Hindu Munnani

Hindu Munnani Hindu Munnani is the organization started by Veerath Thuravi Shri. Ramagopalan to protect and develop the HINDUISM and the Hindu people.
(1305)

Hindu Munnani is a religious and cultural organization based in the Indian state of Tamil Nadu which was formed to defend the Hinduism and protect Hindu religious monuments.

கொள்கையை வீழ்த்த முடியுமா?எண்ணத்தை வெட்ட  முடியுமா?வீரத்துறவி இராம.கோபாலன் அவர்கள்  வெட்டுப்பட்ட தினம் இன்று (17.07.1984...
17/07/2025

கொள்கையை வீழ்த்த முடியுமா?
எண்ணத்தை வெட்ட முடியுமா?

வீரத்துறவி இராம.கோபாலன் அவர்கள் வெட்டுப்பட்ட தினம் இன்று (17.07.1984)

இந்துக்கள் ஒன்று சேர்ந்துவிடக்கூடாது, தேசியம் வலுவடையக்கூடாது என்று எண்ணிய நயவஞ்சகர்கள், நேருக்கு நேர் கருத்தை எதிர்கொள்ள முடியாத கோழைகள் பின்னிருந்து மண்டையில் வெட்டி, கொள்கையை லட்சியத்தை அழித்துவிடலாம் என்று எண்ணிய நாள் இது...

ஆம், 1984 ஆம் ஆண்டு மதுரை ரயில்நிலையத்தில் வீரத்துறவி இராம.கோபாலன் அவர்கள் வெட்டுப்பட்ட தினம்...

“பணி செய்தே பழி தீர்ப்போம்” - சபதம் எடுத்த வீரத்துறவி, பட்டி தொட்டியெல்லாம் காவி கொடி பறக்கச் செய்தார்.

வெட்டியவன் யாரென்று தெரியுமா? பதில் பதிவிடுங்கள்....

#வீரத்துறவி #இராமகோபாலன் #இந்துமுன்னணி

கோயில் சொத்துக்கள் கோயில் நலனுக்காக பயன்படுவதை, இந்து சமய அறநிலையத்துறை உறுதி செய்ய வேண்டும். கோயில் சொத்துக்கள் மீட்கப்...
16/07/2025

கோயில் சொத்துக்கள் கோயில் நலனுக்காக பயன்படுவதை, இந்து சமய அறநிலையத்துறை உறுதி செய்ய வேண்டும். கோயில் சொத்துக்கள் மீட்கப்பட வேண்டும்
-சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை

நீதிமன்ற உத்தரவை இந்து சமய அறநிலைத்துறை நடைமுறைப்படுத்துமா..?

தொடர்ந்து கோவில் சொத்துக்களை ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்க வலியுறுத்தும் நீதிமன்றங்கள்..

தொடர்ந்து நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் பாராமுகமாக இருக்கும் இந்து சமய அறநிலையத்துறை..

தொடர்ந்து கோயில் நில ஆக்கிரமிப்பில் நீதிமன்றமே நேரடியாக தலையிட்டு கோயில் நிலங்களை மீட்க வேண்டுமென பொதுமக்கள் எதிர்பார்ப்பு.

கோவில் இடங்களை வணிக பயன்பாட்டிற்கு என மடைமாற்றி சுயநல அரசியல் செய்வதை நீதிமன்ற அவமதிப்பாக கருதி நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது தான் நீதிமன்ற உத்தரவை இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் அமல்படுத்த கவனம் கொடுப்பார்கள்...

#அறநிலையத்துறை #இந்துமுன்னணி

16/07/2025

கோவிலை இடிக்கப்பட்டதை கண்டித்து அறவழியில் போராட்டம்..
இந்துமுன்னணி பொறுப்பாளர்களை கைது செய்த காவல்துறை..

சென்னை - மின்ட் தெருவில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த வேத விநாயகர் கோவிலை இரவோடு இரவாக திட்டமிட்டு இடித்து விட்டனர்..

கோவில் இடிக்கப்பட்டதை கண்டித்து அமைதியான முறையில் போராடிய மாநில செய்தி தொடர்பாளர், A.T.இளங்கோவன் அவர்கள் உட்பட மாநகர, மாவட்ட, தொகுதி பொறுப்பாளர்களை காவல் துறையினர் கைது செய்து மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளனர்..

#சென்னை #விநாயகர்கோவில் #இடிப்பு #இந்துமுன்னணி

சென்னை - மின்ட் தெருவில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த வேத விநாயகர் கோவிலை இரவோடு இரவாக திட்டமிட்டு இடித்து விட்டனர்..இந்து ...
16/07/2025

சென்னை - மின்ட் தெருவில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த வேத விநாயகர் கோவிலை இரவோடு இரவாக திட்டமிட்டு இடித்து விட்டனர்..

இந்து முன்னணி மாநில செய்தி தொடர்பாளர், A.T.இளங்கோவன் அவர்கள் கோவில் இடிக்கப்பட்ட இடத்தை இன்று காலையில் பார்வையிட்டார்.. உடன் இந்துமுன்னணி பொறுப்பாளர்கள் இருந்தனர்..

கோவில் இடிக்கப்பட்டதை கண்டித்து அமைதியான முறையில் போராடிய மாநில செய்தி தொடர்பாளர், A.T.இளங்கோவன் அவர்கள் உட்பட மாநகர, மாவட்ட, தொகுதி பொறுப்பாளர்களை காவல் துறையினர் கைது செய்து மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளனர்..

#சென்னை #விநாயகர்கோவில் #இடிப்பு #இந்துமுன்னணி

நாளை.. ஜூலை 16 - புதன் கிழமை (சஷ்டி திதி)முருக பக்தர்கள் மாநாட்டு தீர்மானத்தின் படி...முருக பக்தர்களே கோவில்களில் கூடி, ...
15/07/2025

நாளை.. ஜூலை 16 - புதன் கிழமை (சஷ்டி திதி)

முருக பக்தர்கள் மாநாட்டு தீர்மானத்தின் படி...

முருக பக்தர்களே கோவில்களில் கூடி, ஒன்றாக கந்த சஷ்டி கவசம் பாடுவோம்!!

#முருக_பக்தர்கள்_மாநாடு #முருகன்_மாநாடு_தீர்மானங்கள்

கர்மவீரர் காமராஜர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு காமராஜர் அவர்களின் திருக்கரங்களால் துவங்கப்பட்ட தூத்துக்குடி இந்து அர...
15/07/2025

கர்மவீரர் காமராஜர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு காமராஜர் அவர்களின் திருக்கரங்களால் துவங்கப்பட்ட தூத்துக்குடி இந்து அரிஜன துவக்கப்பள்ளியில், அனைத்து மாணவ மாணவிகளுக்கும் பிளாஸ்டிக்கை ஒழிக்கும் நோக்கத்தில் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் தண்ணீர் பாட்டில் மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக இந்து முன்னணி மாநில இணை அமைப்பாளர் பொன்னையா அவர்கள், நெல்லை கோட்ட செயலாளர் பிரம்மநாயகம் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பொருட்களை வழங்கினர்..

#கல்விவளர்ச்சிநாள் #சான்றோர்தினம் #இந்துமுன்னணி

கர்மவீரர்  #காமராஜர் அவர்களின் 123-வது பிறந்தநாளில் இரட்டையூரணியில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு,  #இராமநாதபுரம...
15/07/2025

கர்மவீரர் #காமராஜர் அவர்களின் 123-வது பிறந்தநாளில் இரட்டையூரணியில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு, #இராமநாதபுரம் மாவட்டம், #மண்டபம் ஒன்றியம், #திருப்புல்லாணி ஒன்றியம் #இந்துமுன்னணி சார்பில் மலர் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது..

#கல்விவளர்ச்சிநாள் #சான்றோர்தினம் #இந்துமுன்னணி

தேனி மாவட்டம், இந்து முன்னணி சார்பாக பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 123-வது பிறந்த நாளை முன்னிட்டு, நாடார் சரஸ்வதி பள்ள...
15/07/2025

தேனி மாவட்டம், இந்து முன்னணி சார்பாக பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 123-வது பிறந்த நாளை முன்னிட்டு, நாடார் சரஸ்வதி பள்ளி வளாகத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது மற்றும் இந்து இளைஞர் முன்னணி சார்பாக 123 மரக்கன்றுகள் வழங்கப்பட்டது..

#கல்விவளர்ச்சிநாள் #சான்றோர்தினம் #இந்துமுன்னணி

பள்ளி கல்வி துறையின் அவலம்!! 19/08/23 - சென்னை மாத்தூர் அரசு பள்ளியின் வகுப்பறை கதவுகளில் மனித கழிவு பூசப்பட்டது.. 29/01...
15/07/2025

பள்ளி கல்வி துறையின் அவலம்!!

19/08/23 - சென்னை மாத்தூர் அரசு பள்ளியின் வகுப்பறை கதவுகளில் மனித கழிவு பூசப்பட்டது..

29/01/25 – திருப்பூர், பல்லடம் - காம நாயக்கன் பாளையம் அரசு பள்ளியின் 10 ஆம் வகுப்பறையில் மேஜை சுவர் ஜன்னல் ஆகிய பகுதிகளில் மலத்தை அள்ளி வீசிய மர்ம நபர்கள்..

14/07/25 - திருவாரூர் மாவட்டம், காரியாங்குடி மாநகராட்சி பள்ளியின் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த நபர்கள்..

பள்ளி கல்வி துறை கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளில் மனித மலத்தை வீசுவது, குடிநீர் தொட்டியில் கலப்பது, தொடர்ந்து மாணவ மாணவிகளுக்கு பாதுகாப்பு இல்லை புகார் அளித்தும் அந்த மர்ம நபர்களை கண்டுபிடிப்பதும் இல்லை.. நடவடிக்கை எடுப்பதும் இல்லை.. மாணவ மாணவிகளுக்கு பாதுகாப்பும் இல்லை..

பள்ளி கல்வி துறை அமைச்சர், அரசியல் விளம்பரம் தேடாமல் பள்ளிகளில் மலம் கலந்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.. மாணவ மாணவிகள் மீது அக்கறை கொள்ள வேண்டும் என இந்து முன்னணி கேட்டுக் கொள்கிறது..

முஸ்லிம் பயங்கரவாதிகளின் விடுதலைக்காக குரல் கொடுக்கும் சீமானின் நயவஞ்சகம்!1998 அல்உம்மா முஸ்லிம் பயங்கரவாதிகளால் குண்டு ...
15/07/2025

முஸ்லிம் பயங்கரவாதிகளின் விடுதலைக்காக
குரல் கொடுக்கும் சீமானின் நயவஞ்சகம்!

1998 அல்உம்மா முஸ்லிம் பயங்கரவாதிகளால் குண்டு வைத்து கொல்லப்பட்டனர் 58 அப்பாவி தமிழர்கள்.

முஸ்லிம் பயங்கரவாதிகள் பல இந்து இயக்கத் தலைவர்களையும், காவல்துறை அதிகாரிகளையும் படுகொலை செய்தார்கள். அவர்கள் மரணத்திற்கு சீமான் என்ன பதில் சொல்லப் போகிறார். அவர்களின் குடும்பத்தினரின் அழுகுரல் இவருக்கு கேட்கவில்லையா?

பயங்கரவாதி பாஷாவின் இறுதி ஊர்வலத்திற்கு வந்த சீமான் அவரை "அப்பா" என்று அழைத்து நீலிக்கண்ணீர் வடித்தார். இத்தகைய நடவடிக்கைகள் நாம் தமிழர் பயங்கரவாதிகளுக்கு துணை போகிறது என்பது உண்மை தானே..

மதுரையில் எந்த அமைப்பிலும் இல்லாத பால்காரர் சுரேஷ் கொடூரமாக படுகொலை செய்த இஸ்லாமிய பயங்கரவாதிகளுக்கு சீமான் ஆதரவு நியாயமா? பச்சைத் தமிழன் சுரேஷ் குடும்பத்திற்கு சீமான் என்ன பதில் சொல்வார்..

பரமக்குடியில் கவுன்சிலர் முருகன் என்பவர் படுகொலை செய்த போலீஸ் பக்குரூதீன், பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக் ஆகியோருக்கு ஆதரவளிக்கும் சீமான் அவர்களே, முருகன் தமிழர் தானே அவருக்கு நாம் தமிழர் கட்சியின் பதில் என்ன??

மதுரை திருமங்கலத்தில் காவல் நிலையத்தில் புகுந்து காவல் துறையினரின் தாக்கி இஸ்லாமிய பயங்கரவாதிகள் இமாம்அலி ஹைதர் அலியை அழைத்துச் சென்ற போலீஸ் பக்குருதின் தியாகியா ?

கடந்த சில நாட்களாக 30 ஆண்டுகளுக்கும் மேலாக தலைமறைவாக இருந்த பயங்கரவாதிகளை தீவிரவாத தடுப்பு பிரிவு பிடித்து வரும் வேளையில் சீமானின் பயங்கரவாத ஆதரவு போக்கினை உளவுத்துறை விசாரிக்க வேண்டும்.

இலங்கை தமிழர்களை வைத்து அரசியல் நடத்தி அதன்மூலம் பெரும் நிதியை சீமான் பெற்று வந்ததாக கூறப்படுகிறது . தற்போது இஸ்லாமிய அடிப்படைவாதிகளுக்கு ஆதரவாக சீமான் குரல் கொடுப்பது இவரது தனிப்பட்ட ஆதாயத்திற்கா என்ற கேள்வி எழுகிறது.

எனவே, இஸ்லாமிய பயங்கரவாதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்று மதுரையில் ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக சீமான் அறிவித்து இருப்பது, பிடிபட்ட பயங்கரவாதிகள் குறித்த தமிழக மக்களிடம் எழுந்து இருக்கும் சந்தேகத்தை திசை திருப்ப என சந்தேகம் எழுகிறது.

பயங்கரவாதத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் சீமானை மத்திய, மாநில உளவுத்துறை கண்காணிக்க வேண்டும். தேர்தல் பிரச்சாரம் சூடுபிடிக்கும் இப்போது தமிழகத்தில் மீண்டும் தலைதூக்கும் மத அடிப்படைவாத ஆதரவு குறித்து கவனத்தில் கொள்ள வேண்டும். தேவையான உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்...

SIMI-யின் மீதான தடை தொடரும்...பயங்கரவாத அமைப்பான SIMI-யின் மீதான தடையை உறுதி செய்துள்ள உச்சநீதிமன்றம் தீர்ப்பை, இந்துமுன...
15/07/2025

SIMI-யின் மீதான தடை தொடரும்...

பயங்கரவாத அமைப்பான SIMI-யின் மீதான தடையை உறுதி செய்துள்ள உச்சநீதிமன்றம் தீர்ப்பை, இந்துமுன்னணி வரவேற்கிறது..!!

| | | |

இந்து தலைவர்கள் மற்றும் பொதுமக்களை கொலை செய்த குற்றவாளிக்கு ஆதரவாக சீமான் போராட்டம்!இந்து விரோதி சீமானுக்கு இந்துமுன்னணி...
15/07/2025

இந்து தலைவர்கள் மற்றும் பொதுமக்களை கொலை செய்த குற்றவாளிக்கு ஆதரவாக சீமான் போராட்டம்!

இந்து விரோதி சீமானுக்கு இந்துமுன்னணி கண்டனம்!

பலகாலம் தலைமறைவாக இருந்து வேலூர் வெள்ளையப்பன், ஆடிட்டர் ரமேஷ் உட்பட பல இந்து தலைவர்களை படுகொலை செய்த போலீஸ் பக்ருதீன், பண்ணா இஸ்மாயில் போன்ற கொலைகார தீவிரவாதிகளுக்கு வக்காலத்து வாங்கி போராடத் துடிக்கும் சீமானை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது..!!

Address

Pudupet-Panruti

Alerts

Be the first to know and let us send you an email when Hindu Munnani posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Hindu Munnani:

Share

Category