1 முதல்* ஆன்லைனில் எவ்வித கூடுதல் கட்டணமும் இன்றி மாற்ற முடியும்.

எனினும், மாற்றப்படும் தேதிக்கான டிக்கெட் உறுதியாவது, காலியிடங்களைப் பொறுத்ததே என விளக்கம்

08/10/2025

காரைக்குடி சிக்கன்.......

சிக்கன் - 1/2 கிலோ

வெங்காயம் (பெரியது) - 1

தக்காளி - 2

கறிவேப்பிலை - 2 கொத்து

சோம்பு - 1/4 தேக்கரண்டி (தாளிக்க)

சாம்பார் பொடி அல்லது மிளகாய் தனியா தூள் கலவை - 2 தேக்கரண்டி

பச்சை மிளகாய் - 2 அல்லது மிளகு (விரும்பினால்) - 2 தேக்கரண்டி

இஞ்சி, பூண்டு விழுது - 2 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - சிறிது

எண்ணெய் - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

அரைக்க:

மிளகு - 1 தேக்கரண்டி

சீரகம் - 1 தேக்கரண்டி

காய்ந்த மிளகாய் - 6

தனியா - 4 தேக்கரண்டி

பட்டை - ஒரு துண்டு

கிராம்பு - 5

ஏலக்காய் - 4

மராத்தி மொக்கு - சிறிது

ஜாதிக்காய் - கால் பாகம்

கறிவேப்பிலை - 8 கொத்து

தேங்காய் துருவல் - 4 மேசைக்கரண்டி

சிக்கன் துண்டுகளை சுத்தம் செய்து மஞ்சள் தூள், சிறிது உப்பு மற்றும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பிரட்டி வைக்கவும்......

கடாயில் சிறிது எண்ணெய் விட்டு காய்ந்ததும் அரைக்க கொடுத்துள்ளவற்றில் தேங்காய் துருவல், கறிவேப்பிலை தவிர மற்ற அனைத்தையும் சேர்த்து லேசாக சிவக்க வறுக்கவும்......

அதன் பிறகு கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்......

கடைசியாக தேங்காய் துருவல் சேர்த்து லேசாக வதக்கி எடுத்து ஆறவிடவும்......

ஆறியதும் முதலில் பொடியாக அரைத்து பின்பு தேவைக்கேற்ப நீர் விட்டு நைசாக அரைத்துக் எடுத்துக் கொள்ளவும்......

கடாயில் எண்ணெய் விட்டு சோம்பு தாளித்து, சிறிது கறிவேப்பிலை மற்றும் வெங்காயம் சேர்த்து வதக்கவும். (பச்சை மிளகாய் சேர்க்க விரும்பினால் சேர்க்கலாம்).....

அதனுடன் பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.....

தக்காளி குழைய வதங்கியதும் சாம்பார் பொடி அல்லது மிளகாய் மற்றும் தனியா தூள் சேர்த்து பிரட்டி எண்ணெய் பிரிய வதக்கவும்.......

தூள் வாசம் போனதும் ஊற வைத்த சிக்கன் துண்டுகளைச் சேர்த்து பிரட்டி மூடி வேகவிடவும். (நீர் சேர்க்கத் தேவையில்லை. சிக்கனிலிருந்து வரும் நீர் மசாலாவோடு கலந்து மீண்டும் சிக்கன் அதை முழுவதுமாக இழுத்துவிடும். இவ்வாறு செய்வதால் சிக்கனுடன் மசாலா சேர்ந்து நன்றாக ஊறி இருக்கும்).......

சிக்கன் நன்றாக வெந்ததும் அரைத்த மசாலா கலவையை ஊற்றி கலந்து கொதிக்கவிடவும்.....

பச்சை வாசம் போகக் கொதித்து எண்ணெய் பிரியும் போது சிறிது கறிவேப்பிலை மற்றும் மிளகு தூள் (விரும்பினால்) சேர்த்து கலந்து 2 நிமிடங்கள் கழித்து இறக்கி பரிமாறவும்......

♨️ தமிழ்நாடு  #அரசு_வேலைவாய்ப்பு - ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறைபணி : ஊராட்சி செயலாளர்மொத்த பணியிடம் : 1000+கல்விதகு...
08/10/2025

♨️ தமிழ்நாடு #அரசு_வேலைவாய்ப்பு - ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை

பணி : ஊராட்சி செயலாளர்

மொத்த பணியிடம் : 1000+

கல்விதகுதி : (8th வரை தமிழ்வழி கல்வி) 10th தேர்ச்சி

வயதுவரம்பு : 18 முதல் 37 வரை
முன்னுரிமை உள்ளவர்களுக்கு அரசு விதிகள் படி வயது வரம்பு சலுகை உண்டு.

விண்ணப்பிக்கும் வலைத்தளம் : www.tnrd.tn.gov.in

விண்ணப்பிக்க கடைசி நாள் : 09.11.2025

Address

Velacherry
Chennai
600042

Website

Alerts

Be the first to know and let us send you an email when Employment News - வேலைவாய்ப்பு செய்திகள் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share