ரா லாரன்ஸ்

ரா லாரன்ஸ் ragava avargalin ninaivaga natatha patum page ithu இது அவர்களின் உண்
(294)

ஒரு அருமையான சிந்திக்க வைக்கும் கதை…டெல்லியில் ஒரு பெரிய கம்பெனி முன்பிருந்த கடையில் ஒரு பெரியவர் சமோசா விற்றுக் கொண்டிர...
01/06/2025

ஒரு அருமையான சிந்திக்க வைக்கும் கதை…

டெல்லியில் ஒரு பெரிய கம்பெனி முன்பிருந்த கடையில் ஒரு பெரியவர் சமோசா விற்றுக் கொண்டிருந்தார்…

அந்த வட்டாரத்தில் இவர் கடை மிகவும் பிரபலம்...

ஒரு நாள் அந்தக் கம்பெனி மேனேஜர் கடைக்கு வந்து சாப்பிட்டுக் கொண்டே

"நீங்க நல்லா நிர்வாகம் பண்ணுறீங்க

தொழிலை நல்லா வளர்த்திருக்கீங்க...

இதுவே என்னைப் போல பெரிய கம்பெனியில் வேலையில் இருந்திருந்தால் நீங்களும் என்னைப் போல பெரிய அளவு முன்னேறி இருக்கலாம் இல்ல" என்றார்....

அதைக் கேட்ட அந்த சமோசா கடைப் பெரியவர் புன்னகைத்து விட்டுச் சொன்னார்...

"இல்லை, நான் இப்போது உங்களை விட நன்றாகவே முன்னேறி இருக்கேன்"

"எப்படி?"

"பத்து வருஷத்துக்கு முன் நான் இந்தத் தொழிலில் நுழைந்து கூடையில் சமோசா விற்றப் போது நீங்கள் இந்தக் கம்பெனியில் அப்போ தான் வேலைக்குச் சேர்ந்திருந்தீங்க...

அப்போ என் வருமானம் மாசம் ஆயிரம் ரூபாய்...

அப்போது உங்கள் வருமானம் மாசம் பத்தாயிரம்...

நீங்க இப்போ மேனேஜர் ஆகிட்டீங்க...

மாசம் ஒரு லட்சம் சம்பளம் வாங்குறீங்க....

இப்போ எனக்கு சொந்தமாக இந்தக் கடை இருக்கு...

இந்த வட்டாரத்தில் நல்ல பேர் (Good Will) இருக்கு...

நானும் மாசம் ஒரு லட்சமோ இல்லை அதை விட அதிகமாகவே சில சமயம் சம்பாதிக்கிறேன்....

நாளை என் வாரிசுகளுக்கு இந்தத் தொழிலை நான் தர முடியும்...

அவர்கள் என்னைப் போல ஜீரோவில் இருந்து துவங்க வேண்டாம்...

நேரடியாக முதலாளியாக வந்துக் கடையை வளர்த்தால் போதும்...

ஆனால் உங்களுக்கு அப்படியில்லை...

உங்கள் பதவியை உங்கள் மகனுக்கு அப்படியே தர முடியாது...

உங்கள் இத்தனை வருஷ உழைப்பின் பலன் உங்கள் முதலாளி மகனுக்கு மட்டும் தான் போகும்....

உங்கள் மகன் மீண்டும் ஜீரோவில் இருந்து தான் துவங்க வேண்டும்...

நீங்கள் பட்ட அத்தனை கஷ்டத்தையும் அவனும் படுவான்...

உங்கள் மகன் உங்களைப் போல மேனேஜர் ஆகும் போது, என் மகன் எந்த நிலையில் இருப்பான் என்று நீங்கள் கணக்குப் போட்டுக்கோங்க...

ஒருவேளை உங்க மகன் என் மகனிடம் வேலைக்கு வந்தாலும் வரலாம்" என்றார்...

அதைக் கேட்டு திடுக்கிட்ட அந்த மேனேஜர் சமோசாவுக்கு பணத்தைக் கொடுத்து விட்டு ஓடியே விட்டார்...

கதையின் நீதி:-

சொந்தத் தொழிலும், விவசாயமும் கைக்கொடுப்பது போல வேறு எதுவுமே நிச்சயமாக கைக்கொடுக்காது…

அடுத்தவர்களுக்கு உழைத்து உழைத்து ஓடாய் போவதை விட நம்முடைய மூளையை நமக்கு ஏற்றத் தொழிலில் இறக்குவது மட்டும் தான் நமக்கு நல்லது .

உங்கள் மகனுக்கு கற்றுக்கொடுக்கும் 10 திறன்கள்1. மற்றவர்களை மரியாதையுடன் நடத்த கற்றுக்கொடுங்கள்.2. அவரது உணர்ச்சிகளைப் பு...
13/05/2025

உங்கள் மகனுக்கு கற்றுக்கொடுக்கும் 10 திறன்கள்

1. மற்றவர்களை மரியாதையுடன் நடத்த கற்றுக்கொடுங்கள்.

2. அவரது உணர்ச்சிகளைப் புரிந்துகொண்டு நிர்வகிக்க அவருக்கு உதவுங்கள்.

3. கடினமான சூழ்நிலைகளில் சிக்கலைத் தீர்க்கும் திறன்களை ஊக்குவிக்கவும்.

4. நேரத்தை எவ்வாறு திறம்பட நிர்வகிப்பது என்பதை அவருக்குக் காட்டுங்கள்.

5. சுய ஒழுக்கத்தையும் கவனத்தையும் வளர்த்துக் கொள்ள அவருக்கு வழிகாட்டுங்கள்.

6. தெளிவான தொடர்பு மற்றும் சுறுசுறுப்பாகக் கேட்பதைக் கற்றுக் கொடுங்கள்.....

7. பணத்தை எவ்வாறு கையாள்வது மற்றும் சேமிப்பது எப்படி என்பதை அவருக்குக் கற்றுக் கொடுங்கள்.

8. அவன் செய்யும் எல்லாவற்றிலும் தன்னம்பிக்கையை ஊக்குவித்தல்.

9. மற்றவர்களைப் புரிந்து கொள்ளவும் அக்கறை கொள்ளவும் கற்றுக் கொடுங்கள்

10. ஒருவரிடம் பேசும் போது பணிவாக பேச வேண்டும் என்று கற்று கொடுங்கள்...

யாரிடமும் கையேந்தி பிச்சை எடுப்பதில்லை  தன்மானத்தோடு உழைத்து வாழ்பவர்கள் ஒரு லைக் வருமா பாட்டிக்கு 🤗🤝🙏
13/05/2025

யாரிடமும் கையேந்தி பிச்சை எடுப்பதில்லை தன்மானத்தோடு உழைத்து வாழ்பவர்கள் ஒரு லைக் வருமா பாட்டிக்கு
🤗🤝🙏

அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் உங்கள் உரிமைகள்(Right to Free and Quality Treatment in Government Hospitals)__அரசு ...
09/05/2025

அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் உங்கள் உரிமைகள்
(Right to Free and Quality Treatment in Government Hospitals)
__

அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவது – ஒரு உரிமைதான்!

🟢 இந்திய அரசியலமைப்பின் விதி 21 - வாழ்வுரிமை
➤ "வாழ்வதற்கான உரிமை என்பது, சுகாதாரமும் உட்பட்டதுதான்" என இந்திய நீதிமன்றங்கள் தெளிவாக கூறியுள்ளது.

நீங்கள் அரசு மருத்துவமனையில் பெறக்கூடிய உரிமைகள்:

🔵 இலவச சிகிச்சை & மருந்துகள் – அனைத்து அரசு மருத்துவமனைகளிலும்
🔵 மருத்துவர்களை நேரில் சந்திக்க உரிமை – அடிக்கடி 'சென்றுவிடுங்கள்' எனக் கூற முடியாது
🔵 மருந்துகளின் பட்டியல் & விபரங்கள் கேட்கும் உரிமை
🔵 அவசர சிகிச்சையை உடனடியாக பெறும் உரிமை – குறைந்தபட்சமும் தவிர்க்க இயலாத சிகிச்சை
🔵 அரசியல் பாரபட்சமின்றி சிகிச்சை
🔵 மருத்துவக் காப்பீடு திட்டங்களைப் பயன்படுத்தும் உரிமை (உ.தா: CM Health Insurance)

சேவைகள் இல்லாதபோது என்ன செய்யலாம்?

🟣 மருத்துவ மேற்பார்வையாளர் (RMO)-ஐ நேரில் சந்திக்கலாம்
🟡 மாவட்ட மருத்துவ அலுவலர் (DDHS) – எழுத்து முறையில் புகார்
🟢 RTI வழியாக – மருந்து பற்றிய சுருக்கப்பட்ட பட்டியல், பணியாளர்கள் பட்டியல் கேட்கலாம்
🔵 மாநில மனித உரிமை ஆணையம்/சுகாதார துறை இணையதளம் மூலம் புகார்

---

அரசு மருத்துவமனையில் பொதுமக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள்:

🔴 மருந்துகள் இல்லை என சொல்லி தனியார் மருந்தகங்களில் வாங்க சொல்வது...
🔴 டாக்டர்கள் நேரத்தில் வராமை...
🔴 ஊழல் – அறிகுறி இல்லாத சோதனைகள், வழிகாட்டு கட்டணம்...
🔴 அவசர சிகிச்சை தவிர்ப்பு...

சில பயனுள்ள தகவல்கள்:

🟢 அரசு மருத்துவமனைகளில் உள்ள மருத்துவர்கள் கட்டாயமாக நோயாளிகளை பார்க்க வேண்டும்.
🟡 அவசர பிரிவுகளில் எந்த நோயாளிக்கும் முதலில் சிகிச்சை வழங்க வேண்டும் – இது Supreme Court தீர்ப்பு.
🔵 பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் இலவசமாக வழங்கப்பட வேண்டும

*“ஏன் வாகனங்களில் பிரேக்குகள் வைக்கப்பட்டுள்ளன ?”*ஒருமுறை இயற்பியல் ஆசிரியர் ஒருவர் தனது மாணவர்களிடம்“ஏன் வாகனங்களில் பி...
09/05/2025

*“ஏன் வாகனங்களில் பிரேக்குகள் வைக்கப்பட்டுள்ளன ?”*
ஒருமுறை இயற்பியல் ஆசிரியர் ஒருவர் தனது மாணவர்களிடம்

“ஏன் வாகனங்களில் பிரேக்குகள் வைக்கப்பட்டுள்ளன ?”

பல வகையான மாறுபட்ட பதில்கள் கிடைத்தன.

"நிறுத்துவதற்கு"

“வேகத்தைக் குறைப்பதற்கு"

“மோதலைத் தவிர்ப்பதற்கு "

"மெதுவாக செல்வதற்கு"

"சராசரி வேகத்தில் செல்வதற்கு"

என பல்வேறு பதில்கள் மாணவர்களிடம் வந்தது.

“வேகமாக ஓட்டுவதற்கு" என்ற பதிலை சொன்ன மாணவனை பார்த்து மற்ற மாணவர்கள் சிரித்தனர்.

அந்த பதிலே சிறந்த பதிலாக ஆசிரியரால் தெரிவு செய்யப்பட்டது.

ஆம் பிரேக்குகள் நாம் வேகமாக செல்வதற்காகத் தான் வைக்கப்பட்டுள்ளன.

உங்கள் காரில் பிரேக்குகள் இல்லை என்று வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் உங்கள் காரை எவ்வளவு வேகமாக ஓட்டுவீர்கள்? நிச்சயமாக உங்களால் வேகமாக ஓட்டமுடியாது.

பிரேக்குகள் இருப்பதனால் மட்டுமே நாம் விரும்பும் இடத்திற்கு வேகமாக செல்வதற்கான தைரியத்தை கொடுக்கிறது.

இதுபோலத் தான் தடைகள். தடைகள் வரும் போது அவைகள் நம் வாழ்க்கையின் வேகத்தை குறைக்க வந்ததாக நினைத்து நம் மனதை சுருக்கிக் கொள்கிறோம். தடைகள் எரிச்சலூட்டுவது போலவும் நமது நம்பிக்கைகளை சிதைப்பது போலவும் நினைத்துக் கொள்கிறோம்.

உங்கள் வாழ்க்கையில் வரும் “பிரேக்குகள்” உங்கள் வேகத்தை குறைப்பதற்கு அல்ல. வேகமாகச் செல்வதற்கு தான்.

🙏🙏🙏

06/05/2025
விமானங்களில் டயர்கள் பெரும்பாலும் பஞ்சர்  ஆகாது.. ஏன் தெரியுமா?🟢🔴🟢விமானங்களின் டயர்கள் எப்பொழுதும் பஞ்சராகவோ, வெடிக்கவோ ...
12/03/2025

விமானங்களில் டயர்கள் பெரும்பாலும் பஞ்சர் ஆகாது.. ஏன் தெரியுமா?

🟢🔴🟢

விமானங்களின் டயர்கள் எப்பொழுதும் பஞ்சராகவோ, வெடிக்கவோ செய்யாது. இது ஏன் ? இதற்குப் பின்னால் உள்ள அறிவியல் என்ன ? இந்த தொழிற்நுட்பம் ஏன் கார்களில் இல்லை ? விமானங்களில் டயர்களும் கார்களின் டயர்களும் ஒன்றா? இரண்டிற்கும் என்ன வித்தியாசம் ?

நீங்கள் காரில் வேகமாக நெடுஞ்சாலையில் செல்லும் போது கூட உங்கள் காரின் டயர் பஞ்சராகியோ, அல்லது வெடித்தோ போயிருக்கும். எல்லோருக்கும் வாழ்வில் இப்படி ஒரு மோசமான அனுபவம் ஏற்பட்டிருக்கும். ஆனால் என்றாவது நினைத்துப் பார்த்திருக்கிறீர்களா விமானங்களில் டயர்கள் பெரும்பாலும் பஞ்சராவதோ வெடிப்பதோ இல்லை.

பொதுவாக ஒவ்வொரு டயருக்கு அது வெளியிலிருந்து எவ்வளவு அழுத்தத்தைத் தாங்கும் திறன் கொண்டது என்ற அளவீடு இருக்கும். அதை Psi எனக் கணக்கிடப்படுகிறது.

பொதுவாக ஒரு காரின் டயருக்கு 32-35 Psi இருக்கும். ஆனால் விமானங்களில் டயருக்கு 200 Psi இருக்கும் அதாவது கார்களை விட 6 மடங்கு அதிகமாக அழுத்தைத் தாங்கும் திறன் இருக்கும். விமானங்களில் டயரும் கிட்டத்தட்ட காரின் டயரைபோலவே தான் உருவாக்கப்படுகிறது. ஆனால் இது அதிக எடை மற்றும் அதிக வேகத்தைத் தாங்கும் திறன் கொண்டது போல வடிவமைக்கப் பட்டுள்ளது.

பொதுவாக விமானங்களில் பொருத்தப்படும் டயர்கள் பெரிய டயர்கள் எல்லாம் இல்லை. போயீங் 737 விமானத்தின் டயர் 27X7.75 R15 என்ற அளவிலான டயர் தான் பொருத்தப்படுகிறது. இது சிறிய டிரக்கின் டயரின் அளவை விட சிறியது தான். சிறிய டிரக்களில் கூட 40 இன்ச் டயாமீட்டர், 20 இன்ச் அகலம் கொண்ட டயர்கள் பொருத்தப்பட்டிருக்கும்.

விமானங்களில் அதை விடச் சிறிய டயராக பொருத்தப்பட்டிருந்தாலும் அதில் அதிக எடை மற்றும் வேகத்தை தாக்குபிடிக்கும் அளவிற்கு அதன் த்ரட்களுடன் நைலான் கார்டுகள் அல்லது சந்தடிக் பாலிமர்கள் கொடுக்கப்பட்டிருக்கும். அதனால் அதிக அழுத்தம் மட்டும் வேகத்தை தாக்குப்பிடிக்கும் அளவிற்கு இந்த டயர்கள் உருவாக்கப்பட்டிருக்கும்.

பொதுவாக விமானங்கள் தரையில் 270 கி.மீ வேகம் வரை பயணிக்கும் ஆனால் விமானங்களில் பொருத்தப்பட்டுள்ள டயர்கள் 470 கி.மீ வேகம் வரை பயணிக்கும் திறன் கொண்டது. அவ்வளவு வேகத்தில் பயணித்தாலும் பஞ்சர் ஆகாத டயர் 270 கி.மீ வேகத்தில் பயணிக்கும் போது பஞ்சர் ஆகாதது பெரிய ஆச்சரியம் ஒன்றும் இல்லை.

விமான டயர்களில் த்ரெட்கள் சிம்பிள் பேட்டனிலேயே இருக்கும். இது விமானங்கள் ஹைட்ரோ பிளானிங் ஏற்படுத்தாமல் தடுக்க உள்ளே த்ரெட்டிங் பேட்டர்ன் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாகத் தான் விமானங்கள் தரையிறங்கும் போது தரையைத் தொட்ட அந்த ஒரு விநாடி டயர் சுற்றத் துவங்கும் முன்பு புகை வரும். பின்னர் டயர் சுற்ற துவங்கியதும் இது சரியாகிவிடும்.

கமர்ஷியல் விமானங்களில் அதிகமான எடை காரணமாக அதிக வீல்கள் பொருத்தப்பட்டிருக்கும். பொதுவாக விமானங்களில் உள்ள டயர்கள் 500 முறை தரையிறங்க முடியும். அதன் பின் அந்த டயர்கள் மீண்டும் சரி செய்யப்பட்டுத் தேய்ந்து போன இடங்களைச் சரி செய்து மீண்டும் த்ரெட்டிங் செய்யப்பட்டு அதன் பாதுகாப்பு சோதனைகள் செய்யப்பட்டு மீண்டும் விமானங்களில் பயன்படுத்தப்படும்.

இளநரை பிரச்னை தீர இத பண்ணி பாருங்க நண்பர்களுக்கு பகிரவும்...!
07/03/2025

இளநரை பிரச்னை தீர இத பண்ணி பாருங்க நண்பர்களுக்கு பகிரவும்...!

உன் கோபத்தை சீமைக் கருவேல மரத்தின் மீது காட்டு.உன் அன்பை தென்னை மரத்தின் மீது காட்டு.வெற்றியடைந்தால் ஒரு வாழை மரம் நடு.த...
05/03/2025

உன் கோபத்தை சீமைக் கருவேல மரத்தின் மீது காட்டு.
உன் அன்பை தென்னை மரத்தின் மீது காட்டு.

வெற்றியடைந்தால் ஒரு வாழை மரம் நடு.

தோல்வியடைந்தால் கறிவேப்பிலை மரம் நடு.

சும்மாயிருக்கும் நேரங்களில் காய்கறி விதைகளை நடு.

கையில் பணம் இருந்தால் பூச்செடிகள் நடு.

உன்னைவிட்டு யாரும் பிரிந்தால் மாடித்தோட்டம் நடு.

எதிர்கால சந்ததியினருக்காக மா மரம் நடு.

பலனை எதிர்பாராமல் கடமை செய்ய நினைத்தால் பனை நடு.

சந்தோஷமாக இருக்கும்போது வேப்ப மரம் நடு.

கவலையுடன் இருக்கும்போது செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சு.

வீட்டில் இடம் இருந்தால் முடிந்த வரை மரம் நடு.

இடமில்லையென்றால், முடிந்த வரை இதனைப் பகிரு.

ஒரு நாள் நாமிருக்க மாட்டோம்.. நாம் நட்ட மரங்கள் இருக்கும்.. நம் பெயர் சொல்லிக் கொண்டு...

வனவளம் காத்து கனிம வளம் பெருக்குவோம்!

மரம் செழித்து, மழை கொழித்து, பூமி மகிழ கை கோர்ப்போம் வாருங்கள்…!

இன்று எனது தங்கச்சிக்கு பிறந்த நாள் ஒரு வாழ்த்து கிடைக்குமா நண்பர்களே 😊😊
04/03/2025

இன்று எனது தங்கச்சிக்கு பிறந்த நாள் ஒரு வாழ்த்து கிடைக்குமா நண்பர்களே 😊😊

🍁🌹🍁ஒரு சண்டையை முடிக்க ஆண் கையில் எடுக்கும் வாசகம்.'இப்ப உனக்கு என்ன பிரச்சினை'?🍁🌹🍁அந்த சண்டையை முடிக்க விடாமல் பெண் பதி...
02/03/2025

🍁🌹🍁ஒரு சண்டையை முடிக்க ஆண் கையில் எடுக்கும் வாசகம்.
'இப்ப உனக்கு என்ன பிரச்சினை'?

🍁🌹🍁அந்த சண்டையை முடிக்க விடாமல் பெண் பதில் அளிக்கும் வாசகம்.
'எதுவும் பிரச்சினை இல்லை உங்க வேலையை பார்க்கலாம்'.

🍁🌹🍁ஒரு சண்டையை முடிக்க ஆண் கையில் எடுக்கும் வாசகம்.
'சரி என் மேலே தான் தப்பு…
இனி செய்யலை மன்னிச்சிடு'.

🍁🌹🍁அந்த சண்டையை முடிக்க விடாமல் பெண் பதில் அளிக்கும் வாசகம்.
'உங்களை மன்னிக்க நான் யார் ஸார்…
யாரோ தானே நான்'.

🍁🌹🍁ஒரு சண்டையை முடிக்க ஆண் கையில் எடுக்கும் வாசகம்.
'சரி ஓகே நான் கிளம்பறேன்'.

🍁🌹🍁அந்த சண்டையை முடிக்க விடாமல் பெண் பதில் அளிக்கும் வாசகம்.
'அதானே நான் எப்படி போனா உங்களுக்கென்ன?'

🍁🌹🍁ஒரு சண்டையை முடிக்க ஆண் கையில் எடுக்கும் வாசகம்.
'இனி இந்த தப்பை இன்னொரு தடவை செஞ்சா செருப்பால் அடி'

🍁🌹🍁அந்த சண்டையை முடிக்க விடாமல் பெண் பதில் அளிக்கும் வாசகம்.
'இதே தான் போன தடவையும் சொன்னீங்க…
அடிச்சிக்கிட்டீங்களா என்ன?'

🍁🌹🍁அவளாய் பார்த்து சமாதானமாகி, போனால் போகிறதென்று விட்டால் தான் உண்டு.
அதுவரை நீ சமாதானம் என்ற பெயரில் கொஞ்சியும் கெஞ்சியும் அங்கேயே தான் இருக்க வேண்டும்.

🍁🌹🍁எக்கேடாவது கெட்டு தொலை என்று விடவும் முடியாது,
இனியொரு முறை இப்படி நடக்காதென்று உறுதி மொழியும் கொடுக்க முடியாது.

🍁🌹🍁ஏனென்றால் இதற்கு முன் லட்ச தடவை அது நடந்திருக்கும்.

🍁🌹🍁அது நடந்த தேதி காலம் நிமிடம் வரை ஞாபகத்தில் வைத்துக்கொண்டு கேள்வியாலே துளைத்தெடுப்பாள்.

🍁🌹🍁ஒரு சண்டை சங்கிலி தொடர்‌போல ஒன்றன்பின் ஒன்றாக பின்னோக்கி நகரும்.

🍁🌹🍁அன்னிக்கு அது செஞ்சிங்களே,
அன்னிக்கு இப்படி சொன்னிங்களே,
கேக்கணும் நினைச்சேன்..
இப்பதான் ஞாபகத்துக்கு வந்ததுன்னு ஒண்ணு ஒண்ணா போகும்.

🍁🌹🍁இது எப்போது நடந்தது?
நான் சொன்னேனா?
முதலில் இது நடந்ததா என்று யோசித்து யோசித்து ஒன்று ஒன்றாக பதில் அளித்து வருவதற்குள்
ஏன்டா சண்டை போட்டோம்னு ஆயிடும் ஒவ்வொரு ஆண்களுக்கும்..
😔😔😔

ஆனாலும் விட மாட்டாங்க🙄🙄

படித்ததில் பிடித்தது 👍🏻

குடிச்சாலும் எவ்ளோ தெளிவா இருக்காப்ல மனுசன்..😁
02/03/2025

குடிச்சாலும் எவ்ளோ தெளிவா
இருக்காப்ல மனுசன்..😁

Address

Chennai
600001

Telephone

+919855555555

Website

Alerts

Be the first to know and let us send you an email when ரா லாரன்ஸ் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ரா லாரன்ஸ்:

Share