தாய் இதழ்

தாய் இதழ் thai magazine is the Official page for thaaii.com which is a tamil language e-magazine providing in
(2)

கேள்விக்குறியாகும் நம்பிக்கை!https://thaaii.com/2025/09/18/script-about-politics/இன்றைய நச்:கண்ணுக்கு தெரியாதவற்றைநம்புவ...
18/09/2025

கேள்விக்குறியாகும் நம்பிக்கை!
https://thaaii.com/2025/09/18/script-about-politics/

இன்றைய நச்:

கண்ணுக்கு தெரியாதவற்றை
நம்புவது மட்டுமல்ல,
கண்ணுக்கு முன்னால் நன்கு தெரியும்
அரசியல் கட்சிகளை நம்புவதுகூட
மூடநம்பிக்கையாகி விடக்கூடாது!

#அரசியல் #கட்சி #மூடநம்பிக்கை

“இதயவீணை தூங்கும்போது பாட முடியுமா?..”https://cinirocket.com/idaya-veenai-song-lyrics/திரைத்தெறிப்பு : 108திரையிசைத் தில...
18/09/2025

“இதயவீணை தூங்கும்போது பாட முடியுமா?..”
https://cinirocket.com/idaya-veenai-song-lyrics/
திரைத்தெறிப்பு : 108

திரையிசைத் திலகமான இசையமைப்பாளர் கே.வி.மகாதேவன் எத்தனையோ மகத்தான பாடல்களைத் தமிழிலும் பிற மொழிகளிலும் தந்திருக்கிறார்.

1960-ம் ஆண்டு வெளிவந்த ‘இருவர் உள்ளம்’ திரைப்படத்தில் கே.வி.மகாதேவனால் இசை அமைக்கப்பட்ட இந்த இனிமையான பாடலை எழுதியவர் கவியரசர் கண்ணதாசன்.

சங்க இலக்கியப் பாடல்களில் தலைவனைப் பிரிந்த தலைவி தனது பிரிவாற்றாமையை வெளிப்படுத்தும் பாடல்கள் இருக்கின்றன.

அதைப்போலவே தனது காதல் உணர்வை கதாநாயகியான சரோஜாதேவி வெளிப்படுத்திப் பாடும் விதமாக அமைந்திருக்கும் இந்தப் பாடலை பாடியவர் பி. சுசீலா.

“இதய வீணை தூங்கும்போது பாட முடியுமா?
இரண்டு கண்கள் இரண்டு காட்சி காண முடியுமா?”

பல்லாயிரக்கணக்கான பாடல்களை பி.சுசீலா அவர்கள் பாடியிருந்தாலும்கூட அவர்கள் குரலில் இனிமையை வெளிப்படுத்தும் விதத்தில் அமைந்த தனிப்பாடல்களில் கூடுதலான பாவங்களுடன் பாடப்பட்ட பாடல் இது என்று சொல்லலாம்.

“உதடு சிரிக்கும் நேரம் உள்ளம் சிரிக்குமா?
உருவம் போடும் வேஷம் உண்மை ஆகுமா?

விளக்கைக் குடத்தில் வைத்தால் வெளிச்சம் தோன்றுமா?
வீட்டுக் குயிலைக் கூட்டில் வைத்தால்
பாட்டுப் பாடுமா.... பாட்டுப் பாடுமா?”

இதில் இடம்பெற்றிருக்கும் எளிமையான இந்த வரிகளைப் பாருங்கள்.

உருவம் போடும் வேஷம் உண்மையாகுமா? என்ற இந்தப் பாடலில் எழுப்பியிருக்கும் கேள்வி தற்போது வரை காதல் உணர்வில் விழும் எல்லாப் பெண்களுக்குமான எச்சரிக்கையை போலவும் அமைந்திருக்கிறது.

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் கதாநாயகனாக நடித்த இந்தப் படத்திற்கு வசனம் எழுதி இருப்பவர் மு.கருணாநிதி.

“மனதை வைத்த இறைவன் அதில் நினைவை வைத்தானே.
சில மனிதர்களை அறிந்துகொள்ளும் அறிவை வைத்தானே.

அறிவை வைத்த இறைவன் மேனி அழகை வைத்தானே.
அழகு கண்ட மனிதன்
பெண்ணை அடிமை செய்தானே... அடிமை செய்தானே.”

பெண் அடிமைத்தனம் குறித்து அதிகமான குரல்கள் இல்லாத அந்த காலத்திலேயே இப்பாடல் வழியே பெண் அடிமைத்தனத்திற்கு எதிரான குரல் வெளிப்பட்டிருப்பது தனிச் சிறப்பு.

“உருகி விட்ட மெழுகினிலே ஒளியேது?
உடைந்துவிட்ட சிலையினிலே அழகேது?

பழுதுபட்ட கோவிலிலே தெய்வமேது?
பனிப் படர்ந்த பாதையிலே பயணமேது?”

இதே ‘இருவர் உள்ளம்’ திரைப்படத்தில் டி.எம்.எஸ், பி.சுசீலா இதுவரின் இசைக் கூட்டணியில் பல இனிமையான பாடல்கள் இடம்பெற்றிருக்கின்றன.

அவற்றிற்கிடையே தனித்து ஒலிக்கும் ஒற்றை வயலின் இசையைப் போல ஒலித்திருக்கும் பி.சுசீலாவின் குரலைக் கேட்கும்போது, அந்தத் தருணம் பரவசம் ஏற்படுத்தும் ஒன்றாகவே இருந்து கொண்டிருக்கிறது.

- மணா

#இருவர்_உள்ளம் #சிவாஜி_கணேசன் #கே_வி_மகாதேவன் #கவியரசர்_கண்ணதாசன் #சரோஜாதேவி #பி_சுசீலா #மு_கருணாநிதி #இதயவீணைதூங்கும்போது #பாடல்

தண்ணீர்ப் பாதுகாப்பு: மாற்றங்களைத் துரிதப்படுத்துவோம்!https://thaaii.com/2025/09/18/world-water-monitoring-day/செப்டம்பர...
18/09/2025

தண்ணீர்ப் பாதுகாப்பு: மாற்றங்களைத் துரிதப்படுத்துவோம்!
https://thaaii.com/2025/09/18/world-water-monitoring-day/

செப்டம்பர் 18 - உலக தண்ணீர் கண்காணிப்பு தினம்

1992-ஆம் ஆண்டு ஐ.நா.வின் சுற்றுச்சூழல் வளர்ச்சிக் கழகக் கூட்டத்தில் நீர்வளப் பாதுகாப்பை வலுப்படுத்தவேண்டும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்பின் உள்ளூர் நீர்நிலைகளைக் கண்காணித்து நீரின் தரம், வளம் குறையாமல் பாதுகாத்திட வேண்டும் என்பதற்காக அமெரிக்காவின் கிளீன் வாட்டர் பவுண்டேசன் இந்த தினத்தை 2003ல் அறிவித்தது.

குடிநீர், பாசனம், உயிரினங்களுக்கான நீர், மனிதர்களின் இதரத் தேவைகளுக்கான நீர் என்று தண்ணீர்தான் பூமியின் இயங்கு சக்தியாக உள்ளது.

அந்த தண்ணீரைக் காக்க வேண்டியது நமது முக்கிய கடமையாக உள்ளதால், அதனை கண்காணிப்பதும் மிக அவசியமானதாக உள்ளது.

இவைதான் இந்த சர்வதேச தண்ணீர் கண்காணிப்பு தினத்தின் நோக்கமாக உள்ளது.

உலகில் 40 சதவீதம் மக்கள் சுகாதாரமான தண்ணீர் கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று புள்ளிவிபரங்கள் கூறுகின்றன.

குடிநீர் மாசுபடுவதாலும், வறட்சியாலும் வரும் காலங்களில் பல கோடி மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும், நீருக்காகப் போர்கள் மூளும் அபாயம் உள்ளதாகவும் விஞ்ஞானிகள் எச்சரித்து வருகின்றனர்.

உலகில் 97.5 சதவீதம் உப்புநீர் உள்ளது. மீதமுள்ள 2.5 சதவீதம்தான் நன்னீர். ஆனால், அதில் 2.24 சதவீத நீர் துருவப் பகுதிகளில் பனிப்பாறையாக உள்ளது.

எஞ்சிய 0.26 சதவீத நீர்தான் அனைத்து உயிர்களுக்குமான வாழ்வாதாரம்.

இந்த சொற்ப தண்ணீரையும் தினம்தோறும் பல ஆயிரம் டன் கழிவுகளைக் கலந்து மாசுப்படுத்தி வருகின்றனர்.

அதுபோல தொடர்ந்து நிலத்தடி நீர் வகைதொகையில்லாமல் உறிஞ்சப்படுவதால் நிலத்தடி நீர்மட்டமும் அபாய கட்டத்தில் உள்ளது.

இதுபோல பல்வேறு பக்கங்களிலும் நீருக்கான நெருக்கடி மற்றும் நீர் பற்றாக்குறை, மாசுபாடுகளால் மனிதர்களுக்கு நெருக்கடிகளும் உருவாகியுள்ள சூழலில் உலக தண்ணீர் கண்காணிப்பு தினம் என்பதும் மிக அவசியமான ஒரு நாளாக மாறியுள்ளது.

- நன்றி: புதிய தலைமுறை

#உலகதண்ணீர்கண்காணிப்புதினம் #தண்ணீர்

அம்மா கேரக்டருக்கு உயிர்க் கொடுத்த பண்டரிபாய்!https://thaaii.com/2025/09/18/script-about-actress-pandari-bai/’பாகுபலி’ ப...
18/09/2025

அம்மா கேரக்டருக்கு உயிர்க் கொடுத்த பண்டரிபாய்!
https://thaaii.com/2025/09/18/script-about-actress-pandari-bai/

’பாகுபலி’ படத்தில் காலில் சங்கிலியுடன் ஓர் அடிமைபோல இருப்பார் அனுஷ்கா. ‘காலம் வரும். என் மகன் வருவான். விடுதலை கிடைக்கும்’ எனக் காத்திருப்பார். அதேபோல் மகன் பிரபாஸ் வருவார்; விடுதலை கிடைக்கும்.

இப்படித்தான் எம்.ஜி.ஆர். நடித்த அந்தப் படத்தில், விலங்குடன் காத்திருப்பார் அந்த நடிகை. ‘விடுதலை கிடைக்கும் காலம் வரும். என் மகன் வந்து விடுதலையைத் தருவான்’ என்பார்.

அதேபோல், எம்.ஜி.ஆர். வருவார். ‘தாயில்லாமல் நானில்லை, தானே எவரும் பிறந்ததில்லை’ என்று பாடுவார். வீரர்களைத் துவம்சம் செய்வார். அம்மாவுக்கு மட்டுமின்றி, மொத்த தேசத்துக்கும் விடுதலைப் பெற்றுத் தருவார்.

எம்.ஜி.ஆர். படம்தான் என்றாலும் அம்மாவை மையப்படுத்தியும் அடிமைத்தனத்தை ஒழிக்கவுமான அந்தப் படத்துக்கு ‘அடிமைப்பெண்’ என்றே பெயர் வைக்கப்பட்டது.

‘அடிமைப்பெண்’ணாக நடிப்பில் நம்மை சுதந்திர வேட்கைக்குள் இறக்கிய அந்த நடிகை... பண்டரிபாய்.

’தெய்வமகன்’ படத்தில், ஆசிரமத்தில் அனாதை போல் வளர்ந்த சிவாஜி, தன் அம்மாவை கோயிலில் பார்ப்பார். அந்த அம்மாவுக்கு பார்த்ததும் தாய்மை உணர்வு பீறிடும். மனதை என்னவோ செய்யும்.

இன்னொருநாள், இரவில் வீட்டுக்குள் நுழைந்து அம்மாவை அருகில் பார்ப்பார் சிவாஜி. நெகிழ்ந்து, நெக்குருகுப் போவார்.

‘தெய்வமே... தெய்வமே... கண்டுகொண்டேன் அன்னையை’ என்று உருகி உருகிப் பாடுவார்.

அந்தப் படத்தில் அம்மாவாக நடித்த பண்டரிபாயை நம் சொந்த அம்மாவாக, பெரியம்மாவாக, சின்னம்மாவாக, பக்கத்து வீடுகளில் உள்ள அம்மாவாகவே பார்த்தோம்; அவரின் நடிப்பில் அண்மையானோம்.

தமிழ் சினிமாவில் அநேகமாக, ‘இவர் அம்மா கேரக்டருக்கு’ என்று ஒதுக்கி முத்திரை குத்தியது கண்ணாம்பாள் காலத்தில்தான் இருக்க வேண்டும்.

அதற்கு முன்பு அப்படி இருந்ததாகத் தெரியவில்லை. கண்ணாம்பாவும் எம்.வி.ராஜம்மாவும் போட்டி போட்டுக்கொண்டு அம்மா வேடங்களில் நடித்தார்கள்.

எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி காலங்களில் காலையில் இந்தப் படத்தில் அவருக்கு அம்மா, மாலையில் அந்தப் படத்தில் அவருக்கு அம்மா என்று நடித்தார்கள். அடுத்ததொரு காலகட்டம் வந்தது. அதுதான் பண்டரிபாயின் காலம்.

அன்று தொடங்கி கமல், ரஜினி காலத்திலும் ‘அம்மா’வாகவே வாழ்ந்த அந்த அன்பும் கருணையும் கொண்ட முகம்... அவ்வளவு எளிதாக தமிழ் சினிமாவும் ரசிகர்களும் மறந்துவிடாத முகம்!

பிறந்தது கர்நாடகாவில். சிறுவயதில் அந்த உருண்டைமுகமும் கருணை விழிகளும் பண்டரிபாயைத் திரையுலகிற்குக் கொண்டு வந்தன. கன்னடப் படங்களில் அறிமுகமானவர், தொடர்ந்து அங்கே ராஜாங்கமே நடத்தினார்.

இன்றைக்கு வரை உள்ள கன்னடத் திரையுலகின் வரலாற்றில், பண்டரிபாயின் சரித்திரம் நிறையப் பக்கங்கள் கொண்டதாகவே இருக்கிறது.

சிவாஜி கணேசன் அறிமுகமான ‘பராசக்தி’ காலத்திலேயே பண்டரிபாய், தமிழிலும் நடிக்க வந்துவிட்டார்.

படத்தில் குணசேகரனுக்கும் தங்கை கல்யாணிக்கும்தான் முக்கியத்துவம் என்றாலும் பண்டரிபாய் தன் பாந்தமான நடிப்பால் வெகுவாகவே கவர்ந்திருப்பார். ‘புதுப்பெண்ணின் மனதைத் தொட்டுப் போறவரே...’ என்று பாடி நம் மனங்களையெல்லாம் ஈர்த்திருப்பார்.

பிறகு பல படங்களில் நாயகியாகத்தான் நடித்தார். தமிழில் பாடல்களே இல்லாமல் வந்த முதல் படமான ‘அந்த நாள்’ படத்தில் சிவாஜியின் மனைவியாக நடித்துக் கலக்கியிருப்பார்.

‘சிவாஜியைக் கொலை செய்தது யார்?’ என்ற விசாரணையுடன் தொடங்கும் படத்தின் முடிவில், பண்டரிபாய் சொல்லும் வார்த்தைகளும் அட்சரம் பிசகாமல் பேசுகிற தமிழ் உச்சரிப்பும் வசனங்களும் அப்போதே பிரமிக்கவைத்தன.

குணசித்திரக் கதாபாத்திரங்கள் கிடைத்தன. அம்மா கதாபாத்திரத்துக்கு நடிக்க, கண்ணாம்பாவும் எம்.வி.ராஜம்மாவும் ஓய்வு பெற்ற நிலையில், அந்த இடத்தை நிரப்புவதற்கு பண்டரிபாய் பொருத்தமானவர் என தமிழ் சினிமா முடிவு செய்தது.

எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி, முத்துராமன், ஜெய்சங்கர் என அறுபதுகளின் மத்தியில் இருந்து தொண்ணூறுகள் வரைக்கும் ‘அம்மா... அம்மா... அம்மா...’ என்றே வாழ்ந்துகாட்டினார் பண்டரிபாய்.

‘எல்லா படத்துலயும் அம்மா கேரக்டர்தான். ஆனா ஒவ்வொரு படத்துக்கும் பண்டரிபாய் ஒரு உடல்மொழி வச்சிருப்பாங்க. மிகச் சிறந்த நடிகை’ என சிவாஜி கணேசன் மனம் திறந்து பாராட்டியிருக்கிறார்.

‘இந்தப் படத்துல யாரு எனக்கு அம்மா? பண்டரிபாயையே போட்ருங்களேன். நல்லாருக்கும்’ என்பாராம் எம்ஜிஆர்.

படத்தின் இயக்குநர்கள் கதை சொல்லும்போதே... ‘பண்டரிபாய் மேடம்தான் சார் அம்மா. அவங்க பையன் சார் நீங்க...’ என்றுதான் எல்லா ஹீரோக்களும் கதை சொன்னார்கள்.

இப்படித்தான் பண்டரிபாய் எனும் ஆகச்சிறந்த நடிகையின் ராஜாங்கம், தமிழ் சினிமாவில் வளர்ந்தது; தடம் பதித்தது!

‘தெய்வமகன்’ படத்தில் வேறொரு அம்மா. ‘அடிமைப்பெண்’ படத்தில் இன்னொரு முகம் காட்டும் அம்மா. ‘கெளரவம்’ படத்தில் சாந்தமும் பணிவும் கொண்டு புருஷனின் எல்லையை மீறாத, மகன் மீது நேசம் கொண்ட பாவப்பட்ட அம்மா.

திருடனாக வந்தவன் காயத்துடன் வந்திருக்க அவனுக்கு அடைக்கலம் கொடுத்து, அவனைக் காப்பாற்றி, பிறகு அவனும் தன் பிள்ளைதான் எனத் தெரியவரும் போது, கலங்கித் தவித்து, ‘காணாமல் போன மகன் கிடைத்துவிட்டான்’ என்கிற பூரிப்பைக் காட்டுகிற அம்மா... என்று பண்டரிபாய் எடுத்துக்கொண்ட அம்மா கதாபாத்திரங்களின் தன்மைக்கேற்ப, தன் உடல்மொழியை மாற்றினார்.

குரலின் ஏற்ற இறக்கங்களுக்கு உயிர் கொடுத்தார். நிறைய பட விமர்சனங்களில், பண்டரிபாயின் நடிப்பும் தமிழ் உச்சரிப்பும் ரொம்பவே பாராட்டப்பட்டன.

‘நம்நாடு’ படத்தில் பண்டரிபாய் பேசப்பட்டார். ’எங்க வீட்டு பிள்ளை’யில் எம்ஜிஆரின் அக்காவாக, கொடுமைக்கார நம்பியாரின் மனைவியாக பரிதாபப்பட வைத்திருப்பார்.

‘வசந்த மாளிகை’ படத்தில் பண்டரிபாயின் நடிப்பும் சிவாஜிக்கும் அவருக்குமான காட்சிகளும் நெகிழ வைத்துவிடும். மாலைக்கண் நோயுடன் போராடுகிற சிவாஜிக்கு அம்மாவாக பண்டரிபாய் நடிப்பில் வெளுத்து வாங்கியிருப்பார். ‘நான் வாழவைப்பேன்’ படத்திலும் சிவாஜிக்கு அம்மாவாக, வாழ்ந்திருப்பார்.

எம்ஜிஆருடன் ‘அன்னமிட்ட கை’, ‘இதயக்கனி’, ‘நேற்று இன்று நாளை’ முதலான படங்களில் தன் நடிப்பால் தனி முத்திரை பதித்தார். திருச்சியில் உள்ள ஐயப்பன் கோயிலில் கவிஞர் வாலி எழுதிய பாடல் கல்வெட்டுகளாக பொறிக்கப்பட்டுள்ளது.

ஒரு கோயிலில், சினிமாப் பாடல் ஒன்று பொறிக்கப்பட்டு கெளரவிக்கப்பட்டிருப்பது இதுவே முதல்முறை.

ரஜினி நடிப்பில், பி.வாசு இயக்கத்தில் உருவான ’மன்னன்’ படத்தையும் பாடல்களையும் எப்படி மறக்கமுடியும்?

இசைஞானி இளையராஜா இசையில், கே.ஜே.ஜேசுதாஸின் குரலில், கால்கள் நடக்க முடியாமல் இருக்க, கைகள் செயலிழந்துவிட... ரஜினிகாந்த் தூக்கிக்கொண்டு கோயிலுக்குச் செல்ல, குளிப்பாட்டிவிட, தலைவாரிவிட... ‘அம்மா என்றழைக்காத உயிரில்லையே...’ என்ற அந்தப் பாடலும் பண்டரிபாயின் நடிப்பும் நம்மை கண்கலங்கச் செய்துவிடும்.

பார்க்கின்ற ரசிகர்களின் அம்மாக்கள் அங்கே பிம்பமாக, அவரவருக்குத் தெரிந்தார்கள். இன்றைக்கு, அந்தக் காட்சியை கவனித்துப் பார்த்தால், பண்டரிபாயின் முகமும் கண்களும் புன்னகையும் கைகளும் கைவிரல்களும் தனித்தனியே நடித்து, தாய்மையை நமக்குள் தளும்பத்தளும்பக் கொடுத்திருக்கும்!

அம்மாவின் நினைவுக்கு மரணமே இல்லை. நடிகையாக அல்லாமல், ஒவ்வொருவரும் அம்மாவாகவே பார்க்கிற பண்டரிபாய்க்கும் மரணமே இல்லை.

- வி. ராம்ஜி

நன்றி: காமதேனு இதழ்

#அடிமைப்பெண் #தெய்வமகன் #சிவாஜி #எம்ஜிஆர் #கண்ணாம்பா #எம்விராஜம்மா #ஜெமினி #பராசக்தி #நம்நாடு #வசந்தமாளிகை #அன்னமிட்டகை #இதயக்கனி #நேற்றுஇன்றுநாளை #பண்டரிபாய்

அப்பா இல்லாத பெரியார் பிறந்த நாள். ஒவ்வொரு பெரியார் பிறந்தநாளின் போதும் முதல் நாளே அதற்கான ஏற்பாடுகளைத் தொடங்கிவிடுவார்....
18/09/2025

அப்பா இல்லாத பெரியார் பிறந்த நாள்.

ஒவ்வொரு பெரியார் பிறந்தநாளின் போதும் முதல் நாளே அதற்கான ஏற்பாடுகளைத் தொடங்கிவிடுவார். ஒரு படம் வைத்து மாலையிட்டு இனிப்பும் சுண்டலும் கொடுப்பதற்குத்தான் எல்லாம்.

முதல் நாளே மல்லிகை அரும்புகளைப் பறித்து மாலையாக கட்டித்தருவார் பாட்டி. பிறந்த நாளன்று சுண்டல் செய்வார் அம்மா. கொரடாச்சேரியில் இருந்து இனிப்பு மிட்டாய்கள் வாங்கிவைத்திருப்பார்.

பிறந்த நாளன்று காலையில் நான்கைந்து மூங்கில் கம்புகளை வைத்து கீற்றில் சிறிய குடில் அமைப்பார். நெட்டிலிங்க மரக்கிளைகளை சிறிதாக மூங்கில் கம்புகளில் கட்டிவிடுவார். நடுவே ஒரு நாற்காலியை போட்டு, அதில் பெரியாரின் புகைப்படத்தை வைத்து மல்லிகைப்பூ மாலையை அணிவித்திருப்பார். சிறிய திக கொடி பறக்கும்.

அன்று மதியம் முழுவதும் வீட்டைக் கடந்து செல்லும் பள்ளி மாணவர்கள், ஊர்க்காரர்கள், வீட்டிற்கு வருவோர் என அனைவருக்கும் சுண்டலும் இனிப்பும் வழங்கப்படும். நான் பால்ய காலம் முதலே பார்த்துவந்த காட்சிகள் இவை.

இந்த பெரியார் பிறந்தநாளை நினைக்கிறபோது மனம் வெறுமையாக இருக்கிறது. என்னை வாட்டுகின்றன அப்பாவின் நினைவுகள்.

- சுந்தரபுத்தன்

மூச்சு முட்ட வைக்கும் மூங்கில் பங்களிப்பு!https://thaaii.com/2025/09/18/world-bamboo-day/செப்டம்பர் 18 – உலக மூங்கில் தி...
18/09/2025

மூச்சு முட்ட வைக்கும் மூங்கில் பங்களிப்பு!
https://thaaii.com/2025/09/18/world-bamboo-day/

செப்டம்பர் 18 – உலக மூங்கில் தினம்

நமது தினசரி வாழ்வோடு சில விஷயங்கள் பின்னிப் பிணைந்திருக்கும். அவற்றின் பங்களிப்பை அறியாமலேயே, அவை குறித்த புரிதல் இல்லாமலேயே நமது இருப்பு அமைந்திருக்கும். திடீரென்று ஒருநாள் அது தெரியவரும்போது, ஆச்சர்யத்தை விட அதிர்ச்சியே மேலோங்கி நிற்கும். வெட்கித் தலைகுனிய வேண்டியிருக்கும்.

அப்படியொன்றாக உள்ளது, மூங்கில் நம் வாழ்வில் அளித்து வரும் பயன்பாடு குறித்து அறிய நேர்வது.

’பந்தல் கட்ட மூங்கில் கம்பு பயன்படுத்துவாங்க’, ‘புல்லாங்குழல் மாதிரி இசைக்கருவிகள் சில உருவாக்க அது பயன்படுது’, ‘கட்டடம் கட்டுற தொழிலாளிகள் அதை வச்சு சாரம் கட்டுவாங்க’ என்று நம்மில் சிலர் அதன் பயன்களைச் சொல்லக் கூடும்.

வெகு சிலர் ‘மூங்கில்ல பிரியாணி சமைச்சா வேற லெவல்ல இருக்கும்’ என்பார்கள்.

நாம் ரசிக்கும் திரையிசைப் பாடல்களிலும் கூட, மூங்கில் என்ற வார்த்தை மிக அரிதாகத்தான் இடம்பெற்றிருக்கிறது.

‘மூங்கில் காடுகளே’, ‘மூங்கில் தோட்டம்’, ‘மூங்கிலிலைக் காடுகளே’, ‘மூங்கில் காட்டோரம்’, ’மூங்கில் மரக் காட்டினிலே கேட்கும் ஒரு நாதம்’, ’கரட்டோரம் மூங்கில் காடு’ என்று வெகு சில பாடல்களே மூங்கில் என்ற வார்த்தையில் தொடங்கியிருக்கின்றன.

’மூங்கில் மரங்கள் நிறைந்த இடத்தில் வண்டுகள் அவற்றில் சில கிளைகளைத் துளைக்க, அந்த துவாரம் வழியே புகுந்து வெளியேறும் காற்று இசையாக மாறும்போது தெய்வீக ராகம் கேட்கும்’ என்ற கற்பனை நம்மை கனவில் மிதக்கச் செய்யும்.

மேற்சொன்னவற்றை எல்லாம் யாராவது சொன்னாலோ அல்லது எங்காவது படித்தாலோ மட்டுமே நமக்கு ‘மூங்கில் நினைவுகள்’ வரும்.

மூங்கிலின் பயன்கள்!

புல் வகையைச் சேர்ந்த தாவரம் மூங்கில், உலகம் முழுக்கச் சுமார் 1,500க்கும் மேற்பட்ட மூங்கில் இனங்கள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. 40 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியதாக, 30 சென்டிமீட்டர் பருமன் கொண்டதாக, இவை அதிகபட்சம் வளரக்கூடியவை. ஒரேநாளில் ஒரு மீட்டர் உயரம் வரை மூங்கில் வளரும் என்று கூறப்படுகிறது.

குடிசை வேய, கைவினைப் பொருட்கள் செய்ய என்று பலவாறாக மூங்கில் பயன்படுத்தப்படுகிறது. காகிதத் தொழிற்சாலைகளில் மரக்கூழ் செய்யவும் இவை அதிகளவில் உபயோகப்படுத்தப்படுகிறது.

மூங்கிலின் இலைகள், குருத்துகளை பாண்டா கரடி, லெமூர் உள்ளிட்ட சில விலங்குகள் உணவாகப் பயன்படுத்துகின்றன. இவற்றின் பழங்களை எலிகள் உண்கின்றன.

மூங்கிலை எவ்வளவு வெட்டினாலும், அவை மீண்டும் துளிர்க்கக் கூடியவை. அதனால், காடுகள் அழியாமல் காக்க இவற்றை பயன்படுத்த முடியும்.

இவை அதிகளவில் கார்பன் டை ஆக்சைடை உட்கிரகித்து அதிகளவு ஆக்சிஜனை வெளியிடக்கூடியவை. அதனால் பசுமைக்கூட வாயுக்களை குறைத்து சூழலை ஆக்சிஜன் நிறைந்ததாக மாற்ற இவை உதவுகின்றன.

ஆசியா, அமெரிக்கா, லத்தீன் அமெரிக்க நாடுகளில் மூங்கிலானது கலை, கலாசாரம் சார்ந்தும் பயன்படுத்தப்படுகின்றன. காற்று மூலமாக இசைக்கப்படும் கருவிகள் இவற்றைக் கொண்டு உருவாக்கப்படுகின்றன.

இது போக தினசரிப் பயன்பாட்டு பொருட்களிலும் மூங்கிலைப் பயன்படுத்த முடியும். பல் துலக்கும் குச்சிகள், ஸ்ட்ரா போன்றவற்றில் பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைக்க இவற்றை முன்வைக்கலாம். நீர் சுத்திகரிப்பில் இவற்றைப் பயன்படுத்தலாம். இவற்றின் இழைகள் கொண்டு துணிகள் தயாரிக்க முடியும்.

இப்படி ஒவ்வொன்றாகக் கூர்ந்து நோக்கத் தொடங்கினால், மூங்கில் நமக்கு தரும் பயன்கள் மூச்சு முட்டும் அளவுக்கு நிச்சயம் இருக்கும்..!

மூங்கில் தின கொண்டாட்டம்

மூங்கில் பயன்பாட்டைப் பரவலாக அறியச் செய்யும் வகையிலும், அதன் பெருமைகளை உணர்த்தும் வகையிலும், ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 18-ம் தேதியன்று ‘உலக மூங்கில் தினம்’ கொண்டாடப்படுகிறது.

தாய்லாந்து நாட்டின் பாங்காக் நகரில் 2009-ம் ஆண்டு நடந்த உலக மூங்கில் மாநாட்டில் இதற்கான அதிகாரப்பூர்வான அறிவிப்பு வெளியிடப்பட்டது.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளூக்கும் மேலாகக் கட்டுமானம், நுண்கலை, உணவு மற்றும் கலாசாரப் பரிவர்த்தனைகளில் மூங்கில் பயன்படுத்தப்படுவதைக் கொண்டாடும் விதமாக இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.

‘அடுத்த தலைமுறைக்கான மூங்கில்: தீர்வு, கண்டுபிடிப்பு மற்றும் வடிவமைப்பு’ என்பது இந்த ஆண்டுக்கான கருப்பொருளாக முன்வைக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள், விஞ்ஞானிகள், வடிவமைப்பாளர்கள் தத்தமது வழிகளில் நவீனமான, நிலைத்த தன்மை கொண்ட, புதுமையான வழிகளில் மூங்கிலைப் பயன்படுத்துவது குறித்து கருத்தாக்கங்களை உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் இது முன்வைக்கப்பட்டுள்ளது.

நகரமயமாக்கம் பெருகியுள்ள சூழலில் கழிவுகளைக் குறைக்கும் நோக்கோடு, மறுசுழற்சியை அதிகப்படுத்தும் வகையில் மூங்கில் பயன்பாட்டை அதிகரிக்கும் முடிவை உலகின் பல நாடுகள் எட்டியுள்ளன.

உலக மூங்கில் தினத்தை ஒட்டி பல கருத்தரங்குகள், கண்காட்சிகள், கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாணவர்கள் முதல் பெரியவர்கள் வரை அதன் பயன்பாடு குறித்த விழிப்புணர்வைப் பெற இவை வகை செய்யும்.

அனைத்தையும் தாண்டி, நமது தினசரி வாழ்வில் ஏதோ ஒரு வகையில் பிணைப்பைக் கொண்டதாக உள்ளது ‘மூங்கில்’.

எங்கோ ஓரிடத்திற்குச் சுற்றுலா செல்லும்போது மூங்கில் மரங்களைக் காணும்போது, அவை நமக்கு அந்நியமானதாகத் தோன்றுவதே இயல்பு. அதிலிருந்து விடுபட்டு, அவற்றின் பயன்களை நினைவுகூரவும் பயன்பாட்டைப் பெருக்குவது குறித்த சிந்தனைகளை ஊட்டவும் ‘உலக மூங்கில் தினம்’ நிச்சயம் வழிகாட்டும்.

மூங்கில் காட்டுக்குள் பயணிக்கிற அனுபவம் நம் அனைவருக்கும் கிட்டுவது கடினம். ஆனால், தினசரி வாழ்வில் மூங்கிலின் பயன்பாட்டைக் கொஞ்சமாய் கண் மூடிச் சிந்தித்தால் நிச்சயமாக அது போன்றதொரு கற்பனை மனதுக்குள் விஸ்வரூபமெடுக்கும். அப்போது, இந்தக் கொண்டாட்டம் அர்த்தமுள்ளதாக மாறும்..!

மாபா

#புல்லாங்குழல் #பந்தல் #கம்பு #சாரம் #மூங்கில்காடுகள் #மூங்கில்தோட்டம் #மூங்கிலிலை #மூங்கில்மரங்கள் #வண்டுகள் #தாவரம் #மூங்கில்குடிசை #கைவினைப்பொருட்கள் #காகிதத்தொழிற்சாலைகள் #மரக்கூழ் #மூங்கில்குருத்து #பாண்டா #கரடி #லெமூர் #உலகமூங்கில்தினம் #மூங்கில்

இந்தியாவின் முதல் பட்டியலின பட்டதாரி; புரட்சியாளர் இரட்டைமலை சீனிவாசன்!https://thaaii.com/2025/09/18/script-about-iratta...
18/09/2025

இந்தியாவின் முதல் பட்டியலின பட்டதாரி; புரட்சியாளர் இரட்டைமலை சீனிவாசன்!
https://thaaii.com/2025/09/18/script-about-irattai-malai-srinivasan/

பிரிட்டிஷ் ஆட்சியில் சமூகத்தில் பின்தங்கிய‌ மக்களின் விடுதலைக்காகப் போராடியவர் புரட்சியாளர் இரட்டைமலை சீனிவாசன்.

பத்திரிகையாளரான அவர், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக ஓயாமல் பாடுபட்டார்.

கல்வி உரிமை, தீண்டாமை ஒழிப்பு, ஆலய நுழைவு, இட ஒதுக்கீடு உள்ளிட்ட பிரச்சினைகளுக்காக சட்டமன்றத்தில் ஓங்கி குரல் கொடுத்தார்.

வட்டமேசை மாநாடு, பூனா ஒப்பந்தம் ஆகியவற்றின் வாயிலாக ஒடுக்கப்பட்டோருக்கான விடுதலையைப் பெற்றுத் தந்தார்.

மறுக்கப்பட்ட கல்வி:

1850-ம் ஆண்டுக்கு முன்பு வரை மெட்ராஸ் மாகாணத்தில் பள்ளி, கல்லூரிகள் அதிகளவில் தொடங்கப்படவில்லை.

கிறிஸ்துவ அமைப்பினர், ஆங்கிலேயரின் முயற்சியால் அங்கொன்றும் இங்கொன்றுமாக பள்ளிகள் தொடங்கப்பட்டன.

ஒரு மாவட்டத்திற்கு ஒன்றிரண்டு பள்ளிகள் இருந்தாலே பெரிய விஷயமாக இருந்தது.

குருகுல கல்வி முறையில் உய ர்சாதியினருக்கு மட்டுமே கல்வி கற்கும் வாய்ப்பு கிடைத்தது. இதனால் பிற‌ சாதியினர் ஆங்கிலேயப் பள்ளிகளில் சேர விரும்பினர்.

அத்தகைய பள்ளிகளில் ஒடுக்கப்பட்ட மாணவர்களை சேர்ப்பதற்கு, பிற சாதியினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஆசிரியர்கள் அவர்களுக்கு பாடம் கற்பிக்கவும் மறுத்தனர். பள்ளிக்கூடங்களிலே பகிரங்கமாக தீண்டாமை கடைபிடிக்கப்பட்டது.

1838-ம் ஆண்டு செங்கல்பட்டில் இருந்த கொலம்பஸ் பள்ளியில் 3 ஒடுக்கப்பட்ட மாணவர்கள் சேர்க்கப்பட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அதில் படித்த 100 உயர்சாதி மாணவர்களும் வகுப்புக்கு வராமல் புறக்கணித்த சம்பவமும் நடந்திருக்கிறது.

சாதி மீறி சாதித்தவர்:

இத்தகைய காலக்கட்டத்தில், இரட்டைமலை சீனிவாசன் செங்கல்பட்டு மாவட்டம் கோழியாளத்தில் 1860-ம் ஆண்டு ஜூலை 7-ம் தேதி இரட்டைமலை – ஆதியம்மை தம்பதிக்கு மகனாக பிறந்தார்.

அவரது தந்தை செல்வ‌ந்தராக இருந்தபோதும் சீனிவாசனால் எளிதாகக் கல்வி கற்க முடியவில்லை.

பள்ளிக்கூடங்களில் சாதி கொடுமையை அனுபவிக்க நேர்ந்தது.

இதனால் ஊர் விட்டு ஊர் செல்ல நேர்ந்தது. தஞ்சாவூருக்கு சென்று பெரும் சவால்களுக்கு மத்தியில் பள்ளியில் சேர்ந்தார்.

அங்கு தீண்டாமை காரணமாக பிற மாணவர்களோடு பழகவும், விளையாடவும் முடியாமல் தவித்தார்.

ஏராளமான தொல்லைகளுக்கு மத்தியில் பள்ளிப் படிப்பை முடித்தார்.

கல்லூரியில் படிக்கச் சென்றபோதும் அவருக்கு இதே பிரச்சினை தொடர்ந்தது. அதற்காக கோயம்புத்தூருக்கு இடம்பெயர்ந்த அவர் அரும்பாடுபட்டு கல்லூரியில் சேர்ந்தார்.

அந்த கல்லூரியில் மொத்தமாக 400 மாணவர்கள் இருந்த‌னர். அதில் 390 பேர் பிராமணர்கள். 10 பேர் மட்டுமே வேறு சாதியினர்.

இதில் இரட்டைமலை சீனிவாசன் மட்டுமே ஒடுக்கப்பட்ட சாதியை சேர்ந்தவர். இதனால் கல்லூரியிலும் சாதிக் கொடுமைகளை அனுபவிக்க நேர்ந்தது.

இத்தகைய கொடுமைக‌ளில் இருந்து தப்பிப்பதற்காக தினமும் கல்லூரி மணி அடிக்கும் வரை மரத்தின் பின்னே ஒளிந்திருப்பார். மணி அடித்த பின்னரே வகுப்பறைக்குச் செல்வார். வகுப்பு முடிந்து மணி அடித்த உடன், முதல் ஆளாக வெளியே ஓடிவிடுவார்.

ஏனென்றால், ஆசிரியர்கள் அல்லது மாணவர்கள் எவ‌ராவது தன்னை சாதி ரீதியாக அவமானப்படுத்தி விடுவார்கள் என்ற அச்சம் காரணமாக இதையே வழக்கமாக கொண்டிருந்தார்.

இவ்வாறு கல்வி கற்பதற்காக பட்ட கஷ்டங்களை இரட்டைமலை சீனிவாசன் தனது 'ஜீவிய சரித்திர சுருக்கம்' நூலில் விவரித்திருக்கிறார்.

முதல் பட்டியலின பட்டதாரி:

‘கல்வியின் மூலமாக மட்டுமே மாற்றம் நிகழும்' என்பதை ஆழமாக நம்பிய இரட்டைமலை சீனிவாசன் படிப்பில் கவனம் செலுத்தினார். 3 ஆண்டுகள் கஷ்டப்பட்டு கல்லூரிப் படிப்பை வெற்றிகரமாக முடித்தார்.

இதன் மூலம் தமிழ்நாட்டில் மேற்கத்திய கல்வி முறையில் பட்டம்பெற்ற முதல் பட்டியலின பட்டதாரி என்ற பெருமையை இரட்டைமலை சீனிவாசன் பெற்றார்.

இந்திய அளவிலும் இவரே முதல் தலித் பட்டதாரி எனவும் கருதப்படுகிறது.

ஏனென்றால் 1880-களில் பள்ளி, கல்லூரிகளும் அதிகளவில் ஆரம்பிக்கப்படவில்லை.

பெருந்தலைவர் எம்.சி.ராஜா, பாபாசாகேப் அம்பேத்கர் போன்றோரும் அப்போது பிறக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கல்விக்காக போராடியவர்:

கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்திருந்த இரட்டைமலை சீனிவாசன் அதற்காக‌ தன் வாழ்நாளெல்லாம் போராடினார்.

பள்ளிகளில் அனைத்து சாதியினரும் படிக்கும் வசதி, அனைவருக்கும் இலவச கல்வி, ஆதிதிராவிடர்களுக்கான தனிப் பள்ளிகள், விடுதிகள், தொழிற்கல்வி ஆரம்பிக்க வேண்டும் என அரசுக்கு அழுத்தம் கொடுத்தார்.

ஆதிதிராவிட மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை, வெளிநாடு சென்று படிக்க நிதியுதவி, வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்க வேண்டும் எனவும் குரல் கொடுத்தார்.

இதன் விளைவாகவே ஒடுக்கப்பட்டோருக்கு கல்வி, வேலை வாய்ப்பு, அரசியல் அதிகாரம், சமூக விடுதலை சாத்தியமானது.

- இரா.வினோத்�

நன்றி : இந்து தமிழ் திசை

#இரட்டைமலைசீனிவாசன் #கல்விஉரிமை #தீண்டாமைஒழிப்பு #ஆலயநுழைவு #இடஒதுக்கீடு #குருகுலகல்வி #சாதிக்கொடுமை #ஜீவியசரித்திரசுருக்கம்நூல் #எம்சிராஜா #பாபாசாகேப் #அம்பேத்கர்

அஜித் புதிய படத்தின் பட்ஜெட் ரூ. 400 கோடி!https://cinirocket.com/ajiths-new-film-has-a-budget-of-rs-400-crores/‘அல்டிமேட...
18/09/2025

அஜித் புதிய படத்தின் பட்ஜெட் ரூ. 400 கோடி!
https://cinirocket.com/ajiths-new-film-has-a-budget-of-rs-400-crores/
‘அல்டிமேட் ஸ்டார்’ அஜித்தின் கடைசி இரண்டு படங்களான ‘விடாமுயற்சி’யும், ‘குட் பேட் அக்லி’யும் ஒரே மாதிரியாகக் கலவையான விமர்சனங்களை பெற்றன.

ஆனால், அஜித் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட படமாக ‘குட் பேட் அக்லி’ இருந்ததால் வசூல் குவித்தது. இந்தப் படம் ரிலீஸ் ஆவதற்கு முன், தன் அடுத்த படத்தை இயக்க பல டைரக்டர்களிடம் கதை கேட்டிருந்தார் அஜித்.

‘குட் பேட் அக்லி’ கல்லா கட்டியதால், மீண்டும் அதே இயக்குநரான ஆதிக் ரவிச்சந்திரனுக்கே கால்ஷீட் கொடுத்துள்ளார் அஜித்.

ரோமியோ பிக்சர்ஸ் சார்பில் ராகுல், இந்தப் படத்தை தயாரிக்கிறார். மற்ற நட்சத்திரங்கள், மற்றும் டெக்னீஷியங்கள், அஜித் வெளிநாட்டு ரேஸ் பயணத்தை முடித்து விட்டு வந்ததும் தீர்மானிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்காலிகமாக ஏ.கே 64 என இந்தப் படத்துக்கு டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

அடுத்த மாதம் ஷுட்டிங் தொடங்குகிறது.

படத்தின் பட்ஜெட் 400 கோடி ரூபாய். அஜித் சம்பளம் மட்டும் ரூ. 175 கோடியாம்.

“இந்தப் படம் ‘குட் பேட் அக்லி’ போன்று அஜித் ரசிகர்களுக்கான படமாக மட்டும் இருக்காது. அனைத்துத் தரப்பினரையும் குறி வைத்து உருவாக்கப்படுகிறது” என்று தெரிவித்துள்ளார் ஆதிக் ரவிச்சந்திரன்.

- பாப்பாங்குளம் பாரதி.

#பட்ஜெட் #அஜித் #விடாமுயற்சி #குட்பேட்அக்லி #ஆதிக்ரவிச்சந்திரன் #ஏகே64

மக்கள் திலகத்தை மயக்கிய லால்குடி ஜெயராமன்!https://thaaii.com/2025/09/17/script-about-lalkudi-jayaraman/திருச்சி மாவட்டம்...
17/09/2025

மக்கள் திலகத்தை மயக்கிய லால்குடி ஜெயராமன்!
https://thaaii.com/2025/09/17/script-about-lalkudi-jayaraman/

திருச்சி மாவட்டம் லால்குடியில் பிறந்த ஜெயராமன் பல இசை மேதைகளுக்கு பக்க வாத்தியம் வாசித்தும், தனியாகவும் சுமார் 70 ஆண்டுகள் இசை உலகில் பிரகாசித்து வந்தார்.

வயலின் வாசிப்பில் 'லால்குடி பாணி' எனும் முறையை ஏற்படுத்தியவர் என்கிற பெருமையும் அவருக்கு உண்டு. அவரது வயலின் வாசிப்பு ஏறத்தாழ பாடுவது போலவே இருக்கும் என்று இசை விமர்சகர்கள் கூறுவார்கள்.

அனைத்துவித இசைக் கருவிகளின் தனித்தன்மைகளையும் நன்குணர்ந்திருந்தவர் லால்குடி ஜெயராமன் என்று அவருடன் நெருக்கமாக இணைந்து இசையுலகில் பயணித்தவர்கள் சொல்வார்கள்.

கர்நாடக இசையில் பெரும் ஆளுமை செலுத்தி வந்த மதுரை மணி ஐயர், எம்.எம் தண்டபாணி தேசிகர், முசிறி சுப்ரமணிய ஐயர், மதுரை சோமு, மகாராஜபுரம் சந்தானம் உட்பட புகழ்பெற்ற பல கலைஞர்களுடன் லால்குடி ஜெயராமன் இணைந்து பணியாற்றியுள்ளார்.

எனினும் அவரது தந்தை கோபால ஐயரைப் போலவே எந்த ஒரு பெண் பாடகருக்கும் அவர் பக்கவாத்தியம் வாசித்தது இல்லை என்கிற விமர்சனமும் அவர் மீது இருந்தது.

லால்குடி ஜெயராமன் தனது 12-வது வயதில் ஒரு பக்கவாத்தியக்காரராக தனது இசைப் பயணத்தை தொடங்கினார்.

தனது 70 ஆண்டு கால இசை வாழ்க்கையில் ஒரு வயலின் கலைஞராக மட்டுமல்லாமால் ஒரு சிறந்த இசையமைப்பாளராகவும் திகழ்ந்த அவர் பல வர்ணங்கள், பாடல்கள் மற்றும் தில்லானாக்களை இயற்றியுள்ளார்.

தனி வாசிப்பு, பக்கவாத்தியம் என்பதற்கு அப்பாற்பட்டு வயலின், வீணை, புல்லங்குழல் ஆகிய வாத்தியங்களை ஒரே நேரத்தில் வாசிக்கும் வீனா-வேணு-வயலின் எனும் ஒரு புதிய கச்சேரி வகையையும் அவர் அறிமுகப்படுத்தினார்.

எடின்பரோ நகரில் நடைபெற்ற ஓர் இசை விழாவில் லால்குடி ஜெயராமன் வயலின் வாசிப்பை மிகவும் வியந்து புகழ்ந்த பிரபல மேற்கத்திய வயலின் கலைஞர் யஹூதி மெனுயின் தனது இத்தாலிய வயலினை அவருக்கு அன்பளிப்பாக வழங்கினார்.

இந்திய அரசின் பத்மவிபூஷன் விருது உட்பட பல உயரிய விருதுகளையும் கௌரவ டாக்டர் பட்டங்களையும் அவர் பெற்றுள்ளார். லால்குடி ஜெயராமன் இசை அமைத்த ஒரே தமிழ்த் திரைப்படமான சிருங்காரம் படத்திற்கு தேசிய விருது பெற்றார்.

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்கள் கர்நாடக இசையில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். லால்குடி ஜெயராமன் அவர்களின் ரசிகர்.

1971-ம் ஆண்டு சென்னையில் லால்குடி ஜெயராமன் அவர்களும் சிதார் மேதை விலாயத்கான் அவர்களும் சேர்ந்து அளித்த இசை விருந்து.

தனது நிகழ்ச்சிகளை ஒத்திவைத்துவிட்டு மக்கள் திலகம் அந்தக் கச்சேரிக்கு திடீரென சென்று ரசித்தார்.

நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தலைமை தாங்க அழைத்தபோது, பிரபல மிருதங்க வித்வான் பாலக்காடு மணி அவர்கள்தான் அதற்கு தகுதியானவர் என்று அவரை தலைமை ஏற்கக் கூறி அடக்கத்தோடு மறுத்துவிட்டார்.

‘கலைஞர்களை பாராட்டியாவது பேசுங்கள்’ என்று கேட்டுக் கொண்டதற்கு இணங்கி அந்த இசை மேதைகளை புகழ்ந்துவிட்டு ரசிகராகவே மேடையிலிருந்து இறங்கினார்.

ஒரு நல்ல ரசிகர்தான் ஒரு நல்ல கலைஞராக இருக்க முடியும்.

- பி.எம்.எம்

#லால்குடி #இசைக்கருவி #லால்குடிஜெயராமன் #மதுரைமணிஐயர் #எம்எம்தண்டபாணிதேசிகர்
#முசிறிசுப்ரமணியஐயர் #மதுரைசோமு #மகாராஜபுரம் #சந்தானம் #மக்கள்திலகம்
#எம்ஜிஆர்

பெரியாரின் மஞ்சள் மண்டி!https://thaaii.com/2025/09/17/script-about-thanthai-periyar-2/காலத்தின் பாதிப்பிலிருந்து விடுபட்...
17/09/2025

பெரியாரின் மஞ்சள் மண்டி!
https://thaaii.com/2025/09/17/script-about-thanthai-periyar-2/

காலத்தின் பாதிப்பிலிருந்து விடுபட்ட மாதிரி இருக்கிறது ஈரோடு நேதாஜி வீதியில் இருக்கிற அந்த மஞ்சள் மண்டி.

மேலே செம்மண் கலரில் அலையடித்த மாதிரி நாட்டு ஓடுகள். தாழ்வான நுழைவாயில் முன்னால் பழங்கால மரத்தூண்கள்.

வரிசையாக ஆறு கடைகள். கடைக்குள் எப்போதும் இருக்கின்றன இளம் சூடும், கொஞ்சம் இருட்டும். எதிரே போலீஸ் ஸ்டேஷன்.

இதில் வியாபாரியாக இருந்தவர் பெரியார். ஈ.வே.ராமசாமிப் பெரியாரேதான்.

பெரியாரின் அப்பா வேங்கட்டப்ப நாயக்கரின் உழைப்பில் உருவானது இந்த மஞ்சள் மண்டி. கூடவே வெங்காயம், மிளகாய் எல்லாம் வரும்.

பெரியாரின் அம்மா சின்னத்தாய் வீட்டிலிருந்தே நெல்லைக் குத்தி, உளுத்தம் பருப்பை உடைத்துக் கடைக்குக் கொண்டு வருவார். சிக்கனமாக இருந்தாலும் வளர்ந்தது வியாபாரம்.

பள்ளிப் படிப்பைப் பத்தாவது வயதுடன் நிறுத்திவிட்ட ராமசாமியைக் கட்டுப்படுத்த அப்போது காலில் சங்கிலிபோட்டு விடுவார்கள். சங்கிலியின் முனையில் ஒரு மரத்துண்டு. இருந்தும் குறும்பு நிற்கவில்லை.

பையனைக் கடைக்குக் கூட்டிக்கொண்டு வந்தார் வேங்கட்டப்ப நாயக்கர். ரயிலுக்குப் போகும் மஞ்சள், மிளகாய் மூட்டைகளை ஏலம் விட்டு முடிந்ததும், மூட்டைகளின் முதுகில் முகவரி எழுதுவது ராமசாமியின் வேலை. வியாபாரிகளுடன் தர்க்கம் நடக்கும்.

19 வயதிலேயே நாகம்மாளுடன் திருமணம் முடிந்துவிட்டது. மண்டி வியாபாரம் பழகிவிட்டது. அந்தச் சமயத்தில் ராமசாமிக்குப் பெண் குழந்தை பிறந்து ஐந்து மாதத்தில் இறந்துவிட்டது.

அந்தச் சமயத்தில் ஒரு போலிச் சாமியாரின் தம்பி விஷயத்தில் தலையிட்டார் ராமசாமி. உடனே ஏகப்பட்ட புகார்கள் அப்பாவிடம் போயின. அவருக்கு ஆத்திரம்.

வளர்ந்த பையனைக் கடையில் வைத்தே செருப்பால் அடித்தார். பொறுத்துக்கொண்டு நின்றார் ராமசாமி.

எதிரே போலீஸ் ஸ்டேஷனிலிருந்த ஏட்டு பார்த்துவிட்டுப் பதறி வந்து விசாரித்து சாமியாரின் லீலைகள் பற்றிச் சொன்னதும்தான் சமாதானம் ஆனார் அப்பா.

"அடித்தபோது அவரைக் கோபித்துக் கொள்ளவில்லை. அவரை அனுதாபத்துடன்தான் பார்த்தேன்" என்கிறார் பெரியார் பிந்திய நாட்களில்.

மண்டியில் இருந்த சமயத்தில் அரசு அதிகாரிகள், ஜமீன்களுடன் சகவாசம். இரவெல்லாம் அவர்கள் மது அருந்துவார்கள். களியாட்டம் போடுவார்கள். ராமசாமி வாங்கிக் கொடுப்பார். சிலர் பலவந்தப்படுத்தியும் ராமசாமிக்கு அதில் ஆர்வமில்லை.

விடிகிறவரை அவர்களுடன் இருந்துவிட்டு காலை வீட்டுக்கு வந்து சாவியை எடுத்துக்கொண்டு கடைக்குப் போவார். அப்பாவுக்கு இதெல்லாம் பிடிக்கவில்லை. கூப்பிட்டுக் கண்டித்தார். உடனே வீட்டை விட்டு வெளியேறிவிட்டார் ராமசாமி.

கல்கத்தாவுக்குப் போனார். காசிக்குப் போனார். சாமியார்களுடன் சேர்ந்து பிச்சையெடுத்தார். ஏனோ அந்த வாழ்க்கை பிடிக்கவில்லை. திரும்பவும் ஈரோடுக்கு வந்தார். அப்பாவுக்குச் சந்தோஷம்.

மண்டியில் "வேங்கட்டப்ப நாயக்கர் மண்டி என்றிருந்த போர்டை "ஈ.வே.ராமசாமி நாயக்கர் மண்டி" என்று மாற்றினார். மறுபடியும் வியாபாரியானார் ராமசாமி.

"திரும்பிய பிறகு வியாபாரத்தில் கண்ணும் கருத்துமாக இருந்தார். அப்போதே வருஷத்திற்கு 500 ரூபாய் வருமான வரி கட்டுமளவுக்குச் சம்பாதித்தார்.

அவர் உபயோகித்த 'கல்லாப்பெட்டி' இப்போதும் மண்டியில் இருக்கிறது. திண்டுக்கலில் இருந்து 'தண்டவாளப் பெட்டி' என்கிற இரும்புப் பெட்டியே நான்கு வைத்திருந்தார்.

அப்போது பெரியாருடன் மண்டியில் இருந்தவர்கள் பத்து பேர். தொழிலாளர்களிடமிருந்து உழைப்பைச் சுரண்டினால் போதாது; அதற்குரிய பணமும் கொடுக்க வேண்டும் என்று நினைத்த பெரியார் லாபத்தைப் பிரித்து 'கஷ்டக்கட்டு' என்கிற பெயரில் அவர்களுக்குப் பிரித்துக் கொடுத்தார்.

“வியாபாரியாக இருந்தபோதும் பெருந்தன்மையாகவே இருந்தார் பெரியார்” என்கிறார் பெரியாரின் அண்ணன் மகனும், ஈ.வி.கே. சம்பத்தின் சகோதரருமான 75 வயதான ஈ.வி.கே. செல்வராஜ்.

வியாபாரம் பெருகியதும் ஈரோட்டில் பெரும் புள்ளியானார். பல கெளரவப் பதவிகள் தேடி வந்தன. செல்வாக்கு வந்தது. ஈரோடு நகராட்சித் தலைவர் ஆனார்.

கூடவே தேவஸ்தானக் கமிட்டி காரியதரிசி. சற்று கவனமில்லாததால் அவர் ஆரம்பித்த பஞ்சாலை, எண்ணெய்ச் செக்குகளை மூட வேண்டியதாயிற்று. மிஞ்சியது அதே மஞ்சள் மண்டிதான்.

அந்தச் சமயத்தில் டாக்டர் வரதராஜுலு நாயுடு, ராஜாஜியுடன் பழக்கம் ஏற்பட்டு காங்கிரஸில் சேர்ந்த பிறகு மஞ்சள் மண்டியைத் தன்னுடைய தங்கை கண்ணம்மாவின் கணவரான 'மாப்பிள்ளை நாயக்கர்' என்று அழைக்கப்படும் ராமசாமி நாயக்கரிடம் ஒப்படைத்தார்.

அப்போது பெரியாருக்கு மண்டியின் மூலம் வந்துகொண்டிருந்த பணம் ஆண்டுக்கு 20 ஆயிரம் ரூபாய்.

இப்போதும் அதே மண்டி; கொஞ்சமும் மாறாத அதே நிலையில் பெரியாரின் தங்கை குடும்பத்தினரின் பொறுப்பில் இருக்கிறது. எதிரே போலீஸ் ஸ்டேஷன். பெரியாரின் கடந்த காலத்தை நினைவு மடிப்பிலிருந்து சொல்ல அவரது உறவினர்கள், நண்பர்கள்.

"முயற்சியுடையவன் முன்னேற்றத்தை யாரும் தடுத்து நிறுத்திவிட முடியாது" என்று அடிக்கடி சொன்னபடி முன்னேறிய பெரியாரின் தீவிர உழைப்பு துவங்கிய இடம் இந்த மஞ்சள் மண்டி.

எப்படியோ திராவிட இயக்கத்திற்கும் மஞ்சளுக்கும் 'மங்களகரமான' தொடர்பு இருக்கத்தான் செய்கிறது.

- பத்திரிகையாளர் மணா எழுதி, ‘அந்திமழை’ பதிப்பகம் வெளியிட்ட ‘தமிழகத் தடங்கள்’ நூலிலிருந்து...

Address

Chennai

Alerts

Be the first to know and let us send you an email when தாய் இதழ் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to தாய் இதழ்:

Share

Category

Thai Magazine

Thai magazine is the Official page for Thaaii.com.

Thaai.com is a Tamil Magazine site providing information on current affairs in Tamil.