Yaazhavan media

Yaazhavan media news & Entertiment

உலக பணக்காரர்கள் 1000 பேர் வரிசையில் ஆயிரத்தின் அருகில் இருப்பவர் நைஜீரியாவை சேர்ந்த பெமி ஓடெடோலா ஆனால் அவர் தான் மிகவும...
25/10/2021

உலக பணக்காரர்கள் 1000 பேர் வரிசையில் ஆயிரத்தின் அருகில் இருப்பவர் நைஜீரியாவை சேர்ந்த பெமி ஓடெடோலா ஆனால் அவர் தான் மிகவும் மகிழ்ச்சியான பணக்காரர்கள் வரிசையில் முதல் இடத்தில் இருப்பவர்...

அவர் ஒரு நேர்காணலில் ஃபெமி ஓடெடோலாவை தொகுப்பாளர் பேட்டி எடுத்தார்...

"உங்களை
வாழ்க்கையில் மகிழ்ச்சியான மனிதராக மாற்றியது என்ன?" என்ற கேள்விக்கு ..

ஃபெமி கூறினார்:
"நான் வாழ்க்கையில் மகிழ்ச்சியின் 4 நிலைகளை கடந்து விட்டேன், இறுதியாக உண்மையான மகிழ்ச்சியின் அர்த்தத்தை புரிந்துகொண்டேன்."

1.முதல் கட்டமாக செல்வத்தையும் வழிமுறைகளையும் குவிப்பதாக இருந்தது. ஆனால் இந்த கட்டத்தில் நான் விரும்பிய மகிழ்ச்சி எனக்கு கிடைக்கவில்லை.

2.பின்னர் மதிப்புமிக்க பொருட்கள் மற்றும் பொருட்களை சேகரிக்கும் இரண்டாம் கட்டம் வந்தது. ஆனால் இந்த விஷயத்தின் விளைவும் தற்காலிகமானது என்பதை நான் உணர்ந்தேன், மதிப்புமிக்க பொருட்களின் மீதான ஈர்ப்பு நீண்ட காலம் நீடிக்காது.

3.பின்னர் பெரிய திட்டங்களைப் பெறுவதற்கான மூன்றாம் கட்டம் வந்தது. நைஜீரியா மற்றும் ஆபிரிக்காவில் 95% டீசல் விநியோகத்தை நான் வைத்திருந்தேன். ஆப்பிரிக்காவிலும் ஆசியாவிலும் நான் மிகப்பெரிய கப்பல் உரிமையாளராக இருந்தேன். ஆனால் இங்கே கூட நான் கற்பனை செய்த மகிழ்ச்சி எனக்கு கிடைக்கவே இல்லை.

4. இறுதிக்காலத்தில் தான் யதார்த்தமாக என் நண்பன் அவனுக்கு தெரிந்த பள்ளியில் ஊனமுற்ற குழந்தைகளுக்கு சக்கர நாற்காலி வாங்கி கொடுக்க சொன்னான், சுமார் 200 குழந்தைகள்.

என் நண்பனே கேட்டதற்காக நானும் உடனடியாக சக்கர நாற்காலிகள் வாங்கினேன்.

ஆனால் நண்பனோ நானும் அவனுடன் சென்று சக்கர நாற்காலிகளை குழந்தைகளுக்கு ஒப்படைக்க வேண்டும் என்று வலியுறுத்தினான். சரி நானும் மனமாறுதலுக்காக அவருடன் சென்றேன்.

அங்கே நான் சக்கர நாற்காலிகளை குழந்தைகளுக்கு என் சொந்த கைகளால் கொடுத்தேன். அப்போது அந்த குழந்தைகளின் முகங்களில் விசித்திரமான பிரகாசத்தை நான் கண்டேன். அவர்கள் அனைவரும் சக்கர நாற்காலிகளில் உட்கார்ந்து, சுற்றி நகர்ந்து வேடிக்கை பார்த்தனர்.

அவர்களின் ஆனந்தத்தை என்னால் விவரிக்கவே முடியவில்லை... அது
எனக்குள் ஏதோ சொல்லமுடியாத அற்புதத்தை உணர்ந்தேன். எல்லாம் முடிந்து நான் வெளியேற முடிவு செய்த போது குழந்தைகளில் ஒரு பெண் குழந்தை என் கால்களை மிகசெல்லமாக பிடித்து கொண்டது, நான் சிரித்து கொண்டே என் கால்களை மெதுவாக விடுவிக்க முயன்றேன், ஆனால் குழந்தை என் முகத்தை உற்றுப் பார்த்து கொண்டே விடாமல் இறுக பிடித்து கொண்டது

நான் குனிந்து குழந்தையிடம் கேட்டேன்: உனக்கு வேறு ஏதாவது வேணுமா?

இந்த குழந்தை எனக்கு அளித்த பதில் மிகுந்த திருப்தியை தந்து வாழ்க்கையைப் பற்றிய எனது அணுகு முறையையும் முற்றிலுமாக மாற்றியது.
அந்த குழந்தை கூறியது இது தான்:
‌"நான் உங்கள் முகத்தை நினைவில் வைக்க விரும்புகிறேன், உங்களை சொர்க்கத்தில் சந்திக்கும் போது, உங்களுக்காக கடவுளிடம் பேசி நான் உங்களுக்கு பிடித்ததை வாங்கி தருகிறேன் என்று சொல்லி அந்த சக்கர நாற்காலியில் ஏறி மற்ற குழந்தைகளுடன் விளையாட சென்று விட்டது... தெய்வத்தின் அருளை நான் அன்று தான் முழுமையாக உணர்ந்தேன்....

குகஸ்ரீ இரகுநாத  குமாரதாஸ மாப்பாணமுதலியார்   15.01.1929 - 09.10.20211964 டிசம்பர் 15 முதல் இன்று வரை நல்லூர் கந்தசுவாமி ...
09/10/2021

குகஸ்ரீ இரகுநாத குமாரதாஸ மாப்பாணமுதலியார்
15.01.1929 - 09.10.2021

1964 டிசம்பர் 15 முதல் இன்று வரை நல்லூர் கந்தசுவாமி தேவஸ்தானத்தின் பத்தாவது நிர்வாக அதிகாரியாக பணியாற்றிக்கொண்டிருப்பவர் இரகுநாத குமாரதாஸ் மாப்பாணமுதலியார்.

1929ம் ஆண்டு ஜனவரி 15ம் திகதி பிறந்தார்.

ஏற்கனவே ஆலய வழிநடத்தல் திறனில் தந்தை இரகுநாத மாப்பாண முதலியார் பின்னர் தமையன் சண்முகதாஸ மாப்பாண முதலியாருடன் பணியாற்றிய அனுபவம் இருந்தமையாலும் இயல்பாகவே முருகப்பெருமான் மீது தீராத பக்திப்பெருக்கை கொண்டிருந்தமையாலும் இவரது பணிக்காலம் ஆலய வளர்ச்சியில் மிகப்பெரும் தனித்துவமிக்கதாய் நகர்ந்து வந்தது.

அதுமட்டுமல்லாது எப்போதும் ஆலயத்திலேயே இருந்து முருகனுக்கு நெருக்கமான பணியாற்றியதுடன் முருகனின் அன்புக்குப்பாத்திரமானவரான கடந்த 50 வருடங்களாக சேவையாற்றிவருகின்றார்.

மிக எளிமையாய் எவ்வித ஆடம்பரங்களும் அற்ற இவரது நிர்வாகத்திறனும் கோயிலுக்கான ஒரு சதத்தையேனும் இறைதிருப்பணிக்காக்கும் நேர்த்தியிலும் தூய்மைப்பகதியினாலும் இவரது பணிச்சிறப்பு எல்லோரது கவனத்தையும் ஈர்த்தது என்றால் மிகையில்லை.

கோயில் வளர்ச்சிக்கு ஏற்பவே பக்தர் கூட்டமும் பெருமளவில் திரள திரள ஆலய வளாகமும் இவர்காலத்தில் விஸ்தரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

ஆலயத்தையும் இன்னும் இன்னும் மெருகேற்றி அழகுபடுத்தியதிலும் சரி நல்லூர் ஆலயம் அலங்காரக்கந்தன் என புகழப்படுமளவிற்கு முருகப்பெருமானின் அலங்காரத்தில் தனித்துவ மரபை கொண்டு வந்து அதனை தானே நேரடியாக அமைத்துவருபவர் குமாரதாஸ் மாப்பாணமுதலியார் ஆவார்.

இதுமட்டுமன்றி ஒவ்வொரு மகோற்சவத்திற்கு முன்பும் ஏதாவது திருப்பணியை நிறைவேற்றுவது என்னும் மரபும் நடைமுறைக்கு வந்தது இவருடைய காலத்திலேயே அந்த வகையில்

இவரது காலத்தில் ஆலயத்தில் இடம்பெற்ற பெரும் திருப்பணிகள் சில

*ஷண்முகருக்கான அழகிய சிறிய கோபுரப்பணியும் நிறைவு கண்டு 1966 குடமுழுக்கு நிகழ்த்தப்பட்டது,
*ஆலய மூலஸ்தானத்தை விடுத்து மற்ற அனைத்தையும் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றி அழகுறஅமைத்து இன்றைய பெருங்கோயிலாக வளர்சியடைய இவரது பணிகள் உதவின,
*மகாமண்டபம், ருத்திர மண்டபம் என்பன அழகுபடுத்தப்பட்டன,
*முத்துககுமார சுவாமிக்கும் விமானத்துடன் கூடிய சந்நிதி அமைக்கப்பட்டது,
*தேர் முட்டி அமைக்கப்பட்டது.
*இலங்கை கோவில்களுக்கே அடையாளமாகவும் இன்றைய நல்லூரின் சின்னமான திகழும் கோபுரத்திற்கு வெளியேயான யாழ்ப்பாண கலாச்சாரத்துடன் பின்னிபிணைந்த சொக்கட்டான் பந்தல் வடிவான வில்லுமண்டபத்தை அமைத்து யாழ்ப்பாணத்திற்கே தனித்துவ வரலாற்றை வித்திட்டவர். இதுவே மாப்பாணர்பாணி கலையம்சத்தின் எடுத்துக்காட்டாகவும் விளங்குகிறது…
*தொடர்ந்து வந்த ஆண்டுகளில் படிகளுடனான தேர் மண்டப அமைப்பும் அமைக்கப்ட்டது.
*1978ல் வசந்தமண்டபம் இன்னும் பெரிதாக அழகுற அமைக்கப்பட்டது.
*2012ல் சண்முக நவதள ராஜகோபுரமும்,
*2015ல் குபேர நவதள ராஜகோபுரமும் அமைக்கப்பட்டது.
*2017ல் சண்முக தீர்த்த கேணி புனர்த்தானம் செய்யப்பட்டது.
*2018ம் ஆண்டு ஷண்முகருக்கான தனித்த பொன்னால் ஆன சுவர்ண சபை விமானம் அமைக்கப்பட்டது,

குமாரதாஸ் மாப்பாணருடன் அவரது புதல்வாரன இளவலும் சேர்ந்து தற்போது ஆலயப்பணிகளை மிக நேர்த்தியுடன் முன்னெடுத்து வருகின்றனர்.

ஆலயதிருப்பணிகள் எங்குமில்லாதவாறு தனித்துவமாய் நடைபெறுவதே நல்லூர்வழக்கமாகும்.

முருகனின் உத்தரவுபடி ஒருவரது முடிவிலேயே ஆலயம் இயங்குவதும் இவ்வாலயத்தின் வெற்றிக்கு மிகப்பெரும் காரணமாகும்.

ஏழை, பணக்காரன் பேதமின்றி முருகனுக்காய் வழங்கும் பொருட்கள் அனைத்தும் முருகனது சொத்துடமையாக்கப்பட்டு ஆலயவளாகத்தில் வைத்தே அதிகாரிகளின் நேரடிப்பார்வையுடன் அனைவரும் காணும்வண்ணம் வெளிப்படைத்தனமையுடனேயே அனைத்து பணிகளும் இடம்பெறும்.

அதனைவிட கட்டப்பணிகளாயினும் சரி வாகன பணிகளாயினும் சரி நல்லூரானுக்கான ஆபரணங்கள் இப்படி எதுவாயினும் உருவாக்குதற்கு அப்பால் அவற்றை மிகத்திறம்பட பராமரிப்பதிலும் அனைத்துப் பொருட்களையும் காலாதி காலமாக பாவனைக்கு ஏற்ற வகையில் பேணிப்பாதுகாப்பதிலும் கூட நல்லைமுருகன் முன்னோடியாகவே இருக்கின்றார்.

ஆலய கட்டுமானங்களைப்பொறுத்தவரையில் ராஜகோபுரத்துடனான இருமணிக்கூட்டு கோபுரமாயினும் சரி, கோபுரத்திற்கு முன்னால் கம்பீரமாக அமைக்கப்பட்ட திருவாசிவடிவிலான வில்லுமண்டபமாயினும் சரி ஏற்கனவே இருந்த திராவிட கட்டடகலை மரபையும் தாண்டி ஏனைய பலதனித்துவ மரபுகள் போன்று மாப்பாணர் கட்டடப்பாணி என உலகவரலாற்றில் தனித்துவம் மிக்கதான பெருமையையும் நல்லூர் தன்னகத்தே கொண்டுள்ளது. பின்னாட்களில் ஈழத்தின் பல ஆலயங்கள் இப்பாணியை பின்பற்றி எழுந்தவையாகும்.

இவைமட்டுமல்லாது ஆலயத்தின் நிர்வாகி சிவாச்சாரியர்கள் அந்தணப்பெருமக்கள் முதல் பணியாளர்கள், தொண்டர்கள், பக்தர்கள் வரை அனைவருக்கும் உரிய கடப்பாடுகள் ஒழுங்குகள் விதிக்கப்பட்டு முருகனையே பிரதானமாக்கி அவருக்கான வழிபாடுகளையே முதன்மைப்படுத்தி அந்த பக்திப்பிரவாகம் எவ்வித வேறுபாடுகளும் இன்றி அனைவரையும் சென்றுசேர்வதை நல்லூரான் கோட்டம் எப்போதும் உறுதிப்படுத்தியே வந்துள்ளது.

ஆரம்பகாலங்களில் இருந்த முக்கிய பிரமுகர்களுக்கான செங்கம்பள வரவேற்புகள் கூட பிற்காலங்களில் நிறுத்தப்பட்டது ஒருமுறை அப்போதைய ஜனாதிபதியான டட்லிசேனநாயக்கா மற்றும் ஜீ.ஜீ. பொன்னம்பலம் வருகையின்போதே இவையாவும் நிறுத்தப்பட்டு ஆலயவளாகத்தில் அதுவும் முருகன் சந்நிதானத்தில் அனைவரும் சமம் எனும் புரட்சிகர நடைமுறை பேணப்பட்டு அது இன்றுவரை அப்பழுக்கற்று குமாரதாஸ மாப்பாண முதலியாரால் நிறைவேற்றப்பட்டுவருகின்றது.

அன்பு, பக்தியுடன் ஆலயத்திற்கு வருபவர்களுக்கு பணமோ அல்லது வேறுவிதமான சூழல்களோ இறை வழிபாட்டுக்கு தடையாக இருக்கக்கூடாது என்பதில் ஆலய நிர்வாகியான குமாரதாஸ் மாப்பாணமுதலியார் மிகத்தெளிவாக இருக்கிறார்.

உலகில் எந்த ஆலயத்திலும் இல்லாத தனித்துவ நடைமுறைகள் நல்லூரில் இருப்பது பெருமை தரும் விடயமாகும்.

ஒரு ரூபாய்க்கு அர்ச்சனைச்சீட்டு முதல் குறைந்த கட்டணத்திலேயே உருத்திரா அபிஷேகம் மற்றும் ஷண்முக அர்ச்சனைகள் என்பன உட்பட அனைத்து உபயங்களும் இன்றளவும் ஏசமான் ஐயாவினுடைய தலைமைத்தவத்தின் கீழ் மேற்கொள்ளப்படுகின்றன.

ஆலயத்தை நன்கு அவதானிப்பவர்களுக்கு நல்லூரில் இடம்பெறும் வளர்ச்சியான மாற்றங்கள் அனைத்தும் ஆலய பக்திப்பாரம்பரியத்தை இன்னும் அதிகரிக்கவே அன்றி வேறில்லை என்பது புரியும்.

மற்றும் இவருடைய காலத்தில்

ஆரம்பத்தில் கேணிக்கு இடையில் இருந்த பொதுப்போக்குவரத்து வீதி அன்றைய இலங்கை அதிபர் ஜெயவர்ததனாவிடம் அனுமதிவேண்டி ஆலயத்துடன் இணைக்கப்பட்டு ஆலய வளாகம் விஸ்தரிக்கப்பட்டு வெளிவீதியே போக்குவரத்துக்குரியதாக மாற்றப்பட்டது.

ஆலய வளாகத்தில் இருந்த வணிக இடங்கள் எல்லாம் 1980 களில் அகற்றப்பட்டு அவற்றுக்கான தனியிடம் வெளிப்பகுதியில் ஒதுக்கப்பட்டது.
வீதிமுழுதும் வெள்ளை மணல் பரப்பப்பட்டு ஆலயவளாகம் விஸ்தாரமாகவும் தூய்மையாகவும் பேணப்படுகின்றது.

உண்மையில் நல்லூரான் ஆலயம் ஒரு மடாலயமாக இருந்தாலும் காலப்போக்கில் சிவாகம மரபுகளையும், குமாரதந்திர மரபுகளையும்
தேவைக்கு ஏற்ப அளவில் தன்னுள் கொண்டு ஆறுகால பூஜை நியமங்களையும் 25நாள் மஹோற்சவ பண்பியலையும் கொண்டுள்ளமை சிறப்பானதாகும்.

இத்தனை பெரும் வளர்ச்சிக்கு வித்திட்டவர் ஆலயத்தின் இன்றைய அதிகாரி குமாரதாஸ மாப்பாண முதலியார் என்றால் நிகரில்லை.

அவரது சிறந்த சேவைகள் நிறைந்த பணிகள் இன்றோடு நிறைந்தது.

 #வடக்கு_மாகாண_இளைஞர்களுக்கான_ஓர்_அரிய_வாய்ப்புவடக்கு மாகாண இளைஞர் யுவதிகள் வேலைவாய்ப்பினை பெற்றுக்கொள்ளும் சாத்தியப்பாட...
28/09/2021

#வடக்கு_மாகாண_இளைஞர்களுக்கான_ஓர்_அரிய_வாய்ப்பு

வடக்கு மாகாண இளைஞர் யுவதிகள் வேலைவாய்ப்பினை பெற்றுக்கொள்ளும் சாத்தியப்பாட்டினை அதிகரித்துக் கொள்ளும் நோக்கத்தைக் கொண்ட ஒரு நிகழ்ச்சித்திட்டம் வடக்கு மாகாண கல்வி அமைச்சின் இளைஞர் விவகார அலகினால் முன்னெடுக்கப்படவுள்ளது.

அதன்பிரகாரம் Zoom மூலமான முதற்கட்டமாக 100 பங்குபற்றுநர்களை மட்டும் உள்ளடக்கிய பிரபல வளவாளர்கள் கலந்துகொள்ளும் வகுப்புக்கள் மற்றும் கருத்தமர்வவுகள் ஒக்டோபர் மாதத்தில் ஆரம்பிக்கப்படவவுள்ளன.

விண்ணப்பம் படிவ நிவழ்நிலை இணைப்பு
https://docs.google.com/forms/d/13iqCgKjFngUcZ3dzuqXn_Dp3WTSLCFqgUzXbaRspMiA/edit?usp=drivesdk

இலங்கையின் மிக அழகான இடங்களில் இதுவும் ஒன்று, இந்த நீர்வீழ்ச்சியின் பெயர் பஹந்துடாவா நீர்வீழ்ச்சி, ஏனெனில் இது பஹந்துடா ...
29/08/2021

இலங்கையின் மிக அழகான இடங்களில் இதுவும் ஒன்று, இந்த நீர்வீழ்ச்சியின் பெயர் பஹந்துடாவா நீர்வீழ்ச்சி, ஏனெனில் இது பஹந்துடா வடிவத்தில் உள்ளது.

இது மிகவும் ஆபத்தானது மற்றும் மிகவும் ஆழமானதாகத் தோன்றுவதால், இங்கு வருபவர்கள் இதைப் பற்றி தெரிந்து இருக்க வேண்டும்.

இது பெலிஹுலோயாவில் அமைந்துள்ளது மற்றும் நீங்கள் நுவரெலியாவுக்குச் செல்கிறீர்கள் என்றால் இந்த அழகை பார்க்கலாம்.

நீங்கள் உங்கள் வாகனங்களை நிறுத்தி சுமார் 300M தூரம் நடக்க வேண்டும், இந்த நிலையை அடைய நீங்கள் இன்னும் சிறிது தூரம் செல்ல வேண்டும், அது அந்த பாறைகளிலிருந்து தான். மழை நாட்களில் செல்ல வேண்டாம், ஏனெனில் இங்கு செல்வது கடினம், மேலும் இது மிகவும் ஆபத்தானது.

🥰 😋
♥️

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு கொழும்பு தனியார் வைத்தியசாலை தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த முன்னா அமைச்ச...
24/08/2021

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு கொழும்பு தனியார் வைத்தியசாலை தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த முன்னா அமைச்சர் மங்கள சமரவீர தனது 65வது வயதில் காலமானார்.

சந்தையில் நிலவிய காஸ் தட்டுப்பாட்டு, நாளை (23) முதல் வழமைக்கு திரும்பும்.  எதிர்காலத்தில் எவ்விதமான தட்டுப்பாடுகளும் இன்...
22/08/2021

சந்தையில் நிலவிய காஸ் தட்டுப்பாட்டு, நாளை (23) முதல் வழமைக்கு திரும்பும். எதிர்காலத்தில் எவ்விதமான தட்டுப்பாடுகளும் இன்றி காஸ் விநியோகிக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், லாப் நிறுவனம், லிற்றோ நிறுவனங்களுக்கும் கடந்த 21ஆம் திகதியன்று கண்காணிப்பு விஜயங்களை மேற்கொண்டு கலந்துரையாடியுள்ளார்.

லாப் நிறுவனம், தன்னுடைய உற்பத்தியை நிறுத்தியமையால், உள்ளூர் சந்தைகளில் கடந்தவாரம் காஸூக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவியது.

லிற்றோ நிறுவனம் பழைய விலைக்கே காஸ் விநியோகத்தை தொடர்ந்தும் முன்னெடுத்தது. இந்நிலையில், லாப் நிறுவனம் புதிய விலைக்கு காஸ் விநியோகத்தை கடந்த 20ஆம் திகதி முதல் ஆரம்பித்துள்ளது.

யாழில் துரித அன்டிஜன் பரிசோதனை!பயணத்தடை  வேளையில் யாழ்  நகரில் நடமாடியோருக்கு இன்றையதினம் துரித அன்டிஜன் பரிசோதனை மேற்கொ...
22/08/2021

யாழில் துரித அன்டிஜன் பரிசோதனை!

பயணத்தடை வேளையில் யாழ் நகரில் நடமாடியோருக்கு இன்றையதினம் துரித அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

பெயரை சொல்லுங்க பார்போம்...
19/08/2021

பெயரை சொல்லுங்க பார்போம்...

இலங்கை விடத்தல் தீவைச் சேர்ந்த அற்புதசீலி எனும் தொழில் முயற்சியாளர் ygro NGO மூலம் Lydia award க்கு போட்டி இடுகிறார். அவ...
18/08/2021

இலங்கை விடத்தல் தீவைச் சேர்ந்த அற்புதசீலி எனும் தொழில் முயற்சியாளர் ygro NGO மூலம் Lydia award க்கு போட்டி இடுகிறார். அவர் வெற்றி பெற்றால் 2000 டொலர் வெகுமதியாக கிடைக்கும். தயவு செய்து இந்த இணைப்பை கிளிக் செய்து சிவப்பு கலரிலள்ள ஆங்கில வசனம் vote for the 2021 Lydya award recipient ஐ கிளிக் செய்து அற்புதசீலியை வெற்றி பெறச் செய்யுங்கள்
இதனால் நம்சமூகத்தில் ஒரு குடும்பம் நிலையான

விபரங்களை இணைப்பைச் சொடுக்கி பாருங்கள். வாசிக்க இயலவில்லை நேரம் போதவில்லை என்றால் விடயச் சுருக்கம் இதுதான்.

பெண்கள் முன்னிலை வகிக்கும் போட்டியில் மன்னாரைச் சேர்ந்த அற்புதசீலி இரண்டாம் இடத்தில் நிற்கிறார். அவர் முதலிடத்திற்கு வரச் செய்தால் அவரது வலைத் தொழிலுக்கு பெறுமதியான பணத்தொகையைப் பெறுவார்.

- வெற்றிச்செல்வி

https://www.peerservants.org/2021-lydia-award-stories/

மடுமாதா ஆவணி மாத வருடாந்த உற்சவப் பெருவிழா  இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 6.15 மணிக்கு கூட்டுத் திருப்பலியாக ஒப்புக் கொடுக்...
15/08/2021

மடுமாதா ஆவணி மாத வருடாந்த உற்சவப் பெருவிழா இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 6.15 மணிக்கு கூட்டுத் திருப்பலியாக ஒப்புக் கொடுக்கப்பட்டது.

இலங்கையின் வடக்கே மன்னார் மறைமாவட்டத்தில் மடு புனித திருத்தலம் அமைந்துள்ளது.

சுமார் 400வருட பழமை கொண்டது மடு அன்னையின் திருத்தலம்.போர்த்துக்கேயரின் வருகையின் பின்னர் 1544ஆம் ஆண்டில் மன்னாரைச் சேர்ந்த கிறிஸ்தவ மக்கள் தற்போதைய மடுத் திருத்தலப் பகுதியில் ஒரு சிறிய அன்னை மரியாள் உருவத்தை வைத்து வணங்கினர்.

மேலும், 1583ஆம் ஆண்டில் மேலும் சில கிறிஸ்தவர்கள் ஒரு சிறிய ஆலயத்தை இவ்விடத்துக்கு அருகில் கட்டினர்.

மண்தாய் ( Mantai) என்று அழைக்கப்பட்ட இதுவே மடு அன்னை மரியாவின் முதல் வீடாக இருந்தது. 1656ஆம் ஆண்டில் டச்சுக்காரர் சிலோனில் (இலங்கை) காலனி ஆதிக்கத்தைத் தொடங்கிய போது கத்தோலிக்கரை துன்புறுத்தியதாக வரலாறு கூறுகிறது.

அப்போது புகலிடம் தேடிய 30கத்தோலிக்க குடும்பங்கள் தங்களுடன் மடு அன்னையின் திருவுருவத்தை எடுத்துச் சென்று 1670ஆம் ஆண்டில் மருதமடு என்ற இடத்தில் அதனை வைத்தனர்.

அந்த இடத்தில் தான் தற்போதைய மடு அன்னை திருத்தலம் உள்ளது.
இவ்வருடம் மடு திருத்தலத்தின் ஆவணி மாத திருவிழா கடந்த 6ஆம் திகதி மாலை 5.45மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து நவநாள் திருப்பலிகள் ஒப்புக்கொடுக்கப்பட்டது. திருவிழா திருப்பலியை மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தலைமையில் சிலாபம் மறைமாவட்ட ஆயர் அருட்கலாநிதி வலன்ஸ் மென்டிஸ் ஆண்டகை மற்றும் குருக்கள் இணைந்து கூட்டுத்திருப்பலி யாக ஒப்புக்கொடுத்தனர்.

Yaazhavan media கோப்பாய் சந்திக்கு அண்மையில் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த தம்பதியினரை பின்னால் வந்த டிப்பர் மோத...
15/08/2021

Yaazhavan media
கோப்பாய் சந்திக்கு அண்மையில் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த தம்பதியினரை பின்னால் வந்த டிப்பர் மோதியதில் இளம் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் முற்பகல் 10.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

கோப்பாய் சந்தியில் உள்ள சமிக்ஞை விளக்கை கடந்து 100 மீற்றர் தூரத்தில் சென்று மோட்டார் சைக்கிள் கொண்டிருந்தபோது (கைதடிப் பக்கமாக - இறைச்சிக்கடைக்கு அண்மையில்) பின்னால் வந்த டிப்பர் மோட்டார் சைக்கிளை முந்த முற்படுகையில் டிப்பரில் மோட்டார் சைக்கிள் உரசியதால் மோட்டார் சைக்கிள் சரிந்துள்ளது. மோட்டார் சைக்கிளில் பின்னால் இருந்த பெண் விழுந்ததில் டிப்பர் சில்லினுள் அகப்பட்டு தலை பகுதி நசுங்கியதில் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார். இதில் 35 வயது மதிக்கத்தக்க இளம்பெண்ணே உயிரிழந்துள்ளார்.

கணவர் மற்றைய பக்கமாக விழுந்ததால் உயிர்தப்பியுள்ளார். இவர் தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் ஆவார்.

டிப்பர் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இறக்கப்போகும் நேரத்திலும் தனது இரு சிறுநீரகங்கங்களையும் தானம் செய்த இணுவில் மருதனார்மடத்தை சேர்ந்த இளைஞன்!வீதியில் மிதிவ...
13/08/2021

இறக்கப்போகும் நேரத்திலும் தனது இரு சிறுநீரகங்கங்களையும் தானம் செய்த இணுவில் மருதனார்மடத்தை சேர்ந்த இளைஞன்!

வீதியில் மிதிவண்டியில் சென்றபோது வேகமாகவந்த டிப்பர்ரக வாகனம் மோதி படுகாயமடைந்து உயிருக்குப்போராடிக்கொண்டிருக்கும் தருவாயில் அவரது சுயவிருப்பின்பேரில் தனது இரு சிறுநீரகங்களையும் இருவருக்கு யாழ். வைத்தியசாலையின் ஊடாக வழங்கியுள்ளார்.
மனிதநேயம் காக்க உடல் உறுப்பினை தானம் செய்தவரை நன்றி கூறி கண்ணீருடன் வழியனுப்புகின்றோம்.

ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறோம்.

Address

Chennai

Alerts

Be the first to know and let us send you an email when Yaazhavan media posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Yaazhavan media:

Share