06/09/2026
கடந்த 24 மணி நேரத்தில்
கே.என்.நேரு உள்ளிட்ட 12 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு.முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் திருச்சி இல்லத்தில் DVAC சோதனை.ரவிச்சந்திரன் வீட்டிற்கு பணம் எண்ணும் இயந்திரத்தை எடுத்து சென்ற அதிகாரிகள்
அனைத்து கடைகளின் பெயர் பலகைகளையும் தமிழில் மாற்ற வேண்டும் என்ற தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து இந்திய சில்லறை வர்த்தகர்கள் சங்கம் தாக்கல் செய்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி.
திருவள்ளூர் அருகே கூடப்பாக்கத்தில் இருந்த ஏடிஎம் மெஷினை உடைத்து தூக்கிச் சென்ற கொள்ளையர்கள். ஏடிஎம் மெஷினில் சுமார் ரூ.10 லட்சத்திற்கும் மேல் பணம் இருந்ததாக தகவல்.
CM விஜய் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாக பிரவின் கணேசன் என்பவரை டெல்லி ஏர்போர்ட்டில் வைத்து கைது செய்த சைபர் கிரைம் போலீசார்.
காஞ்சிபுரத்தில் பணிக்கு திரும்பாத 33 டாஸ்மாக் மேற்பார்வையாளர்களை சஸ்பெண்ட் செய்து தெற்கு மாவட்ட டாஸ்மாக் மண்டல மேலாளர் நடவடிக்கை.
"களிமண் சிலைகளை மட்டும் நீர்நிலைகளில் கரைக்க அனுமதி. சிலைகளில் பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ், பிளாஸ்டிக் பயன்படுத்தக் கூடாது. சிலைகளில் எனாமல், ரசாயன வண்ணப் பூச்சுகளுக்கும் தடை. மாவட்ட நிர்வாகம் குறிப்பிடும் இடங்களில் மட்டுமே கரைக்க வேண்டும்" விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில்
கரைப்பதற்கான வழிமுறைகள் வெளியீடு.
சென்னை, திருச்சி, கோவை, ஈரோடு, திருப்பூர் என கே.என்.நேரு தொடர்புடைய பல்வேறு இடங்களில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில், 241 ஆவணங்கள் கைபற்றப்பட்டது. சோதனை தொடர்பாக, லஞ்ச ஒழிப்புத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.
சென்னை மேடவாக்கத்தில் தனது ரசிகர்களுடனான சந்திப்பின் போது, நடிகர் ரவி மோகனை நோக்கி, "அண்ணா அழைப்பு விடுங்கள், அலையாய் வருவோம். கொடியை கொடுங்கள், கோட்டையை பிடிப்போம்" என ரசிகர் மன்ற நிர்வாகி ஒருவர் முழக்கம்.
``செப்.9-ல் கூட்டணிக்கு பெயர் சூட்டப்படும். எங்களுடைய பிரதமர் வேட்பாளர் ராகுல்காந்தி தான், பிரதமர் வேட்பாளர் முடிந்து போன கதை.. எங்களுடைய பிரதமர் வேட்பாளர் ராகுல்தான்". தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர்.