Independent Film Festival of Chennai - IFFC

Independent Film Festival of Chennai - IFFC Tamil Studio, the movement for good cinema functioning over thirteen years in Tamil Nadu has been or

நல்ல சினிமாக்களும், தமிழ் ஸ்டுடியோவும்...இன்று நிறைய நல்ல சினிமாக்கள் வருகிறது என்றால், அதில் தமிழ் ஸ்டுடியோவின் பங்கு அ...
23/08/2024

நல்ல சினிமாக்களும், தமிழ் ஸ்டுடியோவும்...

இன்று நிறைய நல்ல சினிமாக்கள் வருகிறது என்றால், அதில் தமிழ் ஸ்டுடியோவின் பங்கு அளப்பரியது. அதற்கான எங்கள் உழைப்பு நீண்ட நெடியது. இயக்குனர் ராம் சொன்னது போல, என்னுடைய இளமைக்காலம் முழுவதையும் அதற்காக மட்டுமே செலவழித்திருக்கிறேன். நல்ல சினிமாக்கள் வர தொடங்கியிருக்கிறது. ஆனால் அதனை பார்க்க மக்கள் வருவதில் சுணக்கம் இருப்பதால், அதையும் சரி செய்ய, இந்தாண்டு தொடக்கம் முதல் பல்வேறு முன்னெடுப்புகளை செய்து வருகிறோம். அதில் ஒன்றுதான், குழுவாக திரையரங்கம் சென்று படம் பார்த்து, அந்த படம் பற்றி விவாதிப்பது. நாளையும் கூட வாழை படத்திற்கு அவ்வாறு செல்லவிருக்கிறோம். இதில் இன்னொரு முக்கிய அம்சமாக படத்தின் தொழில்நுட்ப கலைஞரான என்னுடைய நீண்ட நாள் நண்பரான ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர் எங்களோடு வந்து படம் பார்த்து, விவாதத்தில் பங்கு பெறுகிறார். தமிழ் ஸ்டுடியோவின் இந்த முன்னெடுப்பை பார்த்த பிவிஆர் நிர்வாகம், முன்கூட்டியே சொன்னால், திரையரங்கிலேயே படம் பார்த்து, விவாதிக்க நாங்கள் இடம் தருகிறோம் என்று சொல்லியிருக்கிறார்கள். எவ்வளவு கார்ப்பரேட்டாக இருந்தாலும், தமிழ் ஸ்டுடியோவின் முன்னெடுப்புகள் அவர்களையும் இறங்கி வர செய்கிறது. ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர் போல, மற்றவர்களும் இப்படி பார்வையாளர்களோடு படம் பார்த்து விவாதிக்க முன்வரவேண்டும். அப்போது சினிமா இன்னமும் வீரியமாக, ஜனநாயகமாக மலரும். ஆனால் எல்லாரும் இப்படி முன்வருவார்களா என்று தெரியாது. ஏனெனில் முக்கியஸ்தர்கள் எல்லாரும் படத்தின் குழுவோடு சேர்ந்து பிரிவியூ ஷோ பார்த்துவிடுகிறார் பார்வையாளர்கள் எப்போதும் பார்வையாளர்களாகவே இருக்கிறார்கள். நான் பிரிவியூ ஷோவிற்கு போவதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறேன். யாரும் அழைக்கவில்லை என்பது வேறு விஷயம், அழைத்தாலும் போகும் எண்ணம் இல்லை. இயக்குநர் ராமின் பேரன்பால், நான் பிரிவியூ பார்த்த ஒரே படம், அவரது பேரன்பு மட்டுமே. அருமை நண்பர் சூர்யாவிற்காக ஜெய் பீம் படத்தையும் பிரிவியூவில் பார்த்தேன், அப்போதைய கொரோனா கால நிலவரப்படி படம் திரையரங்கிற்கு வராது என்பதால் அந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டேன்.

எனக்கு முக்கியஸ்தர்களை விட பார்வையாளர்கள் முக்கியம். அதனால்தான் இன்றுவரை என்னுடைய மாணவர்கள், பொதுமக்கள், பியூர் சினிமா உறுப்பினர்கள், தமிழ் ஸ்டுடியோ ஆர்வலர்கள் என இவர்களை கூட்டிக்கொன்டு படம் பார்க்க செல்கிறேன். எனக்கு இன்னார்தான் முக்கியமாவர்க என்றில்லை, நல்லப்படங்கள் மட்டுமே எங்கள் இலக்கு. மனிதனின் வாழ்க்கை சுவாரசியமாக இருக்க வேண்டும், தொய்வடையாமல் இருக்க வேண்டும் என்றால் அவனது வாழ்வில் விஷன் இருக்க வேண்டும். விசனரி மனிதனாக இருந்தால் வாழ்க்கையில் எப்போதும் இயங்கிக்கொண்டே இருப்போம். எனக்கு அப்படி ஒரு இயக்கம் இருக்கிறது, அந்த இயக்கத்திற்கு ஒரு விஷன் இருக்கிறது. எத்தனை நம்பிக்கை துரோகங்கள் நடந்தாலும், யார் வந்தாலும், போனாலும், எவ்வளவு அவமானப்படுத்தினாலும், அந்த விஷன் இருக்கும் வரை எங்கள் இயக்கம் மாளாது. 15 ஆண்டுகளுக்கு முன்னர் எக்மோர் ஜீவன ஜோதி அரங்கில் தமிழ் ஸ்டுடியோ குறும்பட வட்டம் என்றொரு நிகழ்வை தொடர்ந்து 8 ஆண்டுகள் நடத்தியது. அதில் வந்து பங்கேற்று பயன் அடைந்த நண்பர் ஒருவர் இன்று காலை தன்னுடைய இரண்டாவது படத்திற்கு பூஜை போட்டார், என்னையும் சிறப்பு விருந்தினராக அழைத்தார். சென்றிருந்தேன். எப்படி சார் 17 வருடங்கள் ஓயாமல் வேலை செய்துக்கொண்ட இருக்கீங்க என்றார், பதில் சொல்லவில்லை. அதே நிகழ்வில் இன்னொரு நண்பர் என்னை சந்தித்து நீங்க அருண் மோ தானே என்கிறார். ஆமாம் என்றேன். தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு, நான் எங்கள் ஊரில் இப்படி கலை-கலாச்சார நிகழ்வுகளை நடத்திக்கொண்டிருக்கிறேன். அதற்கு இன்ஸபிரேசன் நீங்கதான், நீங்க செயறத பார்த்து எங்க ஊர்ல நாங்க செஞ்சிட்டு இருக்கோம் என்றார், முந்தைய நண்பர்க கேட்ட கேள்விக்கு பதில் இதுதான் என்று நினைத்துக்கொண்டேன். அவர் எந்த ஈகோவும் இல்லாமல் நேரில் பார்த்ததும் நீங்க இன்ஸபிரேசன் என்கிறார், பலர் அப்படி சொல்வதில்லை. ஆனால் தமிழ் ஸ்டுடியோவின் இந்த 17 ஆண்டுகால செயல்பாட்டை அப்படியே பிரதி எடுத்து நடத்தும் பல அமைப்புகளை நானறிவேன். தமிழ் ஸ்டுடியோவால் உந்துதல் பெற்று இயங்கும் பல இயக்குநர்கள், பியூர் சினிமா பதிப்பித்த புத்தகங்களால் பயன்பெற்று படம் எடுத்து பெயர் வாங்கும் பல இயக்குநர்களை நானறிவேன். அனால் யாருக்கும், எங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும், குறைந்தபட்சம், இதனால் பலன் அடைந்தோம் என்று கூட சொல்ல தோன்றுவதில்லை. எங்களுக்கும் அது முக்கியமில்லை என்பதால் அப்படியே கடந்துப்போகிறோம்.

இன்று தமிழ் சினிமாவில் கதை சொல்லலில், சினிமா உருவாக்கத்தில் நேர்த்தி உருவாகிறது என்றால் அதற்கு இரண்டு காரணம், ஒன்று கட்டற்ற வலைத்தளமான யூடியூப், இன்னொன்று பியூர் சினமென நிகழ்த்திய சினிமா ஜனநாயகமாக எல்லா தொழில்நுட்ப புத்தகங்களையும் தமிழில் கொண்டு வந்தது. பல யூடியூப்சேனல்கள் எங்கள் புத்தகத்தின் உள்ளடக்கத்தை வைத்துதான் பேசிக்கொண்டிருக்கின்றன. எல்லா இடத்தில் விரவி, ஒரு புதிய அலை சினிமாவை அமைதியாக உருவாக்கிக்கொண்டிருக்கிறது தமிழ் ஸ்டுடியோ. கிரெடிட் களை நாங்கள் எதிர்பார்ப்பதில்லை. காரணம் இந்த இயக்கத்தின் விஷன் எங்களை ஓட செய்துக்கொண்டே இருக்கிறது. நீங்களும் விசனரி மனிதனாக இருங்கள், நான் சொல்வது புரியும்.

21/08/2024
கொல்கத்தாவில்  நடைபெறும் சர்வதேச திரைப்பட விழா ஒன்றில், பெங்காலி மொழி அல்லாத இந்திய குறும்படங்கள் பட்டியலில் எங்கள் குறு...
28/03/2024

கொல்கத்தாவில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழா ஒன்றில், பெங்காலி மொழி அல்லாத இந்திய குறும்படங்கள் பட்டியலில் எங்கள் குறும்படமாக The story of a casteist தெரிவாகியுள்ளது. மொத்தமே நான்கு படங்களுக்கு மட்டுமே வாய்ப்பு, அதில் ஒன்றாக தமிழ் படம் ஒன்று தெரிவாகியிருப்பது அதுவும் எங்கள் படம் என்பதில் பெரு மகிழ்ச்சி. ஏப்ரல் 10, 11 கொல்கத்தாவில் விருது வழங்கும் விழா, இதுவரை 20 விருதுகளை பெற்றிருந்த போதிலும், எல்லாமுமே வெவ்வேறு மாநிலங்கள், நாடுகள் என்பதால் போக முடியவில்லை. இந்த விழாவிற்கு போக முயற்சிக்க வேண்டும்.

the story of a casteist - 19 வது விருது!மஹாராஷ்டிராவில் உள்ள சம்பாஜிநகரில் ஆண்டுதோறும் நடைபெறும் ரீல்ஸ் சர்வதேச திரைப்பட...
22/02/2024

the story of a casteist - 19 வது விருது!

மஹாராஷ்டிராவில் உள்ள சம்பாஜிநகரில் ஆண்டுதோறும் நடைபெறும் ரீல்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் எங்கள் குறும்படமாக the story of a casteist சிறந்த குறும்படத்திற்கான இரண்டாவது பரிசை பெற்றிருக்கிறது. ஆண்டின் தொடக்கத்தில் சம்பாஜிநகரில் நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்வில் நேரில் கலந்துக்கொள்ள அழைப்பு விடுத்திருந்தார்கள். ஆனால் புத்தக காட்சி உள்ளிட்ட பல்வேறு வேலைகள் இருந்ததால் செல்ல முடியவில்லை. இன்று சான்றிதழும், கோப்பையும் அனுப்பியிருக்கிறார்கள். 1350 க்கும் மேற்பட்ட படங்கள் போட்டியிட்ட நிலையில் மாநில வாரியாக இல்லாமல் இந்திய அளவில் இரண்டாவது பரிசை பெற்றிருக்கிறது. இது எங்கள் குறும்படத்திற்கான 19 வது விருது. மகிழ்ச்சி.

குறும்படத்திற்கு 18 வது விருது என்னுடைய குறும்படமாக the story of a casteist அண்மையில் நடந்து முடிந்த ISFFA (Indian Inter...
21/02/2024

குறும்படத்திற்கு 18 வது விருது

என்னுடைய குறும்படமாக the story of a casteist அண்மையில் நடந்து முடிந்த ISFFA (Indian International Short film Festival awards) திரைப்பட விழாவில் சிறந்த குறும்படத்திற்கான மூன்றாவது பரிசை வென்றிருக்கிறது. கொல்கத்தாவில் நடைபெற்ற நிகழ்விற்கு நேரில் அழைத்தார்கள். நேரம் ஒத்துழைக்காத காரணத்தால் நேரில் செல்ல இயலவில்லை. சான்றிதழை அனுப்பியிருக்கிறார்கள். கோப்பை விரைவில் வந்து சேரும். இது என்னுடைய குறும்படத்திற்கான 18 வது விருது. தொழில்நுட்ப ரீதியாக இன்னமும் முடிவு பெறாத படம், ஆனால் அதன் கதை சொல்லல் நேர்த்திக்காக விருதுகளை வென்று வருகிறது. மகிழ்ச்சி

12/04/2023
இது சாதாரண பயிற்சிப்பட்டறை அல்ல, இந்த பயிற்சிக்குப்பிறகு ஒளிக்கும் உங்களுக்குமான உறவு முற்றிலும் மாறியிருக்கும், 19, 20 ...
17/11/2022

இது சாதாரண பயிற்சிப்பட்டறை அல்ல, இந்த பயிற்சிக்குப்பிறகு ஒளிக்கும் உங்களுக்குமான உறவு முற்றிலும் மாறியிருக்கும், 19, 20 ஆம் தேதி அதாவது வருகிற சனி மற்றும் ஞாயிறு நடக்கும் ஒளிப்பதிவு பயிற்சிப்பட்டறை பற்றி அதனை நடத்தும் ஒளிப்பதிவு மேதை பிசி ஶ்ரீராம் அவர்களின் பதிவு இப்படியாக இருக்கிறது. நண்பர்களே முன்பதிவு முடிய இன்னும் இரண்டு நாட்களே இருக்கிறது, இன்றே விரைந்து பணம் செலுத்தி முன்பதிவு செய்துக்கொள்ளுங்கள். இன்னும் அதிகபட்சம் 20 பேருக்கும் மட்டுமே வாய்ப்பு. இந்த வாய்ப்பை தவறவிட்டால் இன்னும் சில ஆண்டுகள் காத்திருக்க கூடும். பிசி ஶ்ரீராம் இந்திய சினிமாவின் ஒப்பற்ற கலைஞன். அவரிடம் நேரடியாக கற்கும் வாய்ப்பை தவறவிடாதீர்கள்.

தொடர்புக்கு: 9840644916

15/11/2022

இந்தியாவின் முன்னனி ஒளிப்பதிவாளர் பிசி ஶ்ரீராம் அவர்களின் நேரடி மேற்பார்வையில் இரண்டு நாள் ஒளிப்ப்பதிவு பயிற்சிப்பட்டறை

நண்பர்களே இந்தியாவில் உள்ள பெரும்பாலான மொழிகளில் மாபெரும் வெற்றிபெற்ற பல கலைப்படைப்புகளில் பணிபுரிந்த ஒளிப்பதிவாளர் பிசி ஶ்ரீராம் அவர்கள். அவர் உருவாக்கிய அவரது மாணவர்களே இன்று இந்தியாவில் எல்லா மொழிகளிலும் கோலோச்சும் ஒளிப்பதிவாளர்களாக இருக்கிறார்கள். எம் எஸ் பிரபு, ராம்ஜி, செழியன், மகேஷ் முத்துசுவாமி,
நீரவ் ஷா, சத்யன் சூர்யன் என இன்று தமிழ் சினிமாவையும் இந்திய சினிமாவையும் ஒளிப்பதிவால் ஆளும் எல்லா ஆளுமைகளுன் பிசி ஶ்ரீராம் அவர்களின் மாணவர்களே. நாயகன் படத்திற்காக தேசிய விருது, இயக்குநராக குருதிப்புனல் என எல்லாவற்றிலும் பெருவெற்றி பெற்ற கலைஞன். தனக்கு வரும் வாய்ப்புகளை கூட தனது மாணவர்களுக்கு பகிர்ந்து அளிக்கும் பெருங்கலைஞன். அப்பேற்பட்ட கலைஞன் இந்தியாவில் இன்றுவரை எங்குமே ஒளிப்பதிவு குறித்து இரண்டு நாள் வகுப்பெடுத்தது இல்லை. முதல்முறையாக அவரும் அவரது மாணவர் மகேஷ் முத்துசுவாமியும் சேர்ந்து ஒளிப்பதிவு குறித்து இரண்டு நாள் பிராக்டிகள் பயிற்சியை நடத்த இருக்கிறார்கள். மழை என்பது உள்ளிட்ட எந்த காரணமும் உங்களுக்கு தடை இல்லை. இரண்டு நாளும் உள் அரங்கு பயிற்சிதான். இந்தியா முழுக்க எங்கிருந்து வேண்டுமானாலும் கலந்துக்கொள்ளலாம். வெளிநாட்டு நண்பர்கள் முதல் நாள் பயிற்சியில் ஆன்லைன் மூலம் கலந்துக்கொள்ளலாம். இந்த வாய்ப்பை தவறவிடாதீர்கள்.

பயிற்சிக்கட்டணம்: 5000/- இரண்டு நாளுக்கும் சேர்த்து, மதிய உணவு உட்பட.

இன்னும் இரண்டு நாட்களுக்குள் பணம் செலுத்தி முன்பதிவு செய்துக்கொள்ளுங்கள். 9840644916

13/11/2022

Learn cinematography directly from India’s cinematography master PC Sriram

Last few dates, few candidates only can register, block your seat today itself, call 9840644916 to register. Don’t miss the rare chance. Learn directly from master.

SCHEDULE: PC Sriram and Mahesh Muthuswami Cinematography workshop with schedule ஒளிப்பதிவு மேதை பிசி ஶ்ரீராம் அவரது மாணவ...
11/11/2022

SCHEDULE:

PC Sriram and Mahesh Muthuswami Cinematography workshop with schedule

ஒளிப்பதிவு மேதை பிசி ஶ்ரீராம் அவரது மாணவரும் மிக சிறந்த ஒளிப்பதிவாளருமான மகேஷ் முத்துசுவாமி இருவரும் இணைந்து நடத்தும் இரண்டு நாள் ஒளிப்பதிவு பிராக்டிகள் பயிற்சிப்பட்டறை- Schedule

மீண்டும் அதிகமான பொருட்செலவில் அற்புதமான இரண்டு நாள் ஒளிப்பதிவு பயிற்சிப்பட்டறை, அதுவும் ஒளிப்பதிவு மேதையிடம் நேரடியாகவே கற்கும் வாய்ப்பு, இரண்டு நாள் ஒளிப்பதிவு பயிற்சியின் schedule கொடுக்கப்பட்டுள்ளது. உடனே பணம் செலுத்தி முன்பதிவு செய்துக்கொள்ளுங்கள். இத்தகைய வாய்ப்பு இன்னும் பல ஆண்டுகளுக்கு கிடைக்கவே கிடைக்காது.

பயிற்சிக்கட்டணம்: 5000/- முதல்நாள் ஆன்லைன் பயிற்சிக்கு 2500/-

தொடர்புக்கு: 9840644916

Schedule :

Day One :::

10 am to 10.30 am introductory words by PC Sir & Tamil Studio team.

10.30 am to 11.30 am - The importance of light & it's aesthetics in Cinema.

11.45 am to 1 pm - Basic Tools for lighting introduction

1 pm to 2 pm Lunch break

2 pm to 3 pm Basic Three point Lighting - the basic building block

3 pm to 4.15 pm - Approach to Lighting based on the Content , Mood & Directors vision.

4.30 pm to 5 pm
Playing of Lighting inspiration scenes from PC sir's films.

5 pm to 6 pm Q & A with PC Sir .

Day Two :

Practicals :

10 am to 11.30 am

Physical introduction to the popular lights used in the industry today.

11.45 to 1 pm - Light Modifiers - How to Mould & Shape Light

1 pm to 2 pm Lunch

2 pm to 5 pm - Lighting up a space & an actor.

5 pm to 6 pm review of the shots in big screen

09/11/2022

இந்தியாவின் ஒளிப்பதிவு மேதை பிசி ஶ்ரீராம் - மகேஷ் முத்துசுவாமி அவர்களின் இரண்டு நாள் ஒளிப்பதிவு பயிற்சிப்பட்டறை

பயிற்சியாளர்கள்: பிசி ஶ்ரீராம் மற்றும் மகேஷ் முத்துசுவாமி

19-11-2022. 20-11-2022 சென்னை. சனி மற்றும் ஞாயிறு

பயிற்சிக்கட்டணம்: 5000/-

தொடர்புக்கு: 9840644916,

இந்தியாவின் மிக சிறந்த ஆளுமையும், ஒளிப்பதிவு மேதையுமான பிசி ஶ்ரீராம் அவர்களும், அவரின் மாணவரும், சித்திரம் பேசுதடி, அஞ்சாதே, நந்ததலாலா போன்ற படங்களின் ஒளிப்பதிவாளருமான மகேஷ் முத்துசுவாமி இருவரும் இணைந்து தமிழ் ஸ்டுடியோவிற்காக இரண்டு நாள் ஒளிப்பதிவு பற்றிய பயிற்சிப்பட்டறை நடத்திக்கொடுக்க இருக்கிறார்கள். இதில் முதல் நாள் கேமரா மற்றும் லைட்டிங் பற்றிய வகுப்பும் இரண்டாவது நாள் லைட்டிங் நேரடி பயிற்சி வகுப்பும் நடைபெற இருக்கிறது. வகுப்புகளை மகேஷ் முத்துசுவாமி எடுக்க பிசி ஶ்ரீராம் அவர்கள் மேற்பார்வை செய்கிறார். பிசி அவர்களோடு கலந்துரையாடலும் இருக்கிறது. இந்தியாவிலேயே இத்தகைய மாபெரும் மேதை ஒருவரின் பயிற்சி நேரடியாக தமிழ் நாட்டு திரை ஆர்வலர்களுக்கு மட்டுமே கிடைத்திருக்கிறது. இந்த வாய்ப்பை தவறவிடாமல் அவசியம் பங்கேற்று பயன் அடையுங்கள்.

தொடர்புக்கு: 9840644916, அல்லது பியூர் சினிமா அலுவலகத்தை நேரடியாக அனுகலாம்.

இந்தியாவின் ஆகசிறந்த ஒளிப்பதிவாளர் திரை ஆளுமை பிசி ஶ்ரீராம் அவர்களிடம் நேரடியாக கற்க அரிய வாய்ப்பு. பிசி ஶ்ரீராமும் அவரத...
01/11/2022

இந்தியாவின் ஆகசிறந்த ஒளிப்பதிவாளர் திரை ஆளுமை பிசி ஶ்ரீராம் அவர்களிடம் நேரடியாக கற்க அரிய வாய்ப்பு.

பிசி ஶ்ரீராமும் அவரது மாணவர் மகேஷ் முத்துசுவாமியும் இணைந்து நடத்தும் இரண்டு நாள் ஒளிப்பதிவு பயிற்சிப்பட்டறை

இறுதி நேரத்தில் பதிவு செய்யும் நண்பர்களால் எங்களுக்கு செலவுகள் அதிகரிக்கிறது. ஆகவே நண்பர்கள் உடனே முன்பதிவு செய்துக்கொள்ளவும். 10 ஆம் தேதிக்கு பிறகு கட்டணத்தை 6000 மாக மாற்றும் எண்ணமும் இருக்கிறது. எனவே நண்பர்கள் இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொள்ளவும்.

தொடர்புக்கு: 9840644916

Address

No. 7, West Sivan Kovil Street, Vadapalani
Chennai
600026

Alerts

Be the first to know and let us send you an email when Independent Film Festival of Chennai - IFFC posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Independent Film Festival of Chennai - IFFC:

Share