20/04/2025
பேரா. ஜவாஹிருல்லாவின் தவறான பாதை.. !
அதிமுக,பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்டவுடன் சில மணி நேரத்துக்குள் எஸ்டிபியும் தலைமை ஆலோசித்து கூட்டணி விட்டு வெளியேறியது. அதன் வலுவான கட்டமைப்பை காட்டுகிறது..
இது போன்ற சூழலில் பல முஸ்லிம் கட்சிகள் கருத்து வேறுபாடு காரணமாக உடைந்து இருக்கிறது என்பது கடந்தகால வரலாறு.
உடனடியாக முதல்வர் அவர்கள் எஸ்டிபிஐ கட்சி தலைவரை சந்திப்பதற்கு நேரம் ஒதுக்கியது எஸ்டிபிஐகான அரசியல் முக்கியத்துவத்தை திமுக உணர்ந்துள்ளது என்பது சந்திப்பிற்கு பின் உள்ள எதார்த்தம்.
ஒவ்வொரு தேர்தலிலும் சிறுபான்மையினர் அரசியல் தொடர்பான விவாதத்தில் எஸ்டிபிஐ தவிர்க்க முடியாத ஒன்றாகவே இதுவரை இருந்துள்ளது.
SDPI எதிராக சில முஸ்லிம் கட்சிகளின் அவதூறு பிரச்சாரத்தில் முக்கியமான அம்சம் ஒவ்வொரு தேர்தலிலும் ஓட்டு பிரிப்பாளர்கள், தவறான முடிவெடுத்து ஏமாறுபவர்கள், என்ற பிம்பத்தை உருவாக்கி உள்ளது..
எஸ்டிபிஐ,அதிமுக கூட்டணியிலிருந்து விலகியது குறித்து கருத்து தெரிவித்த மமக மற்றும் தமுமுக தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா அவர்கள்
"தவறான வழியில் சென்றவர்கள் நேர் வழியில் திரும்பி உள்ளார்கள்"
என்று கூறி எஸ்டிபிஐ கட்சியின் கடந்தகால முடிவை தவறான முடிவாக சித்தரிக்க முயல்கிறார்.
Sdpi கட்சி அதிமுகவுடன் கூட்டணி தான் வைத்திருந்தது. அதிமுகவுடன் கூட்டணி வைப்பது தவறான முடிவா? என்பதை பேராசிரியர் தான் விளக்க வேண்டும்.
காரணம் பேராசிரியர் அளவிற்கு அதிமுகவால் பலன் பெற்ற முஸ்லிம் கட்சி வேறு எதுவும் இல்லை..
அதேபோல் பேராசிரியர் அவர்களுக்கு திமுகவையும் திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி அவர்களையும் அவருடன் பயணித்த முஸ்லிம் லீக் கட்சியையும் விமர்சித்த வரும் தமிழகத்தில் எவரும் இருக்க முடியாது..
அதிமுகவுடன் கூட்டணி வைத்ததை பாஜகவுடன் கூட்டணி வைத்தது போல ஜவாஹிருல்லா புலம்புவது ஏன் ?
ஏற்கனவே எந்த முஸ்லிம் கட்சிகளும் அதிமுகவுடன் கூட்டணி வைக்காது போல sdpi மட்டும் தான் கூட்டணி வைத்து தவறை செய்துவிட்டார்கள் என்று பேசி இருப்பது ஒரு கட்சி தலைவருக்கு அழகல்ல..
2011 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுக ஆதரவுடன் தனிச் சின்னத்தில் நிற்பதுக்கு அனுமதி அளித்தது அதிமுக தான் என்பதை வசதியாக மறந்துவிட்டார்.
மமக வரலாற்றில் முதன்முறையாக சட்டமன்றம் சென்றதும் அப்போதுதான்..
அவர் கலைஞர் கருணாநிதியை கடுமையாக விமர்சித்து ஜெயலலிதாவிடம் நல்ல பெயர் வாங்கினார்...அதிமுக கூட்டணியில் இருக்கும் போது தானே புயல் தங்கள் மாவட்டத்திற்கு வராதா? கலைஞர் கட்டிய சட்டமன்றம் "சர்க்கஸ் கொட்டாய்" போல் உள்ளது என்று சட்டசபையில் பேசி அதிமுக அமைச்சர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியவர் ஜெயலலிதாவை மெய்சிலிர்க்க வைத்தவர்.
இன்றும் அதே போல பேசி ஸ்டாலினை மெய்சிலிர்க்க வைக்க பார்க்கிறார்.
இப்போதைய மமகவின் நிலை என்ன தெரியுமா ? sdpi போன்று நினைத உடனே திமுக கூட்டணியை விட்டு விலக மமகவால் முடியாது....
ஒருவேளை அவ்வாறு மமக, திமுகவை விட்டு விலக முடிவு செய்தாலும் மணப்பாறை முறுக்கு கட்சியை உடைக்காமல் விடாது என்பது ஊரறிந்த உண்மை..
அப்படித்தான் மமக ஒவ்வெறு தேர்தலிலும் உடைந்து உடைந்து அன்சாரி அணி, ஹைதர் அணி என பல அணிகளை உருவாக்கி இஸ்லாமிய சமூகத்திற்கு மாபெரும் சேவை செய்து வருகிறது..
இந்திய அளவில் அதிகமாக உடைந்த அமைப்பு எது என்று போட்டி வைத்தால் அதில் முதலிடத்தில் மமகவின் ஆரம்ப அமைப்பாகத்தான் இருக்கும்..
sdpi கட்சி மீது நமக்கு பல முரண்பாடுகள் உண்டு, கருத்து வேறுபாடுகள் உண்டு ஆனால் ஆரம்பிக்கப்பட்டது முதல் கட்சி எந்தப் பிளவுகளையும் சந்திக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் இந்திய அளவில் எடுத்துக் கொண்டால் ஜனதா தளம் தான் அதிகளவில் உடைந்த கட்சி அதற்கு அடுத்தபடியாக எடுத்துக் கொண்டால் மமகாவை சொல்லலாம்.
SDPI திமுக முதல்வரை சந்தித்ததிலிருந்து அதிக பதட்டத்தில் இருப்பது மமக,தான் எங்கு நமக்கு கிடைக்க வேண்டிய சீட்டை குறைத்து விடுவார்களோ என்ற பதற்றம் வெளிப்படையாகவே தெரிகிறது..
பிறர் சின்னம் அவமானம்,
தனி சின்னம் தன்மானம்,
என்ற கதைகளை தோண்டினால் இதற்கு முஸ்லிம் லீக் எவ்வளவோ மோல் என்ற எண்ணமே தோன்றும்..
சங்பரிவார் அமைப்புகளிடம் உள்ள சகோதரத்துவ ஒற்றுமை கூட இஸ்லாமிய அமைப்புகளிடம் இல்லாமல் போனது சாபக்கேடு..
-பிஜெ.
- #மீடியாடுடே