VTV

VTV VTV is a infotainment, devotional, Music, daily horoscope, astrology channel.

வெள்ளிக்கிழமை மங்களம் அருளும் அம்மன் வழிபாடு..நமக்கு வாழ்க்கையில் இருக்கும் தீர்க்க முடியாத துன்பங்கள் கூட வெள்ளிக்கிழமை...
19/06/2025

வெள்ளிக்கிழமை மங்களம் அருளும் அம்மன் வழிபாடு..

நமக்கு வாழ்க்கையில் இருக்கும் தீர்க்க முடியாத துன்பங்கள் கூட வெள்ளிக்கிழமை அன்று துர்க்கை அம்மனை வழிபட்டால் தீரும். பெண்களுக்கு மாங்கல்ய பலம் அதிகரிக்கும். மற்ற நாட்களைவிட துர்க்கை அம்மன் வழிபாடு வெள்ளிக்கிழமை மிகவும் சிறப்பானது என்கிறது சாஸ்திரம்.

துர்க்கையம்மன் வழிபாடு என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒன்றுதான். ஆனால் செவ்வாய்க் கிழமை அன்றும், வெள்ளி கிழமை அன்றும் ராகுகால நேரத்தில் மட்டும்தான் துர்க்கை அம்மன் வழிபாட்டினை முறைப்படி செய்து வருகின்றோம். ஆனால் வாரத்தில் இருக்கும் 7 நாட்களும் துர்க்கை அம்மனை வழிபட்டு வந்தால் வாழ்வில் அனைத்து நலன்களையும் பெற முடியும்.

கிரகங்களில் ராகு கேதுவினால் ஜாதக ரீதியாக பிரச்சனை இருக்குமேயானால் துர்க்கை அம்மன் வழிபாடு மிகச் சிறப்பான பலனை தரும் என்பதும் குறிப்பிடத்தக்கது. தோஷங்கள் இருந்தாலும், இல்லாவிட்டாலும் துர்க்கையம்மனை முறையாக வெள்ளி கிழமைகளிலும் வழிபடுதல் சிறப்பு…

வெள்ளிக்கிழமைகளில் ராகுகால நேரம் ஆன 10.30 மணிக்கு மேல் 12 மணிக்குள் தீபம் ஏற்ற வேண்டும். நல்லெண்ணெய் தீபம் ஏற்றலாம். நெய் தீபமும் ஏற்றலாம். பஞ்சு திரி போட்டு தீபம் ஏற்றுவது மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்று. தேங்காய் சாதம் அல்லது பாயாசம் வெண்பொங்கல் நைவேத்யமாக படைத்து சிறப்பான ஒன்று.

தனம் தரும் கல்வி தரும் ஒரு நாளும் தளர்வு அறியா
மனம் தரும் தெய்வ வடிவும் தரும் நெஞ்சில் வஞ்சம் இல்லா
இனம் தரும் நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே
க்னம் தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே

19-06-2025 வியாழக்கிழமை சாய்பாபா வழிபாடு:- வியாழக்கிழமை என்றாலே அனைவருக்கும் முதலில் நினைவு வரும் கடவுளாக சாய்பாபா மாறிவ...
18/06/2025

19-06-2025 வியாழக்கிழமை சாய்பாபா வழிபாடு:-
வியாழக்கிழமை என்றாலே அனைவருக்கும் முதலில் நினைவு வரும் கடவுளாக சாய்பாபா மாறிவிட்டார், கடந்த பத்தாண்டுகளில் சாய்பாபாவை வழிபடுபவர்களின் எண்ணிக்கை பெரிய அளவில் அதிகரித்துள்ளது. வியாழக்கிழமையில் சாய்பாபாவை வழிபடுவதன் மூலம், மிகப்பெரிய நெருக்கடிகள் கூட நீங்கும், மேலும் மனதின் விருப்பங்களும் நிறைவேறும்.

சாய் பாபாவின் சிறப்பு ஆசிகளைப் பெற, வியாழன் அன்று விரதம் இருப்பது நன்மை தரும். இது தவிர இந்த நாளில் சாய்பாபாவை வழிபட வேண்டும் என்ற விதியும் உள்ளது. இது உங்கள் வாழ்க்கையில் உள்ள அனைத்து பிரச்சனைகளையும் நீக்கும்.

வியாழன் அன்று வீட்டின் அருகில் உள்ள சாய் பாபா கோவிலுக்கு சென்று நெய் தீபம் ஏற்றவும். இது தவிர, சாய்பாபாவை வணங்கும் போது, சாய் கதாவை மனதிலிருந்து கூறவும். இதன் மூலம் நீங்கள் நல்ல பலன்களைப் பெறுவீர்கள்.

சாய் பூஜையின் போது சாய் பாபா தொடர்பான மகா மந்திரங்களை உச்சரிக்க வேண்டும். இந்த விசேஷ நாளில் இதயத்தில் உண்மையான பக்தியுடன் சாய்பாபாவின் பஜனையும் கீர்த்தனையும் செய்யும் பக்தர்களின் அனைத்து விருப்பங்களையும் நிறைவேற்றுவதாக நம்பப்படுகிறது.

ஷீரடியில் உள்ள பிரசித்தி பெற்ற சாய்பாபா கோவிலிலுக்குச் சென்று பாபாவை தரிசனம் செய்யும் அனைத்து பக்தர்களின் துக்கங்கள், வலிகள் மற்றும் நோய்கள் அனைத்தும் நீங்குவதாக நம்பிக்கை உள்ளது. சாய் பாபாவின் இந்த திருத்தலத்திற்கு வரும் எந்தவொரு பக்தரும் வெறுங்கையுடன் செல்வதில்லை என்று நம்பப்படுகிறது. அவரது மனம் எப்போதும் மகிழ்ச்சியால் நிறைந்திருக்கும். மஞ்சள் நிறம் வியாழக்கிழமைக்கு மிகவும் அதிர்ஷ்டமான நிறமாக கருதப்படுகிறது. இந்த நிறம் சாய் பாபாவுக்கும் பிடித்த நிறமாக இருக்கிறது. எனவே இந்த நாளில் சாய் பாபா கோவிலுக்கு செல்லும்போது மஞ்சள் நிறம் அணிந்து செல்வது கூடுதல் சிறப்பாக இருக்கும்.

ஸ்ரீ ஷீரடி சாய் பாபா காயத்ரி மந்திரம்:
ஓம் ஷிர்டி வாசாய வித்மஹே
சச்சிதானந்தாய தீமஹி
தன்னோ சாய் ப்ரசோதயாத்

18-06-2025 விநாயகர் வழிபாடு புதன் கிழமை:வாழ்வில் ஏற்படும் தடைகள், துன்பங்களை போக்க கூடிய சக்தி படைத்தவர் விநாயகப் பெரும...
17/06/2025

18-06-2025 விநாயகர் வழிபாடு புதன் கிழமை:

வாழ்வில் ஏற்படும் தடைகள், துன்பங்களை போக்க கூடிய சக்தி படைத்தவர் விநாயகப் பெருமான் என்பது அனைவருக்கும் தெரியும். முழு முதற்கடவுளாக இருக்கும் விநாயகப் பெருமானுக்கு சில எளிய வழிபாடுகளை தொடர்ந்து செய்து வந்தாலே நாம் நினைத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும். விநாயகப் பெருமான் எளிமையான கடவுள். இதனால் அவருக்கு செய்யும் வழிபாடுகளும் எளிமையாகவே இருக்கும்.

கிழமையில் விநாயகர் வழிபாட்டினை துவக்க வேண்டும். அதிலிருந்து சரியாக 7 நாட்கள் தொடர்ந்து, தடை இல்லாமல் இந்த வழிபாட்டினை செய்ய வேண்டும். வீட்டில் உள்ள விநாயகர் படம் அல்லது கோவிலில் உள்ள விநாயகருக்கு மஞ்சள், குங்குமம் படைத்து தீபம் ஏற்ற வேண்டும். இந்த தீபத்தின் திரியில் வெற்றிவேரையும் சேர்த்து திரித்து விளக்கேற்ற வேண்டும். வெற்றிவேர் அனைத்து நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கக் கூடியதாகும். நல்லெண்ணெய் ஊற்றி இந்த தீபத்தை ஏற்றி வைத்து, விநாயகர் மூல மந்திரம் மற்றும் காயத்ரி மந்திரத்தை 11 முறை சொல்லி வழிபட வேண்டும்.

"ஓம் ஏக தந்த்தாய வித்மஹே
வக்ர துண்டாய தீமகி
தன்னோ தந்த் ப்ரஜோதயாத்"

இந்த மந்திரங்களைச் சொல்லி விநாயகரின் காலடியில் சிறிது அருகம்புல்லை வைத்து வழிபட வேண்டும். தினமும் இந்த அருகம்புல்லை மாற்றி விட்டு, புதிய அருகம்புல் வைத்து வழிபட வேண்டும். நைவேத்தியமாக இரண்டு ஏலக்காய் மற்றும் தண்ணீர் வைத்து வழிபட வேண்டும். ஏதாவது ஒரே ஒரு கோரிக்கையை முன் வைத்து, இந்த வழிபாட்டினை தொடர்ந்து செய்து வந்தால் வேண்டுதல் நிச்சயம் நிறைவேறும்.

17-06-2025 செவ்வாய்க்கிழமை முருகன் வழிபாடு :-செவ்வாய்க்கிழமையன்று முருகனை வழிபடுவது ஒரு தனிச்சிறப்பு மிக்க ஆன்மீக பழக்கம...
16/06/2025

17-06-2025 செவ்வாய்க்கிழமை முருகன் வழிபாடு :-

செவ்வாய்க்கிழமையன்று முருகனை வழிபடுவது ஒரு தனிச்சிறப்பு மிக்க ஆன்மீக பழக்கமாகும். ஏன் இந்த நாளில் குறிப்பாக முருகனை வழிபட வேண்டும் என்பதற்கு பின்னால் பல காரணங்கள் உள்ளன
செவ்வாய் கிரகத்திற்கும் முருகனுக்கும் ஒரு நெருக்கமான தொடர்பு உண்டு. ஏனெனில் செவ்வாய் கிரமானது போர் மற்றும் தைரியத்தின் அடையாளமாகக் கருதப்படுகிறது. ஜோதிடத்தில், செவ்வாய் கிரகம் துணிச்சல், வீரம், வெற்றி, நிலம், சொத்து போன்றவற்றைக் குறிக்கிறது. செவ்வாய்க்கிழமை என்பது செவ்வாய் கிரகத்திற்கு உரிய நாள். முருகன், தமிழ் கடவுள்களில் வீரம் மற்றும் யுத்த திறன்களுக்கான கடவுளாக திகழ்கிறார். எனவே, செவ்வாய் கிரகத்துடன் முருகனுக்கு ஒரு நேரடி இணைப்பு உள்ளது. எனவே, செவ்வாய்க்கிழமையன்று அவரை வழிபடுவது மிக சிறப்பாக கருதப்படுகிறது.
முருகன், அறிவு, ஞானம், சக்தி, வளமை அருள்பவர் என்று நம்பப்படுகிறது. அதனால் செவ்வாய்க்கிழமை முருகனை வழிபடுவதன் மூலம், அவரது அருளைப் பெறலாம்.
கல்வி, வேலை, திருமணம், வியாபாரம் போன்ற துறைகளில் வெற்றி பெற செவ்வாய்க்கிழமை முருகனை வழிபடுவது நல்லது.
நோய், கடன், எதிரிகள் போன்ற துன்பங்களில் இருந்து விடுபடவும் முருகனை வழிபடலாம்.
முருகப் பெருமானை வழிபடுவதால் மன அமைதியும், வாழ்வில் தெளிவும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

தீய எண்ணங்கள், தடைகள் நீங்கவும் முருகன் அருள் உதவும் என்று நம்பப்படுகிறது.
குறிப்பாக, செவ்வாய் தோஷம் உள்ளவர்கள், அந்த தோஷத்தின் தீய விளைவுகளில் இருந்து விடுபட செவ்வாய்க்கிழமை முருகனை வழிபடுவது நல்லது.

முருகன் மூல மந்திரம் :
"ஓம் ஸெளம் சரவணபவ
ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம்
க்லெளம் ஸெளம் நமஹ"

சிவ வழிபாடு செய்வதும், சிவனின் லிங்க ரூபத்திற்கு தொடர்ந்து பூஜை செய்வதும் ஆன்ம பலத்தை அதிகரிக்கச் செய்யும். லிங்கத்திற்...
15/06/2025

சிவ வழிபாடு செய்வதும், சிவனின் லிங்க ரூபத்திற்கு தொடர்ந்து பூஜை செய்வதும் ஆன்ம பலத்தை அதிகரிக்கச் செய்யும். லிங்கத்திற்கு பால், தயிர், தேன், தண்ணீர், சந்தனம் ஆகியவற்றால் அபிஷேகம் செய்வது, மலர்கள் படைத்து, பூஜை செய்வது ஆகியன சிவனின் மனதை குளிர செய்யும். சிவலிங்கம் என்பது சிவனின் அருவுருவமாகும். இதனை அபிஷேகம் செய்து வழிபடுவதன் மூலம் சிவனுக்கு மிகவும் நெருக்கமானவர்களாக நாம் மாற முடியும்.

சிவனை அபிஷேக பிரியர் என்பார்கள். பலவிதமான பொருட்களால் அவருக்கு அபிஷேகம் செய்து, அவரை குளிர்ப்பது அவருக்கு மிகவும் விருப்பமான ஒன்றாகும். பால், தேன், மஞ்சள், சுத்தமான தண்ணீர் கொண்டு அபிஷேகம் செய்வதும், வில்வத்தால் அர்ச்சிப்பதும் சிவனின் அருளை பெற்றுத் தரக் கூடியதாகும். கங்கை நீரால் சிவனுக்கு அபிஷேகம் செய்து மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.

ருத்ராட்சம் சிவனின் அம்சமாக கருதப்படுவதாகும். இதை அணிவதால் அளவில்லாத பலன்களை பெற முடியும். ருத்ராட்சம் மனித குலத்திற்கு ஈசன் அளித்த அருட்கொடையாகவே கருதப்படுகிறது. ருத்ரன், அக்ஷம் என்ற சமஸ்கிருத சொற்களின் இணைவே ருத்ராட்சம் ஆகும். சிவனின் கண்ணீரில் இருந்து தோன்றி ருத்ராட்சத்தை அணிந்து கொள்வதால் சிவனின் அருள் நமக்கு பரிபூரணமாக கிடைக்கும். சரியான முறைகளை பின்பற்றி ருத்ராட்சத்தை அணியும் போது அதன் பலன்கள் பல மடங்காக அதிகரிக்கும்.

15-06-2025 ஞாயிற்றுக்கிழமை பைரவர் வழிபாடு:-காலத்தின் கடவுளான கால பைரவர் தலை விதியை மாற்றக்கூடிய ஆற்றல் கொண்டவர். சிவபெரு...
14/06/2025

15-06-2025 ஞாயிற்றுக்கிழமை பைரவர் வழிபாடு:-

காலத்தின் கடவுளான கால பைரவர் தலை விதியை மாற்றக்கூடிய ஆற்றல் கொண்டவர். சிவபெருமானின் அம்சமாக பைரவர் கருதப்படுகிறார். காசி நகரின் காவல் தெய்வம் இவர். நவ கிரகங்களையும், நட்சத்திரங்களையும் கட்டுப்படுத்துபவர் இவர்தான்.
காசியில், காலபைரவருக்கு வழிபாடுகள் முடிந்த பிறகே காசி விஸ்வநாதருக்கு வழிபாடுகள் நடைபெறும் காசியாத்திரை செல்பவர்கள் கூட இறுதியில் காலபைரவரை தரிசித்தால்தான் காசி யாத்திரை பூரணம் அடைவதோடு யாத்திரையின் பலமும் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.

ஞாயிறு அன்று ராகு கால வேளையில், எலுமிச்சம் பழ மாலை சாற்றி விபூதியால் அபிஷேகம் செய்து பின்பு வடைமாலை சாற்றி எள் கலந்த அன்னம் இனிப்புப் பண்டங்கள் சமர்ப்பித்து வழிபட வேண்டும். திங்கள் அன்று ராகு கால வேளையில் அல்லி மலர் புனுகு சாற்றி பாகற்காய் கலந்த அன்னம் நைவேத்தியம் செய்ய வேண்டும். செவ்வாய் அன்று ராகு கால வேளையில் செவ்வரளி மாலை சாற்றி .துவரம் பருப்பு கலந்த அன்னம் நைவேத்தியம் செய்ய வேண்டும். புதன் கிழமை ராகு கால வேளையில், மருக்கொழுந்து மாலை சாற்றி பயிற்றம் பருப்பு கலந்த அன்னம் நைவேத்தியம் செய்ய வேண்டும்.

சனி பகவானுக்கு குருவே பைரவர் தான் என்பதால், பைரவரை வழிபடுபவர்களுக்கு சனி பகவானால் எந்தவித இடைஞ்சலும் நேராது. சிவபெருமானின் திருக்கோயில்களில் வடகிழக்கு திசையினில் பைரவருக்குத் தனி சன்னதி இருக்கும். ஆலயங்களில் இருக்கும் பைரவரை எந்த நேரத்தில் வழிபட்டாலும் அதற்குண்டான பலன் நிச்சயம் உண்டு. கால பைரவரை வழிபடுவோம் சகலவிதமான கவலைகளில் இருந்து விடுபடுவோம். பைரவ காயத்திரியைக் கூறுவதால் வாழ்வில் சகல துன்பங்களும் விலகிப் போகும்.

ஸ்ரீ பைரவர் காயத்ரி மந்திரம் :

ஓம் சூல ஹஸ்தாய வித்மஹே
ஸ்வாந வாஹாய தீமஹி
தந்நோ பைரவ: ப்ரசோதயாத்

இந்த மந்திரத்தை தினமும் சொல்வதால் நம் தீராத வினைகள் எல்லாம் தீர்ந்து நன்மை விளையும் என்பது ஐதீகம். கொடிய வல்வினைகளையும் நொடியில் போக்கும் தன்மை கொண்டவை பைரவர் காயத்ரி மந்திரம்.

14/06/2025

அயோத்தி ராமன் வந்தான் | 16-06-2025 | PROMO

சனிக்கிழமை என்பது பெருமாளுக்கு உகந்த நாள் என்றும் பெருமாளை வணங்கி வழிபடுவதற்கு உரிய நாள் என்றும் போற்றப்படுகிறது. அதனால்...
13/06/2025

சனிக்கிழமை என்பது பெருமாளுக்கு உகந்த நாள் என்றும் பெருமாளை வணங்கி வழிபடுவதற்கு உரிய நாள் என்றும் போற்றப்படுகிறது. அதனால்தான் மற்ற நாட்களை விட சனிக்கிழமைகளில், திருப்பதி முதலான பெருமாள் குடிகொண்டிருக்கும் க்ஷேத்திரங்களில், வழக்கத்தை விட மக்கள் குவிகிறார்கள்.

சனிக்கிழமைகளில், அருகில் உள்ள பெருமாள் கோயிலுக்குச் சென்று துளசி மாலை சார்த்தி வேண்டிக்கொள்வதும் துளசி தீர்த்தம் பருகுவதும் ரொம்பவே மகத்துவம் வாய்ந்தது. அதேபோல், குடும்பத்தில் ஏதேனும் வேண்டுதல் செய்பவர்கள், அதாவது குடும்பத்தில் நல்லது நடக்கவேண்டும் என்று எந்த விஷயத்துக்காகவேனும் பிரார்த்தனை செய்து, மஞ்சள் துணியில் ஒருரூபாய் அல்லது பதினொரு ரூபாய் முடிந்து வைப்பார்கள். பெருமாளை மனதில் நினைத்து, சனிக்கிழமைகளில் வேண்டிக்கொண்டு, மஞ்சள் துணியில் காசு முடிந்து வைத்து பிரார்த்திக்கிற பக்தர்களும் இருக்கிறார்கள்.

அதேபோல ஒவ்வொரு மாதமும் இரண்டு ஏகாதசிகள் வரும். அதாவது வளர்பிறை ஏகாதசி, தேய்பிறை ஏகாதசி என்று வரும். இந்த இரண்டு ஏகாதசிகளுமே, பெருமாள் வழிபாட்டுக்கு உரிய திதிகளாகப் போற்றப்படுகின்றன. ஏகாதசியில் விரதம் தொடங்கி மறுநாளான துவாதசியில் விரதத்தை பூர்த்தி செய்கிற பெருமாள் பக்தர்களும் இருக்கிறார்கள்.

இன்று காலையில் பெருமாளுக்கு விளக்கேற்றி வேண்டிக்கொண்டு, காலை அல்லது மாலை வேளையில், அருகில் உள்ள பெருமாள் கோயிலுக்குச் சென்று, துளசி மாலையும் தாயாருக்கு வெண்மை நிற மலர்களும் சார்த்தி கண்ணாரத் தரிசித்து மனதார வேண்டிக்கொள்ளுங்கள். வேண்டியதையெல்லாம் தந்தருளுவார் வேங்கடவன். மங்கல காரியங்களில் இருந்த தடைகளையெல்லாம் நீக்கித் தந்தருளுவார் மகாலட்சுமி தாயார்!

முடிந்தால் இந்த நன்னாளில், பெருமாளுக்கு புளியோதரை அல்லது தயிர்சாதம் நைவேத்தியம் செய்து, பிரார்த்திப்பதும் விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்து பூஜிப்பதும் இழந்த செல்வங்களைத் தந்தருளும் என்பது ஐதீகம்!

13-06-2024 வெள்ளிக்கிழமை அம்மன் வழிபாடு:-இந்த அண்டசராசரத்தை பாதுகாக்கும் தேவியாகவும், சக்தியாகவும் இருப்பது துர்கையம்மனே...
12/06/2025

13-06-2024 வெள்ளிக்கிழமை அம்மன் வழிபாடு:-

இந்த அண்டசராசரத்தை பாதுகாக்கும் தேவியாகவும், சக்தியாகவும் இருப்பது துர்கையம்மனே. சமஸ்கிருதத்தில் துர்கா என்றால் தகர்க்க முடியாத கோட்டை என்று பொருள். துர்கையை சிலர் துர்கதினாஷனி என்றும் அழைப்பார்கள் அதன் பொருள் அனைத்து துயரங்களையும் நீக்குபவர் என்பதாகும். துர்கா தேவிதான் நம்மை பாதுகாப்பாக பராமரிப்பவர், அதேசமயம் தேவைப்பட்டால் அழிக்கவும் செய்பவர்.

துர்க்கையம்மன் வழிபாடு என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒன்றுதான். ஆனால் செவ்வாய்க் கிழமை அன்றும், வெள்ளி கிழமை அன்றும் ராகுகால நேரத்தில் மட்டும்தான் துர்க்கை அம்மன் வழிபாட்டினை முறைப்படி செய்து வருகின்றோம். ஆனால் வாரத்தில் இருக்கும் 7 நாட்களும் துர்க்கை அம்மனை வழிபட்டு வந்தால் வாழ்வில் அனைத்து நலன்களையும் பெற முடியும்.

நமக்கு வாழ்க்கையில் இருக்கும் தீர்க்க முடியாத துன்பங்கள் கூட வெள்ளிக்கிழமை அன்று துர்க்கை அம்மனை வழிபட்டால் தீரும். பெண்களுக்கு மாங்கல்ய பலம் அதிகரிக்கும். மற்ற நாட்களைவிட துர்க்கை அம்மன் வழிபாடு வெள்ளிக்கிழமை மிகவும் சிறப்பானது என்கிறது சாஸ்திரம்.

கிரகங்களில் ராகு கேதுவினால் ஜாதக ரீதியாக பிரச்சனை இருக்குமேயானால் துர்க்கை அம்மன் வழிபாடு மிகச் சிறப்பான பலனை தரும் என்பதும் குறிப்பிடத்தக்கது. தோஷங்கள் இருந்தாலும், இல்லாவிட்டாலும் துர்க்கையம்மனை முறையாக வெள்ளி கிழமைகளிலும் வழிபடுதல் சிறப்பு… வெள்ளிக்கிழமைகளில் ராகுகால நேரம் ஆன 10.30 மணிக்கு மேல் 12 மணிக்குள் தீபம் ஏற்ற வேண்டும். நல்லெண்ணெய் தீபம் ஏற்றலாம். நெய் தீபமும் ஏற்றலாம். பஞ்சு திரி போட்டு தீபம் ஏற்றுவது மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்று. தேங்காய் சாதம் அல்லது பாயாசம் வெண்பொங்கல் நைவேத்யமாக படைத்து வழிபடுவது சிறப்பான ஒன்று.

துர்கா தேவி மந்திரம்:-

ஓம் காத்யாயனய வித்மஹே
கன்யாகுமாரி தீமஹி
தந்நோ துர்கி ப்ரசோதயாத்

எனும் துர்காதேவியின் காயத்ரி மந்திரத்தை 11 முறை ஜபித்து துர்காதேவிக்கு விளக்கேற்றி வழிபடுங்கள். துர்கா காயத்ரியை, 11 முறை 24 முறை அல்லது 54 முறை அல்லது 108 முறை ஜபிக்கலாம். துர்கைக்கு செந்நிற மலர்கள் சூட்டி வழிபடுங்கள். இதுவரை இருந்த எதிர்ப்புகளையெல்லாம் தீர்த்து வைப்பாள் துர்காதேவி.

Address

44/55 5th Cross Street, Trustpuram, Kodambakkam
Chennai
600024

Website

Alerts

Be the first to know and let us send you an email when VTV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share