15/07/2025
முஸ்லிம் பயங்கரவாதிகளின் விடுதலைக்காக
குரல் கொடுக்கும் சீமானின் நயவஞ்சகம்!
1998 அல்உம்மா முஸ்லிம் பயங்கரவாதிகளால் குண்டு வைத்து கொல்லப்பட்டனர் 58 அப்பாவி தமிழர்கள்.
முஸ்லிம் பயங்கரவாதிகள் பல இந்து இயக்கத் தலைவர்களையும், காவல்துறை அதிகாரிகளையும் படுகொலை செய்தார்கள். அவர்கள் மரணத்திற்கு சீமான் என்ன பதில் சொல்லப் போகிறார். அவர்களின் குடும்பத்தினரின் அழுகுரல் இவருக்கு கேட்கவில்லையா?
பயங்கரவாதி பாஷாவின் இறுதி ஊர்வலத்திற்கு வந்த சீமான் அவரை "அப்பா" என்று அழைத்து நீலிக்கண்ணீர் வடித்தார். இத்தகைய நடவடிக்கைகள் நாம் தமிழர் பயங்கரவாதிகளுக்கு துணை போகிறது என்பது உண்மை தானே..
மதுரையில் எந்த அமைப்பிலும் இல்லாத பால்காரர் சுரேஷ் கொடூரமாக படுகொலை செய்த இஸ்லாமிய பயங்கரவாதிகளுக்கு சீமான் ஆதரவு நியாயமா? பச்சைத் தமிழன் சுரேஷ் குடும்பத்திற்கு சீமான் என்ன பதில் சொல்வார்..
பரமக்குடியில் கவுன்சிலர் முருகன் என்பவர் படுகொலை செய்த போலீஸ் பக்குரூதீன், பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக் ஆகியோருக்கு ஆதரவளிக்கும் சீமான் அவர்களே, முருகன் தமிழர் தானே அவருக்கு நாம் தமிழர் கட்சியின் பதில் என்ன??
மதுரை திருமங்கலத்தில் காவல் நிலையத்தில் புகுந்து காவல் துறையினரின் தாக்கி இஸ்லாமிய பயங்கரவாதிகள் இமாம்அலி ஹைதர் அலியை அழைத்துச் சென்ற போலீஸ் பக்குருதின் தியாகியா ?
கடந்த சில நாட்களாக 30 ஆண்டுகளுக்கும் மேலாக தலைமறைவாக இருந்த பயங்கரவாதிகளை தீவிரவாத தடுப்பு பிரிவு பிடித்து வரும் வேளையில் சீமானின் பயங்கரவாத ஆதரவு போக்கினை உளவுத்துறை விசாரிக்க வேண்டும்.
இலங்கை தமிழர்களை வைத்து அரசியல் நடத்தி அதன்மூலம் பெரும் நிதியை சீமான் பெற்று வந்ததாக கூறப்படுகிறது . தற்போது இஸ்லாமிய அடிப்படைவாதிகளுக்கு ஆதரவாக சீமான் குரல் கொடுப்பது இவரது தனிப்பட்ட ஆதாயத்திற்கா என்ற கேள்வி எழுகிறது.
எனவே, இஸ்லாமிய பயங்கரவாதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்று மதுரையில் ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக சீமான் அறிவித்து இருப்பது, பிடிபட்ட பயங்கரவாதிகள் குறித்த தமிழக மக்களிடம் எழுந்து இருக்கும் சந்தேகத்தை திசை திருப்ப என சந்தேகம் எழுகிறது.
பயங்கரவாதத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் சீமானை மத்திய, மாநில உளவுத்துறை கண்காணிக்க வேண்டும். தேர்தல் பிரச்சாரம் சூடுபிடிக்கும் இப்போது தமிழகத்தில் மீண்டும் தலைதூக்கும் மத அடிப்படைவாத ஆதரவு குறித்து கவனத்தில் கொள்ள வேண்டும். தேவையான உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்...