JOY TV

JOY TV Joy TV is an ingenious endeavor designed to reach the young people and also to get the people who ar

JOY TV is a local Christian channel which broadcasts Christian Songs and Messages through sermons,
choreography, talk shows, and gospel shows. This is a 24 x 7x 365 channel which is available in TCCL
network. TCCL network reaches over six lakh homes daily, is also viewed in other places such as Vellore,
Thiruvannamalai, Coimbatore and Nagercoil by the digital set top boxes. The programmes that are

aired in Chennai can be viewed around the world through WEB TV
(www.joytvchennai.com) and apps (JOYTV CHENNAI)

16/10/2025

SIMCHAT TORAH BEIT MIDRASH

12/10/2025

The Crossway Ministries
அநுதினமும் சிலுவையைச் சுமப்போம்

அக்டோபர் 12

தம்முடைய குமாரன் அநேக சகோதரருக்குள்ளே முதற்பேறானவராயிருக்கும்பொருட்டு, தேவன் எவர்களை முன்னறிந்தாரோ அவர்களைத் தமது குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாயிருப்பதற்கு முன்குறித்திருக்கிறார் (ரோம. 8:29).

“முதற்பேறானவர்”

இயேசுகிறிஸ்து எரிநரகத்தில் மறுபிறப்பைப் பெற்றார் என்ற விஷமத்தனமான உபதேசத்திற்கு ரோமர் 8:29ஐ விசுவாச மார்க்கத்தினர் உபயோகிக்கின்றனர். முதற்பேறானவர் என்ற சொற்றொடர் கிரேக்கபாஷையில் “Prototokos” என்று அழைக்கப்படுகிறது. இதன் பொருள், “அந்த முதன்மையான” “அந்த ஆரம்பம்” “அந்தப் பிரதான” “அந்த மிகச் சிறந்த” என்று மொழிபெயர்க்கலாம்; அப்படியானால், இதன் பொருள், இயேசு மறுபிறப்புப்பெற்றார் என்பதல்ல, எல்லாப் பாவிகளும் மறுபிறப்புப் பெறுவது அவராலே சாத்தியமானது என்பதே நிஜமானது.

பவுல் அப்போஸ்தலர் இதுபற்றி கொலோசெயர் 1:15ல் “அவர் அதரிசனமான தேவனுடைய தற்சுரூபமும், சர்வ சிருஷ்டிக்கும் முந்தின பேறுமானவர்” எனச் சொல்லியிருக்கிறார். இதன் பொருள், மகிமையான கர்த்தர் ஒரு சிருஷ்டி அல்ல, எல்லாவற்றையும் சிருஷ்டித்தவர் அவரே என்று சொல்லப்பட்டிருக்கிறது.

மறுபடியும் பவுல் அப்போஸ்தலர் கொலோசெயர் 1:18ல் பிரஸ்தாபிக்கையில்: “அவரே சபையாகிய சரீரத்துக்குத் தலையானவர்; எல்லாவற்றிலும் முதல்வராயிருக்கும்படி, அவரே ஆதியும் மரித்தோரிலிருந்து எழுந்த முதற்பேறுமானவர்” எனக் கூறியிருப்பதை நாம் கவனத்துக்கு எடுத்துக்கொள்ளவேண்டும். இதன்பொருள் இயேசு பாவியாயிருந்து மறுபிறப்புப்பெற்றவர் அல்ல, அது அவருக்குத் தேவையுமில்லை; அப்படிச் சிலர் உபதேசிக்கிறார்கள்; இப்படியிருக்க, அவர்மூலமாகவே உயிர்த்தெழுதல் சாத்தியமானது; அவரே இரட்சிப்பின் திட்டத்திற்குத் தகப்பனாயிருக்கிறார். அதற்குத் தேவையான விலையைச் சிலுவையில் முற்றுமுழுவதும் அவரே செலுத்தினார்; இதனிமித்தமே இரட்சிப்பு சாத்தியமானது. ஒருபொழுதும் மனிதர் முன்குறிக்கப்படுவதில்லை; அவருடைய இரட்சிப்பின் திட்டமே முன்குறிக்கப்பட்டிருக்கிறது. தாகமாய் இருக்கிறவன் எவனோ, அவன் இரட்சிப்பின் திட்டத்தை விசுவாசத்தின்மூலம் பெற்றுக்கொள்ளலாம் (யோவா. 3:16).

“Prototokos” என்ற கிரேக்கச் சொல்லுக்கு ஆகக் கிட்டிய ஆங்கிலச் சொல் “First Born” என்றே வேத அறிஞர்கள் கருதுகின்றனர்; அப்படியானால், முதற்பேறு என்ற சொல் போதிய விளக்கத்தைக் கொடுப்பதாயில்லை.

11/10/2025

The Crossway Ministries
அநுதினமும் சிலுவையைச் சுமப்போம்

அக்டோபர் 11

அந்தப்படியே ஆவியானவரும் நமது பலவீனங்களில் நமக்கு உதவிசெய்கிறார். நாம் ஏற்றபடி வேண்டிக்கொள்ளவேண்டியதின்னதென்று அறியாமலிருக்கிறபடியால், ஆவியானவர்தாமே வாக்குக்கடங்காத பெருமூச்சுகளோடு நமக்காக வேண்டுதல்செய்கிறார். ஆவியானவர் தேவனுடைய சித்தத்தின்படியே பரிசுத்தவான்களுக்காக வேண்டுதல் செய்கிறபடியால், இருதயங்களை ஆராய்ந்துபார்க்கிறவர் ஆவியின் சிந்தை இன்னதென்று அறிவார் (ரோம. 8:26-27).

“ஆவியானவர் பலவீனங்களில் உதவிசெய்கிறார்”
பரிசுத்த ஆவியானவர் நமக்காக வேண்டுதல் செய்வதும், கிறிஸ்து நமக்காக வேண்டுதல் செய்வதும் ஒன்றல்ல. கிறிஸ்து நம்முடைய பாவங்களுக்காக வேண்டுதல் செய்கிறார் (எபி. 7:25); கிறிஸ்துவின் வேண்டுதல் இல்லாவிட்டால், ஒரு நாளுக்காகுதல் நாம் நிலைத்திருக்கமுடியாது என்பது எவ்வளவு உண்மையாயிருக்கிறது.

பரிசுத்த ஆவியானவரினால் மேற்கொள்ளப்படும் வேண்டுதல், நாம் பரிசுத்தமான வாழ்க்கையை வாழவேண்டும் என்பதனையே நோக்கமாகக் கொண்டது; மேலும் இதற்குள் பரிசுத்த ஆவியானவர் செயற்படும் முறையும் அடங்கியிருக்கிறது. நாம் தவறைச் செய்து தோல்வியடைந்தால், கிறிஸ்து நமக்காக வேண்டுதல்செய்கிறார்; அதேநேரம் பரிசுத்த ஆவியானவர் நாம் ஏன் தவறினோம் என்பதனைச் சுட்டிக்காட்ட விருப்பமாக இருக்கிறார். அந்தத் தவறு எந்தக் காலத்திலும் தவறான இடத்தில் விசுவாசத்தை வைத்ததனால் ஏற்பட்டதேயாகும். அடிக்கடி நம்முடைய ஆண்டவர் தன்னுடைய சீஷர்களை நோக்கி: “அற்ப விசுவாசிகளே” என்று சொல்வதன்மூலம் இது நிரூபிக்கப்படுகிறது; சிலுவையைப்பற்றிய தவறான வியாக்கியானம் அற்ப விசுவாசத்தில் முடிவடைகிறது.

“வாக்குக்கடங்காத பெருமூச்சுகளோடு” என்ற சொற்றொடர்மூலம் பரிசுத்த ஆவியை அல்ல, விசுவாசியைப்பற்றியே குறிப்பிடப்பட்டிருக்கிறது; அதெப்படியெனில், இருதயத்திலிருப்பதைத் தகுந்த சொற்களால் விசுவாசி ஒப்புவிக்க முடியாமலிருப்பதைப்பற்றியே சொல்லப்படுகிறது. ஆவியினுடைய நோக்கம் தேவனுடைய சித்தத்தை நிறைவேற்றுவதேதவிர, நம்முடைய சித்தத்தையல்ல. சிலர் பரிசுத்த ஆவியானவர் மணியடித்தவுடன் நம்மிடம் வருவார் என்ற சிந்தனையை உடையவர்களாயிருக்கிறார்கள்; அத்தகைய அனுமானம் பாரிய தவறாயிருக்கிறது. பரிசுத்த ஆவியானவருடைய உதவியைப் பெறுவதென்பது தேவனுடைய உதவியைப் பெறுவதாகும்; ஏனென்றால், பரிசுத்த ஆவியானவர் தேவன் என்பதனை நாம் மறந்துவிடக்கூடாது. இதன் அர்த்தம் நாம் பெறும் உதவி பரிபூரணமானதும், தாராளமாகப் போதுமானதுமாயிருக்கிறது. நமக்கு எது தேவை என்பதனையும், அது ஏன் நமக்குத் தேவை என்பதனையும், எவ்வளவு தேவை என்பதனையும் பரிசுத்த ஆவியானவரே அறிவார்.

“நமது பெலவீனங்களில்” என்பதன் பொருள், சரீர பெலவீனத்தையும், மனதின் பெலவீனத்தையும், அதின் குறைபாடுகளையும், நோய்களையும், வருத்தங்களையும்பற்றிக் குறிப்பிடுகிறது; விசுவாசி அடிக்கடி இதனைச் சந்திக்கவேண்டியதாக இருக்கிறது; இதற்காக நாம் ஜெபம்பண்ணவேண்டியதாயிருக்கிறது. ஆனால், எப்படி ஜெபம்பண்ணுவது என்பதனை நாம் அறியாமலிருக்கிறோம். நம்முடைய விசுவாசம் இயேசுகிறிஸ்துவிலும், அவர் சிலுவையில் நிறைவேற்றியதிலும் நிலைத்திருக்கும்பொழுது, பரிசுத்த ஆவியானவருக்குச் சட்டபூர்வமான அதிகாரம் கொடுக்கப்படுகிறது, அப்பொழுது அவர் வல்லமையாக நம்மில் செயற்பட்டு நம்முடைய பெலவீனங்களை அவர் சரிப்படுத்துவார்.

நாம் தொடர்ந்து வலியுறுத்துவது என்னவென்றால், நம்முடைய விசுவாசம் பொருத்தமான இடத்தில் (Iகொரி. 2:2) வைக்கப்படாததே, பரிசுத்த ஆவியானவருடைய உதவி நமக்கு மிகவும் குறைவாகக் கிடைப்பதற்கும் அல்லது முற்றிலும் கிடைக்காமற்போவதற்குமுரிய முக்கியகாரணமாகும்; தேவன் நம்மைச் சிட்சிப்பதற்கும், நம்முடைய விசுவாசம் திசைதிருப்பப்பட்டதே காரணமாகிறது (லூக். 22:31-32). நம்முடைய விசுவாசத்தை இயேசுகிறிஸ்துவிலும், அவர் சிலுவையில் நிறைவேற்றியதிலும் நங்கூரமிடும்பொழுது, பரிசுத்த ஆவியானவருடைய வல்லமையையும் (Iகொரி. 1:18), வேண்டுதலையும் (ரோம. 8:26), பூரணஉதவியையும் (யோவா. 16:13) நாம் பெறமுடியும்; அப்பொழுது நம்முடைய வாழ்க்கை 100 வீதம் தேவபலத்தில் செயற்படும்; இல்லையேல் நாம் மாம்சத்தில் செயற்படுவதைத்தவிர வேறுவழியில்லை (ரோம. 8:7-8).

11/10/2025

he Crossway Ministries
அநுதினமும் சிலுவையைச் சுமப்போம்

அக்டோபர் 10

கிறிஸ்து இயேசுவினாலே ஜீவனுடைய ஆவியின் பிரமாணம் என்னைப் பாவம் மரணம் என்பவைகளின் பிரமாணத்தினின்று விடுதலையாக்கிற்றே (ரோம. 8:2).

“கிறிஸ்து இயேசுவினாலே ஜீவனுடைய ஆவியின் பிரமாணம்”

தேவபிரமாணங்களில் தலைசிறந்த பிரமாணமாக “கிறிஸ்துஇயேசுவினாலே ஜீவனுடைய ஆவியின் பிரமாணம்” கருதப்படுகிறது; சகல வேதவாக்கியங்களிலும் ரோமர் 8:2 மிகமுக்கியமான வேதவாக்கியமாக வேத அறிஞர்களினால் அடையாளங்காணப்பட்டிருக்கிறது. பவுல் அப்போஸ்தலரின் சகல உபதேசங்களும் இந்த வேதவாக்கியத்தில் அடங்குகிறது. பரிசுத்த ஆவியானவர் எந்த அடிப்படையில் செயற்படுகிறார் என்ற விபரம் இந்தப் பிரமாணத்தில் சுருக்கமாகவும் காத்திரமாகவும் கொடுக்கப்பட்டிருக்கிறது; இதனைவிட முக்கியமானதென ஒன்றும் இருக்கமுடியாது.

ஆயினும் வேதனைக்குரிய விஷயம் என்னவென்றால், அநேகமான கிறிஸ்தவர்கள் தங்களுடைய சிந்தனைக்கேற்பப் பரிசுத்த ஆவியானவர் செயற்படுகிறார் என நிஜமாகவே நம்புகிறார்கள்; ஆனால், துரதிஷ்டவசமாக யார் இந்தப் பரிசுத்த ஆவியானவர்? அவர் என்ன செய்கிறார்? எந்த அடிப்படையில் செயற்படுகிறார்? அவர் எப்படிச் செயற்படுகிறார்? என்பதுபற்றி எந்தவிதமான அறிவும் இல்லாமல், பரிசுத்த ஆவியானவர் “மணி அடித்தவுடன் ஓடிவருகிற ஒரு சிப்பந்தியாக” (Bell Boy) அவரை அடையாளங்கண்டு, அப்படியே செயற்படுகிறார்கள். ஆம், பரிசுத்த ஆவியானவர் சகல உதவிகளையும் ஒரு விசுவாசிக்குக் கொடுப்பதற்குத் தயாராயிருக்கிறார்; ஆனால், தேவனால் நியமிக்கப்பட்ட வழிமுறையை அறிந்து, அந்த எல்லைக்குள் செயற்படும்பொழுதே பரிசுத்த ஆவியானவருடைய உதவி சாத்தியமாகிறது.

இப்படியிருக்க, “கிறிஸ்து இயேசுவினாலே ஜீவனுடைய ஆவியின் பிரமாணம்” தேவனால் உலகத்தோற்றத்திற்கு முன்னமே ஸ்தாபிக்கப்பட்டது என்பதனை (Iபேது. 1:18-20) முதற்கண் நாம் அறிந்திருக்கவேண்டும். இது ஒரு தேவபிரமாணமாக இருக்கிறபடியினால், பரிசுத்த ஆவியானவர் அந்தப் பிரமாணத்தின் எல்லைக்குள்ளேயே செயற்படுகிறார். அதற்கு அப்பால் அவர் செயற்படுவதில்லை என்பதனை நாம் தெளிவாக அறிந்திருக்கவேண்டும். பரிசுத்த ஆவியானவரே நம்முடைய இருதயத்தில் செயற்பட்டு, நாம் எப்படி இருக்கவேண்டும் என்பதனைத் தீர்மானிக்கிறார். இந்தப் பிரமாணத்திற்கு அப்பால் நாம் செயற்பட்டு, ஆவிக்குரிய கனியையும், கிறிஸ்துவின் சாயலையும், பரிசுத்தத்தையும், ஜெயங்கொண்ட கிறிஸ்தவ வாழ்க்கையையும் விருத்திசெய்ய முயற்சித்தால், நிச்சயமாகத் தோல்வியைச் சந்திக்கவேண்டிவரும். பரிசுத்த ஆவியானவர் ஒருபொழுதும் தேவனால் நியமிக்கப்பட்ட வழியைவிட்டு விலகமாட்டார் என்பதனை நாம் தெளிவாக அறிந்திருக்கவேண்டும். அவரை ஜீவனுடைய ஆவி என்றும் அழைக்கப்படுகிறது; ஏனென்றால், கிறிஸ்து சிலுவையில் நிறைவேற்றியதை அவரே மேற்பார்வை செய்து, அந்த ஜீவனை நமக்குக் கொடுக்கிறார் (யோவா. 16:13-14); வேறெந்த வழியினாலும் அதனைப் பெறமுடியாது.

ஜீவன் என்பதன் பொருள், கிறிஸ்து சிலுவையில் நிறைவேற்றிய சகலத்தையும் குறிப்பிடுகிறது; அதெப்படியெனில், மனுஷ வீழ்ச்சியின்போது மனிதன் இழந்த சகலத்தையும் பற்றியே இங்கு சொல்லப்படுகிறது; அவை யாவும் சிலுவையில் பொருத்தமான முறையில் கிறிஸ்துவினால் கையாளப்பட்டது (கொலோ. 2:14-15); இதனையே ஜீவன் என்று சொல்லப்படுகிறது; ஆயினும் கிறிஸ்து சிலுவையில் நிறைவேற்றிப் பெற்றுக்கொண்ட சகலத்தையும் நாம் இப்பொழுது அனுபவிக்கமுடியாமல் இருக்கிறோம். கிறிஸ்து பெரும் விலையை நமக்காகக் கொடுத்திருக்கிறார்; ஆயினும், தற்பொழுது நாம் முதற்கனியையே அனுபவிக்கக்கூடியதாக இருக்கிறது (ரோம. 8:23); மிகுதியானது உயிர்த்தெழுதலின் பின்பே நமக்குக் தரப்படும் (Iகொரி. 15:51-54). முதற்கனி தாராளமாகத் தற்போதைய தேவைகளைப் பெற்றுக்கொள்வதற்குப் போதுமானதாயிருக்கிறது; ஆவியானவர் சிலுவை மூலமாகவே ஜீவனை நமக்குத் தருகிறர் (யோவா. 7:37-39).

“கிறிஸ்து இயேசுவில்” “கிறிஸ்து இயேசுவினாலே” “கிறிஸ்து இயேசுவுக்குள்” என்ற சொற்றொடர்கள் ஒரே காரியத்தையே பேசுகிறது என்பதனை நாம் அறிந்திருக்கவேண்டும். இந்தப் பிரமாணம் பரிசுத்த ஆவியானவர் எப்படிச் செயற்படுகிறார் என்பதனை விபரமாகச் சொல்லுகிறது. பவுல் அப்போஸ்தலர் தான் எழுதின 14 நிருபங்களிலும் இதுபற்றிப் பல்வேறுவிதமாகக் “கிறிஸ்துவுக்குள்” “அவரில்” “கிறிஸ்து இயேசுவில்” “அவருக்குள்” என 170 தரம் குறிப்பிட்டிருக்கிறார். இவை யாவும் நம்சார்பில் கிறிஸ்து சிலுவையில் நிறைவேற்றியதைப் பிரகடனப்படுத்துகிறது; கிறிஸ்து சிலுவையில் நிறைவேற்றிய நன்மைகளைப் பெறவேண்டுமாயின், நம்முடைய விசுவாசம் எப்பொழுதும் கிறிஸ்துவிலும், அவர் சிலுவையில் நிறைவேற்றியதிலும் வெளிப்படுத்தவேண்டுமென்பதே பரிசுத்த ஆவியானவருடைய வேண்டுகோளாயிருக்கிறது; அந்த அடிப்படையிலேயே பரிசுத்த ஆவியானவர் நம்மில் செயற்படுகிறார்; இதனைத் தவிர்க்கமுடியாது; அந்த அடிப்படையில் நாம் செயற்படுவோமாயின், கிறிஸ்து சிலுவையில் நிறைவேற்றிய யாவும் நம்முடையதாகிறது; பரிசுத்த ஆவியானவர் அதனை உத்தரவாதம் செய்கிறார்.

“கிறிஸ்து இயேசுவினாலே ஜீவனுடைய ஆவியின் பிரமாணம்” ஒன்றே “பாவம் மரணம்” என்ற பிரமாணத்தைத் தோற்கடிக்கிறது; வேறெந்த வழியினாலும் “பாவம் மரணம்” என்ற பிரமாணத்தைத் தோற்கடிக்கமுடியாது. பவுல் அப்போஸ்தலர்மூலம் பரிசுத்த ஆவியானவர் சொல்வதைப் பொருத்தமான முறையில் நாம் பின்பற்றுவோமாயின், பாவம் நம்மை மேற்கொள்ளமாட்டாது என்று வாக்குத்தத்தமாக ரோமர் 6:14ல் உறுதியளிக்கப்பட்டிருக்கிறது. ஒரு கிறிஸ்தவனுடைய வாழ்க்கையில் மாம்சத்தின் கிரியைகள் பரவலாக இருந்தால், அதுவொன்றே அவன் கிறிஸ்து இயேசுவினாலே ஜீவனுடைய ஆவியின் பிரமாணத்தைப் பின்பற்றாமல், பாவம் மரணம் என்ற பிரமாணத்தைப் பின்பற்றுகிறான் என்பதற்கு அடையாளமாக இருக்கிறது.

07/10/2025

The Crossway Ministries
அநுதினமும் சிலுவையைச் சுமப்போம்

அக்டோபர் 7

பாவமானது கற்பனையினாலே சமயம்பெற்றுச் சகலவித இச்சைகளையும் என்னில் நடப்பித்தது. நியாயப்பிரமாணம் இல்லாவிட்டால் பாவம் செத்ததாயிருக்குமே (ரோம. 7:8).

“கேடான இச்சைகள்”

சகலவித இச்சைகள் என்பது உணர்ச்சிக்கு உட்பட்ட கேடான விருப்பங்களைக் குறிப்பிடுகிறது; கேடு விளைவிக்கக்கூடிய எதுவும் இதற்குள் அடங்கும். வேதனைக்குரிய நிலைமை என்னவென்றால், கிறிஸ்துவின் சிலுவையை அறியவேண்டிய பிரகாரம் அறியாமல், ஏராளமான கிறிஸ்தவர்கள் பவுல் அப்போஸ்தலருக்குக் கிறிஸ்துவின் சிலுவையைப்பற்றிய வெளிப்பாடு கிடைப்பதற்கு முன்பு எப்படிக் கேடான இச்சைகளினால் அவர் அவஸ்தைப்பட்டாரோ, அப்படியே அவர்களும் அனுபவிக்கிறார்கள்; துரதிஷ்டவசமாக தற்பொழுது கோடிக்கணக்கான கிறிஸ்தவர்கள் கேடான இச்சைகளுக்குள் அகப்பட்டு, அதிலிருந்து தப்புவதற்காகத் தங்களுடைய முழுப்பலத்தோடு போராடியும் தவிர்க்கமுடியாமல் தோல்வி அடைந்தவண்ணமாயிருக்கிறார்கள்.

தாம் ஏன் தோல்வி அடைகிறோம் என்பதனை அவர்கள் அறியாமல் இருக்கிறார்கள். தங்களுடைய முழுப்பலத்தை உபயோகித்தும், தங்களை ஆக்கிரமித்திருக்கும் இச்சைகளுக்கு எதிராகப் போராடியும் முடிவில் பெரும் தோல்வியையே தழுவிக்கொள்கிறார்கள் (ரோம. 7:13). இத்தகைய கேடான இச்சைகள் தொடர்ந்து பெருகிக்கொண்டிருப்பதனால், தாங்கள் அசுத்த ஆவிகளினால் பிடிபட்டிருக்கக்கூடுமோ என்று சந்தேகித்து, பிசாசு கலைக்கும் போதகர்களை அவர்கள் நாடியும் எவ்வித பிரயோஜனமும் இல்லை.

மறுபிறப்புப்பெற்ற கிறிஸ்தவன் பிசாசினால் உரிமைகொண்டாடமுடியாது (IIகொரி. 5:17); பிசாசினால் கொடுமைப்படுத்தப்படலாமேதவிர, பிசாசினால் உரிமைகொண்டாடமுடியாது. என்ற உண்மையைக் கிறிஸ்தவர்கள் முதற்கண் தம்முடைய இருதயத்தில் பதித்துவைத்திருக்கவேண்டும்; அதேநேரம் இத்தகைய அவலத்தினால் சில கிறிஸ்தவர்கள் அல்ல, பல்லாயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் வேதனைப்படுகிறார்கள்.

இதற்குத் தீர்வு கிறிஸ்துவின் சிலுவையே; அநேகமான கிறிஸ்தவர்கள் கிறிஸ்துவின் சிலுவையை இரட்சிப்பு வரைக்கும் அறிந்திருக்கிறார்கள்; ஆனால், பரிசுத்தத்திற்கும் (தீத்து 2:14), நாளாந்தக் கிறிஸ்தவ வாழ்க்கைக்கும் (லூக். 9:23) கிறிஸ்துவின் சிலுவை என்ற கோட்பாட்டை அறவே அறியாதிருக்கிறார்கள்; கிறிஸ்தவர்கள் இதனை விளங்கினார்களோ இல்லையோ, இங்கு பரிசுத்தத்தைப்பற்றியே நாம் பேசுகிறோம்.

06/10/2025

அனுதினமும் சிலுவை சுமப்போம் | Paul Balabaskaran | The Crossway Ministries

05/10/2025

The Crossway Ministries
அநுதினமும் சிலுவையைச் சுமப்போம்

அக்டோபர் 5

மரணத்துக்கேதுவான பாவத்துக்கானாலும், நீதிக்கேதுவான கீழ்ப்படிதலுக்கானாலும், எதற்குக் கீழ்ப்படியும்படி உங்களை அடிமைகளாக ஒப்புக்கொடுக்கிறீர்களோ, அதற்கே கீழ்ப்படிகிற அடிமைகளாயிருக்கிறீர்களென்று அறியீர்களா (ரோம. 6:16)?
“எதற்குக் கீழ்ப்படியும்படி ஒப்புக்கொடுக்கிறீர்களோ, அதற்கே அடிமைகளாயிருக்கிறீர்கள்”

நீங்கள் அறியீர்களா? என்ற கேள்வியுடன் பரிசுத்த ஆவியானவர் இந்த வசனத்தை முடித்திருக்கிறார்; இதன் பொருள், அநேகமான கிறிஸ்தவர்கள் இதன் தாற்பரியத்தை அறியாமலிருக்கிறபடியினால், பரிசுத்த ஆவியானவர் கிறிஸ்தவர்களை நோக்கி: எப்படி இந்தக் கிறிஸ்தவ வாழ்க்கையை நடத்துகிறீர்கள் என்று கேட்கிறார். இதன் பொருளை அறியாவிட்டால், வெற்றியும் தோல்வியுமாக வாழ்ந்து முடிவில் நிரந்தரமான தோல்வியைத் தழுவவேண்டியதாயிருக்கும்; அறியாமலிருப்பது மரணத்தை ஏற்படுத்தும் என்பதனை “என் ஜனங்கள் அறிவில்லாமையினால் சங்காரமாகிறார்கள்......” என ஓசியா 4:6 ல் சொல்லியிருக்கிறார்; மேலும், ஏசாயா தீர்க்கதரிசி மிகவும் கடுமையாகக் கர்த்தருடைய வார்த்தையை ஏசாயா. 5:13-14 ல் கூறியிருக்கிறான்.

மேலும் , “எதற்குக் கீழ்ப்படியும்படி உங்களை அடிமைகளாக ஒப்புக்கொடுக்கிறீர்களோ, அதற்கே கீழ்ப்படிகிற அடிமைகளாயிருக்கிறீர்களென்று அறியீர்களா?” என்பதன் பொருள், விசுவாசி ஒன்றில் கிறிஸ்துவுக்கு அடிமையாயிருக்கவேண்டும், இல்லையேல் அந்தப் பாவத்துக்கு அடிமையாயிருக்கவேண்டும். கிறிஸ்துவிலும், சிலுவையிலும் அந்த விசுவாசத்தை வெளிப்படுத்தி, அந்த விசுவாசத்தில் நிலைத்திராவிட்டால், தவிர்க்கமுடியாமல் அந்தப் பாவத்துக்கு அடிமையாயிருப்பதைத்தவிர வேறுவழி ஒன்றுமில்லை. அப்பொழுது வேலைக்காரனை எஜமான் நடத்துவதுபோல, விசுவாசி அந்தப் பாவத்தினால் நடத்தப்படுவான்; எஜமான் சொல்வதைத்தவிர வேறொன்றும் அவன் செய்வதற்கில்லை (ரோம. 7:14) .

“மரணத்துக்கேதுவான பாவத்துக்கானாலும்” என்பதன் பொருள், கிறிஸ்துவிலும், அவர் சிலுவையில் நிறைவேற்றியதிலும் தன்னுடைய விசுவாசத்தை வெளிப்படுத்தி, அதனில் நிலைத்திராமல் வேறொரு வழியினால் தேவனுக்கு முன்பாக நடக்க முயற்சிசெய்தால், அவன் எவ்வளவு கடுமையாய் முயற்சிசெய்தாலும், நிச்சயமாகத் தோல்வியடைவான். “நீதிக்கேதுவான கீழ்ப்படிதலுக்கானாலும்” என்பதன் ஆவிக்குரிய பொருள், விசுவாசி கர்த்தருடைய வார்த்தைக்குக் கீழ்ப்படியவேண்டுமென்பதாகும். தன்னுடைய சொந்த பலத்தினால் இதனை அவன் செய்யமுடியாது; ஆனால், தனக்குக் கிடைக்கிற சகலதும் கிறிஸ்து சிலுவையில் நிறைவேற்றியதன் மூலமாகவே கிடைக்கிறதென்பதனை விளங்கி, அதனைத் தொடர்ச்சியாக அநுதினமும் விசுவாசிப்பதன்மூலமே, அவன் தேவனுடைய வார்த்தைக்குக் கீழ்ப்படியமுடியும் (லூக். 9:23) . அப்படி விசுவாசிக்கும்பொழுது பரிசுத்த ஆவியானவர் நாம் எப்படியிருக்கவேண்டுமோ அப்படியாக நம்மை உருவாக்கி, தன்னுடைய வேலையை நம்மில் நிறைவேற்றுவார்.

04/10/2025

The Crossway Ministries
அநுதினமும் சிலுவையைச் சுமப்போம்

அக்டோபர் 4

நீங்கள் நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டிராமல் கிருபைக்குக் கீழ்ப்பட்டிருக்கிறபடியால், பாவம் உங்களை மேற்கொள்ளமாட்டாது (ரோம. 6:14).

“பாவம் உங்களை மேற்கொள்ளமாட்டாது”

பாவம் இல்லாத பரிபூரணத்துவத்தை வேதம் உபதேசிக்கவில்லை; ஆயினும் நிச்சயமாக ஒரு விசுவாசியைப் பாவசுபாவம் மேற்கொள்ள அனுமதிக்கக்கூடாது என்றே வேதம் உபதேசிக்கிறது; அதெப்படியெனில், மேற்கொள்ளுதல் அல்லது ஆதிக்கம் செலுத்துதல் என்பதன் பொருள், பாவம் ஒரு மனுஷனை மேற்கொள்ளும்பொழுது, அவன் அதனைத் தடுத்து நிறுத்தமுடியாமலும், அதனைத் தூக்கி எறியமுடியாமலும், அதனைக் கைவிடமுடியாமலும் இருந்தால், அந்த மனுஷன் பாவசுபாவத்தினால் மேற்கொள்ளப்படுகிறான்.

பிரத்தியேகமாக ஒரு விசுவாசி கிறிஸ்துவிலும், அவர் சிலுவையில் நிறைவேற்றியதிலும் தன்னுடைய விசுவாசத்தை வெளிப்படுத்தி, அந்த விசுவாசத்தில் தொடர்ச்சியாக நிலைத்திராவிட்டால், இந்த அவலம் ஏற்படுகிறது. ஒரு விசுவாசி தன்னுடைய வெற்றி எந்தக் காலத்திலும் கிறிஸ்துவிலும், சிலுவையிலேயுமே இருக்கிறது என்பதனை மறந்துவிடக்கூடாது.

அப்படியாயின், ஒரு விசுவாசி தன்னுடைய விசுவாசத்தைப் பிரத்தியேகமாகக் கிறிஸ்துவிலும், அவர் சிலுவையில் நிறைவேற்றியதிலும் வெளிப்படுத்தி அதனில் நிலைத்திராவிட்டால், பாவசுபாவம் ஏதோ ஒரு வழியில் அந்த மனுஷனை மேற்கொள்ளும் என்று நாம் சொல்லுகிறோமோ என்று சிலர் கேட்க ம். ஆம், அப்படியே சொல்லுகிறோம்! இந்த நிமிடத்தில் உலகம் முழுக்க இருக்கிற பல்லாயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் உண்மையாகவே கர்த்தராகிய ஆண்டவரை நேசிப்பவர்கள்; ஆனால், தங்களை ஆக்கிரமித்திருக்கிற ஏதோ ஒரு தீயஒழுக்கத்துக்கு எதிராக ஆவிக்குரிய யுத்தத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். ஏதோ ஒரு தீயஒழுக்கத்தோடு தொடர்ச்சியாக யுத்தத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள் அல்லது ஏதோ ஒரு பாவத்தினால் கட்டுண்டுபோயிருக்கிறார்கள் அல்லது ஏதோ ஒரு பாவத்தினால் சிறைப்பட்டுப்போயிருக்கிறார்கள் எனச் சொல்வதே பொருத்தமாயிருக்கிறது.

இவர்கள் தாம் மேற்கொண்டிருக்கும் அந்த ஆவிக்குரிய யுத்தத்தில் வெற்றிபெறமுடியாமல் தத்தளிக்கிறார்கள். உண்மை என்னவென்றால், இந்தப் பிரச்னை கட்டுக்கடங்காமல் போய்க்கொண்டிருக்கிறதேதவிரக் குறைந்தபாடில்லை; கிறிஸ்தவ சபைகள் துரதிஷ்டவசமாக இந்தப் பிரச்னைக்கு எந்தவிதமான தீர்வும் அற்றவர்களாயிருக்கிறார்கள்; ஏனென்றால், கிறிஸ்தவ சபைகள் பரிசுத்தத்துக்குக் கிறிஸ்துவின் சிலுவை என்ற கோட்பாட்டை அறியவேண்டிய பிரகாரமாக அறியாதிருக்கிறார்கள். சுருக்கமாகத் தேவனுக்கு முன்பாக எப்படி நடப்பது என்பதனை அறியாதிருக்கிறார்கள்; இதற்கு ஒரே தீர்வு “நீங்கள் நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டிராமல் கிருபைக்குக் கீழ்ப்பட்டிருக்கிறபடியால், பாவம் உங்களை மேற்கொள்ளமாட்டாது” (ரோம. 6:14) என்பதாகும்.

Address

No, 947, 5th Street Periya Kovilambakkam
Chennai
600129

Alerts

Be the first to know and let us send you an email when JOY TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to JOY TV:

Share

Category