Live Tamil News

Live Tamil News Online Tamil News Channel

வரலாறு எப்போதும் மாற்றத்தின் பக்கமே! சீமான் வாக்கு சதவீதம் காலி.. அதிமுகவுக்கு 3வது இடம் தான்.. திமுக - தவெக இடையே தான் ...
25/07/2025

வரலாறு எப்போதும் மாற்றத்தின் பக்கமே! சீமான் வாக்கு சதவீதம் காலி.. அதிமுகவுக்கு 3வது இடம் தான்.. திமுக - தவெக இடையே தான் போட்டி.. வெற்றி நிர்ணயிக்கும் இளைஞர்கள்..!

தமிழக அரசியல் களம் வழக்கமான தேர்தல் கணக்குகளை தாண்டி, புதிய அரசியல் திருப்பங்களுக்கு தயாராகி வருகிறது. வரும் சட்டமன்ற தேர்தலில் பல எதிர்பாராத மாற்றங்கள் நிகழக்கூடும் என அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக, சில கட்சிகளின் வாக்கு சதவீதம் குறித்த மாயையும், பிரதான கட்சிகளின் நிலை குறித்த கணிப்புகளும் தற்போது விவாதிக்கப்படுகின்றன.

நாம் தமிழர் கட்சியின் வாக்கு சதவீத மாயை: சீமான் போட்டியாளர் இல்லை!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டு 30 லட்சம் வாக்குகளை பெற்றார், அதாவது 6% வாக்குகள். இது ஒரு பெரிய எண்ணிக்கையாக தோன்றினாலும், 234 தொகுதிகளிலும் சேர்த்து சராசரியாக ஒரு தொகுதிக்கு சுமார் 13,000 வாக்குகள் மட்டுமே கிடைத்தது. மேலும், அவர் ஒரு தொகுதியில் கூட டெபாசிட் வாங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி 6 தொகுதிகளில் போட்டியிட்டு 1% வாக்குகள் பெற்றதுடன், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளும் தலா 6 தொகுதிகளில் போட்டியிட்டு தலா 1% வாக்குகள் பெற்றன. இதை ஒப்பிடும்போது, நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளில் போட்டியிட்டுப் பெற்ற 6% வாக்குகள், வெறும் தொகுதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பால் ஏற்பட்ட ஒரு ‘மாயை’ மட்டுமே. பாராளுமன்ற தேர்தலில் பெற்ற 8% வாக்குகள் கூட, அவர் 40 தொகுதிகளிலும் போட்டியிட்டதால் கிடைத்ததே தவிர, மற்ற சிறிய கட்சிகளுடன் ஒப்பிடும்போது இதுவும் குறைவுதான்.

சீமானுக்கு விழுந்த வாக்குகள் பெரும்பாலும் 40 வயதுக்குட்பட்ட இளைஞர்களின் வாக்குகள் மட்டுமே. தற்போது, இந்த இளைஞர்களின் வாக்குகள் ஒட்டுமொத்தமாக விஜய்யின் தமிழக வெற்றி கழகத்திற்கு சென்று விடுவதால், வரும் தேர்தலில் சீமானுக்கு 4% வாக்குகள் கிடைப்பதே கஷ்டம். எனவே, சீமான் 2026 தேர்தலில் ஒரு போட்டியாளர் இல்லை என்றே கூறலாம்.

அ.தி.மு.க.வின் பலவீனம் – மூன்றாவது இடம் உறுதி!

அடுத்ததாக, அ.தி.மு.க.வின் நிலையை பார்த்தால், ஒன்றிணைந்த அ.தி.மு.க.வுக்கு மட்டும்தான் தொண்டர்களும் மக்களும் ஆதரவு கொடுப்பார்கள் என்ற நிலை உள்ளது. ஓ.பி.எஸ்., டி.டி.வி. தினகரன், சசிகலா இல்லாத அ.தி.மு.க. பலவீனமானது என்பதில் சந்தேகமில்லை. மேலும், பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்திருப்பது நடுநிலை வாக்காளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி, தி.மு.க. கூட்டணியை வீழ்த்தும் அளவுக்கு வலிமை இல்லை என்ற ஒரு பரவலான பார்வையும் உள்ளது. ஒருவேளை அ.தி.மு.க. வெற்றி பெற்றாலும், யார் முதலமைச்சர், யார் அமைச்சர்கள் என்பதை டெல்லிதான் முடிவு செய்யும் என்பதால், அது கிட்டத்தட்ட பா.ஜ.க. ஆட்சிதான் என்ற எண்ணம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. எனவே, அ.தி.மு.க. மூன்றாவது இடத்திற்கு தள்ளப்படுவது உறுதி.

தி.மு.க. Vs த.வெ.க. – இளைஞர் வாக்குகள் வெற்றியை நிர்ணயிக்கும்!

இந்த சூழலில், தமிழகத்தில் உண்மையான போட்டி தி.மு.க.வுக்கும், தமிழக வெற்றி கழகத்திற்கும் இடையேதான் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். தி.மு.க. ஆட்சிக்கு எதிராக மக்கள் மத்தியில் அதிருப்திகள் அதிகம் நிலவுகின்றன. மக்கள் மீண்டும் ஒருமுறை தி.மு.க.வை தேர்வு செய்ததாக தமிழக வரலாற்றில் இல்லை என்பது கவனிக்கத்தக்கது.

மொத்தத்தில் தமிழக அரசியல் களத்தில் நாம் ஒரு புதிய அத்தியாயத்தை காண போகிறோம் என்பது உறுதி.

என் திரைக்கதை எல்லாம் சும்மா; இவர்தான் அதில் மாஸ்டர்: பெயர் தெரியாத எம்.ஜி.ஆர் படத்தை சொன்ன பாக்யராஜ்!எம்.ஜி.ஆர் திரைப்ப...
24/07/2025

என் திரைக்கதை எல்லாம் சும்மா; இவர்தான் அதில் மாஸ்டர்: பெயர் தெரியாத எம்.ஜி.ஆர் படத்தை சொன்ன பாக்யராஜ்!

எம்.ஜி.ஆர் திரைப்படங்களில் தனக்கு பிடித்தமான சண்டைக் காட்சிகள் குறித்து இயக்குநர் பாக்யராஜ் விவரித்துள்ளார். குறிப்பாக, இவை ரசிகர்களை கவரும் வகையில் இருக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவை பொறுத்தவரை, சிறந்த திரைக்கதையாசிரியர்கள் பட்டியலை எடுத்துக் கொண்டால் அதில் இயக்குநர் பாகயராஜின் பெயர் முதன்மையான இடத்தை பெறும். அந்த அளவிற்கு சினிமா ரசிகர்களால் இன்று வரை கொண்டாடப்படும் சினிமா ஆளுமையாக பாக்யராஜ் விளங்குகிறார்.

சினிமா தொடர்பான படிப்புகளில் பாக்யராஜின் திரைக்கதைகளை பாடமாக சேர்க்கலாம் என்று பல சினிமா விமர்சகர்கள் இயக்குநர் பாக்யராஜுக்கு புகழாரம் சூட்டியுள்ளனர். இவ்வளவு பெருமைகள் கொண்ட பாக்யராஜ், எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகர் என்று எல்லோருக்கும் தெரியும். அந்த வகையில், எம்.ஜி.ஆரின் திரைப்படங்களில் இடம்பெற்ற சண்டைக் காட்சிகள், எவ்வாறு ரசிகர்களுக்கு பிடித்தமான வகையில் அமைந்தன என்று பாக்யராஜ் தெரிவித்துள்ளார். இவற்றில் தனக்கு பிடித்தமான திரைப்படங்கள் மற்றும் அதில் இடம்பெற்ற சண்டைக் காட்சிகளை அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி, "தனது ஒவ்வொரு படங்களிலும் புதுமையான விஷயங்களை எம்.ஜி.ஆர் செய்வார். இதற்கு 'அன்பே வா' திரைப்படத்தில் இடம்பெற்ற சண்டைக் காட்சிகள் உள்பட பலவற்றை உதாரணமாக கூற முடியும்.

இதேபோன்று ஒரு படத்தின் சண்டைக் காட்சியில், கைகளில் ஆப்பிள் பழம் வைத்துக் கொண்டு எம்.ஜி.ஆர் சண்டையிடுவார். அப்போது, எதிரே சண்டையிடும் நபர், எம்.ஜி.ஆரை கத்தியால் குத்தியதை போன்று தெரியும். ஆனால், ஆப்பிளில் தான் கத்தி இறங்கி இருக்கும். இது போன்று அவரது சண்டைக் காட்சிகளை சுவாரஸ்யமாக வடிவமைத்திருப்பார்கள்.

அவருடைய படங்களை பார்க்கும் போது, என்னுடைய திரைக்கதைகள் மிக சாதாரணம் என்று நான் உணர்ந்திருக்கிறேன். 1960-ஆம் ஆண்டு வெளியான 'ராஜா தெசிங்கு' திரைப்படத்தில் எம்.ஜி.ஆர் இரட்டை வேடங்களில் நடித்திருப்பார். அதில், ஒரு எம்.ஜி.ஆரை கொல்வதற்காக, இன்னொரு எம்.ஜி.ஆரை அழைத்து வருவார்கள்.

இப்படத்தில் இடம்பெற்ற சண்டைக் காட்சியில், ஒரு எம்.ஜி.ஆர் மீது ஈட்டியை வீசி கொல்வதற்காக இன்னொரு எம்.ஜி.ஆர் காத்திருப்பார். ஆனால், அவர் சண்டையிடும் திறனை பார்த்த மற்றொரு எம்.ஜி.ஆர், இப்படி ஒரு வீரனுடன் நேருக்கு நேர் சண்டையிட வேண்டும் என்று கூறுவார். இதைக் கேட்ட ரசிகர்கள், திரையரங்கில் ஆர்ப்பரித்து கொண்டாடினார்கள்" என இயக்குநர் பாக்யராஜ் தெரிவித்துள்ளார்.

அதிமுக ஆட்சியை 10 நாட்களில் கலைத்து விட்டு பாஜகவை சேர்ந்தவர் முதலமைச்சராக்கிவிடுவார்கள்- அவர் ராஜாதிமுகவில் இணைந்த அனவர்...
22/07/2025

அதிமுக ஆட்சியை 10 நாட்களில் கலைத்து விட்டு பாஜகவை சேர்ந்தவர் முதலமைச்சராக்கிவிடுவார்கள்- அவர் ராஜா

திமுகவில் இணைந்த அனவர் ராஜா

அதிமுக முன்னாள் அமைச்சரும், மூத்த நிர்வாகியுமான அன்வர் ராஜா அதிமுகவில் இருந்து விலகி சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அன்வர் ராஜா, கருத்தியல் ரீதியாக நாங்கள் எல்லாம் பேரறிஞர் அண்ணாவின் தலைமையில் அதற்கு பின்னர் வந்த தலைவர்களின் தலைமையில் கருத்தியல் ரீதியாக நாங்கள் எல்லாம் வாழ்ந்தவர்கள். தனது கொள்கையில் இருந்து தடம் புரண்டு அதிமுக இப்போது பாஜகவின் கையில் சிக்கி இருக்கிறது.

அமித்ஷா தெளிவாக சொல்லிவிட்டார். NDA கூட்டணி ஆட்சி தான் அதில் பாஜகவும் இடம் பெறும் என சொல்லிவிட்டார் ஒரு இடத்தில் மட்டுமல்ல மூன்று இடத்தில் பேட்டி அளித்திருக்கிறார்.அண்ணன் எடப்பாடி பழனிச்சாமி அவர்களது பெயரை இவர் தான் முதலமைச்சர் வேட்பாளர் என அமித்ஷா எங்கேயும் குறிப்பிடவில்லை. தமிழகத்தில் 10 நாட்கள் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் பிரச்சாரத்தை செய்து கொண்டு வருகிறார்.

முதலமைச்சர் வேட்பாளர் யார்.?

பத்து நாளும் அவர் என்ன முயற்சித்து வருகிறார் என்றால் தமிழ்நாட்டு மக்களுக்கு என்ன சொல்ல வருகிறார் என்றால் நான் தான் அதிமுகவின் வேட்பாளர் என உறுதிப்படுத்தவே அவரால் முடியவில்லை என கூறினார். அதிமுக வெற்றி பெற்றால் நான் தான் முதலமைச்சர் வேட்பாளர் என அவரால் சொல்ல முடியவில்லை அந்த அளவுக்கு தான் அதன் நிலைமை உள்ளது. அதையே அவரால் இன்னும் உறுதிப்படுத்த முடியவில்லை என கூறினார்.

எந்தக் கட்சியில் சேர்ந்தாலும் அந்த கட்சியை அழிப்பது தான் அவர்களின் நோக்கம் அதிமுகவை அழித்துவிட்டு அதன் பிறகு திமுகவுடன் Fight செய்ய வேண்டும் என அர்ஜெண்ட Agenda அதைத்தான் அவர்கள் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்கள். ஆட்சியில் பங்கு கொடுப்பவருக்கு நாங்கள் ஏமாளி அல்ல என நேற்றைய தினம் பேசி இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி இது என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என தெரியவில்லை. அதிமுக கூட்டணி வென்று ஆட்சி அமைத்தாலும் 10 நாட்களில் ஆட்சியை கலைத்துவிட்டு பாஜகலைவ் சேர்ந்தவர் முதலமைச்சராகிடுவார்.

அதிமுக ஆட்சியை 10 நாளில் கலைத்துவிடும் பாஜக

பாஜகவை பொறுத்தவரை தமிழ்நாட்டில் அது ஒரு Negative Force அதனை மக்கள் கண்டிப்பாக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் எனவே எவ்வளவோ சொல்லிப் பார்த்தேன் கட்சியை காப்பாற்ற வேண்டும் என மனதில் ஆதங்கத்தை எல்லாம் சொல்லிப் பார்த்தேன். அதை எல்லாம் கேட்பதற்கு தயாராக இல்லை. எனவே தான் வேறு வழி இல்லாமல் அங்கிருந்து அடுத்த என்னுடைய Choice அடுத்த Option ஒரே Option திமுக தான் என தெரிவித்தார்.

2026 தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பது பாஜகவின் நோக்கமல்ல. அதிமுகவை அழிப்பதை பாஜக நோக்கம். அதிமுகவை அழித்துவிட்டு திமுகவுடன் நேரடியாக மோத வேண்டும் என்பதுதான் பாஜகவின் அஜெண்டா என்றார்.

மன வருத்தத்தில் அதிமுக தலைவர்கள்

அதிமுகவில் அதிருப்தியில் உள்ள மூத்த தலைவர்களை திமுகவிற்கு அழைக்க வாய்ப்பு உள்ளதா என்ற கேள்விக்கு அவரவர்களுக்கு தெரியும் எல்லோரும் மன வருத்தத்தில் தான் இருக்கிறார்கள். பாஜக அதிமுகவை அழித்துவிடும் அது எல்லோருக்கும் தெரியும். இன்று வரை கூட்டணி என்று சொல்கிறார்களே தவிர கூட்டணிக்கே தலைமை தாங்குவது எடப்பாடி என அமிர்ஷா கூறினாரே தவிர முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி தான் என்று அமித்ஷா ஒரு இடத்தில் கூட சொல்லவில்லை என தெரிவித்தார்.

நிர்வாகிகளின் பேச்சை கேட்காத எடப்பாடி

உங்கள் கருத்தை உதாசீனப்படுத்தினாரா எடப்பாடி பழனிசாமி என்ற கேள்விக்கு கேட்க மாட்டார் என் பேச்சை மட்டும் அல்ல, 7 முன்னாள் அமைச்சர்கள் அண்ணன் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை சந்தித்து அதிமுகவில் ஒற்றுமை வேண்டும்,

மீண்டும் உயிர் பெற்று எழ வேண்டுமானால் அதற்கு சில யுக்திகளையும் கடைபிடிக்க வேண்டும் என சொன்னார்கள் மூன்று மணி நேரம் அவரது இல்லத்தில் நடைபெற்றது. அந்த வாதத்தில் கலந்துகொண்ட அமைச்சரே என்னிடம் சொன்னார். கடைசி வரை எடப்பாடி அவர்கள் ஒப்புக்கொள்ளவில்லை வேறு வழியில்லை என விட்டு விட்டார்கள் அவர் எதையும் ஏற்றுக்கொள்ள மாட்டார் என அன்வர் ராஜா தெரிவித்தார்.

55-60 வருஷம் இருக்கும்; எம்.ஜி.ஆர் கொடுத்த முதல் அட்வைஸ் இதுதான்: நடிகை கே.ஆர்.விஜயா ஓபன் டாக்!எம்.ஜி.ஆர் தனது அரசியல் ப...
10/07/2025

55-60 வருஷம் இருக்கும்; எம்.ஜி.ஆர் கொடுத்த முதல் அட்வைஸ் இதுதான்: நடிகை கே.ஆர்.விஜயா ஓபன் டாக்!

எம்.ஜி.ஆர் தனது அரசியல் பயணத்தைத் தொடங்குவதற்கு முன்னரும், மக்கள் கலைஞனாக வலம் வந்த காலத்திலும், கே.ஆர்.விஜயாவுடன் இணைந்து பல வெற்றிப் படங்களைக் கொடுத்தார்.

55-60 வருஷம் இருக்கும்; எம்.ஜி.ஆர் கொடுத்த முதல் அட்வைஸ் இதுதான்: நடிகை கே.ஆர்.விஜயா ஓபன் டாக்!

தமிழ் திரையுலகில் பொற்காலம் என்று சொல்லப்படும் காலகட்டத்தில், ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த ஜோடிகளில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரும், புன்னகை அரசியான கே.ஆர்.விஜயாவும் தனிச்சிறப்பு மிக்கவர்கள். "புரட்சித் தலைவர்" எம்.ஜி.ஆர் தனது அரசியல் பயணத்தைத் தொடங்குவதற்கு முன்னரும், மக்கள் கலைஞனாக வலம்வந்த காலத்திலும், கே.ஆர்.விஜயாவுடன் இணைந்து வெற்றிப் படங்களை கொடுத்தார்.

கே.ஆர்.விஜயா, கண்கள் பேசும் மொழி, அப்பாவியான முகம், மற்றும் எந்த கதாபாத்திரத்திற்கும் பொருந்திப் போகும் லாவகம் ஆகியவை எம்.ஜி.ஆருடன் இணையும்போது தனி ஒரு மேஜிக்கை உருவாக்கின. எம்.ஜி.ஆரின் ஆக்‌ஷன் ஹீரோ பிம்பத்திற்கு கே.ஆர்.விஜயாவின் அமைதியான, பாசமான கதாபாத்திரம் அழகான சமநிலையைத் தந்தது.

எம்.ஜி.ஆர் - கே.ஆர்.விஜயா இணைந்த சில படங்கள்:

பணம் படைத்தவன் (1965): இந்தத் திரைப்படம் எம்.ஜி.ஆர் - கே.ஆர்.விஜயா கூட்டணியின் முக்கியமான படங்களில் ஒன்று. பணம் மட்டுமே வாழ்க்கை அல்ல, உறவுகளின் முக்கியத்துவம் போன்ற நீதிகளைப் பேசிய படம். இதில் எம்.ஜி.ஆரின் கம்பீரமும், கே.ஆர்.விஜயாவின் வெகுளித் தனமான அழகும் பேசப்பட்டன.

தொழிலாளி (1964): உழைப்பாளர்களின் பெருமையைப் பேசிய இப்படத்தில், எம்.ஜி.ஆர் தொழிலாளியாகவும், கே.ஆர்.விஜயா அவருக்குத் துணையாகவும் நடித்தனர். சமுதாய நலனில் அக்கறை கொண்ட எம்.ஜி.ஆர் படங்களில் இதுவும் ஒரு முக்கிய மைல்கல்.

கன்னித்தாய் (1965): தாய்ப்பாசம், குடும்ப உறவுகள் ஆகியவற்றை மையப்படுத்திய இந்தப் படத்தில், கே.ஆர்.விஜயாவின் உணர்வுபூர்வமான நடிப்புப் பெரிதும் பாராட்டப்பட்டது. எம்.ஜி.ஆர் ஒரு சமூகப் போராளியாக இதில் வலம் வந்தார்.

விவசாயி (1967): விவசாயிகளின் முக்கியத்துவம், அவர்களது வாழ்க்கைப் போராட்டங்கள் குறித்துப் பேசிய படம். எம்.ஜி.ஆர் விவசாயியாகவும், கே.ஆர்.விஜயா அவருக்கு பக்கபலமான மனைவியாகவும் நடித்தனர். இந்தப் படம் இன்றும் விவசாயிகளின் குரலாக ஒலித்துக் கொண்டிருக்கிறது.

நான் ஏன் பிறந்தேன் (1972): தலைப்பில் இருந்தே ஒரு தத்துவார்த்த அணுகுமுறை கொண்ட படம். சமூக சீர்திருத்தக் கருத்துக்களையும், தனிமனித ஒழுக்கத்தையும் வலியுறுத்தும் வகையில் அமைந்த இந்தப் படத்தில், எம்.ஜி.ஆர் - கே.ஆர்.விஜயா ஜோடி ரசிகர்கள் மனதில் ஆழப் பதிந்தது.

நல்ல நேரம் (1972): எம்.ஜி.ஆர் மற்றும் கே.ஆர்.விஜயாவின் கடைசி கூட்டணிகளில் இதுவும் ஒன்று. மனிதனுக்கும் விலங்குகளுக்கும் இடையிலான பாசப்பிணைப்பை அற்புதமாகச் சித்தரித்த படம். இந்தப் படத்தில் யானையின் முக்கிய கதாபாத்திரம் அமைந்திருந்தது.

அண்மையில், Indiaglitz நடத்திய நேர்க்காணலில் பங்கேற்று பேசிய நடிகை கே.ஆர்.விஜயா, எம்.ஜி.ஆர். தனக்கு சில முக்கியமான வாழ்க்கை மற்றும் நடிப்புப் பாடங்களைக் கற்றுக்கொடுத்ததாக கூறினார். யாராவது ஒரு கையால் வணக்கம் சொன்னால், நாம் இரு கைகளாலும் கும்பிட வேண்டும். அப்போதுதான் அவர்கள் நம்மைப் பார்த்து கும்பிடுவார்கள். பெண்கள் சத்தமாகச் சிரிக்கக் கூடாது. நல்ல பெயர் வாங்கவும், மரியாதையாக நடந்துகொள்ளவும் வேண்டும். மரியாதையாக நடந்துகொண்டால் மட்டுமே மற்றவர்கள் நமக்கு மரியாதை கொடுப்பார்கள் என்று தனக்கு எம்.ஜி.ஆர். அறிவுறுத்தியதாக கே.ஆர்.விஜயா குறிப்பிட்டார்.

இந்த ஏரியா.. அந்த ஏரியா.. அந்த இடம்.. இந்த இடம்.. விஜய் களத்தில் இறங்கினால் அதிமுகவுக்கு தான் சேதாரம்.. விஜய்யால் இரு தி...
09/07/2025

இந்த ஏரியா.. அந்த ஏரியா.. அந்த இடம்.. இந்த இடம்.. விஜய் களத்தில் இறங்கினால் அதிமுகவுக்கு தான் சேதாரம்.. விஜய்யால் இரு திராவிட கட்சிகளுக்கும் சிக்கல்..!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது பிரச்சாரத்தை தொடங்கிவிட்ட நிலையில், அவரது முதற்கட்டப் பிரச்சாரத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. “அதிமுக – பாஜக கூட்டணி பொருந்தாத கூட்டணி” என்று கூறிக்கொண்டிருந்தவர்கள் கூட எடப்பாடியின் பிரச்சாரத்திற்கு பிறகு அவ்வாறு கூறுவதை நிறுத்திவிட்டனர். “நமக்கு பொது எதிரி திமுகதான், எனவே திமுகவை வீழ்த்த இந்த கூட்டணியை ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்று தொண்டர்களும் சமாதானமாகிவிட்டார்கள். எனவே, எடப்பாடி பழனிசாமியின் பிரச்சாரம் அதிமுக – பாஜக தொண்டர்களுக்கு ஒரு “பூஸ்ட்” தான் என்று பத்திரிகையாளர் மணி தெரிவித்துள்ளார்.

ஆனால், அதே நேரத்தில் நடிகர் விஜய் செப்டம்பர் மாதம் களத்தில் இறங்க உள்ளார். அவர் களத்தில் இறங்கினால், அதிமுக – பாஜக கூட்டணிக்கு பெரும் சேதாரம் ஏற்படும் என்றும் மணி தெரிவித்தார். “திமுக எதிர்ப்பு ஓட்டுகள், அதிமுக – பாஜக கூட்டணிக்கும், விஜய் கட்சிக்கும் சிதறும்” என்றுதான் இப்போது நிலை உள்ளது. ஆனால், விஜய் களத்தில் இறங்கி, அதிமுக – பாஜக கூட்டணியைப் பின்னுக்குத் தள்ளிவிட்டால், திமுக எதிர்ப்பு ஓட்டுகள் சிதறாமல் அப்படியே விஜய்க்கு வந்து சேர வாய்ப்பு உள்ளது.

அதுமட்டுமின்றி, அதிமுக – பாஜக கூட்டணிக்கு வேறு கட்சிகள் வரவில்லை என்றால், “இந்த கூட்டணியால் திமுகவை எதிர்க்க முடியாது” என்று மக்கள் மனதிலேயே ஒரு எண்ணம் தோன்றிவிடும். அப்படி என்றால், திமுக கூட்டணியை வெல்லக்கூடிய விஜய்க்கு வாக்களிப்போம் என்றுதான் மக்கள் மனம் மாறும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும், விஜய்க்கு இருக்கும் இன்னொரு சாதகமான அம்சம் என்னவென்றால், அவர் திமுக எதிர்ப்பு ஓட்டை மட்டும் இன்றி, பாஜக எதிர்ப்பு ஓட்டையும் கவர்கிறார். பாஜகவை பிடிக்காதவர்கள் இதுவரை திமுகவுக்கு வேறு வழி இல்லை என்று வாக்களித்து கொண்டிருந்தனர். குறிப்பாக, சிறுபான்மையினர் திமுகவுக்கு வாக்களித்தனர். ஆனால், இப்போது அவர்களுக்கு வேறு ஒரு ஆப்ஷன் இருக்கிறது, “பாஜகவை எதிர்க்கும் இன்னொரு கட்சி விஜய்” என்றும், எனவே இந்த முறை விஜய்க்கு வாக்களிக்கலாம் என்றும் அவர்கள் எண்ணிவிட்டால், கிட்டத்தட்ட 50% சிறுபான்மையினர் ஓட்டுகள் விஜய்க்கு சென்றுவிடும். அதுவும் அவருக்கு ஒரு மிகப்பெரிய பிளஸ் ஆக அமையும். குறிப்பாக, காங்கிரஸ் கட்சி மட்டும் விஜய்யுடன் கூட்டணி சேர்ந்துவிட்டால், தவெக கூட்டணி ஆட்சி அமைப்பது உறுதி என்றும், இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்களின் ஒட்டுமொத்த ஓட்டும் விஜய்க்கு சென்றுவிடும் என்றும் கூறப்பட்டு வருகிறது.

மொத்தத்தில், விஜய்யின் அரசியல் வருகை 50 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியல் செய்து வரும் அதிமுக, திமுகவுக்கு ஒரு பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது என்றும், முதல் முதலாக திராவிட கட்சிகளை வீழ்த்த ஒரு புதிய கட்சி தோன்றியுள்ளது என்றுதான் அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதிமுக, திமுகவுக்கு மாறி மாறி வாக்களித்து வெறுப்பில் இருக்கும் நடுநிலை வாக்காளர்கள் விஜய் பக்கம் சாய வாய்ப்பு இருப்பதாகவும், எனவே 2026 தேர்தல் தமிழக அரசியலில் ஒரு புரட்சியை ஏற்படுத்தும் தேர்தலாக இருக்கும் என்றும் கூறப்பட்டு வருகிறது.

தென்மாநிலத்தின் மீது பார்வையை திருப்பிய மோடி! புதுவையில் பாஜக அமைச்சர், 3 MLAகள் திடீர் ராஜினாமாகடந்த 2021 சட்டமன்றத் தே...
28/06/2025

தென்மாநிலத்தின் மீது பார்வையை திருப்பிய மோடி! புதுவையில் பாஜக அமைச்சர், 3 MLAகள் திடீர் ராஜினாமா

கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாரதிய ஜனதா கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. அதன் அடிப்படையில் என்.ஆர்.காங்கிரஸ் தலைமையில் ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு முதல்வர் பதவி, இருவருக்கு அமைச்சர் பதவி, துணைசபாநாயகர் உள்ளிட்ட பதவிகள் ஒதுக்கப்பட்டன. இதே போன்று பாரதிய ஜனதா கட்சிக்கு 2 அமைச்சர்கள் உள்பட 3 நியமன சட்டமன்ற உறுப்பினர் பதவிகள் வழங்கப்பட்டன.

இந்த நிலையில் 2026ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் வருவதற்கு இன்னும் 8 மாதங்களே உள்ள நிலையில், தற்போது பாரதிய ஜனதா நியமன சட்டமன்ற உறுப்பினர்கள் ராமலிங்கம், வெங்கடேசன், அசாக்பாபு உள்ளிட்டோர் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர். மேலும் தங்களது ராஜினாமா கடிதத்தை சட்டப்பேரவை தலைவர் செல்வம் முன்னிலையில் சட்டப்பேரவைச் செயலாளர் தயாளனிடம் வழங்கினர்.

பழைய கழிதலும் புதியன புகுதலும்.. 3 கோடி பேர் அதிமுக, திமுகவுக்கு ஓட்டு போட மாட்டார்கள்.. விஜய், சீமான், அண்ணாமலை தான் அவ...
28/06/2025

பழைய கழிதலும் புதியன புகுதலும்.. 3 கோடி பேர் அதிமுக, திமுகவுக்கு ஓட்டு போட மாட்டார்கள்.. விஜய், சீமான், அண்ணாமலை தான் அவர்கள் தேர்வு.. அரசியல் ஆய்வாளர்

தமிழகத்தில் சுமார் மூன்று கோடி வாக்காளர்கள் தி.மு.க.வுக்கும், அ.தி.மு.க.வுக்கும் வரும் தேர்தலில் வாக்களிக்க மாட்டார்கள் என்றும், மாறி மாறி இரு கட்சிகளுக்கும் வாக்களித்து வெறுப்பில் உள்ளவர்களே இந்த வாக்காளர்கள் என்றும் ஒரு தேர்தல் ஆய்வாளர் சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். இந்த வாக்காளர்களின் தேர்வாக விஜய், சீமான், அண்ணாமலை ஆகியோர் இருப்பதாகவும் அவர் கூறியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் மட்டுமே தமிழகத்தில் ஆட்சி அமைத்து வந்துள்ளன. புதிய கூட்டணி முயற்சிகள் நடந்தாலும், அவை பெரும்பாலும் தோல்வியிலேயே முடிந்துள்ளன. சினிமா நட்சத்திரங்களான சிவாஜி கணேசன், விஜயகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்டவர்கள் தனி கட்சி ஆரம்பித்தபோதும் அவர்களுக்கு மக்கள் ஆதரவு கிடைக்கவில்லை. சில கட்சிகள் ஒன்றிணைந்து மக்கள் நலக் கூட்டணி என்று ஒரு புதிய கூட்டணியை ஆரம்பித்தபோதும், அதுவும் வெற்றி பெறவில்லை. எனவே, அ.தி.மு.க., தி.மு.க.வுக்கு மாற்றாக இதுவரை தமிழகத்தில் புதிய கட்சி அல்லது கூட்டணி இல்லை என்பதுதான் நிதர்சனமான உண்மையாகும்.

ஆனால், நடிகர் விஜய்யின் வருகை இதை சற்றே உடைத்துள்ளது என்றுதான் அரசியல் ஆய்வாளர்கள் கூறிவருகின்றனர். அ.தி.மு.க., தி.மு.க.வுக்கு மாறி மாறி வேறு வழியின்றிதான் பலர் வாக்களித்து இருக்கிறார்கள் என்றும், இவர்களுக்கு மாற்றாக நம்பத்தகுந்த ஒருவர் இதுவரை அரசியலுக்கு வராததால்தான் இவ்விரு கட்சிகளும் மாறி மாறி ஆட்சியைப் பிடித்திருக்கின்றன என்றும் அந்த ஆய்வாளர் கூறியுள்ளார்.

அதே நேரத்தில், விஜய்யின் வருகை பொதுமக்களுக்கு ஒரு புதிய நம்பிக்கையை அளித்துள்ளது என்றும், எனவே இந்த முறை புதிய வாக்காளர்கள் மற்றும் 40 வயதுக்கு உட்பட்ட வாக்காளர்கள் கண்டிப்பாக அ.தி.மு.க., தி.மு.க.வுக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அவர்களின் தேர்வாக விஜய், சீமான், அண்ணாமலை ஆகியோரே இருப்பார்கள் என்றும், குறிப்பாக விஜய்க்கு அதிக அளவில் வாக்கு சதவீதம் பெற வாய்ப்பு இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

தி.மு.க.வுக்கு 25% மற்றும் அ.தி.மு.க.வுக்கு 20% வாக்குகள் இருக்கும் நிலையில், விஜய் கண்டிப்பாக 15 சதவீதத்திற்கு மேல் வாக்குகள் பெறுவார் என்று அந்த ஆய்வாளர் கணித்துள்ளார். எனவே, தேர்தல் முடிவு தொங்கு சட்டசபையாக வந்தால், விஜய் இல்லாமல் ஆட்சி அமைக்க முடியாது என்ற நிலை ஏற்படலாம் என்றும் அவர் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மொத்தத்தில் பழைய கழிதலும் புதியன புகுதலும் என்ற பழமொழிக்கேற்ப இதுவரை ஆட்சி செய்த கட்சிகள் போய் புதியவர்களுக்கு மக்கள் வாய்ப்பளிக்க முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி.! முதல்வராக EPS பெயரைக் குறிப்பிடாத அமித்ஷா- ஷாக்காகி நிற்கும் அதிமுகதேர்தலுக்கு தயாராகும் அரச...
27/06/2025

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி.! முதல்வராக EPS பெயரைக் குறிப்பிடாத அமித்ஷா- ஷாக்காகி நிற்கும் அதிமுக

தேர்தலுக்கு தயாராகும் அரசியல் கட்சிகள்

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளது. இதனால் அரசியல் கட்சிகள் தேர்தல் பணியை தீவிரப்படுத்தி வருகிறது. ஒவ்வொரு தொகுதியிலும் கள நிலவரம், மக்களின் மன நிலை, வாக்கு சதவிகிதம் போன்றவற்றை ஆய்வு செய்து வருகிறது. மேலும் கட்சியின் செயல் வீரர்கள் கூட்டம், ஒன் டூ ஒன் ஆலோசனை, மாவட்ட செயலாளர்களோடு ஆலோசனை என விரைவுப்படுத்தி வருகிறது.

அதே நேரத்தில் தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தையும் எழுந்துள்ளது. அந்த வகையில் கடந்த 2019ஆம் ஆண்டு திமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விடுதலை சிறுதைகள், மதிமுக, முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகளை கொண்ட கூட்டணியானது கடந்த 8 வருடமாக நீடித்து வருகிறது. அதே நேரம் அதிமுக கடந்த 2016ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது.

தமிழகத்தில் பிரிந்து கிடக்கும் அதிமுக

இதற்கு முக்கிய காரணமாக அதிமுகவை இரும்பு கோட்டையாக மாற்றிய ஜெயலலிதாவின் மறைவு, இதனை தொடர்ந்து அதிகார போட்டி காரணமாக கட்சிக்குள் ஏற்பட்ட பிளவால் முக்கிய தலைவர்கள் தனித்தனியாக செயல்பட்டு வருகிறார்கள். ஓ.பன்னீர் செல்வம், சசிகலா, டிடிவி தினகரன், எடப்பாடி பழனிசாமி என 4 பிளவுகளாக கட்சி பிரிந்துள்ளது. இதனால் வாக்குகள் பிரிந்து வெற்றியானது எட்டாக்கனியாக மாறியுள்ளது.

அடுத்தடுத்து நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல், நாடாளுமன்ற தேர்தல், சட்டமன்ற தேர்தல், இடைத்தேர்தல்களில் தொடர் தோல்வியை பெற்று வருகிறது. 2019ஆம் ஆண்டு பாஜகவுடன் கூட்டணி வைத்த அதிமுக 2024ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக பிரிந்தது. இனி பாஜகவுடன் கூட்டணியே இல்லையென அறிவித்த திடீரென கடந்த மாதம் பாஜகவுடன் மீண்டும் கூட்டணி அமைத்துள்ளதாக அறிவித்துள்ளது. சட்டமன்ற தேர்தலில் இணைந்து போட்டியிடுவோம் என கூறியுள்ளது.

பாஜகவுடன் கூட்டணி- அதிமுகவிற்கு செக்

அதே நேரம் தற்போது வரை அதிமுக கூட்டணியில் பாமக, தேமுதிக ஆகிய கட்சிகள் இணையாமல் உள்ளது. தேர்தல் நெருக்கத்தில் இந்த இரண்டு கட்சிகளும் அதிமுக- பாஜகவோடு இணையும் என கூறப்படுகிறது. இந்த சூழ்நிலையில் அதிமுக- பாஜக இடையே கூட்டணி அமைக்கப்பட்டுள்ள நிலையில் சட்டமன்ற தேர்தலில் கூட்டணி ஆட்சி அமைப்போம் என பாஜக கூறி வருகிறது. அதிமுகவோ இதனை மறுத்து வருகிறது. கூட்டணி மட்டுமே கூட்டணி ஆட்சி இல்லையென தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் தமிழ் நாளிதழுக்கு அளித்த பேட்டியில் பாஜக மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான அமித்ஷா, தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என மீண்டும் உறுதி செய்துள்ளார். ஆட்சியில் பாஜக பங்கெடுக்கும் எங்கள் தேசிய ஜனநாயக கூட்டணி நிச்சயம் அரசு அமைக்கும், தேர்தலில் நாங்கள் அ.தி.மு.க தலைமையின் கீழ் போட்டியிடுகிறோம். முதல்அமைச்சராக அ.தி.மு.க.வில் இருந்து வருவார் என அமித்ஷா கூறினார்.

சிங்கம் சிங்கிளா தான் வரும்.. விஜய் தனித்து நின்றால் மட்டுமே ஜெயிப்பார்.. அதிமுக கூட்டணிக்கு சென்றால் படுதோல்வி.. அரசியல...
25/06/2025

சிங்கம் சிங்கிளா தான் வரும்.. விஜய் தனித்து நின்றால் மட்டுமே ஜெயிப்பார்.. அதிமுக கூட்டணிக்கு சென்றால் படுதோல்வி.. அரசியல் ஆய்வாளர் ராஜவேல்..!

விஜய், அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்றும், அப்போதுதான் வலுவான கூட்டணி அமைந்து தி.மு.க.வை தோற்கடிக்க முடியும் என்றும் பல அரசியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துவருகின்றனர். ஆனால், அரசியல் ஆய்வாளர் ராஜவேல் என்பவர் தெரிவித்துள்ள கருத்து, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அ.தி.மு.க. கூட்டணியில் விஜய் இணைந்தால் அவருக்கு படுதோல்வி கிடைக்கும் என்றும், அதிகபட்சமாக விஜய் ஒருவர் மட்டும்தான் வெற்றி பெறுவார் என்றும் ராஜவேல் கூறியுள்ளார்.

மக்களின் எதிர்பார்ப்பும் கடந்தகால படிப்பினையும்!

புதிதாக அரசியல் களமிறங்குபவர்களிடம் மக்கள் எதிர்பார்ப்பது, அ.தி.மு.க., தி.மு.க.வுக்கு மாற்றாக இவர்கள் இருப்பார்களா என்பதுதான். விஜயகாந்த் வந்தபோதும் சரி, கமல்ஹாசன் வந்தபோதும் சரி, அவர்களுக்கு விழுந்த வாக்குகள் எல்லாம் அ.தி.மு.க., தி.மு.க. வேண்டாம் என்று நினைத்த வாக்காளர்களின் வாக்குகள்தான். ஆனால், அதன்பின் விஜயகாந்த் அ.தி.மு.க.வுடனும், கமல்ஹாசன் தி.மு.க.வுடனும் கூட்டணி வைத்துவிட்டதால், அவர்கள் மீதான நம்பகத்தன்மை மக்கள் மத்தியில் சுத்தமாக போய்விட்டது. விஜயகாந்த் கட்சியின் சரிவுக்கு முக்கிய காரணமே அவர் அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்ததுதான்.

விஜய் செய்யக்கூடாத தவறு!

“அ.தி.மு.க.வையும், தி.மு.க.வையும் ஒரே நேரத்தில் எதிர்ப்பேன்” என்று சொல்லிதான் நடிகர்கள் அரசியல் கட்சிகளை தொடங்குகிறார்கள். ஆனால், ஒன்று அல்லது இரண்டு தேர்தல்களில் தனித்து நின்று, குறிப்பிட்ட வாக்கு சதவீதம் கிடைக்கவில்லை என்றால், அ.தி.மு.க. அல்லது தி.மு.க. கூட்டணியுடன் இணைந்துவிடுகிறார்கள். அந்த தவறைத்தான் விஜயகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகியோர் செய்தனர். அதேபோன்ற தவறை விஜய் செய்துவிடக்கூடாது.

விஜய்யை தற்போது ஆதரிப்பவர்கள் எல்லோருமே நடுநிலை வாக்காளர்கள். அ.தி.மு.க.வும் வேண்டாம், தி.மு.க.வும் வேண்டாம் என்று நினைக்கும் ஒரு பெரிய கூட்டம் தான் விஜய்யை தற்போது ஆதரித்து வருகிறார்கள். ஆனால், அவர்களது நம்பகத்தன்மையை விஜய் பொய்யாக்கிவிட்டு அ.தி.மு.க.வுடன் கூட்டணி சேர்ந்தால், “இவரும் பத்தோடு பதினொன்றுதான்” என்று மக்கள் நினைக்க வேண்டிய நிலை வரும்.

விஜயின் நீண்டகாலத் திட்டம்!

எனவே, விஜய் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் கண்டிப்பாக தனித்து போட்டியிட வேண்டும் அல்லது தனி கூட்டணி அமைத்து போட்டியிட வேண்டும். அ.தி.மு.க., தி.மு.க.வுடன் கூட்டணி சேர்ந்தால், அது படுகுழியில் விழுவதற்குச் சமம். இது விஜய்க்கும் நன்றாக தெரியும் என்று அவரது வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விஜயகாந்த், கமல்ஹாசன் செய்த தவறை நாம் செய்துவிடக்கூடாது, நமக்கென்று தமிழகத்தில் எத்தனை வாக்கு சதவீதம் இருக்கிறது என்பதை முதலில் பார்க்க வேண்டும் என்று விஜய் நினைக்கிறாராம்.
குறைந்தது 15 முதல் 20% வாக்குகள் கிடைத்துவிட்டால், அதன் பிறகு கட்சியை தைரியமாக நடத்தலாம், 2031 தேர்தலில் ஆட்சியை பிடித்துவிடலாம் என்ற நம்பிக்கை அவருக்கு இருப்பதாக அவரது வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனவே, பல அரசியல் ஆய்வாளர்கள் சொல்வதுபோல் அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணியில் விஜய் கண்டிப்பாக சேர மாட்டார் என்றும், தனித்துதான் போட்டியிடுவார் என்றும் கூறப்பட்டு வருகிறது.

சோலியை முடிச்சிட்டாங்க.. பாஜகவுக்கு எதிராக ஒரு ‘இந்தியா கூட்டணி’.. திமுகவுக்கு எதிராக ஒரு ‘மெகா கூட்டணி’.. விஜய், சீமானி...
21/06/2025

சோலியை முடிச்சிட்டாங்க.. பாஜகவுக்கு எதிராக ஒரு ‘இந்தியா கூட்டணி’.. திமுகவுக்கு எதிராக ஒரு ‘மெகா கூட்டணி’.. விஜய், சீமானிடம் நேரடியாக பேசுகிறார் அமித்ஷா?

கடந்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடந்தபோது, பாஜகவை தோற்கடிக்க வேண்டும் என்பதற்காக, இந்தியா முழுவதும் பல கட்சிகள் இணைந்து ‘இந்தியா கூட்டணி’ என்ற ஒரு கூட்டமைப்பை அமைத்தன. அந்த கூட்டணியில் பல கொள்கை முரண்பாடுகள் இருந்தன. இந்துத்துவத்தை தீவிரமாக ஆதரிக்கும் சிவசேனா கட்சியும், இந்துத்துவத்தை எதிர்க்கும் திமுகவும் ஒரே கூட்டணியில் இருந்ததற்கு காரணம், பாஜகவை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என்பதுதான். மற்றபடி, அதை ஒரு கொள்கை கூட்டணி என்று கூற முடியாது.

அதேபோல் தான், தற்போது திமுக மற்றும் அதன் கூட்டணியை வீழ்த்த வேண்டும் என்பதற்காக, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஒரு மெகா கூட்டணியை உருவாக்குவதற்காக ஆலோசனை செய்து வருகிறார். அதிமுக – பாஜக கூட்டணி ஏன் ஒரு வருடத்திற்கு முன்பே இணைந்தது என்றால், அது கருத்து வேறுபாடுகளுடன் பிரிந்த கட்சி என்பதால், மீண்டும் ஒன்றிணைய சில காலம் ஆகும் என்பதால்தான் சில மாதங்களுக்கு முன்னரே இந்த கூட்டணி உறுதி செய்யப்பட்டது. இதனை அடுத்து, மற்ற கட்சிகள் இந்தக் கூட்டணியில் சேர்வதில் எந்தவித பிரச்சினையும் இருக்காது. குறிப்பாக, தேமுதிக, பாமக, ஓ.பி.எஸ் – தினகரன் கட்சி, பூவை ஜெகன் மூர்த்தி கட்சி, ஜான் பாண்டியன் கட்சி, புதிய தமிழகம், பாரிவேந்தர் கட்சி உள்ளிட்ட கட்சிகள் அதிமுக – பாஜக கூட்டணியில்தான் இருக்கின்றன அல்லது இனிமேல் வர தயாராக இருக்கின்றன என்பதை புரிந்து கொள்ளலாம்.

ஆனால், இந்க் கூட்டணி திமுக கூட்டணிக்கு சவாலாக மாறுமே தவிர, கண்டிப்பாக வெற்றி பெறும் அளவுக்கு இருக்குமா என்பது சந்தேகம்தான். எனவேதான், விஜய் மற்றும் சீமான் ஆகிய இருவரையும் கூட்டணிக்குள் கொண்டுவர அமித்ஷா திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. சீமான் தற்போது 8% வாக்குகளை வைத்திருக்கிறார். விஜய் குறைந்தபட்சம் 10-15% வாக்குகளை பெறுவார் என்ற நம்பிக்கை உள்ளது. எனவே, இந்த இரண்டு கட்சிகளையும் கூட்டணிக்குள் கொண்டுவந்தால், கண்டிப்பாக திமுக கூட்டணியை தோற்கடித்துவிடலாம் என்பதுதான் பாஜகவின் திட்டமாக உள்ளது.

கடந்த சில தேர்தல்களில் ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையே உள்ள வாக்கு வித்தியாசம் வெறும் ஐந்து முதல் ஏழு சதவீதம் வரைதான் இருந்துள்ளது. எனவேதான், சின்ன சின்ன கட்சிகள்கூட தேர்தல் முடிவை மாற்றும் என்பது தமிழக அரசியலின் திட்டமாக உள்ளது. விஜய் தனியாக போட்டியிட்டுவிட்டால், அவர் திமுகவின் வாக்குகளை சிதைத்தால் அதிமுக கூட்டணிக்கு லாபமாக இருக்கும், ஆனால், ஒருவேளை அவர் அதிமுக கூட்டணியின் வாக்குகளை தப்பித்தவறி சிதைத்துவிட்டால், மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்துவிடும். எனவே, அந்த ரிஸ்க்கை எடுக்க விரும்பாத அமித்ஷா, விஜய்யை கண்டிப்பாக கூட்டணிக்குள் கொண்டு வந்துவிடுவார் என்று கூறப்பட்டு வருகிறது.

விஜய்யும் பாஜகவை ‘கொள்கை எதிரி’ என்று கூறிக்கொண்டாலும், சிவசேனாவும் திமுகவும் எப்படி ஒரே கூட்டணியில் இருந்தனவோ, அதேபோல், “பாஜக கூட்டணியில் திமுகவை வீழ்த்துவதற்காக இணைகிறேன்” என்று விஜய் விளக்கம் கூறலாம் என்றும் கூறப்படுகிறது. இருப்பினும், டிசம்பருக்கு பின்னர்தான் யாருடன் கூட்டணி என்பதை விஜய் உறுதி செய்வார் என்பதால், இன்னும் ஒரு ஆறு மாதங்கள் பொறுத்திருந்து என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

அமைச்சர் எ.வ.வேலுவுடன் பாமக எம்.எல்.ஏ அருள் 35 நிமிடம் சந்திப்பு ? சமூக வலைத்தளத்தில் மோதல்அன்புமணியோ மாறாக, ராமதாஸ் மீத...
20/06/2025

அமைச்சர் எ.வ.வேலுவுடன் பாமக எம்.எல்.ஏ அருள் 35 நிமிடம் சந்திப்பு ? சமூக வலைத்தளத்தில் மோதல்

அன்புமணியோ மாறாக, ராமதாஸ் மீது விமர்சனத்தை முன்வைக்காமல், "அய்யா காட்டிய வழியில் பயணிப்போம்" என கட்சி நிர்வாகிகளை சந்தித்து வருகிறார். தந்தையர் தினத்தன்று, கட்சியின் மாவட்ட பொதுக்குழு கூட்ட பயணத்தை தொடங்கினார். அதேபோன்று தந்தையின் பிறந்த நாள் ஜூலை 25ஆம் தேதி, "தமிழக மக்கள் உரிமை மீட்பு" பயணத்தை மேற்கொள்ள இருப்பதாகவும் அன்புமணி அடுத்தடுத்த நகர்வுகளை எடுத்து வைத்துள்ளார்.

சமூக வலைத்தளத்தில் சண்டையிட்டுக் கொள்ளும் பாமகவினர்

கட்சித் தலைவர்களுக்கிடையே நடைபெறும் பிரச்சனை, பாமகவினரின் சமூக வலைதள பக்கங்களிலும் எதிரொளிக்க தொடங்கியுள்ளது. நேற்று அன்புமணி சேலம் சென்று இருந்தார், சேலம் மேற்கு பாமக எம்.எல்.ஏ அருளுக்கு உடல்நிலை குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதேபோன்று கௌரவ தலைவர் ஜி.கே.மணியும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதன்பிறகு பாமகவினர் சமூக வலைதளத்தில், நேரடியாக சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினர், அருளை விமர்சித்து வருகின்றனர்.

பாமக எம்.எல்.ஏ வை விமர்சிக்கும் பாமகவினர்

பாமக எம்.எல்‌ஏ அருள் ஒரு காலகட்டத்தில் அன்புமணியின் ஆதரவாளராக பார்க்கப்பட்டார். பாமகவில் உட்கட்சி பிரச்சனை ஏற்பட்ட பிறகு, ராமதாஸின் ஆதரவாளராகவே செயல்பட்டு வருகிறார்.‌ ராமதாஸின் அனைத்து கூட்டங்களிலும் கலந்து கொண்டு வருகிறார். இந்தநிலையில் அன்புமணி கூட்டத்தில், உடல்நலக் குறைவு காரணமாக எம்.எல்.ஏ கலந்து கொள்ளாததால், அவர் மீது பல்வேறு விமர்சனங்களை பா.ம.கவினர் முன்வைத்து வருகின்றனர்.

இது தொடர்பாக பாமக நிர்வாகிகள் சமகாலத்தில் பல்வேறு பதிவுகளை செய்து வருகின்றனர் : குறிப்பாக அருளிடம் "நீங்கள் அய்யா மற்றும் சின்னையா இருவரும் இரு கண்கள் என்று கூறுகின்றீர்கள். அதை நாங்கள் வரவேற்கின்றோம். நடுநிலையாக இருக்கும் நீங்கள் மருத்துவர் அய்யாவை சென்று பார்த்தது போல, மருத்துவர் சின்னையா அவர்களை ஏன் சென்ற பார்க்கவில்லை? உங்களை தடுப்பது யார்? என கேள்வி எழுப்பி வருகின்றனர்

அய்யா, சின்னையா இருவரும் இடையே உள்ள கருத்துவேறுபாடு நீங்கி பிரச்சனை முடிவிற்கு கொண்டு வர வேண்டும் என நீங்கள் ஏன் இருவரையும் நடுநிலையோடு சென்று பார்க்கவில்லை? எனவும் பாமகவினர் சமூகவலைதளத்தில் பதிவு செய்து வருகின்றனர்.

எ.வ. வேலுடன் ரகசிய சந்திப்பா ?

அன்புமணி ராமதாஸ் பாமகவில் நடைபெறும் பிரச்சனைக்கு, திமுக தான் காரணம் என பகிரங்கமாக பாமக நிர்வாகிகள் மத்தியில் பேசி வருகிறார். இந்நிலையில் அமைச்சர் எ.வ. வேலுடன் சட்டமன்ற உறுப்பினர் அருள், சந்தித்ததாகவும், 35 நிமிடத்திற்கு மேல் பேசியதாகவும் பாமகவினரே அருளுக்கு எதிராக போர் கொடி துவக்கியுள்ளனர். இந்த தகவல் பாமகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அருளின் விளக்கம் என்ன ?

இது தொடர்பாக எம்எல்ஏ அருள் அவருடைய சமூக வலைதள பக்கத்தில், அண்ணன் அன்புமணியிடம் கேளுங்கள் அவர் அரசியலில் கால் பதித்த நாள் முதல் உடனிருப்பவன். தமிழ்நாடு முழுவதும் அண்ணன் அன்புமணி சென்ற குக் கிராமங்களுக்கு சென்றுள்ளேன்.

என்னை பொருத்தவரை மருத்துவர் அய்யாவும் மருத்துவர் சின்னய்யாவும் ஒன்று என பதிவிட்டுள்ளார். மேலும் அந்த பதிவில், நேரில் வாருங்கள் ஆதாரத்துடன் நேரலையில் விவாதிப்போம் என பாமகவின் ஊடகப் பேரவையை சட்டமன்ற உறுப்பினர் அருள் கடுமையாக விமர்சனமும் செய்துள்ளார்.

கோலி இல்லையா அப்ப வர முடியாது.. இங்கிலாந்தில் இந்திய டெஸ்ட் அணியை வரவேற்க ஒருவர் கூட வரவில்லை!இங்கிலாந்து சுற்றுப்பயணம் ...
08/06/2025

கோலி இல்லையா அப்ப வர முடியாது.. இங்கிலாந்தில் இந்திய டெஸ்ட் அணியை வரவேற்க ஒருவர் கூட வரவில்லை!

இங்கிலாந்து சுற்றுப்பயணம் சென்று இருக்கும் இந்திய அணியை வரவேற்க ரசிகர்களே வராதது, இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. மேலும், ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் டெஸ்ட் அணியில் இருந்து ஓய்வு பெற்றதை அடுத்து இந்திய அணிக்கு வரவேற்பு இல்லை எனவும் பரவலாகப் பேச்சு எழுந்துள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி கடந்த சில ஆண்டுகளாக வியாபார ரீதியாக உச்சத்தில் உள்ளது. இந்திய அணி ஆடும் போட்டிகளை கோடிக்கணக்கான மக்கள் பார்த்து வருகிறார்கள். சிறிய டி20 தொடர்களைக் கூட கோடிக்கணக்கான ரசிகர்கள் பார்க்கிறார்கள். தொலைக்காட்சி மட்டுமின்றி ஸ்ட்ரீமிங் மூலம் மொபைல் மற்றும் இணையதளத்திலும் லட்சக்கணக்கானோர் பார்த்து வருவதால் இந்த வளர்ச்சி சாத்தியமாகியுள்ளது.

ஆனால், நட்சத்திர வீரர்களான விராட் கோலி, ரோகித் சர்மா, பும்ரா, சூர்யகுமார் யாதவ் ஆகியோர் விளையாடும் போட்டிகளுக்கு மட்டுமே அதிக பார்வையாளர்கள் இருக்கிறார்கள். அவர்கள் இல்லையென்றால் பார்வையாளர்கள் எண்ணிக்கை வெகுவாக சரிகிறது. குறிப்பாக விராட் கோலி சதம் அடித்தாலோ அல்லது சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா போன்றோர் டி20 போட்டிகளில் அதிரடியாக ஆடினாலோ, அப்போது பார்வையாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கிறது. எனவே, இந்திய அணியின் வளர்ச்சி என்பது நட்சத்திர வீரர்களைச் சார்ந்தே இருக்கிறது.

குறிப்பாக டெஸ்ட் போட்டிகளைப் பொறுத்தவரை, விராட் கோலி அதன் மையமாக இருந்து வந்தார். அவருக்காகவே டெஸ்ட் போட்டிகளை பலரும் பார்த்து வந்தனர். சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட், வி.வி.எஸ். லட்சுமணன், அனில் கும்ப்ளே போன்ற டெஸ்ட் ஜாம்பவான்கள் இருந்த வரை இந்திய அணி ஆடும் போட்டிகளைப் பார்ப்பதற்கு தனி ரசிகர் கூட்டம் இருந்தது.

ஆனால், அதற்கு அடுத்த தலைமுறையைப் பொறுத்தவரை விராட் கோலி மட்டுமே முதன்மையானவராக இருக்கிறார். ரஹானே, புஜாரா போன்றோரும் சிறந்த டெஸ்ட் வீரர்களாக இருந்தாலும் அவர்களுக்கு தற்போது வாய்ப்பு அளிக்கப்படுவதில்லை.

இந்த நிலையில், இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு முன்பாக விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஒன்றாக டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தனர். இதை அடுத்து இந்திய டெஸ்ட் அணியில் நட்சத்திர வீரர்கள் எனச் சொல்லும் அளவுக்கு யாரும் இல்லை.

இந்த நிலையில் தான் இங்கிலாந்தில் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காகப் புதிய கேப்டன் சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி வீரர்கள் இங்கிலாந்து சென்றனர். அங்கு விமான நிலையத்தில் அவர்களை வரவேற்பதற்கு ரசிகர்கள் காத்திருப்பார்கள் என எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ரசிகர்களும் வரவில்லை, ஊடகத்தினரும் அங்கு வரவில்லை. இதை அடுத்து, விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோர் வந்தால் தான் ஊடகத்தினரோ ரசிகர்களோ வந்து பார்ப்பார்கள் என்ற உண்மை வெளியாகி உள்ளது.

Address

Vadapalani
Chennai

Alerts

Be the first to know and let us send you an email when Live Tamil News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share