மணி மேகலை

மணி மேகலை Some of the clips in video are not owned by me, if any copyright issue please contact massage whatsapp
(455)

ஒரு அருமையான சிந்திக்க வைக்கும் கதை…டெல்லியில் ஒரு பெரிய கம்பெனி முன்பிருந்த கடையில் ஒரு பெரியவர் சமோசா விற்றுக் கொண்டிர...
01/06/2025

ஒரு அருமையான சிந்திக்க வைக்கும் கதை…

டெல்லியில் ஒரு பெரிய கம்பெனி முன்பிருந்த கடையில் ஒரு பெரியவர் சமோசா விற்றுக் கொண்டிருந்தார்…

அந்த வட்டாரத்தில் இவர் கடை மிகவும் பிரபலம்...

ஒரு நாள் அந்தக் கம்பெனி மேனேஜர் கடைக்கு வந்து சாப்பிட்டுக் கொண்டே

"நீங்க நல்லா நிர்வாகம் பண்ணுறீங்க

தொழிலை நல்லா வளர்த்திருக்கீங்க...

இதுவே என்னைப் போல பெரிய கம்பெனியில் வேலையில் இருந்திருந்தால் நீங்களும் என்னைப் போல பெரிய அளவு முன்னேறி இருக்கலாம் இல்ல" என்றார்....

அதைக் கேட்ட அந்த சமோசா கடைப் பெரியவர் புன்னகைத்து விட்டுச் சொன்னார்...

"இல்லை, நான் இப்போது உங்களை விட நன்றாகவே முன்னேறி இருக்கேன்"

"எப்படி?"

"பத்து வருஷத்துக்கு முன் நான் இந்தத் தொழிலில் நுழைந்து கூடையில் சமோசா விற்றப் போது நீங்கள் இந்தக் கம்பெனியில் அப்போ தான் வேலைக்குச் சேர்ந்திருந்தீங்க...

அப்போ என் வருமானம் மாசம் ஆயிரம் ரூபாய்...

அப்போது உங்கள் வருமானம் மாசம் பத்தாயிரம்...

நீங்க இப்போ மேனேஜர் ஆகிட்டீங்க...

மாசம் ஒரு லட்சம் சம்பளம் வாங்குறீங்க....

இப்போ எனக்கு சொந்தமாக இந்தக் கடை இருக்கு...

இந்த வட்டாரத்தில் நல்ல பேர் (Good Will) இருக்கு...

நானும் மாசம் ஒரு லட்சமோ இல்லை அதை விட அதிகமாகவே சில சமயம் சம்பாதிக்கிறேன்....

நாளை என் வாரிசுகளுக்கு இந்தத் தொழிலை நான் தர முடியும்...

அவர்கள் என்னைப் போல ஜீரோவில் இருந்து துவங்க வேண்டாம்...

நேரடியாக முதலாளியாக வந்துக் கடையை வளர்த்தால் போதும்...

ஆனால் உங்களுக்கு அப்படியில்லை...

உங்கள் பதவியை உங்கள் மகனுக்கு அப்படியே தர முடியாது...

உங்கள் இத்தனை வருஷ உழைப்பின் பலன் உங்கள் முதலாளி மகனுக்கு மட்டும் தான் போகும்....

உங்கள் மகன் மீண்டும் ஜீரோவில் இருந்து தான் துவங்க வேண்டும்...

நீங்கள் பட்ட அத்தனை கஷ்டத்தையும் அவனும் படுவான்...

உங்கள் மகன் உங்களைப் போல மேனேஜர் ஆகும் போது, என் மகன் எந்த நிலையில் இருப்பான் என்று நீங்கள் கணக்குப் போட்டுக்கோங்க...

ஒருவேளை உங்க மகன் என் மகனிடம் வேலைக்கு வந்தாலும் வரலாம்" என்றார்...

அதைக் கேட்டு திடுக்கிட்ட அந்த மேனேஜர் சமோசாவுக்கு பணத்தைக் கொடுத்து விட்டு ஓடியே விட்டார்...

கதையின் நீதி:-

சொந்தத் தொழிலும், விவசாயமும் கைக்கொடுப்பது போல வேறு எதுவுமே நிச்சயமாக கைக்கொடுக்காது…

அடுத்தவர்களுக்கு உழைத்து உழைத்து ஓடாய் போவதை விட நம்முடைய மூளையை நமக்கு ஏற்றத் தொழிலில் இறக்குவது மட்டும் தான் நமக்கு நல்லது .

29/05/2025
ஒரு லைக் வருமா அண்ணாமலைக்கு
25/05/2025

ஒரு லைக் வருமா அண்ணாமலைக்கு

லட்டு செஞ்சு இருக்கேன்.. ஒரு வாழ்த்து கிடைக்குமா நண்பர்களே 😊😊😊
25/05/2025

லட்டு செஞ்சு இருக்கேன்.. ஒரு வாழ்த்து கிடைக்குமா நண்பர்களே 😊😊😊

 #பணத்தை கையில பிடிச்சி கொஞ்சம் தள்ளி வெச்சி யோசிச்சு பாத்தா.அடேங்கப்பா இந்த பணத்துக்கு எவ்வளவு  #பெயர்கள்....கோவில் உண்...
24/05/2025

#பணத்தை கையில பிடிச்சி கொஞ்சம் தள்ளி வெச்சி யோசிச்சு பாத்தா.
அடேங்கப்பா இந்த பணத்துக்கு எவ்வளவு #பெயர்கள்....

கோவில் உண்டியலுக்கு செலுத்தினால் #காணிக்கை...

யாசிப்பவருக்கு கொடுத்தால்
#பிச்சை...

அர்ச்சகருக்குக் கொடுத்தால்
#தட்சணை....

கல்விக் கூடங்களில்
#கட்டணம்...

திருமணத்தில்
#சீதனம்....

திருமண விலக்கில்
#ஜீவனாம்சம்....

விபத்துகளில் இறந்தால்
#நஷ்டஈடு...

இன்சூரன்ஸ்க்காக செலுத்தினால் #காப்பீடு....

வங்கிகளில் வைத்தால் #வைப்புந்தொகை...

ஏழைகள் கேட்டுக் கொடுத்தால்
#தர்மம்....

நாமாக விரும்பி ஏழைகளுக்குக்
கொடுத்தால்
#தானம்...

திருமண வீடுகளில் பரிசாக
#மொய்...

திருப்பித் தர வேண்டும் என யாருக்காவது கொடுத்தால் அது
#கடன்....

திருப்பித் தர வேண்டாம் என இலவசமாகக் கொடுத்தால் அது
#அன்பளிப்பு...

விரும்பிக் கொடுத்தால்
#நன்கொடை....

நீதிமன்றத்தில் செலுத்தினால்
#அபராதம்....

அரசுக்குச் செலுத்தினால்
#வரி....

அரசு மற்றும் பிற தர்ம ஸ்பானங்களுக்கு
கொடுத்தால் அது
#நிதி...

செய்த வேலைக்கு மாதந்தோறும் கிடைப்பது
#சம்பளம்...

தினமும் கிடைப்பது
#கூலி...

பணி ஓய்வுப் பெற்றால் கிடைப்பது #ஓய்வூதியம்.....

சட்டத்திற்கு விரோதமாக கையூட்டு வாங்குவதும் கொடுப்பதும்
#லஞ்சம்...

கடன் வாங்கினால் அத்தொகைக்கு
#அசல்...

வாங்கியக் கடனுடன்
கொடுக்கும் போது
#வட்டி....

தொழில் தொடங்கும் போது
#முதலீடு...

தொழிலில் கிடைக்கும் வருமானத்துக்கு #லாபம்.....

குருவிற்குக் கொடுக்கும் போது #குருதட்சணை....

ஹோட்டலில் நல்குவது
#டிப்ஸ்.....

இவ்வாறு பல பெயர்களில் கைமாறும் இந்தப் பணத்திற்கு மாற்றாக வேறொன்றும் இப்புவியில் இல்லை...
இந்தப் பணம் என்ற காகிதத்தைப் பெற...

சிலர் அன்பை இழக்கின்றனர்...

சிலர் பண்பை இழக்கின்றனர்...

சிலர் நட்புகளை இழக்கின்றனர்...

18 வயதுக்கு மேற்பட்டவர்கள் இதை வாசித்தால் நன்று....ஏனெனில் அவர்களுக்கு மட்டும்தான் இது புரியும்....காலை நேரம்., அலுவலகத்...
17/05/2025

18 வயதுக்கு மேற்பட்டவர்கள் இதை வாசித்தால் நன்று....ஏனெனில் அவர்களுக்கு மட்டும்தான் இது புரியும்....

காலை நேரம்., அலுவலகத்திற்கு
கிளம்பியாக வேண்டும் நான்.

செய்தித் தாளை எடுத்துப் பார்க்கிறேன், கண்ணீர் அஞ்சலி அறிவிப்பில் எனது புகைப்படம்.
அய்யோ....

என்ன ஆயிற்று எனக்கு?

நான் நன்றாகத்தானே இருக்கிறேன்?

ஒரு நிமிடம் யோசிக்கிறேன்....

நேற்று இரவு படுக்கைக்கு செல்லும் போது , என் இடது மார்பில் கடுமையான வலி ஏற்பட்டது. ஆனால், அதன் பிறகு எனக்கு எதுவும் நினைவில் இல்லை, எனக்கு நல்ல தூக்கம் என்று நினைக்கிறேன்.

காபி வேண்டுமே, என் மனைவி எங்கே?
மணி பத்தாகிவிட்டது

என் பக்கத்தில் படுத்திருந்த யாரையும் காணோம்.

அது யார் கட்டிலில் கண்மூடி அசைவின்றி? அய்யோ நானே தான்.

அப்படியானால் நான் இறந்துவிட்டேனா? கதறினேன்......

என் அறைக்கு வெளியே கூட்டம், உறவுக்காரர்களும், நண்பர்களும் கூடியிருந்தார்கள்.
பெண்கள் எல்லோரும் அழுதுகொண்டிருந்தார்கள். ஆண்கள், சோக கப்பிய முகத்துடன் இறுக்கமாக நின்றிருந்தார்கள். தெரு ஜனங்கள் உள்ளே வந்து என் உடலைப் பார்த்துவிட்டுப் போகிறார்கள்.
என் மனைவிக்கு சிலர் ஆறுதல் சொல்கிறார்கள். குழந்தைகளைக் கட்டிப்பிடித்து அழுகிறார்கள்.

நான் இறக்கவில்லை.,
இங்கே இருக்கிறேன் என்று கத்தினேன்.

ஆனால், என் குரல் யாருக்கும் கேட்கவில்லை.

என் உடல் அருகே நான் நிற்பது கூட யாருக்கும் தெரியவில்லை.

அய்யோ என்ன செய்வேன் நான்?
எப்படி அவர்களுக்குத் தெரிவிப்பேன்?

நான் மீண்டும் என் படுக்கை அறைக்கு சென்றேன். "நான் இறந்துவிட்டேனா?" நான் என்னையே கேட்டேன். இறப்பு இப்படித்தான் இருக்குமா?

என் மனைவியும், அம்மா, அப்பாவும் அடுத்த அறையில் அழுதுகொண்டிருந்தார்கள். என் மகனுக்கு என்ன நடக்கிறது என்பது விளங்கவில்லை. எல்லோரும் அழுவதால், அவனும் அழுது கொண்டிருக்கிறான்.
நான் அவனை மிகவும் நேசிக்கிறேன். அவனை பிரிந்து என்னால் இருக்கவே முடியாது. என் மனைவி, பாசமும், பரிவும் கொண்டவள். எனக்கு தலைவலி என்றால் கூட அவள் அழுவாள்.
அவளை பிரியப்போவதை என்னால் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை.
அம்மா, நான் ஒரு குழந்தைக்கு தந்தையானபோதும், இன்னமும் என்னை குழந்தையாகவே பார்ப்பவள். அப்பா, கண்டிப்பானவர் என்றாலும், அந்த வார்த்தைகளில் ஒவ்வொன்றிலும் பாசமே நிறைந்திருக்கும்.
இதோ, ஒரு மூலையின் நின்று அழுது கொண்டிருப்பவன், அட.. என் நண்பன். பகையை மறந்து வந்திருக்கிறானே? சிறு தவறான புரிதல் எங்களை பிரித்துவிட்டது. இருவரும் பேசி ஓராண்டுக்கு மேலாகிறது. அவனிடம் மன்னிப்புக்கேட்க வேண்டும் என்று தோன்றுகிறது.

அருகில் சென்று அவனை அழைக்கிறேன். ஆனால், என் குரல் அவனுக்குக் கேட்கவில்லை. என் உடலைப் பார்த்து தேம்பித் தேம்பி அழுது கொண்டிருக்கிறான்.

ஆம்.. நான்தான் இறந்துவிட்டேனே. அருகில் மாட்டப்பட்டிருக்கும் சாமிப் படங்களைப் பார்க்கிறேன்.

"ஓ கடவுளே! எனக்கு இன்னும் சில நாட்கள் கொடுங்கள். நான் என் மனைவி, பெற்றோர்கள் நண்பர்களிடம் எவ்வளவு அன்பு வைத்துள்ளேன் என்று வெளிப்படுத்த வேண்டும்" என் மனைவி அறையில் நுழைந்தாள். "நீ அழகாக இருக்கிறாய் "
என்று நான் கத்தினேன். நான் அவளால் என் வார்த்தைகளைக் கேட்கவில்லை.
உண்மையில் இதற்கு முன்னால் இவ்வாறு சொல்லவே இல்லை.

"கடவுளே!" நான் கதறினேன். அழுதேன். தயவு செய்து இன்னும் ஒரு வாய்ப்பு, என் குழந்தையை கட்டி அணைக்க , என் அம்மாவை ஒரு முறையாவது சிரிக்க வைக்க , என் அப்பா என்னை பெருமையாய் நினைக்க வைக்க , என் நண்பர்களிடம் மன்னிப்பு கேட்க, இப்பொழுது நான் அழுதேன்!

திடீரென என் உடலை பிடித்து யாரோ உலுக்கினார்கள். அதிர்ந்து கண் விழித்தேன். "தூக்கத்தில் என்ன உளறல், கனவு ஏதாவது கண்டீர்களா? என்றாள் மனைவி.
ஆம் வெறும் கனவு. நிம்மதியானேன். ..

என் மனைவியால் தற்போது நான் பேசுவதைக் கேட்க முடியும் இது என் வாழ்க்கையில் மகிழ்ச்சியான தருணம். அவளை கட்டி அணைத்து. " இந்த பிரபஞ்சத்திலேயே நீ மிகவும் அழகான மற்றும் பாசமான மனைவி, உன்னை நான் மிகவும் நேசிக்கிறேன்" என்றேன் முதன் முறையாக.
முதலில் புரியாமல் விழித்த அவள், பின்னர், என் அருகே வந்து என்னை அணைத்துக்கொண்டாள். அவளது கண்களில் இருந்து லேசாக கண்ணீர் வெளியேறத் துடித்தது. அது ஆனந்தக் கண்ணீர் என்பதை என்னால் புரிந்துக்கொள்ள முடிந்தது.

இந்த இரண்டாவது வாய்ப்பு கொடுத்த கடவுளுக்கு நன்றி.
நண்பர்களே......

இன்னும் உங்களுக்கு நேரம் இருக்கிறது. உங்களது ஈகோவை புறம் தள்ளி விட்டு உங்களது பாசத்தையும் நேசத்தையும் உங்களிடம் நெருக்கமானவர்களிடம் வெளிபடுத்துங்கள்.

ஏனெனில் உங்களுது பாசத்தையும் நேசத்தையும் வெளிபடுத்த உங்களுக்கு இரண்டாவது வாய்ப்பு கிடைக்காமல் போகலாம்!!!!

பிடித்திருந்தால் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்....

இல்லத்தரசிகள் கேஸ் சிலிண்டர் பற்றி கண்டிப்பாக தெரிந்து வைத்திருக்க வேண்டிய ஒன்றுநேற்று இரவு நல்ல மழை டிபன் இட்லி சாம்பார...
15/05/2025

இல்லத்தரசிகள் கேஸ் சிலிண்டர் பற்றி கண்டிப்பாக தெரிந்து வைத்திருக்க வேண்டிய ஒன்று

நேற்று இரவு நல்ல மழை டிபன் இட்லி சாம்பார். மாவை ஊத்தி அடுப்பில் வைத்த கொஞ்ச நேரத்தில் கேஸ் நின்று விட்டது.

உடனே புது சிலிண்டரை மாத்தினேன்.

வைத்த உடனே கேஸ் லீக் ஆகியது.

உடனே எல்லாவற்றையும் நிறுத்தி விட்டு யோசிக்க, அப்போது நேரமோ ஒன்பது மணி.

மெக்கானிக்கை எங்கே தேடுவது?,

உடனடியாக கூகுளில் தேட எமர்ஜென்சி கேஸ் லீக்கேஜ் என்றால் 1906 என்ற எண்ணை தொடர்பு கொள்ள வேண்டும் என அறிந்து அதற்கு ஃபோன் செய்தேன்.

ஒரு அதிகாரி பேசினார்.

கேஸ் புக் செய்யும் பதிவு செய்த ஃபோன் நம்பரை கேட்டார்.

நான் நம்பரை சொன்னவுடன் எனது பெயர் முகவரி மற்றும் டீலர் பெயர் இவற்றை கூறி நம்முடன் சரிபார்த்து விட்டு சற்று நேரத்தில் ஆள் வருவார் எனவும் சிலிண்டரில் பிரச்னை என்றால் எதுவும் பணம் தரத் தேவையில்லை , ரெகுலேட்டர் ட்யூப் இவற்றில் பழுது இருந்தால் அதற்கான பணம் தர வேண்டும் என்றார்.

சில நொடிகளில் எனக்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது.

அதில் புகார் எண், மெக்கானிக்கின் தொடர்பு எண், வேலை முடிந்ததும் அவரிடம் கூற வேண்டிய ஒடிபி எண் ஆகியவை இருந்தது.

பத்து நிமிடத்தில் மெக்கானிக் என்னை தொடர்பு கொண்டு வழியை கேட்டு கொண்டார்.

வீட்டுக்கு வந்து சிலிண்டரை சோதித்து வாஷர் இல்லை எனவும் கூறி புதிய வாஷரையும் மாற்றி விட்டு அடுப்பை பற்றவைத்து சோதித்து எல்லாம் நன்றாக உள்ளது.

இனி பயமில்லை என்று சொல்லி அந்த ஒடிபி எண்ணை கேட்டு உடனே அதை வாட்ஸ்அப்பில் அனுப்பி வைத்தார்.

இதற்காக நான் பணம் தந்தபோது அதை வேண்டாம் என மறுத்து விட்டார்.

அடுத்த ஜந்து நிமிடத்தில் எனக்கு ஃபோன் செய்து தங்களது புகார் சரியாகி விட்டதா என்று விசாரித்தனர்.

எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது.

இந்த சேவை பற்றி எனக்கு இதுவரை தெரியாது. அற்புதமான சேவை.

இது நம்மில் பலருக்கு தெரிந்து இருந்தாலும் தெரியாதவர்களுக்காக!!

இறக்கும் முன் தனக்கு தானே பூச்சூடி மகிழும் நூற்றாண்டு வாழ்ந்த பனைமரம்...! ❤️
15/05/2025

இறக்கும் முன் தனக்கு தானே பூச்சூடி மகிழும் நூற்றாண்டு வாழ்ந்த பனைமரம்...! ❤️

இதைப் படிக்கிற உங்களுக்கு ஒரு நிமிஷம் தலை சுத்தலாம்.. "இத்தனை கோடி வருமானமா?" அப்படின்னு ஆச்சரியத்துல உறையலாம். ஆனா அதான...
15/05/2025

இதைப் படிக்கிற உங்களுக்கு ஒரு நிமிஷம் தலை சுத்தலாம்.. "இத்தனை கோடி வருமானமா?" அப்படின்னு ஆச்சரியத்துல உறையலாம். ஆனா அதான் உண்மை..

*********

என் கூட படிச்ச நண்பன்ல ஒருத்தன் இன்னைக்கு 'Blink It' அப்படிங்கற ஒரு நிறுவனத்துல ஸ்டோர் மேனேஜரா இருக்கான். நேத்தைக்கு நாங்க படத்துக்கு போயிட்டு வரும்போது, அவன் கடையைப்பத்தி பேசிட்டு இருந்தோம்.. அப்போ அவன் சொன்ன சில தகவல்கள் எல்லாம் தலை சுத்துற அளவுக்கு இருந்துச்சு..

ஆக்சுவலா Blink It' App'ல ஒரு நாளைக்கு அவங்களுக்கு 1500'ல இருந்து 2000 ஆர்டர் போகுதாம்.. ஒரு ஆர்டரோட Average billing Cost 300 ரூபாய்'ல இருந்து 500 ரூபாய் வரைக்கும் இருக்குமாம்.. 100 ரூபாய், 150 ரூபாய், 500 ரூபாய், 1000 ரூபாய், 5000 ரூபாய் கூட இருக்கலாம்... ஆனா ஆவரேஜ் காஸ்ட் அப்படின்னு எடுத்துக்கிட்டீங்கன்னா, ஒரு 300 ரூபாய்'ன்னு வச்சுக்கலாம்..

ஒரு ஆர்டருக்கு 300 ரூபாய்... 2000 ஆர்டருக்கு கிட்டத்தட்ட 6 லட்சம் ரூபாய் வருது. ஒரு நாளைக்கு இவ்ளோவாடா பண்ணுறாங்க'? அப்படின்னு கேட்டேன். "ஆமா மச்சான். சென்னைலையே நாங்க நாலாவது அதிகமா சேல் பண்ற ஸ்டோர்" அப்படின்னு சொன்னான்.

"மக்கள் அவ்ளோ ஆர்டர் பண்றாங்களாடா?"ன்னு கேட்டேன்.

"அட நீ வேற மச்சான். 25 ரூபா பாலுக்கு 30 ரூபாய் சர்வீஸ் சார்ஜ் கொடுத்து நூத்துக்கணக்குல வாங்குறாங்கடா'ன்னு சொன்னான்.. செம ஷாக் ஆச்சு எனக்கு...

"சரிடா சென்னையில மட்டும் உங்களுக்கு எத்தனை ஸ்டோர் இருக்கு?"ன்னு கேட்டேன்..

"40 இருக்கு"ன்னு சொன்னான்...

"

இவனோட ஒரு ஸ்டோர்ல, ஒரு நாளைக்கு ஆவரேஜா அஞ்சு லட்ச ரூபாய்'க்கு sale ஆகுது.. அப்போ ஒரு மாசத்துக்கு கிட்டத்தட்ட ஒன்றரை கோடி ரூபாய்.. இவன் ஒரு ஸ்டோர்ல ஒன்றரை கோடி ரூபாய்'ன்னா, இவங்க கம்பெனியோட Branches 40 இருக்கு.. அப்படின்னா எப்படி பார்த்தாலும் ஒரு மாசத்துக்கு இந்த கம்பெனி Earn பண்ற தொகை மட்டும் 60லருந்து 75 கோடி ரூபாய்... (தமிழ்நாடு முழுக்க கிளைகள் திறக்க வேலைகள் போயிட்டு இருக்காம்)

ஒரே ஒரு App'ல நாம கிளிக் பண்ணி ஆர்டர் பண்ற வேல்யூ மட்டும் 75 கோடி ரூபாய்.. அதுவும் வெறும் 40 பிராஞ்ச்ல.. இவங்களே பின்கோடுக்கு ரெண்டு பிராஞ்ச்'ன்னு ஆரம்பிச்சா? தலை சுத்துதுல...

இதுல நாம கவனிக்க வேண்டிய விஷயம் என்னன்னா.... வெளியே போய் பர்ச்சேஸ் பண்ணாம வீட்டுக்குள்ள இருந்தபடியே இவங்க வாங்கற மளிகைப் பொருட்களுடைய வேல்யூ மட்டும் 75 கோடி ரூபாய்(அதுவும் 5% கூட கிடையாது).. இங்க Blink it மட்டும்தான்'னு கிடையாது..Insta Mart, Zepto, Big basket'ன்னு மளிகை சாமான ஆன்லைன்ல வாங்குறதுக்கு மட்டும் நிறைய App's இருக்கு.

ஒரு ஆப்'ல 75 கோடி ரூபாய்'னா இன்னும் எத்தனை எத்தனை App'ல மக்கள் வெளியே போகாம வீட்டுல இருந்து மளிகை பொருட்களை ஆர்டர் பண்ணி வாங்கிட்டு இருக்கான்னு யோசிச்சு பாருங்க... அப்போ ரெகுலரா சூப்பர் மார்க்கெட் வச்சு, கடை வெச்சு ஆஃப்லைன் பர்சேஸ்'ல கடை வெச்சிட்டு இருக்குற அவ்வளவு பேரோட வருமானமும், இந்த நிறுவனங்களுக்குத்தான் போய் சேருது.. இவ்ளோ வருமானமும் நம்ம ஊரு ஆட்களுக்கு போயிட்டு இருந்தது.

சமீப காலமா நீங்க கவனிச்சு பார்க்கலாம். நிறைய இடங்களில் பெரிய பெரிய சூப்பர் மார்க்கெட் எல்லாமே மூடப்பட்டுட்டே வந்துட்டு இருக்கும். அதுக்கு காரணம் என்னன்னு பார்த்தீங்கன்னா, இந்த விஷயம்தான். சென்னையில Forum மால்ல இருந்த ஸ்டார் பஜார், அது ஆரம்பத்துல மிகப்பெரிய ஸ்பேஸ்ல இருந்துச்சி. அப்புறம் அது Spar'ஆ மாறுச்சி... இப்போ அதையும் பாதியா சுருக்கி, ஸ்பாருக்கு ஒரு பக்கமும், டெக்கத்லான்'க்கு ஒரு பக்கமும் கொடுத்தாங்க. இப்போ அதே ஸ்பார இன்னும் சுருக்கி, சின்ன இடமா மாத்தி இருக்காங்க...

அதாவது ஆஃப்லைன்ல போய்'த்தான் பொருள் வாங்கணும் அப்படிங்கிற மக்களோட எண்ணம் தவிடு பொடியா உடைஞ்சுக்கிட்டே வருது. ஒரு App'ஐ உருவாக்கி அதன் மூலமா சம்பாதிக்க ஆரம்பிச்சா, அன்லிமிடெட்டா நீங்க சம்பாதிக்கலாம் அப்படிங்கிறதுக்கு இதை விட வேற உதாரணமே இல்ல.

'எதிர்காலத்துல சூப்பர் மார்க்கெட் வைக்கலாம்' நேர்ல வந்து மக்கள் பர்ச்சேஸ் பண்ணுவாங்க' அப்படிங்கிற எண்ணத்தை இந்த App'களோட வெற்றி சுக்குநூறா உடைக்குது... எப்பவுமே அட்வான்ஸா திங்க் பண்றவன் ஜெயிச்சு போயிட்டே இருப்பான் அப்படி'ங்கிறதுக்கு இது ஒரு உதாரணம்.

நம்ம கண்ணுக்கே தெரியாம மிகப்பெரிய கோடீஸ்வரர்களை நாம் உருவாக்கிக்கிட்டு இருக்கோம். மொபைல்ல 24 மணி நேரமும் ரீல்ஸ் பார்த்துட்டு கடலைய போட்டுட்டு இருக்காம இந்த மாதிரி App உருவாக்குற டெக்னிக்கை கத்துக்கிட்டா எதிர்காலம் இன்னும் சிறப்பா இருக்கும்ன்னு நம்பலாம்..

பால் வாங்குறதுக்கு கூட வெளியே போகணுமா'ங்கிற மக்களோட சோம்பேறி'த்தனத்தை மூலதனமா வெச்சா, தலைமுறை தலைமுறையா கோடீஸ்வரரா ஆகலாம் போல..I

Address

3 Sami Street
Chennai
600001

Website

Alerts

Be the first to know and let us send you an email when மணி மேகலை posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category