Media Today

Media Today சிறுபான்மை சமுதாயம் அரசியல் எழுச்சி பெற..
அரசியல் இயக்க சார்பற்ற செய்திகள் மற்றும் அரசியல் விமர்சனம்

கரூர் கொடூரம்...தவெக தலைவர் விஜயின் பிரச்சார கூட்டத்தில் நடந்த விபத்து பெறும் சோகத்தை ஏற்படுத்தி விட்டது. அந்த சோகத்தில்...
30/09/2025

கரூர் கொடூரம்...

தவெக தலைவர் விஜயின் பிரச்சார கூட்டத்தில் நடந்த விபத்து பெறும் சோகத்தை ஏற்படுத்தி விட்டது.

அந்த சோகத்தில் இருந்து தமிழகம் இன்னும் மீளவில்லை.. அதற்குள் அரசியல் கணக்குகள் ஆரம்பித்து விட்டது.

ஒருபக்கம் மாநில அரசு ஒரு ஆணையத்தை ஏற்படுத்தி விசாரணை செய்வதாக கூறியுள்ளது.

விசாரணை முடிவு என்ன என்று தெரிவதற்கு முன்னதாகவே தமிழக அரசு இரண்டு முறை விளக்கம் கொடுத்துள்ளது. இரண்டிலுமே விஜய் மீது குற்றம் மட்டுமே சாட்டியது.

சதி நடந்துள்ளது என தவெக தரப்பும், விஜய்தான் காரணம் என திமுக தரப்பும் இறந்த அப்பாவி மக்களின் பிண்த்தில் அரசியல் செய்ய துவங்கி விட்டார்கள். .

இடையில் பிஜெபியும் அதன் பங்கிற்கு இதில் சதி நடந்துள்ளது என குற்றம்சாட்டி திமுகவை சிக்கி வைக்க முயற்சிக்கிறது.

ஆரம்பத்தில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் மற்றும் எதிர்கட்சிகள் உள்பட அனைவருமே இதில் அரசியல் வேண்டாம் என்ற நிலையிலே பேசினார்கள்.

ஆனால் திமுகவினர் சும்மா இருக்காமல் இதை வைத்தே விஜயை டேமேஜ் செய்யலாம் என சகட்டு மேனிக்கு அவதூறுகளை வீச ஆரம்பித்தனர்.

பிரச்சனையை சூடுபிடிக்க துவங்கியது திமுக மீதும் கரூர் பாலாஜி மீதும் மக்கள் சாட ஆரம்பித்தனர். நிலமை கைமீறி போவதை கண்டு முதல்வர் ஒரு வீடியோ வெளியிட்டார்.. பின்னர் அதிகார பலத்தில் வழக்குகளில் சிக்க வைத்தனர்..

திமுக இந்த பிரச்சனையை ஆரம்பித்ததில் சிறப்பாக கையாண்டது. பெயருக்கு இரண்டு அதிகாரிகளை சஸ்பென்ட் செய்து ஸ்கோர் செய்வதை விட்டுவிட்டு விளக்கம் கொடுப்பதிலே குறியாக இருந்தனர்.

கடைசியில் விஜயின் வீடியோ வெளியான போது மொத்த திமுகவினரும் ஆடிப் போனார்கள்..
வேறு வழியில்லாமல் திமுக ஐடி விங் ஏற்கனவே பறப்பிய ஒரு கேள்வி பதில் வீடியோவை எடிட் செய்து தமிழக அரசு சார்பில் வெளியிட்டு குறையொன்றுமில்லை என்று கூறினார்கள்...

இப்போது நிலமை கைமீறி போய்விட்டது... திமுகவுக்கு பதட்டம் அதிகரித்து விட்டது.... வாழ்க்கை மத்திய அரசு கையில் எடுத்தால் ஏதாவது ஒருவிதத்தில் செந்தில் பாலாஜியை சிக்கவைக்க பார்கள் என்பதை புரிந்து கொண்டனர்...

திருமாவளவன் மற்றும் வைகோ இருவரும் வெளிப்படையாக தவெக வை சாடினார்கள்....

இந்த பிரச்சனையை சரிவர கையாள தெரியாமல் அரசியல் செய்து பெறும் அவப்பெயரை திமுக தலையில் வாங்கிக் கொண்டது.. மட்டும்தான் மிச்சம்...

இப்போது விஜயை இயக்குவது பிஜெபி என மீண்டும் அதே B டீம் வேலையை செய்கிறது.

எப்போதும் திமுகவின் அரசியலுக்கு பதில் சொல்வதே பிற கட்சிகளின் வேலையாக இருக்கும்... ஆனால் இப்போது திமுக பதில் சொல்லிக்கொண்டு இருக்கிறது..

விஜய் நடத்திய எல்லா கூட்டத்திலும் பிரச்சனைதான் என தமிழக அரசு விளக்கம் கொடுத்துள்ளது... அப்படியானால் பிரச்சனைகளை தீர்க்க தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுத்தது... அப்படி எடுத்திருந்தால் 41 உயிர்கள் காப்பாற்றபட்டிருக்குமல்லவா என்ற மக்களின் கேள்விக்கு யார் பதில் சொல்வது...

இத்தனை பிரச்சினைக்கும் முதல் குற்றவாளி விஜய்தான் என்பது அனைவரும் அறிந்ததே ஆனால் முன் ஏற்பாடாக தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன ? என்பதுதான் இப்போதைய கேள்வி...

பிரச்னை வரவேண்டும் அதன் மூலமாக அரசியல் செய்ய வேண்டும் என காத்திருந்தது போலவே எல்லாம் நடந்திருக்கிறது..

விஜயும் முடங்க போவதில்லை...என்பது தெரிந்து விட்டது இப்போது ஆட்டம் பிஜெபி திமுக என மாறி விட்டது...

ஓர் அணியில் இஸ்லாமிய சமுதாயம்... தேர்தல் வரை தொடருமா...?
21/09/2025

ஓர் அணியில் இஸ்லாமிய சமுதாயம்...

தேர்தல் வரை தொடருமா...?

இஸ்லாமிய சமூகத்திற்கு இடியாய் வந்து இறங்கியது ஒரு செய்தி.....மமக மற்றும் மஜக ஆகிய இரண்டு கட்சிகளின் பதிவையும் தேர்தல் ஆண...
21/09/2025

இஸ்லாமிய சமூகத்திற்கு இடியாய் வந்து இறங்கியது ஒரு செய்தி.....

மமக மற்றும் மஜக ஆகிய இரண்டு கட்சிகளின் பதிவையும் தேர்தல் ஆணையம் ரத்து செய்துள்ளது..

இந்த செய்தியை பார்த்து மமக மஜக காரர்களே அதிர்ச்சியடைந்து இருக்க மாட்டார்கள் பின்ன எங்க இஸ்லாமிய சமுதாயம் அதிர்ச்சியடைய போகுது....

எவ்வளவு பேசனீங்க.. எவ்வளவு உதார் விட்டீங்க.. முஸ்லிம் லீக் கட்சியை எவ்வளவு கழுவி ஊத்தனீங்க.. இப்ப உங்க நிலமை பாத்தீங்களானு சமுதாயம் சத்தமா சிரிக்கிது..

பிஜெவின் கள்ள குழந்தையாக இருந்த மமகவின் கொள்கை... இப்போது ஸ்டாலின் முன்னால் மீலாது விழா கொண்டாடி பிரச்சார சபைக்கு வேலை இல்லாம பன்னீட்டாரு நம்ம தலைவர் ஜவாஹிருல்லா...

வட மரைக்காயர் தெருவுக்கு வந்தே தீர வேண்டும் என்று வீர வசனம் பேசியவர்கள் ஆளுக்கு ஒரு பீஸா எடுத்து கொண்டு போயி அறிவாலயத்தில அடகு வெச்சதனால வந்த வெணைதான் இதெல்லாம்..

சீட்டு சீட்டு சீட்டு என்று சீட்டுக்கு ஏங்கி கடைசியில் திமுக உறுப்பினர் ஆனதுதான் மிச்சம்... ஆமா திமுக உறுப்பினர்கள் ஆன ஜவாஹிருல்லாவும்
அப்துல் செய்தும் தனியாக ஒரு கட்சிக்கு தலைவர் மற்றும் பொறுப்பில் தொடர சட்டத்தில் இடமுண்டா ... ?

இத்தனை காலமும் தமிழக முஸ்லிம்களுக்கு உள் இட ஒதுக்கீடு வாங்கி கொடுத்தது தமுமுக மமக என்று கதை சுத்தி கொண்டு இருந்த மமகவினரின் கதைக்கு திமுக தலைமையே முற்றுப்புள்ளி வைத்து முஸ்லிம் லீக் கேட்டதால் இட ஒதுக்கீடு கிடைத்தது என திமுக தலைவர்களே மமகவை சீண்டி விட்டு இருப்பது கூட்டணி அரசியலில் புதிய நகர்வு....

கடந்த தேர்தலில் ஒரு சீட்டில் தனி சின்னத்தில் நிற்க திமுக ஒத்துக்கொண்ட போதும்.. தலைவர் ஜவாஹிருல்லா பதவி ஆசையில் கட்சியை பற்றி கவலைப்படாமல் திமுக உறுப்பினர்கள் ஆனார் என்பது உலகறிந்த உண்மை....

அன்சாரியை மேடையில் ஏற்றக்கூடாது என்று போராடிய தலைவர் ஜவாஹிருல்லா அறிவாலயம் கூறிய பின்னர் அன்சாரியின் அலுவலகத்திற்கே சென்று சந்தித்து சமுதாய கடமையை ஆத்தியவர் ஜவாஹிருல்லா...

சமூகத்தில் எப்போதும் ஒரு கேள்வி உண்டு.. இவர்களுக்கு எதுக்கு தனி கட்சி ... தனி சின்னம்... தனி கொடி...
சமூகத்தின் பொருளாதாரத்தை வீணடிக்கவா?
இவர்களையெல்லாம் முதலில் சமுதாய மேடைகளில் ஏற்றுவதை விட்டு புறக்கணிக்க வேண்டும்...

மமகவ பத்தி பேசறோம் மஜகவை பற்றி பேசலையானு நீங்க கேட்கலாம்...

அன்சாரியை விலைக்கு வாங்கும் பணம் சபரீசனால் அச்சடிக்கப்பட்டு தீடீர் தளபதி போல திடீர் எம்எல்ஏ ஆன அன்சாரி எந்த தேர்தலிலும் மஜக சார்பில் போட்டியிடவில்லை... அதெல்லாம் அரசியல் கட்சி லிஸ்டில் வைத்த தேர்தல் ஆணையத்தை வண்மையாக கண்டிக்க வேண்டும்...

05/09/2025

புதுமடம் ஜாபர் அலி எழுதிய மீலாது கட்டுரை தி இந்து தமிழ் நாளிதழில் வெளியானது.

கட்டுரை வடிவமைப்பில் "மாமனிதர் முஹம்மது" என்ற பெயருடன் ஒரு படம் இருந்ததை முதலில் கண்டு அதிர்ந்து போனேன்...

ஆனால் அது தெளிவாக ஒரு தொழுகையாளியின் படமாக இருப்பதால் சர்ச்சைகளுக்கு இடமில்லாமல் அந்த படம் வேறு, பெயர் வேறு என்பது தெளிவாக இருந்தது.... இதுவே வரைபடமாக இருந்திருந்தால் பெறும் சர்ச்சை நிகழ்திருக்கும்..

இதுபோன்ற நேரங்களில் மிக கவனமுடன் இருக்க வேண்டும் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது..

கட்டுரை சற்று கோர்வை இல்லாமல் இருந்தாலும் சொல்ல வேண்டிய விஷயங்களை தெளிவாகவும், ரத்தின சுருக்கமாகவும் கூறியிருந்தார்..

குறிப்பாக குர்ஆன் ஹதீஸ் பற்றிய தெளிவு பொதுவாக பலருக்கும் இருப்பதில்லை அதனையும் அழகாக குறிப்பிட்டு இருநதார். அத்துடனே குர்ஆன் மற்றும் ஹதீஸ் எவ்வாறு தனித்தனியாக இன்றளவும் பாதுகாக்கப்பட்டு வந்துள்ளது என்ற இஸ்லாமிய கொள்கையின் அடிப்படையை ஒரு பொது தளத்தில் அதுவும் எவ்விதமான அதிகப்படியான விளக்கங்களும் இல்லாமல் எழுதியது உண்மையில் பாராட்ட வேண்டியது.

மொத்த இஸ்லாமிய கொள்கையை ஒரு கட்டுரையில் சுருக்கி எழுதுவது அதனை பிறர் விளங்கும் வண்ணம் எழுதியது உண்மையில் ஆச்சரியமாக இருந்தது.. ..

இதுபோன்ற கட்டுரைகள் காலத்தின் தேவை. பிற சமுதாய மக்கள் நபியவர்களை பற்றி அறிந்து கொள்ள இது போன்ற கட்டுரைகள் நிச்சயமாக உதவும்..

கட்டுரை Link இணைப்பில் உள்ளது படித்து பிறருக்கும் பகிருங்கள்...

இனிய மீலாது வாழ்த்துக்கள்.

https://share.google/CI57K1L6pQ5zKAEHc

23/07/2025
அதிமுகவின் ராஜா... திமுகவில்...! 1965 இந்தி எதிர்ப்பு போராட்டத்தில்  கலந்து  கொண்டு தனது அரசியல் வாழ்வை தொடங்கியவர். 198...
23/07/2025

அதிமுகவின் ராஜா... திமுகவில்...!

1965 இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டு தனது அரசியல் வாழ்வை தொடங்கியவர். 1986இல் நடைபெற்ற எம்ஜிஆர் மன்ற மாநாட்டில் பேசியவர் இவரின் பேச்சு எம்ஜிஆரை வெகுவாக கவர்ந்தது.அதே மேடையில் எம்ஜிஆரின் பாராட்டு பெற்றவர்.

ஆட்சியிலும் சரி கட்சி பதவிகளிலும் சரி ஒரு சிறுபான்மை சமூகத்தை சேர்ந்தவர் எந்த அளவுக்கு உயரமுடியுமோ அந்த அளவு உயரத்தை அடைந்தவர்.

1986 மண்டபம் ஊராட்சி மன்ற பெருந்தலைவர். 2001 ராமநாதபுரம் சட்டமன்ற எம்எல்ஏ. 2014 ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் பாராளுமன்ற உறுப்பினர்.வக்பு வாரிய தலைவர். மாநில அமைச்சர் என அவர் வகிக்காத பதவிகளே இல்லை.

அதிமுக வளரும் போது அன்வர் ராஜாவும் வளர்ந்தார் என்பதுதான் எதார்த்தம்.

அதிமுக அரசியல்வாதி என்பதை தாண்டி தனது தனிப்பட்ட திறமையால் வளர்ச்சியை தக்கவைத்து கொண்டார்..

2018 டிசம்பர் 27ஆம் தேதி முத்தலாக் தடை மசோதா தொடர்பாக நாடாளுமன்றத்தில் அன்வர்ராஜா பேசியதை கண்டு பலரும் ஆச்சரியமாக பார்த்தனர்.

அவரின் மசோதா எதிர்ப்பு உரை நாடுமுழுவதும் பேசுபொருளாக மாறியது. அதிமுகவிலே பலருக்குள்ளும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி முஸ்லிம்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றார்.

அன்வர் ராஜா வின் நாடாளுமன்ற உரை "முத்தலாக் உரிமை மீறும் செயல்" என்ற தலைப்பில் புத்தகமாக வெளியிடப்பட்டது
(தொகுப்பு ஆசிரியர் மற்றும் வெளியிட்டார் புதுமடம் ஜாபர் அலி)

இப்புத்தக வெளியிட்டு விழாவிற்கு அப்போதைய மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை மற்றும் ஆறு சீனியர் அமைச்சர்கள் கலந்து கொண்டார்கள் இவரின் உரை மற்றும் புத்தக வெளியீட்டு விழாவிற்கு முழு ஆதரவளித்தவர் அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.

இந்த புத்தகம் ஆங்கிலம் உருது தமிழ் ஆகிய மொழிகளில் பல லட்சம் புத்தகங்கள் விற்கப்பட்டு முஸ்லிம்கள் மத்தியில் பெரும் ஆதரவும் வரவேற்பையும் பெற்றார் அன்வர் ராஜா.

இத்தனை வருடகால பழுத்த அரசியல்வாதி எம்ஜிஆர் காலம் தொட்டு கட்சியையும் கட்சி பணியையும் உயிர்மூச்சாக கொண்டு செயல்பட்ட அன்வர் ராஜா மீண்டும் ஒருமுறை தமிழக தொலைக்காட்சிகளின் முக்கிய செய்திகளில் இடம் பிடித்தார்..

அதிமுகவில் இருந்து விலகி தமிழக முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார் என்பதுதான் அந்த செய்தி.

திமுகவில் இணைந்த போது தமிழக முதல்வரிடம் தமது பாராளுமன்ற உரை அடங்கிய புத்தகத்தை பரிசளித்து அதைப் பற்றி சற்று விளக்கினார்

பாரம்பரியமான அரசியல்வாதி கிட்டத்தட்ட 60 ஆண்டுகாலம் அதிமுக வரலாற்று கட்சியில் இரண்டர கலந்தவர் எம்ஜிஆர் ஜெயலலிதா போன்றவர்களின் நன்மதிப்பு பெற்றவர் தமிழகம் முழுவதும் அதிமுகவுக்காக மேடை போட்டு பேசியவர், எழுதியவர் பன்முகம் கொண்டவர் ஏன் அதிமுகவில் தொடர முடியாத காரணம் என்ன என்ற இமாலய கேள்வி எழுகிறது..

அதிமுக பிஜெபி கூட்டணி என்ற ஒற்றை காரணம்தான் கட்சியை விட்டு விலகினாரா..? என்றால் நிச்சயமாக இருக்க முடியாது காரணம்.

அன்வர் ராஜா திமுகவில் இணைந்த பிறகு கூட அதிமுக இதுவரை முதல்வர் வேட்பாளர் யார் என்று வெளிப்படையாக கூறவில்லை என்றே குற்றம்சாட்டினார். எனவே இங்கே பிஜெபி கூட்டணி என்பது பிரச்சனை அல்ல அதை எவ்வாறு எடப்பாடி கையாளுகிறார் என்பதுதான் பிரச்சனை.

முன்னாள் முதல்வர்கள் ஆன கருணாநிதி ஜெயலலிதா போன்க்றவர்களே பிஜெபியுடன் கூட்டணி வைத்தவர்கள் தான்.

முன்னாள் முதல்வர்களான கருணாநிதி, ஜெயலலிதா காங்கிரஸ், பிஜெபி தேசிய தலைவர்களை வீட்டுக்கே வர வைத்து கூட்டணி பற்றி பேசுவார்கள்.. எல்லா முடிவுகளும் மாநில தலைமைதான் எடுக்கும்..

ஆனால் எடப்பாடி பழனிச்சாமியின் பிஜெபி கூட்டணி என்பது அதிமுகவை நிர்மூலம் ஆக்கிவிடும் என்ற அச்சம் மேல் மட்டம் முதல் அடிமட்ட தொண்டன் வரை சிந்திக்க வைக்கிறது.

அதற்கு ஒரே காரணம் இதுவரை பல மாநிலங்களில் பிஜெபி என்ன செய்தது என்பதை அறிந்தவர்களுக்கு நன்றாக தெரியும்..

தமிழகத்திலும் அதிமுகவின் இடத்தை பிஜெபி கைப்பற்ற துடித்துக்கொண்டு இருக்கிறது அதற்காக கதவை எடப்பாடி திறந்து விட்டுள்ளாரா என்ற சந்தேகமும் வலுவாகவே உள்ளது.‌

சமீப கால எடப்பாடி பேச்சுகள் மற்றும் செயல்பாடுகள் பிஜேபியின் பாசிச சித்தாந்தத்தை தமிழகத்தில் நிறுவ முயற்சிப்பதாகவே உள்ளது.

எடப்பாடி தலைமையில் பல தேர்தல்களை சந்தித்த அதிமுக பெறும் பின்ணடைவை சந்தித்தது.. கடந்த தேர்தலில் ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் ஓபிஎஸ் அதிமுகவை விட அதிக வாக்குகள் வாங்கினார்.
இதற்கு முக்கிய காரணம் முக்குலத்தோர் ஓட்டு வங்கி..

இது போன்ற தோல்விக்கான காரணங்களை எடுத்து கூறும்போது எடப்பாடி பழனிச்சாமி முகம் கொடுத்து பேசுவது கிடையாது... சில நேரங்களில் பல மூத்த அதிமுகவினரின் கருத்துகளை கூட மதிக்காமல் நடந்து கொள்கிறார் இதில் அன்வர் ராஜாவும் ஒருவர்..

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கடந்த அதிமுக பொதுக் குழுவில் சி.வி சண்முகம் அன்வர் ராஜா மீது ஒருமையில் பேசி பாய்ந்தார் அதை எடப்பாடி கண்டு கொள்ளவில்லை என்ற கவலையும் அன்வர் ராஜாவுக்கு உண்டு ‌

கட்சி சார்ந்த நலன் விட எடப்பாடி பழனிச்சாமி குடும்பத்தார் மற்றும் நெருங்கிய முன்னாள் அமைச்சர்களை காப்பாற்ற பிஜெபியிடம் அதிமுகவை சரணடைய செய்கிறார் என்பதுதான் பலரின் கணிப்பு.

எம்ஜிஆர் கட்சி தொடங்கிய காலத்தில் இருந்தே அடுத்த ஜெயலலிதா தலைமையேற்று பிறகும் முக்கிய தலைவர்களில் ஒருவராக இருந்தவர். அன்வர் ராஜா சிறுபான்மையின பிரதிநிதி என்று அவரை சுருக்க முடியாது அதிமுகவில் காலங்காலமாக இருந்த மூத்த கழக நிர்வாகி. கட்சியின் மோசமான தோல்விகளின் போது உடனிருந்தவர். அதிமுக மீதான கடும் விமர்சனங்களின் போது தாங்கிப் பிடித்தவர். சித்தாந்த கொள்கை ரீதியான முக்கிய ஆளுமைகள் அதிமுகவை விட்டு விலகுவது அவர்களுக்கு இயல்பான ஒன்றாக இருக்க முடியாது. மிகுந்த வலியுடன் தான் வெளியேற முடிவு செய்கிறார்கள்..

பெரிதாக பதவி ஆசைக்காக விலகுகிறார்கள் என்றும் கூற முடியாது காரணம் அவர்கள் பெரிய பல பதவிகளை ஏற்கனவே பார்த்தவர்கள்.

முன்னாள் அதிமுக வினரான
செந்தில் பாலாஜி, சேகர் பாபு போன்றவர்களுக்கு திமுகவில் கிடைத்த அங்கீகாரம் கூட காரணமாக இருக்கலாம்..

பிஜெபி கூட்டணி என்பதை தாண்டி இன்றைய மோடி பிஜெபி கூட்டணியால் அதிமுகவிற்கு விழ இருக்கும் சிறுபான்மை மக்களின் ஓட்டுகள் மட்டுமல்ல அடித்தட்டு தொண்டர்களின் ஓட்டுகள் கூட கிடைக்காத சூழல் தமிழகத்தில் உருவாகும். பெருவாரியான மக்களின் எதிர்ப்பலையில் தமிழக பிஜெபி படுதோல்வியை சந்தித்து போல அதிமுக படுதோல்வியை சந்திக்கும் என்பதே அரசியல் நோக்கர்களின் கணிப்பு..

தேர்தல் அரசியலில் கட்சிகளுக்கு கொள்கை பிடிப்பு எவ்வளவு அவசியமானது என்பதை எடப்பாடி பழனிச்சாமிக்கு தேர்தல் முடிவுகள் உணர்த்தும்..

- புதுமடம் ஜாபர் அலி

மாற்றுமத சகோதரர்கள் புரிதலுக்காக..காஜி (காழி )  என்றால் நீதிபதி என்று பொருள்.. அதாவது தற்போதைய நடைமுறையில் இஸ்லாமியர் சா...
25/05/2025

மாற்றுமத சகோதரர்கள் புரிதலுக்காக..

காஜி (காழி ) என்றால் நீதிபதி என்று பொருள்..
அதாவது தற்போதைய நடைமுறையில் இஸ்லாமியர் சார்ந்த விவகாரங்களில் தீர்ப்பு வழங்குவது தான் காஜியின் தலையான கடமை..

ஆனால் இந்தியா போன்ற நாடுகளில் நீதிமன்றம் தனியாக செயல்படுவதால் இஸ்லாமிய காஜிகளுக்கு தீரப்பு வழங்கும் பணி இல்லை..

மாறாக சிவில் விவகாரங்களான திருமணம் மற்றும் திருமண முறிவு போன்ற விவகாரங்களில் இருவருக்கும் இடையில் மத்தியஸ்தம் செய்யும் பணிகளை காஜி முன் எடுப்பார்..

அத்துடன் பிறை நாட்களை மாதந்தோறும் தேடி அறிவிப்பு செய்வார்....

ரமலான் மற்றும் பக்ரீத் நாட்களில் அவரின் அறிவிப்பு முக்கியத்துவமானதாக இருக்கும்.. ஆனால் அவர் ஒவ்வொரு மாதமும் பிறையை அறிவிக்கிறார் என்பது பலருக்கும் தெரியாது..

தலைமை காஜி என்பவர் மாநில தலைமை காஜியாக செயல்படுவார்.. மாவட்ட காஜிகள் தனியாக உள்ளனர்..‌ அவர்களை டவுன் காஜி என்று அழைப்பர்...

ஹாஜி வேறு .. காஜி வேறு ...

ஹஜ் செய்தவர்களை ஹாஜி என்று அழைப்பார்கள்...

காஜி என்பதை காழி ( நீதிபதி) என்பதுதான் அரபிக்கு இணக்கமான உச்சரிப்பு ..

காஜி முஸ்லிம் சமூகத்தின் அதிகாரப்பூர்வ ஒப்பற்ற தலைவர் என்று கூற முடியாது.. அவரின் பணியை அவர் செய்கிறார்...

பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் எம்எல்ஏ அவர்களுக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனைக்கு....இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்த...
28/04/2025

பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் எம்எல்ஏ அவர்களுக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனைக்கு....
இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவு...

28 அப்பாவி உயிர்களின் ரத்தம் காயுமுன்னே தேர்தல் பிரச்சாரம் செய்யும் மோடி..பதவி வெறி படுத்தும் பாடு..
24/04/2025

28 அப்பாவி உயிர்களின் ரத்தம் காயுமுன்னே தேர்தல் பிரச்சாரம் செய்யும் மோடி..பதவி வெறி படுத்தும் பாடு..

ஒவ்வெறு முறையும் இந்திய இஸ்லாமியர்கள் மீது நடத்தப்படும் திட்டமிட்ட வெறுப்பு தாக்குதலில் சங்கிகள் படுதோல்வியை சந்திக்கிறா...
24/04/2025

ஒவ்வெறு முறையும் இந்திய இஸ்லாமியர்கள் மீது நடத்தப்படும் திட்டமிட்ட வெறுப்பு தாக்குதலில் சங்கிகள் படுதோல்வியை சந்திக்கிறார்கள்..

கொராணா காலத்தில் இந்திய இஸ்லாமியர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட வெறுப்பு பிரச்சாரம் இடையிலேயே சுக்கு நூராக உடைந்து போனது..

அதற்காக இந்திய இஸ்லாமியர்கள் கொராணா பிணங்களை சுமக்க வேண்டியிருந்தது.. உயிரை பணயம் வைத்து சேவை செய்து சக்திகளின் பிரச்சாரத்தை முறியடித்தனர் இஸ்லாமியர்கள்..

சங்கிகளின் சடலம் கூட இஸ்லாமியர்கள் கரங்களால் அடக்கம் செய்யப்பட்ட வரலாறுகளும் இதே இந்தியாவில் நடந்தது..

தீவிரவாத தாக்குதல் என்பது இந்தியாவுக்கு புதியதல்ல ஆனால் இரண்டாயிரம் மக்கள் கூடும் இடத்தில் பாதுகாப்பை பலப்படுத்தாமல் கோட்டை விட்ட இந்திய அரசின் மெத்தன போக்கை கேள்வி கேட்காமல் ஒரு மணி நேரத்தில் மொத்த இந்திய இஸ்லாமியர்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியது சங்கி கூட்டம்... விளைவு சக்திகளின் எந்த பிரச்சாரமும் எடுபடாமல் அவர்களின் வாயாலயே தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களை காப்பாற்றியது இஸ்லாமிய காஷ்மீரி கள்தான் என்ற உண்மை வெளிவந்ததும் இப்போது அவர்களின் முகங்கள் சுருங்கி விட்டன...

நடத்தப்பட்ட மனிதாபிமானமற்ற அப்பாவிகளின் கொலையை யார்தான் ஆதாரிப்பார்கள்? உலகில் உள்ள எந்த மனிதனும் ஆதரிக்க மாட்டான்..

இஸ்லாமிய தீவிரவாதம் என்ற சக்திகளின் அதே பிரச்சாரம் இஸ்லாமியர்களின் சேவையாக மாறிவிட்டது இவ்வளவுதான் அவர்களின் சிந்தனை என்பதை பொது சமூகம் உணர்ந்து கொள்ள அவர்களே காரணமாக ஆகிவிட்டனர்..

பாதுகாப்பு குறைபாடு, ராணுவ பணியாளர்களின் பற்றா குறை போன்ற உண்மைகள் வெளிவர ஆரம்பித்தது விட்டது..

உள்துறை அமைச்சர் என்ன செய்து கொண்டு இருக்கிறார்,,? எங்கே உங்களின் அக்கி வீரர்கள் ? எதற்காக இத்தனை காலமாக பாகிஸ்தானிகளை இந்தியாவுக்குள் அனுமதி கொடுத்தீர்கள் ‌? எதற்காக இத்தனை நாளாக தூதரக உறவு ?

என்ற கேள்வியும் எழுந்துள்ளது....

இந்தியாவிலேயே அதிகமான பாதுகாப்பு வீரர்களை கொண்ட மாநிலம் கஷ்மீர் ..அதிகமான கட்டுப்பாடுகளை கொண்டு பகுதியில் எப்படி ஒரு பாதுகாப்பு வீரர் கூட இல்லாமல் போனார் என்ற கேள்வியை மறைக்க எத்தனையே முயற்ச்சி செய்தார்கள் ஆனால் முடியவில்லை...

இறந்து போனது அப்பாவி மக்களின் உயிர் மட்டுமல்ல சங்கிகளின் வெறுப்பு பிரச்சாரம் கூட மரணித்து விட்டது...

சங்கிகளே தலையில் மண்ணை வாரி போட்டுக்கொண்டு அசிங்கப்பட்டு நிற்கிறார்கள்...

முதலமைச்சராக மோடி இருந்த போது கூறிய வாசகம்.. பிரச்சனை கஷ்மீரில் இல்லை.. டெல்லியை உள்ளவர்களிடம் உள்ளது..

சங்கிகளே ...
இனியும் உங்களால் எத்தனை வண்மத்தை வேண்டுமானாலும் அனுதினமும் கத்திக்கொண்டே இருங்கள்.. ஆனால் கடைசியில் வெல்லப்போவது உண்மை மட்டுமே...
உங்களின் மதவாத ஓட்டு அரசியல் ஒழியும் நாள் வெகு தூரமில்லை

வாழ்த்துக்கள் சங்கீஸ் ....

#மீடியாடுடே

23/04/2025

Address

Chennai
Chennai

Telephone

+919207575786

Website

Alerts

Be the first to know and let us send you an email when Media Today posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Media Today:

Share