Media Today

Media Today சிறுபான்மை சமுதாயம் அரசியல் எழுச்சி பெற..
அரசியல் இயக்க சார்பற்ற செய்திகள் மற்றும் அரசியல் விமர்சனம்

23/07/2025
அதிமுகவின் ராஜா... திமுகவில்...! 1965 இந்தி எதிர்ப்பு போராட்டத்தில்  கலந்து  கொண்டு தனது அரசியல் வாழ்வை தொடங்கியவர். 198...
23/07/2025

அதிமுகவின் ராஜா... திமுகவில்...!

1965 இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டு தனது அரசியல் வாழ்வை தொடங்கியவர். 1986இல் நடைபெற்ற எம்ஜிஆர் மன்ற மாநாட்டில் பேசியவர் இவரின் பேச்சு எம்ஜிஆரை வெகுவாக கவர்ந்தது.அதே மேடையில் எம்ஜிஆரின் பாராட்டு பெற்றவர்.

ஆட்சியிலும் சரி கட்சி பதவிகளிலும் சரி ஒரு சிறுபான்மை சமூகத்தை சேர்ந்தவர் எந்த அளவுக்கு உயரமுடியுமோ அந்த அளவு உயரத்தை அடைந்தவர்.

1986 மண்டபம் ஊராட்சி மன்ற பெருந்தலைவர். 2001 ராமநாதபுரம் சட்டமன்ற எம்எல்ஏ. 2014 ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் பாராளுமன்ற உறுப்பினர்.வக்பு வாரிய தலைவர். மாநில அமைச்சர் என அவர் வகிக்காத பதவிகளே இல்லை.

அதிமுக வளரும் போது அன்வர் ராஜாவும் வளர்ந்தார் என்பதுதான் எதார்த்தம்.

அதிமுக அரசியல்வாதி என்பதை தாண்டி தனது தனிப்பட்ட திறமையால் வளர்ச்சியை தக்கவைத்து கொண்டார்..

2018 டிசம்பர் 27ஆம் தேதி முத்தலாக் தடை மசோதா தொடர்பாக நாடாளுமன்றத்தில் அன்வர்ராஜா பேசியதை கண்டு பலரும் ஆச்சரியமாக பார்த்தனர்.

அவரின் மசோதா எதிர்ப்பு உரை நாடுமுழுவதும் பேசுபொருளாக மாறியது. அதிமுகவிலே பலருக்குள்ளும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி முஸ்லிம்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றார்.

அன்வர் ராஜா வின் நாடாளுமன்ற உரை "முத்தலாக் உரிமை மீறும் செயல்" என்ற தலைப்பில் புத்தகமாக வெளியிடப்பட்டது
(தொகுப்பு ஆசிரியர் மற்றும் வெளியிட்டார் புதுமடம் ஜாபர் அலி)

இப்புத்தக வெளியிட்டு விழாவிற்கு அப்போதைய மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை மற்றும் ஆறு சீனியர் அமைச்சர்கள் கலந்து கொண்டார்கள் இவரின் உரை மற்றும் புத்தக வெளியீட்டு விழாவிற்கு முழு ஆதரவளித்தவர் அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.

இந்த புத்தகம் ஆங்கிலம் உருது தமிழ் ஆகிய மொழிகளில் பல லட்சம் புத்தகங்கள் விற்கப்பட்டு முஸ்லிம்கள் மத்தியில் பெரும் ஆதரவும் வரவேற்பையும் பெற்றார் அன்வர் ராஜா.

இத்தனை வருடகால பழுத்த அரசியல்வாதி எம்ஜிஆர் காலம் தொட்டு கட்சியையும் கட்சி பணியையும் உயிர்மூச்சாக கொண்டு செயல்பட்ட அன்வர் ராஜா மீண்டும் ஒருமுறை தமிழக தொலைக்காட்சிகளின் முக்கிய செய்திகளில் இடம் பிடித்தார்..

அதிமுகவில் இருந்து விலகி தமிழக முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார் என்பதுதான் அந்த செய்தி.

திமுகவில் இணைந்த போது தமிழக முதல்வரிடம் தமது பாராளுமன்ற உரை அடங்கிய புத்தகத்தை பரிசளித்து அதைப் பற்றி சற்று விளக்கினார்

பாரம்பரியமான அரசியல்வாதி கிட்டத்தட்ட 60 ஆண்டுகாலம் அதிமுக வரலாற்று கட்சியில் இரண்டர கலந்தவர் எம்ஜிஆர் ஜெயலலிதா போன்றவர்களின் நன்மதிப்பு பெற்றவர் தமிழகம் முழுவதும் அதிமுகவுக்காக மேடை போட்டு பேசியவர், எழுதியவர் பன்முகம் கொண்டவர் ஏன் அதிமுகவில் தொடர முடியாத காரணம் என்ன என்ற இமாலய கேள்வி எழுகிறது..

அதிமுக பிஜெபி கூட்டணி என்ற ஒற்றை காரணம்தான் கட்சியை விட்டு விலகினாரா..? என்றால் நிச்சயமாக இருக்க முடியாது காரணம்.

அன்வர் ராஜா திமுகவில் இணைந்த பிறகு கூட அதிமுக இதுவரை முதல்வர் வேட்பாளர் யார் என்று வெளிப்படையாக கூறவில்லை என்றே குற்றம்சாட்டினார். எனவே இங்கே பிஜெபி கூட்டணி என்பது பிரச்சனை அல்ல அதை எவ்வாறு எடப்பாடி கையாளுகிறார் என்பதுதான் பிரச்சனை.

முன்னாள் முதல்வர்கள் ஆன கருணாநிதி ஜெயலலிதா போன்க்றவர்களே பிஜெபியுடன் கூட்டணி வைத்தவர்கள் தான்.

முன்னாள் முதல்வர்களான கருணாநிதி, ஜெயலலிதா காங்கிரஸ், பிஜெபி தேசிய தலைவர்களை வீட்டுக்கே வர வைத்து கூட்டணி பற்றி பேசுவார்கள்.. எல்லா முடிவுகளும் மாநில தலைமைதான் எடுக்கும்..

ஆனால் எடப்பாடி பழனிச்சாமியின் பிஜெபி கூட்டணி என்பது அதிமுகவை நிர்மூலம் ஆக்கிவிடும் என்ற அச்சம் மேல் மட்டம் முதல் அடிமட்ட தொண்டன் வரை சிந்திக்க வைக்கிறது.

அதற்கு ஒரே காரணம் இதுவரை பல மாநிலங்களில் பிஜெபி என்ன செய்தது என்பதை அறிந்தவர்களுக்கு நன்றாக தெரியும்..

தமிழகத்திலும் அதிமுகவின் இடத்தை பிஜெபி கைப்பற்ற துடித்துக்கொண்டு இருக்கிறது அதற்காக கதவை எடப்பாடி திறந்து விட்டுள்ளாரா என்ற சந்தேகமும் வலுவாகவே உள்ளது.‌

சமீப கால எடப்பாடி பேச்சுகள் மற்றும் செயல்பாடுகள் பிஜேபியின் பாசிச சித்தாந்தத்தை தமிழகத்தில் நிறுவ முயற்சிப்பதாகவே உள்ளது.

எடப்பாடி தலைமையில் பல தேர்தல்களை சந்தித்த அதிமுக பெறும் பின்ணடைவை சந்தித்தது.. கடந்த தேர்தலில் ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் ஓபிஎஸ் அதிமுகவை விட அதிக வாக்குகள் வாங்கினார்.
இதற்கு முக்கிய காரணம் முக்குலத்தோர் ஓட்டு வங்கி..

இது போன்ற தோல்விக்கான காரணங்களை எடுத்து கூறும்போது எடப்பாடி பழனிச்சாமி முகம் கொடுத்து பேசுவது கிடையாது... சில நேரங்களில் பல மூத்த அதிமுகவினரின் கருத்துகளை கூட மதிக்காமல் நடந்து கொள்கிறார் இதில் அன்வர் ராஜாவும் ஒருவர்..

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கடந்த அதிமுக பொதுக் குழுவில் சி.வி சண்முகம் அன்வர் ராஜா மீது ஒருமையில் பேசி பாய்ந்தார் அதை எடப்பாடி கண்டு கொள்ளவில்லை என்ற கவலையும் அன்வர் ராஜாவுக்கு உண்டு ‌

கட்சி சார்ந்த நலன் விட எடப்பாடி பழனிச்சாமி குடும்பத்தார் மற்றும் நெருங்கிய முன்னாள் அமைச்சர்களை காப்பாற்ற பிஜெபியிடம் அதிமுகவை சரணடைய செய்கிறார் என்பதுதான் பலரின் கணிப்பு.

எம்ஜிஆர் கட்சி தொடங்கிய காலத்தில் இருந்தே அடுத்த ஜெயலலிதா தலைமையேற்று பிறகும் முக்கிய தலைவர்களில் ஒருவராக இருந்தவர். அன்வர் ராஜா சிறுபான்மையின பிரதிநிதி என்று அவரை சுருக்க முடியாது அதிமுகவில் காலங்காலமாக இருந்த மூத்த கழக நிர்வாகி. கட்சியின் மோசமான தோல்விகளின் போது உடனிருந்தவர். அதிமுக மீதான கடும் விமர்சனங்களின் போது தாங்கிப் பிடித்தவர். சித்தாந்த கொள்கை ரீதியான முக்கிய ஆளுமைகள் அதிமுகவை விட்டு விலகுவது அவர்களுக்கு இயல்பான ஒன்றாக இருக்க முடியாது. மிகுந்த வலியுடன் தான் வெளியேற முடிவு செய்கிறார்கள்..

பெரிதாக பதவி ஆசைக்காக விலகுகிறார்கள் என்றும் கூற முடியாது காரணம் அவர்கள் பெரிய பல பதவிகளை ஏற்கனவே பார்த்தவர்கள்.

முன்னாள் அதிமுக வினரான
செந்தில் பாலாஜி, சேகர் பாபு போன்றவர்களுக்கு திமுகவில் கிடைத்த அங்கீகாரம் கூட காரணமாக இருக்கலாம்..

பிஜெபி கூட்டணி என்பதை தாண்டி இன்றைய மோடி பிஜெபி கூட்டணியால் அதிமுகவிற்கு விழ இருக்கும் சிறுபான்மை மக்களின் ஓட்டுகள் மட்டுமல்ல அடித்தட்டு தொண்டர்களின் ஓட்டுகள் கூட கிடைக்காத சூழல் தமிழகத்தில் உருவாகும். பெருவாரியான மக்களின் எதிர்ப்பலையில் தமிழக பிஜெபி படுதோல்வியை சந்தித்து போல அதிமுக படுதோல்வியை சந்திக்கும் என்பதே அரசியல் நோக்கர்களின் கணிப்பு..

தேர்தல் அரசியலில் கட்சிகளுக்கு கொள்கை பிடிப்பு எவ்வளவு அவசியமானது என்பதை எடப்பாடி பழனிச்சாமிக்கு தேர்தல் முடிவுகள் உணர்த்தும்..

- புதுமடம் ஜாபர் அலி

மாற்றுமத சகோதரர்கள் புரிதலுக்காக..காஜி (காழி )  என்றால் நீதிபதி என்று பொருள்.. அதாவது தற்போதைய நடைமுறையில் இஸ்லாமியர் சா...
25/05/2025

மாற்றுமத சகோதரர்கள் புரிதலுக்காக..

காஜி (காழி ) என்றால் நீதிபதி என்று பொருள்..
அதாவது தற்போதைய நடைமுறையில் இஸ்லாமியர் சார்ந்த விவகாரங்களில் தீர்ப்பு வழங்குவது தான் காஜியின் தலையான கடமை..

ஆனால் இந்தியா போன்ற நாடுகளில் நீதிமன்றம் தனியாக செயல்படுவதால் இஸ்லாமிய காஜிகளுக்கு தீரப்பு வழங்கும் பணி இல்லை..

மாறாக சிவில் விவகாரங்களான திருமணம் மற்றும் திருமண முறிவு போன்ற விவகாரங்களில் இருவருக்கும் இடையில் மத்தியஸ்தம் செய்யும் பணிகளை காஜி முன் எடுப்பார்..

அத்துடன் பிறை நாட்களை மாதந்தோறும் தேடி அறிவிப்பு செய்வார்....

ரமலான் மற்றும் பக்ரீத் நாட்களில் அவரின் அறிவிப்பு முக்கியத்துவமானதாக இருக்கும்.. ஆனால் அவர் ஒவ்வொரு மாதமும் பிறையை அறிவிக்கிறார் என்பது பலருக்கும் தெரியாது..

தலைமை காஜி என்பவர் மாநில தலைமை காஜியாக செயல்படுவார்.. மாவட்ட காஜிகள் தனியாக உள்ளனர்..‌ அவர்களை டவுன் காஜி என்று அழைப்பர்...

ஹாஜி வேறு .. காஜி வேறு ...

ஹஜ் செய்தவர்களை ஹாஜி என்று அழைப்பார்கள்...

காஜி என்பதை காழி ( நீதிபதி) என்பதுதான் அரபிக்கு இணக்கமான உச்சரிப்பு ..

காஜி முஸ்லிம் சமூகத்தின் அதிகாரப்பூர்வ ஒப்பற்ற தலைவர் என்று கூற முடியாது.. அவரின் பணியை அவர் செய்கிறார்...

பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் எம்எல்ஏ அவர்களுக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனைக்கு....இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்த...
28/04/2025

பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் எம்எல்ஏ அவர்களுக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனைக்கு....
இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவு...

28 அப்பாவி உயிர்களின் ரத்தம் காயுமுன்னே தேர்தல் பிரச்சாரம் செய்யும் மோடி..பதவி வெறி படுத்தும் பாடு..
24/04/2025

28 அப்பாவி உயிர்களின் ரத்தம் காயுமுன்னே தேர்தல் பிரச்சாரம் செய்யும் மோடி..பதவி வெறி படுத்தும் பாடு..

ஒவ்வெறு முறையும் இந்திய இஸ்லாமியர்கள் மீது நடத்தப்படும் திட்டமிட்ட வெறுப்பு தாக்குதலில் சங்கிகள் படுதோல்வியை சந்திக்கிறா...
24/04/2025

ஒவ்வெறு முறையும் இந்திய இஸ்லாமியர்கள் மீது நடத்தப்படும் திட்டமிட்ட வெறுப்பு தாக்குதலில் சங்கிகள் படுதோல்வியை சந்திக்கிறார்கள்..

கொராணா காலத்தில் இந்திய இஸ்லாமியர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட வெறுப்பு பிரச்சாரம் இடையிலேயே சுக்கு நூராக உடைந்து போனது..

அதற்காக இந்திய இஸ்லாமியர்கள் கொராணா பிணங்களை சுமக்க வேண்டியிருந்தது.. உயிரை பணயம் வைத்து சேவை செய்து சக்திகளின் பிரச்சாரத்தை முறியடித்தனர் இஸ்லாமியர்கள்..

சங்கிகளின் சடலம் கூட இஸ்லாமியர்கள் கரங்களால் அடக்கம் செய்யப்பட்ட வரலாறுகளும் இதே இந்தியாவில் நடந்தது..

தீவிரவாத தாக்குதல் என்பது இந்தியாவுக்கு புதியதல்ல ஆனால் இரண்டாயிரம் மக்கள் கூடும் இடத்தில் பாதுகாப்பை பலப்படுத்தாமல் கோட்டை விட்ட இந்திய அரசின் மெத்தன போக்கை கேள்வி கேட்காமல் ஒரு மணி நேரத்தில் மொத்த இந்திய இஸ்லாமியர்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியது சங்கி கூட்டம்... விளைவு சக்திகளின் எந்த பிரச்சாரமும் எடுபடாமல் அவர்களின் வாயாலயே தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களை காப்பாற்றியது இஸ்லாமிய காஷ்மீரி கள்தான் என்ற உண்மை வெளிவந்ததும் இப்போது அவர்களின் முகங்கள் சுருங்கி விட்டன...

நடத்தப்பட்ட மனிதாபிமானமற்ற அப்பாவிகளின் கொலையை யார்தான் ஆதாரிப்பார்கள்? உலகில் உள்ள எந்த மனிதனும் ஆதரிக்க மாட்டான்..

இஸ்லாமிய தீவிரவாதம் என்ற சக்திகளின் அதே பிரச்சாரம் இஸ்லாமியர்களின் சேவையாக மாறிவிட்டது இவ்வளவுதான் அவர்களின் சிந்தனை என்பதை பொது சமூகம் உணர்ந்து கொள்ள அவர்களே காரணமாக ஆகிவிட்டனர்..

பாதுகாப்பு குறைபாடு, ராணுவ பணியாளர்களின் பற்றா குறை போன்ற உண்மைகள் வெளிவர ஆரம்பித்தது விட்டது..

உள்துறை அமைச்சர் என்ன செய்து கொண்டு இருக்கிறார்,,? எங்கே உங்களின் அக்கி வீரர்கள் ? எதற்காக இத்தனை காலமாக பாகிஸ்தானிகளை இந்தியாவுக்குள் அனுமதி கொடுத்தீர்கள் ‌? எதற்காக இத்தனை நாளாக தூதரக உறவு ?

என்ற கேள்வியும் எழுந்துள்ளது....

இந்தியாவிலேயே அதிகமான பாதுகாப்பு வீரர்களை கொண்ட மாநிலம் கஷ்மீர் ..அதிகமான கட்டுப்பாடுகளை கொண்டு பகுதியில் எப்படி ஒரு பாதுகாப்பு வீரர் கூட இல்லாமல் போனார் என்ற கேள்வியை மறைக்க எத்தனையே முயற்ச்சி செய்தார்கள் ஆனால் முடியவில்லை...

இறந்து போனது அப்பாவி மக்களின் உயிர் மட்டுமல்ல சங்கிகளின் வெறுப்பு பிரச்சாரம் கூட மரணித்து விட்டது...

சங்கிகளே தலையில் மண்ணை வாரி போட்டுக்கொண்டு அசிங்கப்பட்டு நிற்கிறார்கள்...

முதலமைச்சராக மோடி இருந்த போது கூறிய வாசகம்.. பிரச்சனை கஷ்மீரில் இல்லை.. டெல்லியை உள்ளவர்களிடம் உள்ளது..

சங்கிகளே ...
இனியும் உங்களால் எத்தனை வண்மத்தை வேண்டுமானாலும் அனுதினமும் கத்திக்கொண்டே இருங்கள்.. ஆனால் கடைசியில் வெல்லப்போவது உண்மை மட்டுமே...
உங்களின் மதவாத ஓட்டு அரசியல் ஒழியும் நாள் வெகு தூரமில்லை

வாழ்த்துக்கள் சங்கீஸ் ....

#மீடியாடுடே

23/04/2025
23/04/2025

சங்கிகளுக்கு செருப்படி கொடுத்த வேலூர் இப்ராஹிம்.

#காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் சுற்றுலா பகுதியில் இந்துக்களை குறி வைத்து நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் இந்துக்களை காப்பாற்ற தீவிரவாதிகளை எதிர்த்து குரல் எழுப்பிய #ஆதில்_ஹுசைன் என்கிற இஸ்லாமிய இளைஞரையும் சுட்டு கொன்றனர்,
மதத்தின் பெயரால் பாரத மக்களை பிரிக்க முடியாது என பாகிஸ்தானிய பயங்கரவாதிகளுக்கு உறுதியாக தன் உயிரை தியாகம் செய்ததின் மூலம் பதிய வைத்திருக்கிறார்.

பேரா. ஜவாஹிருல்லாவின்  தவறான பாதை.. ! அதிமுக,பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்டவுடன் சில மணி நேரத்துக்குள் எஸ்டிபியும் தலைமை...
20/04/2025

பேரா. ஜவாஹிருல்லாவின் தவறான பாதை.. !

அதிமுக,பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்டவுடன் சில மணி நேரத்துக்குள் எஸ்டிபியும் தலைமை ஆலோசித்து கூட்டணி விட்டு வெளியேறியது. அதன் வலுவான கட்டமைப்பை காட்டுகிறது..

இது போன்ற சூழலில் பல முஸ்லிம் கட்சிகள் கருத்து வேறுபாடு காரணமாக உடைந்து இருக்கிறது என்பது கடந்தகால வரலாறு.

உடனடியாக முதல்வர் அவர்கள் எஸ்டிபிஐ கட்சி தலைவரை சந்திப்பதற்கு நேரம் ஒதுக்கியது எஸ்டிபிஐகான அரசியல் முக்கியத்துவத்தை திமுக உணர்ந்துள்ளது என்பது சந்திப்பிற்கு பின் உள்ள எதார்த்தம்.

ஒவ்வொரு தேர்தலிலும் சிறுபான்மையினர் அரசியல் தொடர்பான விவாதத்தில் எஸ்டிபிஐ தவிர்க்க முடியாத ஒன்றாகவே இதுவரை இருந்துள்ளது.

SDPI எதிராக சில முஸ்லிம் கட்சிகளின் அவதூறு பிரச்சாரத்தில் முக்கியமான அம்சம் ஒவ்வொரு தேர்தலிலும் ஓட்டு பிரிப்பாளர்கள், தவறான முடிவெடுத்து ஏமாறுபவர்கள், என்ற பிம்பத்தை உருவாக்கி உள்ளது..

எஸ்டிபிஐ,அதிமுக கூட்டணியிலிருந்து விலகியது குறித்து கருத்து தெரிவித்த மமக மற்றும் தமுமுக தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா அவர்கள்

"தவறான வழியில் சென்றவர்கள் நேர் வழியில் திரும்பி உள்ளார்கள்"

என்று கூறி எஸ்டிபிஐ கட்சியின் கடந்தகால முடிவை தவறான முடிவாக சித்தரிக்க முயல்கிறார்.

Sdpi கட்சி அதிமுகவுடன் கூட்டணி தான் வைத்திருந்தது. அதிமுகவுடன் கூட்டணி வைப்பது தவறான முடிவா? என்பதை பேராசிரியர் தான் விளக்க வேண்டும்.

காரணம் பேராசிரியர் அளவிற்கு அதிமுகவால் பலன் பெற்ற முஸ்லிம் கட்சி வேறு எதுவும் இல்லை..

அதேபோல் பேராசிரியர் அவர்களுக்கு திமுகவையும் திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி அவர்களையும் அவருடன் பயணித்த முஸ்லிம் லீக் கட்சியையும் விமர்சித்த வரும் தமிழகத்தில் எவரும் இருக்க முடியாது..

அதிமுகவுடன் கூட்டணி வைத்ததை பாஜகவுடன் கூட்டணி வைத்தது போல ஜவாஹிருல்லா புலம்புவது ஏன் ?
ஏற்கனவே எந்த முஸ்லிம் கட்சிகளும் அதிமுகவுடன் கூட்டணி வைக்காது போல sdpi மட்டும் தான் கூட்டணி வைத்து தவறை செய்துவிட்டார்கள் என்று பேசி இருப்பது ஒரு கட்சி தலைவருக்கு அழகல்ல..

2011 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுக ஆதரவுடன் தனிச் சின்னத்தில் நிற்பதுக்கு அனுமதி அளித்தது அதிமுக தான் என்பதை வசதியாக மறந்துவிட்டார்.

மமக வரலாற்றில் முதன்முறையாக சட்டமன்றம் சென்றதும் அப்போதுதான்..
அவர் கலைஞர் கருணாநிதியை கடுமையாக விமர்சித்து ஜெயலலிதாவிடம் நல்ல பெயர் வாங்கினார்...அதிமுக கூட்டணியில் இருக்கும் போது தானே புயல் தங்கள் மாவட்டத்திற்கு வராதா? கலைஞர் கட்டிய சட்டமன்றம் "சர்க்கஸ் கொட்டாய்" போல் உள்ளது என்று சட்டசபையில் பேசி அதிமுக அமைச்சர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியவர் ஜெயலலிதாவை மெய்சிலிர்க்க வைத்தவர்.
இன்றும் அதே போல பேசி ஸ்டாலினை மெய்சிலிர்க்க வைக்க பார்க்கிறார்.

இப்போதைய மமகவின் நிலை என்ன தெரியுமா ? sdpi போன்று நினைத உடனே திமுக கூட்டணியை விட்டு விலக மமகவால் முடியாது....

ஒருவேளை அவ்வாறு மமக, திமுகவை விட்டு விலக முடிவு செய்தாலும் மணப்பாறை முறுக்கு கட்சியை உடைக்காமல் விடாது என்பது ஊரறிந்த உண்மை..

அப்படித்தான் மமக ஒவ்வெறு தேர்தலிலும் உடைந்து உடைந்து அன்சாரி அணி, ஹைதர் அணி என பல அணிகளை உருவாக்கி இஸ்லாமிய சமூகத்திற்கு மாபெரும் சேவை செய்து வருகிறது..

இந்திய அளவில் அதிகமாக உடைந்த அமைப்பு எது என்று போட்டி வைத்தால் அதில் முதலிடத்தில் மமகவின் ஆரம்ப அமைப்பாகத்தான் இருக்கும்..

sdpi கட்சி மீது நமக்கு பல முரண்பாடுகள் உண்டு, கருத்து வேறுபாடுகள் உண்டு ஆனால் ஆரம்பிக்கப்பட்டது முதல் கட்சி எந்தப் பிளவுகளையும் சந்திக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் இந்திய அளவில் எடுத்துக் கொண்டால் ஜனதா தளம் தான் அதிகளவில் உடைந்த கட்சி அதற்கு அடுத்தபடியாக எடுத்துக் கொண்டால் மமகாவை சொல்லலாம்.

SDPI திமுக முதல்வரை சந்தித்ததிலிருந்து அதிக பதட்டத்தில் இருப்பது மமக,தான் எங்கு நமக்கு கிடைக்க வேண்டிய சீட்டை குறைத்து விடுவார்களோ என்ற பதற்றம் வெளிப்படையாகவே தெரிகிறது..

பிறர் சின்னம் அவமானம்,
தனி சின்னம் தன்மானம்,

என்ற கதைகளை தோண்டினால் இதற்கு முஸ்லிம் லீக் எவ்வளவோ மோல் என்ற எண்ணமே தோன்றும்..

சங்பரிவார் அமைப்புகளிடம் உள்ள சகோதரத்துவ ஒற்றுமை கூட இஸ்லாமிய அமைப்புகளிடம் இல்லாமல் போனது சாபக்கேடு..
-பிஜெ.

- #மீடியாடுடே

அவசர பட்டுடயே குமாரு.......
20/04/2025

அவசர பட்டுடயே குமாரு.......

பிஜெபி Bடீமுடன் திமுக எம்.பி.இஸ்லாமிய சமுதாயத்தை ஓட்டுகளால் பிரித்து பிஜெபிக்கு B டீம் வேலை பார்க்கும் பாசிச கூட்டாளி உவ...
20/04/2025

பிஜெபி Bடீமுடன் திமுக எம்.பி.

இஸ்லாமிய சமுதாயத்தை ஓட்டுகளால் பிரித்து பிஜெபிக்கு B டீம் வேலை பார்க்கும் பாசிச கூட்டாளி உவைசியுடன் திமுக எப்.பிரக்கு என்ன வேலை...?

இப்படித்தான் திமுகவினர் உவைசியை பற்றி பரப்பி வந்தனர்... உவைசியின் கட்சி தமிழகத்தில் போட்டியிட்ட போதும் இதைத்தான் இத்தனை காலமாக கூறிவந்தனர்..

அவருடன் திமுக எம்பி அப்துல்லா ஹைதராபாத்தில் நடந்த வக்ஃப் மசோதா கண்டன கூட்டத்தில் கலந்து கொண்டார்.. வாழ்த்துக்கள்

இனிமேலாவது உவைசி உண்மையான இஸ்லாமியராக திமுக முஸ்லிம்களுக்கு தெரிவாரா ?

60 வயதில் திருமணம் செய்த பிஜெபி தலைவர்.. மேற்கு வங்க பாஜக முன்னாள் தலைவர் திலிப் கோஷ், தனது 60-வது வயதில் கட்சி நிர்வாகி...
20/04/2025

60 வயதில் திருமணம் செய்த பிஜெபி தலைவர்..

மேற்கு வங்க பாஜக முன்னாள் தலைவர் திலிப் கோஷ், தனது 60-வது வயதில் கட்சி நிர்வாகி ரிங்கு மஜும்தாரை (51) மணந்தார். இவர்களுடைய திருமணம் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இளமை பருவத்தில் ஆர்எஸ்எஸில் இருந்ததால் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்தவர்.. அதன் கொள்கைகளுக்கு மாறாக திருமணம் செய்து கொண்டது கட்சியினரிடம் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..

அவர் திருமணம் செய்த பெண்ணுக்கு இது இரண்டாவது திருமணம்...

Address

Chennai
Chennai

Telephone

+919207575786

Website

Alerts

Be the first to know and let us send you an email when Media Today posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Media Today:

Share