Kollywood Street

Kollywood Street Xclusive Indian Cinema Updates 24×7 News, Photo's, Video's, & Many More...
(2)

Power, Politics and Unfinished Love Take Center Stage in “Thukra Ke Mera Pyaar” Season 2 Trailer, premiering June 19, 20...
02/06/2026

Power, Politics and Unfinished Love Take Center Stage in “Thukra Ke Mera Pyaar” Season 2 Trailer, premiering June 19, 2026

Link Asset: https://youtu.be/3nElVHkpuKo
Mumbai, June 1, 2026: The wait just got more intense. The trailer of Thukra Ke Mera Pyaar Season 2 is here, and it pulls viewers straight into a world where love is no longer innocent, and power comes at a personal cost.
Returning as Kuldeep Kumar, Dhaval Thakur steps into the shoes of a man torn between guilt and obsession, a man who once made a mistake that changed everything and now finds himself drawn back into a dangerous web of politics, power, and unfinished emotions.
Sanchita Basu as Shanvika Chauhan emerges stronger and far more formidable. Navigating the ruthless corridors of power, she refuses to play by the rules even if it means rewriting the meaning of relationships along the way.
The trailer offers a glimpse into a season packed with high-stakes political drama, simmering revenge, and emotionally charged confrontations. As Sitaarpur becomes a battleground of ambition and betrayal, Kuldeep and Shanvika find themselves on opposite ends of a game where trust is fragile and intentions are never what they seem. This season amplifies the emotional depth that made the first one a standout heartbreak, revenge, and the rise of an underdog but now set against a much larger, more dangerous canvas.
Sanchita Basu on the occasion commented, “Season 2 takes Shanvika into a space that is emotionally far more layered and unpredictable. She’s stronger, more guarded, and constantly questioning what love really means when power and betrayal enter the picture. What excited me most this season was that nothing is black or white every emotion comes with a consequence.
Dhaval Thakur returning as Kuldeep Kumar said, “Kuldeep is carrying the weight of his past throughout this season. He’s emotional, conflicted, and constantly torn between what he feels and what the world expects from him. The trailer only gives a glimpse of how intense and personal his journey becomes this time. The scale has grown, but the emotional core remains very real.”
Thukra Ke Mera Pyaar – Season 2 streams on JioHotstar from June 19, 2026.

About JioHotstar
JioHotstar is one of India’s leading streaming platforms, formed through the coming together of JioCinema and Disney+ Hotstar. With an unparalleled content catalogue, innovative technology, and a commitment to accessibility, JioHotstar aims to redefine entertainment for everyone across India.

*பாடலாசிரியரும் நடிகருமான ஜெகன் கவிராஜ் எழுதிய "ஈரம் காயாத கதைகள்" புத்தக வெளியீட்டுவிழா**"ஈரம் காயாத கதைகள்" புத்தக வெள...
02/06/2026

*பாடலாசிரியரும் நடிகருமான ஜெகன் கவிராஜ் எழுதிய "ஈரம் காயாத கதைகள்" புத்தக வெளியீட்டுவிழா*

*"ஈரம் காயாத கதைகள்" புத்தக வெளியீட்டு நிகழ்ச்சிக்கு நான் ஏன் வந்தேன்?- இயக்குநர் அமீர் விளக்கம்*

*"ஈரம் காயாத கதைகள்" புத்தகத்தை அனைவரும் வாசிக்க வேண்டும்" - கவிதாபாரதி*

*அப்பா தீபாவளி கதை குறித்து நிவாஸ் கே பிரசன்னா உருக்கம்*

பாடலாசிரியரும் நடிகருமான மு. ஜெகன் கவிராஜ் எழுதிய ‘ஈரம் காயாத கதைகள்’ சிறுகதைகள் தொகுப்பின் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இயக்குநரும் நடிகருமான அமீர், நூலினை வெளியிட, ஜெகன் கவிராஜின் பெற்றோரான திரு. முத்தையா - திருமதி லலிதா இணை பெற்றுக் கொண்டனர்.

இவ்விழாவில் பேசிய கிராம நிர்வாக அதிகாரி அன்னலட்சுமி, “ஜெகன் அண்ணாவும் நானும் ஒரே ஊர். அவரிடம் நிறைய நல்ல விஷயம் இருக்கு. அதில் குறிப்பிட்டுச் சொல்லணும் என்றால், அவரது வாசிப்புப் பழக்கம். ஒருநாளைக்கு இத்தனை பக்கங்கள் படிக்கணும் எனத் திட்டமிட்டுப் படிப்பவர். அவர் பள்ளிப்படிப்பு படிக்கலை என அவரளித்த பேட்டிகளில் ஆதங்கப்படுடிருப்பார். ஆனால் அவர் மனிதர்களின் வாழ்க்கையைப் படித்துள்ளார். இந்தத் தொகுப்பில் உள்ள கதைகளை, எங்க ஊர் தாத்தா, பாட்டிகள் வாய்மொழியாகச் சொன்ன விஷயங்களைக் கொண்டுதான் எழுதியுள்ளார். ஜெகன் அண்ணாவின் கதைகளைப் படித்த பின் தான், எங்க ஊர் மனிதர்களைப் பற்றி வேறொரு பார்வையில் பார்க்க ஆரம்பிக்கிறேன். அவருக்குள் நிறைய கதைகள் ஒளிஞ்சிருக்கு. அடுத்து வரும் புத்தகத்தில் அக்கதைகள் வரணும். அதற்கு காலமும் கதையுமும் ஆசிர்வதிக்கணும்” என்றார்.

எழுத்தாளரின் ஊரைச் சேர்ந்த செந்தில்குமார் IRS பேசுகையில், “எங்கள் கிராமம், கிராமத்தைச் சுற்றி வாழ்ந்த மனிதர்களின் சிறந்த கதைகளின் வெளிப்பாடாக உள்ளது ‘ஈரம் காயாத கதைகள்’. இந்த அளவுக்குக் கிராமங்களை ஊள்வாங்கிக் கொண்டு எழுதிய கிரா, தோப்பில் முகமது மீரான் போன்றவர்களின் இயல்பான நடை ஜெகனுக்கு வாய்ச்சதில் ஆச்சரியம் ஏற்பட்டது. எங்கள் நட்பு, நாங்கள் யாரெனத் தெரியும் முன்பே தொடங்கிவிட்டது. ஏனெனில் எங்கப்பாக்கள் இருவரும் கிளாஸ்மேட்கள். அதனால் எங்க நட்பு சிறுவயதிலேயே தொடங்கினாலும் பல்வேறு திசைகளில் மீண்டும் சந்திக்கும்போது, முப்பதுகளைக் கடந்துவிட்டோம். எழுத்தில் வெற்றியை விடத் தோல்வி அதிகம். கடினமான மனவலியும், பொருளாதாரச் சுமையும் தரக்கூடியது. ஜெகன் இந்தத் துறையைத் அவர் தேர்ந்தெடுக்கும்போது, அது மிகப் பெரிய சவாலாக இருக்குமென நினைச்சேன். ஆனா சில வருடங்களிலேயே மிகப் பெரிய சாதனையை நிகழ்த்திக் காட்டினார். அதுவும் மல்டி-டைமன்ஷலில் தடத்தைப் பதித்துள்ளார். பாடல் எழுதுவதாகட்டும், நடிப்பதாகட்டும், புத்தகம் எழுதுவதாகட்டும், எங்கள் ஊருக்கே பெருமையான விஷயம்.

எப்பொழுதும், இந்த மாதிரியான சூழலில் இருந்து வந்தவர்கள் எப்படியிருப்பார்கள் என்றால், சமுதாயத்தின் மீது கோபம் கொண்டவர்களாக இருப்பார்கள். எப்படின்னா, பணக்காரர்கள் எல்லாம் கெட்டவங்க, அரசியல்வாதிங்க எல்லாம் கெட்டவங்க என்ற வெளிப்பாடு வரும். தங்களுக்கு என்று ஒரு ஐடென்ட்டியை உருவாக்க முயற்சி செய்வாங்க. மத ரீதியாகவோ, சாதிய ரீதியாகவோ, இல்ல இனம், மொழி ரீதியாகவோ அடையாளத்தை உருவாக்கி, அதன் பின் ஒளிஞ்சுக்கிட்டு எழுதுறதுக்கோ, வாழுறதுக்கோ முயற்சி செய்வாங்க. ஆனா ஜெகன் எதிர்கொண்ட வலிகள் அனைத்தும் அவரைப் புது மனிதராக உருவாக்கியுள்ளது.

எந்த ஒரு விஷயத்தையும் அவர் இன்சைடர் (Insider) ஆகப் பார்க்கும் விதம் ஆச்சரியமாக இருந்தது. நேரில் பழகித் தெரிந்து கொண்டதை விட, அவரது கதைகள் மூலமாகத்தான் அவரைத் தெரிந்து கொண்டேன். எடிக் வியூ (Etic view), எமிக் வியூ (Emic view) என சோஷியல் ஸ்டடிஸ்ல சொல்வாங்க. எடிக் வியூ என்றால், அனைவருமே தூரமாக இருந்துதான் ஒரு சொசைட்டியைப் பார்ப்போம். எல்லா எழுத்தாளர்க்கும் ஈஸியா வரக் கூடியது. ஆனா அந்த சொசைட்டியாக மாறி, அதன் இயல்புகளைப் பற்றி எழுதுவது இவருக்கு அருமையாக வந்துள்ளது. இந்தப் புத்தகத்தில் அது வெளிப்பட்டுள்ளது.

ஈரானியத் திரைப்படங்களில் உள்ள ஆழம் இந்தப் புத்தக்கத்தில் உள்ளது. ஒவ்வொரு கதையுமே கி.ரா.வையும், தோப்பில் முகமது மீரானையும்தான் ஞாபகப்படுத்தியது. ஏன்னா தோப்பில் முகமது மீரான் கதைகளைப் படித்தவர்களுக்குத் தெரியும், முஸ்லீம் சமூகத்தை வெளியில் இருந்து எக்ஸ்ட்ரீமாகப் பார்க்கும் போக்கில் இருந்து மாறுபட்டு, உள்ளிருந்து இயல்பாக எழுதியிருப்பார். ஜெகன், எங்க மக்களைப் பற்றி க்ளோரிஃபை (Glorify) பண்ணாமல் மிக இயல்பாக எழுதியிருந்தார். இப்படி மேலும் கதைகள் எழுதவும், வெற்றிகளைக் குவிக்கவும் நண்பனுக்கு வாழ்த்துகள்” என்றார்.

கவிதா பாரதி பேசுகையில், “என்னுடைய சிறு வயதில் நான் ஒரு கவிதைப் புத்தகம் போட்டேன். 1200 பிரதிகளில் 1000 புத்தகத்தை இலவசமாகக் கொடுத்தோம். 200 புத்தகம் பத்திரிகைகளுக்கு விமர்சனத்துக்காகக் கொடுத்தேன். ஒன்றிலும் விமர்சனம் வரலை. ஆயிரம் புத்தகங்களில், இருநூறு நான் கொடுத்தேன், எண்ணூறு புத்தகங்கள் என் அப்பா கொடுத்திருப்பார். எங்கப்பா தினம் பத்துப் புத்தகங்களைப் பையில் போட்டுக் கொண்டு, சைக்கிளில் வச்சுக்கிட்டுப் போற இடத்திலெல்லாம், ‘என் பையன் புத்தகம் எழுதியிருக்கான்’ என நண்பர்களுக்கும் தெரிஞ்சவர்களுக்கும் கொடுப்பார். செய்தி என்னவென்றால், எங்கப்பாவிற்குப் படிக்கத் தெரியாது. ஒரு படிக்கத் தெரியாத அப்பாவிற்கு, ஒரு மகன் புத்தகம் எழுதியிருக்கிறான் என்பது மிகவும் பெருமைக்குரிய விஷயமாக இருந்தது. இந்த மேடையில், எழுத்தாளரின் தந்தையையும் தாயையும் அழைத்துப் புத்தகத்தைக் கொடுத்ததை விட சிறப்பான எந்தப் பெருமையும் இருக்கவேண்டிய அவசியமில்லை என்று நான் கருதுகிறேன்.

வட்டார வழக்கைப் பேசுவதென்பது கேலிக்குரியதாக இருக்கிறது. ஒவ்வொரு அம்மாவுக்கும் ஒரு சமையல் கைவண்ணம் உண்டு. ரசம் என்பது புளியையும் தக்காளியையும் கரைச்சு வைப்பதுதான். ஆனால் ஒவ்வொரு அம்மாவின் ரசத்திற்கும் ஒரு சுவையுண்டு. ஆனால் நண்பர்களே ஆச்சி மசாலாவும், சக்தி மசாலாவும் அம்மாகளின் சுவையை எல்லாம் கொன்றுவிட்டன என்பதுதான் சோகம். அப்படித்தான் வட்டார வழக்கு இல்லாமல் போனது ஒரு மொழியினுடைய மிகப் பெரிய இழப்பு. இன்று, தமிழில் பேசினாலோ, எழுதினாலோ நீங்க ஒரு பூமர். தமிழை ஆங்கிலத்தில் எழுதவேண்டும். A m m a தான் இன்றிருக்கக் கூடிய ஜென் ஸீ மொழி. இத்தகைய சூழல் நிலவும் தருணத்தில், தம்பி தனது வட்டார மொழியில் கதைகளை எழுதியிருப்பது மிகவும் மகிழ்ச்சிக்குரிய வரவேற்புக்குரிய செயல்.

இந்தச் சிறுகதைத் தொகுப்பு, ஒரு நாவலைப் போல் ஒன்றின் தொடர்ச்சியாக எல்லாக் கதாபாத்திரங்களும் ஏதோ ஒன்றின் தொடர்புடையதாகத்தான் இதிலுள்ள ஒன்பது கதைகளும் அமைந்திருக்கின்றன. இந்தக் கதைகள் சிறப்பானவை என்பதற்கு நான் உத்திரவாதம் அளிக்கின்றேன். எழுத்தாளனுக்கு மெய்யறிவு, முழுமையறிவு, அந்த அறிவு, இந்த அறிவு இருக்கவேண்டும் என நினைக்கிறார்கள். எழுத்தாளனுக்கு அதெல்லாம் தேவையில்லை என நான் நினைக்கிறேன். எழுத்தாளனுக்கு ஒரு சமூக நோக்கம், பொறுப்புணர்வு, நேர்மை, உண்மை இருக்கவேண்டும். அந்த கிராஃப்ட், தொழில்நுட்பம் எல்லாம் இரண்டாம் பட்சம்தான். எதற்காக எழுதுகிறான், அதில் எதைச் சொல்கிறான் என்பதுதான் எழுத்தாளனைப் பாராட்டுவதற்குரிய அடிப்படை. அவ்வகையில் ஜெகன் தான் பார்த்த செய்திகளை, நீதிகளை, அநீதிகளை இதில் பதிவு செய்திருக்கிறார். ஜெகன் ஒரு நல்ல இயக்குநர் ஆவதற்கான அனைத்துச் சான்றுகளும் இப்புத்தகத்தில் இருக்கின்றன. அனைவரும் இதை வாங்கிப் படிக்கவேண்டும் என்று பரிந்துரைக்கிறேன்” என்றார்.

இயக்குநர் சுப்பிரமணியா சிவா, “கவிதா பாரதி சொன்ன அப்பா கதை எவ்ளோ அற்புதமான கதை! எனக்கு எங்கம்மா ஞாபகம் வந்துடுச்சு. எங்கம்மாவுக்கு எழுதப் படிக்கத் தெரியாது. எங்கம்மா எப்பவும் ஒரு வெத்தலைப்பாக்கு பை வச்சிருப்பாங்க. அதுல எப்பவும் ஒரு பென்சில் வச்சிருப்பாங்க. அவங்களுக்கு 86 வயசாகுது. எனக்குத் தெரிஞ்சு இருபது, முப்பது வருஷமா பென்சில் வச்சிருக்காங்க. வெத்திலையை மாத்தும் பொழுதெல்லாம் பென்சிலைப் பத்திரமா எடுத்து பையில் திரும்ப வச்சுப்பாங்க. ‘ஏன் நீ பென்சில வச்சிருக்க?’ என ஒருநாள் கேட்டேன். ‘யப்பா, யாராச்சும் எழுதக் கேட்பாங்க இல்ல!’ என அதுக்கு அவங்க பதில் சொன்னாங்க. ‘ஏம்மா இதுவரைக்கும் எழுத யாராச்சும் கேட்டிருக்காங்களா?’ எனக் கேட்டாங்க. ‘இதுவரைக்கும் கேட்கலைப்பா’ எனச் சொன்னாங்க. அதுதான் அந்த பென்சலின் கதை. எனக்கு என்ன ஆர்வம்ன்னா, அந்தப் பென்சிலை எழுதக் கேட்கப் போகிற அந்த மனிதன் யார் அப்படிங்கிறது தான் என்னோட கேள்விய இன்னும் இருந்துட்டிருக்கு. அது ஏன் அப்படின்னு இன்னும் என்னால் புரிஞ்சுக்கவே முடில.

இதற்கு முன் ‘எழுதப்படாத முகங்கள்’ என்றொரு புத்தகம் போட்டிருக்கிறார். இப்போ ‘ஈரம் காயாத கதைகள்’. நான் முதலில், யாருக்கு சமர்ப்பணம் என்பதையும், என்னுரையையும் வாழ்த்துரையையும் படிப்பேன். என்னுரையில், தனது அம்மாவை உடனிருந்து பார்த்துக் கொண்ட சுமதி மயினி பற்றி எழுதும் போது, ‘எங்கம்ம சாப்பிட்ட ஒவ்வொரு பருக்கையிலும் சுமதி மயினி பேரிருக்கும்’ எனச் சொல்றார். நீங்க எந்த நேரத்தில் சிறந்தவர்களைக் கண்டுபிடிக்க முடியுமென்றால், உடம்பு சரியில்லாத பொழுது கூட இருந்து பார்த்துபவர்களைத்தான் முக்கியமான நண்பனாகப் பார்க்க முடியும். மேலும் ஜெகன் கவிராஜ், எழுதறதுக்கு கரம் போதும், எழுத வைக்கிற வரம் என்று தன் மனைவியையும் பிள்ளைகளையும் சொல்கிறார். ஒரு முன்னுரையிலேயே, ஜெகனின் மனிதநேயமும் நன்றியுணர்வும் வெளிப்படுகிறது.

இந்நூலை சிறுகதை என்று என்னால் சொல்லமுடியவில்லை. ஜெகன் சந்தித்த மனிதர்கள் பற்றிய தொகுப்பு தான் இப்புத்தகம். சிறுகதையை விட, தான் சந்தித்த மனிதரிடம் இருக்கும்கதையை எழுதுபவனை உலகத்தின் மிகச் சிறந்த எழுத்தாளனாக மதிக்கிறேன். கதை என்பது கற்பனையில் வருவது. ஆனால் இன்னொரு மனிதனிடம் இருக்கும் அனுபவம், அவன் இறந்துவிட்டால் அவனோட போய்விடும். எழுதப் படிக்கத் தெரியாத என் அப்பாம்மாவிடம் இருக்கும் கதைகளை நான் உள்வாங்கிக்கணும் அல்லது எழுதணும். அப்ப இன்னொரு சாமானிய மனிதனிடம் இருக்கும் கதைகளை அனுபவங்களை உள்வாங்கி எவன் படைப்பாகத் தருகிறானோ அவன் இந்தச் சமுதாயத்துக்கு மிக முக்கியமானவன். அப்படியொரு புத்தகம்தான் ஜெகன் கவிராஜின் இந்த ஈரம் காயாத கதைகள் எனும் புத்தகம். ஜெகன் கவிராஜ் இதில் எதையும் மிகைப்படுத்திச் சொல்லாமல், மிக எளிமையாக வட்டார வழக்கில் சொல்லியுள்ளார். ஜெகன் இது போல் நிறைய புத்தகங்கள் எழுதவேண்டும்” என்றார்.

நிவாஸ் கே.பிரசன்னா பேசுகையில், “என் சொந்த ஊர் திருநெல்வேலிதான். ஜெகன் கவிராஜ் எனக்கு எப்படிப் பழக்கம்ன்னா, ‘மை டியர் சிஸ்டர்’ எனும் பத்திற்கு நான் மியூசிக் பண்ணேன். அப்படத்தில் அவர் நடிச்சுட்டு இருந்தார். அந்தப் படத்தின் இயக்குநர் பிரபு ஜெயராம், ‘ஜெகன்னு ஒருத்தர் இருக்கிறார். நல்லா எழுதுவார்’ எனச் சொன்னார். மியூசிக் டைரக்டர்ஸ் நாங்க எப்பவும் ஒரு பாடலாசிரியரோடு கம்ஃபர்ட் ஜோன் எதிர்பார்ப்போம். டக்குன்னு புதுசா ஒருத்தங்களிடம் மாறும்போது ஒரு சின்ன தயக்கம் இருக்கும். அதனால் நான் கொஞ்சம் தயங்கினேன். ‘இல்ல, நீங்க ட்ரை பண்ணிப் பாருங்க’ என்றார் பிரபு ஜெயராம். ‘அப்படியா!’ என ஃபோனில் ஜெகனுக்கு ஒரு சந்தம் கொடுத்தேன். அடுத்த பத்து நிமிடங்களில் முழுப் பாடல் எழுதிக் கொடுத்துட்டார். அப்படித்தான் எங்களுக்குள் பழக்கம் ஆரம்பித்து. பின் நிறையப் பேச ஆரம்பிச்சோம். ஆன்மிகம் பேசுவோம். அவரிடம் ஒரு நகைச்சுவைத்தன்மை இருக்கும். ஜெகனிடம் ஒரு ரிதம் இருப்பது தெரிய வந்தது. எல்லா கிரியேட்டர்ஸ்க்கும் ஒரு ரிதம் இருக்கு. கம்போசர்ஸா எனக்கொரு சைலன்ஸ் தேவை; ரைட்டர்ஸா அவங்க ஒரு பிளான்க் பேப்பர்ல இருந்து ஆரம்பிப்பாங்க. எல்லா கிரியேட்டர்ஸ்க்கும் சோர்ஸ் ஒன்னுதான். அந்த ரிதம் எங்களைக் கனெக்ட் பண்ணுச்சு. தொடர்ந்து பாடல்கள் எழுத ஆரம்பிச்சோம். ஒவ்வொன்றும் நன்றாக வந்தது. தாய்க்கிழவி வரை எங்க ஜர்னி வந்து. இப்ப அடுத்தது ‘மக்கள் காவலன்’ படத்திலும் பாடல் எழுதிட்டிருக்கிறார். எங்க ஜர்னி ரொம்ப நல்லா வரும் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது.

எப்பவும் அவரிடம் ஒரு பாசிட்டிவ் எனர்ஜி இருக்கும். அந்த எனர்ஜிதான் ஆர்ட்டாக மாறுகிறது என நம்புகிறேன். இந்தத் தொகுப்பில், ‘அப்பா தீபாவளி’ எனும் கதை படிச்சேன். எளிமையான மனிதர்கள் பற்றிய கதை என்றால் எனக்கு ரொம்பப் பிடிக்கும். எளிமையாக உள்ளவர்களோடு பழகினால் நம்ம மைண்ட் பயங்கரமா ரெஃப்ரெஷ் ஆகும். ஜெகன் கவிராஜ் அந்த மாதிரியான ஒருத்தர். அவரிடம் எப்ப பேசினாலும், புது விஷயங்களுக்கு ஓப்பனா இருப்பார். ஜெகன் மென்மேலும் வளர்வார். அவருக்கு வாழ்த்துகள்” என்றார்.

மு. ஜெகன் கவிராஜ் ஏற்புரை வழங்கி பேசும்போது, “என்னைக் கொண்டாடுறதுக்கு, என்னைப் பற்றிப் பேசுறதுக்கு, என்னை ரசிக்கிறதுக்கு யாருமே இருக்கமாட்டாங்க போல என மறைந்து விட்ட தேவதாஸ் அய்யாவிடம் 2014 இல் மிகத் துயரமான காலகட்டத்தில் வருத்தப்பட்டுப் பேசினேன். அப்பொழுது, அய்யா வைகுண்டரின் அகில திரட்டிலுள்ள, ‘காட்சி உனது கண் முன்னே காணும் மகனே கலங்காதே!’ எனச் சொல்லி ஆறுதல்படுத்தினார். ‘நீ என்னென்ன காட்சியெல்லாம் கற்பனை பண்ணி வச்சிருக்கியோ, அந்தக் காட்சிகளை எல்லாம் அய்யா தோன்ற வைப்பார்’ எனச் சொன்னார். இந்தக் காட்சியைச் சாத்தியப்படுத்திய அனைவருக்கும் ரொம்ப நன்றி.

எல்லோரும் என்னைப் பற்றிச் சொல்லும்போது, ‘நல்ல பையன் பாசிட்டிவா தான் பேசுவான்’ எனச் சொன்னாங்க. எல்லார் வீட்டிலும் அம்மா வளர்ப்புன்னு சொல்வாங்க. நாங்க எல்லாம் எங்க அக்கா வளர்ப்பு. ‘இந்தப் பிள்ள என்ன இவ்ளோ கருப்பா இருக்கு!’ என நாங்க எந்தப் பிள்ளையாவது கிண்டல் பண்ணா, ‘ஏலே, அக்காளும் கருப்பாதான்ல இருக்கேன். அப்ப அக்காள ஒருத்தவங்க சொல்வாங்க இல்ல. அப்ப நீங்க அக்காளைப் பத்தி நினைக்கணும்’ என அக்கா எங்களுக்குச் சொல்வாங்க. நாம எந்த ஒரு பிள்ளையைத் தப்பா பேசும்பொழுது அக்காவை நினைக்கணும்னு ஸ்கூலுக்குப் போகும்பொழுது சொல்வாங்க. அதனால் எங்க எல்லாம் தவறுதலான ஒரு சூழல் வரும்போது, நாங்க அக்காவை நினைச்சுப்போம். நாங்க அம்மாவோட வார்ப்பு, அக்காவோட வளர்ப்பு. அந்த அக்கா இன்று, என் புத்தக வெளியீட்டு விழாவிற்குத் தொகுத்துரை வழங்குவது ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கு.

‘மிகவும் கஷ்டத்தில் ஒருவன் என்னிடம் வந்தால் நான் என்ன செய்யவேண்டும்?’ என நபிகள் நாயகத்திடம் ஒருத்தன் கேட்கிறான். ‘நீ பணம் கொடு’ என்கிறார் நபிகள். ‘பணம் என்னிடம் இல்லையென்றால்?’ என்று கேட்கிறான். ‘சோறு கொடு’ என்கிறார் நபிகள். ‘சோறு இல்லைன்னா?’ என மீண்டும் கேட்கிறான். ‘தண்ணி கொடு’ என்கிறார் நபிகள். ‘தண்ணியும் இல்லைன்னா?’ எனக் கேட்டதற்கு, ‘நாலு நல்ல வார்த்தைகளையாவது கொடு’ என்கிறார் நபிகள். இந்த உலகத்தில் நாலு நல்ல வார்த்தைகள் கூட தர்மம் தான் என நபிகள் சொல்கிறார். இது மனதில் பசுமரத்தாணி போல் பதிந்துவிட்டது. அய்யா வைகுண்டரும், ‘செவ்வென்ற பேச்சு செப்பியிரு என்மகனே’ எனச் சொல்கிறார். ‘சிறந்த பேச்சைப் பேசு. என்ன நடந்துவிடப் போகுது வாழ்க்கையில்? நீ நெகட்டிவா பேசி என்னாயிடப் போகுது? சும்மா நாலு நல்ல வார்த்தை பேசு’ என அய்யா வழியில் நிறைய நல்ல மனிதர்கள் சொல்லிக் கொடுத்ததாலோ என்னவோ கதையில் எதிர்மறை பாத்திரங்களைப் படைக்க மனம் வரமாட்டேங்குது. நல்லது நினைச்சால் நிச்சயம் நல்லது நடக்கும் என்பது உண்மை.

அமீர் சாரோட ஒரு படத்தில் நடிச்சிருக்கேன். அதில் அவருக்காக ஒரு பாட்டு எழுதியிருக்கேன். அதுல ஒரு வரி, ‘பொய்ய கூட்டிச் சொன்னதில்ல, கையக் கட்டி நின்னதில்ல’ என வரும். அது அமீர் சாருக்கு நூறு சதவிகிதம் பொருந்தும். மனதில் தோன்றுவதை வாயில் மறைக்கவே தெரியாத மிகச் சிறந்த மனிதர். இந்த இடத்துல ஒரு விஷயத்தைப் பதிவு பண்ண நினைக்கின்றேன்.

இன்றைய முதல்வர் மாண்புமிகு ஜோசப் விஜய் அண்ணன், இன்னிக்கு அவர் அடைஞ்சிருக்கும் உயரம் நடக்குமா, நடக்காதா என்ற ஒரு மாதிரி கருத்துக் கணிப்பு இருக்கும்போது, அமீர் சார் ஒரு பத்திரிகையில் ஒரு வார்த்தை சொல்றார். ‘புரட்சித்தலைவர் எம்ஜியாருக்குப் பிறகு தமிழ்நாட்டில் ஒரு கூர்மையான வாள் வந்திருக்கு. அது நல்லது செய்யுமா, என்ன செய்யப் போகுதுன்னு யாருக்கும் தெரியாது’ எனச் சொன்னார். அனைவரும் அமீர் சாரை விமர்சனம் செய்தனர். ‘என்னப்பா உங்க ஆள் இப்படிச் சொல்றார்?’ எனக் கேட்டாங்க. ‘சொல்லியிருக்கார் பாருங்க’ என பதில் சொன்னேன். அவர் சொன்னது உண்மையாகிடுச்சு.

ஒரு கலைஞனின் வளர்ச்சியையும், ஒரு அரசியல் தலைவரோட வளர்ச்சியையும் கணிக்கக் கூடிய ஆற்றல் அமீர் சாருக்கு உண்டு. அவர் ஒரு சில விஷயத்தைக் கணிச்சா அது மாறவே மாறாது. நிவாஸ் K. பிரசன்னா பெரிய ஹீரோவார் எனக் கணிச்சிருக்கார். அது நடக்கும்னு நான் நம்புறேன். எனக்கு ஆசை என்னென்னா நிவாஸ் K.பிரசன்னா நடிச்சாலும், அந்தப் படத்தில் எனக்குப் பாடல் எழுத வாய்ப்புக் கொடுப்பார். நிவாஸ் K. பிரசன்னா சாரைச் சந்தித்த பின் என் வாழ்வில் என்னென்ன நடக்கிறது என்பது என் குடும்பத்தினருக்கு நன்றாகத் தெரியும். எனக்கொரு மிகப்பெரிய பாக்கியத்தை அவர் கொடுத்தார். தாய்க்கிழவி மேடைக்கு முன், ஒரு பாட்டுக்குப் பத்தாயிரம், பதினஞ்சாயிரம் என வந்ததென்றால், அதற்குப் பின், ‘ஒரு பாட்டுக்கு எவ்ளோ சம்பளம் வாங்குறீங்க?’ எனக் கேட்கிறாங்க. இந்த வார்த்தையைக் கேட்க எத்தனை வருஷம் ஆகியிருக்கு! அதற்குக் காரணம் நிவாஸ் சார்தான். அவருக்கு மனமார்ந்த நன்றி. அனைவருக்கும் அன்பும் நன்றியும்” என்றார்.

நிறைவாக இயக்குநரும் நடிகருமான அமீர் பேசுகையில் , “தாரே ஜமீன் பர் படத்தில் வரும் சிறுவனின் இன்னொரு வெர்ஷன் தான் நான். புத்தகத்தைப் பார்த்தாலே ஒரு பதற்றம் வரும். இந்த மேடைக்கு வரக் காரணம் புத்தகம் அல்ல. அந்தப் புத்தகத்தை எழுதிய நபர்தான் காரணம். ஏன் அவருக்காக நான் வருகிறேன் என்றால், உடன்பிறந்த சகோதரி தொகுத்து வழங்கப் புத்தகத்தைப் பெற்றோர் இருவரும் வாங்கிக் கொள்ளும் பாக்கியம் இருக்கு இல்லையா, ஒரு மனிதன் தன் வாழ்க்கையில் வெற்றி அடைஞ்சுட்டான் என்கிற தருணம் அது. தன்னை இந்தச் சமூகம் ஒத்துக் கொண்டதுன்னு சொல்ற இடம் இருக்கில்லையா, அதைத் தன் குடும்பத்தார்க்கு உணர்த்தும் இடமிருக்கில்லையா, இந்த மாதிரி யார் விழா எடுத்தாலும் அந்த விழாவிற்குப் போவது என் வழக்கம். காரணம் எனக்கு இப்படியொரு விழா நடக்கவே இல்லை. நான் திரைத்துறைக்கு வந்து 25 ஆண்டுகள் ஆகின்றது. என்னுடைய எந்தப் படத்திற்கும் வெற்றி விழா நடந்ததில்லை. என் படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு என் குடும்பத்தினர் வந்ததில்லை. அதனால் தான் யாராவது தன் உறவுகளோடு, ஒரு ஆளாகியிருக்கிறேன் என நிற்கும்பொழுது பக்கத்தில் நிற்க வேண்டியது என் கடமைன்னு நினைக்கிறேன். இதை விட பெரிய வெற்றி என்ன ஒரு மனிதன் அடைந்து விட முடியும்? ஜெகன் கவிராஜின் பெற்றோர் சென்னைக்கு வந்து முதல் முறையாக இப்படியொரு அரங்கில் மகனைப் பார்க்கிறார்கள் என்றால், இதுதான் ஒரு மனிதன் அடைந்த உயரம்.

திருநெல்வேலி பக்கத்தில் பூலாங்குளம் எனும் கிராமத்தில், டீக்கடையும் விவசாயமும் பார்த்த பெற்றோர்கள் ஆறாவதோடு படிப்பை நிறுத்தி பீடி பிடித்துக் கொண்டிருந்த ஜெகன், ஏதோ ஒரு மில்லில் போய் வேலை பார்க்க, பதினாறு வயசில் இப்படியிருந்தா கெட்டுப் போயிடுவான்னு உறவினர்கள் சேர்ந்து காஞ்சிபுரத்துக்கு அனுப்பி வைக்கிறாங்க. காஞ்சிபுரத்தில் காயிலாங்கடை வியாபாரத்திலும், பின் கேரளாவுக்குப் போய் மண்ணு சுமக்கிற வேலை பார்த்திருக்கார். திருச்சியில தெரு தெருவாகப் போய் பாத்திர வியாபாரம் பார்க்கிறார். பழைய புத்தகக் கடையில் எடைக்குப் புத்தகம் போடுவாங்க இல்ல, அதுல வர்ற புத்தகங்களைப் படிச்சு ஏற்பட்ட வாசிப்புப் பழக்கம் தான் இவரை இங்க கொண்டு வந்து உட்கார வச்சிருக்கு. அதன் பின், ஏக இறைவனை வழிபடும் முற்போக்கான சிந்தனையும், இடதுசாரி சிந்தனையும் கொண்ட அய்யா வழில நுழைகிறார். சென்னைக்கு வந்து வெற்றிவேந்தன் ஆஃபீஸ்ல வேலை செய்து, அவங்க கம்பெனி எடுத்த நாகேஷ் திரையரங்கம் படத்தில் கடைசி அசிஸ்டென்ட்டாகச் சேர்ந்து, அந்த கம்பெனியிலேயே கேஷியராக வேலை பார்த்து, அதன் பின் பாட்டெழுதி, அப்புறம் மீடியாவிற்குள் வந்து, அப்புறம் ‘ஜீரக பிரியாணி’ பாடல், தாய்க்கிழவி படத்தில் பாட்டெழுதி, இப்போ நான் நடிச்சிட்டிருக்கிற படத்துக்குப் பாட்டு எழுதி, ஒரு புத்தகம் எழுதி சென்னையில் பெரிய வெளியீட்டு விழா நடத்துறார். இந்த மாதிரியான ஆட்களைச் சமூகத்துக்கு அறிமுகப்படுத்த வேண்டிய பொறுப்பு இருப்பதாக நான் நினைக்கிறேன். ஜெகனின் சிந்தனைக்கும், எண்ணத்துக்கும், அவர் சந்தித்த மனிதர்களையும், அவரது வட்டாரக் கதைகளையும் புத்தகமாகக் கொண்டு வந்ததற்கு அவருக்கு வாழ்த்துகளும் நன்றியும்” என்றார்.

தயாள் பத்மநாபனின் ‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ பத்திரிகையாளர் சந்திப்பு!மாநில அரசின் விருது பெற்ற இயக்குநரான தயாள் பத்மந...
02/06/2026

தயாள் பத்மநாபனின் ‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ பத்திரிகையாளர் சந்திப்பு!

மாநில அரசின் விருது பெற்ற இயக்குநரான தயாள் பத்மநாபன், பல மொழிகளில் கதைக்கான உள்ளடக்கத்தை மையப்படுத்தப்பட்ட தரமான திரைப்படங்களை வழங்கி வருபவர். அவரது மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தமிழ் திரைப்படமான ‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ ஜூன் 25 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

2M சினிமாஸ் மற்றும் D பிக்சர்ஸ் நிறுவனங்களின் சார்பில் கே.வி. ஷபரீஷ் தயாரித்துள்ள இப்படத்தில் வெற்றி, ரங்கராஜ் பாண்டே, பிரிகிடா சாகா, மாறன், சரவணன், லிஸ்ஸி ஆண்டனி, லோகன் கண்ணன், நர்மதா, அருவி மதன், கன்யா பாரதி, கவிதா பாரதி மற்றும் சுப்பிரமணியம் சிவா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்தின் பிரம்மாண்டமான பத்திரிகையாளர் சந்திப்பு சென்னை நகரில் படக்குழுவினரின் முன்னிலையில் நடைபெற்றது. நிகழ்வின் சிறப்பாக, படத்தின் காட்சிசார் சுருக்கமும் (Visual Synopsis), கதாபாத்திர அறிமுகமும் ஊடகங்களுக்கு பிரத்யேகமாக திரையிடப்பட்டது. இது படத்தின் உலகத்தையும் கதாபாத்திரங்களையும் பற்றிய சுவாரஸ்யமான முன்னோட்டத்தை வழங்கியதுடன், ஜூன் 25, 2026 அன்று நடைபெறவுள்ள திரையரங்கு வெளியீட்டிற்கான எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தியது.

நிகழ்ச்சியில் பேசப்பட்ட முக்கிய கருத்துகளின் தொகுப்பு பின்வருமாறு:

நடிகரும் எழுத்தாளருமான கவிதா பாரதி:

“தயாள் பத்மநாபன் கர்நாடகாவில் தொடர்ந்து தரமான மற்றும் துணிச்சலான படைப்புகளை வழங்கும் இயக்குநராக கொண்டாடப்படுகிறார். அவரது மூன்றாவது தமிழ் திரைப்படமான ‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. ஆரம்பத்தில் அவர் என்னைத் தொடர்புகொண்டு திரைக்கதை மற்றும் வசனங்களை எழுதுமாறு கேட்டார். இந்தப் படம் எங்கள் அனைவருக்கும் மிகவும் சிறப்பானது. பார்வையாளர்களுக்கும் இது வித்தியாசமான அனுபவமாக இருக்கும் என்று நம்புகிறேன்.”

ஒளிப்பதிவாளர் எம்.வி. பன்னீர்செல்வம்:

“எழுத்து வலுவாக இருக்கும் போது திரைப்படமும் ஆழமாக மாறுகிறது. தொழில்நுட்பக் கலைஞர்களும் தங்களது சிறந்த பங்களிப்பை வழங்க முடிகிறது. ‘கொன்றால் பாவம்’ படத்தின் அசல் பதிப்பைப் பார்த்த பிறகே தயாளுடன் எனது நட்பு தொடங்கியது. பல இயக்குநர்கள் வளர்ச்சியுடன் தங்களது படைப்புகளின் அளவை பெரிதாக்க முயல்வார்கள். ஆனால் தயாள் தனது கலைநோக்கில் உறுதியாக இருக்கிறார். மிகைப்படுத்தல்களைத் தவிர்த்து ஒவ்வொரு துறையையும் திட்டமிட்டு அணுகுகிறார். திரைக்கதை கட்டத்திலேயே ஒளிப்பதிவாளரை இணைக்கும் இயக்குநர்கள் அரிது. குழுவின் மீதான அவரது மரியாதை அபாரமானது. இப்படம் பார்வையாளர்களுக்கு ஒரு காட்சிவிருந்தாக (Visual Treat) இருக்கும்.”

இசையமைப்பாளர் தர்புகா சிவா:

“பல படங்களில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தாலும், சில படங்களே நம்மை சிந்திக்க வைக்கின்றன. எல்லா படங்களும் முடிந்தபின் பெருமிதத்தை தராது. ஆனால் ‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ எனக்கு மிகுந்த திருப்தியையும் மகிழ்ச்சியையும் அளித்துள்ளது. ஹுக் ஸ்டெப்ஸ், டிரெண்டிங் ஃபார்முலாக்கள், வைரல் அம்சங்கள் பற்றி எங்களிடம் பேச்சே இல்லை. திரைக்கதை கேட்டதை மட்டுமே செய்ய வேண்டும் என்பதில் தயாள் சார் நேர்மையாக இருந்தார்.”

நடிகர் வெற்றி:

“தயாள் சார் போல இவ்வளவு திட்டமிடலுடன் செயல்படும் இயக்குநரை நான் பார்த்ததில்லை. ‘கொன்றால் பாவம்’ பார்த்த பிறகு அவருடன் பணியாற்ற வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அது இப்போது நனவாகியுள்ளது. படம் மிகவும் சிறப்பாக உருவாகியுள்ளது. முழு குழுவிற்கும் எனது நன்றி.”

நடிகர் சரவணன்:

“இது தயாள் சாரின் மூன்றாவது தமிழ் படம் என்றாலும், அவர் கன்னடத்தில் ஏற்கனவே 18 படங்களை இயக்கியுள்ளார். அவர் மேலும் பல தமிழ் படங்களை இயக்க வேண்டும் என்று விரும்புகிறேன். அவரது திட்டமிடல் அனைவரும் தெளிவாகவும் அமைதியாகவும் வேலை செய்ய உதவியது. இந்தப் படம் பார்வையாளர்களுக்கு மிகவும் சிறப்பான அனுபவமாக இருக்கும்.”

நடிகை பிரிகிடா சாகா:

“இந்தப் படத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். தயாள் சார் ஒரு சிறந்த இயக்குநர் மட்டுமல்ல, அருமையான மனிதரும் கூட. படப்பிடிப்பில் அனைவரையும் குடும்பத்தினராக கவனித்தார். எனக்கு வழங்கப்பட்ட கதாபாத்திரம் மிகவும் நெருக்கமானது. முதல் காட்சியிலேயே என் பாட்டியின் ஆன்மாவுடன் இணைந்த உணர்வு ஏற்பட்டது. அந்த உணர்வை முழுப் படத்திலும் தக்கவைத்தேன். இந்த அனுபவம் எனக்கு என்றும் நினைவாக இருக்கும்.”

நடிகர் அருவி மதன்:

“சிறிய பட்ஜெட் படங்களுக்கு வலுவான உள்ளடக்கம் இருந்தால் அவை நிச்சயம் வெற்றி பெறும். என் ‘நூடுல்ஸ்’ படத்தின் மூலம் இதை அனுபவித்தேன். தயாள் சார் அதே பாதையில் பயணிக்கிறார். படப்பிடிப்பு தொடங்கும் முன்பே சம்பளம் வழங்கப்பட்டது என்பது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. திட்டமிட்ட முறையில் உருவாக்கப்பட்ட படம் வணிக ரீதியாகவும் வெற்றி பெறும்.”

நடிகை லிஸ்ஸி ஆண்டனி:

“இந்தப் படத்தில் நான் சூடாமணி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். பொதுவாக நடிகர்களுக்கு, தாங்கள் செலுத்திய உழைப்பிற்கு இறுதி வெளியீடு நியாயம் செய்யுமா என்ற சந்தேகம் இருக்கும். ஆனால் தயாள் சார் இயக்கும் படங்களில் அத்தகைய கவலை தேவையில்லை. அவரது தெளிவான கலைநோக்கும் திட்டமிடலும் நடிகர்களின் நடிப்பை உயர்த்திக் காட்டும்.”

நடிகரும் இயக்குநருமான சுப்பிரமணியம் சிவா:

“தயாள் மிகுந்த தெளிவுடைய மனிதர். அவர் வீடு கட்டினாலும், திருடர்கள் எளிதில் உள்ளே வருவதற்கே ஒரு தனி வழியை திட்டமிட்டு வைத்திருப்பார் என்று நகைச்சுவையாக சொல்வேன். அந்த அளவுக்கு அவரது திட்டமிடல் அசாதாரணமானது. தனுஷிடம் நான் கண்ட தெளிவை இப்போது தயாளிடமும் பார்க்கிறேன். வணிக மற்றும் மாற்று சினிமாவுக்கிடையேயான இடைவெளியை இந்தப் படம் அழகாக இணைக்கிறது.”

நடிகர் ஆரவ்:

“ஒரு கொலைக்காக குற்றவாளிக்கு மரண தண்டனை வழங்கப்பட வேண்டுமா என்ற முக்கியமான கேள்வியை இந்தப் படம் எழுப்புகிறது. தயாள் பத்மநாபன் மிகத் திறமையான இயக்குநர். குறுகிய காலத்தில் திட்டமிட்டு தரமான படைப்புகளை உருவாக்கும் அவரது திறனை நான் எப்போதும் பாராட்டியுள்ளேன். அனைத்து தரப்பு மக்களுக்கும் இந்தப் படம் ஒரு சிறப்பான அனுபவமாக இருக்கும்.”

இயக்குநர் தயாள் பத்மநாபன்:

“எங்கள் தயாரிப்பாளர் ஷபரீஷ் தற்போது மொரீஷியஸில் தனது அடுத்த படத்தின் படப்பிடிப்பில் உள்ளார். ரங்கராஜ் பாண்டேவும் அவருடன் இருக்கிறார். அதனால் இருவரும் இன்று வர முடியவில்லை.

இது என் 22வது திரைப்படமும், மூன்றாவது தமிழ் படமும் ஆகும். இந்தப் படத்தைப் பற்றிய சில முக்கிய தகவல்களை நாங்கள் திட்டமிட்டு மறைத்துள்ளோம். அவை வெளியீட்டுக்குப் பிறகான பத்திரிகையாளர் சந்திப்பில் வெளிப்படுத்தப்படும்.
உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட இந்தப் படம், 1972-ஆம் ஆண்டை பின்னணியாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. மரண தண்டனைக் கைதியின் வாழ்க்கையில் ஒரு இரவை மையமாகக் கொண்டு, அவன் கடந்தகாலத்தை மீள்பார்க்கும் கதையாக இது அமைந்துள்ளது.

கன்னடத் துறையில் பணியாற்றியதால் என் தமிழ் பேசும் திறன் சற்று குறைந்துவிட்டது. இந்தப் படத்தின் திரைக்கதை மற்றும் வசனங்களை சிறப்பாக வடிவமைத்த கவிதா பாரதி சாருக்கு நான் மனமார்ந்த நன்றி தெரிவிக்கிறேன்.
என் நடிகர்கள் அனைவரும் தங்கள் இதயத்தையும் ஆன்மாவையும் இந்தப் படத்திற்காக அர்ப்பணித்துள்ளனர். தொழில்நுட்பக் கலைஞர்கள் நான் கொடுத்த அழுத்தத்தையும் பொறுமையுடன் ஏற்றுக்கொண்டனர்.

பிரிகிடாவுக்கு இப்படத்தில் அழகான கதாபாத்திரம் உள்ளது. வெற்றி மற்றும் ரங்கராஜ் பாண்டே இருவருக்கும் கதையில் சமமான முக்கியத்துவம் உள்ளது. குறிப்பாக சரவணன் சார், இந்தப் படத்தின் மீது கொண்ட அன்பினால் தனது சம்பளத்தைக் குறைத்ததோடு, கிளைமாக்ஸ் காட்சிக்காக கூடுதலாக ஒரு நாள் படப்பிடிப்பையும் வழங்கினார்.

படப்பிடிப்பு முடிந்த நாளில், திட்டமிட்டதை விட இரண்டு நாட்கள் முன்னதாகவே வேலை முடிந்ததால், ரங்கராஜ் பாண்டே தனது சம்பளத்தில் இருந்து ரூ.2 லட்சத்தைத் திருப்பிக் கொடுத்தார். இந்த முழு பயணத்திலும் குழுவின் ஆதரவு அளவிட முடியாதது. அவர்களுடன் பணியாற்றியதில் நான் மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டவனாக உணர்கிறேன்.”

இதனைத் தொடர்ந்து, படக்குழுவினர் ஊடகங்களுடன் கலந்துரையாடி, திரைப்படம், கதாபாத்திரங்கள் மற்றும் உருவாக்க அனுபவங்கள் குறித்த பல்வேறு தகவல்களைப் பகிர்ந்து கொண்டனர். பிரத்யேக காட்சிசார் சுருக்கமும் கதாபாத்திர அறிமுகமும் ஊடகங்களின் பாராட்டைப் பெற்ற நிலையில், ஜூன் 25 அன்று உலகம் முழுவதும் வெளியாகவுள்ள ‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.

தனது பிறந்தநாளில் முதியோரிடம் ஆசிபெற்ற நடிகை சோனா!நடிகை சோனா தனது பிறந்தநாளை முன்னிட்டு மதுரவாயலில் உள்ள 'பிருந்தாவனம் ம...
01/06/2026

தனது பிறந்தநாளில் முதியோரிடம் ஆசிபெற்ற நடிகை சோனா!

நடிகை சோனா தனது பிறந்தநாளை முன்னிட்டு மதுரவாயலில் உள்ள 'பிருந்தாவனம் முதியோர் இல்லம்' சென்று அங்கிருந்த முதியோரிடம் ஆசி பெற்றார்.

முதியோர் இல்லத்தில் தங்கியிருந்த முதியோர்களைச் சந்தித்து நலம் விசாரித்தவுடன் அவர்களுக்கு உணவு, பரிசுப் பொருட்களை வழங்கினார்.

நடிகை சோனா ஹைடன் திரைத்துறையின் தொழில்நுட்பங்களை அறிவதில் அர்வம் உள்ளவர், அதில் ஈடுபடவும் செய்பவர். அவர் இயக்கி நடித்து அண்மையில் வெளிவந்த 'பஜ்ராவோ மஸ்தானி' இசை ஆல்பம் பெரிய வெற்றி பெற்றுள்ளது.இதில் சோனாவுடன் பின்னணிப் பாடகர் அந்தோணி தாசன் பாடி நடித்திருக்கிறார். V2 இசையமைப்பில் ஆசிஃப் கான் ஒளிப்பதிவில் இந்த ஆல்பத்தை சோனாவே இயக்கியிருந்தார்.

ஏற்கெனவே பல படங்களில் பல்வேறு பாத்திரங்களில் நடித்துப் பிரபலமாகியுள்ள
நடிகை சோனா, பிரதான வேடமிட்டு நடிக்கும் புதிய படம் தொடங்கி இருக்கிறது.புதிய படம் பற்றிய விவரங்கள் விரைவில் வெளிவரும்.

தனது புதிய படம் தொடங்குவதை முன்னிட்டு தன் பிறந்தநாளில் நடிகை சோனா முதியோரிடம் ஆசி பெற்றது குறிப்பிடத்தக்கது.ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்பது போல் முதியோரிடம் ஆசி பெற்றதை யே தனக்குக் கிடைத்த பெரிய வாழ்த்தாக நினைத்து மகிழ்கிறார்.

*ரோமியோ பிக்சர்ஸ் தயாரிப்பில் ஆகாஷ் முரளி நடிக்கும் புதிய திரைப்படம் பூஜையுடன் இனிதே துவக்கம்!**தமிழக பள்ளிக்கல்வித் துற...
31/05/2026

*ரோமியோ பிக்சர்ஸ் தயாரிப்பில் ஆகாஷ் முரளி நடிக்கும் புதிய திரைப்படம் பூஜையுடன் இனிதே துவக்கம்!*

*தமிழக பள்ளிக்கல்வித் துறை,
தமிழ் வளர்ச்சித் துறை,
செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் ராஜ் மோகன் துவங்கி வைத்த ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனத்தின் புதிய படம் !!*

தமிழ் சினிமாவில் தரமான மற்றும் வெற்றிப் படைப்புகளை தொடர்ந்து வழங்கி வரும் ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனத்தின் அடுத்த பிரம்மாண்ட தயாரிப்பு சிறப்பான பூஜையுடன் துவங்கியது. ரோமியோ பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ராகுல் தயாரிக்கும் இப்படத்தில் நடிகர் ஆகாஷ் முரளி கதாநாயகனாக நடிக்கிறார். அறிமுக இயக்குநர் ஹர்ஷவரதன் இப்படத்தை இயக்குகிறார்.

இப்படத்தின் துவக்க விழாவில் தமிழக பள்ளிக்கல்வித் துறை, தமிழ் வளர்ச்சித் துறை, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் ராஜ் மோகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு படக்குழுவினருக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்ததுடன், படத்தை அதிகாரப்பூர்வமாக துவக்கி வைத்தார். குறிப்பிடத்தக்க வகையில், அமைச்சர் ராஜ் மோகன் தனது முதல் இயக்குநர் முயற்சியான “பாபா பிளாக் ஷீப்” திரைப்படத்தை ரோமியோ பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்கியிருந்தார். தற்போது அமைச்சராக பொறுப்பேற்றுள்ள அவர், அதே நிறுவனத்தின் புதிய திரைப்படத்தை துவக்கி வைத்தது நிகழ்வுக்கு மேலும் சிறப்புச் சேர்த்தது.

மேலும், முன்னணி இயக்குநர் ஹெச். வினோத் மற்றும் நடிகர் ரவி மோகன் ஆகியோர் விழாவில் கலந்துகொண்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

இயக்குநர் ஹெச். வினோத் அவர்களிடம் இணை இயக்குநராக பணியாற்றிய ஹர்ஷவரதன், இந்த திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

1970-களின் தொடக்க காலத்தை பின்னணியாகக் கொண்டு உருவாகும் இப்படம், குதிரைப் பந்தய உலகை மையமாகக் கொண்டு நேர்மையும் உயர்ந்த லட்சியங்களும் கொண்ட ஒரு இளைஞனின் போராட்டம், கனவுகள் மற்றும் வெற்றிப் பயணத்தை சுவாரஸ்யமாகச் சொல்லும் கதையாக உருவாகவுள்ளது.

1970-களின் சென்னையை திரையில் உயிர்ப்பிக்க, படக்குழு தற்போது தீவிரமான முன்தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறது. அந்தக் காலகட்டத்தின் வாழ்க்கை முறை, கலாச்சாரம் மற்றும் நகரின் தனித்துவமான சூழலை மிக நுணுக்கமாக திரையில் பதிவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் மாறுபட்ட கதைக்களங்களையும், வணிக ரீதியான வெற்றிகளையும் தொடர்ந்து வழங்கி வரும் ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம், இந்த திரைப்படத்தையும் மிகப்பெரிய பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரிக்கிறது.

இப்படத்தில் நடிக்கவுள்ள மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.

Address

Chennai
600093

Alerts

Be the first to know and let us send you an email when Kollywood Street posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share