தாய் இதழ்

தாய் இதழ் thai magazine is the Official page for thaaii.com which is a tamil language e-magazine providing in
(2)

படிக்க வந்து நடிக்கத் துவங்கிய ரவிச்சந்திரன்!https://cinirocket.com/actor-ravichandren-bday-spl-article/1970 களில் தமிழ்...
25/07/2025

படிக்க வந்து நடிக்கத் துவங்கிய ரவிச்சந்திரன்!
https://cinirocket.com/actor-ravichandren-bday-spl-article/

1970 களில் தமிழ் சினிமாவில் மறக்க முடியாத இடத்தை பிடித்த பிரபலமான ஹீரோக்களில் ஒருவராக வலம் வந்தவர் ரவிச்சந்திரன்.

நடிகர், டைரக்டர், தயாரிப்பாளர் என பன்முகத்தன்மை கொண்ட பழம்பெரும் நடிகர் ரவிச்சந்திரனுக்கு ஜுலை 24-ம் தேதி பிறந்தநாள் என்றால், அடுத்த நாளான ஜுலை 25 அவருடைய நினைவுநாள்.

1960-70களில் முன்னணி ஹீரோவாகவும், பின்னர் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து பிரபலமானவர் ரவிச்சந்திரன்.

படிக்க வந்து நடிகரானார்

ரவிச்சந்திரனின் இயற்பெயர் ராமன். அவரது சொந்த ஊர் கரூர் அருகே உள்ள வாங்கல் கிராமம். இவரது இளமைக்காலம் மலேசியாவின் கோலாலம்பூரில் கழிந்தது. ரவிச்சந்திரனின் தந்தை பைரோஜி சீனிவாசன்.

மலேசியாவில் தமிழ் நேசன் என்ற பத்திரிகையில் ஆசிரியராக இருந்தார். கோலாலம்பூர் தமிழ்ச் சங்கம் நடத்திய பள்ளியில் படித்தார் ரவிச்சந்திரன்.

மலேசிய தமிழ் மாணவர்களில் முதல் மாணவராகத் தேர்வு பெற்ற ரவிச்சந்திரன், மருத்துவம் படிக்க விரும்பி இந்தியா வந்தார். திருச்சி புனித ஜோசப் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தார்.

முதல் படம் செம ஹிட் சென்னையில் மருத்துவப் படிப்பு படிக்க வந்தபோது இயக்குனர் ஸ்ரீதருக்கு அறிமுகமானார்.

அதன் மூலம் 1964-ம் ஆண்டு 'காதலிக்க நேரமில்லை' படத்தின் கதாநாயகனானார். அறிமுக படமே அவருக்கு சூப்பர்ஹிட் படமாக அமைந்தது. அத்துடன் அவருக்கு நல்ல ‌பெயரை பெற்று தந்தது.

அதிலும் அந்தப் படத்தில் வரும் "விஸ்வநாதன் வேலை வேண்டும்...", "உங்கள் பொன்னான கைகள் புண்ணாகலாமா..." உள்ளிட்ட பாடல்கள் மாபெரும் ஹிட் ஆகி, ரவிச்சந்திரனுக்கென ரசிகர்களை உருவாக்கியது.

ஹிட் அடித்த படங்கள்

'காதலிக்க நேரமில்லை' படத்திற்கு பிறகு நிறைய படங்களில் நடித்தார் ரவிச்சந்திரன்.

குறிப்பாக இவர் நடித்த 'அதே கண்கள்', 'இதய கமலம்', 'கெளரி கல்யாணம்', 'குமரிப்பெண்', 'உத்தரவின்றி உள்ளே வா' உள்ளிட்ட படங்கள் மிகவும் பிரபலமானவை.

எம்.ஜி.ஆர்., சிவாஜிக்கு அடுத்தப்படியாக ரவிச்சந்திரனும் முன்னணி நடிகராக திகழ்ந்தவர். ரவிச்சந்திரன் ஸ்டைல் அப்போதைய ரசிகர்களை மிகவும் கவர்ந்தது.

கல்லூரி, பள்ளி மாணவிகள் ரவிச்சந்திரனின் தீவிர ரசிகைகளாய் இருந்தனர். அவர் படங்கள் 150 நாட்களைத் தாண்டி ஓடின.

வில்லனாக மாறிய ஹீரோ, ஹீரோவாக நடித்த காலம் போய், பின்னர் குணச்சித்திர கேரக்டரில் நடிக்க ஆரம்பித்த ரவிச்சந்திரனுக்கு விஜயகாந்தின் 'ஊமை விழிகள்' படத்தின் மூலம் மீண்டும் புத்துணர்வு கிடைத்தது.

அந்தப் படத்தில் வில்லனாக நடித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். தொடர்ந்து அப்பா, தாத்தா போன்ற குணச்சித்திர கேரக்டரில் நடித்து வந்தார் ரவிச்சந்திரன்.

ஆபாவாணன் இயக்கத்தில் விஜயகாந்த் நடித்த 'ஊமை விழிகள்' படத்தில் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்து கவனத்தை ஈர்த்தவர். அதன்பின், சப்போர்டிங் கேரக்டர்களில் வலம் வந்தார்.

ரஜினிகாந்துடன் 'ராஜாதி ராஜா', 'அருணாசலம்', கமல்ஹாசனுடன் 'பம்மல் கே சம்பந்தம்' ஆகிய படங்களில் நடித்தார்.

சிறுநீரகக் கோளாறு காரணமாக 25-07-2011 அன்று சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார். மனைவி விமலா அவர்களை 1963-ம் ஆண்டு மனம் முடித்தார்.

அவர்களுக்கு இரண்டு மகன்கள். முதல் மகன் பாலாஜி. இவர் தொழிலதிபர். இரண்டாவது மகன் ஹம்சவர்தன் இவர் பிரபல ஹீரோ என்பது நாம் அறிந்த விஷயம். லாவண்யா என்ற மகளும் உள்ளார்.

மலையாள முன்னணி நடிகை ஷீலாவை இரண்டாவதாக 1972ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார் ரவிச்சந்திரன். இவருக்கும் ஷீலாவிற்கும் பிறந்த ஜார்ஜ் திரைப்படங்கள் மற்றும் சின்னத்திரையில் நடித்து வந்தார்.

ரவிச்சந்திரனின் மறக்க முடியாத படங்கள்

இயக்குநர் ஸ்ரீதரின் காதலிக்க நேரமில்லை படத்தின் மூலம் 1964-ம் ஆண்டு தமிழ்த் திரையுலகுக்கு அறிமுகமானார்.

இதயக்கமலம், குமரிப் பெண், அதே கண்கள், கெளரி கல்யாணம், மெட்ராஸ் டூ பாண்டிச்சேரி, நான், உத்தரவின்றி உள்ளே வா, புகுந்த வீடு, ஊமை விழிகள், ராஜாதி ராஜா, அருணாச்சலம், பம்மல் கே சம்பந்தம், ரமணா உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தார்.

கடைசியாக நடித்த படம் ஆடுபுலி. மானசீக காதல், மந்திரன் உள்பட 7 படங்களை ரவிச்சந்திரன் இயக்கி உள்ளார்.

தமிழ், மலையாளத்தில் சில படங்களை சொந்தமாக தயாரித்தார்.

இவர் 1986-ல் ஒளிபரப்பான ஜீ பும்பா என்ற டிவி சீரியலிலும் நடித்துள்ளார்.

ரவிச்சந்திரனுக்கு திரையுலகில் ரொமான்டிக் ஹீரோ, வெள்ளி விழா கதாநாயகன், வண்ணப்பட நாயகன், எவர்கிரீன் ஹீரோ, சின்ன எம்ஜிஆர், கலைஞர் திலகம், கலை செல்வன், புதுமை திலகம் என பல டைட்டில்களை டைரக்டர்கள், தயாரிப்பாளர் உள்ளிட்ட பலர் கொடுத்துள்ளனர்.

- மோகனப்ரியா

நன்றி: ஃபிலிம் பீட்

#காதலிக்கநேரமில்லை
#அதேகண்கள்
#இதயகமலம்
#ஊமைவிழிகள்
#ராஜாதிராஜா
#அருணாசலம்

15 ஆண்டுகளுக்குப் பிறகு வைரலான ’ஹேப்பி’ பாடல்!https://cinirocket.com/happy-song-from-bale-pandiya-goes-viral-15-years-af...
25/07/2025

15 ஆண்டுகளுக்குப் பிறகு வைரலான ’ஹேப்பி’ பாடல்!
https://cinirocket.com/happy-song-from-bale-pandiya-goes-viral-15-years-after-release/

சித்தார்த் சந்திரசேகர் இயக்கத்தில் 2010ம் ஆண்டு வெளியான திரைப்படம் 'பலே பாண்டியா'. விஷ்ணு விஷால் மற்றும் பியா பாஜ்பாய் முதன்மை வேடங்களில் நடித்த இப்படத்திற்கு தேவன் ஏகாம்பரம் இசையமைத்திருந்தார்.

'பலே பாண்டியா' படத்தில் இடம்பெற்றுள்ள 'ஹேப்பி' பாடல் 15 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது திடீரென சமூக ஊடகங்களில் வைரலாகி 10 லட்சம் பார்வைகளைக் கடந்து தொடர்ந்து சாதனை படைத்து வருகிறது.

கவிஞர் வாலி எழுதிய இப்பாடலை 20 பிரபல பாடகர்கள் பாடியதோடு திரையிலும் தோன்றி இருந்தனர்.

ஹரிசரண், தேவன் ஏகாம்பரம், நரேஷ் ஐயர், நவீன் மாதவ், பரவை முனியம்மா, மலேசியா வாசுதேவன், ரஞ்சித், ஆலாப் ராஜு, ரகீப் ஆலம், அனுராதா ஸ்ரீராம், ஸ்ரீனிவாஸ், வேல்முருகன்,

மாணிக்க விநாயகம், முகேஷ், மால்குடி சுபா, திவ்யா, அனிதா, சுசித்ரா, விஜய் யேசுதாஸ், ராகுல் நம்பியார் ஆகியோர் வாலியின் உற்சாக வரிகளில் நேர்மறை எண்ணங்கள் ததும்பும் இப்பாடலை பாடி இருந்தனர்.

மலேசியா வாசுதேவன் தவிர மற்ற அனைவரும் திரையிலும் தோன்றி பாடலுக்கு அழகு சேர்த்தனர்.

இத்தனை ஆண்டுகள் கழித்து 'ஹேப்பி' பாடல் வைரல் ஆனது குறித்து பெருமிதம் தெரிவித்துள்ளார் படத்தின் இயக்குநர் சித்தார்த் சந்திரசேகர்.

"இன்றைய தலைமுறையினர் இப்பாடலை ரசிப்பது கவிஞர் வாலி அவர்களின் சாகாவரம் பெற்ற வரிகளையும், தேவன் ஏகாம்பரத்தின் இளமையான இசையையும், 20 பாடகர்கள் ஒன்றிணைந்த அரிதான நிகழ்வையும் கொண்டாடும் வகையில் அமைந்துள்ளது.

இப்பாடலை வெறும் இரண்டே தினங்களில் அனைவரையும் ஒன்றிணைத்து புதுச்சேரியில் படமாக்கினோம். அக்காபெல்லா வகையிலான இப்பாடலுக்கு தினேஷ் மாஸ்டர் நடனம் அமைத்தார்" என்றார்.

தொடர்ந்து பேசிய இயக்குநர் சித்தார்த் சந்திரசேகர், "பலே பாண்டியா படத்தில் ஒவ்வொரு பாடலுக்கும் ஒரு தனிச் சிறப்பு உண்டு. கவிஞர் தாமரையும் பாடல் எழுதி இருந்தார்.

மகிழ்ச்சியை பரப்பும் 'ஹேப்பி' பாடலுக்கு பங்காற்றிய அனைவரையும் இந்த தருணத்தில் நினைவு கூர்வதோடு இன்றைய தலைமுறையினரின் ரசனைக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்" என்று கூறினார்.

பிரபல திரைப்பட விளம்பர வடிவமைப்பாளரான சித்தார்த் சந்திரசேகர், 'சந்திரமுகி', 'அந்நியன்', 'கஜினி', 'ஏழாம் அறிவு' உள்ளிட்ட பல வெற்றி படங்களில் பணியாற்றியுள்ளார்.

தற்போது சென்னையின் முன்னணி இன்டீரியர் டிசைனராக வெற்றிக் கொடி நாட்டியுள்ளார்.

இவரது நிறுவனமான பென்சில் அண்டு மாங்க் சென்னையின் முக்கிய அடையாளங்களான அமெரிக்க துணைத் தூதரக நூலகம் மற்றும் ஷெரட்டன் கிராண்ட் ஹோட்டல் ஆகியவற்றின் உட்புறங்களை வடிவமைத்தது குறிப்பிடத்தக்கது.









#சித்தார்த்_சந்திரசேகர் #விஷ்ணு_விஷால் #பியா_பாஜ்பாய் #வாலி #ஹேப்பி_பாடல் #பலே_பாண்டியா #தேவன்_ஏகாம்பரம்

#ஹரிசரண் #நரேஷ் #நவீன்_மாதவ் #பரவை_முனியம்மா #மலேசியா_வாசுதேவன் #ரஞ்சித் #ஆலாப்_ராஜு #ரகீப்_ஆலம் #அனுராதா_ஸ்ரீராம் #ஸ்ரீனிவாஸ் #வேல்முருகன்

#மாணிக்க_விநாயகம் #முகேஷ் #மால்குடி_சுபா #திவ்யா #அனிதா #சுசித்ரா #விஜய்_யேசுதாஸ் #ராகுல்_நம்பியார்

மனம்தான் எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது!https://thaaii.com/2025/07/25/vallalar-facts/இன்றைய நச்:மனதை அடக்க நினைத்தால் அட...
25/07/2025

மனம்தான் எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது!
https://thaaii.com/2025/07/25/vallalar-facts/

இன்றைய நச்:

மனதை அடக்க நினைத்தால் அடங்காது;
அதை அறிய நினைத்தால் அடங்கும்;
தவறு செய்வதும் மனம் தான்,
இனி தவறு செய்யக் கூடாது என்று
தீர்மானிப்பதும் மனம் தான்!

- வள்ளலார்

#வள்ளலார்

“எங்கிருந்தாலும் வாழ்க…!”https://cinirocket.com/engirunthalum-vaazhka-song-lyrics/திரைத் தெறிப்புகள் : 103***“உண்மையான அ...
25/07/2025

“எங்கிருந்தாலும் வாழ்க…!”
https://cinirocket.com/engirunthalum-vaazhka-song-lyrics/

திரைத் தெறிப்புகள் : 103

***

“உண்மையான அன்பு எந்த பேதங்களையும் பொருட்படுத்தாது" என்கின்ற பிரபலமான ஆங்கிலச் சொற்றொடரின் உட்பொருளுக்கேற்ப அமைந்திருக்கிறது இந்த அழகான திரையிசைப் பாடல்.

1962-ம் ஆண்டு, ஸ்ரீதரின் இயக்கத்தில் வெளியான 'நெஞ்சில் ஓர் ஆலயம்' திரைப்படத்தில் இடம்பெற்ற 'எங்கிருந்தாலும் வாழ்க' என்று துவங்கும் இந்த மென்மையானப் பாடலை பாடியவர் ஏ.எல்.ராகவன்.

திரைப்படத்தில், தான் காதலித்த தேவிகா அவருடைய கணவருடன் நோய்வாய்ப்பட்ட நிலையில், மருத்துவரான தன்னிடம் வந்திருக்கும் சூழலில், கல்யாண் குமார் பாடுவதாக அமைந்திருக்கும் இந்தப் பாடலை எழுதியவர் கவியரசர் கண்ணதாசன்.

“எங்கிருந்தாலும் வாழ்க
உன் இதயம் அமைதியில் வாழ்க
மஞ்சள் வளத்துடன் வாழ்க

உன் மங்கலக் குங்குமம் வாழ்க...”

கருப்பு வெள்ளையான இந்தத் திரைப்படத்தில் இப்பாடல் காட்சி பெரும்பாலும் இருள் சூழ்ந்த நிலையில், வெளிச்சக் கோடுகளைப் போல விழுந்த நிலையில் எடுக்கப்பட்டிருக்கும் விதம் பாடலின் மென்மைக்கு பொருத்தமாக இருக்கும்.

இந்தப் பாடலுக்கு சோகம் இளையோடியபடி இசை அமைத்திருப்பார்கள் இசை இரட்டையர்களான விஸ்வநாதன் - ராமமூர்த்தி.

“இங்கே ஒருவன் காத்திருந்தாலும்
இளமை அழகைப் பார்த்திருந்தாலும்,
சென்ற நாளை நினைத்திருந்தாலும்
திருமகளே நீ வாழ்க...”

படத்தின் திரைக்கதைக்கேற்ப எவ்வளவு அருமையான வரிகளை கண்ணதாசன் எழுதியிருக்கிறார் பாருங்கள்.

“தனிமையில் நின்றேன்
வந்தது வந்தாய்
துணையுடன் வந்தாய்,
துணைவரைக் காக்கும்
கடமையும் தந்தாய்
தூயவளே நீ வாழ்க...”

இந்தப் பாடல் காட்சியின்போது தானும் தேவிகாவும் காதலித்தபோது எடுத்த புகைப்படத்தைக் கையில் வைத்தபடி இந்தப் பாடலை பாடுவார் கல்யாண் குமார். தமிழ்த் திரையுலகுக்கு இவரை சரியான விதத்தில் அறிமுகப்படுத்தியவர் இயக்குநர் ஸ்ரீதர் தான்.

“ஏற்றிய தீபம் நிலை பெற வேண்டும்
இருண்ட வீட்டில் ஒளி தர வேண்டும்
போற்றும் கணவன் உயிர் பெற வேண்டும்
பொன்மகளே நீ வாழ்க...”

தனது கட்சியை விட்டு முக்கிய பிரமுகர் ஒருவர் விலகியபோது, அவரை வாழ்த்தும் விதமாக பேரறிஞர் அண்ணா “எங்கிருந்தாலும் வாழ்க” என்று வாழ்த்தினாராம். அண்ணா அப்போது பயன்படுத்திய வார்த்தையை வைத்தே தனது பாடலில் முதல்வரியாக கச்சிதமாகவும் கவித்துவமாகவும் பயன்படுத்தி இருப்பார் கவியரசர் கண்ணதாசன்.

திரையில்தான் என்றாலும் இப்படியும் மிகவும் மென்மையான காதல் இக்காலத்தில் இருக்கிறது!

- மணா

#ஸ்ரீதர் ் _ராகவன் #தேவிகா #கல்யாண்_குமார் #கண்ணதாசன் #விஸ்வநாதன் #ராமமூர்த்தி #இயக்குனர்_ ஸ்ரீதர் #அண்ணா #எங்கிருந்தாலும்வாழ்கபாடல்வரிகள்

அதென்ன ‘ஆண் மெனோபாஸ்’?ஹார்மோன் குறைபாடு வாழ்க்கையை எப்படி மாற்றுகிறது?https://thaaii.com/2025/07/25/male-menopause-guide...
25/07/2025

அதென்ன ‘ஆண் மெனோபாஸ்’?
ஹார்மோன் குறைபாடு வாழ்க்கையை எப்படி மாற்றுகிறது?
https://thaaii.com/2025/07/25/male-menopause-guide/

ஆண்களின் உடலில் டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் குறைவதைச் சுட்டிக்காட்டும் ஒரு வயதோடு தொடர்புடைய நிலையை ஆண்ட்ரோபாஸ் (Andropause) என்று விவரிக்கிறது மருத்துவம். பொதுவாக 50 வயது அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்களை இந்த நிலை பாதிக்கிறது.

மருத்துவ நிபுணர்கள் இந்த நிலையை டெஸ்டோஸ்டிரோன் குறைபாடு (Testosterone Deficiency), ஆண்ட்ரோஜன் குறைபாடு (Androgen Deficiency), மற்றும் பிற்கால ஹைபோகோனாடிசம் (Late-Onset Hypogonadism) என்றும் குறிப்பிடுகிறார்கள்.

பெண்களின் மெனோபாஸைப் போலல்லாமல், ஆண்ட்ரோபாஸ் ஒரு திடீர் ஹார்மோன் மாற்றத்தை உள்ளடக்குவதில்லை; மாறாக, இது படிப்படியான ஹார்மோன் சரிவைக் குறிக்கிறது.

டெஸ்டோஸ்டிரோன் உற்பத்தி வயதாகும்போது, கணிசமாக குறையும்போது இந்த நிலை ஏற்படுகிறது.

டெஸ்டோஸ்டிரோன் வெறும் பாலியல் இச்சையைத் தூண்டுவதைத் தாண்டி பல பணிகளைச் செய்கிறது. இது தசைத் திண்மையைப் பராமரித்தல், ஆற்றல் அளவைக் கட்டுப்படுத்துதல், மற்றும் எலும்பு அடர்த்தியை ஆதரித்தல் போன்ற முக்கியப் பணிகளிலும் ஈடுபடுகிறது.

அனைத்து ஆண்களும் ஆண்ட்ரோபாஸ் அறிகுறிகளை அனுபவிப்பதில்லை, இது பெண் மெனோபாஸைப் போல உலகளாவியதாக இல்லை.

ஆராய்ச்சியின்படி, வயதான ஆண்களில் 2% மட்டுமே ஆண்ட்ரோபாஸ் அறிகுறிகளால் பாதிக்கப்படுகின்றனர்.

ஆண்ட்ரோபாஸ் பெண் மெனோபாஸிலிருந்து எவ்வாறு வேறுபடுகிறது?

ஆண் மெனோபாஸ், பெண் மெனோபாஸிலிருந்து பல அடிப்படை வழிகளில் கணிசமாக வேறுபடுகிறது.

பெண் மெனோபாஸ் ஒப்பீட்டளவில் குறுகிய காலத்தில் இனப்பெருக்க உறுப்புகளின் முழுமையான செயல்பாட்டு நிறுத்தத்தை உள்ளடக்கியது.

ஆனால், ஆண்களில் ஹார்மோன் மாற்றங்கள் பல வருடங்களுக்குப் படிப்படியாக நிகழ்கின்றன, இனப்பெருக்க செயல்பாடு முழுமையாக நிற்பதில்லை.

இந்த நிலை கருவுறுதலைப் பாதிப்பதில்லை. பெண்களுக்கு மெனோபாஸ் காலத்தில் ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்டிரோன் உற்பத்தியில் வியத்தகு வீழ்ச்சி ஏற்படுகிறது.

ஆண்களுக்கு 40 வயதுக்குப் பிறகு ஆண்டுக்கு சுமார் 1% என்ற விகிதத்தில் டெஸ்டோஸ்டிரோன் குறைவு ஏற்படுகிறது. இந்த படிப்படியான குறைவு, பெண்கள் எதிர்கொள்ளும் விரைவான ஹார்மோன் மாற்றங்களுக்கு நேர்மாறானது.

கூடுதலாக, ஒவ்வொரு ஆணும் ஆண்ட்ரோபாஸால் பாதிக்கப்படுவதில்லை, அதேசமயம் கிட்டத்தட்ட அனைத்து பெண்களும் மெனோபாஸை அனுபவிக்கிறார்கள் அல்லது அனுபவிப்பார்கள்.

அறிகுறிகளைப் பொறுத்தவரை பெண்களை விட ஆண்களில் மெதுவாகவும், நுட்பமாகவும் வெளிப்படுகின்றன.

பொதுவான அறிகுறிகள் மற்றும் எச்சரிக்கை அறிகுறிகள்

ஆண்ட்ரோபாஸை அனுபவிக்கும் ஆண்கள் பல்வேறு உடல் மற்றும் மன ரீதியான அறிகுறிகளை எதிர்கொள்ளலாம்.

கவனிக்கக்கூடிய மிக முக்கியமான மாற்றங்கள்:

* குறைந்த பாலியல் இச்சை (Decreased Libido)
* காலை விறைப்புத்தன்மை குறைதல் (Fewer Morning Erections)
* விறைப்புத்தன்மை குறைபாடு (Erectile Dysfunction)

இந்த மூன்று பாலியல் அறிகுறிகளும் வலுவான நோயறிதலை வெளிக்காட்டுகின்றன. பிற பொதுவான அறிகுறிகளில் சோர்வு (Fatigue), மனச்சோர்வு (Depression), மனநிலை மாற்றங்கள் (Mood Swings), மற்றும் ஒழுங்கற்ற தூக்கம் (Improper Sleep) ஆகியவை அடங்கும்.

உடல் ரீதியான மாற்றங்களில் பெரும்பாலும் உடல் கொழுப்பு அதிகரித்தல். இதனால் குறிப்பாக வயிறு மற்றும் மார்பைச் சுற்றி கொழுப்புச் சதை அதிகரிக்கும்.

மேலும், குறைந்த தசைத் திண்மை (Decreased Muscle Mass), எலும்பு அடர்த்தி குறைதல் (Reduced Bone Density), மற்றும் உடல் பலவீனம் போன்ற உணர்வுகளை அனுபவிக்கலாம்.

சில ஆண்களுக்கு கைனிகோமாஸ்டியா (Gynecomastia) அல்லது “ஆண் மார்பகங்கள்” உருவாகலாம்.

பிற அறிகுறிகளில் கவனக்குறைவு (Difficulty Concentrating), குறைந்த சுயமரியாதை (Low Self-Esteem), மற்றும் உந்துதல் குறைதல் (Decreased Motivation) ஆகியவை அடங்கும்.

டெஸ்டோஸ்டிரோன் குறைவுக்குப் பின்னால் உள்ள அறிவியல்

ஆண்களுக்கு வயதாகும்போது டெஸ்டோஸ்டிரோன் அளவுகள் இயற்கையாகவே குறைகின்றன. சுமார் 30 முதல் 40 வயதுகளில் இது தொடங்குகிறது. மொத்த டெஸ்டோஸ்டிரோன் அளவுகள் ஆண்டுக்கு சராசரியாக 1.6% என்ற விகிதத்தில் குறைகின்றன.

உயிரியல் ரீதியாகப் பயன்படுத்தக்கூடிய (Bioavailable) டெஸ்டோஸ்டிரோன் அளவுகள் ஆண்டுக்கு 2-3% என்ற விகிதத்தில் இன்னும் வேகமாக குறைகின்றன.

வயதாகும்போது, உடல் குறைவான டெஸ்டோஸ்டிரோனை உருவாக்குகின்றன மற்றும் அதை அவர்களின் உடலில் இருந்து மெதுவாக வெளியேற்றுகின்றன.

ஆபத்து காரணிகள் மற்றும் பங்களிக்கும் காரணங்கள்

ஆண்ட்ரோபாஸ் அறிகுறிகளை உருவாக்கும் பல காரணிகள் உள்ளன. உடல் பருமன் (Obesity) ஒரு ஆபத்து காரணியாகும், இது டெஸ்டோஸ்டிரோன் குறைவு மற்றும் அறிகுறிகளின் தீவிரத்திற்கு பங்களிக்கிறது.

நீரிழிவு (Diabetes), இதய நோய் (Heart Disease), மற்றும் ஸ்லீப் அப்னியா (Sleep Apnea) உள்ள ஆண்கள் அதிக ஆபத்தை எதிர்கொள்கின்றனர்.

புகைபிடித்தல், அதிகப்படியான மது அருந்துதல், மற்றும் உடற்பயிற்சியின்மை உள்ளிட்ட மோசமான வாழ்க்கை முறை தேர்வுகள் அறிகுறிகளை மோசமாக்கி ஆபத்தை அதிகரிக்கின்றன.

உளவியல் காரணிகளும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. மன அழுத்தம் (Stress), பதற்றம் (Anxiety), மனச்சோர்வு (Depression) ஆகியவை டெஸ்டோஸ்டிரோன் அளவைக் குறைத்து அறிகுறிகளை பெருக்கலாம்.

வேலை தொடர்பான அழுத்தங்கள், உறவுச் சிக்கல்கள், மற்றும் நிதிப் பிரச்சினைகள் ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்துவதில் பங்கு வகிக்கின்றன.

கண்டறிதல் மற்றும் மருத்துவ மதிப்பீடு

மருத்துவர்கள் டெஸ்டோஸ்டிரோன் அளவை காலை நேரத்தில் பல நாட்கள் எடுக்கப்படும் இரத்தப் பரிசோதனைகள் மூலம் அளவிடுகிறார்கள். சாதாரண டெஸ்டோஸ்டிரோன் அளவுகள் தனிநபர்களுக்கிடையே மற்றும் நாள் முழுவதும் குறிப்பிடத்தக்க அளவில் வேறுபடுகின்றன.

இதே போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தும் பிற நிலைகளை மருத்துவ நிபுணர்கள் கண்டறிய வேண்டும். அறிகுறிகள் இல்லாமல் குறைந்த டெஸ்டோஸ்டிரோன் மட்டுமே உடனடியாக ஹைபோகோனாடிசம் நோயறிதலுக்கு வழிவகுக்காது.

நீரிழிவு, இதய நோய், மற்றும் தூக்கக் கோளாறுகள் போன்ற அடிப்படை மருத்துவ நிலைமைகளையும் மருத்துவர்கள் மதிப்பீடு செய்கிறார்கள்.

சிகிச்சை விருப்பங்கள் மற்றும் அணுகுமுறைகள்

ஆண்ட்ரோபாஸிற்கான சிகிச்சை, பிற அடிப்படை காரணங்களைப் பொறுத்து மாறுபடும். பல ஆண்கள் மருத்துவ துணை இல்லாமல் வாழ்க்கை முறை மாற்றங்கள் மூலம் அறிகுறிகளை நிர்வகிக்கிறார்கள்.

டெஸ்டோஸ்டிரோன் மாற்று சிகிச்சை (Testosterone Replacement Therapy – TRT) கடுமையான நிகழ்வுகளுக்கான முதன்மை மருத்துவ சிகிச்சையாக இருக்கிறது.

இந்த சிகிச்சையில் ஊசிகள், ஜெல்கள், பேட்ச்கள், அல்லது வாய்வழி மருந்துகள் ஈடுபடலாம். பக்க விளைவுகள் காரணமாக ஹார்மோன் மாற்று சிகிச்சை சர்ச்சைக்குரியதாகவே உள்ளது.

டெஸ்டோஸ்டிரோன் சிகிச்சை புரோஸ்டேட் புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கலாம் மற்றும் இதய சிக்கல்களை ஏற்படுத்தலாம்.

மேலாண்மைக்கான வாழ்க்கை முறை மாற்றங்கள்

பெரும்பாலான ஆண்களுக்கு ஆண்ட்ரோபாஸ் மேலாண்மைக்கு, வாழ்க்கை முறை மாற்றங்களே அடிப்படையாகும்.

வழக்கமான உடற்பயிற்சி தசைத் திண்மையை (Muscle Mass-உடலில் உள்ள தசைகளின் மொத்த அளவு அல்லது பருமன் என்பதை குறிக்கும் மருத்துவ சொல்) பராமரிக்கவும், மனநிலையை மேம்படுத்தவும், இயற்கையான டெஸ்டோஸ்டிரோன் உற்பத்தியை அதிகரிக்கவும் உதவுகிறது.

ஆரோக்கியமான உணவு ஹார்மோன் சமநிலை மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

போதுமான தூக்கம் உகந்த டெஸ்டோஸ்டிரோன் உற்பத்தி மற்றும் ஆற்றல் நிலைகளுக்கு அத்தியாவசியமானது.

மன அழுத்தத்தைக் குறைக்கும் முறைகள், ஹார்மோன் சமநிலையையும் வெகுவாக மேம்படுத்துகின்றன.

ஆண்கள் தியானம், ஓய்வெடுக்கும் பயிற்சிகள், மற்றும் மன அழுத்த மேலாண்மை உத்திகள் மூலம் பயனடையலாம்.

உடல் எடையை ஆரோக்கியமாகப் பராமரிப்பது டெஸ்டோஸ்டிரோன் அளவுகளை இயற்கையாகவே மேம்படுத்த உதவுகிறது.

அதிகப்படியான மது அருந்துவதைத் தவிர்ப்பது மற்றும் புகைபிடிப்பதை நிறுத்துவது நல்ல ஆரோக்கியத்தை தருகிறது.

நன்றி : வேல்ஸ் மீடியா





#டெஸ்டோஸ்டிரோன்
#ஹார்மோன்
#ஆண்ட்ரோபாஸ்
#டெஸ்டோஸ்டிரோன்குறைபாடு
#ஆண்ட்ரோஜன்குறைபாடு
#ஹைபோகோனாடிசம்
#மனச்சோர்வு
#மனநிலைமாற்றங்கள்

எம்.ஜி.ஆருடன் பணியாற்ற முடியாதது வருத்தம்!தினேஷ் மாஸ்டரின் மலரும் நினைவுகள்https://thaaii.com/2025/07/25/interview-of-st...
25/07/2025

எம்.ஜி.ஆருடன் பணியாற்ற முடியாதது வருத்தம்!
தினேஷ் மாஸ்டரின் மலரும் நினைவுகள்
https://thaaii.com/2025/07/25/interview-of-stunt-master-thalapathy-dinesh/

தமிழ் சினிமாவின் முன்னணி ஃபைட் மாஸ்டர்களில் ஒருவர் ‘தளபதி’ தினேஷ்.

யூடியூப் சேனல் ஒன்றில் தனது திரை உலக அனுபவங்கள் குறித்து பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களை ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார்.

அவற்றில் சில :

"நான் பிறக்கும் போதே என்னுடைய தந்தையார் இறந்துவிட்டார். நான் வீட்டிற்கு ஒரே பையன். தாயார் தான் வீட்டு வேலை செய்து என்னை வளர்த்து ஆளாக்கினார். என்னுடைய அம்மாவை மிகவும் பிடிக்கும். இதனால் தான் என் வீட்டிற்கு அம்மாவின் பெயரை வைத்துள்ளேன்.

வீடு முழுவதும் நான் இணைந்து பணியாற்றிய பிரபலங்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் நிறைந்திருக்கும்.

ரஜினிகாந்த் முதல் சிவராஜ்குமார் வரை பலருடன் நான் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் வீட்டை அலங்கரிக்கின்றன.

கருணாநிதி, ஜெயலலிதா, என்.டி.ராமாராவ், எடப்பாடி பழனிசாமி ஆகியோரிடம் இருந்து விருதுகள் வாங்கியுள்ளேன். இதுபோல் பல அமைப்பினரிடம் இருந்து பெற்ற விருதுகளை அடுக்கி வைப்பதற்கு வீட்டில் இடம் இல்லை.

நான் சினிமாவில் நுழைந்த தருணத்தில் எம்.ஜி.ஆர் முதலமைச்சர் ஆகிவிட்டார். இதனால், அவருடன் இணைந்து பணியாற்ற முடியவில்லை என்ற வருத்தம் மட்டும் இருக்கிறது.

'சந்திரமுகி' திரைப்படத்தில் பணியாற்றியபோது என் தாயாரை முதன்முதலாக விமானத்தில் அழைத்துச் சென்று நட்சத்திர விடுதியில் தங்க வைத்தேன்.

அப்போது, ரஜினிகாந்துடன் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டோம். அந்த நாட்களை என்னால் மறக்கவே முடியாது.

நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முன்னர் ஒரு சீரியலில் ஹீரோவாக நடித்தார். அதில் வில்லனாக நான் நடித்த அனுபவத்தை மறக்க முடியாது" என்று மாஸ்டர் தளபதி தினேஷ் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

- பாப்பாங்குளம் பாரதி.


#மாஸ்டர்தளபதிதினேஷ் #ஃபைட்மாஸ்டர்தளபதிதினேஷ்
#ரஜினிகாந்த்
#சிவராஜ்குமார்
#எம்ஜிஆர்
#என்டிஆர்மாராவ்
#கருணாநிதி
#ஜெயலலிதா
#எடப்பாடிபழனிசாமி
#முகஸ்டாலின்

தமிழீழ விடுதலைக்காகத் தொடர்ந்து குரல் கொடுப்பேன்!மாநிலங்களவை கடைசி உரையில் வைகோ பேச்சுhttps://thaaii.com/2025/07/25/vaik...
25/07/2025

தமிழீழ விடுதலைக்காகத் தொடர்ந்து குரல் கொடுப்பேன்!
மாநிலங்களவை கடைசி உரையில் வைகோ பேச்சு
https://thaaii.com/2025/07/25/vaiko-says-goodbye-to-the-parliament/

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, திமுகவைச் சேர்ந்த பி.வில்சன், எம்.எம். அப்துல்லா, சண்முகம், அதிமுகவைச் சேர்ந்த சந்திரசேகரன், பாமகவைச் சேர்ந்த அன்புமணி ராமதாஸ் ஆகியோரது மாநிலங்களவை எம்பி பதவி காலம் நேற்றுடன் (ஜூலை - 24) நிறைவடைந்தது. இதனையடுத்து மாநிலங்களவையில் 6 பேருக்கும் வழியனுப்பும் நிகழ்வு நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பேசிய வைகோ, இந்த பெருமைமிகு அவைக்கு 1978ஆம் ஆண்டு என்னை முதன்முதலாக மாநிலங்களவைக்கு அனுப்பியவர் கலைஞர்.

அதைத்தொடர்ந்து 1984, 1990 எனத் தொடர்ந்து மூன்று முறை மாநிலங்களவைக்கு அனுப்பினார். அவருக்குப் பிறகு தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2019-ம் ஆண்டு என்னை எம்.பி.யாக்கினார்.

திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவராக இருந்த முரசொலி மாறனால் வார்த்தெடுக்கப்பட்டவன் நான்.

இந்த மாநிலங்களவையில் பல தலைவர்களை எதிர்கொண்டிருக்கிறேன். பல தலைவர்களுடன் பயணித்திருக்கிறேன். 1963ஆம் ஆண்டு, ஏப்ரலில் அண்ணா தனது பாராளுமன்ற உரையில் 'I belong to Dravidian stock' என்று குறிப்பிட்டுப் பேசினார்.

அண்ணாவின் அந்த உரை தமிழ்நாட்டை மற்ற மாநிலங்களில் இருந்து தனித்துக் காட்டியது. அதைப் பின்தொடர்ந்து இங்கு இருக்கும் என் சக மாநிலங்களவை உறுப்பினர்களும், இனி வருபவர்களும் தமிழ்நாட்டைத் தனித்துவத்துடன் உயர்த்த பாடுபட வேண்டும்.

தமிழீழப் படுகொலைக்கு நீதி கேட்டும், இனப்படுகொலை செய்த சிங்கள அரசின் கொடுஞ் செயலை அம்பலப்படுத்தியும் 13 வீர உரைகளை இந்த மாநிலங்களவையில் முழங்கியிருக்கிறேன்.

அதற்காக என் விசா முடக்கப்பட்டது. சிறை சென்றிருக்கிறேன். இன்னும் பல இன்னல்களை எதிர்கொண்டிருக்கிறேன். இவையெல்லாம் வலிகள், சோகங்கள் நிறைந்ததாக இருந்தாலும் என்றும் என்வாழ்வில் மறக்கமுடியாத அனுபவங்கள்.

நாம் வெற்றி, தோல்வி, துரோகம் எனப் பலவற்றை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அதற்கெல்லாம் துவண்டுவிடக்கூடாது. என்னவானாலும் கடைசிவரை தமிழ் மக்களுக்காகவும், தமிழீழ விடுதலைக்காகவும் என் வீர வாளைச் சுழற்றிக் கொண்டேதான் இருப்பேன்” எனக் கூறினார்.

#மாநிலங்களவை #வைகோ #மதிமுக #முதலமைச்சர்_முக_ஸ்டாலின் #கலைஞர்_கருணாநிதி #தமிழீழம் #விடுதலை #முரசொலி_மாறன்

இயக்குநர் மகேந்திரன்: பூட்டிக்கிடந்த உணர்வுகளைத் திறந்த மேதை!https://thaaii.com/2025/07/25/director-mahendran-bday-spl-a...
25/07/2025

இயக்குநர் மகேந்திரன்: பூட்டிக்கிடந்த உணர்வுகளைத் திறந்த மேதை!
https://thaaii.com/2025/07/25/director-mahendran-bday-spl-article/

அன்றுமுதல் இன்றுவரை தமிழ் சினிமா எத்தனையோ இயக்குநர்களைப் பார்த்துவருகிறது. ஒவ்வோர் இயக்குநர்களும் தனக்குரிய பாணிகளில் படமெடுத்தவர்கள் என்றாலும், அதில் மிகச் சிலரே தனித்த அடையாளத்துடன் தெரிந்தனர்.

அதாவது, அழுத்தமான படைப்புகளை மக்கள் மனதில் விதைத்தவர்கள் சிலரே. அதில் ஒருவராக இன்றும் வலம் வருபவர் இயக்குநர் மகேந்திரன்.

கலைஞனுக்கு மரணமில்லை என்பது போல், அவர் மறைந்துவிட்டபோது இன்றும் அவரது உன்னதமான படைப்புகளால் மக்கள் மனதில் வாழ்கிறார்.

இந்நன்னாளில் அவரது படைப்புகள் பற்றியும், அவரது சினிமா உலகம் உருவான விதம் பற்றியும் சில சுவாரஸ்ய தகவல்களை பார்க்கலாம்.

அவர் இயக்கிய படங்கள் கொஞ்சமே என்றாலும், அனைத்தும் மக்களிடம் வரவேற்பு பெற்றவை. ஆணாதிக்கச் சமுதாயத்தையும் அவற்றால் பாதிப்புக்குள்ளாகும் பெண்களின் உணர்வுகளையும் உணர்வுபூர்வமாய்த் தீட்டியிருந்தார்.

உதிரிப்பூக்கள், மெட்டி ஒலி என அவரது படங்கள் ஒவ்வொன்றும் பெண்களின் உணர்வுகள் மூலம் கதைகளைச் சொன்ன காவியங்களே. அதனால்தான் இன்றும் திரைவானில் நட்சத்திர இயக்குநராய் மின்னுகிறார்.

எம்.ஜி.ஆரும்... மகேந்திரனும்..

ஒரு கல்லூரி மேடையில் ’சினிமா’ என்ற தலைப்பில் பேசிய மகேந்திரன், “நம் கல்லூரிகளில் பலர் காதலிக்கிறார்கள். பின்னர் ஊராரிடம் அவமானப்படுகிறார்கள். ஆனால், எம்.ஜி.ஆர். சினிமாவில் காதலியோடு பாடுகிறார். ஊரே ரசிக்கிறது” என்று பேசியதை ரசித்துக் கேட்ட எம்.ஜி.ஆர்.,

“நல்ல பேச்சு, நல்ல கருத்து, நகைச்சுவை உணர்வுடன்கூடிய விளக்கம். சிறந்த விமர்சகராக இருக்கத் தகுந்தவர், வாழ்க” என்று எழுதிக் கையெழுத்திட்டு மகேந்திரனிடம் கொடுத்தார்.

பின்னாளில், அதே மகேந்திரனை, ’காஞ்சித் தலைவன்’ படத்தில் இயக்குநர் காசிலிங்கத்திடம் உதவி இயக்குநராகவும் சேர்த்துவிட்டார் எம்.ஜி.ஆர்.

தவிர, அவர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க ’பொன்னியின் செல்வன்’ வரலாற்றுப் புதினத்தைத் திரைப்படமாக்கத் திரைக்கதை, உரையாடல் போன்றவற்றை எழுதிவைத்தார். ஆனால், பல்வேறு காரணங்களால் அதனைத் திரைப்படமாக்க முடியாமல் போனது.

அதுபோல், எம்.ஜி.ஆரின் நாடக மன்றத்துக்காக, ‘அனாதைகள்’ என்ற நாடகத்தை எழுதிக் கொடுத்தார். அந்த நாடகத்தை, ’வாழ்வே வா’ என்ற பெயரில் படமாக்க முடிவு செய்து அதுவும் பாதியில் நின்றுபோனது.

என்றாலும் பின்னாளில் மகத்தான பல வெற்றிப் படங்களைக் கொடுத்து பெரிய இயக்குநராக வலம் வந்தார்.

1964-ம் ஆண்டு ஜெய்சங்கர், ரவிச்சந்திரன் நடிப்பில் வெளியான ’நாம் மூவர்’ திரைப்படம்தான், அவரின் கதையில் உருவான முதல் படைப்பு.

மகேந்திரன் இயக்கிய படங்கள்:

1978-ஆம் ஆண்டு அவருடைய திரைக்கதை, வசனம், இயக்கத்தில் ’முள்ளும் மலரும்’ வெளிவந்தது. இப்படத்தில் ரஜினி, சோபா, சரத்பாபு உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

இந்தப் படத்தில், ரஜினிக்கு உருவாக்கப்பட்ட கதாபாத்திரம் போன்று ஒரு முத்தான கதபாத்திரம் இன்னும் தமிழ்த் திரையில் உருவானதாகத் தெரியவில்லை.

‘கெட்டப்பய சார் இந்த காளி’ என்ற பஞ்ச் வசனங்களுடன் ரஜினிக்கான தனி அடையாளத்தை கொடுத்தது இந்தப் படம்.

படம் முழுவதும் இயல்பான மனிதர்களின் இயல்பான நடிப்பு. பாலுமகேந்திராவின் கேமிராவின் கண்களில் மலைகளின் அழகு ரசிகர்களை அப்படி பரவசப்படுத்தியது.

அடுத்து, அவருடைய இயக்கத்தில் 1979-ஆம் ஆண்டு வெளியான படம் ’உதிரிப் பூக்கள்’. இதுதான் மகேந்திரனின் மாஸ்டர் பீஸ்.

இந்திய சினிமாவின் 100 சிறந்த படங்களைப் பட்டியலிட்டால் அதில் நிச்சயம் இந்தப் படம் இடம்பெறும். இந்தப் படத்தில் சரத்பாபு, அஷ்வினி உட்பட மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

ஆணாதிக்க கணவர்களின் கொடுமைகளைப் பொறுத்துக் கொண்டு வாழும் பெண்களின் அமைதியான மனதுக்குள் அவ்வப்போது எழும் புயலைத் திரையில் அற்புதமாகக் காட்டியிருந்தார்.

அடுத்து, 1980-ம் ஆண்டு மகேந்திரனின் இயக்கத்தில் வெளிவந்தது ’பூட்டாத பூட்டுக்கள்’. இத்திரைப்படத்தில் ஜெயன், சாருலதா உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். மகேந்திரனின் படங்களில் அவரது ரசிகர்களுக்கு பிடித்தமான படம் இது.

அன்று பலரும் பேசத் தயங்கிய ஒரு கதை. அதை மிகவும் யதார்த்தமாக கையாண்டிருப்பார்.

திருமணமான தம்பதிக்கு குழந்தை இல்லாத போது, வெறொரு இளைஞனால் ஈர்க்கப்படும் மனைவி என்ற கதையை நெருடல் இல்லாமல் அதன் உண்மைத் தன்மையோடு எடுத்து இருப்பார் மகேந்திரன்.

விதிவிலக்காக உருவான இந்தப் படமும் அவரது வாழ்வில் ஒரு திருப்புமுனையாகத்தான் அமைந்தது.

இந்தப் படத்தில், நடிகர் ரஜினிதான் முதலில் நடிப்பதாக இருந்தது. ஆனால், என்னவோ மாறிப் போனது.

இதைத் தொடர்ந்து 1980-ஆம் ஆண்டு வெளியான ரஜினிகாந்த், ஸ்ரீதேவி நடிப்பில் உருவான ‘ஜானி’ திரைப்படம் அவரது வாழ்வில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது.

மாறுபட்ட பொழுதுபோக்குத் திரைப்படமாக உருவான இந்தப் படத்தின் மூலம் இளையராஜாவும் ஸ்ரீதேவியும் மகேந்திரனைவிடப் பெயரைத் தட்டிச் சென்றார்கள்.

‘ஜானி’ படத்திற்காகவே ரஜினிக்கு தனி ரசிகர்கள் உண்டு. இசைஞானி தன்னுடைய கைவண்ணத்தில் வெறொரு தளத்திற்கு படத்தை கொண்டு சென்றிருப்பார். பின்னணி இசை உலக தரத்திற்கு இருக்கும்.

ரஜினி - ஸ்ரீதேவி காதல் காட்சிகளுக்கு வரும் பின்னணி இசை எப்பொழுது கேட்டாலும் ஏகாந்தமான உணர்வை தரும்.

அதுபோல் அதே ஆண்டில் நடிகர் மோகன், சுஹாசினி நடிப்பில் வெளிவந்த திரைப்படம், ’நெஞ்சத்தைக் கிள்ளாதே’ சூப்பர் ஹிட் அடித்தது. தேசிய விருதுகளை அள்ளிய திரைப்படம். 100 நாட்களைக் கடந்து தமிழத்தில் ஓடியது.

மகேந்திரனால் சினிமா ஆன இலக்கியங்கள்!

இன்றைய காலத்திலும் பல நாவல்கள் திரைப்படமாக்கப்பட்டு வருகின்றன.

ஆனால், இதை அந்தக் காலத்திலேயே செய்த இயக்குநர்களில் மகேந்திரனும் ஒருவர்.

அவர், பிரபல எழுத்தாளர்களின் நாவல்களைத் திரைப்படமாக்கி வெற்றி கண்டவர்.

அந்த வகையில், எழுத்தாளர் பொன்னீலன் எழுதிய ’உறவுகள்’ என்ற நாவல்தான் ’பூட்டாத பூட்டுக்கள்’ என்ற பெயரில் திரைப்படமாக்கப்பட்டது.

அடுத்து, எழுத்தாளர் புதுமைப்பித்தனின் ’சிற்றன்னை’ கதையின் கருவை வைத்துத்தான் ’உதிரிப்பூக்கள்’ படம் எடுக்கப்பட்டது.

அதுபோல் எழுத்தாளர் உமா சந்திரன் எழுதிய, ’முள்ளும் மலரும்’ நாவல்தான் ’முள்ளும் மலரும்’ என்ற பெயரில் படமாக வெளிவந்தது. இப்படங்கள் அனைத்தும் மகத்தான வெற்றிபெற்றவையாகும்.

பெண் கதாபாத்திரங்கள் முன்னிலை!

எப்படித் தன் திரைப்படங்களில் எழுத்தாளர்களுக்கு முன்னுரிமை அளித்தாரோ, அதேபோல் பெண் கதாபாத்திரங்களுக்கும் முன்னுரிமை கொடுத்து அழகு பார்த்தவர் இயக்குநர் மகேந்திரன். அதனாலேயே, அவருடைய பல படங்கள் வெற்றிபெற்றன.

மகேந்திரனின் பல திரைப்படங்கள் பெண் கதாபாத்திரத்தை முன்னிலையாக வைத்து உருவாக்கப்பட்டவை. ஒரு பெண்ணின் பார்வையில் கதை சொல்வது என்பதே, அன்று அரிதாக ஒரு வழக்கம். அதை பல படங்களில் நிகழ்த்திக் காட்டியவர் மகேந்திரன்.

ரஜினியும்.. மகேந்திரனும்

இயக்குநர் மகேந்திரன் தாம் இயக்கிய படங்களில், ரஜினியை வைத்து, ’முள்ளும் மலரும்’, ’ஜானி’, ’கை கொடுக்கும் கை’ ஆகிய மூன்று படங்களை இயக்கியிருந்தார். இதனால் ரஜினியின் திரைப் பயணமும் மாற்றம் பெற்றது என்பது அவரே ஒப்புக்கொண்ட உண்மை.

இதையடுத்து அவரே ஒருமுறை, "நடிப்பில் எனக்கு புதிய பரிமாணத்தை கற்றுக்கொடுத்தவர் மகேந்திரன். என்னை எனக்கே அடையாளம் காட்டியவர்" என பெருமைபடச் சொன்னார்.

இன்னும் சொல்லப்போனால், ரஜினிகாந்தின் இன்றைய ஸ்டைலை உருவாக்கியவரே மகேந்திரன்தான் என்று பலரும், இன்றும் சொல்வதைக் கேட்கலாம்.

சினிமா பற்றி..

“நாட்டின் உண்மையான பிரச்னைகளைப் படமாக்கி, நாம் நினைக்கிறமாதிரி மக்களுக்குத் தர முடியலை. கால மாற்றத்திலேயே, ஒருவேளை போகப்போக அதிலே மாற்றங்கள் ஏற்பட்டா நல்லதுன்னு நினைக்கிறேன். ஒருவகையில், பார்த்தா நாம நம்மையே ஏமாத்திக்கிறோம்னுகூட நினைக்கிறேன்.

எத்தனை நாளைக்குத்தான் மூடிமறைக்க முடியும்? உண்மை, ஒருநாளைக்கு வெளிவரத்தான் போகுது; அதில் சந்தேகமில்லை” என சினிமாவின் நிலை குறித்து 1981-ல் சுதந்திர தினம் ஒன்றில் மகேந்திரன் பேசியிருந்தார்.

சினிமா குறித்து நிகழ்வொன்றில் பேசிய மகேந்திரன், ”சினிமா ஒன்றும் தேவலோகமும் அல்ல. சினிமா சார்ந்த நபர்கள் ஒன்றும் தேவதூதர்களும் அல்ல. இதைப் புரிந்துகொண்டால், எளிய விஷயங்களைப் பார்த்து ஆச்சர்யப்படத் தேவை இருக்காது” எனப் பேசினார்.

அதுபோல் இன்னொரு சமயம் பேசிய அவர், “மக்கள் மனநிலையை ஆரோக்கியமான திசைகளை நோக்கி மோல்டு பண்ற கலைதான் சினிமா. சும்மா ரசிகர்களுக்குப் பிடிக்கும்னு தியேட்டர்ல அரட்டை அரங்கம் நடத்தக் கூடாது” என்றார்.

'உதிரிப்பூக்கள்' குறித்து...

சினிமா குறித்து தன் கருத்துகளைப் பல இடங்களில் பதிவுசெய்த மகேந்திரன், 'உதிரிப்பூக்கள்' குறித்தும் பேசியிருக்கிறார்.

இதுகுறித்து ஒருமுறை அவர், ”சினிமா ஒரு காட்சி ஊடகமாக இருக்க வேண்டும். காட்சிகளால் நகரவேண்டும் என்று நினைத்தேன்.

எனக்குத் தமிழ்த் திரைப்படங்கள்மீது என்னென்ன ஒவ்வாமைகளெல்லாம் இருந்தனவோ, அதையெல்லாம் நீக்கிவிட்டு எடுத்த படம்தான் 'உதிரிப்பூக்கள்' “ என்றார்.

அதே 'உதிரிப்பூக்கள்' குறித்து மேலும் பல சுவாரஸ்யங்களைப் பகிர்ந்துகொண்டார்.

அப்போது பேசிய அவர், “சில கதைகளுக்கு நடிகர்கள் தெரியக்கூடாது. அப்படித்தான், ’உதிரிப்பூக்கள்’ கதையும். புதுமுகங்களைத்தான் நடிக்கவைக்க வேண்டும் என்று எண்ணியிருந்தேன்.

குறிப்பாக, ஹீரோயின் கேரக்டர் என் கதைக்கு ஏற்றதுபோல இருக்கவேண்டும் என்று நினைத்தேன்.

முகம், மூக்கு, கண், தோற்றம் என அந்தப் பெண் கேரக்டரை, கற்பனை செய்து வைத்திருந்தேன்.

அதற்காக, பல புதுமுக நடிகைகளை வலைவீசித் தேடிக்கொண்டிருந்தேன். அப்போதுதான், பெங்களூருவிலிருந்து நாயகியாக அஸ்வினி கிடைத்தார்.

என் கதைக்கு எதைத் தேடினேனோ, அவை அனைத்தையும் அஸ்வினியிடம் கண்டேன். அவர் மட்டும் இல்லையென்றால், ’உதிரிப்பூக்க’ளை எடுத்திருக்கவே மாட்டேன்” என ஆச்சர்யம் பொங்கப் பேசியிருந்தார்.

ராஜகண்ணன் K

- நன்றி: புதிய தலைமுறை

#மகேந்திரன் #இயக்குநர்_மகேந்திரன்
#எம்ஜிஆர் #ரஜினிகாந்த்
#உதிரிப்பூக்கள்
#முள்ளும்மலரும்
#பூட்டாதபூக்கள்
#ஸ்ரீதேவி
#ஜானி
#இசைஞானி #இளையராஜா

மாநிலங்களவை உறுப்பினராக தமிழில் உறுதிமொழி ஏற்ற கமல்ஹாசன்!         #கமல்ஹாசன்_எனும்_நான் #மாநிலங்களவை_உறுப்பினர் #எம்பி #...
25/07/2025

மாநிலங்களவை உறுப்பினராக தமிழில் உறுதிமொழி ஏற்ற கமல்ஹாசன்!








#கமல்ஹாசன்_எனும்_நான்
#மாநிலங்களவை_உறுப்பினர்
#எம்பி
#கமல்_எம்பி

மனிதக் கழிவுகளை பணம்கொடுத்து வாங்கும் மைக்ரோசாஃப்ட்!https://thaaii.com/2025/07/25/microsoft-bioslurry-project/இந்த உலகில...
25/07/2025

மனிதக் கழிவுகளை பணம்கொடுத்து வாங்கும் மைக்ரோசாஃப்ட்!
https://thaaii.com/2025/07/25/microsoft-bioslurry-project/

இந்த உலகிலேயே எதற்கும் பயன்படாது என்று நாம் ஒதுக்கும் பொருள் மனிதக் கழிவுகள். ஆனால், அந்த மனிதக் கழிவுகளையும் விலை கொடுத்து வாங்கத் திட்டமிட்டுள்ளது மைக்ரோசாஃப்ட் நிறுவனம்.

மனிதக் கழிவுகள் மட்டுமல்ல… உணவுக் கழிவுகள், விவசாயக் கழிவுகள், காகிதக் குப்பைகள் என எல்லா விதமான கழிவுகளையும் சேர்த்து மொத்தம் 49 லட்சம் மெட்ரிக் டன் குப்பைகளை வாங்க மைக்ரோசாஃப்ட் திட்டமிட்டுள்ளது.

இவற்றை வாங்குவதற்காக கோடிக்கணக்கான ரூபாயை மைக்ரோசாஃப்ட் செலவு செய்யவுள்ளது.

பூமிக்கு அடியில் மிக ஆழமாக ஒரு பள்ளத்தை தோண்டி அதற்குள் ஒரு ராட்சத ஊசி மூலம் இந்த மொத்த குப்பைகளையும் போட்டு மூட மைக்ரோசாஃப்ட் திட்டமிட்டுள்ளது.

2026-ம் ஆண்டுமுதல் அடுத்த 12 ஆண்டுகளுக்கு இதுபோல் குப்பைகளை வாங்கி, பூமிக்குள் உருவாக்கும் பள்ளத்தில் போட்டு மூட மைக்ரோசாஃப்ட் திட்டமிட்டுள்ளது.

இதற்காக டீப் வால்ட் என்ற நிறுவனத்துடன் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

இந்தக் குப்பை மற்றும் கழிவுகளில் நகர்ப்புறங்களில் உள்ள கழிவுநீர்கூட அடங்கும்.

இந்தக் குப்பைகளை வாங்கி பூமிக்கு அடியில் பள்ளம் தோண்டி அதில் மூடும் முறைக்கு ‘பயோஸ்லரி’ (bioslurry) என்று பெயரிட்டுள்ளது மைக்ரோசாஃப்ட்.

இதனால் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்துக்கு என்ன லாபம்? என்று கேட்கிறீர்களா...

இந்த உலகில் அதிக அளவில் கரியமில வாயுவை வெளியிடும் நிறுவனங்களில் ஒன்றாக மைக்ரோசாஃப்ட் உள்ளது. இந்நிறுவனம் 2020 முதல் 2024-ம் ஆண்டுக்குள் 75.5 மில்லியன் டன் கார்பன் டை ஆக்ஸைடை வெளியேற்றி உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.

முக்கியமாக, மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவுக் கருவிகளுக்கு அதிக மின் சக்தியும் நீரும் தேவைப்படுகின்றன. இவை அதிக ஆளவில் கரியமில வாயுவை உமிழ்கின்றன.

தனது கார்பன் உமிழ்வைக் குறைக்கும் இலக்குகளை அடைய மைக்ரோசாஃப்ட் நிறுவனம் மூலிகைக் கழிவுகளை நிலத்தடியில் ஆழமாகப் புதைக்கும் திட்டத்தை முன்னெடுத்துள்ளது.

இந்தக் கழிவு நீர் மற்றும் குப்பைகளை அப்படியே பொதுவெளியில் விட்டால், அவை இயற்கையையும், நிலத்தடி நீரை மாசுபடுத்தும்.

அதோடு மனிதர்களின் சுகாதாரத்தையும் பாதிக்கும். அதனால் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் இந்தக் குப்பைகளை பூமிக்குள் செலுத்துகிறது.

இதுபற்றி கூறும் டீப் வால்ட் நிறுவனத்தின் துணைத் தலைவரான ஜூலியா ரிச்செல்ஸ்டீன், “குப்பைகளை அப்படியே பொதுவெளியில் விட்டால், அவை சுற்றுச்சூழலுக்கு ஆபத்தை ஏற்படுத்தும். அதனால் அவற்றை பூமிக்கு கீழே மிக ஆழமாக பள்ளம் தோண்டி புதைக்கிறோம்” என்றார்.

- பி.எம்.சுதிர்

#மைக்ரோசாஃப்ட் #மனிதக்_கழிவுகள் #உணவுக்_கழிவுகள் #விவசாயக்_கழிவுகள் #காகிதக்_குப்பைகள் #டீப்_வால்ட் #ஜூலியா_ரிச்செல்ஸ்டீன் #பூமி



Address

Chennai

Alerts

Be the first to know and let us send you an email when தாய் இதழ் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to தாய் இதழ்:

Share

Category

Thai Magazine

Thai magazine is the Official page for Thaaii.com.

Thaai.com is a Tamil Magazine site providing information on current affairs in Tamil.