JOY TV

JOY TV Joy TV is an ingenious endeavor designed to reach the young people and also to get the people who ar

JOY TV is a local Christian channel which broadcasts Christian Songs and Messages through sermons,
choreography, talk shows, and gospel shows. This is a 24 x 7x 365 channel which is available in TCCL
network. TCCL network reaches over six lakh homes daily, is also viewed in other places such as Vellore,
Thiruvannamalai, Coimbatore and Nagercoil by the digital set top boxes. The programmes that are

aired in Chennai can be viewed around the world through WEB TV
(www.joytvchennai.com) and apps (JOYTV CHENNAI)

29/07/2025

The Crossway Ministries
அநுதினமும் சிலுவையைச் சுமப்போம்

ஜுலை 28

எக்காளம், நாகசுரம், கின்னரம், வீணை, சுரமண்டலம், தம்புரு முதலான சகலவித கீதவாத்தியங்களின் சத்தத்தை நீங்கள் கேட்கும்போது, நீங்கள் தாழவிழுந்து, ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் நிறுத்தின பொற்சிலையைப் பணிந்துகொள்ளக்கடவீர்கள் (தானி. 3:5).
“நேபுகாத்நேச்சாரின் பொற்சிலை”

தீவிரவாத மதக்கொள்கையை உடையவர்கள் தம்முடைய வழியை ஏற்றுக்கொள்ளாத ஒவ்வொருவரையும் நோக்கி: தாழவிழுந்து, தாம் உருவாக்கியிருக்கும் வழியை அல்லது தாம் உற்பத்திசெய்திருக்கும் சொரூபத்தை வணங்குமாறு கேட்டுக்கொள்கிறார்கள். இந்த மதத்தினர் தாம் தேவனைச் சேவிப்பதாகப் பலத்த சத்தத்தோடு உரிமை கொண்டாடினாலும், இவர்கள் அசுத்த ஆவியையே சேவிக்கிறார்கள். இவர்களுடைய மதவழி அல்லது இவர்கள் உற்பத்திசெய்திருக்கும் சொரூபம் போன்றவைகள் சாத்தானிடத்திலிருந்து பிறந்தவைகளேயன்றித் தேவனிடத்திலிருந்து உற்பத்தியானவைகள் அல்ல; மதத்திற்கும் தேவனுக்கும் எந்தவித சம்பந்தமுமில்லை; அநேகமான மதங்கள் அதை ஏற்றுக்கொண்டவர்களிடம் அடிமைத்தனமான கீழ்ப்படிவை எதிர்பார்க்கிறது. இஸ்லாமிய மதத்தில் ஒருவன் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவை ஏற்றுக்கொள்வானாயின் அவன் கொலைசெய்யப்படக்கடவன் என அச்சுறுத்தப்படுகிறான்; அநேகமானோர் கொலை செய்யப்பட்டு, தம்முடைய விசுவாசத்திற்கு இன்றும் சாட்சிபகர்கின்றனர். அப்படியே, களங்கப்பட்ட, வேதத்திற்கு ஒவ்வாத கிறிஸ்தவத்தை உருவாக்கினது சாத்தானே. இவ்வாறான கிறிஸ்தவத்திற்கும், வேற்று மதங்களுக்கும் எந்தவித வேறுபாடுமில்லை. சாத்தான் களங்கப்பட்ட கிறிஸ்தவத்திலும் அடிமைத்தனமான கீழ்ப்படிவைக் கட்டாயப்படுத்துகிறான்; சாத்தான் பல்வேறு வழியில் இந்த அடிமைத்தனமான கீழ்ப்படிவைப் போதகர்கள்மூலமும், கிறிஸ்தவ மார்க்கங்கள் மூலமும் உறுதிப்படுத்துகிறான்.

உதாரணமாக, அநேகமான கிறிஸ்தவ மார்க்கங்கள் தம்முடைய சபையிலுள்ள எவனாவது பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டதற்கு அடையாளமாகிய அந்நியபாஷையில் பேசுவானாகில், அவன் உடனடியாகத் தான் பெற்ற மகத்துவமான ஈவைக் கைவிட்டு, தான் ஏற்றுக்கொண்ட கிறிஸ்தவ மார்க்கத்திற்கு விசுவாசமாயிருக்குமாறு வற்புறுத்தப்படுகிறான். தாழவிழுந்து, தம்மால் உருவாக்கப்பட்ட தம்முடைய மார்க்கங்களைப் (சொரூபத்தை) பணிந்துகொள் என்று போதகர்கள்மூலம், அறிந்தோ அறியாமலோ இந்த மார்க்கத்திற்குப் பலியானவர்களைச் சாத்தான் நிர்ப்பந்திக்கிறான். இதற்கு அவர்கள் எதிர்ப்புத் தெரிவிப்பார்களாயின் அவர்கள் புறம்பே தள்ளப்படுகிறார்கள். பலருக்கு இது கொடுமையாகத் தென்படுவதால், அவர்கள் தேவன் கொடுத்த ஈவைப் புறம்பே தள்ளி, மறுபடியும் தம்முடைய மார்க்கத்தில் பலிக்கடாவாக இணைந்துகொள்கிறார்கள். இவர்கள்போன்றே இஸ்ரவேலியர்கள் மீட்பரையும் அவருடைய பலியையும் புறக்கணித்து, அந்நியதேவர்களைப் பணிந்துகொண்டார்கள். தேவன் இவர்களை நோக்கி: எரேமியா 2:13-14 ல் கூறியிருப்பது கிறிஸ்தவர்களாகிய நமக்கும் சேர்த்தே என்பதனைத் தெளிவாகப் புரிந்துகொள்வோமாக.
சாத்தான் தன்னுடைய செயற்பாடுகளில் ஒரு மாற்றத்தையும் ஏற்படுத்தியதாகத் தெரியவில்லை; ஏனெனில், அவனுடைய வஞ்சகம் எவ்விதத் தடையுமின்றி அவனுக்குப் பலிக்கடாவானவர்களினால் சந்தோஷமாக ஏற்றுக்கொள்ளப்படுமாயின் அவன் ஏன் தன் யுக்திகளை மாற்றவேண்டும்!! நம்முடைய மரணத்துக்கு அதிகாரியான சாத்தான் மாற்றமேயில்லாமல் தன்னுடைய வஞ்சக யுக்திகளைச் செயற்படுத்தி, “தாழவிழுந்து, என்னைப் பணிந்து கொள்ளுங்கள்” என்ற தன்னுடைய கொள்கையை எவ்வாறு நடைமுறைப்படுத்துகிறான் என்பதனைப் பார்ப்போம்.

* அநேகமான கிறிஸ்தவ மார்க்கங்கள் தம்மிடத்தில் அண்டிக்கொள்கிறவர்களை நோக்கி: நீங்கள் உங்களுடைய விசுவாசத்தை உங்களுடைய மார்க்கத்திற்கு உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்; இல்லையேல் புறம்பே தள்ளப்படுவீர்களென எச்சரிக்கிறது. அப்படியே சாத்தானைப் பிரதிபலிக்கும், ராஜாவாகிய நேபுகாத்நேச் சாரும் எச்சரித்தான் (தானி. 3:6) . அப்படியே சாத்தான் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவை “உயர்ந்த மலையின்மேல் கொண்டுபோய்: உலகத்தின் சகல ராஜ்யங்களையும் அவைகளின் மகிமையையும் அவருக்குக் காண்பித்து, நீர் சாஷ்டாங்கமாய் விழுந்து, என்னைப் பணிந்துகொண்டால், இவைகளையெல்லாம் உமக்குத் தருவேன்” (மத். 4:8-9) என வாக்குறுதி கொடுத்தானே.

* அப்படியே கிறிஸ்து இப்பூமியில் பிரசன்னமாயிருந்த நேரம் அவரை ஏற்று, அவரை விசுவாசித்த யூதஜனங்கள் யூதமார்க்கங்களினால் புறம்பே தள்ளப்பட்டனர் (யோவா. 9:34) அவ்வாறே ஆதி சபையில் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட அநேகமான யூதர்கள் புறம்பே தள்ளப்பட்டனர். அப்படியே அநேகமான பெந்தெகொஸ்தே சபைகள் தம்முடைய மார்க்கங்களின் சட்டதிட்டங்களையும் பிரமாணங்களையும் விசுவாசிக்குமாறு விசுவாசிகளை நிர்ப்பந்திக்கிறார்கள்; இது வேதவாக்கியத்திற்கு எதிரான வன்முறை என்று கூறுவதே பொருத்தமானது. யாராவது போதகர் வேதவாக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து, மார்க்கங்களின் பிரமாணங்களை உதாசீனஞ்செய்தால், உடனடியாகவே அந்தப் போதகர் “தாழவிழுந்து, மார்க்கத் தலைவர்கள் ஏற்படுத்திய பிரமாணங்கள் என்னும் சொரூபத்தை வணங்குமாறு வேண்டப்படுகின்றனர்” . அடிபணிய மறுத்தால், அந்தப் போதகரை நிர்மூலமாக்குவதற்கு சகல முயற்சியும் மேற்கொள்ளப்படுகிறது.
இப்படியே பரிசேயர்களும் சதுசேயர்களும் வேதபாரகர்களும் ஏரோதியர்களும் செய்தார்கள். நாட்டின் சட்டதிட்டம் இடம் கொடுக்குமாயின் இந்த மார்க்கத்தலைவர்கள் தம்முடைய கொள்கைகளுக்கு எதிரானவர்களுக்கு மரணதண்டனை விதித்து, கர்த்தருடைய நாமத்தில் அதனை நிறைவேற்றவும் தயங்கமாட்டார்கள். கிறிஸ்துவுக்கும் அப்படிச் செய்தார்களே; அப்போஸ்தலர்களுக்கும் அப்படிச் செய்தார்களே; இன்றும் அப்படியே செய்கிறார்கள். இவர் ள் என்னையும் பிதாவையும் அறியாதபடியினால் இப்படிச் செய்கிறார்கள் என ஆண்டவர் கூறியிருக்கிறார் (யோவா. 16:3) . கிறிஸ்தவ மதம் வேதாகமத்தை முற்றுமுழுவதுமாக உதறித்தள்ளி, மனுஷனுடைய வழிகளாகிய பாரம்பரியம், கலாச்சாரம், சமூகவியல், மனுஷஞானம், மனோதத்துவ சாஸ்திரம், புராணக்கதைகள் மற்றும் தம்முடைய பிரமாணங்களை சுவிசேஷங்களாகப் போதிக்கின்றனர்; இவர்கள் வீணாய்த் தேவனுக்கு ஆராதனை செய்கிறார்கள் (மத். 15:9) . இதோ, தம்முடைய அந்தகார வழியைவிட்டு, இவர்கள் தேவனிடம் திரும்பாவிட்டால், தம்முடைய ஆத்துமாவையே இழந்துபோவார்கள். இவர்களை நான் அறியேன் என ஆண்டவர் கூறுகிறார் (மத். 7:21-23; லூக். 13:25-28) ; இவர்களைவிட்டு விலகவேண்டும் எனப் பவுல் அப்போஸ்தலரும் கூறியுள்ளார் (IIகொரி. 6:14-18) .

29/07/2025

The Crossway Ministries
அநுதினமும் சிலுவையைச் சுமப்போம்

ஜுலை 29

அவருடைய இருதயம் மேட்டிமையாகி, அவருடைய ஆவி கர்வத்தினாலே கடினப்பட்டபோது, அவர் தமது சிங்காசனத்திலிருந்து தள்ளப்பட்டார்; அவருடைய மகிமை அவரைவிட்டு அகன்றுபோயிற்று (தானி. 5:20).

“மகிமை அவரைவிட்டு அகன்றுபோயிற்று”

ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் தற்பெருமையினால் மேட்டிமை கொண்டிருந்தான்; இதுவே அவனுடைய வீழ்ச்சிக்கு முக்கியமான காரணமாயிருந்தது. தேவனுடைய ராஜ்யத்திற்கு எதிராக மனுஷன் கிளர்ச்சிசெய்யும்போது, அவனுடைய பாவத்தின் நிமித்தம் அவனுக்குள் மேட்டிமை ஆட்கொள்கிறது; தேவனுக்கு எதிராகக் கிளர்ச்சிசெய்யும் யாவருடைய பிரச்னையும் இதுவே. அப்படியே கிறிஸ்தவர்களும் கிறிஸ்துவின் சிலுவையைப்பற்றிய அறிவைப் பெற்றுக்கொள்வதற்கும், இடறலுக்கும் இந்த மேட்டிமையே மிகமுக்கியமான காரணமாயிருக்கிறது (கலா. 5:11) ; உலகத்தில் அன்பு கூருவதே இந்த மேட்டிமைக்கு ஆதாரமாயிருக்கிறது (Iயோவா. 2:15-16) .

அதெப்படி கிறிஸ்தவர்களாகிய நாம் மேட்டிமைக்குள் அகப்படமுடியும் எனப் பலர் ஆச்சரியப்படுவதுண்டு. உதாரணமாக, ஒரு விசுவாசி தன்னுடைய சுயபலத்தினால் ஒருபொழுதும் இந்தக் கிறிஸ்தவ வாழ்க்கையை நடத்தமுடியாதென்பதை அவ்வளவு இலகுவாக ஏற்றுக்கொள்வதில்லை; ஆயினும் தனக்குக் கிறிஸ்து உதவுவதாகவும், வேதவசனங்களில் தான் பிரியமாயிருக்கிறேன் என்றும் தன்னைப்பற்றிப் பிரகடனப்படுத்துவதுண்டு; அவன் கிறிஸ்துவின் சிலுவையை அறியாவிட்டால், அவனை எப்படியோ மேட்டிமை ஆளத்தொடங்கும். கிறிஸ்துவின் சிலுவை ஒன்றே மேட்டிமையை அப்புறப்படுத்தமுடியும். ஆனபடியினாலேயே ஆண்டவர் லூக்கா 9:23 ல் “ஒருவன் என் பின்னே வர விரும்பினால், அவன் தன்னைத்தான் வெறுத்து, தன் சிலுவையை அநுதினமும் எடுத்துக்கொண்டு, என்னைப் பின்பற்றக்கடவன்” எனக் கூறியிருக்கிறார்.

மேட்டிமையை அப்புறப்படுத்துவதற்குத் தேவனால் ஏற்படுத்தப்பட்ட வழி அநுதினமும் சிலுவையைச் சுமப்பதேயாகும். மேட்டிமை, எந்தக் கட்டத்திலும், எந்தச் சூழ்நிலையிலும் அவலட்சணமானது; எல்லாவற்றிற்கும் மேலாக மதமேட்டிமை கொடியதும் சகல அவலட்சணத்துக்கும் தலையாயிருக்கிறது.

ஆபிரகாம் அவ்வளவு இலகுவாக இஸ்மவேலைக் கைவிடவில்லை. இஸ்மவேலையும் அவனுடைய தாயையும் புறம்பே தள்ளு என்று தன் மனைவியாகிய சாராள் கேட்டுக்கொண்டதை நிறைவேற்றமுடியாமல் போராடிக்கொண்டிருந்தான்; ஏனெனில், இஸ்மவேல் அவனுடைய மாம்சத்தினால் உருவாக்கப்பட்ட கனி; இது கெட்ட கனி; அப்படியே நாமும் நம்முடைய சுயதிட்டத்தினால் உருவாக்கிய கனியை அவ்வளவாய் இலகுவாகக் கைவிடுவதில்லை; இதற்கு முக்கியகாரணம் மேட்டிமையே. ஒருவன் கிறிஸ்துவையும், அவர் அவனுக்காகச் சிலுவையில் நிறைவேற்றியதையும் முற்றுமுழுவதுமாகத் தன் இருதயத்தில் விசுவாசித்து, அந்த விசுவாசத்தில் நிலைத்திருப்பானாகில் (யோவா. 15:4-11) அவன் தன் சுயபலத்தினால் எதையும் செய்யமுடியாது என்பதனையும், தான் கிறிஸ்துவுக்கு முன்பாகத் தன் சுயபலத்தினால் ஒருபொழுதும் நீதியாகவும் பரிசுத்தமாகவும் வாழமுடியாது என்பதனையும் தப்பாமல் அறிந்துகொள்ளுவான்; அதுமட்டுமல்ல, தேவன் கிறிஸ்துவின் சிலுவையைத்தவிர (Iகொரி. 2:2) வேறொன்றையும் ஏற்றுக்கொள்வதில்லை என்பதனை அவன் அப்பொழுது உணர்ந்துகொள்ளுவான்.

கிறிஸ்துவின் சிலுவை மனுஷனுடைய எந்தத் திட்டத்தையும் பெறுமதியற்றதாக்கி, செயலற்றுப் போகப்பண்ணுகிறது. ஒருவனும் அவர் சிலுவையில் நிறைவேற்றியதை மீண்டும் நிறைவேற்றவேண்டியதில்லை; அந்த வீணான முயற்சியைக் கைவிட்டு, கிறிஸ்துவையும், அவர் அவனுக்காகச் சிலுவையில் நிறைவேற்றியதையும் விசுவாசித்து, மகிமையையும் கிருபையையும் சமாதானத்தையும் (ரோம. 2:10) பெறவேண்டியதே, தேவன் அவனுக்கு நியமித்திருக்கும் ஒரேவழியாகும் (ரோம. 5:1, 6:2-5, 11, 14, 8:1-2, 11) .

ரோமர் 4 ம் 5 ம் அதிகாரங்கள் முற்றுமுழுவதுமாக விசுவாசமே தேவையானது என்பதனை உறுதிப்படுத்தி, கிரியைகளில் மனுஷருடைய நாட்டத்தைச் செயலற்றுப்போகப்பண்ணுகிறது. இந்தத் தேவப்பிரகடனத்தை அவ்வளவாய் மனுஷரோ கிறிஸ்தவர்களோ ரசிப்பதில்லை. எப்படி ஒரு அவிசுவாசி தன்னுடைய ஆத்துமாவைக் காப்பாற்றமுடியுமெனக் கடைசிவரையும் போராடுகிறானோ அப்படியே கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டவர்களும் தம்மைத்தாம் பரிசுத்தப்படுத்தவும், தேவனுக்கு முன்பாக நீதியாக வாழவும், ஜெயங்கொண்ட கிறிஸ்தவ வாழ்க்கைக்குத் தம்முடைய பங்களிப்பும் உண்டு எனவும் நிச்சயமாக நம்புகிறார்கள். உலகத்தினர் இடைவிடாமல் பற்பல சொரூபங்களைத் தம்முடைய கைப்பலத்தால் உற்பத்திசெய்வதுபோல, கிறிஸ்தவர்களும் இடைவிடாமல் தேவனுக்குப் பற்பல பலிகளைத் தம்முடைய மாம்சத்தினால் காயீனைப்போல உற்பத்திசெய்து, தேவனுக்குப் படைக்கின்றனர். இவ்வாறான வீணான முயற்சிகளைத் தேவன் ஒருபொழுதும் ஏற்றுக்கொள்வதில்லை; ஆனால், அந்த உண்மையை ஏற்றுக்கொள்வதென்பது அநேகமான கிறிஸ்தவர்களால் முடியாமலிருக்கிறது. இதுவே மேட்டிமையின் செயற்பாடும்; வஞ்சகத்தின் செயற்பாடும்; சாத்தானின் செயற்பாடுமாகும். இந்த உண்மையை அறிந்து, புரிந்து, இருதயத்தில் உணர்ந்து கிறிஸ்துவின் சிலுவையை அநுதினமும் சுமப்போமாக (லூக். 9:23).

29/07/2025

அனுதினமும் சிலுவை சுமப்போம் | Paul Balabaskaran | The Crossway Ministries

27/07/2025

The Crossway Ministries
அநுதினமும் சிலுவையைச் சுமப்போம்

ஜுலை 27

நதியோரமாய் அதின் இக்கரையிலும் அக்கரையிலும் புசிப்புக்கான சகலவித விருட்சங்களும் வளரும்; அவைகளின் இலைகள் உதிர்வதுமில்லை, அவைகளின் கனிகள் கெடுவதுமில்லை; அவைகளுக்குப் பாயும் தண்ணீர் பரிசுத்த ஸ்தலத்திலிருந்து பாய்கிறபடியினால் மாதந்தோறும் புதுக்கனிகளைக் கொடுத்துக் கொண்டேயிருக்கும், அவைகளின் கனிகள் புசிப்புக்கும் அவைகளின் இலைகள்
அவிழ்தத்துக்குமானவைகள் (எசேக். 47:12).

“புசிப்புக்கான சகலவித விருட்சங்கள்”

இந்த வேதவாக்கியத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் விருட்சங்கள் நதியின் இரு பக்கத்திலும் வளர்ந்து, தொடர்ச்சியாகக் கனிகளைக் கொடுத்தவண்ணமாயிருக்கும் என்று அறியக்கூடியதாயிருக்கிறது. அவைகளுக்குப் பாயும் தண்ணீர் பரிசுத்த ஸ்தலத்திலிருந்து பாய்கிறபடியினால், மாதந்தோறும் புதுக்கனிகளைக் கொடுத்துக்கொண்டேயிருக்கும்; அவைகளின் கனிகள் புசிப்பதற்கும், இலைகள் மருந்துக்கும் உபயோகிக்கப்படும்; ஜீவனுள்ள ஊழியத்தின் குணாதிசயம் அப்படியாயிருக்கும். எந்த ஊழியம் கல்வாரியின் அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டதோ, அது பரிசுத்த ஆவியினால் சக்தியூட்டப்பட்டதாயிருக்கும். வரப்போகிற ஆயிரம் வருஷகால ஆட்சியின்போது பூமியில் இருவகையான ஜனங்கள் வாசமாயிருப்பார்கள். நாங்கள் இப்பொழுது இருக்கிற தோற்றத்தின் மாதிரியாக இருக்கும் மனுஷரும், மகிமையான சரீரத்தையுடைய மனுஷரும் இருப்பார்கள்.

மகிமையான சரீரத்தை உடையவர்களுக்கு இந்தக் கனி தேவையில்லை; ஆயினும், வழமையான மனுஷருக்குப் போஜனத்திற்குக் கனியும், மருத்துவத்திற்கு இலையும் தேவையாயிருக்கிறது; “கனிகள்” மனுஷனுடைய சரீரத்திற்குத் தேவையான சத்துக்களைக் கொடுக்கும் அதேநேரம் “இலைகள்” மனுஷனுடைய நோய்களைக் குணமாக்கும்.

சந்தேகத்திற்கிடமில்லாமல் தேவையான அளவு “கனிகளும்” “இலைகளும்” கப்பலில் ஏற்றி உலகம் முழுவதும் அனுப்பப்படும். உலகம், முன்பு ஒருபொழுதும் காணாத அமைதியையும், ஐசுவரியத்தையும், தேவனுடைய வல்லமையையும் ஆயிரம்வருஷகால ஆட்சியின்போது காணக்கூடியதாயிருக்கும். இந்த விருட்சங்கள் ஜீவவிருட்சத்தைப்போல இருக்கும்; அந்த சந்தோஷநாளிலே ஆச்சரியப்படத்தக்க அநேக விஷயங்கள் எல்லாருக்கும் காத்திருக்கிறது.

27/07/2025

The Crossway Ministries
அநுதினமும் சிலுவையைச் சுமப்போம்

ஜுலை 26

பின்பு அவர் என்னைக் கீழ்த்திசைக்கு எதிர் வாசலாகிய வாசலுக்கு அழைத்துக்கொண்டுபோனார். இதோ, இஸ்ரவேலின் தேவனுடைய மகிமை கீழ்த்திசையிலிருந்து வந்தது; அவருடைய சத்தம் பெருவெள்ளத்தின் இரைச்சலைப்போல இருந்தது; அவருடைய மகிமையினால் பூமி பிரகாசித்தது (எசேக்.43:1-2).

“அவருடைய சத்தம் பெருவெள்ளத்தின் இரைச்சலைப்போல இருந்தது”

கிறிஸ்துவுக்கு 500 வருஷங்களுக்கு முன்பு எருசலேமிலுள்ள தேவாலயத்தைவிட்டுப் பரிசுத்த ஆவியானவர் விலகிப்போனதைத் தீர்க்கதரிசியான எசேக்கியேல் கண்டான்; அங்கு பரிசுத்த ஆவியானவர் இருக்கமுடியாமற்போய்விட்டது. ஜனங்களுடைய விக்கிரகாராதனை மிகவும் கடுமையாக இருந்தபடியினால், கர்த்தராகிய ஆண்டவருக்கு இடமில்லாமற்போய்விட்டது; ஆனபடியினால், அவர் விலகுமாறு வற்புறுத்தப்பட்டார். கிறிஸ்துவைத் தங்களுடைய சொந்த இரட்சகராகவும், கர்த்தராகவும், அவருடைய இரண்டாம் வருகையின்போது ஏற்றுக்கொண்ட பின்பே, பரிசுத்த ஆவியானவர் இறுதியாகத் திரும்பிவருவார். எசேக்கியேல் தன்னுடைய கடைசி 8 அதிகாரங்களிலும் விபரிக்கும் ஆலயம், ஆயிரம்வருஷகாலத்தின்போது கட்டப்பட்ட புது ஆலயமாகும்; அந்த ஆலயத்தில் பரிசுத்த ஆவியானவர் தங்குவார்; ஏனெனில், இஸ்ரவேலியர்கள் தேவனோடு தங்களை ஒப்புரவாக்கிக்கொள்வார்கள். இஸ்ரவேல்

தேவனுடைய தீர்க்கதரிசன மணிக்கூடு; புதிதாக உருவாக்கப்பட்ட இந்தத் தேசத்தை ஒருவன் பார்த்து, தீர்க்கதரிசன நேரத்தின் தாமதத்தைச் சொல்லக்கூடியதாயிருக்கிறது. இதுபற்றி ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து மத்தேயு 24:32 ல் “அத்திமரத்தினால் ஒரு உவமையைக் கற்றுக்கொள்ளுங்கள்; அதிலே இளங்கிளை தோன்றி, துளிர்விடும்போது, வசந்த காலம் சமீபமாயிற்று என்று அறிவீர்கள்” எனக் கூறியிருக்கிறார். இஸ்ரவேல் அத்திமரத்திற்கு ஒப்பிடப்பட்டிருக்கிறது. 2000 வருஷங்களுக்குப் பின்பு, அது கிளைவிடத் தொடங்கியிருக்கிறது; இதன் பொருள், 1948 ம் ஆண்டு இஸ்ரவேல் ஒரு தேசமாகி, செயற்பட்டுக்கொண்டிருக்கிறது; ஆகையால், இஸ்ரவேலை ஒரு தீர்க்கதரிசன மணிக்கூடாகப் பார்க்கும்பொழுது “.....அவர் சமீபமாக வாசலருகே வந்திருக்கிறார் என்று அறியுங்கள்” (மத். 24:33) என்ற வார்த்தை எவ்வளவு முக்கியத்துவம் பெறுகிறது; சபையின் காலம் முடிவுபெறுகிறது.

இஸ்ரவேல் மறுபடியும் தன்னுடைய இடத்திற்குத் திரும்பிவருகிறது; ஆனாலும், மிகுந்த இக்கட்டின் மத்தியிலேயே அது சாத்தியமாகும் (எரேமி. 30:7) . தேவனுடைய ஆவியானவர், இஸ்ரவேல் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட பின்பே, அவர்களோடு தங்குவார்; இஸ்ரவேல், சிலுவையில் அறையப்பட்ட இயேசுகிறிஸ்துவை ஏற்றுக்கொள்வார்கள் எனச் சகரியா தீர்க்கதரிசி, தீர்க்கதரிசனமாகக் கூறியிருக்கிறான் (சகரி. 13:6) .

25/07/2025

The Crossway Ministries
அநுதினமும் சிலுவையைச் சுமப்போம்

ஜுலை 25

இப்போதும் மனுபுத்திரனே, நீ கோகுக்கு விரோதமாகத் தீர்க்கதரிசனம் உரைத்துச் சொல்லவேண்டியது என்னவென்றால்: கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார், மேசேக் தூபால் ஜாதிகளின் அதிபதியாகிய கோகே, இதோ, நான் உனக்கு விரோதமாக வருகிறேன். நான் உன்னைத் திருப்பி உன்னை ஆறு துறடுகளால் இழுத்து, உன்னை வடபுறங்களிலிருந்து எழும்பவும் இஸ்ரவேல் மலைகளில் வரவும்பண்ணி (எசேக். 39:1-2).

“அர்மகெதோன் யுத்தம்”

எசேக்கியேல் 38 ம் , 39 ம் அதிகாரங்களில், வரப்போகிற அர்மகெதோன் யுத்தத்தின் விபரம் தரப்பட்டிருக்கிறது; இந்த யுத்தத்தில் அந்திக்கிறிஸ்து, சாத்தான் மற்றும் அந்தகார சக்திகளின் கூட்டத்திற்கு இறுதித் தண்டனை கொடுக்கப்படுகிறது; இந்தக் காலத்திலேயே ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் இரண்டாம் வருகையும் நடைபெறுகிறது; கடைசியாக இஸ்ரவேலியர்களும் கிறிஸ்துவிடம் கொண்டுவரப்படுகிறார்கள்.

தற்பொழுது கிறிஸ்தவ சபைகள் வரப்போகிற உயிர்த்தெழுதலுக்காகக் காத்திருக்கின்றன (Iதெச. 4:13-18) ; இந்த உயிர்த்தெழுதல், இழுத்துக்கொள்ளப்படுதல், என்றும் அழைக்கப்படுகிறது. உயிர்த்தெழுதலுக்குப் பின்பு ஒரு காலகட்டத்தில் மிகுந்த உபத்திரவகாலம் ஆரம்பிக்கிறது; இதுவே யாக்கோபின் இக்கட்டுக் காலம் (எரேமி. 30:7) என்று சொல்லப்படுகிறது. உலகம் முழுவதும் இக்கட்டுக் காலமாயிருந்தாலும் இஸ்ரவேலுக்கே மிகுந்த இக்கட்டுக்காலம். இந்த இக்கட்டுக்காலத்தை ஒருபொழுதும் இஸ்ரவேல் கண்டிராது என்று ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து சொல்லியிருக்கிறார் (மத். 24:21) .

இந்தக் காலத்திலேயே கோகு என்று அழைக்கப்படும் அந்திக்கிறிஸ்து உத்தியோகபூர்வமாக முதல்முறையாகத் தோற்றமளிக்கிறான். முழு உலகத்தையும் ஆட்சிசெய்வதே அவனுடைய நோக்கமாகும்; ஆனாலும், அவனுடைய ஆவியில் இஸ்ரவேலை அழிப்பதே முழுநோக்கமாயிருக்கும். பலஸ்தீனியருக்கும் இஸ்ரவேலியர்களுக்கும் இடையிலிருக்கிற தற்போதைய சச்சரவு அர்மகெதோன் யுத்தத்திற்கு வழிநடத்தக்கூடிய சாத்தியக்கூறுகள் நிச்சயமாக உண்டு என்பதனை உணர்த்துகிறது. ஆரம்பகாலத்தில் அந்திக்கிறிஸ்து இந்தப் பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பவனைப்போலத் தோற்றமளிப்பான் (வெளி. 6:2) ; ஆயினும், சீக்கிரத்தில் தன்னுடைய நிறமென்ன என்பதனையும், தான் யார் என்பதனையும் அவன் நிச்சயமாகக் காண்பிப்பான்; அவன் தேவனை வெறுப்பவனும், குறிப்பாக யூதர்களை இன்னும் அதிகமாக வெறுப்பவனாகவும் இருப்பான்.

இஸ்ரவேலுடன் ஏற்படுத்திய 7 வருஷ ஒப்பந்தத்தின் நடுப்பகுதியில், அவன் அந்த உடன்படிக்கையை முறித்து, இஸ்ரவேலைத் தாக்கத் தொடங்குவான். 1948 ம் ஆண்டு ஒரு தேசமாக இஸ்ரவேல் உருவாகியபின்பு அது முதல்முறையாகத் தோல்வியைச் சந்திக்கும்; பின்பு இறுதியான தீர்வைக்கொடுக்கும்முகமாக புதிய திருப்பம் ஆரம்பமாகும். ஆமான், ஏரோது, கிட்லர் செய்யமுடியாமற்போனதை அந்திக்கிறிஸ்து நிறைவேற்ற முயற்சிப்பான்; அதில் அவன் மிகவும் அண்மித்தும் வருவான்.

ஆனால், அர்மகெதோன் யுத்தத்தின்போது, இஸ்ரவேல் கர்த்தரை நோக்கி, ஒருக்காலும் இல்லாதவாறு உதவிக்குக் கெஞ்சுவார்கள். அவர் உதவிசெய்யாவிட்டால் அவர்கள் முற்றுமுழுவதுமாக அழிந்துபோவார்கள்; பழமையான இந்த யூதஜனத்தின் வேண்டுகோளுக்கு அவரின் இரண்டாம் வருகையே தீர்வாக அமைகிறது; அப்பொழுது இஸ்ரவேலின் தோல்வி தாடையிலிருந்து பறித்தது போலிருக்கும். இவை கடைசிக்காலத்தில் நிகழப்போகும் சம்பவங்கள்; இவை யாவும் வேதவார்த்தைகளில் சொல்லப்பட்டிருக்கிறது; இது சாத்தியமானது கிறிஸ்துவின் சிலுவையினாலேயே (எபி. 13:20) என்பதனை நாம் அறிந்திருக்கவேண்டும்.

24/07/2025

SIMCHAT TORAH BEIT MIDRASH

24/07/2025

The Crossway Ministries
அநுதினமும் சிலுவையைச் சுமப்போம்

ஜுலை 24

அவர் என்னை நோக்கி: மனுபுத்திரனே, இந்த எலும்புகள் உயிரடையுமா என்று கேட்டார்; அதற்கு நான்: கர்த்தராகிய ஆண்டவரே, தேவரீர் அதை அறிவீர் என்றேன் (எசேக். 37:3).

“இந்த எலும்புகள் உயிரடையுமா”

இரண்டாம் உலக மகா யுத்தத்தின்போது, ஆறுகோடி யூதர்கள் நாசி கசாப்புக்காரர்களால் கொல்லப்பட்டனர்; இந்தப் பழமையான ஜனங்களை அழிப்பதற்குச் சாத்தான் திட்டம் தீட்டியிருந்தான். அந்த மனுஷரை மறுபடியும் புனருத்தாரணம் செய்யும் காலம் வந்துவிட்டது என்பதனை அவன் அறிவான்; சாத்தான் கடும்முயற்சி எடுத்தும் பயனளிக்கவில்லை. 2500 வருஷங்களுக்கு முன்பு கர்த்தர், தீர்க்கதரிசி எசேக்கியேலைக் கேட்ட கேள்விக்குப் பதில் ஜேர்மனி போலந்தின் ஈமச்சிதையிலிருந்து வெளிப்பட்டது. அந்தக் கேள்வி இந்த எலும்புகள் உயிரடையுமா? என்பதேயாகும். 1948 ம் ஆண்டு மே மாதம் 14 ம் தேதி இஸ்ரவேல் பிறந்தது; அதன்மூலம் எசேக்கியேல் அதிகாரம் 37 நிறைவேறும் பணி ஆரம்பமானது. அவர்களால் மறுபடியும் வாழமுடியும் என்ற நம்பிக்கை அவர்களிடமில்லை என்பது வெளிப்படையான உண்மையாயிருக்கிறது; ஆயினும் 2500 வருஷங்களுக்குமுன்பு கர்த்தர் எசேக்கியேல் தீர்க்கதரிசிக்குச் சொன்னதை விபமாகப் பார்ப்போம்.

எசேக்கியேல் 37:12 ம் வசனத்தில் “.......கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார், இதோ, என் ஜனங்களே, நான் உங்கள் பிரேதக்குழிகளைத் திறந்து, உங்களை உங்கள் பிரேதக்குழிகளிலிருந்து வெளிப்படவும், உங்களை இஸ்ரவேல் தேசத்துக்கு வரவும்பண்ணுவேன்” எனச் சொல்லப்பட்டிருக்கிறது; அப்படியே கர்த்தர் செய்தார். மனுஷ அழிவிலிருந்து நாடோடிகளாக உலக மெங்குமிருந்த யூதர்களைக் கொண்டுவந்து, எசேக்கியேலின் தீர்க்கதரிசனத்திற்கு 500 ஆண்டுகளுக்குப் பின்பு பவுல் அப்போஸ்தலர் ரோமர் 11:26-27 ல், ஏசாயா தீர்க்கதரிசியினாலும் (ஏசா. 27:9) , எரேமியா தீர்க்கதரிசியினாலும் (எரேமி. 31:31) தீர்க்கதரிசனமாகச் சொல்லப்பட்டவைகளை மேற்கோள்காட்டியிருந்தார்.

இஸ்ரவேல் தேவனுடைய தீர்க்கதரிசன மணிக்கூடு. இஸ்ரவேலைப் பார்த்து, ஒருவன் உண்மையில் நேரம் எவ்வளவு தாமதமாயிருக்கிறது என்பதனைச் சொல்லமுடியும்; இஸ்ரவேல் யாக்கோபின் இக்கட்டுக்காலத்திற்குள் (எரேமி. 30:7) நுழையும் காலம் அண்மித்துவிட்டது; அந்தக் காலமே மிகுந்த உபத்திரவகாலமாகும் (மத். 24:21) ; சகரியாவின் தீர்க்கதரிசனத்தின்படி மூன்றில் இரண்டு பங்கு இஸ்ரவேலியர்கள் மாண்டுபோவார்கள் (சகரி. 13:8-9) . நம்பிக்கையற்றுப்போன சூழ்நிலையிலேயே மிகுதியான இஸ்ரவேலியர்கள் (மூன்றில் ஒரு பங்கு) கர்த்தரை நோக்கிக் கூப்பிடத்தொடங்குவார்கள்; அவர்களுடைய அழுகையை அவர் கேட்டு, அவர்களை விடுவிக்கவருவார்; அதுவே இயேசுகிறிஸ்துவின் இரண்டாம் வருகையாகும்; அப்பொழுதே இஸ்ரவேலியர்கள் முற்றுமுழுவதும் அவரை ஏற்றுக்கொள்ளுவார்கள். இந்த அவமானத்தை இஸ்ரவேலியர்கள் எதிர்கொள்வது வேதனைக்குரியது; அப்படியே கோடிக்கணக்கானோர் மிகுந்த துன்பத்தின் மத்தியிலேயே ஆண்டவரை ஏற்றுக்கொள்கிறார்கள்; இது பாவசுபாவத்தின் மிகப்பெரிய வஞ்சனையாகும்.

23/07/2025

The Crossway Ministries
அநுதினமும் சிலுவையைச் சுமப்போம்

ஜுலை 23

நீங்களோ, ஆண்டவருடைய வழி செம்மையாய் இருக்கவில்லை என்கிறீர்கள்; இஸ்ரவேல் வம்சத்தாரே, கேளுங்கள்; என் வழி செம்மையாயிராதோ? உங்கள் வழிகள் அல்லவோ செம்மையல்லாததாயிருக்கிறது (எசேக். 18:25).

“என் வழி செம்மையாயிராதோ?”

பெரும் தத்துவஞானிகளின் நியாயவாதம் என்னவெனில், இந்தப் பூவுலகத்தில் பிறக்கும் மனிதர் யாவரும் ஜென்மசுபாவத்தோடு பிறப்பதற்கு ஆதாமின் பாவம் காரணமாயிருந்தால், ஆதாமினுடைய மீறுதல்களைக் கட்டுப்படுத்துவதற்கு எவ்வித அதிகாரமும் இல்லாதிருந்த அவனுடைய சந்ததியினர் ஆதாமினுடைய பாவத்தின் தண்டனையைச் சுமக்கவேண்டுமென்கிற தேவனுடைய தீர்ப்பு நியாயமற்றது என்கிறார்கள்; ஆகையால், தேவன் ஆதாமின் சந்ததியினரைத் தண்டிக்கமுடியாது; அவர்கள் ஆதாமின் பாவத்திற்குப் பொறுப்பல்ல எனக் கூறித் தேவனுடைய மீட்பின் வழியை அநேகர் நிராகரிக்கிறார்கள். மேலெழுந்தவாரியாகப் பார்ப்பின் இந்த நியாயவாதம் சரியென்றே தோன்றும்.

இந்த விஷயத்தில் ஆதாமினுடைய சந்ததியினருக்கு எவ்விதத்தெரிவும் இல்லாமற்போனபடியினால், தாம் செய்யாத, தாம் அறியாத ஒரு மனுஷன் செய்த தவறின் பலாபலன்களை நாம் சுமந்து நரகத்திற்குச் செல்லவேண்டுமென்கிற தீர்ப்பை எப்படி நீதியென்று சொல்லமுடியும்? என்ற அவர்களுடைய நியாயவாதம் முற்றிலும் சரியென்றே பொதுவாக ஏற்றுக்கொள்ள இடமுண்டு. பாவத்தினால் வீழ்ந்துபோன மனுஷனுக்குத் தேவன் ஒன்றுமே செய்யாதிருந்தால் அல்லது அந்த மனுஷ வீழ்ச்சியை அப்படியே ஏனோதானோவென விட்டிருந்தால், மனுஷனுடைய நியாயவாதம் சரியே.

ஆனால், தேவனோ தன்னுடைய ஒரேபேறான குமாரனை இந்தப் பூவுலகத்திற்கு மனுஷனாக இயேசு என்னும் நாமத்தோடு அனுப்பி, அவரைப் பலியாகச் சிலுவையில் ஒப்புக்கொடுத்து, அவருடைய பரிசுத்த இரத்தத்தைச் சிந்தி, மனுஷனுடைய ஜென்மசுபாவத்தின் தண்டனையை முற்றுமுழுவதுமாகத் தேவனுக்குச் செலுத்தி, அவன் செய்த பாவச்செயல்களை இயேசுவின் குற்றமற்ற இரத்தத்தினால் கழுவி, முழு மனுஷகுலத்திற்கும் ஜென்மசுபாவத்திலிருந்து விடுதலை கொடுத்தபின்பு, அவர் தாம் செய்துமுடித்த இரட்சிப்பின் பலாபலன்களைப் பெற்றுக்கொள்வதற்கு மனுஷன் மனந்திரும்பி இயேசுகிறிஸ்துவையும், அவர் சிலுவையில் செய்துமுடித்ததையும் விசுவாசிக்கவேண்டுமெனக் கேட்டுக்கொண்டார் (யோவா. 3:16, 18).

ஆகையால், மனுஷனுக்குத் தேவனுடைய தண்டனை, அவன் மீட்கப்படாதிருந்ததினால் அல்ல, அவன் மனுஷ மீட்புக்காகத் தேவன் ஏற்படுத்தின மீட்பின் திட்டத்தை நிராகரித்ததற்கே என்பதனை மனுஷன் முதற்கண் தெளிவாக அறிந்திருக்கவேண்டும் (யோவா. 16:9) ; ஆகையால், தேவன் நீதியற்றவர் என்ற மனுஷனுடைய நியாயவாதம் உண்மைக்குப் புறம்பானது; இவ்வாறான நியாயவாதங்களை இஸ்ரவேலியர்களும் தேவனுக்கெதிராகக் கூறினார்களென எசேக்கியேல் 18:25 வலியுறுத்துகிறது; அதற்குத் தேவன் “.....உங்கள் வழிகள் அல்லவோ செம்மையல்லாததாயிருக்கிறது (எசேக். 18:25) எனப் பதிலளித்தார்.

கிறிஸ்துவின் சிலுவை மனுஷனுடைய சகல நியாயவாதங்களுக்கும் தெட்டத்தெளிவாகப் பதிலளிக்கிறது. மனிதனுடைய வாழ்க்கைக்குத் தேவையான சகலதும் சிலுவையில் அவனுக்காகச் செய்துமுடிக்கப்பட்டிருப்பதனால், மனுஷன் தனக்கு மீட்பைத் தந்த அந்த இரட்சகராகிய இயேசுகிறிஸ்துவை ஏற்றுக்கொள்வானானால், அவனுக்குத் தங்குதடையின்றிக் கிருபையும் சமாதானமும் பெருகும் (IIபேது. 1:2) . ஆகவே, மனுஷன் நேர்மை உள்ளவனாயின், மனுஷன்மேல் தேவன் வெளிப்படுத்தின அவருடைய அன்பை அவன் நிராகரிக்கமுடியாது; அவன் கிறிஸ்துவின் சிலுவையை ஏற்றுக்கொள்ளும்வரையும் அது சாத்தியப்படாது.

22/07/2025

The Crossway Ministries
அநுதினமும் சிலுவையைச் சுமப்போம்

ஜுலை 22

மனுபுத்திரனே, உன்னை இஸ்ரவேல் வம்சத்தாருக்குக் காவலாளனாக வைத்தேன்; நீ என் வாயினாலே வார்த்தையைக்கேட்டு, என் நாமத்தினாலே அவர்களை எச்சரிப்பாயாக. சாகவே சாவாய் என்று நான் துன்மார்க்கனுக்குச் சொல்லுகையில், நீ துன்மார்க்கனைத் தன் துன்மார்க்கமான வழியில் இராதபடிக்கு எச்சரிக்கும்படியாகவும், அவனை உயிரோடே காக்கும்படியாகவும், அதை அவனுக்குச் சொல்லாமலும், நீ அவனை எச்சரிக்காமலும் இருந்தால், அந்த துன்மார்க்கன் தன் துன்மார்க்கத்திலே சாவான்; அவன் இரத்தப்பழியையோ உன் கையிலே கேட்பேன் (எசேக். 3:17-18).
“காவலாளன்”

சுவிசேஷத்தைப் போதிக்கும் ஒவ்வொரு போதகனையும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்து காவலாளனாக நியமித்திருக்கிறார். ஜனங்களுடைய ஆத்துமாவுக்கு நாம் காவல்காரர்களாக இருக்கவேண்டும். பொய்யான உபதேசங்கள் ஊசலாடாதபடிக்கு நாம் விழித்திருக்கவேண்டும்; அப்படியே கள்ளத்தீர்க்கதரிசிகளுக்கும் நாம் எச்சரிக்கையாயிருக்கவேண்டும் (மத். 7:15-18) .

ஒரு போதகர் தவறாகப் போதிப்பதைக் கண்டால், அந்தத் தவறான போதனையைச் சுட்டிக்காட்டவேண்டும்; அவசியமாக இருந்தால், அந்தப் பொய்யான உபதேசத்தையும், அதனைப் போதிப்பவர்களையும் சுட்டிக்காட்டவேண்டும்; தாராளமான வேதவாக்கியங்கள் இந்த விஷயத்தில் தெளிவாயிருக்கிறது (IIதீமோ. 2:16-18) .

தவறாகப் போதிப்பவனை அல்லது அதனைக் கேட்கும் ஜனங்களை எச்சரிக்கை செய்யாவிட்டால், அவர்கள் தங்களுடைய ஆத்துமாவை இழந்துபோவார்கள்; தேவையான நேரம் எச்சரிக்கை செய்யாமல் மௌனம் காத்த அந்தப் போதகனுடைய கையில் மரித்தவனுடைய இரத்தப்பழி கேட்கப்படும் (எசேக். 3:18-21) ; இதுவே தற்போதைய ஊழியத்தின் பாவமாகும்; படகை மோதிப்போடாதே என்கிறார்கள்.

அதற்கு நான் சொல்லும் பதில் என்னவென்றால், சிலுவையல்லாத எந்த உபதேசமும் பொய்யான உபதேசமாகும்; பவுல் அப்போஸ்தலர் கலாத்தியர் 1:8-9 ல் “நாங்கள் உங்களுக்குப் பிரசங்கித்த சுவிசேஷத்தையல்லாமல், நாங்களாவது, வானத்திலிருந்து வருகிற ஒரு தூதனாவது, வேறொரு சுவிசேஷத்தை உங்களுக்குப் பிரசங்கித்தால், அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன். முன் சொன்னதுபோல மறுபடியும் சொல்லுகிறேன்; நீங்கள் ஏற்றுக்கொண்ட சுவிசேஷத்தையல்லாமல் வேறொரு சுவிசேஷத்தை ஒருவன் உங்களுக்குப் பிரசங்கித்தால் அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன்” எனக் கூறியிருக்கிறார்.

Address


Alerts

Be the first to know and let us send you an email when JOY TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to JOY TV:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share

Our Story

JOY TV is a local Christian channel which broadcasts Christian Songs and Messages through sermons, choreography, talk shows, and gospel shows. This is a 24 x 7x 365 channel which is available in TCCL network. TCCL network reaches over six lakh homes daily, is also viewed in other places such as Vellore, Thiruvannamalai, Coimbatore and Nagercoil by the digital set top boxes. The programmes that are aired in Chennai can be viewed around the world through WEB TV (www.joytvchennai.com) and apps (JOYTV CHENNAI)