Kollywood Street

Kollywood Street Xclusive Indian Cinema Updates 24×7 News, Photo's, Video's, & Many More...

 #தாவூத் -   - திரை விமர்சனம் - 3/5TURM புரொடக்ஷன் ஹவுஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், S. உமா மகேஸ்வரி வழங்கும் “தாவூத்”, வட...
14/11/2025

#தாவூத் - - திரை விமர்சனம் - 3/5

TURM புரொடக்ஷன் ஹவுஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், S. உமா மகேஸ்வரி வழங்கும் “தாவூத்”, வடசென்னை குற்ற உலகை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட சதி–திரில்லர். அறிமுக இயக்குநர் பிரசாந்த் ராமன் கதை, திரைக்கதை, வசனம் அனைத்தையும் தானே எழுதி இயக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

லிங்கா (தம்பிதுரை) கதாநாயகனாக தீவிரமான, செறிவான நடிப்பால் தன் திறமையை நிரூபிக்கிறார். படத்தின் மிகப்பெரிய பலம் என்றும் சொல்லலாம். தன் கதாபாத்திரத்தை உணர்ந்து இயல்பான நடிப்பின் மூலம் ரசிகர்களை வெகுவாக கவருகிறார்.

சாரா ஆச்சர் (டேனி) இந்த படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகிறார்; அவரின் நெகிழும் முகபாவனைகள், இயல்பான நடிப்பு கவனத்தை ஈர்க்கிறது.

திலீபன் (பாய்சன்), ராதாரவி (போலீஸ் கமிஷ்னர்), சாய் தீனா (மூர்த்தி), ஸாரா (மணி), வையாபுரி, சரத்ரவி, அர்ஜெய், அபிஷேக் உள்ளிட்டோரின் சேவையும் படத்துக்கு தகுந்த வலிமை சேர்க்கிறது.

மேலும், ஆனந்த் நாக், ஜெயகுமார், சேரன்ராஜ், சரவணன் சீலன் ஆகியோரின் பங்கு கதைநேர்த்தியை மேம்படுத்துகிறது.


கதை – கடத்தல் உலகின் சிக்கல்கள்

தமிழகத்தின் பெரிய கடத்தல் மன்னனான தாவூத், தனது கைபவர் மூர்த்தி வழியாக 20 ஆண்டுகளாக நடத்தும் ரகசிய வியாபாரம் ஒரு தவறால் சிக்கலில் விழுகிறது. இதனால் மூர்த்தி–விசாகம் இடையேயான அதிகாரப் போர், போலீஸின் துரத்தல், நடுவே உயிர்பலி எடுக்கும் பழி–ஓட்டை—இவை அனைத்தும் சேர்ந்து ஒரு திகில் நிறைந்த திரைக்கதை உருவாகிறது.

இயக்குநர் பிரசாந்த் ராமன், கள்ளக்காதல்–ரவுடிசம்–வடசென்னை மண்ணின் கருப்புச் சூழலை சரியான அளவில்

கலந்து, படத்தை உணர்வு குலைக்கும் வகையில் வடித்துள்ளார்.

தொழில்நுட்ப அணியின் பங்களிப்பு

ஒளிப்பதிவு – சரத் வளையாபதி & பிரேண்டன் சுஷாந்த்
வடசென்னையின் நெருக்கமான தெருக்கள் முதல் சண்டைக் காட்சிகள் வரை அனைத்தையும் உணர்வோடு பதிவு செய்துள்ளனர்.

இசை – ராக்கேஷ் அம்பிகாபதி
பின்புல இசை காட்சியின் தீவிரத்தையும் வலிமையையும் உயர்த்துகிறது.
‘என்னடா வாழ்க்கை’ பாடல் G.V. பிரகாஷ் குமாரின் குரலில் நேரடியாக மனதில் பதிகிறது.

எடிட்டிங் – R.K. ஸ்ரீநாத்
வேகமும், காட்சித் தொடர்ச்சியும் கையில் தக்கவைத்துள்ளார்.

மொத்தத்தில் தாவூத்” ஒரு செறிவான, சீரான, தீவிரமான கிரைம்–டிராமா என்று சொல்லலாம்.

இயக்குநர் பிரசாந்த் ராமன் தனது முதல் படத்திலேயே கதை சொல்லும் திறமை, காட்சிப்படுத்தும் விதம், பாத்திர வடிவமைப்பு ஆகியவற்றில் திறமையை நிரூபித்துள்ளார்.

*நடிகர்கள் சித்தார்த்- ராஷி கண்ணா நடிக்கும் 'ரெளடி & கோ"- நகைச்சுவை நிறைந்த கலாட்டா திரைப்படம்!*கமர்ஷியலாகவும் விமர்சன ர...
14/11/2025

*நடிகர்கள் சித்தார்த்- ராஷி கண்ணா நடிக்கும் 'ரெளடி & கோ"- நகைச்சுவை நிறைந்த கலாட்டா திரைப்படம்!*

கமர்ஷியலாகவும் விமர்சன ரீதியாகவும் பாராட்டப்படும் தரமான படங்களைத் தயாரித்து வரும் பேஷன் ஸ்டுடியோஸ், சுதன் சுந்தரம் தயாரிப்பில் தற்போது 'ரெளடி & கோ' திரைப்படம் உருவாகியுள்ளது. மனம் விட்டு சிரிக்கும்படியான அட்டகாசமான டைட்டில் லுக் இன்று வெளியாகியுள்ளது.

முன்பு சித்தார்த் நடித்த ஆக்‌ஷன் கதையான 'டக்கர்' படத்தை இயக்கிய கார்த்திக் ஜி கிரிஷ் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். கார்த்திக்- சித்தார்த் ஜோடி இணையும் இரண்டாவது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தமுறை ரொமாண்டிக் காமெடி கதையுடன் ரசிகர்களை மகிழ்விக்க இருக்கிறார்கள்.

உணவு டெலிவரி சர்வீஸ் போல மக்களின் பிரச்சினைகளை கையாளும் கார்பரேட் ரெளடி உலகத்திற்கு ரசிகர்களை 'ரெளடி & கோ' அழைத்து செல்ல இருக்கிறது. சென்னையில் படமாக்கப்பட்ட இந்தக் கதை சிக்கலான சம்பவங்கள் மற்றும் அதனால் ஏற்படும் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் நகைச்சுவை என இரண்டிற்கும் உத்திரவாதம் அளிக்கிறது.

படத்தின் டைட்டில் குறித்து இயக்குநர் கார்த்திக் ஜி கிரிஷ் பகிர்ந்து கொண்டதாவது, "ரெளடிகளின் கார்ப்பரேட் சாம்ராஜ்யம் பற்றிய கதை என்பதால் 'ரெளடி & கோ' என்பதை தலைப்பாக தேர்வு செய்தோம். முழுக்க முழுக்க நகைச்சுவை நிறைந்த எண்டர்டெயினராக கதை இருக்கும்.

நடிகர்கள் சித்தார்த் மற்றும் ராஷி கண்ணா இருவரும் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்க அவர்களுடன் சுனில், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்ஸி, பிராங்க்ஸ்டர் ராகுல், வெற்றி மணி மற்றும் சார்லஸ் வினோத் ஆகியோர் நடித்துள்ளனர். 'தனி ஒருவன்' புகழ் வம்சி வில்லனாக நடித்துள்ளார்.

படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில் இன்னும் 15- 20 நாட்களில் போஸ்ட் புரொடக்சன் பணிகளும் நிறைவடைந்து விடும். தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் என பான் இந்திய அளவில் படம் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

*தொழில்நுட்பக்குழு விவரம்:*

ஒளிப்பதிவு: அரவிந்த் சிங்,
படத்தொகுப்பு: பிரதீப் E ராகவ்,
கலை இயக்கம்: ஆறுச்சாமி,
இசை: ரேவா,
வடிவமைப்பு: டியூனி ஜான்.

*கூடைப்பந்து விளையாட்டு களத்தை அடிப்படையாகக் கொண்ட 'நடு சென்டர்' சீரிஸ் நவம்பர் 20 ஆம் தேதியில் இருந்து பிரத்யேகமாக ஜியோ...
14/11/2025

*கூடைப்பந்து விளையாட்டு களத்தை அடிப்படையாகக் கொண்ட 'நடு சென்டர்' சீரிஸ் நவம்பர் 20 ஆம் தேதியில் இருந்து பிரத்யேகமாக ஜியோ ஹாட்ஸ்டாரில் ப்ரீமியர் ஆகிறது!*

எனர்ஜி, எமோஷன் என இந்தத் தலைமுறையினருக்கு ஏற்ற பள்ளிக்கால கூடைப்பந்து விளையாட்டை அடிப்படையாகக் கொண்ட 'நடு சென்டர்' வெப்சீரிஸ் நவம்பர் 20 ஆம் தேதியில் இருந்து ஜியோஹாட்ஸ்டாரில் பிரத்யேகமாக ஸ்ட்ரீம் ஆகிறது. தற்போது வெளியாகி இருக்கும் டிரைய்லரில் வாழ்வில் கிடைக்கும் இரண்டாவது வாய்ப்பு, நட்பு மற்றும் விளையாட்டால் ஏற்படும் மாற்றம் என இந்தத் தொடரின் உலகிற்குள் நம்மை அழைத்து செல்கிறது.

தேசிய அளவிலான கூடைப்பந்து வீரரான 17 வயது பிகே, தவறான நடத்தைக்காக உயர்நிலைப் பள்ளியில் இருந்து வெளியேற்றப்படுகிறான். வன்முறை மற்றும் ஒழுக்கமின்மையால் பாதிக்கப்பட்ட ஒரு மோசமான பள்ளிக்கு பிகே மாற்றப்பட்டு அங்கு பொருந்த போராடுகிறான். அப்போது அவனுக்குள் இருக்கும் திறமையைக் கண்டறிந்து வைஸ் பிரின்சிபிள் ஊக்குவிக்க அவனது வாழ்வு மாறத் தொடங்குகிறது.

கட்டுக்கடங்காத மாணவர்களை கொண்ட பள்ளியில் கூடைப்பந்து அணியை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள பிகே-வின் தலைமைத்துவம், தன்னைத் தானே கண்டறிதல், மற்றவர்களின் நம்பிக்கை பெறுதல் மற்றும் பள்ளியின் இழந்த பெருமையை மீட்டெடுப்பது என வாழ்வில் முன்னேறுகிறான்.

எனர்ஜி மற்றும் உணர்வுப்பூர்வமான பல தருணங்களைக் கொண்ட இளைஞர்களுக்கான கதையான 'நடு சென்டர்' தொடரில் சூர்யா எஸ் கே, சூர்யா விஜய் சேதுபதி, சாரா பிளாக், டெரன்ஸ், முகேஷ், டோம், யஷ்வந்த், சஹானா, மதுவசந்த், ஆர்த்தி, கிஷோர், ஜீவா, நந்தகோபால், தாரா அமலா ஜோசப் மற்றும் சிவம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இவர்களுடன் அனுபவம் வாய்ந்த நடிகர்களான ஆஷா ஷரத், கலையரசன் மற்றும் எம். சசிகுமார் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் ஆழமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

இந்தத் தொடர் குறித்து இயக்குநர் நரு நாராயணன் பகிர்ந்து கொண்டதாவது, "ஸ்போர்ட்ஸ் டிராமாவான 'நடு சென்டர்' உயர்நிலைப்பள்ளியின் கூடைப்பந்து அணி சுற்றி மட்டுமே நகரும் கதை கிடையாது. அதையும் தாண்டி அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் வாழ்க்கை முறையையும் பேசுகிறது. நான் என் உயர்நிலைப்பள்ளியில் வழக்கமாக பேஸ்கட்பால் விளையாடுவேன். பின்பு, பேஸ்கட்பால் கோர்ட்டோ கோச்சோ இல்லாத ஒரு பள்ளியில் சேர்ந்தேன். அங்கு நண்பர்களை உருவாக்கி, அணியாக சேர்ந்து பல மேட்ச் சென்றிருக்கிறோம். நல்ல நட்பு எனக்கு அங்கு கிடைத்தது. அப்படியான பிணைப்பையும் ஒற்றுமையையும் இந்தக் கதையில் பேசியிருக்கிறோம்.

இந்தத் தொடரில் பயிற்சியாளராக சசிகுமார் நடித்திருக்கிறார். வாழ்வில் எதாவது ஒரு வடிவத்தில் ஒரு நாள் நிச்சயம் பேஸ்கட்பால் உனக்கு உதவும் என பிகே-விடம் சசிகுமார் சொல்வார். இதை எனக்கு என்னுடைய பயிற்சியாளர் சொன்னார். பல வருடங்கள் முன்னால் அவர் சொன்னது எனக்கும் எஸ் கே சூர்யாவுக்கும் இன்று நனவாகி இருக்கிறது. கூடைப்பந்தால் தான் எங்கள் இருவருக்கும் முதல் வாய்ப்பு கிடைத்தது. இந்தத் தொடரை ஆத்மார்த்தமாகவும் மகிழ்ச்சியுடனும் உருவாக்கியுள்ளோம்" என்றார்.

நடிகர்களின் திறமையான நடிப்பு, இளைஞர்களின் எனர்ஜி, விறுவிறுப்பான கதை சொல்லல் என அனைத்து தரப்பினருக்கும் பிடித்த தொடராக 'நடு சென்டர்' இருக்கும். இத்துடன் விளையாட்டின் பவர், நோக்கம், ஒழுக்கம், தனக்கென அடையாளம் தேடும் தலைமுறையினரின் வாழ்க்கை என அனைத்தும் இதில் இடம்பெறும்.

நவம்பர் 20, 2025-ல் இருந்து ஜியோஹாட்ஸ்டாரில் பிரத்யேகமாக ஸ்ட்ரீம் ஆகிறது 'நடு சென்டர்'.

*தொழில்நுட்பக் குழு விவரம்:*

இயக்கம்: நரு நாராயணன்,
எழுத்து: நரு நாராயணன், கீர்த்தி, நிர்மல்,
ஒளிப்பதிவு: ஹெஸ்டின்,
இசை: விஷால் சந்திரசேகர்,
படத்தொகுப்பு: வெங்கட்,
கலை இயக்குநர்: ஜாக்கி,
தயாரிப்பு: அரபி ஆத்ரேயா, அவினாஷ் ஹரிஹரன் மற்றும் செந்தில் வீராசாமி,
தயாரிப்பு பேனர்: அக்குவா புல்ஸ் கண்டெண்ட்

*ஜியோஹாட்ஸ்டார் பற்றி:*

ஜியோஹாட்ஸ்டார் இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளங்களில் ஒன்று. இது ஜியோசினிமா மற்றும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஆகியவற்றின் இணைப்பின் மூலம் உருவாக்கப்பட்டது. சிறப்பான கதைக்களங்கள், புதுமையான தொழில்நுட்பத்துடன் ஜியோஹாட்ஸ்டார் இந்தியா முழுவதும் உள்ள அனைவருக்கும் பொழுதுபோக்கை மறுவரையறை செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

*தளபதி விஜய்-சூர்யா நடித்த 'ப்ரண்ட்ஸ்' திரைப்படம் நவம்பர் 21 அன்று அதிநவீன டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் மீண்டும் வெளியாகி...
14/11/2025

*தளபதி விஜய்-சூர்யா நடித்த 'ப்ரண்ட்ஸ்' திரைப்படம் நவம்பர் 21 அன்று அதிநவீன டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் மீண்டும் வெளியாகிறது*

*ஜாகுவார் ஸ்டுடியோஸ் பி. வினோத் ஜெயின் உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் 'ப்ரண்ட்ஸ்' திரைப்படத்தை வெளியிடுகிறார்*

தளபதி விஜய் நடித்த 'கில்லி', 'சச்சின்', 'குஷி' உள்ளிட்ட திரைப்படங்கள் திரையரங்குகளில் மீண்டும் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்திய நிலையில் விஜய்யும் சூர்யாவும் இணைந்து நடித்த 'ப்ரண்ட்ஸ்' திரைப்படம் மீண்டும் வெளியாகவுள்ளது.

'மிருகா', 'மாயப்புத்தகம்', ஜீவா, மிர்ச்சி சிவா நடிப்பில் விரைவில் வெளியாக உள்ள 'கோல்மால்' உள்ளிட்ட திரைப்படங்களின் தயாரிப்பாளரும் தமிழ்நாடு மற்றும் கேரளாவில் எண்ணற்ற படங்களை விநியோகம் செய்தவருமான பி. வினோத் ஜெயின், ஜாகுவார் ஸ்டுடியோஸ் சார்பில் 'ப்ரண்ட்ஸ்' திரைப்படத்தை அதிநவீன டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் நவம்பர் 21ம் தேதி உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியிடுகிறார்.

இது குறித்து பேசிய அவர், "கடந்த 2001ம் ஆண்டு பொங்கல் திருநாளுக்கு வெளியான 'ப்ரண்ட்ஸ்' திரைப்படம் பெரும் வெற்றி பெற்றது. தளபதி விஜய் மற்றும் சூர்யா உள்ளிட்ட பெரும் நட்சத்திரப் பட்டாளம், வைகைப்புயல் வடிவேலுவின் என்றென்றும் நெஞ்சில் நிற்கும் நகைச்சுவை, இசைஞானி இளையராஜாவின் இதயம் தொடும் இசை என பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ள படத்தை வரும் நவம்பர் 21 அன்று மீண்டும் வெளியிடுவதில் மிக்க மகிழ்ச்சி. அனைத்து வயதினரும் அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையிலான இப்படத்தை ரசிகர்களும் மக்களும் குடும்பத்துடன் திரையரங்குகளுக்கு வந்து கண்டுக்களிப்பார்கள் என்று நம்புகிறேன்," என்றார்.

தேவயானி, விஜயலட்சுமி, ராதாரவி, ரமேஷ் கண்ணா, அபிநயா ஸ்ரீ, ஸ்ரீமன் சார்லி, மதன் பாப் உள்ளிட்டோர் நடித்துள்ள 'ப்ரண்ட்ஸ்' திரைப்படத்தை ஸ்வர்க்கசித்ரா சார்பில் அப்பச்சன் தயாரிக்க சித்திக் இயக்கியிருந்தார். ஆனந்தக்குட்டன் ஒளிப்பதிவு செய்ய பி. லெனின் மற்றும் வி.டி. விஜயன் படத்தொகுப்பை கையாண்டிருந்தனர்.

 #மதறாஸ்மாஃபியாகம்பெனி -   - திரை விமர்சனம் - 3/5ராயபுரம் ஏரியாவின் பிரபல தாதாவான பூங்காவனம் (ஆனந்தராஜ்), ஒரு வித்தியாசம...
14/11/2025

#மதறாஸ்மாஃபியாகம்பெனி - - திரை விமர்சனம் - 3/5

ராயபுரம் ஏரியாவின் பிரபல தாதாவான பூங்காவனம் (ஆனந்தராஜ்), ஒரு வித்தியாசமான ரவுடி ஏஜென்சியை ஐ.டி. கம்பெனி போல் நடத்தி வருகிறார். ஒவ்வொரு ஏரியாவுக்கும் ஏஜெண்டுகளை நியமித்து, தனக்கு அசைன்மென்ட்களைக் வரும் கொடுத்து கொலைகளைச் செய்கிறார். பல கொலைகள் செய்தும் பூங்காவனம் மீது ஒரு எஃப்.ஐ.ஆர் கூட இல்லை என்பதால், அவரைக் கைது செய்ய முடியாமல் போலீஸ் திணறுகிறது. இன்ஸ்பெக்டர் திகழ் பாரதி (சம்யுக்தா) தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, பூங்காவனத்தை என்கவுண்டர் செய்ய முடிவெடுக்கப்படுகிறது. இந்தத் திட்டங்களை அறிந்த பூங்காவனம் அவர்களிடமிருந்து தப்பிக்க முடிந்ததா? என்பதே கிளைமாக்ஸ்.

இயக்குநர் ஏ.எஸ். முகுந்தன் ரவுடியிச கதையாக இருந்தாலும், ரத்தம், குத்து, வெட்டு என்று தலை சுற்ற வைக்காமல், குடும்ப சென்டிமென்ட் மற்றும் மகள் சென்டிமென்ட் கலந்து, ஒரு தாதா குடும்பத்தில் நடக்கும் பிரச்சனைகளைச் சுவாரஸ்யமான காமெடியுடன் கொடுத்திருக்கிறார். இந்த அணுகுமுறை படத்தின் தொனியையும் இலகுவாக்குகிறது. மொத்த. வில்லனாகத் தொடங்கி, ஹீரோவாக நடித்து, பின்னர் காமெடிப் படங்களில் பயணித்த ஆனந்தராஜுக்கு, இந்தப் படம் மீண்டும் ஒரு ஹீரோ வாய்ப்பாக அமைந்திருப்பது அவரது நடிப்பு வாழ்க்கையில் ஒரு சுழற்சியாக மாறியுள்ளது.

கதையே சுற்றித்தான் அவரைச் பின்னப்பட்டுள்ளது. வில்லத்தனமும், தன்னை என்கவுண்டர் செய்ய வரும் சம்யுக்தாவிடம் இருந்து தப்பிப்பதற்காக அவர் செய்யும் ஹீரோயிசமும் ரசிக்கும்படி உள்ளது,படத்தின்

தொடக்கத்தில் காட்சிகளில் ஆனந்தராஜுக்கு காட்சியிலேயே ஒன்றிரண்டு தலைகாட்டிய அடுத்த மாலை போட்டு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டியதை பார்த்தவுடன் ஷாக் ஏற்படுகிறது. ஆனால், அதன் பிறகு பிளாஷ்பேக்கில் காட்சிகளிலும் விரியும் அவரது ரவுடியிச கதை, கத்திக்குத்து நகைச்சுவை இழையோட நடித்து வித்தியாசமான ஆனந்தராஜாக ஆச்சரியப்பட வைக்கிறது.கிளைமாக்ஸில்

ஆனந்தராஜ் நடத்தும் கூத்து, இந்தப் படத்தில் பாகம் இரண்டாம் எடுப்பதற்குத் தேவையான லீட்களைக் கொடுத்து, அதில் மீண்டும் நடிக்க அவர் தயார் என்பதற்கான சமிக்ஞையையும் இயக்குநருக்குத் தந்திருக்கிறார்.
ஆனந்தராஜை போட்டுத்தள்ள அவர் பின்னாலேயே கத்தியுடன் சுற்றி வரும் முனிஷ்காந்த், ஒவ்வொரு முறையும் ஆனந்தராஜைக் கொல்ல முடியாமல் மொக்கை வாங்கி, அவரிடமே அடியும் வாங்கி செய்யும் காமெடி,அரங்கைக் கலகலப்பாக்குகிறது.

ரவுடிசம்,

ஆக்ஷன், காமெடி, சென்டிமென்ட் ஆகியவற்றைச் சரியான விகிதத்தில் கலந்து, ஒரு சுவாரஸ்யமான பொழுதுபோக்கு விருந்தாகப் பரிமாறப்பட்டுள்ளது. லாஜிக்கைப் பார்க்காமல், சிரிப்பிற்கு உத்தரவாதம் தரும் ஜஸ்ட் டைம் பாஸ் மூவி இது.

கிச்சா சுதீப்  நடித்த MARK படத்தின் படப்பிடிப்பு மிக பிரமாண்டமாக நிறைவு! கிச்சா சுதீப் நடித்திருக்கும் மிகுந்த எதிர்பார்...
13/11/2025

கிச்சா சுதீப் நடித்த MARK படத்தின் படப்பிடிப்பு மிக பிரமாண்டமாக நிறைவு!

கிச்சா சுதீப் நடித்திருக்கும் மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கும் MARK திரைப்படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ளது. இறுதி கட்டத்தில், 200 அடி நீளமுடைய மாபெரும் கப்பல் செட் அமைக்கப்பட்டு, அதில் நடைபெற்ற பாடல் படப்பிடிப்பில் 100 க்கும் மேற்பட்ட கலைஞர்கள் மற்றும் 300 ஜூனியர் ஆர்டிஸ்ட்கள் கலந்து கொண்டனர்.

ரசிகர்களின் எதிர்பார்ப்பை மிஞ்சும் அளவிற்கு பிரமாண்டமாக படத்தை உருவாக்க தயாரிப்பு குழு முழு மனதுடன் செயல்பட்டுள்ளது.
இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் முன்னணி நடிகர்களான நவீன் சந்திரா, யோகி பாபு, குரு சோமசுந்தரம், விக்ராந்த் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அஜனீஷ் லோக்நாத் இசையமைத்துள்ளார். இதன் மூலம் MARK திரைப்படம் தனது படப்பிடிப்பை நிறைவு செய்து, தற்போது வெளியீட்டுக்காக பிந்தைய பணிகளில் இறங்கியுள்ளது.

“ரஜினி கேங்” திரைப்பட இசை மற்றும்  டிரெய்லர் வெளியீட்டு விழா !!  MISHRI ENTERPRISES  சார்பில்Mமறைந்த ஸ்ரீ எஸ். செயின்ராஜ...
13/11/2025

“ரஜினி கேங்” திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா !!

MISHRI ENTERPRISES சார்பில்Mமறைந்த ஸ்ரீ எஸ். செயின்ராஜ் ஜெயின் நல்லாசியுடன், ரஜினி கிஷன் தயாரித்து நடிக்க, இயக்குநர் M ரமேஷ் பாரதி இயக்கத்தில், கலக்கலான ஹாரர் காமெடியாக உருவாகியுள்ள திரைப்படம் “ரஜினி கேங்”.

சமீபத்தில் இப்படத்தின் புதுமையான ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்கள் மற்றும் திரை ஆர்வலர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா, படக்குழுவினருடன் திரை பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.

இவ்விழாவினில்..,

தயாரிப்பாளர் H முரளி பேசியதாவது..,
இது எங்கள் குடும்ப விழா. எனக்கு செயின்ராஜ் சார் குடும்பத்தை 40 வருடமாகத் தெரியும். இந்தப்பட டிரெய்லர் பார்க்கும் போது அவர் இல்லை என வருத்தமாக இருக்கிறது. கிஷன் ஒரு ஹீரோவாக வேண்டும் என அவர் அதிகம் ஆசைப்பட்டார். அவரது சகோதரர்கள் சேர்ந்து அஷ்டகர்மா வெற்றிப்படத்தைத் தந்தனர். இப்போது ரஜினி கேங் படத்தைத் தந்துள்ளார்கள். சின்ன பட்ஜெட்டில் அழகாக எடுத்துள்ளார்கள். அவர்கள் வெற்றி பெற என் வாழ்த்துக்கள். படக்குழுவினருக்கு என் வாழ்த்துக்கள். நன்றி.

இயக்குநர் தயாரிப்பாளர் திருமலை பேசியதாவது..,
எத்தனையோ பேர் ஆசைப்படும் இந்த திரைத்துறையில் கிஷன் அவர்கள் போராடி ஹீரோவாக நடித்துள்ளார். முதல் சந்திப்பில் இயக்குநர் பற்றியும், கதையைப் பற்றியும் அவ்வளவு ஆவலோடு பேசினார். MISHRI ENTERPRISES பல படங்கள் வெளியாக உதவியாக இருக்கிறது. இது அவர்களது படம், படம் வெற்றி பெற வாழ்த்துக்கள். இன்றைய நிலையில் படம் வெளியிடுவது பெரும் சிக்கலாக உள்ளது. நல்ல கண்டன்ட் உள்ள படம் கண்டிப்பாக ஜெயிக்கும். நல்ல கதை உள்ள இந்தப்படம் வெற்றி பெற வாழ்த்துகிறேன் நன்றி.

பாடகர் அந்தோணி தாசன் பேசியதாவது..,
எனக்கு இப்படத்தில் பாட வாய்ப்பு தந்த இயக்குநர், தயாரிப்பாளர், இசை அமைப்பாளருக்கு நன்றி. தயாரிப்பாளர் ரஜினி கிஷன் இப்படத்தில் எல்லா துறையிலும் ஈடுபாட்டோடு வேலை பார்த்தார் அவர் பெரிதாக வெற்றி பெற வாழ்த்துகிறேன். படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள். படத்திற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி.

நடிகர் அஜய் பேசியதாவது..,
MISHRI ENTERPRISES தயாரிப்பாளர் நடிகர் ரஜினி கிஷனுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். ரஜினி என்னும் பெயருக்குத் தனி மவுசு இருக்கிறது. ரஜினி கேங் எனும் பெயர் கண்டிப்பாக ஜெயிக்கும். நல்ல கண்டன்ட் எப்போதும் ஜெயிக்கும், இதை நான் உறுதியாகச் சொல்கிறேன். இயக்குநர் ரமேஷ் பாரதி உடன் நான் வேலை பார்த்துள்ளேன். அவர் உருவாக்கித் தந்த ஒரு வெப் சீரிஸ் பார்த்து, பலர் எனக்கு நிதியுதவி அளிக்க முன்வந்தார்கள். அவர் மிகத் திறமையானவர். அடுத்ததாக ஜோன்ஸ் அவர் சரியான வாய்ப்புக்காகக் காத்திருக்கிறார். அவர் கண்டிப்பாக இதில் கலக்குவார். இந்தக்குழு என்னுடைய கேங், இதில் இருக்கும் அனைவரும் ஜெயிக்க இறைவனை பிரார்த்திக்கிறேன். நன்றி.

ஸ்டண்ட் இயக்குநர் ராஜேஷ் பேசியதாவது..,
தயாரிப்பாளர் நடிகர் ரஜினி கிஷன் சார் மூலம் தான் இந்த வாய்ப்பு கிடைத்தது. ஒரு ஆக்சன் ஹீரோ போல இதில் கடுமையாக உழைத்துள்ளார். எனக்கு வாய்ப்பு தந்த இயக்குநர் குழுவினருக்கு நன்றி. படத்தைப் பார்த்து அனைவரும் ஆதரவு தாருங்கள்.

பாடகி தீப்தி சுரேஷ் பேசியதாவது…,
ரஜினி கேங் குழுவில் நானும் இருப்பது மகிழ்ச்சி. இசையமைப்பாளர் ஜோன்ஸ் உடன் 10 வருடமாக வேலை பார்க்கிறேன். அவர் இசையில் பாடியது மகிழ்ச்சி. அவருக்கு இப்படம் மிகப்பெரிய வெற்றியைத் தரட்டும் படம் பெரிய வெற்றி பெற வாழ்த்துக்கள் நன்றி.

பாடலாசிரியர் நவீன் பாரதி பேசியதாவது..,
இப்படத்தில் நான் ஒரு பாடல் எழுதியுள்ளேன். வாய்ப்பு தந்த ஜோன்ஸ் அண்ணா, ரஜினி கிஷன் சார் இயக்குநர் எல்லோருக்கும் நன்றி. ஜோன்ஸ் அண்ணா தொடர்ந்து எனக்கு வாய்ப்பு தந்து வருகிறார். எல்லோருக்கும் நன்றி.

இசையமைப்பாளர் ஜோன்ஸ் ரூபர்ட் பேசியதாவது..,
ஒரு அழகான படைப்பை எனக்குத் தந்ததற்கு இந்த டீமுக்கு பெரிய நன்றி. ரமேஷ் பாரதி அண்ணா நாம் டீமாக ஒரு படம் செய்கிறோம் என எல்லோருக்கும் வாய்ப்பு தந்தார். இவர்களுடன் வேலை பார்த்தது மிகச் சந்தோசமான அனுபவமாக இருந்தது. இப்படத்தில் பாடிய, பணியாற்றிய அனைவருக்கும் நன்றி. படத்திற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள்.

நடிகர் முனிஷ்காந்த் பேசியதாவது..,
இயக்குநர் ஹார்ட் ஒர்க் இல்லை பேய் ஒர்க் செய்வார், என்னிடம் சில நாட்கள் மட்டும் தான் கேட்டார் அதற்குள் எப்படி எடுப்பீர்கள் என்றேன். காலையில் ஆரம்பித்து இரவு வரை அசராமல் உழைத்தார். அவரிடம் கொஞ்சம் கூட அசதியே இல்லை. மொத்தக் குழுவும் கடுமையாக உழைத்துள்ளனர். படத்தில் மொட்டை ராஜேந்திரன், கூல் சுரேஷ், கல்கி எனப் பெரிய நட்சத்திரப் பட்டாளம் நடித்துள்ளனர். இது ஒரு அருமையான எண்டர்டெயினராக இருக்கும். படத்தின் இசையமைப்பாளர் ஜோன்ஸ் மிகச்சிறப்பான இசையைத் தந்துள்ளார். படம் கண்டிப்பாக எல்லோருக்கும் பிடிக்கும். இப்படத்திற்கு அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி.

 #காந்தா -   - திரை விமர்சனம் - 4/5திரையுலகம் புதிதாக எழுந்து, கனவுகளும் கலைக்கும் இடையே நடந்த காலம். அந்தக் காலத்தின் த...
12/11/2025

#காந்தா - - திரை விமர்சனம் - 4/5

திரையுலகம் புதிதாக எழுந்து, கனவுகளும் கலைக்கும் இடையே நடந்த காலம். அந்தக் காலத்தின் திரைப்பட மேடையை மையமாகக் கொண்டே உருவாகி உள்ள புதிய படம் - “காந்தா” (Kaantha). இந்தப் படம் தமிழ் சினிமாவின் பொற்காலத்தை நினைவூட்டும் வண்ணம் உருவாகி இருக்கிறது.

திரையுலகம் புதிதாக எழுந்து, கனவுகளும் கலைக்கும் இடையே நடந்த காலம். அந்தக் காலத்தின் திரைப்பட மேடையை மையமாகக் கொண்டே உருவாகி உள்ள புதிய படம் - “காந்தா” (Kaantha). இந்தப் படம் தமிழ் சினிமாவின் பொற்காலத்தை நினைவூட்டும் வண்ணம் உருவாகி இருக்கிறது.

கதை, ஒரு பிரபல இயக்குநரையும், அவர் அறிமுகப்படுத்திய முன்னணி நடிகரையும் மையமாகக் கொண்டது. ஒருகாலத்தில் இருவரும் கலைக்காக ஒன்றாக உழைத்தவர்கள். ஆனால், காலப்போக்கில் அவர்களுக்குள் ஏற்பட்ட போட்டி, ஆளுமை மோதல் - அதுவே “காந்தா”வின் இதயம்.

இந்த மோதலின் நடுவில் வருகிறார் ஒரு புதிய முகம் - ஒரு இளம் நடிகை. அவள் அவர்களின் வாழ்க்கையையும், கலை உலகத்தையும் முழுவதும் மாற்றி விடுகிறார். அந்த பெண்ணின் வருகை, அந்த காலத்திலிருந்த பெண்களின் கனவுகள், அச்சங்கள், போராட்டங்களை வெளிக்கொணர்கிறது.

“காந்தா” படம் ஒரு சாதாரண காதல் கதை அல்ல. இது கலைஞர்களின் மனப்போராட்டம். ஒரு இயக்குநர் தனது சினிமாவை உயிரோடு புனைகிறார்; ஒரு நடிகர் தனது புகழை காத்துக்கொள்கிறார்; ஒரு பெண் தனது அடையாளத்தை தேடுகிறார். இந்த மூன்று வாழ்க்கைகளும் ஒன்றுடன் ஒன்று மோதும் தருணங்களில் தான் கதை தீவிரமடைகிறது.

பின்னணியாக 1950களின் பிந்தைய காலனி மதராஸ் (Post Colonial Madras). சினிமா உலகம் புதிய பரிமாணத்துக்குள் நுழைந்த காலம். பழைய மதராஸின் கலை உலகம், ஸ்டூடியோ கலாசாரம், பிளாக் & வைட் காட்சிகள் - அனைத்தும் அற்புதமான திரைபட அனுபவமாக வரவிருக்கின்றன.

“காந்தா” என்பது ஒரு கலைஞனின் பெருமை, ஒரு மனிதனின் பொறாமை, ஒரு பெண்மணியின் கனவு - இம்மூன்றையும் இணைக்கும் உணர்ச்சி மிக்க கதை. சினிமா மீது கொண்ட பற்று, போட்டி, பேராசை, பிரிவு - எல்லாவற்றையும் அழகாக வெளிப்படுத்தும் ஒரு பீரியட் டிராமா!

*வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் வழங்கும் 'அன்கில்_123'— புகழ் மற்றும் அதன் விளைவுகளை ஆராயும் மனோதத்துவ த்ரில்லர்*வேல்ஸ் பிலி...
12/11/2025

*வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் வழங்கும் 'அன்கில்_123'— புகழ் மற்றும் அதன் விளைவுகளை ஆராயும் மனோதத்துவ த்ரில்லர்*

வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் லிமிடெட் சார்பில் டாக்டர் ஐசரி K கணேஷ் அவர்கள் பெருமையுடன் அறிவிக்கிறார் —
"சமூக ஊடகப் புகழின் பேராசை எவ்வாறு ஒருவரின் வாழ்க்கையையும் மனதையும் மாற்றுகிறது என்பதை ஆராயும் புதிய மனோ தத்துவ திகில் படம் தான் 'அன்கில்_123' (Unkill_123).

சாம் ஆண்டன் இயக்கத்தில், சாம் ஆண்டன் மற்றும் சவாரி முத்து இணைந்து எழுதியுள்ள இந்தப் படத்தில், திறமையான இயக்குனர் மற்றும் நடிகர் அனுராக் கஷ்யப் சக்திவாய்ந்த முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவருடன் நடிகை சங்கீதா உணர்ச்சிகரமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஜெரார்ட் ஃபெலிக்ஸ் இசையமைக்க , ஒளிப்பதிவை கிருஷ்ணன் வசந்த் மேற்கொண்டுள்ளனர்.

இந்த கதை, புகழைப் பெறும் கனவுடன் தொடங்கும் ஒரு சமூக ஊடக இன்ஃப்ளூயன்சர் உடைய வாழ்க்கை எவ்வாறு மனநிலை மாற்றத்திற்கும் அழிவிற்கும் வழிவகுக்கிறது என்பதைக் கூறுகிறது. புகழின் அழுத்தம், தனிமை, மற்றும் அடையாள இழப்பு ஆகியவை எவ்வாறு ஒருவரின் உண்மையான உலகத்தைப் பாதிக்கிறது என்பதை படம் வெளிப்படுத்துகிறது. இன்றைய டிஜிட்டல் உலகில் ஒவ்வொரு பதிவிற்கு பின்னால் மறைந்திருக்கும் உணர்ச்சிப் போராட்டங்களையும் — ஒப்பீடு, பொறாமை, மற்றும் தன்னம்பிக்கை குறைபாடு ஆகியவற்றின் மோதல்களையும் இந்த படம் உண்மையாகச் சித்தரிக்கிறது.

வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பாளர் டாக்டர் ஐசரி K கணேஷ் அவர்கள் கூறியதாவது:

சமூக ஊடகங்கள் மூலம் புகழ்பெற்ற பலரை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் அந்த புகழுக்கான உணர்ச்சி விலை பற்றி யாரும் பெரிதாக பேசுவதில்லை — தனிமை, ஒப்பீடு, மற்றும் மன அழுத்தம் ஆகியவை அதன் மறுபக்கம். ‘அன்கில்_123’ இந்த புதிய ‘புகழ் கலாச்சாரம்’ உள்ள பிரகாசத்தையும், அதன் பின்னால் மறைந்திருக்கும் வலியையும் வெளிப்படுத்துகிறது.

*நடிகர்கள்:*
அனுராக் கஷ்யப்
சங்கீதா

*தொழில்நுட்பக் குழுவினர்*
இயக்கம்: சாம் ஆண்டன்
இணை எழுத்து: சவாரி முத்து
ஒளிப்பதிவு: கிருஷ்ணன் வசந்த்
இசை: ஜெரார்ட் ஃபெலிக்ஸ்
ஆடை அமைப்பு : சிந்துஜா அசோக்
கலை இயக்கம்: சௌந்தர்ராஜ்
நடன அமைப்பு: அஸர் & ரேமண்ட் காலனன்
சண்டை இயக்கம்: கோட்டீஸ்வரன்
தயாரிப்பு: டாக்டர் ஐசரி K கணேஷ்
தயாரிப்பு நிறுவனம்: வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் லிமிடெட்
மக்கள் தொடர்பு: ரியாஸ் K அஹ்மத், பாரஸ் ரியாஸ்

*‘மிடில் கிளாஸ்’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா!*ஆக்ஸஸ் ஃபிலிம் ஃபேக்டரி & குட் ஷோ தயாரிப்பில் அறிமுக இயக்குநர் கிஷோ...
12/11/2025

*‘மிடில் கிளாஸ்’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா!*

ஆக்ஸஸ் ஃபிலிம் ஃபேக்டரி & குட் ஷோ தயாரிப்பில் அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில் நடிகர்கள் முனீஷ்காந்த், விஜயலட்சுமி உள்ளிட்டப் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மிடில் கிளாஸ்’. இந்த மாதம் 21 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் இந்தத் திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது.

நிகழ்வில் படத்தின் இணைத்தயாரிப்பாளர், குட் ஷோ கே.வி.துரை பேசியதாவது, “டில்லி பாபு சார் கதைக்கேட்டு ஓகே சொன்ன படம் இது. அவர் இல்லாமல் நாங்கள் படம் ரிலீஸ் செய்கிறோம். நல்லபடியாக எடுத்து வந்திருக்கிறோம் என நம்புகிறோம். படம் பார்த்துவிட்டு சொல்லுங்கள்”.

இயக்குநர் ரவிகுமார், “இந்த சமயத்தில் டில்லி பாபு சாரை நினைவு கூறுகிறேன். ‘மிடில் கிளாஸ்’ படம் பார்த்துவிட்டேன் என்பதால் நிச்சயம் இது வெற்றிப்படமாக அமையும் என்பதை என்னால் உறுதியாக சொல்ல முடியும். ‘நாளைய இயக்குநர்’ காலத்தில் இருந்தே ராமதாஸ் அண்ணன் எங்கள் டீமுக்கே பெரிய பக்கபலமாக இருந்தார். அவருடைய கேரக்டர் போலவே இந்தப் படமும் அமைந்ததில் மகிழ்ச்சி. கதையின் நாயகனாக நடித்துள்ளார். ‘மிடில் கிளாஸ்’ என்ற டைட்டில் இருப்பதால் குடும்பத்தின் கஷ்டத்தை மட்டும் காட்டாமல் விறுவிறுப்பாக ஜாலியாக இயக்கி இருக்கிறார் கிஷோர். உங்கள் அனைவரையும் படம் நிச்சயம் திருப்தி படுத்தும். படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள்!”.

இயக்குநர் ஏ.ஆர்.கே. சரவணன், “டில்லி பாபு சார் தேர்ந்தெடுத்த கதை நிச்சயம் நன்றாக இருக்கும். ராமதாஸ் அண்ணன் 10 வருடங்களாக எனக்கு பழக்கம். நல்ல மனிதர். அவருக்கு நல்லதுதான் நடக்க வேண்டும். விஜயலட்சுமியின் நடிப்பு படத்தில் நன்றாக இருந்தது. எல்லோருக்கும் பிடித்தமான படமாக இருக்கும். ஒரு படம் முடியும்போது அதில் அறம் இருக்க வேண்டும். இந்தப் படத்தில் அது இருக்கிறது. இயக்குநர் கிஷோருக்கு வாழ்த்துக்கள்”.

கலை இயக்குநர் மாதவன், “நான் ராஜீவ் அவர்களின் சிஷ்யன். ‘லிஃப்ட்’ படம் செய்து கொண்டிருக்கும்போது துரைதான் என்னை கூப்பிட்டார். ஏனோதானே என்று இந்தப் படம் செய்ய முடியாது. ஒவ்வொரு விஷயமும் கவனமாக செய்திருக்கிறோம். நம்பிக்கை கொடுத்த இயக்குநர், கேமரா மேனுக்கு நன்றி”.

இயக்குநர் சதீஷ் செல்வகுமார், “இங்கு இருக்கும் நம் எல்லோருடைய கதைதான் ‘மிடில் கிளாஸ்’. ரொம்ப முக்கியமான கதை இது. படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள்”.

ஸ்ரீகுமரன் ஃபிலிம்ஸ், ராஜ்சிதம்பரம். “தமிழ்நாட்டில் ‘லப்பர் பந்து’, ‘மாமன்’ படங்களை விநியோகம் செய்திருக்கிறேன். மூன்றாவது படம் ‘மிடில் கிளாஸ்’. படம் வெற்றியடைய செய்வது உங்கள் கையில்தான் உள்ளது”.

இயக்குநர் சுசீந்திரன் பேசியதாவது, “தொடர்ந்து புதுமுக இயக்குநர்களுக்கு வாய்ப்பு கொடுத்து அவர்கள் திறமையை ஊக்குவித்தவர் டில்லி பாபு சார். அவர் தயாரித்த அனைத்துப் படங்களுமே வெற்றிப் படங்கள்தான். அதற்கு காரணம் டில்லி பாபு சார் சினிமா மீது வைத்திருந்த ஈடுபாடு. அவர் கேட்டு ஓகே சொன்ன இந்தப் படம் நிச்சயம் வெற்றி பெறும். உங்கள் ஆதரவு இந்தப் படத்திற்கு தேவை. கிஷோர் நல்ல இயக்குநர் என்பதை படத்தின் டிரைய்லரே சொல்கிறது. தொழில்நுட்பக் குழுவினர் அனைவரும் சிறப்பாக பணியாற்றியுள்ளனர். முனீஷ்காந்தை கதையின் நாயகனாக பார்ப்பதில் மகிழ்ச்சி. கதையின் நாயகனாக இருந்தாலும் அவர் தொடர்ந்து நகைச்சுவை கதாபாத்திரங்களிலும் நடிக்க வேண்டும். இதுபோன்ற கதாபாத்திரத்தை தைரியமாக தேர்ந்தெடுத்து நடித்த விஜிக்கு வாழ்த்துக்கள்”.

இயக்குநர் ராஜூமுருகன், “என் மனதுக்கு நெருக்கமான படம் இது. எளிமையான கதைதான். ஆனால், அது விஷயம் பெரிது. டிவி நிகழ்ச்சியில் சண்டை போடுவதை கொண்டாடும் இந்த வேளையில், கிரிக்கெட்டில் இருநாட்டு கேப்டன்கள் கைக்கொடுக்காமல் போவதை தேசபக்தி என பேசும் சூழலில் இந்தப் படம் பேசும் விஷயம் முக்கியமானது”.

இயக்குநர் விஜய் வரதராஜ், “படம் பார்த்துவிட்டேன். படத்தில் பேசப்பட்ட பல பிரச்சினைகளை என்னால் கனெக்ட் செய்து கொள்ள முடிந்தது. படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள்”.

இயக்குநர் ஆனந்த், “டில்லி பாபு சார் எனக்கு ரொம்ப ஸ்பெஷல். ’மிடில் கிளாஸ்’ படம் பார்க்கும்போது டில்லி பாபு சார் முகம்தான் நிறைந்திருந்தது. என்னைப் போன்ற பலரின் வாழ்க்கையை அவர் மாற்றியிருக்கிறார். படத்தின் பல தருணங்களை என்னால் கனெக்ட் செய்து கொள்ள முடிந்தது. இசை அருமையாக இருந்தது. வாழ்த்துக்கள்”.

எடிட்டர் சான் லோகேஷ், “இந்தப் படத்தில் பல எமோஷன் தருணங்கள் உள்ளது. உங்களுக்கும் நிச்சயம் பிடிக்கும்”.

ஒளிப்பதிவாளர் சுதர்ஷன் ஸ்ரீனிவாசன், “இதுபோன்ற கதைகள் ஏன் எனக்கு வருவதில்லை என ஏக்கமாக எதிர்பார்த்திருந்தேன். கதை மீது நம்பிக்கை உள்ளது. தொழில்நுட்ப கலைஞர்கள் சின்சியராக வேலை செய்துள்ளனர். படம் உங்களுக்கும் பிடிக்கும்”.

இயக்குநர் விஷால் வெங்கட், “டில்லி பாபு சார் உருவாக்கிய சாம்ராஜ்யத்தை பொறுப்புடன் அடுத்து எடுத்து செல்லும் தேவ் மற்றும் துரை இருவருக்கும் வாழ்த்துக்கள். சந்தோஷமும் நிம்மதியும் எங்கே என்ற தேடுதல் எல்லோருக்கும் வாழ்க்கையில் இருக்கும். அதை தான் இந்தப் படம் சொல்கிறது. உங்களுக்கும் படம் கனெக்ட் ஆகும். முனீஷ்காந்த், விஜயலட்சுமி இருவரும் நடிப்பில் கலக்கிவிட்டார்கள். படம் வெற்றி பெற படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள்”.

இயக்குநர் சுப்ரமணியம் சிவா, “நம் வாழ்க்கையே பணம் சம்பாதிக்கதான். அதில் இருந்து விலக முடியாது. கார்ல் மார்க்ஸ் மட்டும்தான் ஏழைகளில் இருந்து உலக வரலாறை எழுதினார். அதை எழுதிய கார்ல் மார்க்ஸ் பணத்திற்கு எப்படி கஷ்டப்பட்டார் என்பது அனைவருக்கும் தெரியும். அதேபோன்றுதான் ‘மிடில் கிளாஸ்’ கார்ல் மார்க்ஸூம் கஷ்டப்படுகிறார். விஜயலட்சுமி நுணுக்கமாக சிறப்பாக நடித்திருக்கிறார். பணத்திற்கான போராட்டம்தான் இந்தப் படம். படத்தில் பணிபுரிந்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்”.

இயக்குநர் ஏ. வெங்கடேஷ், “இயக்குநர் கிஷோர் திறமையாக இந்தப் படத்தை எடுத்துள்ளார். ‘மிடில் கிளாஸ்’ மனிதன் எப்படி இருப்பார் என்பதை திரையில் காட்ட முனீஷ்காந்த் சரியான தேர்வு. மிடில் கிளாஸ் நபர்களிடம் எப்போதும் கனவும் ஏக்கமும் இருந்து கொண்டே இருக்கும். அவன் வாழ்வை மாற்றும் ஒரு வாய்ப்பு கிடைக்கிறது. ஆனால், அதை அவன் தவற விட்டு அதற்காக போராடும் விஷயம்தான் இந்தப் படத்தின் கதை. விஜயலட்சுமிக்கு இந்தப் படத்திற்குப் பிறகு நிறைய வாய்ப்புகள் வரும். படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்”.

இயக்குநர் ஒபிலி கிருஷ்ணா, “என் கதையே படமாக இருக்கிறதே என்ற எண்ணம்தான் படம் பார்க்கும்போது எனக்கு தோன்றியது. படத்தின் முதல் ஷாட்டிலேயே இது வேற லெவல் படம் என்பது புரிந்தது. திரைக்கதை புதுமையாக இருந்ததுதான் பெரும்பலம். முனீஷ்காந்த், விஜயலட்சுமி பற்றி பேசாமல் இந்தப் படம் கிடையாது. விஜி அசத்தி இருந்தார். முனீஷ்காந்த் அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருந்தார். தொழில்நுட்பக் குழுவினரின் பணிக்கு வாழ்த்துக்கள். தேவ் மற்றும் துரைக்கு வாழ்த்துக்கள். திரையில் இந்தப் படத்தை என் குடும்பத்தோடு மீண்டும் பார்க்க காத்திருக்கிறேன்”.

பாடகர் ஆண்டனி தாசன், “இந்தப் படத்தில் வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளர், இயக்குநர், இசையமைப்பாளருக்கு நன்றி. படம் மாபெரும் வெற்றி பெற வாழ்த்துக்கள்”.

இயக்குநர் சக்திவேல், “டில்லி பாபு சார் கம்பெனியில் பெரும்பாலும் அறிமுக இயக்குநர்கள்தான். திறமை மீது நம்பிக்கை வைத்தவர்தான் டில்லி பாபு. ’மிடில் கிளாஸ்’ படம் ரொம்ப நன்றாக வந்திருக்கிறது. நடிகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் எல்லோரும் சிறப்பாக பணியாற்றியுள்ளனர். படம் பெரும் வெற்றி பெற வாழ்த்துக்கள்”

இயக்குநர் ரவீந்திரன், “என்னுடைய இரண்டு படங்களுக்கு கோ-டைரக்டராக பணியாற்றினார் கிஷோர். இப்போதும் எனக்கு பக்கபலமாக இருக்கிறார். இந்தக் கதையை முதலில் என்னிடம்தான் சொன்னார். முனீஷ்காந்த், விஜயலட்சுமி மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் சூப்பர். படம் பார்த்துவிட்டு சொல்லுங்கள்”.

நடிகர் குரேஷி, “டில்லி பாபு சாரிடம் வாய்ப்பு கேட்டேன். என்னை மதித்து அவர் கொடுத்த வாய்ப்பு இது. முனீஷ்காந்த், விஜயலட்சுமி நன்றாக நடித்துள்ளார்கள். ராதாரவி சார், கோடாங்கி என எல்லோரும் கலக்கி இருந்தார்கள். ‘மிடில் கிளாஸ்’ என்ற பெயருக்கு ஏற்ப பல விஷயங்கள் படத்தில் இருக்கும். படம் பார்த்துவிட்டு சொல்லுங்கள்”.

பாடகி சுப்லாஷினி, “படத்தில் வாய்ப்பு கொடுத்த பிரணவ்வுக்கு நன்றி. வித்தியாசமான பாடலாக இருக்கும். இந்தப் பாடலுக்கும் படத்திற்கும் உங்கள் ஆதரவு தேவை”.

இயக்குநர் ராகவ் மிருதுத், “படத்தின் முதல் ஷாட் அருமையாக இருந்தது. பல பெரிய விஷயங்களை அழகாக காட்சிப்படுத்தியுள்ளார். இதுபோன்ற படங்கள்தான் நூறு கோடி வசூலிக்க வேண்டும். அப்போதுதான் தமிழ் சினிமா ஸ்டைல் மாறும். ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ போல இந்தப் படமும் பெரிய வெற்றி பெற வேண்டும்”.

ஆக்ஸஸ் ஃபிலிம் ஃபேக்டரி பாஸ்கர், “டில்லி பாபு சார் மறைவுக்கு பிறகு வெளியாகும் முதல் படம் என்பதால் இதை ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறேன். வாழ்த்துக்கள்”.

இசையமைப்பாளர் பிரணவ், “எனக்கு வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளர் துரை, தேவ், இயக்குநர் கிஷோருக்கு நன்றி. படத்தில் நிறைய விஷயங்கள் என்னோடு கனெக்ட் செய்து கொள்ள முடிந்தது. என்னுடைய பெற்றோர், டெக்னீஷியன்ஸ், நண்பர்கள் எல்லோருக்கும் நன்றி. என்னுடைய குரு சந்தோஷ் நாராயணன், மீனாட்சி அக்காவுக்கு நன்றி. படம் 21 ஆம் தேதி வெளியாகிறது. படம் பார்த்துவிட்டு சொல்லுங்கள்”.

இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், “’கர்ணன்’, ‘வாழை’, ‘பாரீஸ் ஜெயரஜாஜ்’, ‘ரெட்ரோ’ எனப் பல படங்களில் என்னுடைய பணியாற்றியுள்ளார் பிரணவ். ரொம்ப திறமையானவர். திபு நினன் தாமஸ், பிரணவ் என என்னுடைய அணியில் இருந்து அடுத்தடுத்து இசையமைப்பாளர்கள் ஆக்ஸஸ் ஃபிலிம் ஃபேக்டரி மூலம் அறிமுகமாகி இருப்பது மகிழ்ச்சி. படம் பெரும் வெற்றி அடையும் என்ற நம்பிக்கை உள்ளது. வாழ்த்துக்கள்”

தயாரிப்பாளர் தேவ், “எனக்கு எமோஷனலான தருணம் இது. டில்லி சார் ரொம்ப ஆசைப்பட்டு தொடங்கிய படம் இது. அவர் ஆசியுடன் நவம்பர் 21 ஆம் தேதி வெளியாகிறது. அவரின் மறைவுக்குப் பிறகு அடுத்து என்ன என்ற கேள்வி இருந்தது. ஆனால், அதற்கான ரூட் மேப் தெளிவாக டில்லி சார் வைத்திருந்தார். அதை துரை அண்ணா தெளிவாக செயல்படுத்தி வருகிறார். டில்லி சார் ஆசைப்பட்டதை கிஷோர் அண்ணா அழகாக திரையில் எடுத்து வந்துள்ளார். நடிகர்களும் தொழில்நுட்பக் கலைஞர்கள் சரியாக தேர்வு செய்துள்ளார் இயக்குநர். முனீஷ்காந்த் அண்ணன் எங்கள் குடும்பத்தில் ஒருவர். அவருக்கு நன்றி. அடுத்து நிறைய படங்கள் அவர் கதையின் நாயகனாக நடிக்க வேண்டும். விஜயலட்சுமி மேமின் நடிப்பு தீவிரமாக இருந்தது. உங்கள் ஆதரவு நிச்சயம் தேவை”.

நடிகை விஜயலட்சுமி பேசியதாவது, “’மிடில் கிளாஸ்’ படத்தில் ரொம்பவே ரசித்து நடித்தேன். கிஷோருக்கு நன்றி. விஜியும் அன்புராணியும் எதிர் எதிர் துருவங்கள். இந்தக் கதைக்கு முனீஷ்காந்த் சார் தவிர வேறு யாரால் நடிக்க முடியும் எனத் தெரியவில்லை. அவருடன் நடித்தது மகிழ்ச்சி. நாங்கள் நினைத்ததை விட படம் சிறப்பாக வந்திருக்கிறது. அதற்குக் காரணம் டில்லி பாபு சாரின் ஆசீர்வாதம். அனைவருக்கும் வாழ்த்துக்கள்”.

இயக்குநர் கிஷோர், “இந்தக் கதையை பிடித்து ஒத்துக் கொண்ட டில்லி பாபு சாருக்கு நன்றி. முனீஷ்காந்த், விஜயலட்சுமி என எல்லோரின் கதாபாத்திரத்திற்கும் என்னிடம் ரெஃபரன்ஸ் உள்ளது. ராதாரவி சாரை புதுமையான கதாபாத்திரத்தில் பார்ப்பீர்கள். காளிவெங்கட், வேலராமமூர்த்தி, குரேஷி என எல்லோரும் சிறப்பாக நடித்துள்ளார்கள். ஒளிப்பதிவு, இசை என தொழில்நுட்பக் கலைஞர்களும் ஈடுபாட்டோடு வேலை பார்த்தார்கள். ‘குடும்பஸ்தன்’, ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ கதைகளை தாண்டிய ஒரு விஷயம் இந்தப் படத்தில் இருக்கும். அடுத்து என்ன என்ற த்ரில்லோடு இந்தப் படம் இருக்கும். படத்தை நிச்சயம் தியேட்டரில் சென்று பாருங்கள்”.

நடிகர் முனீஷ்காந்த் பேசியதாவது, “கிஷோர் சார் என்னிடம் நீங்கள்தான் ஹீரோ என்றார். நான் முடியாது என்றேன். கதை கேட்டபிறகுதான் தெரிந்தது கதைதான் ஹீரோ என்று. உடனே ஒத்துக்கொண்டேன். இயக்குநர், தயாரிப்பாளர்கள், எடிட்டர், இசையமைப்பாளர் மற்றும் எல்லா தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் நன்றி. இந்தப் படத்திற்கு நான் எதிர்பாராத பெரிய சம்பளம் டில்லி பாபு சார் கொடுத்தார். திறமைகளை மதித்து வளர்த்து விட்ட டில்லி பாபு சார் போன்ற பல தயாரிப்பாளர்கள் சினிமாவிற்கு தேவை. படத்தை திரையரங்குகளில் பார்த்துவிட்டு சொல்லுங்கள்” என்றார்.

Address

Chennai
600093

Alerts

Be the first to know and let us send you an email when Kollywood Street posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share