JOY TV

JOY TV Joy TV is an ingenious endeavor designed to reach the young people and also to get the people who ar

JOY TV is a local Christian channel which broadcasts Christian Songs and Messages through sermons,
choreography, talk shows, and gospel shows. This is a 24 x 7x 365 channel which is available in TCCL
network. TCCL network reaches over six lakh homes daily, is also viewed in other places such as Vellore,
Thiruvannamalai, Coimbatore and Nagercoil by the digital set top boxes. The programmes that are

aired in Chennai can be viewed around the world through WEB TV
(www.joytvchennai.com) and apps (JOYTV CHENNAI)

21/09/2025

The Crossway Ministries
அநுதினமும் சிலுவையைச் சுமப்போம்

செப்டம்பர் 21

அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான் (யோவா. 14:6).

“சத்தியம்”

நாம் முதற்கண் சத்தியம் என்றால் என்ன என்பதனை உறுதிப்படுத்திக்கொள்ளவேண்டும்; சத்தியம் என்பது ஒரு தத்துவமல்ல; உலகம் சிந்திக்கிற மாதிரி, அது ஒரு நம்புகிறமுறையும் அல்ல. வேதாகமம் சத்தியத்தை நான்கு வித்தியாசமான முறையில் கணிப்பிடுகிறது; இதன் பொருள், சத்தியம் என்பது ஒரு தனி மனிதனைப்பற்றியதேயாகும்.

வேதவாக்கியத்தின்படி முதலாவதாக : இயேசுவே சத்தியம் (யோவா. 14:6) ; இதன் பொருள், இயேசு சத்தியத்தை உடையவராக இருக்கிறார் என்பதல்ல, அவரே சத்தியமாயிருக்கிறார். சத்தியத்தை உடையவராக இருக்கிறார் என்பதற்கும், அவரே சத்தியம் என்பதற்கும் இடையில் பாரிய வித்தியாசம் உண்டு. இரண்டாவதாக : தேவனுடைய வார்த்தையே சத்தியம் (யோவா. 17:17) ; ஆம், நிச்சயமாக இயேசுவே வார்த்தை எனப்படும் (யோவா. 1:1, 14) . மூன்றாவதாக : பரிசுத்த ஆவியானவரே சத்தியம் (யோவா. 14:17, 15:26, 16:13; Iயோவா. 5:6) . நான்காவதாக : அபிஷேகமே சத்தியம்; இதன் பொருள், தேவன் சத்தியத்தையே அபிஷேகம் செய்கிறார்; அந்த அபிஷேகம் பரிசுத்த ஆவியானவரிடமிருந்தே வருகிறது (Iயோவா. 2:27) .

இப்படியிருக்க, பிதாவினிடத்தில் செல்வதற்கு ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து ஒரேஒரு வழியையே ஏற்படுத்தியிருக்கிறார். அவர் தன்னையே பலியாகச் சிலுவையில் ஒப்புக்கொடுத்து, அந்த வழியை நமக்கு ஏற்படுத்தியிருக்கிறார். அந்த வழி சிலுவையில் அறையப்பட்ட இயேசுகிறிஸ்துவாகும் (Iகொரி. 1:23, 2:2) . அவர் பூமியிலிருக்கும்பொழுது ஒருவன் அந்த வழியைப் பெற்றுக்கொள்வதற்கு லூக்கா 9:23 ஐக் கெட்டியாகக் கடைப்பிடிக்கவேண்டும் என்றும், இதனைச் செய்யாவிட்டால், அவன் தன்னுடைய சீஷனாக இருக்கமுடியாது என்றும் லூக்கா 14:27 ல் கூறியிருக்கிறார்.

ஜீவனுமாயிருக்கிறேன் என்பதுபற்றி யோவான் 10:10 ல் “...... நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன்” எனக் கூறியிருப்பதிலிருந்து அவரே ஜீவனாயிருக்கிறார் என்பது புலனாகிறது; ஜீவன் இரத்தத்திலேயே உண்டு லேவி. 17:11; எபி. 9:22) ; அவர் தன் இரத்தத்தைச் சிலுவையில் சிந்தி மனுஷகுலத்திற்கு ஜீவனைக் கொடுத்தார்.

என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான் என்பதன் பொருள் பிதாவினிடத்திற்குச் செல்வதற்கு இயேசுகிறிஸ்துவே ஒரே வழி என்பது அழுத்தமாகச் சொல்லப்பட்டிருக்கிறது; கிறிஸ்து 2000 வருஷங்களுக்குமுன் சிலுவையில் மரித்து, மனிதகுலத்தை அந்தப் பாவத்திலிருந்து மீட்டுக்கொண்டார் (மத். 1:21) ; ஆனால், இஸ்லாமிய மதம் முகமதுமூலம் தேவனை அடையலாம் என்று உரிமைகோருகிறது; அப்படியே யூதர்கள் நியாயப்பிரமாணத்தைச் செய்வதனால் தேவனை அடையலாம் என்று உரிமைகோருகிறார்கள்; புதிய தலைமுறை தம்முடைய சுயபலத்தினால் தேவனை அடையலாம் என்று உரிமைகோருகிறது; இவை யாவும் அந்தகார சக்திகளின் மதிநுட்பவேலை என்பது தெளிவாகிறது.

20/09/2025

அனுதினமும் சிலுவை சுமப்போம் | Paul Balabaskaran | The Crossway Ministries

20/09/2025

The Crossway Ministries
அநுதினமும் சிலுவையைச் சுமப்போம்

செப்டம்பர் 20

பின்பு பாத்திரத்தில் தண்ணீர் வார்த்து, சீஷருடைய கால்களைக் கழுவவும், தாம் கட்டிக்கொண்டிருந்த சீலையினால் துடைக்கவும் தொடங்கினார் (யோவா. 13:5).
“சீஷருடைய கால்களைக் கழுவவும், துடைக்கவும் தொடங்கினார்”

ஆசாரியர்கள் எண்ணையால் குத்துவிளக்கை நிரப்பவும், பொன்தூபபீடத்தில் தூபமிடவும், திரியினுடைய எரிந்துபோயிருக்கும் சுடர்களை வெட்டிச் சுத்தம்பண்ணவும் மற்றும் ஆசாரிய கடமைகளை நிறைவேற்றவும் பரிசுத்த ஸ்தலத்திற்குள் உட்செல்வது வழக்கமாயிருந்தது. ஆசாரியர்கள் பரிசுத்த ஸ்தலத்திற்குள் உட்செல்வதற்கு முன்பு தங்களுடைய கைகளையும் கால்களையும் கழுவவேண்டும். இதனையே சீஷர்களுடைய கால்களைக் கழுவுவதன்மூலம் ஆண்டவர் செய்தார். முன்பு ஆசாரியர்கள் நியாயப்பிரமாணத்தைச் செய்தபடியினால், தங்களுடைய கைகளைக் கழுவவேண்டியதாயிற்று.

புதிய ஏற்பாட்டில் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து அவர்களுக்காகச் சிலுவையில் எல்லாவற்றையும் செய்துமுடித்ததன் நிமித்தம் (யோவா. 19:30) இப்பொழுது சீஷர்கள் கைகளைக் கழுவவேண்டியதில்லை; ஆனால், தேவனுக்கு முன்பாக நாம் நடக்கவேண்டியிருக்கிறது; பழைய ஏற்பாட்டில் ஆசாரியர்கள் செய்யும் பொழுதும், நடக்கும்பொழுதும், கைகளையும், கால்களையும் தீட்டுப்படுத்தினார்கள்; ஆனபடியினால் இரண்டையும் கழுவவேண்டியதாயிற்று. இப்பொழுது, சீஷர்களாகிய நாம் உலகத்தில் நடக்கிறோம்; நடக்கும்பொழுது கால்கள் தீட்டுப்படுகிறது; இதனிமித்தம் கர்த்தராகிய ஆண்டவர் நம்முடைய கால்களைக் கழுவுகிறார். கால்கள் இந்தப் பொல்லாத பிரபஞ்சத்தில் தீட்டுப்படாதபடிக்குப் பரிசுத்த ஆவியானவர் நடக்கும் முறையைப்பற்றிப் பவுல் அப்போஸ்தலர்மூலம் IIகொரிந்தியர் 6:14-18 ல் வெளிப்படுத்தியிருக்கிறார். அந்த விசுவாசத்தில் (Iகொரி. 2:2) உறுதியாயிருப்போமாகில், பரிசுத்த ஆவியானவர் நம்மில் வல்லமையாகச் செயற்பட்டு, நம்முடைய நடையைத் தேவனுக்கேற்ற நடையாக மாற்றுவார் (ரோம. 8:1-2, 11) .

19/09/2025

The Crossway Ministries
அநுதினமும் சிலுவையைச் சுமப்போம்

செப்டம்பர் 19

தாம் இன்னவிதமான மரணமாய் மரிக்கப்போகிறாரென்பதைக் குறிக்கும்படி இப்படிச் சொன்னார் (யோவா. 12:33).

“கிறிஸ்துவின் சிலுவை”

யோவான் 12:32 ல் தேவகுமாரனாகிய இயேசுகிறிஸ்து சிலுவையில் தான் நிறைவேற்றப்போகிறதையே குறிப்பாகப் பேசுகிறார்; மேலும், தொடர்ந்து யோவான் 12:33 ல் “தாம் இன்னவிதமான மரணமாய் மரிக்கப்போகிறாரென்பதைக் குறிக்கும்படி இப்படிச் சொன்னார்” என்று சொல்லப்பட்டிருப்பதும் சிலுவை மரணத்தைப்பற்றியே என்பது தெளிவாகிறது.

இதன் பொருள், தான் குறிப்பாக சிலுவையில் மரிக்கப்போகிறபடியினால், முழுஉலகமும், முழுக்கிறிஸ்தவர்களும் தன்னிடத்தில் திரளாகச் சேருவார்கள் என்று அவரால் ஊகிக்கப்படவில்லை; உண்மையில் அநேகர் அவரிடம் சேரமாட்டார்கள்.
அவர் சொன்னது என்னவென்றால், மனுஷகுலத்தைக் கட்டியிருக்கும் அடிமைத்தனத்தை சிலுவை ஒன்றினாலேயே உடைத்தெறியமுடியும் என்றும், தான் சிலுவைக்குப் போவதன்மூலமே அது சாத்தியமாகும் எனவும் கூறியிருந்தார்; மற்றும், ஆவிக்குரிய மரணத்தைப் பெற்றுக்கொண்ட மனுஷனுக்கு ஆவிக்குரிய ஜீவனை “நான் சிலுவையில் நிறைவேற்றப்போவதன்மூலம் கொண்டுவருவேன்” எனக் கூறியிருந்தார்.

சிலுவைக்குப் போவதன்மூலம் அந்தகாரத்திலும் மரண இருளிலும் உட்கார்ந்திருக்கிறவர்களுக்கு வெளிச்சத்தைக் கொண்டுவருவேன் என்று கூறினார். சிலுவை இல்லாமல் மனுஷகுலம் சுயாதீனத்தை ஒருபொழுதும் பெறமுடியாது.

முற்றுமுழுவதும் பாவத்திலிருக்கிற இரட்சிக்கப்படாத மனுஷர்களையும் விசுவாசிகளையும் இந்த வார்த்தை இழுக்கின்றது; ஏனென்றால், பாவியான மனுஷனுக்கு இரட்சிப்பு சிலுவையில் நிறைவேற்றப்பட்டிருக்கிறபடியினால் (யோவா. 19:30) , அவன் இரட்சிப்பைப் பெறுவதற்குச் சிலுவைக்குப் போகவேண்டும்; அப்படியே கிறிஸ்து சிலுவையிலேயே சாத்தானை முற்றுமுழுவதும் தோற்கடித்து, வெற்றிசிறந்திருக்கிறபடியினால் (கொலோ. 2:14-15) , ஜெயங்கொண்ட கிறிஸ்தவ வாழ்க்கையைப் பெறுவதற்கும், அதனை அனுபவிப்பதற்கும் விசுவாசி சிலுவைக்கே செல்லவேண்டும் (கொலோ. 2:6-7; எபி. 3:14) ; இதன் பொருள், கிறிஸ்துவின் சிலுவையை விசுவாசித்து, அந்த விசுவாசத்தில் நிலைத்திருக்கவேண்டும் என்பதேயாகும் (லூக். 9:23; யோவா. 15:5) .

18/09/2025

The Crossway Ministries
அநுதினமும் சிலுவையைச் சுமப்போம்

செப்டம்பர் 17

நான் அவைகளுக்கு நித்தியஜீவனைக் கொடுக்கிறேன்; அவைகள் ஒருக்காலும் கெட்டுப்போவதில்லை, ஒருவனும் அவைகளை என் கையிலிருந்து பறித்துக்கொள்வதுமில்லை. அவைகளை எனக்குத் தந்த என் பிதா எல்லாரிலும் பெரியவராயிருக்கிறார்; அவைகளை என் பிதாவின் கையிலிருந்து பறித்துக்கொள்ள ஒருவனாலும் கூடாது (யோவா. 10:28-29).

“அவைகள் ஒருக்காலும் கெட்டுப்போவதில்லை”

ஒரு குழந்தைப் பராமரிப்பு நிலையத்தில் நடந்த ஒரு சம்பவத்தை உதாரணமாக எடுத்து, இந்த வேதவாக்கியத்தைத் தெளிவுபடுத்துவது எனக்குப் பொருத்தமாயிருக்கிறது.

ஒரு குழந்தை நாள் முழுவதும் குழந்தைப் பராமரிப்பு நிலையத்தில் விடப்பட்டிருந்தது. அந்த நாள் முடிவில் அந்தக் குழந்தையின் தகப்பன் பிள்ளையைக் கொண்டுபோக வந்திருந்தான். அந்தக் குழந்தை இவ்வளவு நேரமும் விளையாடிக்கொண்டிருந்த விளையாட்டுப் பொருட்கள் எல்லாவற்றையும் அப்படியேவிட்டு விட்டுத் தன் தகப்பனிடம் ஓடினாள். அந்தக் குழந்தையின் பராமரிப்பு நிலையத்தின் ஆசிரியை விளையாட்டுப் பொருட்களை அவைகள் ஆரம்பத்திலிருந்த மாதிரி அவற்றை ஒழுங்குபடுத்தி வைக்கவேண்டும் என்று அந்தக் குழந்தைக்குக் கட்டளையிட்டாள். அந்தக் குழந்தை சத்தமிட்டு அப்பா, நான் வருகிறேன், நீங்கள் என்னை விட்டுவிட்டுப் போகவேண்டாம் என்று சொன்னாள்; அவளின் தகப்பன் மகளை நோக்கி: உன்னை விட்டுவிட்டுப்போக நான் இங்கு வரவில்லை என்று கரிசனையோடு சொன்னான்.

அதேபோலவே, பரமபிதா நமக்கு இரட்சிப்பைத் தந்தார். ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து நம்மை விட்டுவிட்டுப்போக வரவில்லை (எபி. 13:5; மத். 28:20) . அவர் தன்னுடைய அலுவலைச் செய்துமுடிப்பார்; அவர் நம்மைத் தயார்பண்ணுவார்; நாம் செய்ய வேண்டியது, நாம் ஏற்படுத்திய குப்பையைச் சுத்தம் செய்யவேண்டியதே. இதுபற்றி IIநாளாகமம் 7:14 ல் “என் நாமம் தரிக்கப்பட்ட என் ஜனங்கள் தங்களைத் தாழ்த்தி, ஜெபம்பண்ணி, என் முகத்தைத்தேடி, தங்கள் பொல்லாத வழிகளைவிட்டுத் திரும்பினால், அப்பொழுது பரலோகத்திலிருக்கிற நான் கேட்டு, அவர்கள் பாவத்தை மன்னித்து, அவர்கள் தேசத்துக்கு க்ஷேமத்தைக் கொடுப்பேன் (குணமாக்குவேன்) ” எனச் சொல்லப்பட்டிருக்கிறது. இதுவே ஆவிக்குரிய நோய்களுக்குத் தேவனுடைய மருந்துச் சீட்டாகும். பரிசுத்த ஆவியானவர் நம்மைத் தூக்கிக்கொண்டு செல்வதற்குத் தயாராயிருக்கிறார்.

அவர் நம்மைச் சிட்சித்துக் (நீதி. 3:11-12; எபி. 12:7-11) குப்பையை அகற்றுமாறு வேண்டிக்கொள்வார்; நாம் குப்பையை அகற்றமுடியாது என்று அடம்பிடித்தால், அவருடைய இரக்கம் சிட்சிப்பைத் தொடர்ந்து செய்யும்; அதற்கும் செவிகொடாவிட்டால், நாமே அவருடைய கையைவிட்டு விலகும் முடிவை எடுக்கிறோம் (நீதி. 29:1) .

18/09/2025

SIMCHAT TORAH BEIT MIDRASH

18/09/2025

The Crossway Ministries
அநுதினமும் சிலுவையைச் சுமப்போம்

செப்டம்பர் 18

நான் பூமியிலிருந்து உயர்த்தப்பட்டிருக்கும்போது, எல்லாரையும் என்னிடத்தில் இழுத்துக்கொள்ளுவேன் என்றார் (யோவா. 12:32).

“ஜனங்களைக் கிறிஸ்துவிடம் இழுத்துக்கொள்வது எப்படி?”

கர்த்தராகிய இயேசுகிறிஸ்து யோவான் 8:32 ல் “சத்தியத்தையும் (அந்த சத்தியத்தை என்றே கிரேக்கமொழியில் சொல்லப்பட்டிருக்கிறது) அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும்” எனக் கூறியிருந்தார். அவிசுவாசியினுடைய பொதுவான பிரச்னை அவன் பொய்யை விசுவாசிக்கிறான். அப்படியே அநேகமான கிறிஸ்தவர்கள் தாராளமாகப் பொய்யை விசுவாசிக்கிறார்கள்; இதுவே தற்போதைய பெரும் பிரச்னையாயிருக்கிறது; அப்படியாயின் சத்தியம் என்றால் என்ன? சுருக்கமாக, இயேசுகிறிஸ்துவும், அவர் சிலுவையில் நிறைவேற்றியதுமே சத்தியம் எனப்படும். இதனையே ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து “நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்” என்று யோவான் 14:6 ல் தெளிவாக, எந்தவித சந்தேகத்திற்கிடமுமின்றி சொல்லியிருக்கிறார். அவர் பின்பு யோவான் 12:32 ல் “நான் பூமியிலிருந்து உயர்த்தப்பட்டிருக்கும்போது, எல்லாரையும் என்னிடத்தில் இழுத்துக்கொள்ளுவேன்.....” எனக் கூறியிருப்பதில் நாம் மிகுந்த கவனஞ்செலுத்தவேண்டும்; “உயர்த்தப்பட்டிருக்கும்போது” என்பது அவருடைய மரணத்தைக் குறிப்பிடுகிறது. அவர் சிலுவையில் மனுஷகுலத்தின் பாவத்துக்காக மரித்தார்; ஒரு மனுஷனை அந்த ஒரு வழியின்மூலமே கிறிஸ்துவிடத்திற்கும், அவர் சிலுவையில் நிறைவேற்றியதற்கும் இழுத்து, அதன்மூலமாக வெற்றியைப் பெறுவதற்கு வழிநடத்தமுடியும்.

சிலுவையிலறையப்பட்ட இயேசுகிறிஸ்துவைத் தவிர்த்து, வேறெந்த வழிமூலமும் மனுஷனை இழுக்க முயற்சிப்போமானால், நாம் கர்த்தரிடத்தில் அல்ல, அந்த மனுஷனை வேறொன்றுக்கே இழுக்கிறோம்; அதற்கு இயேசு என்று பெயர் சூட்டப்பட்டிருந்தாலும், அதற்கும் சிலுவையில் அறையப்பட்ட இயேசுகிறிஸ்துவுக்கும் ஒரு தொடர்பும் இல்லை (Iகொரி. 1:23, 2:2) ; அது வேறொரு இயேசுவே (IIகொரி. 11:4) ; இதனையே அநேகமான கிறிஸ்தவ சபைகள் பின்பற்றுகின்றன. தற்போதைய கிறிஸ்தவ சபைகள், கிறிஸ்தவ மார்க்கங்களுக்கும், மனுஷரைப் போதகர்களிடத்திற்கும், ஐசுவரியத்திற்கும், இன்னும் அநேக மனுஷதிட்டங்களுக்குமே இழுத்துச்செல்கின்றன; ஆனால், மனுஷரைச் சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவிடம் இழுத்துச்செல்வதில்லை; இதற்கு அறியாமை அல்லது அவிசுவாசமே முக்கியகாரணமாயிருக்கிறது. நாம் எப்பொழுதும் சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவையே தேடவேண்டும் (மத். 28:5; மாற் 16:6; லூக். 9:23).

16/09/2025

The Crossway Ministries
அநுதினமும் சிலுவையைச் சுமப்போம்

செப்டம்பர் 16

சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும் என்றார் (யோவா. 8:32).

“சத்தியம் உங்களை விடுதலையாக்கும்”

நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான் என ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து யோவான் 14:6 ல் கூறியிருக்கிறார். யார் இந்த இயேசுகிறிஸ்து? அவர் தனக்குச் செய்தது என்ன என்பதனை ஒருவன் அறிவானாகில் அவன் இயேசுகிறிஸ்துவினூடாகப் பிதாவினிடத்திற்குச் சேர்வதற்கேற்ற பாத்திரமாக இருக்கிறான். சத்தியம் எனப்படுவது கிறிஸ்துவையும், அவர் சிலுவையில் நிறைவேற்றியதையும், அவருடைய உயிர்த்தெழுதலையும் பற்றியதேயாகும். இந்த சத்தியம் ஒரு விசுவாசி இரட்சிக்கப்படுவதற்குமட்டுமல்ல, வெற்றிகரமான கிறிஸ்தவ வாழ்க்கைக்கும் நிரந்தர ஆதாரமாயிருக்கிறது. அவனுடைய நாளாந்த கிறிஸ்தவ வாழ்க்கையில் அவனுக்கு விரோதியாயிருக்கிற மாம்சம், உல கம், பிசாசு ஆகிய மூன்றையும் ஜெயங்கொள்வதற்கு சத்தியம் ஒன்றே தேவையாயிருக்கிறது.

அதுமட்டுமல்ல, அவன் பூரணப்படுவதற்கும் விடுதலையைப் பெறுவதற்கும் சத்தியத்தை அறிந்தாகவேண்டும்; பலர் சத்தியத்தை அறியாமல் அல்லது அறியவிருப்பமில்லாமல் இருக்கிறார்கள்; சத்தியத்தை ஒருவன் அறியவேண்டுமாயின், அவன் சுயநீதியை நிராகரித்து, தேவநீதியை நாடவேண்டும். இயேசுகிறிஸ்துவையும், அவர் சிலுவையில் நிறைவேற்றியதையும் அறிவதற்குத் தேவனால் ஏற்படுத்தப்பட்ட வழியைப்பற்றி ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து “...... ஒருவன் என் பின்னே வர விரும்பினால் அவன் தன்னைத்தான் வெறுத்து, தன் சிலுவையை அநுதினமும் எடுத்துக்கொண்டு, என்னைப் பின்பற்றக்கடவன்” (லூக். 9:23) எனக் கூறியிருக்கிறார். இதுவே சத்தியத்தை அறிவதற்குத் தேவனுடைய ஏற்பாடாயிருக்கிறது. அதே சமயம் “தன் சிலுவையை எடுத்துக்கொண்டு, என்னைப் பின்பற்றாதவன் எனக்குப் பாத்திரன் அல்ல; தன் ஜீவனைக் காக்கிறவன் அதை இழந்துபோவான்; என்னிமித்தம் தன் ஜீவனை இழந்துபோகிறவன் அதைக் காப்பான்” (மத். 10:38-39) என்றும் ஆண்டவர் வலியுறுத்திக் கூறியுள்ளார். ஒரு விசுவாசி சத்தியத்தை அறிந்தால் அதை அவன் விசுவாசிக்கவேண்டும்.

அந்தச் சத்தியம் ஒரு விசுவாசி இயேசுகிறிஸ்துவைத் தன் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்ளும்போது அவன் கிறிஸ்துவுக்குள் இருப்பதனால், அவன் அவரோடுகூடச் சிலுவையில் அறையப்பட்டு, அவர் மரிக்கும்போது தானும் அவரோடுகூட மரித்து, அவர் அடக்கம்பண்ணப்படும்போது தானும் அவரோடுகூட அடக்கம்பண்ணப்பட்டு, அவர் உயிர்ப்பிக்கப்பட்டபோது அவரோடுகூடத் தானும் உயிர்த்தெழுந்து, புதிதான ஜீவனுள்ளவனாக அவரில் பிழைத்திருக்கிறேனென விசுவாசிக்கவேண்டும் (ரோம. 6:3-5; கலா. 2:20) ; அதுமட்டுமல்ல, அவரோடுகூடப் பிதாவினுடைய வலதுபாரிசத்தில் தானும் (ஆவியில்) உட்கார்ந்திருப்பதாக விசுவாசிக்கவேண்டும் (எபி. 1:3; எபேசி. 2:7) .

மனுஷகுமாரனாகிய இயேசுகிறிஸ்து, சாத்தானையும் அவனுடைய கூட்டத்தையும் சிலுவையில் நம்சார்பில் முற்றுமுழுவதுமாகத் தோற்கடித்திருக்கிறபடியினால் (கொலோ. 2:14-15) , அதனை விசுவாசிக்கும் கிறிஸ்தவனும், தானும் சாத்தானையும் அவனுடைய கூட்டத்தையும் தோற்கடித்ததாகவே விசுவாசிக்கவேண்டும்; ஒரு விசுவாசி தன்னுடைய கடந்தகால நிகழ்கால வருங்காலப் பாவங்கள் யாவற்றிற்கும் கிறிஸ்துவினால் சிலுவையில் பிராயச்சித்தம் காணப்பட்டிருக்கிறபடியினால் (Iயோவா. 1:7) , எந்தப் பாவச்செயலையும் (மன்னிப்புக் கேட்டிருந்தால் [Iயோவா. 1:9] ) அவனுக்கு எதிராக யாரும் சுமத்தமுடியாது; தேவன் அவனை நியாயப்பிரமாணத்தை நிறைவேற்றினவனாகப் பார்ப்பதுமட்டுமல்ல, ஒருபொழுதும் நியாயப்பிரமாணத்தை மீறாதவனாகவே பார்க்கிறார். அந்த விசுவாசி “கிறிஸ்துவுக்குள்” இருப்பதனால் ஏற்படும் இந்தப் பாக்கியத்தை யார் உதறித்தள்ளுவான். அவன் கிறிஸ்துவையும், அவர் சிலுவையில் நிறைவேற்றியதையும் தொடர்ச்சியாக விசுவாசிப்பானாகில் அவன் “கிறிஸ்துவுக்குள்” இருக்கிறான்.

கிறிஸ்து நியாயப்பிரமாணத்தை முற்றுமுழுவதுமாக நிறைவேற்றியிருக்கிறபடியினால் அவருக்குள் இருக்கும் விசுவாசியும் நியாயப்பிரமாணத்தை முற்றுமுழுவதுமாக நிறைவேற்றியிருக்கிறான் (கலா. 3:13-14) ; இயேசுவை விசுவாசிக்கிறவன் உலகத்தை ஜெயிக்கிறான் (Iயோவா. 5:5; கலா. 6:14) ; கிறிஸ்துவினுடையவன் தன் மாம்சத்தையும் அதின் ஆசை இச்சைகளையும் சிலுவையில் அறைந்திருக்கிறான் (கலா. 5:24) ; இவற்றை விளங்கி, அதனை விசுவாசித்து அப்படியே அநுதினமும் செயற்படவேண்டும் என்பதனையே லூக்கா 9:23 உறுதிப்படுத்துகிறது. இதுவே சத்தியம்; இப்படியிருக்க, நாம் கிறிஸ்துவுக்குள் இருப்பதனால், பரிசுத்த ஆவியானவர் வல்லமையோடு நம்மில் செயற்பட்டு, கிருபையையும் சமாதானத்தையும் பெருகப்பண்ணுவார் (IIபேது. 1:2) ; அதேநேரம் நமக்கு எதிராயிருக்கும் சகலத்திலிருந்தும் விடுதலை பெறமுடியும் என யோவான் 8:32 உறுதிப்படுத்துகிறது.

Address

No, 947, 5th Street Periya Kovilambakkam
Chennai
600129

Alerts

Be the first to know and let us send you an email when JOY TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to JOY TV:

Share

Category

Our Story

JOY TV is a local Christian channel which broadcasts Christian Songs and Messages through sermons, choreography, talk shows, and gospel shows. This is a 24 x 7x 365 channel which is available in TCCL network. TCCL network reaches over six lakh homes daily, is also viewed in other places such as Vellore, Thiruvannamalai, Coimbatore and Nagercoil by the digital set top boxes. The programmes that are aired in Chennai can be viewed around the world through WEB TV (www.joytvchennai.com) and apps (JOYTV CHENNAI)