தேவா

தேவா How can I curse whom God has not cursed? How can I hate whom the Lord does not hate?
(3)

(தேவன் சபிக்காதவனை நான் சபிப்ப தெப்படி? கர்த்தர் வெறுக்காதவனை நான் வெறுப்பது எப்படி?)

27/08/2025

உன் பிரச்சனை முடியணும்னா இயேசுவிடம் சொல், தொடரணும்னா மனிதரிடம் சொல்.

ஒருவர் கொலை செய்ய பல காரணங்கள் இருக்கும், ஆனால் திங்கள்கிழமை பிடிக்கலனு சொல்லி கொலை செய்வதெல்லாம் புதுசா இருக்கு.---பிரெ...
27/08/2025

ஒருவர் கொலை செய்ய பல காரணங்கள் இருக்கும், ஆனால் திங்கள்கிழமை பிடிக்கலனு சொல்லி கொலை செய்வதெல்லாம் புதுசா இருக்கு.

---

பிரெண்டா ஸ்பென்சர்

1979-ஆம் ஆண்டு அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் நடந்த ஒரு சம்பவம் உலகையே அதிர்ச்சியடையச் செய்தது.

பிரெண்டா அன் ஸ்பென்சர் என்ற 16 வயது சிறுமி, சான் டியேகோ நகரில் தன் தந்தையுடன் வாழ்ந்து வந்தாள். அவளுடைய பெற்றோர் விவாகரத்து செய்துவிட்டனர். அவளது தந்தை மதுபானத்திற்கு அடிமையாக இருந்தார். அதாவது நம்ம ஊர் பாணியில மதுபிரியராக இருந்தார் என சொல்லலாம்.

பிரெண்டா சிறு வயதிலிருந்தே புகைப்படக் கலைக்குள் நல்ல திறமையை காட்டியவள். அதற்காக பல பரிசுகளும் வென்று இருக்கிறார். ஆஹா எவ்ளோ நல்ல விஷயம் 🥰. ஆனால் பள்ளியில் படிப்பதற்கு அவளுக்கு சுத்தமா ஆர்வம் குறைவாக இருந்தது. வகுப்பில் அடிக்கடி தூங்கிவிடுவாள். இதனால் அவங்க மிஸ் எப்பவும் அவளை கண்கானிச்சிகிட்டே இருப்பாங்கலாம். (இது கூட காரணமா இருக்கலாம்🤔)

ஒரு நாள் சைக்கிள் ஓட்டும் போது கீழே விழுந்து அவளது மூளையில் காயம் ஏற்பட்டிருக்கிறது. அதன் பிறகு அவளது நடத்தையில் மாற்றம் தோன்ற ஆரம்பித்திருக்கிறது. அவள் மனச்சோர்வுக்கு ஆளானாள் (அப்டி சொன்னா பலபேருக்கு புரியாது depression-னு தமிழ்ல சொன்னாதான் புரியும் 😂). அடிக்கடி தற்கொலை பண்ணிக்கலாம்னு நினைப்பாலாம். மேலும், அவள் தந்தை தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறியிருந்தாலும், அதை நிரூபிக்கும் ஆதாரம் இல்லை. ( அப்பா இப்படியெல்லாம் பண்ணுவாரா என்று தோணலாம், ஆனால் நம்ம ஊர்லயே இந்த கேவலம்லாம் நடக்கிது 😢) அந்த குழந்தை பொண்ணுகிட்ட ஆதாரம் கேட்டா அது என்ன பண்ணும் பாவம் 😢.

இதன்காரணமாகவோ என்னவோ அந்த பெண்ணுக்கு இன்னும் depression அதிகமாகி 1978-ஆம் ஆண்டில், அவள் பறவைகளை சுடத் தொடங்கி இருக்கிறாள். அதனால பி.பி. துப்பாக்கியால் (அப்டினா பிளாஸ்டிக் துப்பாக்கி) சுட்டதற்கும், திருட்டுக்காகவும் அவளை போலீசார் கைது செய்திருக்கின்றனர் . அக்கம் பக்கத்தினர் கூட, “இந்தப் பெண் நாய்களையும் பூனைகளையும் அடிக்கடி பிடித்து துன்பப்படுத்துகிறாள் ” என்று புகார் அளித்ததாக சொல்லப்படுகிறது.

அந்த ஆண்டு கிறிஸ்துமஸ் கிப்ட்-ah, பிரெண்டா அவங்க அப்பாவிடம் ஒரு ரேடியோ கேட்டிருக்கிறாள். ஆனால் அவளது தந்தை, துப்பாக்கி வாங்கி குடுத்திருக்கிறார், ஆனால் அது பிளாஸ்டிக் துப்பாக்கி இல்ல, ருகர் 10/22 அரை தானியங்கி துப்பாக்கி அதோட 500 குண்டுகளும் வாங்கித் தந்திருக்கிறார். எவ்ளோ நெஞ்சழுத்தம் 😡
பிரெண்டா ஒரு பேட்டியில் இப்படி சொல்லியிருக்கிறார்:
➡️ “நான் ரேடியோ கேட்டேன்… ஆனால் அவர் துப்பாக்கி வாங்கித் தந்தார். அது என்னை கொன்றுக்கொள்ளவே அவர் விரும்பினார் என்று எனக்குத் தோன்றியது.” (இது கூட காரணமா இருக்கலாம் 🤔)

1979 ஜனவரி 29 – திங்கட்கிழமை காலை.
பள்ளி திறக்கக் குழந்தைகள் வெளியே காத்திருக்கிற சமயத்தில. பிரெண்டா தன் படுக்கையறை ஜன்னலிலிருந்து துப்பாக்கியால் சுட தொடங்குகிறார். அவள் சுட்டதில், பள்ளி முதல்வரும் குழந்தைகளை காப்பாற்ற முயன்ற பராமரிப்பாளரும் உயிரிழந்தனர். நல்லவேலை எந்தக் குழந்தைகளும் இறக்கவில்லை.

சில மணி நேரம் போலீசாருடன் பேச்சுவார்த்தை நடத்தி, இறுதியில் அவளை கைது செய்தனர்.

அவளிடம் போலீசார் ஏன் இப்படிச் செய்தாய் என்று கேட்டதற்கு👇👇

அவள் சிரித்தபடி பதில் கூறினாள்:
➡️ “எனக்கு திங்கள்கிழமைகள் பிடிக்காது. இது நாளை சுவாரஸ்யமாக்குகிறது.” என்று

இன்று வரை, பிரெண்டா கலிஃபோர்னியாவில் உள்ள மகளிர் சிறையில் தண்டனையை அனுபவித்து வருகிறாள்.
அவள், பள்ளியில் துப்பாக்கிச் சூடு செய்த அரிதான பெண் குற்றவாளிகளில் ஒருத்தியாக வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளார்.

இதை படிக்கும் என் அன்பு நெஞ்சங்களே, நீங்கள் உங்கள் குடும்பத்தில் செய்யும் தவறுகளும், பேசும் கடினமான வார்த்தைகளும், உங்களது போதை பழக்கமும் உங்க பிள்ளைகளை எந்தளவுக்கு மாற்றுகிறது என்பதற்கு இந்த பெண்ணே சாட்சி. உங்களை நீங்கள் சரிப்படுத்திகொண்டால் உங்கள் குடும்பம் நிம்மதியாக இருக்கும் 👍❤️

🙏வளமுடன் வாழ்க 🙏

---

26/08/2025

மண்ணை வளமான மண்ணாக ஆக்க திரு. சுந்தரராம அய்யர் சொனன் கருத்துக்கள் சிலவற்றை பார்க்கலாம்
பொதுவாக நம்முடைய மண் வளமான மண்ணாக இருப்பதற்கு நுண்ணுயிரிகளின் செயல்பாடு 10 சதம் இருக்க வேண்டும்.
ஆனால் இப்பொழுது இரசாயன உரம், மருந்துகளை பயன்படுத்தி நுண்ணுயிர்களின் எண்ணிக்கை குறைந்து 3 சதவீதம்தான் இருக்கிறது .
மீதம் உள்ள 7 சதவீத நுண்ணுயிர்களை நம்முடைய மண்ணில் உற்பத்தி செய்யனும் அப்பொழுதுதான் நம்முடைய மண் வளமானதாக இருக்கும்.
அவற்றின் எண்ணிக்கையை அதிகரிக்க நாம முதலில் செய்யவேண்டியது பலவகை விதைகளை விதைத்து பூ எடுக்கும் சமையம் அல்லது 60 நாட்களில் மடக்கி உழவு செய்தல் வேண்டும்.
பலவகை விதைகள்
தானியப்பயிர்வகைகளில் - ஏதாவது 4
பயறுவகை பயிர்களில் - 4
எண்ணெய் வித்து பயிர்கள் - 4
தழைச்சத்து தரக்கூடய பயிர்கள் - 4
மணப்பயிர்கள் - 4 எடுத்துக்கொள்ள வேண்டும்.
ஒரு ஏக்கருக்கு 30 கிலோ விற்கு மேல் விதைக்கவேண்டும்.
தானியப்பயிர்வகைகளில்- கம்பு 5 கிலோ, சோளம் - 3 கிலோ, மக்காச்சோளம் - 3 கிலோ, ராகி 1கிலோ
பயிர்வகை – கொள்ளு – 3 கிலோ, தட்டப்பயறு 3 கிலோ
எண்ணெய் வித்து – ஆமணக்கு 3 கிலோ, எள் - 1 கிலோ
தழைச்சத்து – சணப்பு – 4 கிலோ, தக்கபூண்டு – 4 கிலோ
மணப்பயிர் - கடுகு 1 கிலோ
மேலே உள்ள பயிர்களை தேர்ந்தெடுத்து
விதைக்கவேண்டும்.
இவற்றை ஏன் நாம விதைக்க வேண்டும்?
இவை நம்பகுதியில் ஈசியாக கிடைக்கக் கூடியவை. இந்த பயிர்கள் அனைத்தும் களைச் செடிக்கு மேல் வளரக் கூடிய பயிர்கள் என்பதால் இவற்றை நாம தேர்வு செய்து விதைக்கலாம்.
விதைத்த 60 நாட்களில் மடக்கி உழவு செய்ய வேண்டும். இவ்வாறு செய்தால் கோரை, அருகு கூட வராது மண் வளமானதாக இருக்கும். தழைச்சத்து அதிகரிக்கும்
30 கிலோவிற்கு 3000 ஆயிரம் செலவு ஆகும்
ஆனால் இதில் கிடைப்பது 20 டன் தழைச்சத்து
கிடைக்கும்.
ஒரு டன் 1000ரூபாய் என்றால் கூட நமக்கு 20 ஆயிரம் கிடைக்கும்.
ஆகவே விவசாயிகளே இந்த மழையை பயன்படுத்தி மண்ணை வளப்படுத்துவோம்
நன்றி
சுந்தரராம அய்யர் – 9842724778
இவற்றை போட முடியவில்லை என்றால் 100 கிலோ மக்கிய தொழுவுரத்தில்
5 கிலோ அசோஸ்பைரில்லம், 5 கிலோ பாஸ்போபாக்டிரியா, 5 கிலோ பொட்டாஷ் பாக்டிரியா, 5 கிலோ மைக்கோரைசா வேம் இவற்றை எடுத்து ஆறிய தொழுவுரத்தில் கலந்து அந்த கலவையில் 2 கிலோ நாட்டுச்சர்க்கரைi தண்ணீர் விட்டு நன்கு கரைத்து அந்த தண்ணீரை உயிர்உரக்கலவையில் தெளிக்கவேண்டும் கையில அ;ளிப் பார்த்தால் புட்டுப் பதத்தில் இருக்கனும் பிறகு இவற்றை நிழலில் ஒரு வாரம் மூடி வைத்துவிட்டு பயிருக்கு தண்ணீரை பாய்ச்சி விட்டு எடுத்து போடலாம் அனைத்து வகை பயிருக்கும் பயன்படுத்தலாம் உரச் செலவு குறையும் இவை முழுக்கமுழுக்க இயற்கை தான் தேவைக்கு தொடர்பு கொள்ள
8870392422
9952305745

26/08/2025
😂
26/08/2025

😂

26/08/2025

*_கேள்வி: இயேசு கிறிஸ்துவின் பன்னிரெண்டு திருத்தூதர்களில் யாருமே யூதர் அல்லாதவர் இல்லையே! ஆக, கிறிஸ்துவும் இன உணர்வு உடையவர்தானே!_*

*_பதில்:_* திருத்தூதர் பன்னிருவரின் பெயர் பின்வருமாறு: முதலாவது பேதுரு என்னும் சீமோன், அடுத்து அவருடைய சகோதரர் அந்திரேயா, செபதேயுவின் மகன் யாக்கோப்பு, அவருடைய சகோதரர் யோவான், பிலிப்பு, பர்த்தலமேயு, தோமா, வரி தண்டினவராகிய மத்தேயு, அல்பேயுவின் மகன் யாக்கோப்பு, ததேயு, தீவிரவாதியாய் இருந்த சீமோன், இயேசுவைக் காட்டிக் கொடுத்த யூதாசு இஸ்காரியோத்து (மத். 10:2-4).

இயேசுவோடு இணைந்திருந்த 12 திருத்தூதர்களும் யூத பின்னணியைச் சார்ந்தவர்கள். தன் பன்னிரெண்டு திருத்தூதர்களில் யாருமே யூதர் அல்லாதவர் இல்லையே என்று நாம் சிந்திக்கலாம். 'மெசியா' என்பவர் யூதர்களுக்கு மட்டுமே உடையவர் என்று யூதர்கள் நினைத்தனர். எருசலேமில் சிமியோன் என்பவர் இருந்தார். அவர் நேர்மையானவர்; இறைப்பற்றுக் கொண்டவர்; இஸ்ரயேலுக்கு வாக்களிக்கப்பட்ட ஆறுதலை (கிறிஸ்துவை) எதிர்பார்த்திருந்தவர்; தூய ஆவியை அவர் பெற்றிருந்தார் (லூக். 2:25) என்று மறைநூல் கூறுகிறது. ஆகவே, இயேசு கிறிஸ்து தன்னோடு யூதர் அல்லாதவர்களை திருத்தூதர்களாக இணைத்திருந்தால், இன வைராக்கியமுடைய யூதர்கள் கிறிஸ்துவை இன்னும் அதிகமாக புறக்கணித்திருப்பார்கள். அவரை இவ்வளவுகூட ஏற்றுக்கொண்டிருக்கமாட்டார்கள். இயேசு கிறிஸ்து ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் பிறந்த குழந்தையல்ல. அவர் தன் தாய் மரியாளின் வயிற்றில் தூய ஆவியாரின் வலிமையால் குழந்தையாக உற்பவித்தார். ஆனால், இயேசுவையும், மரியாளையும் பாதுகாப்பதற்காக யோசேப்பு என்பவரை கடவுள் மரியாளுக்கு கணவராகவும், இயேசுவுக்கு வளர்ப்புத் தந்தையாகவும் உலகினரின் பார்வையில் நியமித்தார். அப்படி நியமிக்காமல் இருந்திருந்தால், மரியாள் தவறான முறையில் இயேசுவைப் பெற்றார் என்று சொல்லி, திருச்சட்டப்படி யூத மதவாதிகள் அவரை கல்லால் எறிந்து கொன்றிருப்பார்கள். அதுபோலத்தான் தன் திருத்தூதர்கள் 12 பேரையும் யூத குலத்திலிருந்தே கிறிஸ்து தேர்வு செய்தார் என்றே நாம் நிதானிக்கவேண்டும். ஆனால், அவர் தன் சீடர்களை நோக்கி, "உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள் (மாற். 16:15) என்று சொன்னார்.

சாதி உணர்வை விட்டுவிட மறுக்கும் சில கிறிஸ்தவர்கள், "இயேசு கிறிஸ்து யூதவம்சம் என்ற சாதியில் பிறந்தவர்தானே!" என்று சாக்குப்போக்கு சொல்கிறார்கள். சாதி ஒழியவேண்டும் என்பதற்காகவே தன் வாழ்நாள் முழுவதையும் அற்பணித்துக்கொண்ட ஈ.வே. ராமசாமி பெரியார் என்பவர் உலக வழக்கப்படி நாயக்கர் என்ற சாதியில் பிறந்தவர் என்பதால் அவர் சாதியத்தை எதிர்த்து பேசக்கூடாது என்று சொல்லமுடியாது. இந்துத்துவப்படி பிராமணர் என்ற சாதியில் பிறந்ததால் தேசியகவி சுப்பிரமணிய பாரதியார் சாதிகள் இல்லையடி பாப்பா என்று பாடியதை தவறு என்று சொல்லமுடியுமா? இவ்வுலகம் சாதி, இன பேதங்களால் பாதிக்கப்படுகிறது என்று உணரும் எவரும் அவற்றை எதிர்க்கலாம். அதேபோல உலகைப்படைத்த கிறிஸ்து, மனித வடிவில் ஒரு தாயின் வயிற்றில் பிறக்கவேண்டியிருந்ததால் ஒரு இனத்தில் வந்து பிறந்தார். அப்படி பிறந்ததால் அவர் இனவாதத்தை ஆதரிக்கிறார் என்று தவறாக புரிந்துகொள்ளக்கூடாது.

26/08/2025

Amen

26/08/2025

உன்னை அறிவாளியாக காட்டிக்கொள்ள, உனக்குள் இருக்கும் குழந்தைதனத்தை
இழந்துவிடாதே 🥰

26/08/2025

18,000 இருக்கைகள் போலி சேர்க்கை!

26/08/2025

இயேசுவை அறியாத மனிதர்களுக்கும்
அவர் அற்புதங்களை செய்து
கொண்டுதான் இருக்கிறார்.

இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக்கின் மனைவியும், இந்தியாவின் ஸ்குவாஷ் நாயகியுமான தீபிகா பல்லிக்கல், ஒரு தாயான பி...
26/08/2025

இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக்கின் மனைவியும், இந்தியாவின் ஸ்குவாஷ் நாயகியுமான தீபிகா பல்லிக்கல், ஒரு தாயான பிறகும் நாட்டிற்காகத் தங்கப் பதக்கம் வென்ற செய்தி வெளியிடப்பட்டது — ஆனால் அவர் உண்மையிலேயே தகுதியான அங்கீகாரத்தையும் பாராட்டுகளையும் பெறவில்லை. 💔🇮🇳

யோசித்துப் பாருங்கள் — வெறும் ஆறு மாதங்களுக்கு முன்புதான் அவர் இரட்டைக் குழந்தைகளுக்குத் தாயாகியிருந்தார். ஆனாலும், அவர் தனது விளையாட்டிலிருந்து விலகி இருக்க விரும்பவில்லை. அயராத உழைப்பு மற்றும் உறுதியுடன், அவர் மீண்டும் களமிறங்கி உலக இரட்டையர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப்பில் போட்டியிட்டது மட்டுமல்லாமல், இந்தியாவிற்காக இரண்டு தங்கப் பதக்கங்களை வென்று சாதனை படைத்தார். 🏆🔥

இத்தகைய ஒரு சாதனை வாழ்க்கையை விடப் பெரியதாகத் தெரிகிறது, ஆனால் ஒரு பிரபலத்தின் சாதாரண புகைப்படம் அல்லது பதிவுக்கு சமூக ஊடகங்களில் கிடைக்கும் கவனத்தைக்கூட இது பெறத் தவறிவிட்டது.

இது நம் சமூகத்தைப் பற்றிய ஒரு கசப்பான உண்மையை பிரதிபலிக்கிறது — நாம் கவர்ச்சிக்கும் பொழுதுபோக்குக்கும் முக்கியத்துவம் கொடுக்கிறோம், ஆனால் நாட்டிற்குப் பெருமை சேர்க்கும் உண்மையான ஹீரோக்களைப் பல சமயங்களில் கண்டுகொள்வதில்லை. தீபிகாவின் வெற்றி ஒரு விளையாட்டு வீரரின் வெற்றி மட்டுமல்ல; தாய்மையுடன் தனது கனவுகளையும் உயிர்ப்புடன் வைத்திருக்கும் ஒவ்வொரு தாயின் வெற்றி இது. 🌟👩‍👧‍👦

🙏 தீபிகா பல்லிக்கலை நாம் கொண்டாடுவோம். ஏனென்றால், எல்லா சவால்களையும் மீறி வரலாறு படைப்பவர்களே உண்மையான ஹீரோக்கள்.

Address

Chennai

Telephone

+917904427349

Website

Alerts

Be the first to know and let us send you an email when தேவா posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to தேவா:

Share