Hindu Munnani

Hindu Munnani Hindu Munnani is the organization started by Veerath Thuravi Shri. Ramagopalan to protect and develop the HINDUISM and the Hindu people.
(1305)

Hindu Munnani is a religious and cultural organization based in the Indian state of Tamil Nadu which was formed to defend the Hinduism and protect Hindu religious monuments.

 #கி_ஆ_பெ_விசுவநாதம்   1. கி. ஆ. பெ. விசுவநாதம் பிள்ளை நவம்பர் 10, 1899 ஆம் ஆண்டு திருச்சியில் பிறந்தார். 2. தலைசிறந்த எ...
10/11/2025

#கி_ஆ_பெ_விசுவநாதம்

1. கி. ஆ. பெ. விசுவநாதம் பிள்ளை நவம்பர் 10, 1899 ஆம் ஆண்டு திருச்சியில் பிறந்தார்.

2. தலைசிறந்த எழுத்தாளராக, பேச்சாளராக, சிந்தனையாளராக, கற்றாய்ந்த தமிழ் அறிஞராக, அரசியல்வாதியாக, பத்திரிக்கையாளராக இருந்தவர்.

3. இவர் எழுதியுள்ள 23 நூல்களும் தமிழ்வளர்ச்சித்துறையால் 2007-2008-ல் நாட்டுடைமையாக்கப்பட்டு பரிவுத் தொகை 10 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது.

4. 1956 ஆம் ஆண்டு "முத்தமிழ்க் காவலர்" என்னும் பட்டத்தை, அன்றைய அண்ணாமலை பல்கலைக்கழகத் துணைவேந்தர் டி.எம்.நாராயணசாமியால் திருச்சிராப்பள்ளி தமிழ்ச் சங்கத்தின் சார்பில் வழங்கப்பட்டது.

5. 1965 ஆம் ஆண்டு மதுரையில் நடைபெற்ற சித்த மருத்துவ மாநாட்டில் "சித்த மருத்துவ சிகாமணி" விருது வழங்கப்பட்டது. 1975 ஆம் ஆண்டு தமிழ்நாட்டு நல்வழி நிலையம் "வள்ளுவ வேல்" என்னும் விருது வழங்கியது.

#சான்றோர்தினம் #இந்துமுன்னணி

 #தத்தோபந்த்தெங்கடி   1. தத்தோபந்த் தெங்கடி1920 நவம்பர் 10-ல் அன்றைய மராட்டியத்தின் வார்தா மாவட்டத்தில் ஆர்வி கிராமத்தில...
09/11/2025

#தத்தோபந்த்தெங்கடி

1. தத்தோபந்த் தெங்கடி1920 நவம்பர் 10-ல் அன்றைய மராட்டியத்தின் வார்தா மாவட்டத்தில் ஆர்வி கிராமத்தில் பிறந்தார்.

2. தேசத்தின் சமூக, அரசியல், கலாசாரச் சூழலில் மாற்றம் நிகழ்த்திய பாரதீய சிந்தனையாளர்களுள் முதன்மையானவர்.

3. எம்.ஏ., எல்.எல்.பி. பட்டம் பெற்ற பின், ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தில் இணைந்து,முழுநேர ஊழியரானார்.

4. ஆர்.எஸ்.எஸ். முழுநேர ஊழியர்கள் பிரசாரகர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். அவர்கள் குடும்ப வாழ்வைத் தியாகம் செய்து, வாழ்நாள் முழுவதும் பிரம்மச்சாரியாக இருக்கிறார்கள். தெங்கடி அவர்களும் 1942 முதல் இறக்கும் வரை (2004) ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பிரசாரகராகவே, 62 ஆண்டுகள் இருந்தார்.

5. தெங்கடி மிகச் சிறந்த செயல்வீரர். தன்னுடன் பழகுவோரை ஈர்ப்பதுடன், அவர்களையும் சமூகப்பணியில் ஈடுபடுத்தும் ஆற்றலும் கொண்டவர். அவரது திறமையை உணர்ந்த RSS இன் இரண்டாவது தலைவர் குருஜி மாதவ சதாசிவ கோல்வல்கர், அவரை சங்கத்தின் சிந்தனைகள் பிற துறைகளில் பரவுவதற்கான பணிகளில் ஈடுபடுமாறு பணித்தார்.

6. அதையேற்று தொழிலாளர்களை ஒன்றுபடுத்த, 1955-ல் பாரதீய மஸ்தூர் சங்கம் (பி.எம்.எஸ்.)நிறுவினார். இன்று உலக அளவில் புகழ் பெற்றதாகவும், தேசிய அளவில் அதிக உறுப்பினர்களைக் கொண்டதாகவும் பி.எம்.எஸ். வளர்ந்திருக்கிறது.

7. அதற்கு முன்னதாகவே (1949) மாணவர்களுக்கான அமைப்பின் தேவையை உணர்ந்து அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் (ஏ.பி.வி.பி.) துவங்கப்பட்டது. அதன் நிறுவன உறுப்பினராக பால்ராஜ் மதோக், எஸ்.எஸ்.ஆப்தே ஆகியோருடன் செயல்பட்டார் தெங்கடி.

8. இன்று தேசத்தின் முதற்பெரும் மாணவர் அமைப்பாக ஏ.பி.வி.பி. உள்ளது. விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களின் நலனுக்காக அவர் 1979-ல் பாரதீய கிசான் சங்கத்தை நிறுவினார். அதேபோல, நாட்டின் பொருளாதார சிந்தனை சுதேசிமயமாக வேண்டும் என்ற நோக்கத்தில் ஸ்வதேசி ஜாக்ரண் மஞ்ச் அமைப்பை 1991-ல் நிறுவினார்.

#சான்றோர்தினம் #இந்துமுன்னணி

 ானசம்பந்தன்   1. நவம்பர் 10, 1916 ஆம் ஆண்டு திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் கல்லணைக்கருகில் உள்ள அரசன்குடி என்ற ஊரில் பி...
09/11/2025

ானசம்பந்தன்

1. நவம்பர் 10, 1916 ஆம் ஆண்டு திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் கல்லணைக்கருகில் உள்ள அரசன்குடி என்ற ஊரில் பிறந்தவர்.

2. ஒரு தமிழ் அறிஞர், எழுத்தாளர் மற்றும் இலக்கிய விமர்சகர். 1985 ஆம் ஆண்டின் தமிழுக்கான சாகித்திய அகாதமி விருது பெற்றவர். சுருக்கமாக அ. ச. ஞா என்றும் அழைக்கப்பட்டார்.

3. அ. ச. ஞானசம்பந்தனின் முதல் புத்தகமான இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும் என்ற புத்தகம் 1945-ல் வெளியானது. இப்புத்தகமும், கம்பன் காலை (1950) மற்றும் தம்பியர் இருவர் (1961) ஆகிய புத்தகங்களும் அவருக்குக் கம்பராமாயணத்தில் இருந்த செறிந்த அறிவுக்குச் சான்றாக அமைந்தன.

4. அகில இந்திய வானொலியின் சென்னை அலுவலகத்தில் நாடகங்கள் தயாரிப்புப் பிரிவின் பொறுப்பு அலுவலராக வேலை பார்த்தார். 1959-ல் தமிழ்ப் பதிப்பகங்களின் பணியகத்தின் செயலாளரானார்.

5. அவர் ஒரு சைவ சமய அறிஞராகவும், பாடநூல் தயாரிப்பாளர் மற்றும் தமிழ் விரிவுரையாளராகவும் வாழ்ந்தவர். 35 ஆராய்ச்சிப் புத்தகங்கள், 3 மொழிபெயர்ப்பு புத்தகங்கள் மற்றும் ஏராளமான பாடப் புத்தகங்களும் கட்டுரைகளும்எழுதியுள்ளார்.

#சான்றோர்தினம் #இந்துமுன்னணி

 #கொத்தமங்கலம்சுப்பு  1. நவம்பர் 10, 1910 ஆம் ஆண்டு காரைக்குடிக்கு அருகில் கன்னாரியேந்தல் என்ற ஊரில் பிறந்தார். இயற்பெயர...
09/11/2025

#கொத்தமங்கலம்சுப்பு

1. நவம்பர் 10, 1910 ஆம் ஆண்டு காரைக்குடிக்கு அருகில் கன்னாரியேந்தல் என்ற ஊரில் பிறந்தார். இயற்பெயர் சுப்பிரமணியன்.

2. கவிஞர், பாடலாசிரியர், எழுத்தாளர், நடிகர், திரைப்பட இயக்குநர், கதை வசனகர்த்தா, வில்லுப்பாட்டிசைக் கலைஞர் என்று மட்டுமல்லாது பத்திரிக்கையாளர், துணைஆசிரியர், நாடக நடிகர் என்று பன்முகங்கள் கொண்ட அறிஞர்.

3. மிகப் பிரபலமான தில்லானா மோகனாம்பாள் தொடர்கதையை ஆனந்த விகடனில் கலைமணி என்ற புனைபெயரில் எழுதினார்.

4. முதன் முதலில் 1935 ஆம் ஆண்டில் கே. சுப்பிரமணியம் இயக்கிய பட்டினத்தார் திரைப்படத்தில் நடித்தார். அதன் பின்னர் 1937-ல் மைனர் ராஜாமணி, தொடர்ந்து அனாதைப் பெண், அதிர்ஷ்டம், திருநீலகண்டர், சாந்த சக்குபாய், அடங்காப்பிடாரி, கச்ச தேவயானி, மதனகாமராஜன் போன்ற திரைப்படங்களில் நடித்தார்.

5. 1944 ஆம் ஆண்டில் வெளிவந்த ஜெமினியின் தாசி அபரஞ்சி இவர் நடித்த ஒரு வெற்றிப் படம். 1945 ஆம் ஆண்டில் கண்ணம்மா என் காதலி படத்தை இயக்கினார். இதன் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் அனைத்தையும் சுப்புவே எழுதியிருந்தார்.

6. 1953 ஆம் ஆண்டில் அவ்வையார் என்ற பிரபலமான திரைப்படத்தை இயக்கினார்.

7. 1967-ம் ஆண்டு தமிழக அரசின் கலைமாமணி விருது இவருக்கு வழங்கப்பட்டது. 1971-ல் மத்திய அரசு பத்மஸ்ரீ விருது தந்து இவரை கவுரவித்தது.

8. வில்லுப்பாட்டில் பெரிதும் ஆர்வம் கொண்டிருந்த கொத்தமங்கலம் சுப்பு பின்னாளில் காந்திமகான் கதையை இவர் வில்லுப்பாட்டு மூலமாக தமிழகம் முழுவதும் நடத்தினார்.

#சான்றோர்தினம் #இந்துமுன்னணி

 #வி_கணபதிஅய்யர்  1. நவம்பர் 10, 1906 ஆம் ஆண்டு கேரளத்திலுள்ள கோழிக்கோட்டில் பிறந்தார். இருபதாவது நூற்றாண்டின் முதன்மை இ...
09/11/2025

#வி_கணபதிஅய்யர்

1. நவம்பர் 10, 1906 ஆம் ஆண்டு கேரளத்திலுள்ள கோழிக்கோட்டில் பிறந்தார். இருபதாவது நூற்றாண்டின் முதன்மை இந்தியக் கணித வல்லுனர்களில் ஒருவர்.

2. 'பேராசிரியர் வி.ஜி.அய்யர்' என்று அக்காலக் கணித உலகில் சிறப்பாக அறியப்பட்டவர். எளிமையான நடை உடை பாவனையால் மிகவும் மதிக்கப்பட்ட கணித மேதை.

3. பகுவியல் என்ற பரந்த கணித அரங்கில் உள்ளடங்கிய எல்லா கணிதப் பிரிவுகளிலும், இடவியல் என்ற இருபதாவது நூற்றாண்டின் புதிய கணிதப்பிரிவிலும் அவர் ஆழம் மிகுந்த 55 ஆய்வுக் கட்டுரைகள் எழுதி உலகமறியப் போற்றப்பட்டார்.

4. கணிதப் பாருலகுக்கு 15 இந்திய மாணவமணிகளை முனைவர் பட்டம் பெற பயிற்றுவித்ததோடு மட்டுமல்லாமல், அவர்கள் ஒவ்வொருவரும் ஆயுள் முழுவதும் கணித உலகுக்குப் பயனுள்ள சேவை செய்யக் காரணமாகவும் முன்மாதிரியாகவும் இருந்தார்.

5. மசூலிப்பட்டணத்தில் அரசாங்கக்கல்லூரியில் விரிவுரையாளராக இரண்டாண்டுகள் இருந்தபின், 1939-ல் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் கணிதத்துறையில் சேர்ந்தார். அங்கு 1950-ல் பேராசிரியராகவும் கணிதத் துறைத் தலைவராகவும் உயர்ந்தார்.

6. கணிதமோ, வேதியியலோ, இயற்பியலோ, எந்த விஞ்ஞானத் துறையிலும் தான் திறமை பெற்ற உட்துறையில் தான் எந்த சராசரிப் பேராசிரியரும் முனைவர்பட்டப் படிப்புக்குத் தன்னிடம் வரும் மாணவர்களை ஊக்குவித்து ஆய்வு செய்விப்பது வழக்கம். ஆனால் கணபதி அய்யர் ஆய்வாசிரியர்களுக்கே ஒரு முன்னோடியாக இருந்தவர்.

#சான்றோர்தினம் #இந்துமுன்னணி

 #சுரேந்திரநாத்பானர்ஜி  1. புரட்சிகரமான எண்ணங்கள் கொண்ட டாக்டரின் மகனாக கல்கத்தாவில் (1848) பிறந்தார். பேரன்ட்டல் அகாடமி...
09/11/2025

#சுரேந்திரநாத்பானர்ஜி

1. புரட்சிகரமான எண்ணங்கள் கொண்ட டாக்டரின் மகனாக கல்கத்தாவில் (1848) பிறந்தார். பேரன்ட்டல் அகாடமிக் இன்ஸ்டிட்டியூட், இந்து கல்லூரியில் பயின்றார். கல்கத்தா பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு முடித்தார்.

2. சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி வெற்றி பெற்றார். வயதைக் காரணம் காட்டி, அவரது வெற்றியை ரத்து செய்தனர். நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து, மீண்டும் தேர்வு எழுதி வெற்றி பெற்றார். சில்ஹட் நகரில் துணை மாஜிஸ்திரேட்டாக நியமிக்கப்பட்டார். பின்னர் அதில் இருந்தும் நீக்கப்பட்டார். இதை எதிர்த்து இங்கிலாந்துக்கு சென்று முறையீடு செய்தும் எந்த பலனும் கிடைக்கவில்லை.

3. இந்தியர்களை பாரபட்சமாக நடத்தும் ஆங்கில அரசை எதிர்க்க தீர்மானித்தார். மக்கள் உரிமைகளைப் பெறவும், அநீதியில் இருந்து காத்துக்கொள்ளவும், அரசு நிர்வாகத்தில் பங்கு பெறவும் ஓர் அமைப்பு அவசியம் என்று கருதினார்.

4. கல்கத்தா திரும்பியதும் மெட்ரோபாலிட்டன் கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியராகப் பணியாற்றினார். 1882-ல் ரிப்பன் கல்லூரியை (தற்போதைய சுரேந்திரநாத் கல்லூரி) தொடங்கி ஆசிரியராகப் பணிபுரிந்தார். இப்பணியில் 37 ஆண்டுகள் முனைப்புடன் ஈடுபட்டார். தீவிர அரசியலில் ஈடுபட்டபோதும், கற்பிக்கும் பணியை நிறுத்தவில்லை.

5. ஆனந்தமோகன் போஸுடன் இணைந்து இந்திய தேசிய அமைப்பை 1876-ல் தொடங்கினார். சிவில் சர்வீஸ் தேர்வு எழுதும் இந்திய மாணவர்களின் வயது வரம்பு பிரச்சினைக்கு இதன்மூலம் தீர்வு கண்டார். ஆங்கில அரசின் இன வேறுபாட்டை எதிர்த்து நாடு முழுவதும் போர்க் குரல் எழுப்பினார்.

6. வளர்ந்துவந்த தலைவர்களான கோபால கிருஷ்ண கோகலே, சரோஜினி நாயுடு போன்றவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டார். காங்கிரஸ் தலைவராக 2 முறை தேர்ந்தெடுக்கப்பட்டார்.

7. வங்கப் பிரிவினைக்கு இவர் தெரிவித்த எதிர்ப்பு, அரசியல் வாழ்க்கையில் முக்கியத் திருப்புமுனையாக அமைந்தது. சுதேசி இயக்கத்தின் முக்கியத் தூணாக செயல்பட்டார்.

8. ஆங்கிலத்தில் உரையாற்றுவதில் வல்லவர். சரளமான, ஆழமான சொல்லாற்றல் இவரை சிறந்த நாடாளுமன்ற உறுப்பினராக பிரகாசிக்க வைத்தது. ஆங்கிலேயரும் மதித்துப் போற்றும் தலைவராக விளங்கினார்.

9. அரசியல் களம் மாறியது. சில தலைவர்களின் தீவிரவாதப் போக்கை இவரால் ஜீரணிக்க முடியவில்லை. காந்திஜியின் ஒத்துழையாமை இயக்க முறையைக்கூட ஏற்க மறுத்தார். ஒரு கட்டத்தில் தீவிர அரசியலில் இருந்து விலகினார். ‘வங்காளத்தின் முடிசூடா மன்னன்’, ‘சரண்டர் நாட் பானர்ஜி’ என்று புகழப்பட்ட சுரேந்திரநாத் பானர்ஜி 77-வது வயதில் (1925) மறைந்தார்.

#சான்றோர்தினம் #இந்துமுன்னணி

பிஜப்பூர் சுல்தானால், நயவஞ்சக எண்ணத்துடன் தன்னை கொல்ல அனுப்பப்பட்ட அப்சல்கான் என்னும் மாமிசமலையை,  #சத்ரபதிசிவாஜி  மகராஜ...
09/11/2025

பிஜப்பூர் சுல்தானால், நயவஞ்சக எண்ணத்துடன் தன்னை கொல்ல அனுப்பப்பட்ட அப்சல்கான் என்னும் மாமிசமலையை, #சத்ரபதிசிவாஜி மகராஜ் அவர்கள் புத்திசாலித்தனமாக புலிநகத்தால் நெஞ்சை பிளந்து கொன்ற #வெற்றிதினம் இன்று!

#சத்ரபதிசிவாஜி #இந்துமுன்னணி

நாளை.. அக்டோபர் 10 - திங்கள்கிழமை (சஷ்டி திதி)முருக பக்தர்கள் மாநாட்டு தீர்மானத்தின் படி...பக்தர்களே!!கோவில்களிலும், நம்...
09/11/2025

நாளை.. அக்டோபர் 10 - திங்கள்கிழமை (சஷ்டி திதி)

முருக பக்தர்கள் மாநாட்டு தீர்மானத்தின் படி...

பக்தர்களே!!
கோவில்களிலும், நம்முடைய வீடுகளிலும் ஒன்றாக கூடி,
கந்த சஷ்டி கவசம் பாடுவோம்!!

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றிட..
முருக பக்தர்களே வாரீர்!!

நாள்: 30.11.25, ஞாயிற்றுக்கிழமை
நேரம்: மாலை 3.00 மணி
இடம்: 16 கால் மண்டபம்

09/11/2025

காதலர்களுக்கு பாதுகாப்பு!! பக்தர்களுக்கு மட்டும் தடையா?? |

பக்தர்கள் மற்றும் இந்து முன்னணியின் எதிர்ப்பின் விளைவாக திருச்செந்தூர் கடற்கரையில் பக்தர்கள் தங்குவதற்கு தடையில்லை..திரு...
09/11/2025

பக்தர்கள் மற்றும் இந்து முன்னணியின் எதிர்ப்பின் விளைவாக திருச்செந்தூர் கடற்கரையில் பக்தர்கள் தங்குவதற்கு தடையில்லை..

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கடற்கரையில் பக்தர்கள் தங்க தடை என்பதற்கு தமிழகமெங்கும் பக்தர்கள் எதிர்ப்பு மற்றும் மேற்படி உத்தரவை இந்து முன்னணி திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தியது..

இன்று கோயில் கடற்கரையில் இரவு நேரத்தில் பக்தர்கள் தங்குவதற்கு காவல்துறை சார்பில் எந்த தடையும் விதிக்கவில்லை என மாவட்ட காவல்துறை விளக்கம் அளித்துள்ளது..

இது பக்தர்களுக்கும், இந்துக்களுக்கும் கிடைத்த வெற்றி!!

#வெற்றிச்செய்தி

மக்களே! உங்க கருத்து என்ன??
09/11/2025

மக்களே! உங்க கருத்து என்ன??

இந்துசமய அறநிலையத்துறையின் கீழ் கோவில் நிர்வாகம் வந்த பிறகு சுமார் 50 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் காணாமல் போகியுள்ளது. திட்டம...
09/11/2025

இந்துசமய அறநிலையத்துறையின் கீழ் கோவில் நிர்வாகம் வந்த பிறகு சுமார் 50 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் காணாமல் போகியுள்ளது. திட்டமிட்ட வகையில் கோவில் நிலங்கள் மற்றும் குறிப்பாக திருக்குளங்கள் அரசுக்கு தாரைவாக்கப்பட்டு வாடகைகூட தராமல் கபளீகரம் - மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் அவர்களின் பத்திரிகை அறிக்கை..




#அறநிலையத்துறை
#கோவில்
#தமிழகஅரசு

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் கங்காபேரிபுதூர் கிராமத்தில் ...

Address

59, Ayya Mudali Street
Chennai
600002

Telephone

+919786350450

Website

https://aratt.ai/@hindu_munnani_tamilnadu, https://whatsapp.com/channel/0029VaA3Lii30LKSGh

Alerts

Be the first to know and let us send you an email when Hindu Munnani posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Hindu Munnani:

Share

Category