SDTU சென்னை மாநகர மண்டலம்

  • Home
  • India
  • Chennai
  • SDTU சென்னை மாநகர மண்டலம்

SDTU சென்னை மாநகர மண்டலம் உழைப்போம்!! ஒன்றிணைவோம்!!
உரிமைகளை வென்றெடுப்போம்!!

SDTU தொழிற்சங்கத்தின் சென்னை மண்டல கூட்டம் ஞாயிற்றுக்கிழமை 07-09-2025 காலை 11:30 மணி அளவில் மாநிலத் தலைமை அலுவலகத்தில் ம...
08/09/2025

SDTU தொழிற்சங்கத்தின் சென்னை மண்டல கூட்டம் ஞாயிற்றுக்கிழமை 07-09-2025 காலை 11:30 மணி அளவில் மாநிலத் தலைமை அலுவலகத்தில் மண்டல பொறுப்பாளர் முஸம்மில் பாஷா தலைமையில் நடைபெற்றது.

மத்திய சென்னை மாவட்ட தலைவர் காதர் பாஷா வரவேற்புரை ஆற்றினார்.

சிறப்பாளர் அழைப்பாளராக
மாநிலச் செயலாளர் பூட்டோ சாகுல் அவர்கள் கலந்து கொண்டார்.

இந்தக் கூட்டத்தில்
வருட சந்தா, புதிய உறுப்பினர் சேர்த்தல், கிளை கட்டமைப்பு, நல வாரியம், ஏரியா நிர்வாகம் அமைத்தல் என பல தீர்மானங்கள் எடுக்கப்பட்டது.

இந்தக் கூட்டத்தில்
மத்திய சென்னை மாவட்ட செயலாளர் ஜாவித், மத்திய சென்னை மாவட்ட பொருளாளர் வெங்கட்,வடசென்னை கிழக்கு மாவட்ட தலைவர் ஹனிபா, வடசென்னை கிழக்கு மாவட்ட துணை செயலாளர் இஸ்மாயில், வடசென்னை மேற்கு மாவட்ட தலைவர் மூசா, சென்னை மேற்கு மாவட்ட தலைவர் சிந்தா, சென்னை மேற்கு மாவட்ட செயலாளர்
முகமது சாஹிப் ஆகியோர் கலந்து கொண்டனர்

தென் சென்னை தெற்கு மாவட்ட செயலாளர் சர்புதீன் நன்றி உரையாற்றினார்.

இவன்
சென்னை மண்டல ஊடகப்பிரிவு.

SDTU தொழிற்சங்கத்தின் சென்னை மண்டலத்துக்குட்பட்ட வடசென்னை கிழக்கு மாவட்டத்தின் மாவட்ட நிர்வாகம் மற்றும் கிளை நிர்வாகம் க...
08/09/2025

SDTU தொழிற்சங்கத்தின் சென்னை மண்டலத்துக்குட்பட்ட வடசென்னை கிழக்கு மாவட்டத்தின் மாவட்ட நிர்வாகம் மற்றும் கிளை நிர்வாகம் கலந்தாய்வுக் கூட்டம்
மாவட்ட செயலாளர் ஹுசைன் தலைமையில் நடைபெற்றது ‌.

இந்த கூட்டத்தில்
சிறப்பா அழைப்பாளராக
மாநில பொதுச் செயலாளர் ரவூப் நிஸ்தார், சென்னை மண்டலத்தின் பொறுப்பாளர் முஜமில் பாஷா , SDPI கட்சியின்மாவட்ட செயற்குழு உறுப்பினர் சற்குருதீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் கிளையின் கட்டமைப்பு , நல வாரியம், மாவட்டத்தின் வளர்ச்சி என பல தீர்மானங்கள் எடுக்கப்பட்டது

இந்த கூட்டத்தில் மாவட்ட பொருளாளர் சதாம்
மாவட்டத் துணைச் செயலாளர் இஸ்மாயில், மாவட்ட செயற்குழு உறுப்பினர் அமானுல்லா மற்றும் கிளையின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இவன்
வடசென்னை கிழக்கு மாவட்ட ஊடகப்பிரிவு ‌.

SDTU தொழிற்சங்கத்தின் சென்னை மண்டலத்தின் சார்பாக ஆர்டிஓ அவர்களை நேரில் சந்தித்து மனு கொடுக்கப்பட்டது. # # # # # # # # # ...
22/08/2025

SDTU தொழிற்சங்கத்தின் சென்னை மண்டலத்தின் சார்பாக ஆர்டிஓ அவர்களை நேரில் சந்தித்து மனு கொடுக்கப்பட்டது.

# # # # # # # # # # # # # # # # # # # #

20/08/2025 இன்று காலை 11 மணியளவில் சென்னை மண்டல பொறுப்பாளர் முஜமில் தலைமையில்
தாம்பரத்தில் ராபிடோ இருசக்கர வாகனத்தில் பயணியை அழைத்து செல்லும்போது கார் மோதி வாகன விபத்தில் இரண்டு நபர்களும் இறந்த நிகழ்வை அடுத்து இன்று வட்டார போக்குவரத்து அலுவலகம் சென்னை (வடகிழக்கு)திருமதி சாந்தி ஆர்டிஓ அவர்களை நேரில் சந்தித்து இதுபோன்று மேலும் விபத்துக்கள் நடக்காமல் இருக்க தடுக்க வேண்டியும் முறையற்று பயணிகளை ஏற்றும் ரேபிடோ உபர் ஓலா போன்ற நிறுவனங்களை தடை செய்ய கூறியும் சொந்த பயன்பாட்டிற்கு உபயோகப்படுத்தும் இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களை கண்டறிந்து அதனை சிறை பிடிக்கவும் வலியுறுத்தி இன்று மனு அளிக்கப்பட்டது.

இந்த நிகழ்விற்கு சிறப்பு அழைப்பாளராக மாநில செயலாளர் பூட்டோ சாகுல் அவர்கள் கலந்து கொண்டார்கள் .

மண்டல துணை பொறுப்பாளர் காஜாமைதீன் முன்னிலை வகித்தார்.

மேலும் இந்த நிகழ்வில் மத்திய சென்னை மாவட்ட தலைவர் காதர் பாஷா, மாவட்டச் செயலாளர் ஜாவித், மத்திய சென்னை மாவட்ட பொருளாளர் வெங்கட், மத்திய சென்னை மாவட்ட துணைச் செயலாளர் சரவணன்வடசென்னை மேற்கு மாவட்ட தலைவர் மூஸா மற்றும் கிளை நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

இவன்
சென்னை மண்டல ஊடகப்பிரிவு.

SDTU தொழிற்சங்கம் நிகழ்ச்சி நம் இந்திய தேசத்தின் 79 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு SDTU தொழிற்சங்கம் சென்னை மண்டலம் உட...
16/08/2025

SDTU தொழிற்சங்கம் நிகழ்ச்சி

நம் இந்திய தேசத்தின் 79 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு SDTU தொழிற்சங்கம் சென்னை மண்டலம் உட்பட்ட வடசென்னை கிழக்கு மாவட்டம் H1 காவல் நிலையம் அருகில் உள்ள ஆட்டோ நிறுத்தம் கிளையில் மாநிலச் செயலாளர் பூட்டோ சாகுல் அவர்களால் இந்திய தேசிய கொடி ஏற்றப்பட்டது .

இந்நிகழ்ச்சியை மாவட்ட தலைவர் ஹனீபா அவர்கள் சிறப்பாக தலைமையேற்று நடத்தினார் .

இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக தமிழ் மாநிலத் தலைவர் ஆசாத் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள் மற்றும் மண்டல பொறுப்பாளர் முஜமில்பாஷா, துணை பொறுப்பாளர் எஸ் எஸ் காஜா முஹிதீன் மற்றும் தொழிற்சங்கத்தின் நிர்வாகிகள் SDPI கட்சியின் மாவட்ட செயலாளர் அப்துல் ரகுமான் கிளை நிர்வாகிகள் உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இவன்
சென்னை மண்டல ஊடகப்பிரிவு

SDTU தொழிற்சங்கத்தின் மத்திய சென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட கோவிந்தப்பா ஆட்டோ நிறுத்தத்தில் நடைபெற்ற இந்திய தேசத்தின் 79வ...
16/08/2025

SDTU தொழிற்சங்கத்தின் மத்திய சென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட கோவிந்தப்பா ஆட்டோ நிறுத்தத்தில் நடைபெற்ற இந்திய தேசத்தின் 79வது சுதந்திரதின கொடியேற்ற நிகழ்ச்சி

மத்திய சென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட கோவிந்தப்பா ஆட்டோமேடித்த கிளையில் , இந்திய தேசத்தின் 79வது சுதந்திர தினக் கொடியேற்று நிகழ்ச்சி கிளைத் தலைவர் வெங்கடேசன் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக
சென்னை மண்டல பொறுப்பாளர் முஜமில் பாஷா கொடியை ஏற்றி மற்றும் சென்னை மண்டல துணை பொறுப்பாளர் காஜா மொய்தீன் , சென்னை மாநகராட்சியின் செயலாளர் முகமது யாசின்,மத்திய சென்னை மாவட்ட செயலாளர் ஜாவித் பாஷா, மத்திய சென்னை மாவட்ட பொருளாளர் வெங்கட் மற்றும் மாவட்ட துணைச் செயலாளர் சரவணன் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இந்நிகழ்வில் கிளை நிர்வாகிகள் உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

இவன்
சென்னை மண்டல ஊடகப்பிரிவு.

SDTU மாநில தலைமையகத்தில் நடைபெற்ற இந்திய தேசத்தின் 79வது சுதந்திரதின கொடியேற்ற நிகழ்ச்சி SDTU மாநிலத் தலைமையகத்தில், இந்...
16/08/2025

SDTU மாநில தலைமையகத்தில் நடைபெற்ற இந்திய தேசத்தின் 79வது சுதந்திரதின கொடியேற்ற நிகழ்ச்சி

SDTU மாநிலத் தலைமையகத்தில், இந்திய தேசத்தின் 79வது சுதந்திர தினக் கொடியேற்று நிகழ்ச்சி சென்னை மண்டல பொறுப்பாளர் முஸம்மில் பாஷா தலைமையில் நடைபெற்றது.

சென்னை மண்டல துணை பொறுப்பாளர் காஜாமுதீன் முன்னிலை வகித்தார்.

இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக
மாநில தலைவர் முகம்மது ஆசாத் கொடியை ஏற்றி, சுதந்திர தின உரை நிகழ்த்தினார் மற்றும்
மாநிலச் செயலாளர் பூட்டோ சாகுல் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இந்நிகழ்வில் மத்திய சென்னை மாவட்டத் தலைவர் காதர் பாஷா செயலாளர் ஜாவித்,மாநகராட்சி செயலாளர் முகமது யாசின் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

இவன்
சென்னை மண்டல ஊடகப்பிரிவு.

SDTU தொழிற்சங்கத்தின் சென்னை மண்டலத்துட்பட்ட வடசென்னை கிழக்கு மாவட்டத்தில் உறுப்பினர் சேர்க்கும் முகாம் நடைபெற்றது.  # #...
08/08/2025

SDTU தொழிற்சங்கத்தின் சென்னை மண்டலத்துட்பட்ட வடசென்னை கிழக்கு மாவட்டத்தில் உறுப்பினர் சேர்க்கும் முகாம் நடைபெற்றது.

# # # # # # # # # # # # # # # # # # # # # #

SDTU தொழிற்சங்கத்தின் சென்னை மண்டலத்துக்குட்பட்ட வடசென்னை கிழக்கு மாவட்டத்தில் உறுப்பினர் சேர்க்கும் முகாம் மாவட்டத்தின் செயற்குழு உறுப்பினர் அமானுல்லா தலைமையில் 03 மணி அளவில் 08-08-2025 நடைபெற்றது.

இந்த நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக மாவட்டத்தின் துணைச் செயலாளர் இஸ்மாயில், SDPI கட்சியின் ஆர் கே நகர் தொகுதி இணைச் செயலாளர் ஹாரூன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இந்த முகாமில் ஆண்கள் பெண்கள் என 26 நபர்கள் இணைந்தார்கள்.

இவன்
வடசென்னை கிழக்கு மாவட்ட ஊடகப்பிரிவு.

06/08/2025

ரிப்பன் மாளிகை அருகில் ஆறு நாட்களாக போராட்டம் நடந்து கொண்டிருக்கும் துப்புரவு பணியாளர்கள் மற்றும் ஒப்பந்த ஓட்டுனர்கள் அவர்களுக்கு இரவு உணவு வழங்கப்பட்டது.

ஆர்ப்பரிக்கும் மக்கள் வெள்ளத்தில் நடைபெற்ற SDTU தொழிற்சங்கத்தின் ஆர்ப்பாட்டம்..××××××××××××××××××××××தூய்மை பணியாளர்களின...
05/08/2025

ஆர்ப்பரிக்கும் மக்கள் வெள்ளத்தில் நடைபெற்ற
SDTU தொழிற்சங்கத்தின் ஆர்ப்பாட்டம்..
××××××××××××××××××××××
தூய்மை பணியாளர்களின் மற்றும் ஓட்டுநர்கள் ஒப்பந்தத்தை தனியார் மயமாக்குவதை கண்டித்து இன்று (04-08-25) மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே சென்னை மண்டல பொறுப்பாளர் முஸம்மில் அவர்களின் தலைமையில் நடைபெற்றது .

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில செயலாளர் பூட்டோ சாகுல் முன்னிலை வகித்தார்.

மத்திய சென்னை மாவட்ட செயலாளர் ஜாவித் அவர்களின் வரவேற்புரையுடன்

தொடங்கிய இந்த ஆர்ப்பாட்டத்தினை மண்டல துணை பொறுப்பாளர் ஹாஜா முகைதீன் தொகுத்து வழங்க

சிறப்பு அழைப்பாளர்களாக SDTU மாநில பொது செயலாளர் ரவூப் நிஸ்தார்,

SDPI கட்சி மாநில செயற்குழு உறுப்பினர் அஸ்கர் அலி,

மண்டல 5 செயலாளர் LTCU ரசிதா பேகம்,

LTCU மாநில பொருளாளர் மோகன்

ஆகியோர்கள் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்கள்.

மேலும் இந்நிகழ்வில் SDPI கட்சி மத்திய சென்னை மாவட்ட தலைவர் இஸ்மாயில், சென்னை மேற்கு மாவட்ட தலைவர் சையது அகமது, வடசென்னை கிழக்கு மாவட்ட தலைவர் பூட்டோ மைதீன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் SDTU மத்திய சென்னை மாவட்ட தலைவர் காதர் பாஷா, வடசென்னை கிழக்கு மாவட்ட தலைவர் அனிபா தென் சென்னை மாவட்ட தலைவர் அப்துல் ஹமீது , சென்னை மாவட்ட செயலாளர் சாஹிப் மற்றும் மாவட்ட கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இறுதியாக
வடசென்னை மேற்கு மாவட்ட தலைவர் மூஸா அவர்களின் நன்றியுரையுடன் இந்த ஆர்ப்பாட்டம் நிறைவு பெற்றது.

200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இவன்
சென்னை மண்டல ஊடகப்பிரிவு

02/08/2025
Sdtu தொழிற்சங்கம் சென்னை மண்டலம் செயற்குழு கூட்டம் மண்டல பொறுப்பாளர் முசமில்  பாஷா அவர்கள் தலைமையில் sdtu மாநில தலைமை அல...
01/08/2025

Sdtu தொழிற்சங்கம் சென்னை மண்டலம் செயற்குழு கூட்டம் மண்டல பொறுப்பாளர் முசமில் பாஷா அவர்கள் தலைமையில் sdtu மாநில தலைமை அலுவலகத்தில் வைத்து 31/07/2025 அன்று நடைபெற்றது இந்த கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக மாநில செயலாளர் பூட்டோ சாகுல் அவர்கள் கலந்துகொண்டார்கள்

வரவேற்புரை செங்கல்பட்டு மாவட்ட பொறுப்பாளர் வேலு வரவேற்றார்

கூட்டத்தின் தீர்மானங்கள்
1. எதிர் வரும் மூன்று ஆண்டிற்கான தலைவர்களை தேர்ந்தெடுக்க அனைத்து கிளைகளும் தேர்தல் நடத்துவது
2. அனைத்து மாவட்டங்களிலும் முகாம் அமைத்து புதிய உறுப்பினர்கள் தொழிற்சங்கத்தின் இணைப்பது
3. புதிய உறுப்பினர்கள் அனைவருக்கும் நலவாரிய அட்டை பெற்று தருவது பழைய உறுப்பினர்களுக்கு புதுப்பித்து தருவது
4. வருகின்ற 04/08/2025 அன்று மாலை 4 மணி அளவில் சென்னை மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம் அருகில் நடைபெற இருக்கும் சென்னை மண்டலம் 5ல் கடந்த 10ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வரும் ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தர தொழிலாளர்களாக பணியில் அமர்த்திட வேண்டும் என்றும் சென்னை மாநகராட்சியை தனியார்மையம் ஆக்குவது கண்டித்தும் நடக்க விருக்கும் ஆர்ப்பாட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடிக்க வேண்டும் என்று இந்த சென்னை மண்டல கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

மேலும் இந்த கூட்டத்தில் மத்திய சென்னை மாவட்ட செயலாளர் ஜாவித், வடசென்னை மேற்கு மாவட்ட தலைவர் மூஸா, வடசென்னை மேற்கு மாவட்ட செயலாளர் சர்தார், வடசென்னை கிழக்கு மாவட்ட தலைவர் அனிபா, தென் சென்னை தெற்கு மாவட்ட தலைவர் அப்துல் ஹமீத், தென் சென்னை தெற்கு மாவட்ட செயலாளர் ஷர்புதீன், சென்னை மேற்கு மாவட்ட தலைவர் சிந்தா ஆகியோர் கலந்து கொண்டனர்.

இறுதியாக மண்டல இணை பொறுப்பாளர் காஜா மொஹிதீன் அவர்கள் நன்றியுரையுடன் இக்கூட்டம் சிறப்பாக நடைபெற்றது

26/07/25 சென்னை அம்பத்தூரில் பெண் தூய்மை பணியாளர்களின் காலவரையற்ற உண்ணாநிலை போராட்டத்திற்கு SDTU தொழிற்சங்கம் முழு ஆதரவை...
26/07/2025

26/07/25 சென்னை அம்பத்தூரில் பெண் தூய்மை பணியாளர்களின் காலவரையற்ற உண்ணாநிலை போராட்டத்திற்கு SDTU தொழிற்சங்கம் முழு ஆதரவை தெரிவித்துக் கொள்கின்றது.

பெண்தூய்மை பணியாளர் நடத்துகின்ற உண்ணாநிலை போராட்டத்திற்கு தொழிற்சங்க மாநில தலைவர் முகமது ஆசாத் அவர்கள் நேரில் சென்று ஆதரவு தெரிவித்ததோடு அவர்களுக்கு ஆதரவாக உரையும் நிகழ்த்தினார். இந்த உண்ணா நிலை போராட்டத்தை ஒருங்கிணைத்து,
வழிநடத்தும்,உழைப்போர் உரிமை இயக்கம் மாநிலதலைவர், தோழர் பாரதி அவர்கள், தொழிற்சங்க மாநில தலைவரிடம் ஆதரவு கேட்டு கடிதம் வழங்கினார்.

இவர்களின் நியாயமான கோரிக்கைகளான, பணி நிரந்தரம் செய்யப்பட வேண்டும், தூய்மை பணிகளை தனியாரிடம் ஒப்படைக்க கூடாது, என்ற இந்த கோரிக்கை நிறைவேறும் வரை தொடர்ந்து SDTU தொழிற்சங்கம் அவர்களுடைய போராட்ட களத்திற்கு ஆதரவு கொடுக்கும்.

தமிழக அரசு,தூய்மைபணியாளர்களி்ன்,போராட்டத்தை கவனத்தில் கொண்டு, அந்த கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்றும், தூய்மை பணிகளை தனியாரிடம் கொடுப்பதை நிறுத்த வேண்டும் என்றும் SDTU தொழிற்சங்கம் கேட்டுக்கொள்கின்றது.

தொடர்ந்து அவர்களுக்கு ஆதரவாக சென்னையில் மாபெரும் போராட்டம்,மற்றும் மக்களிடம் பிரச்சாரம் செய்வது என்றும் உறுதி அளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் SDTU சென்னை மண்டல பொறுப்பாளர் முஜ்ஜமில்பாஷா, மற்றும் நிர்வாகிகள், மாநகராட்சி SDTUதொழிற்சங்க செயலாளர் முஹமதுயாசின் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Address

Chennai
600001

Telephone

+919884588835

Website

Alerts

Be the first to know and let us send you an email when SDTU சென்னை மாநகர மண்டலம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share