Uyir Pathippagam

Uyir Pathippagam Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Uyir Pathippagam, Publisher, Chennai.

உயிர் பதிப்பகம் என்ற முகநூல் பக்கத்திற்கு தங்களை வரவேற்கிறோம்.

உயிர் பதிப்பகம் என்ற இந்த முகநூல் பக்கத்தில் சுற்றுச்சூழல், காட்டுயிர், ஒளிப்படக்கலை தொடர்பான புத்தகங்கள் அறிமுகத்துடன் விமர்சனங்களும் தொடர்ச்சியாக வெளிவரும்.

2000 ஆண்டுக்கு முன்னான அரிய சுற்றுச்சூழல், காட்டுயிர் தொடர்பான நூல்கள் குறித்த அறிமுகமும் 'பெட்டகம்' என்ற பகுதியில் தொடர்ந்து இடம்பெறும்

'வாசிப்பை பரவலாக்குவோம்' என்ற நோக்கில் மற்ற பதிப்பகங்களில் வெளிவந்த முதன்மையான சூழலியல் நூல்கள் குறித்த அறிமுகமும் தொடர்ச்சியாக வெளிவரும்.

31/10/2025
அகஸ்தியர் எனும் புரளி, மூ.அப்பணசாமி, உயிர் பதிப்பகம், நூல் வெளியீட்டு நிகழ்வு நாளை மாலை... முன் வெளியீட்டுச் சலுகை வருகி...
31/10/2025

அகஸ்தியர் எனும் புரளி, மூ.அப்பணசாமி, உயிர் பதிப்பகம், நூல் வெளியீட்டு நிகழ்வு நாளை மாலை... முன் வெளியீட்டுச் சலுகை வருகின்ற 07.11.2025 வரை நீட்டிக்கப்படுகிறது. நிகழ்விற்கு அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம். உயிர் பதிப்பகம்.

31/10/2025

நாளை 01.11.2025 மாலை 5.30 மணிக்கு சென்னை கோட்டூர் அண்ணா நூற்றாண்டு நூலகம் அருகில் உள்ள தமிழ் இணையக் கல்விக் கழகத்தில் நடைபெறுகிறது...

மிக, மிகக் குறுகிய காலத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வு!ஆசிரியர் தேதி கிடைத்தவுடன்  மற்ற உரையாளர்களின் அனுமதி, அரங்கு உ...
30/10/2025

மிக, மிகக் குறுகிய காலத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வு!
ஆசிரியர் தேதி கிடைத்தவுடன் மற்ற உரையாளர்களின் அனுமதி, அரங்கு உறுதி செய்வது, அழைப்பிதழ் தயாரிப்பு என இன்று மாலைதான் நிறைவடைந்தது. இன்னும் இரண்டே நாள்தான்! நண்பர்கள், தோழர்கள், ஆளுமைகள் என அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

தமிழ் இணையக் கல்விக்கழகம், கோட்டூர், சென்னை 85
(அண்ணா நூற்றாண்டு நூலகம் அருகில்)
01. 11. 2015, சனிக்கிழமை மாலை 05. 30 மணி...

நன்றி: alar_veliyeedu, dodo_books, kesavan         சூழலியல் வாசிப்பின் இரண்டாம் நிகழ்வு 26/10/2025 ( ஞாயிற்றுக்கிழமை ), ...
27/10/2025

நன்றி: alar_veliyeedu, dodo_books, kesavan சூழலியல் வாசிப்பின் இரண்டாம் நிகழ்வு 26/10/2025 ( ஞாயிற்றுக்கிழமை ), காலை 8 மணிக்கு, திருச்சி டவுண்ஹால் அருகிலுள்ள மாநகராட்சி பூங்காவில் நடந்தேறியது.
உயிர் பதிப்பக வெளியீடுகளான காதலில் திளைக்கும் இரயில் பூச்சி ( ஏ. சண்முகானந்தம் ), மரங்கொத்திகள் ( ஏ. சண்முகானந்தம் ), கொம்பன் ஆந்தைகள் ( பேராசிரியர் த.முருகவேள் ), பூச்சிகள் - ஓர் அறிமுகம் ( ஏ. சண்முகானந்தம் ), மரியா சிபெல்லா மேரியான்: பூச்சியியலின் மூதாய் ( அருண் நெடுஞ்செழியன் ) ஆகிய நூல்கள் பற்றிய கருத்துக்கள் பகிர்ந்து கொள்ளப்பட்டன.

மரங்கொத்திகள் பற்றிப் பேசிய முனைவர் பட்ட ஆராய்ச்சியாளர் மேரி மார்ட்டினா அவர்கள் மரங்கொத்திகளின் வாழிடச்சிக்கல்கள் மற்றும் சவால்கள் குறித்துப் பேசும் போது எப்படி மரங்கொத்திகள் குடும்பம் குடும்பமாக வாழும் இயல்புடையவை என்பதை பதிவு செய்தார்.

கொம்பன் ஆந்தைகள் குறித்த திரு. விக்னேஷ் அவர்களின் உரை ஆந்தைகள் பற்றிய நம்பிக்கைகள் மற்றும் அவைகளோடு தொடர்புடைய மனித நடவடிக்கைகளை கவனப்படுத்தினார்.

காதல் என்பது மனிதர்களுக்கு மட்டுமானதல்ல, அனைத்து உயிரினங்களுக்கும் பொதுவானது என தனது உரையை தொடங்கிய பேரா. யோகராஜ் அவர்கள் அட்டைப் பூச்சிகள் மற்றும் இரயில் பூச்சிகள் பற்றிய தனது சொந்த அணுவங்களை இணைத்துப் பேசியது சுவாரஸ்யம் கூட்டியது.

பூச்சிகள்- ஓர் அறிமுகம் எனும் நூலை முன்வைத்து பேசிய திரு. கேசவன் அவர்கள் பறவைகளுக்கு முன்னால் முதலில் பறக்க தொடங்கியவை ‘பூச்சிகள்’ எனப் பேச ஆரம்பித்து எறும்புகள் எப்படி தங்களை விட முந்நூறு மடங்கு எடை கொண்டவற்றை நகர்த்தி செல்கின்றன என்பதை நூலிலிருந்து எடுத்துக்காட்டியதோடு, காட்டுயிர் புகைப்படக் கலைஞர் மற்றும் நூலின் ஆசிரியர் ஏ. சண்முகானந்தம் பற்றிய பதிவுகளையும் வாசித்துக் காட்டினார்.

பூச்சியியலின் மூதாயான மரியா
சிபெல்லா மேரியான் எனும் நூலை மையப்படுத்திப் பேசிய அதங்கோடு அனிஷ்குமார் எப்படி புகைப்படக் கருவிகள் இல்லாத காலகட்டத்தில் ஓவியங்கள் மூலம் பூச்சியியலை மரியா முன்னெடுத்தார் என்பதை கவனப்படுத்தியதோடு மட்டுமல்லாமல் ஆண்கள் நிறைந்த அறிவியல் உலகில் எங்கனம் தனித்துப் போராடி வெற்றி பெற்றார் என்பதையும் பதிவு செய்தார்.

நிகழ்வின் ஒரு பகுதியாக எழுத்தாளர் வல்லிக்கண்ணன் அவர்களின் ‘சிலந்தி' கதை வாசிப்புக்குட்படுத்தப்பட்டு உரையாடல் நடைபெற்றது.

நிகழ்வினுடாக பூச்சிகள் ( வெண்ணிற கரப்பான்பூச்சி, மஞ்சள்புள்ளி மரவட்டை ), அணில், எறும்புத்திண்ணி போன்ற உயிரினங்களின் வருகை நிகழ்வை ஒரு உயிர்ப்புள்ள அனுபவமாக மாற்றியது.

நன்றி: உயிர் பதிப்பகம் சண்முகானந்தம் நன்றி: alar_veliyeedu, dodo_books

27/10/2025

Address

Chennai

Alerts

Be the first to know and let us send you an email when Uyir Pathippagam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Uyir Pathippagam:

Share

Category