All India Union Of Journalists

All India Union Of Journalists அகில இந்திய பத்திரிக்கையாளர்கள் சங்?

12/12/2024

Urgent requirement for a newly start YouTube channel

Anchors
Editors
Camera man

Freshers are welcome
Office location at annanagar

Interested people can WhatsApp ur resume and area of interest to him by referring my name
Sathish
+91 90032 35898

08/08/2022
http://dinajeyam.blogspot.com/2022/05/3.html
03/05/2022

http://dinajeyam.blogspot.com/2022/05/3.html

சென்னை-3 , உலக பத்திரிகை சுதந்திர நாளான இன்று(மே-3) "பத்திரிகை சுதந்திரத்தை பாது காக்க" சபதம் ஏற்போம் என்று,தமிழக பத...

  சங்கத்தின் 6ஆம் ஆண்டு துவக்கத்தையொட்டி மாண்புமிகு செய்தி துறை அமைச்சர் திரு.மு. பெ. சாமிநாதன் அவர்களை சந்தித்து வாழ்த்...
12/04/2022

சங்கத்தின் 6ஆம் ஆண்டு துவக்கத்தையொட்டி மாண்புமிகு செய்தி துறை அமைச்சர் திரு.மு. பெ. சாமிநாதன் அவர்களை சந்தித்து வாழ்த்துக்கள் பெற்றபோது....

10/03/2022

மகளிர் தினத்தில் நியூஸ் 7 தமிழ் நிறுவனத்தில் வெளியான முத்தான மூன்று அறிவிப்புகள்!
நிர்வாகத்திற்கும் நிர்வாக ஆசிரியர் தியாகச் செம்மலுக்கும் AIUJ (அகில இந்திய பத்திரிகையாளர்கள் சங்கம்) வாழ்த்து!

பெண் தொழிலாளர்களின் புரட்சியின் நீட்சியில் உருவான உலக மகளிர் தினம் மார்ச் 8 அன்று உலகம் முழுவதும் கொண்டாப்படுகிறது.

ஒரு சமூகம் எந்த அளவிற்கு முன்னேறியுள்ளது என்பதை கண்டறிவதற்கு அந்த சமூகத்தில் பெண்கள் எந்த அளவிற்கு முன்னேறியிருக்கிறார்கள் என்பதிலிருந்தே அறியமுடியும்.

என்றார் சட்டமேதை அண்ணல் அம்பேத்கர். தமிழகத்தில் குயிலி போன்று இந்தியா முழுவதும் போர் புரிந்து வீரமரணம் ஏற்ற பெண்கள் ஏராளம்.

1800 களில் பிரான்ஸ் குவாடேலூப்பி வெயில்ஸ்ட் (Guadelope whilst) என்கிற இடத்தில் அடிமைகளாக இருந்த மக்களிடம் கிளர்ச்சி செய்து, புரட்சி பாதைக்கு நகர்த்தியவர் லா முலெட்ரெஸ்ஸி சோலிட்யூட் ( La Mulatresse Solitude).

மக்களை திரட்டி புரட்சியில் ஈடுபட்டதால் இவர் தூக்கிலடப்பட்டார். அப்போது அவர் 8 மாத கர்பிணி . அப்படியென்றால் அவர் கர்பமாக இருந்த போதிலிருந்தே காலணி ஆதிக்கத்திற்கு எதிராக போர் புரிந்துள்ளார் என்கிறது வரலாறு. சாதிப்பதற்கு பெண்களுக்கு எதுவும் பொருட்டல்ல
என்பதற்கு சான்றுகள் வாலாற்றில் ஏராளம் உண்டும்.

பெண்களுக்கு எதிராக இந்தியாவில் கட்டமைக்கப்பட்டிருக்கும் அடிமை கருத்துகளை உடைத்து ஆண்கள் மட்டுமே கோலோச்சி வந்த பல துறைகளில் பெண்கள் சாதித்து வருகிறார்கள்.

அரசியலமைப்பு சட்டம் வழங்கியிருக்கக்கூடிய சம வாய்ப்பு, சம ஊதியமும், பெண்கள் பணியற்றக்கூடிய இடங்களில் ஏதுவான புறச்சுழலை, போன்றவற்றை அனைத்து நிறுவனங்களும் முறையாக பின்பற்ற வேண்டும் என்று பெண்கள் அமைப்பு உட்பட பல்வேறு அமைப்புகள் தொடர்ந்து பேசி வருகிறார்கள்.

பல நிறுவனங்கள் பெண்களின் முன்னேற்றத்திற்கான முன்னெடுப்புகளை எடுத்து வருகின்றனர். அந்த அவகையில் கடந்த மார்ச் 8 மகளிர் தினத்தன்று நியூஸ் 7 தமிழ் ஊடகத்தில் பெண் பணியாளர்களுக்கு முக்கியமாக மூன்று அறிவிப்புகனை நியூஸ் 7 தமிழ் நிர்வாக ஆசிரியர் தியாகச் செம்மல் அறிவித்துள்ளார். அவை,

1, மாதவிலக்கு நாளின் முதல் நாள் ஊதியத்துடன் கூடிய விடுப்பு. (மாதத்தில் 3 நாட்கள் அனைத்து ஊழியர்களுக்கும் விடுப்பு எடுத்துக்கொள்ள அனுமதி உள்ள நிலையில் இனி மகளிர் 4 நாட்கள் விடுப்பு எடுத்துக்கொள்ளலாம்)
2, நிறுவனத்தில் பணி செய்யும் மகளிரின் குழந்தைகள் வார இறுதி நாட்களில் அலுவலகம் அழைத்து வர அனுமதி, குழந்தைகளுக்கு தனியாக CRECHE ஏற்பாடு,

3, பெண் பணியாளர்களின் உடல் நலனை தேவைப்படும்பட்சத்தில் பரிசோதித்துக்கொள்ள இரண்டு மருத்துவர்கள் அடங்கிய மருத்துவக் குழு அமைக்கப்படும் என்கிற அறிவிப்புகள் வெளியாகி இருக்கிறது.

மகளிர் தினத்தை பரிசு பொருட்கள் வழங்கும் விழாகவும், கேளிக்கை நிகழ்ச்சிகள் நடத்தும் விழாவாகவும் மாற்றிவிடமால் அதன் வரலாற்று தன்மை உணர்ந்து பெண்கள் முன்னேற்றத்திற்கு வித்திடும் வகையில் அமைந்துள்ள இம்மூன்று அறிவிப்புகளுக்காக நியூஸ் 7 தமிழ் நிர்வாகத்திற்கும், நிர்வாக ஆசிரியர் தியாகச் செம்மல் அவர்களுக்கும் நன்றி தெரிவிப்பதோடு அகில இந்திய பத்திரிகையாளர்கள் சங்கம் ( ALL INDIA UNION OF JOURNALIST)) வாழ்த்தி மகிழ்கிறது.

Address

Chennai
600102

Opening Hours

Monday 12am - 12pm
Tuesday 12am - 12pm
Wednesday 12am - 12pm
Thursday 12am - 12pm
Friday 12am - 12pm
Saturday 12am - 12pm
Sunday 12am - 12pm

Telephone

9841188845

Alerts

Be the first to know and let us send you an email when All India Union Of Journalists posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

All India Union Of Journalists

அகில இந்திய பத்திரிக்கையாளர்கள் சங்கம்

உழைக்கும் மக்களுக்குமான உரிமைகளை பெற்றுக்கொடுக்கவும், இழந்த உரிமைகளை மீட்க்கும் பணியில் “அகில இந்திய பத்திரிக்கையாளர்கள் சங்கம்” தொடர்ந்து செயல்படும்.

பத்திரிகையாளர்காளின் பாதுகாப்பை உறுதி செய்து, அவர்களின் தொடர் முயற்சிகளுக்கு பக்கபலமாக “All India Union Of Journalists” இருக்கும் என்பதனை பகிர்கவதில் மகிழ்கின்றோம்!

இன்றே, இணைவீர்! பாதுகாப்பு உணர்வோடும், உற்சாகத்தோடும் செயல்படுவீர்!