Tamil People

Tamil People Voice of Viral Advertise With Us! 🚀
Promote your product or service on our YouTube and pages to reach a highly engaged audience.

How to get started:
Simply message us with your business details to book your slot!
📲 JUST WHATSAPP: 8925740036

What we offer:
YouTube Video Features & Shoutouts
Facebook Posts & Stories
Direct Brand Visibility

Message us now to grow your brand! ✨

ராஜா பாட்டுக்கு, AIR விதித்த தடை!1970-களின் இறுதியில், All India Radio கடுமையான கட்டுப்பாடுகளைக் கொண்டிருந்தது. மக்களின்...
01/09/2026

ராஜா பாட்டுக்கு, AIR விதித்த தடை!

1970-களின் இறுதியில், All India Radio கடுமையான கட்டுப்பாடுகளைக் கொண்டிருந்தது. மக்களின் இயல்பான பேச்சு வழக்கிற்கும் இந்த தடை AIR வைத்திருந்தது.

இதனை சற்றும் கருத்தில் கொள்ளாமல் தனது இசையில் கொண்டு வந்தார் இளையராஜா.

அப்படி அவர் உருவாக்கிய இரு பாடல்கள் அன்றைய வானொலியில் தடை செய்யப்பட்டன:

1. "கேட்டேளா அங்கே" (பத்ரகாளி - 1976): குறிப்பிட்ட சமூக மக்களை கேலி செய்வது போல் உள்ளது எனக்கூறி தடை செய்யப்பட்டது.

2. '"ஓரம் போ" (பொண்ணு ஊருக்கு புதுசு - 1979): மக்கள் தவறாக சித்தரித்து பாட வாய்ப்புள்ளது எனக்கூறி, "சமூக நாகரிகத்திற்கு அப்பாற்பட்டது" என தடை செய்யப்பட்டது.

வானொலி தடை விதித்தாலும், மக்கள் இப்பாடல்களைக் தலையில் தூக்கி வைத்துக்கொண்டாடியது! கிராமபோன் தட்டு தொடங்கி ஊர்த் திருவிழாக்களில் பட்டிதொட்டியெங்கும் எதிரொலித்தன.

நீங்க முதன்முதலில் கேட்ட ராஜா பாடல் எது? கமெண்ட்டில் பகிர்ந்து கொள்ளுங்கள்! 👇

'16 வயதினிலே' திரைப்படத்தை உற்று கவனித்தால் ஒரு உண்மை புரியும்... இந்தப் படமே "ஒருவர் பிறர் மீது காட்டும் அலட்சியம் மற்ற...
30/08/2026

'16 வயதினிலே' திரைப்படத்தை உற்று கவனித்தால் ஒரு உண்மை புரியும்... இந்தப் படமே "ஒருவர் பிறர் மீது காட்டும் அலட்சியம் மற்றும் அதிகாரப் படிநிலை" பற்றிய கதைதான்! 🎬🎭

👉 சப்பாணி மீது மயிலு காட்டும் அலட்சியம்

👉 மயிலு மீது டாக்டர் காட்டும் அலட்சியம்

👉 எல்லார் மீதும் 'பரட்டை' காட்டும் திமிர் அலட்சியம்!

யார் இந்த பரட்டை? பாரதிராஜா செதுக்கிய விசித்திரமான வில்லன்!

படத்தில் ஒரு காட்சியில் பரட்டையை "மேட்டுபட்டி ஜமீன்தாரின் பேரன்" என்றும், "சேர்வை" என்றும் அறிமுகப்படுத்துவார்கள்.

வரலாற்று ரீதியாக 'சேர்வை' என்பது அரசு சார்ந்த பணிக் குழுவினரைக் குறிக்கும் ஒரு பட்டம் (அரசு சேவகம்/சேவை மருவி சேர்வை ஆனது). அந்த அதிகாரப் பின்னணிக்கு ஏற்பவே, பரட்டை எப்போதும் தன்னைச் சுற்றி 2-3 நபர்களை (பணிக்குழு போல) உடன் வைத்திருப்பார். தான் சொல்வதை அவர்கள் தலையாட்டி ஆமோதிக்க வேண்டும் என்ற அதிகார போதை அவருக்குள் இருக்கும்.

"இதெப்படியிருக்கு?" என்று கேட்கும்போது, கூட இருக்கும் கூத்து (கவுண்டமணி) "நல்லாவேயில்ல" என்று உண்மையைச் சொன்னதும் அடி விழும் காட்சி இதற்கு மிகச்சிறந்த உதாரணம்! 😂💥

ஈகோ உடைந்த கடைசி 45 நிமிடங்கள்:

ஊரையே தனக்குக் கீழ் நினைத்த பரட்டையின் ஈகோ, சப்பாணி தனக்கு அறைந்த அந்த ஒரு நொடியில் சுக்குநூறாக உடைகிறது. அந்த ஆத்திரமும், போதையும்தான் மயிலைச் சீரழிக்கத் தூண்டுகிறது. இறுதியில் யார் மீது அளவுகடந்த அலட்சியம் காட்டினானோ, அதே சப்பாணியின் கையால் பரட்டையின் கதை முடிகிறது.

அதிகாரமும் திமிரும் ஒரு மனிதனை எப்படி அழிக்கும் என்பதை ரஜினியின் அந்த அசுர நடிப்பும், பாரதிராஜாவின் திரைக்கதையும் இன்றும் மிரட்டலாகச் சொல்கிறது!

"இது எப்புடி இருக்கு?!" ✨🔥

அமைதியான நீர்நிலை... எதிரொலிக்கும் தெப்பக்குள மண்டபம்... எந்த எதிர்பார்ப்பும் இல்லாத ஒரு தூய ஜீவனின் பார்வை!ஒவ்வொருவருக்...
29/08/2026

அமைதியான நீர்நிலை... எதிரொலிக்கும் தெப்பக்குள மண்டபம்... எந்த எதிர்பார்ப்பும் இல்லாத ஒரு தூய ஜீவனின் பார்வை!

ஒவ்வொருவருக்குள்ளும் ஆயிரம் கவலைகளும் ஓட்டங்களும். மனதை அமைதிப்படுத்தும் இந்த நொடி... ஒரு தியானம் போல!

23/08/2026

வறுமைக்குத் தெரியாது... இவர்களின் நெஞ்சுக்குள் எரியும் கலைத் தீயை அணைக்க முடியாது என்று! 🔥

முழு ஒப்பனை அறை இல்லை, வெளிச்ச விளக்குகள் இல்லை... ஒரு சிறு உடைந்த கண்ணாடியும், கற்பூசக் குச்சியும்தான் இவர்களின் அலங்கார உலகம். தங்களைத் தாங்களே அலங்கரித்துக் கொண்டு மதுரை வீரன் நாடகத்திற்குத் தயாராகும் இந்தச் சிறுவர்கள் வெறும் மாணவர்கள் அல்ல... நம் பாரம்பரியக் கலையைத் தோளில் சுமக்கும் நிஜ ஹீரோக்கள்!

கலையை நேசித்தால் அது உங்களை உலகறியச் செய்யும்! இவர்களின் அர்ப்பணிப்பிற்கு ஒரு ராயல் சல்யூட்! ❤️

ஒரு போலி கௌரவத்திற்காக... ஒட்டுமொத்த குடும்பமே மண்ணோடு மண்ணான கொடுமை! 💔😢மகாராஷ்டிரா சத்ரபதி சம்பாஜிநகரில் நிகழ்ந்த இந்த ...
22/08/2026

ஒரு போலி கௌரவத்திற்காக... ஒட்டுமொத்த குடும்பமே மண்ணோடு மண்ணான கொடுமை! 💔😢

மகாராஷ்டிரா சத்ரபதி சம்பாஜிநகரில் நிகழ்ந்த இந்த சம்பவம் ஒட்டுமொத்த மனித மனங்களையும் உலுக்கியுள்ளது.

📱 நடந்தது என்ன?
குணால் என்ற இளைஞர் ஆசைப்பட்டு ஐபோனை EMI-யில் வாங்கியுள்ளார். ஆனால், மாதாந்திரத் தவணையைக் கட்ட முடியாத சூழல் வந்ததும் பெற்றோரிடம் பணம் கேட்டுள்ளார். குடும்பத்தின் வறுமை காரணமாகப் பணம் தர முடியாததால் வாக்குவாதம் வெடித்திருக்கிறது.
ஆத்திரமடைந்த அந்த இளைஞர் மலைப்பகுதிக்குச் சென்று தற்கொலை மிரட்டல் விடுக்க, பெற்றோர், காவல்துறை மற்றும் தீயணைப்பு வீரர்கள் என அனைவரும் 3 மணி நேரத்திற்கும் மேலாக கெஞ்சி சமாதானப்படுத்த முயன்றனர்.

இறுதியில், பாசத்தால் துடித்த தந்தை முரளிதர் மகனைக் காப்பாற்ற அருகில் ஓடியபோது, நிலைதடுமாறி தந்தையும் மகனும் அந்தப் பாதாளத்தில் விழுந்தனர். கண்முன்னே கணவனையும் மகனையும் பறிகொடுத்த தாய் சங்கீதாவும் அதே நொடியில் பள்ளத்தில் குதித்து உயிரை மாய்த்துக் கொண்டார்.

ஒரே நாளில்... ஒரு அற்ப ஆசையால் அழிந்து போனது ஒரு குடும்பம்!
விலை உயர்ந்த செல்போனோ, ஆடம்பர வாழ்க்கையோ நம்மை நேசிக்கும் பெற்றோரின் உயிரை விடப் பெரியதா? தயவுசெய்து நம் தகுதிக்கு மீறிய கடன் வலையிலும், போலி கௌரவத்திலும் விழாதீர்கள்! 🙏🖤

திரைக்கடலில் பல சிகரங்களைத் தொட்டாலும்... இறுதிவரை தனக்கான உணவைத் தானே சமைத்து உண்ட ஒரு மாபெரும் கலை ஆளுமை! 👑✨நடிப்பில் ...
22/08/2026

திரைக்கடலில் பல சிகரங்களைத் தொட்டாலும்... இறுதிவரை தனக்கான உணவைத் தானே சமைத்து உண்ட ஒரு மாபெரும் கலை ஆளுமை! 👑✨

நடிப்பில் மட்டுமல்ல, வாழ்க்கையையும் ருசித்து வாழ்ந்த 'சௌகார்' ஜானகி அம்மா!

ஆல் இந்தியா ரேடியோவில் ஒலித்த அவரது வசீகரக் குரல்தான், இயக்குநர் பி.என். ரெட்டி அவர்களை ஈர்த்து வெள்ளித்திரைக்கு அழைத்து வந்தது.

சங்கரமஞ்சி ஜானகியாகப் பிறந்தவர், 1950-ல் வெளியான 'ஷாவுக்காரு' படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு, மக்கள் மனதில் என்றென்றும் 'சௌகார் ஜானகி'யாகவே நிலைத்து நின்றார்.

நடிப்பைத் தாண்டி சமையலிலும் அவர் அசாத்திய திறமைசாலி. 90-களில் சென்னையில் புகழ்பெற்ற 'கோகனட் குரோவ்' உணவகத்தில் தினமும் பல வகையான உணவுகளை அவரே சமைத்துப் பரிமாறி அசத்தினார்.

எல்லாவற்றிற்கும் மேலாக, தனது இறுதிப் படப்பிடிப்பு வரை தனக்கான உணவைத் தானே சமைத்து உண்ணும் எளிய, தன்னிறைவான வாழ்க்கைப் பண்பை ஒருபோதும் மாற்றிக்கொள்ளவில்லை.

புகழின் உச்சத்திலும் சுயமரியாதையுடனும் எளிமையுடனும் வாழ்ந்த இந்த வசீகரக் கலைஞரின் வாழ்க்கை நமக்கு எத்தனையோ பாடங்களைச் சொல்கிறது! ❤️🙏

சட்டசபையில விவாதம் பண்ண சொன்னா...இங்க நடக்குற பஞ்சாயத்தே வேற லெவல்ல இருக்கு! 😂🔥​ஒரு பக்கம்:"மாண்புமிகு சங்கி அமைச்சரே, ம...
22/08/2026

சட்டசபையில விவாதம் பண்ண சொன்னா...
இங்க நடக்குற பஞ்சாயத்தே வேற லெவல்ல இருக்கு! 😂🔥

​ஒரு பக்கம்:
"மாண்புமிகு சங்கி அமைச்சரே, மன்னிக்கவும்..." 🤫💣

​இன்னொரு பக்கம்:
"மாண்புமிகு பாத்ரூம்ல மூணு மணி நேரம் உட்கார்ந்திருந்த எதிர்க்கட்சி தலைவரே..." 💥🚽

​மக்களுக்காக சட்டம் இயற்ற வேண்டிய இடத்துல... 🤦‍♂️

​நீங்க யாரு பக்கம் பாஸ்?! கமெண்ட்ல சொல்லுங்க! 👇

18/08/2026

பாரத ரத்னா டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்கள் மேடைகளில் பேசும் போதெல்லாம் வரலாற்றின் உன்னதமான மனிதர்களின் தாய் பாசத்தையும் நற்பண்புகளையும் வரலாற்றுச் சம்பவத்தையும் கலாம் ஐயா தன் காந்தக் குரலில் மேடையில் உணர்ச்சிப்பூர்வமாக விவரித்த போது அரங்கே மெய்சிலிர்த்து நின்றது. ஒவ்வொரு இளைஞனும் கேட்க வேண்டிய உன்னதமான வழிகாட்டுதல் பதிவு இது!

#அப்துல்கலாம் #கலாம்ஐயா #மகாத்மாகாந்தி #தாயின்அறிவுரை #தன்னம்பிக்கைபேச்சு #நாஸ்டால்ஜியா

01/08/2026

'திருவண்ணாமலை கிரிவலம் என்பது வெறும் நடைபயிற்சி அல்ல; அது நம் அணுவணுவாக்கும் ஆன்மாவை இறைவனிடம் ஒப்படைக்கும் ஒரு அசாத்திய யாத்திரை' என்று இளையராஜா அவர்கள் தன் மெல்லிய, காந்தக் குரலில் உணர்ச்சிபொங்க விவரித்த தருணங்கள் வரலாற்றுச் சிறப்புமிக்கவை. கிரிவலம் வரும் போது தான் உணர்ந்த அந்த தெய்வீக அமைதியையும், தன் இசைக்கு அங்கு கிடைத்த அசுரத்தனமான ஞானத்தையும் அவர் விவரிக்கும் போது கேட்பவர் அனைவருக்கும் மெய்சிலிர்க்கும். இசைஞானியின் பக்திப் பரவசத்தை உணர்த்தும் இந்த உன்னதமான விண்டேஜ் பதிவு, ஆன்மீக அன்பர்களுக்கு ஒரு செம்ம விருந்து!

#இளையராஜா #இசைஞானி #திருவண்ணாமலை #கிரிவலம் #அருணாச்சலேஸ்வரர் #ஆன்மீகம் #நாஸ்டால்ஜியா

01/08/2026

CM விஜய்-ஓட தாத்தா யாருனு தெரியுமா? | இளையராஜா பகிர்ந்த அரிய பழைய நினைவுகள்!

#விஜய் #இளையராஜா #இசைஞானி #எஸ்ஏசந்திரசேகர் #தமிழ்சினிமா #நாஸ்டால்ஜியா

Address

Velachery
Chennai
600091

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tamil People posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category